Tuesday, 31 October 2017

தமிழரின் பார்வையில் இந்திய இறையாண்மை

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :திங்கள்*🌹

🌹 *தேதி :30.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
*சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!*

💐 *ஏங்கல்ஸ்*💐

💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*புண்பட்டவர்களின் புலம்பலைப் பொறுமையாக கேட்பதும்,*

*சமூக சேவைதான்.*

📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*தமிழரின் பார்வையில் இந்திய இறையாண்மை*
🌍👀🤔😴🤔🇮🇳👀🤔😴🤔🌍

😇 *கலந்துரையாடல் குழு சார்பாக*
*இன்றைய தலைப்பிற்கு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்கணிப்பு ஓர் அலசல் உங்களின் பார்வைக்காக....*😆

🤓 *அண்ணே நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் ஆனா ஊனா இறையாண்மை பாதிக்கப்படுகிறதுனு சொல்லுறாங்களே அப்படினா என்ன அண்ணே?*❓🤔

🤗 *இறையாண்மை னா ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு இயக்கமோ, ஒரு அமைப்போ, ஒரு சமூகமோ தனக்கான அடையாளங்களுடன், தனது பாரம்பரியத்துக்கு தக்கவாறு, தன்னுடைய கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் ஏற்றவாறு தன் சமூகத்தை கட்டி எழுப்ப அல்லது உருவாக்க வரையறுக்கப்படும் ஒரு கொள்கை.👍அந்தக் கொள்கை வழி நிற்றலும், அதன் வழி தொடர்தலும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணமாகும்டா தம்பி.*🤷🏻‍♂

🤓 *அப்படியாண்ண நம்ம நாட்டோட இறையாண்மை என்னண்ணே?*❓🤔

🌍 🤗 *இந்தியாவின் இறையாண்மை என்னான்னா "வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது"  இது நம்மைப் பற்றிய விசயங்களை சுருங்கச் சொல்லி நிறைய விளக்கும் ஒரு தாரக மந்திரம். நம்மிடையே பல்வேறு விதங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. இனத்தால், மதத்தால், மொழியால்,கலாச்சாரத்தால், உடையால், உணர்வால்... இப்படி பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் அந்த வேறுபாடுகளைத் தாண்டி "இந்தியர்" என்கிற உணர்வால் ஒன்றுபட்டு இருப்பதையே இந்த "இந்திய இறையாண்மை" சுட்டுகிறது தம்பி.*🤷🏻‍♂

🤓 *அப்படியாண்ணே நம்ப ஆளுங்க எல்லாத்துக்கும் இது தெரியுமாண்ணே?*❓🤔

🤗 *நம்பல்ல பலருக்கு இது தெரிவதில்லை, புரிவதில்லை என்பது வேறு விஷயம்.*🙆🏻‍♂ *குறிப்பாய் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு.... இது என்ன அப்படின்னே தெரியாது.*🤦🏻‍♂ *இதுபுரிந்திருந்தால் நம்மை சாதி வாரியாகத் துண்டாட மாட்டார்கள்.*🔪 *இங்கே சாதீயப் பெயர்ச் சொல்லித்தான் பலக் கட்சிகள் தங்கள் பிழைப்பை நடத்துறாங்கடா தம்பி.*🤷🏻‍♂

🤓 *அண்ணே போங்கண்ணே எனக்கே யாரும் சொல்லல.*🤓

🤗 *ஆமாண்டா தம்பி. இந்திய தேசம் இவ்வளவு இழிவுகளை சந்திக்கக் காரணம், இந்த தேசத்தின்"குடிமக்களின் சிந்திக்காமையும் விழிப்புணர்வின்மையும்"  தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. நம்மிடையே இருக்கும்... சின்னச் சின்ன பொறுப்பற்றத்தனமும், 🔪அலட்சியமும்தான்.🔪 நம்முடைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.🔪 அவனை விட நான் உயர்வானவனாக தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்கிற முனைப்பில்தான் நம்மை நாம் இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.*🤦🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே புரியுர மாதிரி சொல்லுங்க.*❓🤔🤔

🤗 *வீட்டின் குப்பையை வீதியில் வீசுவதில் தொடங்கி, குடிநீரை பயன்படுத்த தெரியாத அறியாமையில் இருந்து... எச்சில் துப்புவது முதல்...சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் வரை எதிர்வீட்டுக்காரன்தான் நம்முடைய அதிக பட்ச இலக்காக இருக்கிறான். அல்லது பக்கத்து வீட்டுக்காரன். நம்முடைய சுகாதாரம், சுத்தம், தேவைகள், அத்தியாவசங்கள் யாவும் நமது வீட்டைச் சார்ந்ததாக மட்டுமே கருதுகிறோம். அது நமது நாட்டைச் சார்ந்தது என்கிற அறிவை நாம் இன்னும் பெறவில்லை.*🤦🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே நாம தமிழனா?❓ இந்தியனா?*❓🤔

🤗 *இந்தியனாக இருக்கிற ஒருவன் 🔥தமிழனாக, 🔥கன்னடனாக, 🔥தெலுங்கனாக, 🔥மலையாளியாக, 🔥பஞ்சாபியாக, 🔥குசராத்தியாக, மற்றும் 🔥மராட்டியனாக இருக்க நினைக்கிற போது, இந்திய இறையாண்மை நிச்சயம் பாதிக்கப் படும். 🔥அப்படி பாதித்து விடக் கூடாது*🙅🏻‍♂🙅🏻‍♂

🔥 *இதில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உலகின் வேறு நாடுகளில் தங்களது வேரினை பாதிக்கவில்லை.🙅🏻‍♂ அப்படி பதிக்காமல் போனது அவர்களது யோகமாக போய்விட்டது. ஆனால், இதில் தமிழன் மட்டும் விதி விளக்களிக்கப் பட்டவனாகிறான்.🤕🙇🏻 இவனுக்கு உலகின் பல நாடுகளில் வேர் இருக்கிறது.*👍

😠 *நிறுத்துங்கண்ணே வேரா? 😳❓நாம மனுசனா மரமாண்ணே?*❓

🤗 *நான் வேர் என சொல்வது, தமிழர்கள் தங்களை அதிகாரப்பூர்வக் குடிகளாக வெளிநாடுகளில் குடியேற்றம் பெற்றுள்ளதை பற்றியது*😊

😏 *போங்கண்ணே இலங்கைல போய் செத்துகிட்டு தான் இருக்காங்க இந்திய இறையாண்மை என்ன பண்ணுச்சுண்ணே?*❓🤙🤙🤙🤙

😡 *இலங்கைப் பிரச்சனைக்கு ஒருத் தமிழன் துடிக்கிறான். ஆனால் ஒரு சிங்களவனோ ( நான் சொல்வது இலங்கைவாழ் சிங்களவன் அல்ல.. இந்தியாவில் வாழும் சிங்களவன் ) பஞ்சாபியோ, மராட்டியனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ... எவனும் துடிக்காமல் போனது ஏன்...??? ⁉😡ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவனது இனம் இல்லை. அதனால் அவன் அமைதிக் காக்கிறான்.*😠

😏 *சரி. நம்முடைய பக்கத்து மாநிலம் தமிழ்நாடு, நமது மொழியின் தாய் தமிழ்... என்கிற உணர்வில் ஆதரவு மட்டுமாவது தருகிறானா என்றால் அதுவும் இல்லை. 🙅🏻‍♂அவன் நமக்கே தண்ணீர் தர மறுக்கிறான். நம்மிடம் மின்சாரம் பெறுகிறான்.*👊

🤜 *இப்படி இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரே இனமாக என் தமிழினம் இருக்கிறது. 🤦🏻‍♂ஒன்று நம் உணர்வுகள் புரிந்து மற்றவர்களும் நமக்கு ஆதரவளித்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும்...🔪 அல்லது தமிழனாக நாம் போராடி நம்முடைய உரிமையை பெறவேண்டும். 🔪அதற்கு தடையாக இருக்கும் ஒன்றை நாம் இறையாண்மை எனக் கொள்வது எப்படிடா தம்பி சாத்தியம்..*🤙🤷🏻‍♂🤷🏻‍♂

🤜 *எமது விரல் கொண்டு எம் கண்ணை குருடாக்குவது போல இந்திய இறையாண்மைப் பேசும் இந்திய அரசு நமது ஆயுதங்களை கொடுத்து தமிழ் இனம் அழிய உதவியது இந்திய தமிழனுக்கு எதிரான செயல் இல்லையாடா தம்பி.🤷🏻‍♂ இந்திய தமிழர்கள் இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலமாக இருக்கும் போது, எப்படி அந்த இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு ஆயுதம் வழங்கியும், படை அனுப்பியும் உதவலாம் நீயே யோசிடா தம்பி. இதைவிட கொடுமை நம்ம இனத்தை அழித்தவனுக்கு இந்தியாவில் சிவப்புக்கம்பள விரிப்பில் வரவேற்பு இதுதாண்டா தம்பி நம்ம இறையாண்மை.*👊🤷🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே முன்னாடி தான் இந்தியா, ஒருமைப்பாடுன்னு பேசுனீங்க இப்ப தமிழ் இனத்தை பத்தியே பேசுறீங்க....*🤔🤔

🤜  *தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் 👊. . .இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எதையும் பெருசா செய்யல. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது.*👊👊👊👊

🤓 *அண்ணே இந்தி கத்துறது தப்பில்லையே? ❓அதுவும் எழுத்துதாண்ணே?*❓🤔🤔

🤜 *எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது.🙅🏻‍♂ இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . .👊ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை கோக்கும். . . . .இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து.👍 எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? ❓🤙👊. . . . கூட்டரசு  என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.😡*

🤓 *அண்ணே கூட்டரசா அப்படின்னா?*❓🤔

🤗 *பல மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பே கூட்டரசு.*🤝🤝

🤓 *அண்ணே சும்மா சிரிப்பு மூட்டாதிங்கண்ணே.*🤣😂

🤗 *மாணவப் பருவத்திலிருந்து ‘இந்தியா எனது தாய்நாடு - இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று வளர்கிறோம்.ஆனால், கள நிலவரமோ வேறு விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் நமது அண்டை மாநிலங்களால் உருவாக்கப்படுவதும், அதனைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ‘இறையாண்மை என்பது, ஒருவனைப் பலியிட்டு மற்றவருக்குப் படையலிடுவதல்ல. மாறாக, வளங்களைச் சமமாகப் பகிர்வதே’ என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்வார்களான்னு தெரியலடா தம்பி.*🙆🏻‍♂🤦🏻‍♂

🤜 *ஒரு மாநிலத்தவர் மின்சாரம் வேண்டும், ஆனால் தண்ணீர் தர மாட்டோம் என்கிறார்கள்.*😡

🤜 *மற்றொரு மாநிலத்தவர் காய்கறிகளும், அரிசியும் வேண்டும். தம் மாநில மருத்துவ கழிவுகளை கொட்ட இடம் வேண்டும் ஆனால் தண்ணீர் தரமாட்டோம் என்று நம் மாநில மக்களை அடித்தும், பெண்களை மானபங்கம் செய்கின்றனர்*😡

😡🤜 *இந்த இரு மாநிலத்திற்கும் இடையில் எரிவாயுவை எடுத்து செல்ல நம் மாநில விவசாய நிலம் வேண்டுமாம்*👊😡

🤜 *இன்னும் சொல்ல போனால் குஜராத், மகாராஷ்டிராவின் மீனவர்கள் பாகிஸ்தானால் கைதுசெய்யப்படும்போது இந்தியமீனவர்கள் கைதுன்னு செய்திவாசிக்கும் தொல்லைகாட்சிகள் நம்மீனவர்கள் இலங்கை கடற்படை மூலம் கைதுசெய்யப்படும்போது தமிழகமீனவர்கள் கைதுன்னு செய்திவாசிக்கும் முறையே எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடுகிறது*👊😡

🤓 *அண்ணே நாட்டுல தான்ண்ணே இவ்வளவு பிரச்சனை பேசாம நாம காட்டுலையோ இல்லை மலையிலையோ போய் வாழ்தடலாண்ண*🤔🤔

🤗 *தம்பி காட்ட மட்டும் உட்டுட்டாங்கனு நினைக்குறையா,😏 வளத்தை அழிக்க அவங்களை எல்லாம் காட்டைவிட்டு துரத்தி அடிக்குறாங்க, போவலன்ன நக்சல் அன்றுறாங்க. இன்னும் புரியனும்னா நாகராஜசோழன் MA. MLA , வனமகன் படத்தை பாருடா தம்பி புரிஞ்சுக்குவ.*🤐

🤓 *அண்ணே நம்ம அரசியல்வாதிகள் என்னதான் செய்யுறாங்க?*❓🤔

🤕 *அத ஏம்பா கேக்குற ஒருத்தருக்கு நம்ம பிரதமர் பேரே தெரியில, இன்னொருத்தர் தெர்மாகோல போட்டு அணைய மூடுறார், இன்னும் நிறைய கூத்தா போயிட்டு இருக்கு*🤦🏻‍♂🤦🏻‍♂

🤜 *இந்தியாவிலேயே மூன்றாவது அதிக அவை உறுப்பினர்களை கொண்டது தமிழகம் ஆனா அவங்க பெருசா ஒன்னும் செய்யல*👊

🤜 *கர்நாடக, கேரள மாநில உரிமைக்காக அம்மாநில அமைச்சர்கள் பதவி விலகுவதாக கடிதம் தராங்க நம்ம ஆளுங்க ஒன்றும் இல்லை*🤦🏻‍♂

🤜 *இங்க ஒருத்தர் இலங்கை பிரச்சனைக்காக டில்லி போனாருனு பாத்தா அவரு பெண்ணுக்கு அவைல இடம் வாங்கி தர போயிருக்கார்.*🤦🏻‍♂

🤓 *ஆமாண்ணே இதுக்கு என்ன தான் தீர்வு?*❓🤔

🤒 *எனக்கு தெரிஞ்சத சொல்லுறேண்டா தம்பி*👇

🤜🤦🏻‍♂ *தமிழக அரசிற்கு இறையாண்மை  இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு நீதி வழங்கப்படாது.*🙅🏻‍♂🔪

😳 *அண்ணே என்னண்ணே தனிநாடு கேக்குறீங்களா?*❓🤔

🤒 *தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு.☹ தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு.☹ கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக🤝 இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும்.👍 கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும்,👍 ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். 👍இதன்படி  நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம்.🤝👍*

🤓 *அண்ணே நடக்குறத பேசுங்கண்ணே.*🤓

🤗 *அட தம்பி நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் சட்டம் இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது.🔪🙅🏻‍♂ என்றாலும் தற்போதைய அரசியல் சட்டத்தின்  அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.👍*

🤓 *அண்ணே பேச நல்லா இருக்கும் ஆனா?*❓🤔

🔥🌍 *1957 இல் ஜம்மு-காஷ்மீருக்கெனத் தனி அரசியல் சட்டம் இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் ஜம்மு-காஷ்மீர்க் குடிமக்கள் பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் சட்டம் (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, ஜம்மு-காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது.*🔪

🔥 🌍🔴 *இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.*🔴🔪

🔥🌍 *எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் சட்டம் இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப கூட்டரசின்  இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.*🔪

🤒🤗 *தம்பி எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன், நீ நல்லா யோசித்து முடிவெடு.*🤗

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1⃣ சிறந்த பேச்சாளர்கள்*

🏅 *தமிழன் navask*
🏅 *Jaiganesh2881*
🏅 *Syed Basha*
🏅 *க.நிருபன்கதிர்*
🏅 *மயிலை முருகன்*

👑 *கலந்துரையாடல் 2⃣ சிறந்த பேச்சாளர்கள்*©®
🏅 *Rishi Bm*
🏅 *☂ Kudaykul Malay ☂*⁩
🏅 *AK⁩*
🏅 *🌹Ravi💞kalai🌹*⁩
🏅 *பிராபகரன் சிதம்பரம்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🤔 *வேற்றுமையில் ஒற்றுமை...ஆம் உண்மையே....*

😔 *வேற்றுமை* *(தமிழகம்,தமிழ் மக்கள்)*
😞 *ஒற்றுமை (பிறமாநிலங்கள்)*

🤔 *இறையாண்மை என்றால் என்ன?*
*யார் அடித்தாலும் வாங்கிகொள்ளவதா???*😡

😡  *இந்தியாவை வல்லரசு நாடாக்கும் அரசியல்வாதிகளே இறையாண்மை என்றால் என்ன என்றாவது சொல்லுங்களேன் ........*👊

🔥 *பொறுமையாய் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் சகித்து போவன், கோழை அல்ல, அவன் பொங்கினால் பெரும் எரிமலை....!!*

🔥 *அடி வாங்குவதால் அடிமை என்று எண்ணிவிடாதே....*

🔥 *வலியும் வேதனையும் அனைவருக்கும் ஒன்று என்று எண்ணு...!!!*

🔥 *உரிமையும்,கடமையும் அனைவருக்கும் வேண்டும் என நினை...!!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*'எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்'*
*'தண்பகத்தான் தானே கெடும்'*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*படைவளமும், தன் ஆட்சி மீது நம்பிக்கையும் கொண்ட ஆட்சியாளர், தம் மக்களை அடக்கியா ஆளுவார்? தம் எதிரிகளை ஒடுக்கி, நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் ஒருவருக்கு ஏதேனும் தொல்லைகள் வர முடியுமா என்ன? தன் குடிமக்களின் குறைகள் என்னவென்று நாள்தோறும் கேட்டுத் தெரிந்து, மக்களின் உணர்வுகள், துயரங்கள் பற்றிய அக்கறை பெரிதும் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எளிமையாகக் காணுமாறு வாழும் தலைவரின் ஆட்சியில் என்ன தவறு நேர முடியும்? அத்தனை மக்களிடமும் அளவளாவி, அவர்தம் தேவைகளையும் முறையீடுகளையும் சீர்தூக்கிப், பலரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவெடுக்க ஒருவரால் இயலுமா? தலைவரிடம் தம் குறை சொல்ல எளிதில் இயலும் என்றால் கூட்டம் அலைமோதத் தானே செய்யும்? சற்றும் நேரமின்றி, ஏனோதானோவென்று போகிற போக்கில் முடிவெடுத்துக் குழப்பம் ஏற்படுத்தும் ஆட்சி, தன் இறையாண்மை சீர் கெட்டு, வெளிப்பகை ஒன்று தேவையின்றி, தானே கெட்டு அழிந்து விடாதா? எத்தனை தான் இரக்கமும் அன்பும் மக்களிடம் இருந்தாலும், தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து ஆட்சி செய்வதே நல்லாட்சிக்கு அழகு!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

☄ *தெரிந்து கொள்ளவும்*☄

*கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா????*

☄ *அறிந்துகொள்ளவும்*☄

*பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.*

☄ *புரிந்துகொள்ளவும்*☄

*நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.*

*உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🌟 *புதிய முடிவுரை தொகுப்பாளர் (🤴🏻அறிமுகம்🤴🏻)* 🌟

    👨🏻👨🏻👨🏻‍💻✍ *SPVIGNESH*
        *9789468428*✍👨🏻👨🏻👨🏻‍💻

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...