Wednesday, 1 November 2017

இதிகாசங்கள் உண்மையா ???? பொய்யா????

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :31.10.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🏹 _*கீதாச்சாரம்*_🏹

🏹 *_“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...!! எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.... !!எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...!!! உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. ..!!!எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது...!!! எது இன்று உன்னுடையதோ ,அது நாளை மற்றோருவருடையதாகிறது ..!!மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்...!!! இதுவே உலக நியதியும்  படைப்பின் சாராம்சமாகும்.!”_*👍

🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀

*🤷🏻‍♀அட்மின் தாட்ஸ்🤷🏻‍♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*குறைகள் என்பது வானில் இருக்கும் நட்சத்திரத்தைப் போன்றது தேட தேட வந்துக் கொண்டே இருக்கும்.*

*நிறைகள் என்பது நிலாவைப் போன்றது தேட அவசியமிருக்காது.*

💖💖💖💖💖💖💖💖💖💖💖
    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*இதிகாசங்கள் உண்மையா ???? பொய்யா????*

📜🔎👍🔍👎📜🔎👍🔍👎📜

*💐பாகம் - 1⃣💐*

📜 📯 _*வரலாறு உண்மை என்றாலும் அதற்க்கு ஆதாரம்🔎 இல்லை என்றால் கட்டுகதை ஆகிவிடுகிறது.🤷🏻‍♀ புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு மகாபாரதம் இராமாயணம் பகவத்கீதை தான் இதில் பல ஆயிர கணக்காண உரைகள் செய்யுள் நடைகள் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளன. ஆனால் இவை உண்மையாக நடந்ததா❓ என்றால் இவற்றை படிக்காதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட இது வெறும் கட்டுகதை😏 இதை போன்று நடைபெற்றதாக சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.*_🤷🏻‍♀

📜⁉ _*இதிகாசம் என்றால் என்ன?*_⁉

💝 _*கடவுளரும், கடவுளின் அம்சமானவர்களும், மானிடராகப் பிறந்து, பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும்.*_💖

💝 _*இதி- ஹ-ஆஸம் என்று இதனைப் பிரிப்பர். இதி ஆஸம் என்பதற்கு இப்படி நடந்தது என்றும், ஹ என்பதற்கு நிச்சயமாக என்பது பொருள். கொஞ்சம் கூடப் பொய் கலக்காமல், உள்ளதை உள்ளபடியே எழுதியதே இதிகாசம் என்பர்.*_💝

🏹💪 _*அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண  வரலாறாகும்(Pre-historic Period)*_🏹

🔔 _*இதிகாசங்கள் எத்தனை?' ⁉என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல🙅🏻மூன்று. 1⃣சிவரகசியம், 2⃣இராமாயணம், 3⃣மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு.*_🔔

🔱 _*18- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒப்பிலாமணிதேசிகரால் இயற்றப்பட்டது சிவபூசை முதலியவற்றின் பெருமைகளை இதிகாச முகத்தாற் கூறுவதுமான நூல்.*_

🔱 _*ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.*_🔱

🔔 _*ஆனால் நம்மிடையே பெரும் கண்ணோட்ட த்தைக்கொண்டுஈர்த்தது மகாபாரதமும்,இராமாயணமும் தான்...இதை பற்றிய ஆராய்ச்சி க்களே இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது....*_🤷🏻‍♀🏹

⚜🔎 _*அவை உண்மையா... பொய்யா என்பதை காண்போம்*_🔍⚜

📜📯 _*மகாபாரதம் கதை சுருக்கம் மற்றும் அதன் அமைப்பு👇🏻*_

📜📯 _*அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது*_📜

📜 _*மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர்.✍ சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் ✍வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.*📯_

📜📯 _*குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான்⚔ மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.*_📜

📜📯 _*மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால்,🔔 இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.*_📯📜

📜🔔 _*சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.*_📜

📜📯 _*இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள்.💐 அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் 👑பீஷ்மர்👑 என்று அழைக்கப்படுகிறார்.*_📜

📜📯 _*சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.*_📯📜

📜📯 _*அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.*_📯📜

📜📯 _*இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை.😔 பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.*_📜

📜📯 _*திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது.😔 பாண்டுவுக்கு தோலில் நோய்.😔 திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும், பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.*_📜

📜📯 _*திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் 1⃣துரியோதனன். இவர்கள் 100 பேரும் """கௌரவர்கள்"""என்று அழைக்கப்படுகின்றனர். 💖குந்திக்குமூன்று பையன்கள்.... யுதிஷ்டிரன்(தர்மர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள், நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச """பாண்டவர்கள்"""என்று அழைக்கப்படுகிறார்கள்.*_💝📜

📜 _*குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள்.*_📜

📜 _*அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் 🤴🏻""கர்ணன்""🤴🏻குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.*_📜

📜📯 _*கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை.⚔ சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.*_⚔📜

📜⚔ _*திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.*_😔📜

📜⚔ _*பாண்டவர்களும், கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) 👑முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் 😡கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.*_📜

📜⚔ _*பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா 👨🏿‍🎤சகுனி 👨🏿‍🎤உதவி செய்ய வருகிறார்.*_📜

📜⚔👨🏿‍🎤 _*சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.*_📜

📜⏳ _*இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து,தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.*_⚔

📜⚔ _*போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர்.💪 ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர்.😔 கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான்.😔 பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். 😔இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.*_📜💝

📜💝 _*பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் 👑பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.*_⏳📜

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :31.10.2017.*
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*இதிகாசங்கள் உண்மையா ???? பொய்யா????*

📜🔎👍🔍👎📜🔎👍🔍👎📜

          ⏳ *பாகம் - 2⃣*

📜⚔ _*மஹாபாரதப் போர் நடந்ததா?❓  போர்க்களத்தில யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா?❓ பகவத்கீதை மகாபாரதத்தின் இடைசொருகள் ? ❓ போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன*_❓⁉🤔🙄

📜⏳ _*பாரதப் போரின் காலம் என்ன?*_⁉🤔

📜⏳ _*பாரதப் போர் கலியுகம் துவங்கும் கி.மு 3102க்கு முன் - 36 ஆண்டுகளுக்கு முன்னர் - 3138ல் நடந்தது என்ற நம்பிக்கை இருக்கின்றது. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று குறிப்பிட்டு வருகின்றன.*_⏳

📜⏳ _*இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே - கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!*_💪⏳📜

📜⏳ _*கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது*_🔍👍

📜🔎💝 _*ஸ்வஸ்தி  ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்*_⏳

📜⏳🔎 _*ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை*_🔍⏳

📜⏳ _*வேணாட்டை ஆண்ட ஆய்ற்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று குறிப்பிடுவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.*_⏳🔍

📜⏳🔎 _*தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது.👍 இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று குறிப்பிட்டுள்ளது.*_🔍⏳

📜🔎 _*மஹாபாரத நிகழ்வுகள் 12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் என்பவரால் கட்டபட்ட  அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.*_🔍📜

📜⏳🔎 _*மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வாரங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:-*_🔍📜👇

📜🔎 ⏳ _*முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)*_

📜⏳ _*டி.ஆர். மங்கட் - 3201*_
📜⏳ _*எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137*_
📜⏳ _*சி.வி.வைத்யா - 3102*_
📜⏳ _*வி.பி.அத்வாலே – 3016*_

📜🔎 _*இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)*_🔍📜

⏳ *வராஹமிகிரர்*
⏳ *கல்ஹணர்*
⏳ *பி.சி.சென்குப்தா*

📜⏳ _*மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)*_⏳📜

⏳ *ஏ.கன்னிங்ஹாம் -1424*
⏳ *கே.பி.ஜைஸ்வால் –1424*
⏳ *தாரகேஸ்வர பட்டாசார்யா --1432*
⏳ *கிரிதர சேகர வசு (பாசு) - 1416*
⏳ *பங்கிம் சந்திர சாட்டர்ஜி - 1400*
⏳ *சுவாமி விவேகாநந்தா –1400*
⏳ *ஏ.டி.புசல்கர்  - 1400*
⏳ *பால கங்காதர திலகர் – 1400*
⏳ *எச்.டி. தேவ் - 1400*
⏳ *பி.பி.கேட்கர் – 1267*
⏳ *ஸ்ரீ அரவிந்தர்  -1191*
⏳ *கே.எல். தப்தாரி –1197*
⏳ *கே.ஜி.சங்கர் - 1197*
⏳ *சீதாநாத் பிரதான் – 1151*

📜🔎 _*நான்காம் அணி ( கி.மு.950)*_🔍📜

⏳ *பர்ஜிட்டர் - 950*
⏳ *ராய் சௌத்ரி - 900*

⏳ *சரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறிப்பிடுவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மஹாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்ததுள்ளது என்பது உறுதியாகிறது*🔍👍

📜🔎 _*கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா உண்மையா.?*_🔍📜

📜🔎🌍 _*இந்திய தேசிய கடலாராய்ச்சிக் கழகம், 1983 முதல் 1990ம் ஆண்டு வரை பதினெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.🔍 ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ், ‘The Lost City of Dwarka’ என்ற தன்னுடைய புத்தகத்தில் தன் ஆராய்ச்சி முடிவுகளை எழுதியிருக்கிறார்.✍ “புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு” அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது.👍 இது, மகாபாரதக் கதை நடந்ததையும், துவாரகை நகரம் இருந்ததையும் உறுதிப்படுத்துகின்றது.*_👍🔍📜

📜⏳🔎 _*கி.மு. 1500ம் ஆண்டுவாக்கில், தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகிலுள்ள தீவான பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்திருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது.🔍 கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு குடியிருப்பு கள், மூன்று பிரமாண்டமான கட்டிடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.*_🔍📜👍

📜🔎 _*அந்நகரின் சுவர்கள் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றன.👍 கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது. இப்படி விரிவாக்கப்பட்ட பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப் பட்டிருக்கிறது.*_🔍👍📜

📜🔱 _*அஸ்திரங்கள் இருப்பது உண்மையா.??*_🏹

🏹🔱 _*கு-ருசேத்திர நிலப்பரப்பில் பெரிய அளவில் போர்⚔ நடந்ததற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை! என்றாலும், இப்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆயுதங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றில் 😱😳அணுக்கதிர் இயக்கம் காணப்படுவதாகவும் அவை பாரதப் போரில் பயன்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இவ்வாய்வில் ஈடுபட்ட இயற்பியல் பேராசிரியர் (Physics Prof.). ஸ்வதேஷ் குமார் டிரிக்கா என்பவர்.*_🔱😳

🏹⚔ _*மஹாபாரதத்தில் கூறப்படும் நட்ச்ச்த்திர அமைவிடங்கள்,மற்றும் பல முழு நிலவு ,அமாவாசை போன்ற நிகல்வுகள் கதை நடந்ததாய் கூற்ப்படும் காலபகுதியில் இருக்கவேண்டியவாறு பொருந்த்துகிறது👍.அதிலும் இன்னொரு விடயம் என்ன வென்றால் இரண்டு வான நிகழ்வுகலிற்கான இடைவெளியும் தெள்ளத்தெளிவாக பொறுந்த்துகிறது.5000 வருடங்களின் முன் ஒரு கதை ஆசிரியர் இப்படி ஒரு கற்பனை கதையை எழுதியிருப்பின் இந்த சாத்தியக்கூறு இருந்திருக்காது.*_🏹⚔

⚔🏹 _*மஹாபாரதத்தில் கூறப்படுகின்ற இடங்கள் உன்மையான இடங்களாகவே இருகின்றது.👍 ஹஸ்தினாபுரம் தற்போதைய உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. இந்திர பிரதேசம் / கந்தர்வ பிரதேசம் தற்போதைய டெல்ஹி பகுதியில் அமைந்திருக்கிறது.*_🏹⚔

🏹⚔ _*குருஷேத்திர போர் துவங்கும் நேரத்தில் தன் எதிரில் நின்ற உறவுகளை கண்டதும். அர்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினார். அவருக்கு எழுந்த எண்ணற்ற சந்தேகங்களை கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே 📜"பகவத்கீதை" 📜ஆகும். இந்நூல் 700 சுலோகங்களும், 18அத்தியாயங்களைய்ம் கொண்டுள்ளது.*_⚔🏹

📜✍ _*பகவத்கீதையின் காலம் குறித்து பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மகாபாரதத்தில் விவரிக்கப்படும். தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கீதையும்  வருகிறது. கீதை இடைச்சொல் என்றால் அவை தனித்து தெரியும். எனவே பகவத்கீதை மகாபாரதத்தின் இடைச்சொருகள் இல்லை.*_🙅🏻

⚔🏹 _*மகாபாரதம்எழுதப்பட்ட காலகட்டம் மகாபாரத நிகழ்வுக்கு சில தலைமுறைகளுக்கு பின்னராக இருக்கலாம் என்று சில வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.*_🔍👍
[31/10, 9:33 PM] ‪+91 77082 77357‬: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :31.10.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*இதிகாசங்கள் உண்மையா ???? பொய்யா????*

📜🔎👍🔍👎📜🔎👍🔍👎📜
⏳ *பாகம் -3⃣*

📜🏹 *இராமாயணம் கதை சுருக்கம் மற்றும் அதன் அமைப்பு 👇🏻*

🏹 _*இராமாயணம்*_🏹

🏹 _*இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கி. மு. 400 க்கும் கி. பி. 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் இதனைத் தமிழில் எழுதினார்.*_

🏹 _*இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராம்கியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல் நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது.*_📜

📜🔎 _*சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.👍 இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால் இரா மாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருளைக் குறிக்கிறது.*_📜

📜🏹 ✍ _*தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமில் மாதவ் கங்குனியும், ஒரிசாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். வால்மீகி எழுதிய இராமாயணத்தின் அமைப்பின்படி இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம்.*_✍📜

📜🏹 _*இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான். என்பதையும் நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த திருமாலின் கதையும் ஆகும்.*_📜🔍

📜🔎⏳ _*வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன*_⏳

📜⏳ _*மகாபாரதத்தில் எழுந்த அதே சந்தேகங்கள் தான் இராமாயணத்திலும் பலருக்கு எழுந்தது.. இராமாயணம் காலம் எது.??⁉🤔 அந்த காலத்தில் புஷ்பக விமானம் இருக்க வாய்ப்பே இல்லை??😳 என்று பல கேள்விகள் எழுந்தது.*⁉_

🔎 _*அவற்றை பற்றி முழுமையாக காண்போம்*_🔍

🏹🔎 _*இராமாயணம் நடந்த காலத்தில் ராமர் பிறந்த நேரத்தில் இருந்த பல்வேறு கிரக் நிலைகளை வால்மீகி ரிஷி கூறியிருப்பதை வைத்து ஆராய்ந்து அப்படிப்பட்ட கிரக நிலைகள் கிறிஸ்து பிறப்பதற்கு 5114 ஆண்டுகளுக்கு முன்னர் ஜ்னவரி மாதம் 10ஆம் தேதி அமைந்திருந்ததாக இப்போது பிரபல ஆராய்ச்சியாளர் புஷ்கர் பட்நாகர் கூறுகிறார்.🔍 தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸயிண்டிபிக் ரிஸர்ச் ஆன் வேதா என்ற ஆய்வு நிறுவனம் இந்த கணிதத்தைப் போடுவதற்கான  ஒரு விசேஷ மென்பொருளை வடிவமைத்துள்ளது. அதன் உதவி கொண்டு இந்த முடிவை அவர்  கண்டுள்ளார்.*_🔍

🔎 _*2002 ஆம் ஆண்டில் டாக்டர் ராம் அவதார் சர்மா என்ற ஆய்வாளர் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட 196 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கெல்லாம் இன்றும் கூட ராமாயணம் நடந்ததற்கான சின்னங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.*_🔍👍

🔎 _*டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌபே மற்றும் புரபஸர் வி.ஆர்.ராவ் ஆகியோர் இன்னொரு உண்மையைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.மிராஜ்பூர், வாரணாசி,பண்டா மற்றும் அலஹாபாத் ஆகிய இடங்களில் இன்றும் இருந்து வரும் கொல் என்னும் பழங்குடியினர் குகனுடைய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுடைய மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு குடியினரின் மரபணுக்களாகும் என்ற அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.*_🔍

📜🔎 _*சுந்தர காண்டத்தில் இராவணனின் அரண்மனை நான்கு தந்தங்கள்  கொண்ட யானைகளால் காவல் காக்கப்படுவதை வால்மீகி முனிவர் நான்காவது ஸர்க்கம் 29ஆம் சுலோகத்தில் “வாரணைச்ச சதுர்தந்தை:” என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்.*_🔍📜

*அதே காண்டத்தில் 27ஆம் ஸர்க்கத்தில் வரும் சுலோகம் இது:*

🔎📜 _*ராகவஸ்ச மயா த்ருஷ்டச் சதுர்தந்தம் மஹாகஜம்*_

🔎📜 _*ஆரூட: சைல சங்காஷம் சசார சஹ லக்ஷ்மண*_

📜🔎 _*விபீஷணனின் பெண்ணான திரிஜடை, இராவணன் அழிக்கப்பட்டு சீதையுடன் இராமன் சேருவதாகத் தான் கண்ட கனவை சீதையிடம் கூறுகிறாள். அப்போது அவள் கூறும் இந்த சுலோகத்தின் பொருள்: “ராகவர் லக்ஷ்மணரோடு கூடியவராய் நான்கு தந்தங்களை உடைய குன்று போல உள்ள யானையின் மீது ஏறினவராக என்னால் காணப்பட்டார்”*_
🔍
_*ஆனால் நான்கு தந்தங்கள் கொண்ட யானை இல்லவே இல்ல   🙅🏻என்று பலர் எடுத்துரைத்தனர். ஆனால் என்கார்டா என்சைக்ளோபீடியா (Encarta Encyclopedia)  என்னும் கலைக்களஞ்சியம் இப்படிப்பட்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதையும் அவற்றின் பெயர்*_🔍

🔎 _*மஸடோடோண்டாய்டியா (MASTODONTOIDEA) என்றும் குறிப்பிடுகிறது. 👍அந்த இனம் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து பட்டது என்றும் பின்னர் இரண்டு தந்தங்கள் உடைய யானைகள் தோன்றின என்றும் அந்தக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது.*_🔍👍

📜🏹🔎 _*இராமாயணம் உண்மை என்று நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளது.*_🔍👍👍

🏹🔎 _*1⃣ ராமர் பாலம் இந்த பாலம் 50கீ.மீட்டர் தொலைவுக்கு தனுஷ்கோடியில் இருந்து ஸ்ரீலங்காவிற்க்கு  வங்காளவிரிகுடாவில் இருப்பதை நாசா அதன் செய்ற்கைகோள் படம் முலம் நிருபித்திருக்கிறது.🔍👍 ஆரம்பத்தில் கடலுக்கு மேல்படரப்பில் கட்டபட்ட இந்த பாலம் பல ஆழிப்பேரலைகளாலும் கடல்மட்ட உயர்வுகளாலும் கடலுக்குள் சிதைந்துவிட்டது.*_👍🔍

🏹🔎 _*2⃣ சிதை சிறைவக்கபட்ட அஷோகவனம் அஷோக மரங்களால் சூழப்பட்டிருக்கு அங்கு அனுமரோட பெரிய கால்தடமும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.*_🔍👍

🏹🔎 _*3⃣ அனுமனால் எரிக்கப்பட்ட ராவணனோட அரண்மனை சிகேரியா என்கிற மலை மேல் இருக்கின்ற ராவணனுடைய அரண்மனை தான் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.*_🔍👍

🏹🔎 _*4⃣ லட்சுமனனோட உயிரை காத்த சஞ்சீவி மலை. இப்பவும் பல அபூர்வ மூலிகைகள் நிறைந்ததாக ஆயுர்வேதம் கூறுகிறது.*_🔍👍

🏹🔎 _*5⃣ அனுமன் எரித்த ஸ்ரீலங்காவின் உஷன் கோடா என்னும் இடத்தில் வெறும் சாம்பல் மட்டும் தான் இன்றும் இருக்கிறது.*_🔍👍

🏹🔎 _*6⃣ சீதை அக்னிபிரவேஷம் செய்து தன்னுடைய புனிததன்மையை நிருபித்த இடமான திப்-ரூப்-போலா என்கின்ற இடம் இன்றும் தடயங்களோடு இருக்கின்றது.*_🔍👍

🏹🔎 _*7⃣ ராவணன் பயன்படுத்திய புஷ்பகவிமானம் இருந்ததற்கான அடையாளங்கள் அங்கிருக்கும் உள்ளூர் கோவில்களில் வைக்க பட்டுள்ளது.*_🔍👍

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...