Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 6⃣💝_*

*_சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ். இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்._*

*_இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன._*

*_கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, "அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது._*

*_காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட  வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது._*

*_தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்._*

*_இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்._*

*_இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

       🏆👏.    *_அருள்முருகஇன்பன்_*    👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑


🤩 🏅 *_SP.Vignesh⁩_*👏

🤩 🏅 *_ஜெய் கணேஷ்⁩_*👏

🤩 🏅 *_Prabakar.😊_*👏

🤩🏅 *_Bismi⁩_*👏

🤩🏅 *_Sasikanth Neelakantan⁩_*👏

🤩🏅 *_Kumarb⁩_*👏

🤩🏅 *_இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩_*👏

🤩🏅 *_sriramkrm⁩_*👏


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *_VKR⁩_*👏

🤩🏅 *_Sheikmom⁩_*👏

🤩🏅 *_uuacqq d⁩_*👏

🤩🏅 *_Prabhumathi⁩_*👏

🤩🏅 *_🌷பிரதீப் விஸ்வா 🤝⁩_*👏

🤩🏅 *_மதுரை மலைராஜ்📿⁩_*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

*தமிழா இந்த அடிமை கட்டமைப்பான மத்திய மாநில அரசையும்,நம் அன்றாட செய்திகளை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தரோம் னு சொல்ல கூடிய மீடியாவையும் நம்பி இருந்தால்,அவர்களை இனிமேலும் நம்பினால்...*

*உன் அடுத்த தலைமுறை மட்டும் அல்ல உன் தலைமுறைக்கே காசு கொடுத்து நீர் வாங்க வேண்டிய நிலையை சந்திப்பாய்!!!*

*சிந்தித்து பார்!!! உன் சந்ததியின் எதிர்காலம் புரியும்!!!*

*சிந்தித்து பார்!!! ஓட்டை இவர்களுக்கே குத்தி பார் உன் தலைமுறையின் அவலத்தையும் அறிவாய்!!!*

*_அழிவது நம் வளம், அழுவது நம் இனம்_*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்_*

*_தீமை இலாத சொலல்_*

    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      
*_உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்._*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை_*

*_சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை_*

*_உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை_*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

     😍  *உதயா யுவா ~ 9500764969*😍

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...