🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :28.09.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_" இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் ."_*
🌱 *அண்ணல் காந்தியடிகள் .*💐🌳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
*சொந்தமாக செயல்படத் தொடங்கினால் யாரிடமும் சொல்லிக்கொண்டு திரியாதே,*
*ஏனெனில் வெற்றியின் வழிகளைச் சொல்பவனைவிட, விமர்சனம் செய்பவன்தான் அதிகம்.*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*கிராம சபை கூட்டமும், அதனால் ஏற்படுகின்ற நன்மையும், தீமையும் பற்றிய ஓர் ஆய்வு...*
🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
*🌍இந்தியா பல ஆயிரம் கிராமங்கள் உள்ள நாடு. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறினார். அவருடைய திட்டங்கள் யாவும் கிராமத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன. அவருடைய கிராமியப் பொருளாதாரக் கொள்கை உலகப் பொருளாதார அறிஞர்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது.*
*😌நமது அரசுகள் இவ்வளவு காலமும் 🏡கிராம முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்கின்றன. ஆனால், 🏡கிராம மக்கள் இன்றும் சரியான 🛣சாலைவசதி, சுத்தமான 💧குடிநீர் வசதி, தரமான கல்வி வசதி மற்றும் போதிய மருத்துவ வசதி இன்றித் தவிக்கிறார்கள். அவர்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். 🌾விவசாயம் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. ஆகவே தம் பிள்ளைகளை நகரங்களை நோக்கிப் பிழைப்பிற்காக அனுப்புகிறார்கள்; பலர் 🏢நகரத்திற்கே குடிபெயர்ந்து விட்டார்கள்.*
*🙂இருந்தாலும் இன்றும் 👳கிராமத்து மக்கள் நமது பண்டைய பெருமையை அவர்களின் நடை உடை பாவனைகளால் பாதுகாத்து வருகின்றனர். கல்வி அறிவில் அவர்கள் பின்தங்கி இருப்பினும் ஒழுக்கத்திலும் நேர்மையிலும் படித்தவர்களைவிட உயர்ந்திருக்கிறார்கள்*.
*👍👳கிராம மக்கள் மேலும் சிறப்படைய கிராம சபை கூட்டங்கள் உதவிபுரிகிறது.*
🏛 *தமிழக ஊராட்சி அமைப்புகள்:*🏛
*🏛தமிழ்நாட்டில் உள்ள மொத்த 👨👨👧👧மக்கள் தொகையில் 4.05 கோடிபேர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகிறது.*
🏫 *மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள்:*🏫
73வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 1993-ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக *கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி* ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
🕴 *நிர்வாக அமைப்பு:*🕴
*ஊராட்சி அமைப்புகளின் நிர்வாக அமைப்பை பற்றி தெரிந்து கொள்வதினால் யார் யார் என்னனென்ன வேலை செய்கிறார்கள் என தெரிந்துக்கொண்டு நமக்குதேவையான வேலைகள் எளிதாக பெற உதவியாக அமையும்.*
*நிர்வாக அமைப்பாக*
*மாநில அளவில்,மாவட்ட அளவில், வட்டார அளவில் மற்றும் கிராமசபை அளவில் இயங்குகிறது*.
🏞 *கிராம ஊராட்சி:*🏞
*கிராம ஊராட்சித் தலைவரே 🏡கிராம ஊராட்சியின் செயல் அலுவலரும் ஆவார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும் கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான 💴காசோலைகளில் ஒப்பம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவி புரிகிறார்.*
*💪கிராம ஊராட்சியின் கடமைகள்:*
*கிராம ஊராட்சியின் கடமைகள் பற்றி நாம் தெரிந்துக்கொண்டு கடமைகள் சரிவர செய்யாதபட்சத்தில் அவர்களை கேள்வி கேட்க உதவியாக இருக்கும்.*
*🏠மூன்றடுக்கு ஊராட்சிகளிலேயே, அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து செயல்படும் அமைப்பாக, கிராம ஊராட்சிதான் விளங்குகிறது. இந்த அமைப்பு, மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறது*.
*👉கட்டாயக் கடமைகள்:*
*தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110ல் கீழ்க்கண்டவற்றை கிராம ஊராட்சிகளின் கட்டாயக் கடமைகளாக வகைப்படுத்தியுள்ளது.*
*👉•கிராம ஊராட்சி சாலைகளை அமைத்தல், அத்தகைய சாலைகளில் பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றைக் கட்டுதல், தெருக்களை மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை அவ்வப்போது பழுதுபார்த்துப் பராமரிப்பு செய்தல்.*
*👉•குடியிருப்புப் பகுதியில், பொதுச் சாலைகள், தெருக்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள் போன்ற பகுதிகளில் தெரு விளக்குகளை அமைத்துப் பராமரித்தல்.*
*👉பாதுகாக்கப்பட்ட குடிநீர் ,கிராமபுற பொது சுகாதாரம் மற்றும் அரசு அவ்வப்போது ஒப்படைக்கும் பிற கடமைகளை ஆற்றுதல்.*
*👉விருப்பக் கடமைகள்:*
*1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 111-ன் படி பின்வரும் கடமைகளை தேவைக்கேற்பவும், நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.*
*💁♂•சாலைகளில் இருபுறமும் மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தல்.*
*💁•குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிகளுக்கு அப்பால் உள்ள சாலைகளிலும் தெரு விளக்குகள் அமைத்துப் பராமரித்தல்.*
*💁♂•பொது சந்தைகள் அமைத்துப் பராமரித்தல்.*
*💁•உள்ளூர் திருவிழாக்களிலும், சந்தைகளிலும் சுகாதார வசதிகள் செய்தல்.*
*💁♂•வண்டி நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம், கால்நடைத் தொழுவங்கள் ஆகியவற்றைப் பராமரித்தல்.*
*💁•இறைச்சிக் கூடங்கள் அமைத்தல்.*
*💁♂•பயணிகள் தங்குமிடங்களை அமைத்துப் பராமரித்தல்.*
*💁•படிப்பகங்கள் ஏற்படுத்திப் பராமரித்தல்.*
*💁♂•வானொலி, தொலைக்காட்சி அறைகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள் அமைத்தல்.*
*💁•உடற்பயிற்சி நிலையங்களை அமைத்துப் பராமரித்தல்.*
*💁♂•முறைசாராக் கல்வி, சமூகக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி நிலையங்கள் அமைத்து நடத்துதல்.*
*🏡கிராம ஊராட்சிக் குழுக்கள்:*
*ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கீழ்க்கண்ட குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்*.
*💁♂•நியமனக்குழு*
*💁•வளர்ச்சிக்குழு*
*💁♂•வேளாண்மைக் குழு*
*💁•பணிகள் குழு*
*💁♂•கல்விக் குழு*
🤦♂ *_சட்டையை கிழிக்கிறதும் மைக்கை தூக்கியடிக்கிற சட்டசபையை தெரியும்._*🤦♀
🤔 *அதென்ன கிராம சபை கூட்டம்.*🤔
🥁 *கிராம சபை கூட்டம் :*🥁
*🏵அக்கால சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்புற்று இருந்தமைக்கும், 👨👨👧👧நாட்டு மக்கள் பல நன்மைகளும் கிடைக்கப்பெற்று அமைதியாக வாழ்ந்து வந்தமைக்கும் முதற்காரணம், அக்காலத்தில் ஊர்தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டுதான்.*
*🤝🗣ஊர்சபைகள் பொறுப்புணர்சியுடன் அறநெறி பிறழாமல் நடுவு நிலைமையுடன் கடமையை நிறைவேற்றி வந்ததால், அச்சபைகள் மீது மக்கள் பெருமதிப்பும் நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்றுகொண்டு கீழ்ப்படிந்து நடந்து வந்தனர்*.
*👳ஊரின் தலைமைப் பொறுப்பை ஊர்த்தலைவர் ஏற்றிருந்தார். அவருக்கு *🏵“ஊராள்வான்” எனப் பெயரும் இருந்தது.*
அந்நாட்களில் *கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகர சபை என நான்கு சபை இருந்தன.*
*👥👥இம்மன்றங்களின் உறுப்பினர்கள் குடவோலை வாயிலாக அந்நாட்களில் தேர்தெடுக்கப்பட்டனர்*
*📜சான்று*: அகநானூற்றிலுள்ள கயிறுபிணிக் குழிசியோலை கொண்மார் என்ற 77-ம் பாடலில் இதை அறியலாம்.
*👳சோழர் காலத்து வாரியங்கள்*
*🏡கிராமச் சபைகள், நிர்வாக வசதிக்கு ஏற்ப பல வாரியங்களை அமைத்துக்கொண்டன.* அவ்வாரியங்களின் பணிகள், ஊர்களின் தன்மைக்கேற்ப அமைந்திருந்தன. சில ஊர்கள், ‘‘சம்வத்சர வாரியம்’’ என்ற ஒன்றின் மூலம் கிராமத்தின் அனைத்துப் பணிகளையும் கவனித்தன. கல்வெட்டுகளின் மூலமாக கீழ்க்காணும் வாரியங்கள் இருந்ததாகத் தெரிகிறது.
*💁♂நீர் வாரியம்*.
*💁ஏரி வாரியம்*.
*💁♂நில வாரியம்*.
*💁பஞ்ச வாரியம்*.
*💁♂கழனி வாரியம்*.
*💁பொன் வாரியம்*.
*💁♂தடிவழி வாரியம்.*
*💁குடும்ப வாரியம்*.
*💁♂களிங்கு வாரியம்.*
*💁கணக்கு வாரியம்.*
*💁♂தோட்ட வாரியம்* .
*💁சம்வத்சர வாரியம*
*👳சோழ ஆட்சிக்கு பிறகு எத்தனையோ அயலார் ஆட்சிக்குட்பட்ட பிறகும், ஆங்கில ஆட்சியின்போதும், கிராம சபைகள் தம் கடமைகளை நிறைவேற்றி, பொதுமக்கள் வாழ்வு குலையாமல் பணிபுரிந்து வந்திருப்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.*
🏛 *கிராம சபை*🏛
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி செய்கிறது. கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது.
👨💼 *அண்ணே எமக்கு கிராம சபை பற்றி அவ்வளவாக தெரியாது சற்று விரிவாக விளக்கமுடியுமா.*👴🏻
👨💼 *எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?*
*👴🏻 1. ஜனவரி 26 (குடியரசு தினம்)*
*2. மே 1 (உழைப்பாளர் தினம்)*
*3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)*
*4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)*
👨💼 *தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?*
👴🏻ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
👨💼 *கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?*
👴🏻கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.
👨💼 *கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?*
கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
👨💼 *கிராம சபையின் தலைவர் யார்?*
👴🏻கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
👨💼 *கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?*
👴🏻கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
*(அரசாணை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]*
👨💼 *தேவையான மக்கள் குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?*
👴🏻அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
👨💼 *கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?*
👴🏻சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
👨💼 *எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?*
👴🏻 கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. *உதாரணமாக, கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.*🤦♀
👨💼 *மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?*
👴🏻முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
👨💼 *கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?*
👴🏻கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
👨💼 *கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?*
👴🏻இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.
👨💼 *கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?*
👴🏻பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். *கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.*
👨💼 *கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும்?*
👴🏻கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்.
👨💼 *சிறப்பு கிராம சபை என்றால் என்ன?*
👴🏻தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும். [1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
👨💼 *சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?*
👴🏻சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.
👨💼 *கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?*
👉மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது.
👉மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது.
👉மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்.
👉பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
👉கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது.
👨💼 *கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?*
👴🏻அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.
👨💼 *பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?*
👴🏻கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.
👨💼 *இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?*
👴🏻முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்
🙇உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள் 🙇♀
🤙 *ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?*
1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது. அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன. எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.
🤙 *பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?*
மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து
🤙 *தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?*
தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன
🤙 *நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?*
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்
🤙 *ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?*
இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது. சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.
*கிராம சபை கூட்டத்தின் நன்மைகள் :*
கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பதினால்
பொது மக்களாகிய நமக்கு கிடைக்கும் நன்மைகள் அறிந்து செயல்படுவதினால், *இளைஞர்கள் அரசியல் களம் இறங்க முன்னோட்டமாக ஊராட்சி அளவில் சிறப்படைய கிராம சபைகள் உதவி பெறச்செய்யும்.*
🤔•கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிராம சபையில் கலந்து கொண்டு ஊராட்சி தொடர்பாக தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கலாம்.
🤔•கிராம ஊராட்சியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது குறைகளைத் தெரிவிக்கலாம்.
🤔•பயனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கலாம்.
🤔•கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மீது தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கலாம்.
🤔 *மரம்வளர்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு, சுற்றுப்புற சுகாதாரம் போன் நல்ல திட்ங்களை பற்றி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றலாம்.*
_கிராம சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையினை, தீர்மான நகலுடன் கிராம ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு மூன்று நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்._
🤔 கேள்விகளை மக்கள் கேட்பதும், அதற்கு மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக மக்களுக்கு பதில் கூறுவதும்தான் மக்கள் ஜனநாயகம் அடிப்படை. இந்த அமைப்புதான் மக்களை அதிகாரப் படுத்துகிறது. கிராம சபையைத்தவிர மற்ற எந்த அமைப்புகளும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியதாக தெரியவில்லை, காரணம் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து தங்கள் தேவைகளை எடுத்துக் கூறுவதும், மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதை வெளிப்படையாக நம்பகத்தன்மையுடனும் செய்வதுதான் சிறப்பு.
🤦♂ *கிராம சபை தீமைகள்:*🤦♀
*👍நன்மையொன்று இருந்தால் 👎தீமையும் இருக்கத்தானே செய்யும்.*
*🏡👍கிராம சபை நல்லதற்க்காக தான் உருவாக்கினார்கள்.*
*நல்லது தான் நடக்கும்.ஆனால் சுயமாக தானே நடக்காது அதற்க்கு சமூக சேவைமனாப்பான்மை கொண்ட 👉நல்உள்ளங்களின் தொடர்முயற்ச்சியும் ஆதரவும் தேவை.*
*💪நமது பலவீனம்🙃(சோம்பேறித்தனம்) அவர்களது பலம்(ஊழல்).*
*💵ஊழலின் முதல் தொடக்கமாக 🏡கிராமும் இருக்கிறது,அடிமட்ட அரசு ஊழியர்கள் போல.*
*அதாவது,உதாரணமாக 🏛தமிழ் நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு 🏡கிராம ஊராட்சிக்கு தோராயமாக வருடத்திற்க்கு 5 லட்சம் முதல் 25 லட்சம் (மக்கள் தொகைக்கு ஏற்ப) வரை வழங்கப்படுகிறது. அந்த நிதி ஊராட்சி வளர்ச்சிக்கு அரசால் வழங்கப்படுகிறது.*
*🤦♀ஆனால் இங்க தான் அந்த 💵ஊழல் என்னும் தீப்பொறி உருவாகிறது. ஊராட்சி மன்ற 👳தலைவருக்கு அரசால் வழங்கப்பட்ட இந்த நிதியின் சொற்ப பங்கை மட்டும் ஊராட்சி பயன்பாட்டிற்கு செலவு செய்கின்றனர். மீதி பெரும் பங்கை தங்களது பாக்கெட்டில் போட்டுக்கொள்கின்றனர்.*
*🙅🏻♂🙅🏻♂இதனை தவிர்க்க*
*இந்தியா அரசியல்* *அமைப்பு சட்டம் -1950* *ஷரத்து 243-A "கிராம சபா" என்னும் மிகப்பெரிய - மிக சக்தி வாய்ந்த - உரிமையாக மக்களுக்கு இது வழங்ககிறது*.
*👳ஊராட்சி மன்ற தலைவரால் 💵செலவு செய்யப்படும் ஒரு ரூபாய் கூட, கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் அனுமதி வழங்கவேண்டும்*.
*🏡ஆனால் கிராம சபா கூட்டம் , கிராமங்களில் நடைபெறுவதில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் - அரசு அதிகாரிகளின் உதவியுடன் - பொய் ஆவணம் உருவாக்கி மக்கள் ஏமாற்றம் செய்வதில்லாமல், அரசை ஏமாற்றுகின்றனர்.*
*😍இங்க ஆரம்பிக்கும் இந்த ஆசை , அடுத்து கவுன்சலர்,சட்ட மன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர் என தங்களது சுயநலத்திற்க்கு அரசியலில் ஈடுபடுகின்றனர்.*
*🤦♀சேற்றின் மீது கல்லெரிந்தால் நம்மீதுதான் சேறு விழுமென்று ஒதுங்கி போவது நியாயம்."*
*ஆனால்*
*🙅🏻♂சிறு தவறுகள் செய்யும் சக மனிதனை அன்பாலோ அல்லது சட்டத்தினாலோ தண்டனை வாங்கி கொடுத்து தவறினை அறிந்து திருந்த வாய்ப்பு வழங்காததால் இன்று சிறு திருடன் பெரிய தாதாவாக வளர்ந்து நிர்பான்.*
*👨🏻அது போலத்தான் இன்று சிறு அரசியல் உறுப்பினராகா வார்டு உறுப்பினர்,ஊராட்சி மன்ற தலைவர் என தொடங்கி பின் அடுத்தடுத்த அரசியல் பதவிகளை பெற்று *_(சிறு தேவையற்ற நீராக ஆரம்பித்தவர்கள் மாபெரும் அரசியல் சாக்கடையாக மாறி)_* *நம்மை பாடாபடுத்துகிறார்கள்.*
*👍நாம் நல்லவராக வாழ்ந்தால் மட்டும் போதாது. 👎தீமை செய்பவர்களை பயமின்றி எதிர்த்து, நம்மை சுற்றியவர்களையும் நல்லவர்களாக மாற்ற வேண்டும்.அநியாயங்களை அனைவரும் ✋🏻தட்டிக்கேட்க 👁விழிப்புணர்வு ஏற்படுத்தி நாமே முன்னின்று செயல்படுவோமாக.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
*🥇மயிலை முருகன்*
*🥈தூதுவன் சுரேஷ்...*
*🥉DEVENDRANhp*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இந்தியா ஒரு மக்கள் ஜனநாயக நாடு என்பதை நாம் மத்திய மாநில அரசுகளில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.*
*காரணம் மக்கள் ஜனநாயகம் என்பது மாறி இன்று கட்சி ஜனநாயகமும் அதற்கு துணையாக முதலாளித்துவமும் இருக்கிறது.*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*புகழின்றால்* *புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று*
*இகழ்வார்பின் சென்று நிலை.*
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*உயிர்வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு,இம்மைக்கும் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*"ஊர்கூடி இழுத்தால் தன்னாலே நகருமாம் தேரு".*
☘☘☘☘☘☘☘☘☘☘
🤷♂ *சிந்தனை :*🤷♀
*ஒவ்வொரு கிராமசபைக் கூட்டமும் முக்கியம். நம்ம கிராமத்து மக்களுக்கு அதைப் புரிய வச்சே ஆகணும். கிராமசபைக் கூட்டங்கள்ல, அவங்க ஒண்ணுகூடி நிறைவேத்துற தீர்மானம் ஒவ்வொரு கிராமத்தோட வளர்ச்சிக்கும் முதுகெலும்பு மாதிரி. ஆனா, கிராமசபைக் கூட்டங்களோட அவசியம் என்னன்னு பலருக்குத் தெரியமாட்டேங்குது. அந்தக் கூட்டங்கள் வெறும் சம்பிரதாயமாவே நடந்துட்டு இருக்கு. நம்ம கிராமத்து மக்கள நேரில் சந்திச்சு கிராமசபைக் கூட்டங்கள் பத்தியும், அதனால ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் பத்தியும் எடுத்துச் சொல்லப்போறோம்"*
*What's App, Facebook, Twitter கிராமத்திற்க்கும் விவசாயத்திற்க்கும் வாய்மொழி ஆதரவு மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் விடுமுறை தொடர்ந்து வருவதால் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வோம்,அநியாயத்தினை தட்டிக்கேட்கும் தளமாக கிராம சபையை மாற்றுவோம்.*
💪🤝 *_ஒரு விரலினால் ஓசை எழுப்ப முடியாது. வாருங்கள் ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்._*🤝💪
💪🤝 *_மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்"_* 🤝💪
💪🤝 *_மறவாதீர் மறந்தே வீட்டில் இருந்துவிடாதீர். அனைவரும் வரும் திங்கட்கிழமை காந்திஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தில் மறவாது கலந்துக்கொள்வீர்._*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌱 *கனகராஜ்.வே.*🌳
🌱 *9047493815*🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎🌱 *மணி விஜய் -*
*8428073724*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏