🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :18.08.2017.* 🌹 *🌷கிழமை : வெள்ளி🌷*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*இன்றைய நவீன வாழ்க்கைக்கு மிக முக்கிய எது தேவை*
*பணமா?*
*குணமா ?*
*பாசமா ?*
*💁🏻இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவை 💵பணம் தான்*.
*💸தற்போது இருக்கும் சூழலில் பணம் தான் முதலில்*.
*🤷🏼♀பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது பழமொழி*.
*💰பணம் தான் முதலில் அதற்கு பிறகு தான் குணம், பாசம் எல்லாமே. மக்கள் பணம் பணம் என்று தான் ஓடி கொண்டு இருக்காங்க பாசம் காட்ட கூட நேரமில்லை*.
*👶lkg முதல் தனியார் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு காரணம் வேலை வாய்ப்புகாகவும் நல்ல சம்பாதிக்கவும் தான்.*
*💶இங்க படிப்பு கூட வியாபாரம் தான் எவ்வளவு போட்டால் எவ்வளவு கிடைக்கும் என்பது தான்*...
*தற்போது சொசுசான வாழ்க்கை வேண்டும். 🏤ஆடம்பரமான வீடு 🚘கார் ஹோம் தியேட்டர் 📲ஸ்மார்ட் போன், நிறைய தங்க நகை இது தான் கவுரவம் இதற்கு பணம் வேண்டும். இப்படி இல்லைனா சொந்த பந்தம் கூட மதிக்க மாட்டார்கள்*.
*🏥பணம் இல்லைனா அரசு மருத்துவமனையில் கூட நல்ல மருத்துவம் கிடைக்காது*.
*🏛அரசு அலுவலகங்கத்தில் பல மாதம் ஆகும் சின்ன வேலைகளை முடிக்க*
*😍கோவிலில் கூட பணம் கொடுத்தால் தான் முதல் தரிசனம்.*
*காசு, பணம், துட்டு, மணி 💸💵💴💰💷💶:* *பணம் இன்றி ஓரணுவும் அசையாது.. இது அப்ப... பணமின்றி ஓரனுவும் அசையாது அது இப்ப... அதெல்லாம் இல்லங்க பாசம், நல்ல குணமும் இருந்தா போதும்... அப்படியா😱?எங்க ஒரு 2000க்கு துணி எடுத்துட்டு GSTக்கு பதிலா கொஞ்சம் பாசமும், குணமும் குடுங்களேன்... கடைகாரன் குடுப்பான் நல்லாா.... எவளோ காசிருந்தாலும் உங்களால அம்மாவ வாங்க முடியுமா😠? வாடகை தாய் வந்து பல வருசம் ஆச்சு😏... நீங்க என்ன தான் சொன்னாலும் காசில்லனா நாய் கூட சீண்டாது... ஒரு ஊர்ல ஒரு எழை நல்லவனும், பணக்கார நல்லவனும் இருந்தா அந்த பணக்கார நல்லவனுக்கு தான் மதிப்பும், மரியாதையும் இன்னிக்கு கௌவுரவம் ன்ற வார்த்தை பணம் இருக்கவங்கள தான் குறிக்கும்... *பணம் பத்தும் செய்யும், பணம் பாதளம் வரைக்கும் பாயும், இதெல்லாம் சும்மாவா சொன்னாங்க...* *இவளோ ஏன் பணம் இருக்கா நாளைக்கு நீங்க என்னவேணாலும் ஆகலாம்*.
💶 *பணம் இல்லையென்றால் வாழ்வு இல்லை, பணம் கைமாறாமல் எந்த அலுவலகத்திலும் எந்தக் கோப்புமே நகராது என்பது இன்றைய எதார்த்தம்.*
💶 *பிள்ளைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ப்பதற்கும், வேலைகளில் அமர்த்துவதற்கும் பணம்தான் பரவலாகப் பேசுகின்றது. இதில் இடைத்தரகர்களின் பணப் பைகளும் நிரம்பி விடுகின்றன. எப்படியாவது கடன் வாங்கி, இருக்கின்ற நகைகளை அடகு வைத்து பிள்ளைகளைச் சிறந்த பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர், அதேபோல் ஆசிரியப் பணிக்கும், பிற வேலைகளுக்கும் பணம்தான் பேசுகிறது. இப்படி, பணம் நம் அன்றாட வாழ்வுக்கு அடிப்படை, அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்தப் பணத்தின்மீது பேராசை எழும்போதுதான் ஆபத்தே ஆரம்பிக்கின்றது.*
💶 *பணம் நமக்குத் தேவையாக இருந்தாலும், பணம் குறித்த புரிதல் இல்லாமல், அதுதான் வாழ்க்கை என நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சாதாரண மனிதர் முதல் அரசியல்வாதிகள் வரை, பணத்தின் மீதுள்ள பேராசை மட்டும் மனிதரிடமிருந்து விலகுவதில்லை. அதற்காக, உறவுகள், நண்பர்கள், பணிபுரியும் இடங்கள் என, எல்லாரையும் நோகடித்து, சுகமான வாழ்வை இழக்கிறோம். பணம், உயிரைப் பறித்த சம்பவங்களும், நம்மைச் சுற்றி அரங்கேறி கொண்டிருக்கின்றன*
😡 *பணம்தான் பலவற்றிலும், பல இடங்களிலும் பேசுகின்றது. இதற்காக நிறம் மாறுவதற்கு மனிதர் அஞ்சுவதில்லை.*😡
💶 *பணம் இன்று வரும். நாளை வந்தவழி சென்றுவிடும். ஆனால் பாசம் என்றும் நிலையானது. பணத்திற்காகப் பாசத்தை விற்று விடாதீர்கள், பாசம் கிடைப்பது கடினம். வெளிநாட்டு வாழ்வும் ஒரு மெழுகுதிரி போன்றதுதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள், அவர்கள் உருகிக் கண்ணீர் வடிப்பது தெரியும்.* 😭
😏 *பணத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தாலும் பணத்தின்மீது நாம் கொள்ளும் பேராசை மட்டும் நம்மைவிட்டு விலகுவதற்குக் கஷ்டப்படுகிறது.*
😇 *அன்புள்ளங்களே, இன்று பணத்தை நாம் பெரிதாக மதிக்கத் தொடங்கிவிட்டோம். செல்வம் தேடுவதை ஒரு பெரிய தர்மமாகக்கூட நினைக்கத் தொடங்கிவிட்டோம். பணப் பேராசை நம் அடிமனத்துள் சாத்தான் போல் புகுந்து கொண்டு நம்மைப் பல விதங்களில் ஆட்டி வைக்கிறது.*😔
💶 *பணப் பேராசை சமுதாயத்தின் 'பண்பு' என்று சொல்லுமளவிற்குக்கூட பரவி விட்டது. நம் வாழ்வில் பணம் நமக்கு நிச்சயமாகத் தேவை*👍
*குணம்*.
*🏢எவ்வளவு சொத்து, 💶பணம் இருந்தாலும் அவங்க குணம் தான் தீர்மானிக்கும் அவங்களை பற்றி.*
*பணம் என்ன பணம் பணம்...! குணம் தான் நிரந்தரம்....! ☺:நாம நம்ம வீட்ல ஒருத்தருக்கு பொண்ணு பாக்க கல்யாணமாலை போறோம்... போய் என்ன கேப்போம்... நல்ல பொண்ணா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா,* *அடக்கமான பொண்ணா வேணும்னு தான் முதல்ல கேப்போம்.....* *அடக்கமானனா செத்து போன பொண்ணா? இல்ல இதெல்லாம் அவங்களுடைய நற்பண்புகள்... குணங்கள்... நல்லா குணவதியா வேணும்னு தான் கேக்குறோம்... பணவதியா வேணும்னு கேக்குறது இல்ல... நல்ல குணவதியா வேணும்னு தான் கேக்குறோம்... குணம்னா பெண்களுக்கே உரித்தான அந்த *அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு தான்... குணம்னா பொண்ணுங்களுக்கு மட்டும் தானா ஆம்பளைங்களுக்கு இல்லலையானு கேக்குறிங்களா? ஏன் இல்ல... ஆம்பளைங்களுக்கும் இருக்கு நாலு குணங்கள்.. *அறிவு, நிறை ,ஓர்ப்பு, கடைபிடி...* *பெரும்பாலும் இது பேசபடுறது இல்ல..*.
*பாசம்*.
*👶பிறந்த குழந்தை பிறந்தவுடன் தேடுவது தாயின் உடல்சூட்டை தான் பசிக்கும் போது தாயின் முகத்தை மட்டும் தான் பார்த்து அழும்.*
*🤰🏻தாய்க்கு மட்டும் தான் தெரியும் தன் குழந்தை எதற்காக அழுகிறது எப்பொழுது எப்போ வேண்டும் என்று. தன் குழந்தை பசிக்கு அழு முன்பே அவள் மனதிற்கு மட்டுமே தெரியும்.*
*😭நாம்ம எவ்வளவு கஷ்டபட்டாலும் தன்னுடைய தாய், மனைவி, பசங்க நல்லா இருக்கனும்னு ஆண்கள் கஷ்டபடுறாங்க அவங்களைடைய கஷ்டம் சந்தோஷம் இதெல்லாம் மறைந்துவிட்டு தன்னுடைய குடும்பத்திற்காக வெளியூர், வெளிநாடுகளில் வேலை செய்ய போறாங்க*.
*பாசம்*
😇 *பாசம் மோசம் செய்யாதது...!!!*
*எக்காலத்துக்கும் அழியாதது....!!!*
*😇பாசம் ஒரு மடங்கு கொடுத்தால் பல கிடைக்கும்*
😇 *அற்பஆசையில் மயங்காதது...!!!*
*ஏற்றத்தாழ்வு இல்லாதது..!!*
😇 *அன்பை மற்றும் எதிர்பார்த்து ஏங்கி தவித்து வாடினாலும்....அதே அன்பை மட்டும் அனைவருக்கும் அள்ளி தருவது..!!*
😇 *பாசத்திற்கு ஏமாற்ற தெரியாது...!!*
😇 *ஏமாற்றத்தை ஏற்று மனம்மகிழ தெரியும்...!!!*
😇 *நடிக்க தெரியாது...!!!*
😇 *சுயநலமற்றது..!!*
😇 *பிறரை துன்புறுத்தவும் தெரியாது...!!*
😇 *தன்னை தானே வருத்தி கொள்ள துடிக்கும்...!!!*
*💶பணமா 👍குணமா 👩👩👧👦பாசமா?*
*💵பணம் என்பது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று தான் ஆனால் பணம் மட்டும் போதாது*.
*👨🏻💼👩🏻💼குணம் என்பது மனிதனின் நற்பண்புகளை குறிக்கும் இது மட்டுமே போதாது*.
*💑பாசம் என்பது மனிதனின் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் எதாவது கஷ்டம் பிரச்சனை என்றால் நம்முடைய உறவுகளிடம் அல்லது நண்பர்களிடம் தான் சொல்வோம் நம்முடைய வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனைத்துயும் பகிர்ந்து கொள்வது பாசமானவர்களிடம் தான்.*
*💸பணம் 👩🏻💼குணம் 👨👨👦👦பாசம் இது மூன்றும் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை நன்றாக இருக்காது*.
*🌪காற்று, 👨🏻💼உடல், ❤இதயம் இது மூன்று இருந்தால் தான் மனிதன் இருக்க முடியும். அது போல தான் பணம் குணம் பாசம். இது மூன்றுமே வேண்டும்*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *Udhayayuvaa*
🥈 *மகாராஜன்*
🥉 *devendranhp &நிருபன் கதிர்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மனிதன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் எதையோ ஒன்று தேடிட்டு போறாங்க இருப்பதை வைத்து நிம்மதியாக இருக்க வேண்டும்.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜*
*அன்பிலார் எல்லாம் தமக்குரியர்* *அன்புடையார்*
*என்பும் உரியர் பிறர்க்கு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம்: 📜_*
*அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர்*. *அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆
*காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சல் நிறம்... ஆசைக்காரனுக்கு கண்டதெல்லாம் காசின் மனம்..*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*👩🏻💻✍ sm*✍👩🏻💻
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *சங்கிலி பூதத்தான் 9150751098*
*😎அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment