🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :07.03.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🏹 *தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு*
👵🏻 *ஒளவையார்*👵🏻
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💁🏻♀😇 *நேற்று➡'""தொட்டிலை ஆட்டும் கை..!!!""*👍
*இன்று ➡"""தன்னைத்தானே உயர்த்தும் கை...!!!"""*👍
*நாளை➡"""தொல்லுலகை ஆளுங்கை..!!'""*💪👍
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*பெண்களின் நிலை நேற்று, இன்று ,நாளை...*
👧🏻👩🏻👩🏻🎓👩🏻⚕👮🏻♀👩🏻🍳👩🏻🏫
👩🏻🎤👩🏻🚀👵🏻
👸🏻 _*பாகம்*_💁🏻♀1⃣
😇 👩🏻 *பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தலைப்பு புதிராக இருக்கலாம், சிலருக்கு சிரிப்பும் வரலாம். "முன்னொரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு இல்லாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்கள். ஆதலால் பெண்கள் முன்னேற்றம் என்பது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது தான் எல்லா உரிமைகளும் கொடுத்து விட்டோமே! இன்னும் என்ன பெண்கள் முன்னேற்றம்?❓" என்று சில ஆண்கள் மனதிற்குள் நினைக்கலாம்.😏 எப்பொழுது ஒரு பெண்ணால் அவள் நினைத்ததை செய்வதற்கு சமுதாயத்தில் தடைகள் இல்லையோ அப்போதுதான் இதுபோன்ற தலைப்புகள் தேவையற்றுப் போகும்.🤷🏻♀ எப்பொழுது ஆணுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் வர ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதுதான் இந்தத் தலைப்பு தேவையற்றுப் போகும்.🤷🏻♀ இந்தக் கால கட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லவும் கல்வியறிவு பெறவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டு செய்ய நினைக்கும், ஆனால் "சமுதாயத்தின் பால் உள்ள பயத்தினால்" அல்லது "பெண்களின் கடமை" என்று சொல்லப்படும் ஒருசில விஷயங்களினால் செய்ய முடியாமல் விட்டுவிடும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் இன்னும் உள்ளன.*🤷🏻♀
👩🏻 *மிகவும் உற்சாகமான இசை நிகழ்ச்சிகளில் ஆண்கள் கூட்டம் எழுந்து ஆடுவதைப் போல் பெண்களால் ஆட முடிவதில்லை. அதற்கான ஆசை மனதில் தோன்றியும், "பெண் என்பவள் குத்துவிளக்கைப் போன்று இருக்க வேண்டும்" என்று சொல்லி வளர்க்கப்படுவதால், அமைதியாகவே இருந்து விடுகிறாள். சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் "நாமும் விளையாட செல்ல வேண்டும், நமக்குப் பிடித்த பொது விஷயங்களில் பங்கேற்க வேண்டும்" என்று ஆசை வந்தாலும் கூட, ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கும் கணவனோ, மகனோ திரும்பி வந்தால், அவர்களுக்கு உணவு சமைத்து வைக்கும் வேலையையே அவள் செய்ய முற்படுகிறாள்.🙇🏻♀ "கல்வியறிவில்லாத பெண் கலர் நிலம் போன்றவள்" என்று பாரதிதாசன் சொன்னார். ஆகவே அவர்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட்டு விட்டது. " பெண் பாலில் பிறந்த காரணத்தால் தான் ஆசைப்படும் விஷயங்களை செய்யாமலேயே இறக்கும் பெண் பிறந்தும் பயனற்றுப் போகிறாள். "*🙇🏻♀
👩🏻👱♀ *வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே.*💪👍
👩🏻👩🏻🎓 *மனிதனை வழிநடத்திச் செல்வது கண்கள். நாட்டை ஒளிபெறச் செய்வது பெண்கள். இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.*😇
👩🏻🤷🏻♀ *ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.*😇
👶🏻👧🏻 *ஒரு பெண்பிள்ளை சிறு வயது முதல் வளர்க்கப்படும் சூழலைப் பொறுத்தே அவளுடைய ஆழுமை அமைகின்றது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அடக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு குழந்தையினால் பிற்காலத்தில் தனது உரிமைகளுக்காகப் போராடி வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆழுமை குறைந்தவர்களே நாளடைவில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.*☹
👩🏻🙇🏻♀ *பால்நிலைப்பாடு காரணமாக மகளிர் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்களைத் தாயாக இல்லாளாக துணைவியாக தர்மபத்தினியாக செவிலித்தாயாக பல்வேறு உருவங்களில் வீட்டிற்குரியவர்களாக ஆக்கிக் கொண்ட சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளும் குறைந்தபாடில்லை என்று கூறினாலும் மிகையாகாது.*🙇🏻♀
👩🏻🤷🏻♀ *அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் என்னும் புலவர்களின் படைப்புகளால் பெண்மை மேன்மை அடைந்தது என்று கூறலாம்.*👍😇
👩🏻🤷🏻♀ *பாரதி வகுத்த புதுமைப் பெண்ணின் தாற்பரியத்தினால் பெண்கள் தங்கள் தடைகளைக் கடந்து முன்னேறினர். 👍பால்ய விவாகம் உடன் கட்டை ஏறுதல் வீட்டினில் வழங்கப்பட்ட சிறைவாசம் வரதட்சனை கொடுமை என்பன தகர்க்கப்பட்டன.*👍
👩🏻🤷🏻♀ *பெண்களின் உயர்விற்கு காந்தியடிகள் பாரதிதாசன் மோகன்ராய் போன்றோர் குரல் கொடுத்தனர். சீர்திருத்தங்களே பெண்மைக்கு ஏற்படும் மாற்றங்கள் எனும் உண்மையை எடுத்துக் காட்டினர். அவ்வழியேதான் பெண்கள் தங்கள் கால் தடங்களைப் பதித்து வருகின்றனர். பெண்கள் தங்கள் முன்னேற்றத்தால் உயர்வு பெற்றாலும் இன்னும்.அவர்கள் முற்றிலுமாக முன்னேற்றமடையவில்லை.*🙇🏻♀
👩🏻🤷🏻♀ *ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மைதான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு பெண்கள் சுதந்திரம் பாலியல் விடுதலை என்பது புரியாத அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது*🙇🏻♀
👩🏻🤷🏻♀ *பெண்ணின் உடலமைப்பு இன்னொரு உயிர் ஜனனிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இது இறைவன் அவளுக்களித்த கொடையாகும்.*🙏😇
👩🏻😇 *எது எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள் பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். 👍கல்வியை இடைநிறுத்திய பெண்கள் தமது படிப்பை தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.👍 குறிப்பாக பெண் பிள்ளைகள் சிறு வயது முதலே ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்பட வேண்டும்.👍 மனவலிமையும்,சக்தி நிறைந்தவர்களுமாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவர்கள் அனைத்து உரிமைகளையும் கொண்ட சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும்*👩🏻👍
👩🏻🤷🏻♀ *பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது.*👍 *இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும் அதனை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற்றப் பாதையை எட்டிப்பிடிக்கத் தயங்காத தங்கத் தாரகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.👍👩🏻 ஆனாலும் பெண்கள் ஆண்களைப் போன்று நினைத்த நேரத்தில் கிடைத்த இடங்களில் தங்குவதும், லாரிகளில் தொற்றிக்கொண்டோ, லிஃப்ட் கேட்டோ பயணம் செய்ய முடியாது என்பதால் சற்று மெனக்கெட்டு முன்னேற்பாடுகளுடன் பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. தங்குவதற்கு வசதியானது என்பதைக்காட்டிலும் பாதுகாப்பான தங்கும் விடுதிகளையே நாட வேண்டியுள்ளது.🙇🏻♀ காந்தி மகான் சொன்ன அந்தப் பொன்னான காலம் இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.*🙇🏻♀
👩🏻🙇🏻♀ *இன்றும் நம் ஊர்களில் 50 வயது அம்மாவும் 18 வயது அக்காவும் துணைக்கு 8 வயது பையனை அழைத்துச் செல்வது என்பது பொதுவான விடயமாக உள்ளது.🙇🏻♀ இரவில் பெண்ணால் தனியாக வெளியே செல்ல முடிவதில்லை.🙇🏻♀🙅🏻♀ பகல் நேரங்களிலும் பெண்கள் கூட்ட நெருக்கடி இல்லாத இடங்களுக்கு தனியாக செல்ல அச்சம் கொண்ட நிலையில் தான் உள்ளார்கள். இதனால் பெண்கள் ஆண்களை சார்ந்து வாழும் நிலைக்கு இன்றும் தள்ளப்படுகிறார்கள். ஒன்று வெளி விவகாரங்களை கவனிக்க செல்லும் பொழுது ஒரு ஆண் துணையை நாடுகிறார்கள் அல்லது எதற்கு வம்பு என்று வீட்டிலேயே முடங்கி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நமது கலாச்சார போர்வை என சொல்லவேண்டும்.*🙇🏻♀
👩🏻👍 *அன்றைய கால கட்டத்தில் வாக்குரிமை வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுந்த போதே பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர்.😠 எனினும் அன்றைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் அமைத்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சி அளித்தனர். அதில் வெற்றியும் கண்டனர்.*💪😇
😇👩🏻 *புலியை முறத்தால் விரட்டிய வீரப் பரம்பரையை சேர்ந்தவர்கள் அக்காலப் பெண்கள்.* *சேற்றிலும் ஆணுக்கு நிகராய் கால்பதித்து, செந்நெல் மணிகளை உருவாக்கினர்.* *ஆனாலும்,அன்று கல்வியில் மட்டும் பெண்களுக்கு ஓரவஞ்சனை செய்தது ஆண்களின் உலகம்.*
*தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஆணுக்கு நிகராய் சாதிக்கின்றனர் பெண்கள். "புதியதோர் உலகம் செய்வோம் ... கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்ற பாரதிதாசனின் கனவை மெய்ப்பிக்க புறப்பட்டு விட்டனர்.*😇👍
👩🏻💪 *பெண்ணே உன்னால் முடியும் புது உலகம் படைக்க வா என்று அழைக்கிறது இன்றைய சமுதாயம்.👍 நீ சோர்ந்து விட்டால், உன்னைச் சுற்றிச் சுவர் எழுப்பி விடுவர்.எழுந்து நடந்தால் இமயமலையும் உன் காலடியில் விழும்.💪👍 "பெண்கள் ஏட்டைத் தொடுவது பாவம், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்' என்ற விந்தை மனிதர்கள் இன்று இல்லை. எனவே பெண்களின் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை.*👍💪👩🏻
👩🏻💪 *பெண்ணாய்ப் பிறந்தோம், மூட நம்பிக்கைகளைக் கடைபிடித்து வாழ்வோம், பின் உயிர் துறப்போம் என்று, பழமையில் மூழ்கி இருந்தனர் அக்காலப் பெண்கள்.சாதனைகள் புரிய வேண்டும். மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும். நமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும் என நினைப்பது இக்கால பெண்களின் இயல்பு.*👩🏻💪
👩🏻😇 *ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தொடக்கக் கல்வி பயில்தல், குழந்தை திருமணத்தை மற்றும் சமூகத்தில் உள்ள பல தீய பழக்கங்களை அகற்ற பாடு பட வேண்டும். பெண்கள் உள்ளாட்சி மற்றும் சட்டசபை, லோக்சபா உறுப்பினர்களாகி மக்கள் பணிகளையும் செய்து வருகின்றனர்.*💪👩🏻
👩🏻😇 *ஆண், பெண் பாகுபாடின்றி சம உரிமையும், வாய்ப்புகளும் கிடைக்கிறது. குடும்பத் தலைவிகள், பொறுப்புள்ள தாய்மார்கள் என்ற முறையில் இந்தியாவின் எதிர்காலம் பெண்கள் கையில் தான் உள்ளது.* 👩🏻👍
👩🏻😇 *இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல குழுக்களாக இயங்கி தற்சார்பு, முன்னேற்றம் பெற்று வருகின்றனர். அடுத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாகவும் உள்ளனர். மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் தம் வாழ்க்கைத் தடத்தை பதிந்துள்ளனர்.*👍😇
👩🏻😇 *சமுதாயத்திலும், தொழில்களிலும் ஆண்களுக்கு நிகராக மேம்பட்டு வருகின்றனர். நாட்டு பொருளாதார வளர்ச்சியில் குடும்ப நலன், தொழில் வளர்ச்சி என இரண்டு நிலைகளிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.*👩🏻👍
👩🏻😇 *குடும்பம் என்ற சமுதாய அமைப்பில் மிக முக்கிய பொறுப்பாளராக, நிர்வாகியாக பெண்களே சிறந்து விளங்குகின்றனர்.*👩🏻👍
👩🏻😇 *பெண்கள் சிறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுகின்றனர். இதன் மூலம் குடும்ப வளம் பெருகுவதோடு, நாட்டிற்கு பொருளாதாரம் கிடைக்கிறது.*👩🏻👍
👩🏻😇 *இன்றைய சமுதாயத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு, நாட்டின் தலைமை பொறுப்புகளையும் வகிக்கின்றனர். பெண்கள் தங்களுடைய நலனை பாதுகாத்து கொள்ளவும், உரிமைகளை பாதுகாக்கவும், முன்னேற்றத்திற்கு அரசியல் ஊக்கம் தருகிறது.*💪👍
👩🏻😇 *அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பது அந்தக்காலம். ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்கும், சமுதாயத்தில் உள்ளது. தற்போது அரசும் சம ஊதியம், சம கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு வாய்ப்புகளை தருகிறது.*💪👩🏻
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :07.03.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*பெண்களின் நிலை நேற்று, இன்று ,நாளை...*
👧🏻👩🏻👩🏻🎓👩🏻⚕👮🏻♀👩🏻🍳👩🏻🎤👩🏻⚖👩🏻🏫👩🏻🚀👵🏻
👸🏻 _*பாகம்*_💁🏻♀2⃣
👨🏻 🤷🏻♀ *ஆண் என்பவன் அவன் பிழைப்புக்கு ஏதோ ஒரு தொழில் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. எனவே "வேலைக்குச் செல்லலாமா? வேண்டாமா?" என்று யோசித்து தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவனுக்கு இல்லை.👎 ஆனால் இந்த சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதால், பாதி சதவிகித பெண்கள் செல்லலாம் என்றும், மாறுபாதி சதவிகித பெண்கள் செல்ல வேண்டாம் என்றும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எல்லா துறைகளிலும் ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்கு காரணம்.*🤷🏻♀
👩🏻🤷🏻♀ *அதேபோல் வீட்டிற்குள் உள்ள தினப்படி வேலைகளை செய்யலாமா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. 👎அது ஆண்களுக்கு இருக்கிறது. 👨🏻👍எனவே பாதி சதவிகித ஆண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்யலாம் என்றும், மாறுபாதி சதவிகித ஆண்கள் செய்ய வேண்டாம் என்றும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவேதான் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.*🤷🏻♀
🔴👉🔴 _*ஒவ்வொருவரின் முன்னேற்றமும் அவர்கள் வெளியில் செய்யும் வேலைகளைப் பொறுத்தே அமைகிறது. எனவே அதனைக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது பெண்களைவிட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் "பெண்கள் முன்னேற்றம் தேவை" என்று கூறுகின்றோம். ஒருவேளை முன்னேற்றம் என்பது வீட்டில் செய்யப்படும் வேலைகளைப் பொறுத்து அமைந்திருந்தால், "வீட்டு வேலைத் துறை" எனும் துறையை உருவாக்கி நாம் அதனைக் கணக்கெடுத்துப் பார்த்திருப்போம். அப்போது ஆண்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், இந்தத் துறையில் "ஆண்கள் முன்னேற்றம் தேவை" என்று கூட பேசப்பட்டு இருக்கும்*_🔴🤷🏻♀🔴
🔴🤷🏻♀👩🏻 *நமது வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு வெளியே சென்று செய்ய வேண்டிய வேலைகள், வீட்டிற்குள் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு வகையான வேலைகள் உள்ளன. இதனை பால் முறையே பிரித்து முன்னேற்றத்திற்கு தேவையான வேலைகளை ஆண் பாலும், மற்ற வேலைகளை பெண் பாலும் எடுத்துக்கொள்ளாமல், இரு பாலினரும் இரண்டு வகையான வேலைகளையும் சமமாகப் பிரித்துக் கொண்டாலே போதும். அனைத்து வகையான துறைகளிலும் ("வீட்டு வேலைத் துறை" உட்பட) இரு பாலினரின் எண்ணிக்கையும் சரிசமமாக இருக்கும்.*🔴🤷🏻♀
😡 🙇🏻♀ *இன்று நெருப்புக்கு அருகில் பஞ்சை வைத்தால் பஞ்சுக்கு அழிவு' என்பது நியதியாக இருக்கும்போது… ஆண்களும் பெண்களும் இரண்டறக்கலந்து பழகுவதும், டேட்டிங் போவதும், இரவு கிளப்புகளில் நடனமாடுவதும், இறுதியில் இன்பத்தைச் சுவைத்துவிட்டு ஆண்கள் தப்பித்துக் கொள்ள பெண்களின் மீது துன்பத்திற்கு மேல் துன்பமாகக் கருக்கலைப்பும், இழிவும் விதியாவதும் சமுதாய வளர்ச்சியா?*👊
🔴🙇🏻♀ *சினிமா, மீடியா, விளம்பரம், அழகிப்போட்டி என்று அனைத்திலும் - அவர்களாலேயே தடுத்து நிறத்த முடியாத அளவிற்கு – பெண்கள் போகப் பொருளாக விற்கப்படுவது சமுதாய வளர்ச்சியா?*👊
😡🙇🏻♀ *வரதட்சணையும், விவாகரத்துகளும், ஈவ் டீஸிங்குகளும்,ஆசிட் அடிப்பது, கற்பழிப்புகளும், இறுதியில் பெண்களின் தற்கொலைகளும், கொலைகளும் நாட்டில் அதிகரித்து வருவது சமுதாய வளர்ச்சியா?*👊
😡👊 *இந்த வளர்சியெல்லாம் நமது நாட்டில் சமீப காலமாக வேரூன்றி வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சியின் பின்விளைவுகளை முன்னோக்கிப் பார்ப்பதற்கு மேலைநாடுகள் 'வாழும் சான்றுகளாக' விளங்கி வருகின்றன.*👊😡
🔴👉🤷🏻♀ *சமீபத்தில் டிரஸ்ட் லா(Trust Law) என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணிப்பில் ஒட்டு மொத்த உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது (4 வது) இடத்தில் உள்ளது என அறிவித்துள்ளது.🙇🏻♀ இந்த செய்தியை அறிந்ததும் வேதனை அடைவதா, வெட்கம் கொள்வதா, விரக்தி அடைவதா அல்லது பெரும்பான்மையானோரைப் போல் கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதா என தெரியவில்லை. டிரஸ்ட் லா(Trust Law) இந்த முடிவிற்கு வர காரணங்கள், பரவலாக இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கலாச்சார ரீதியாக பெண்கள் ஒடுக்கப்படுவது மற்றும் பெண்கள் கடத்தி விற்கப்படுவது என அறிவித்துள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் கிடையாது என மறுக்க தோன்றும். ஆனால் ஆதாரப்பூர்வமான சான்றுகள் பல இருப்பதை பார்த்தால் அது நம்மை திகைக்க வைக்கின்றது.*🙇🏻♀😔
🔴👉 👩🏻 *இன்று நம் நாட்டில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் குடும்பப் பெண் ஒருவரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.🤷🏻♀ வீட்டில் காலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லாத குடும்பப் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கவனிப்பது இன்றும் முழுமையாக இவர்கள் பொறுப்புதான்.🙇🏻♀🤷🏻♀ நகரங்களில் ஒரு சிலரால் உதவிக்கு வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு ஆட்களை நியமித்துக்கொள்ள முடிகிறது என்றாலும் பெரும்பாலான வீடுகளில் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இது சாத்தியப்படாது.👎 எத்தனை ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு ஈடாக வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள இறங்கி வருகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.*🤷🏻♀
🔴🙇🏻♀👉 *இந்திய திருநாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ள வரதட்சினை முறை, பெண் பார்க்கும் படலம், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றிய பின் திருமணத்திற்கு முன்பே முத்திரைத் தாள்களில்(legal stamp papers) பெண்ணிடம் கையொப்பம் வாங்கி விடுவது, பள்ளி கல்லூரி மற்றும் வேலை இடங்களில் ஆண்களின் கேலிப் பொருளாக நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்வது, புகுந்த வீட்டில் அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது, புகுந்த வீட்டின் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்கவழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கட்டத்தில் அடக்கு முறைக்கு உட்பட்டதாகவே உள்ளது.*🔴🙇🏻♀🤷🏻♀
🔴👊😠 *இன்று பெண்ணடிமைத்தனம் என்பது நடைமுறையில் இல்லை எனக் கூற துணிவுள்ள ஒவ்வொருவருக்கும் எனது சவால் – இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றை தன் வாழ்வில் எதிர்கொள்ளாத பெண் ஒருவரை அடையாளம் காட்ட கண்டிப்பாக இயலாது.*👊🙅🏻♀🙅🏻♀
🔴🙇🏻♀🤷🏻♀ *பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரி அல்லாமல் வேறு எங்கும் தம் பெண்களை தனியே செல்ல அனுமதிப்பதில்லை.🙅🏻♀ இல்லை என்று மறுப்பவர்கள், எத்தனை பருவப் பெண்கள் வங்கிக்கு சென்று வருவது, தொலைபேசி மற்றும் மின்சார கட்டணங்களை கட்டுவது, பெற்றோரின் வியாபாரத்தை வெளியில் சென்று வார இறுதிநாட்களில் கவனித்துக் கொள்வது, வீட்டில் பழுதடைந்த பொருட்களை கடைக்கு எடுத்துச் சென்று சரி செய்து வருவது போன்ற அன்றாட அடிப்படை வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும். இவை அனைத்தும் வீட்டில் பருவம் வந்த ஆண்பிள்ளை இருந்தால் அவனிடம் ஒப்படைக்கப்படும் அன்றாட வேலைகள்.*🤷🏻♀
🙇🏻♀👩🏻 *இதனால் இருதலைக் கொள்ளியாய் பெண் பாதிக்கப்படுகிறாள். ஒருபுறம் அவளது சுதந்திரம் பறிக்கப் படுகிறது. மறுபுறம், இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகளாக பெண் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படுவதால் அவள் தன்னம்பிக்கையை இழக்கிறாள். பருவம் அடைந்து, படித்து முடித்து, திருமணம் முடிந்து, தாயுமாகி, ஒரு குடும்பத்தின் தலைவியாய் தலை நிமிர்ந்து நிற்கும் பொழுது, பருவத்தில் அவளுக்கு மறுக்கப்பட்ட சுதந்திர வாசல் ஒருவேளை திறக்கப்பட்டாலும், சுய சந்தேகங்களாலும், தன்னம்பிக்கை இன்மையினாலும் தொழுவில் கட்டிய மாடாய் கிடக்கிறாள். பல்லாண்டுகளாய் பழகிப் போன பழக்கத்தை அவளால் மாற்ற முடிவதில்லை. மேலும், தான் தாங்கியுள்ள '"""நல்ல குடும்பப் பெண்'"""" என்ற பட்டத்தை துறக்கவும் அவள் தயாராய் இல்லை.🙇🏻♀ மிகவும் சிலரே இந்த வேலிகளை விட்டு வெளியே வருகிறார்கள்.*😔🙇🏻♀
🙇🏻♀🤷🏻♀👩🏻 *இவ்வாறு நமது கலாச்சாரத்தில் சிறு வயதில் இருந்தே பெண் என்பவள் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை சார்ந்து வாழும்படி வார்க்கப்படுகிறாள். எந்த ஓர் சூழ்நிலையிலும் ஒருவர் மற்றொருவரை வெகு நாட்களாக சார்ந்து வாழும் நிலை ஏற்படும் பொழுது அடக்கு முறை அங்கு வேர்விட்டு விடும். அந்த வேர், நமது இந்திய கலாச்சாரத்தில் இன்று வளர்ந்து விருட்சமாக நிற்கிறது*🤷🏻♀🙇🏻♀
🔴🙇🏻♀👩🏻 *இன்று பாலின சமத்துவமின்மை(Gender inequality) அனைத்துத் துறைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று.👍 பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை கிடையாது.🙅🏻♀🙅🏻♀ 2010 -ம் ஆண்டு உலக வங்கி 'மொத்த உள்நாட்டு உற்பத்தி'(GDP) அடிப்படையில் வெளியிட்ட உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. இது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விசயம் தான். ஆனால், அதேசமயம் 2010 -ம் ஆண்டு ஐ.நா.-வின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை(Gender inequality) அறிக்கையில் மொத்தம் 138 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 122 -ம் இடம் பெற்றுள்ளது. 😔என்ன ஒரு வெட்கக் கேடான நிலை.*🤦🏻♀
👩🏻🙇🏻♀🤦🏻♀ *இந்த தகவல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் சமுதாய அக்கறையுள்ள எவருக்குமே வருத்தத்தையளிக்கும் ஆனால் நிச்சயமாக வியப்பாய் இருக்காது. தினக்கூலி வேலையில் ஆரம்பித்து, உயர் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். கூலி வேலை பார்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப் படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய வேலைகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள்.😔☹ இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்கள் அமுக்கப்படுகிறார்கள். இன்று ஐ.டி. துறை மற்றும் வங்கிகள் அரசு நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ள உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் பேசிப் பாருங்கள்.😏எந்த ஒரு பெண்ணாலும்இதை மறுத்துபேச முடியாது . ஏன், பிரபலமான திரைப்பட நடிகைகள் மற்றும் நடிகர்களின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். எங்கும் இதே ஏற்றத் தாழ்வுதான்.*😔☹😏
🔴🙇🏻♀👊 *பாலின சமத்துவமின்மை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக வெளிப்படுகிறது.*😡🤦🏻♀😔
🔴🙇🏻♀ *ஒரு சமுதாயத்தின் ஒரு பாதி இப்படி அடக்கி ஒடுக்கப்படுவது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதல்ல.😔 நாம் சரிபாதி மருத்துவர்களை இழக்கின்றோம்,🙇🏻♀ விஞ்ஞானிகளை இழக்கின்றோம்,🙇🏻♀ வழக்கறிஞர்களை இழக்கின்றோம்,🙇🏻♀ இலக்கியவாதிகளை இழக்கின்றோம்,🙇🏻♀ மொத்தத்தில் நாட்டின் சரிபாதி வளர்ச்சியை இழக்கின்றோம்.*🙇🏻♀🔴
✋ 🙇🏻♀ *இதுவரை நம் சகோதரிகள் சிந்திய கண்ணீர் துளிகள் போதும். இனிவரும் பெண் சமுதாயத்தின் தளைகளை களைய போராடுவோம்.*👍
🔴🙏🤜 *மேல்தட்டுப் பெண்களுக்கோர் வேண்டுகோள். பணத்தட்டுப்பாட்டின் காரணமாக உயர் கல்வி கற்க இயலாமல் போகும் நமது சகோதரிகளை கண்டெடுத்து, அவர்கள் படிப்பிற்கு உதவுங்கள். இது அவர்களை மட்டும் அல்லாது அவர்களது வருங்கால சந்ததியினரும் மேன்மையடைய வழிவகுக்கும்.*🏹👍
🔴🙏 🤜 *வெளியுலகத்தை அறிந்து, வீட்டிலும் வெளியிலும் போராடி தன் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் அளவிற்கு உலக அறிவும், போராட்ட குணமும் வாய்க்கப்பெறாத தங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு வழிகாட்டியாய் செயல்படுங்கள். அவர்களது அறிவுரையாளராக (mentor) செயல்பட்டு அவர்கள் உரிமைகளை பெற உதவுங்கள்.*🏹👍
🔴🙏 🤜 *அடக்கு முறையை அழிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் நல்லொழுக்கத்தையும், உயர்ந்த கொள்கையையும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு தவறாமல் பரப்புங்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டிலும் நல் மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள்.*🏹👍
🔴🙏 🤜 *இதைப் பற்றி பெரிதான கருத்து ஒன்றும் இல்லாத ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள்.*🏹👍
🔴🙏👩🏻 *ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள். பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற வரட்டு கெளரவம், பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம்.*🏹👍
🔴🙏 👨🏻 *ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள். பல்லாயிரங்காலங்களாக புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க எண்ணத்தை எப்படி நம் மனத்தில் இருந்து அகற்றுவது என சுய பரிசீலனை செய்து பாருங்கள். எந்த ஒரு இடத்திலும் பாலின வேறுபாட்டினால் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுக்க மாட்டேன் என்று உறுதிகொள்ளுங்கள்.*🏹👍🙏🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *SM*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🏅 *Santhi😊🦅*👏👏
🏅 *ஜான் ழைழா*👏👏
🏅 *Sridevi 🌈🌹🌧⭐🎼🎧& ராமகிருஷ்ணன்*👏👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏅 *King David (Editor)*👏👏
🏅 *sriramkrm*👏👏
🏅 *இரமேஷ்பாலசுப்பிரமணியன்* 👏👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
😇🏹 *இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை! ஏன் நம் தமிழகத்தை ஆட்சி செய்தது கூட ஒரு பெண்ணே! அடிமைப்படுத்திய ஆண்களே அசந்து வியக்கும் வண்ணம் பல பெண்கள் தங்கள் ஆற்றலால் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.*👍👏👌
😇🏹 *இக்கால கட்டத்தில் துணிந்து நின்று சமுதாயத்தை எதிர்கொள்ளும் பெண்கள்தான் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். அதற்கு அவர்களுக்கு தேவையான கல்வியறிவும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தான்... மேலும் இத்தகைய வளர்ச்சி கூடிய விரைவில் கிராமத்து பெண்களும் தங்கள் நிலையை நாட்டுவர் என்பதும் உறுதி...!!!*👍
🙌 👩🏻 _*ஒரு கதை சொல்ட்டா சார்*_🙌
🐰 *ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது..*🙇🏻♀
🐰 *அதற்கு காரணம்?!!!.* 🐰
🐰🏹 *ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.*
*இன்னொரு பக்கம் நாய்🐶...மறுபக்கம் புலி🐯..*
🙄 *என எந்தப்பக்கம் திரும்பினாலும்* *முயலுக்கு எதிரிகள்....!!.* 🐰🙇🏻♀
🐰🙇🏻♀ *சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.*
*எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.*😴
😰 *இறுதியாக....*
.
😰 *குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்* 🐰
.
🐰😰 *அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள்🐸 குளத்துக்குள் தாவிகுதித்ததை முயல் பார்த்தது.*🐰
🐰 🤔 *உடனே முயல் சிந்தித்தது... *
🐰🤔 *அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??🤔*
🐰 💖 *என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது .....* 💪👍
*"தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது*💪
🐰💖 *அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் ?சாகனும்*
*வாழ்ந்துதான் பார்ப்போமென்று .."காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது".*🐰😇
🙌🐰 *கதை சொல்லும் நீதி...👇*
*🏹 மரணமே வந்தாலும் எதிர்க்க துணிந்து விடு !*💪👍😇
🏹 *இழந்தது எத்தனை எத்தனையோ...!*
🏹 *இன்று இருப்பது நம்பிக்கையும், தைரியமும்தான்...!*
🏹 *இனி இழக்கவென்று ஏதுமில்லை..!!!*
🏹 *நம்பிக்கை வைத்து நடந்தால்....*
*நம்மால் நடப்பது எத்தனை எத்தனையோ…..!!!*
🏹 *அதில் உண்மையும் அன்பும்,பண்பும்*
*நிறைந்திருக்குமானால், இனி வெற்றியைத்தவிர..!!*
*வேறொன்றுமில்லை..!!! பயணிக்கப் பயணிக்க நித்தம் ஒருகதை சொல்லும் நியதி வாழ்க்கையே...!!!!அதை துணிவுடன் போராடி வெற்றிகண்டு உயர்ந்திடு....!!*👩🏻🏹😇👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்*
*நிறைகாக்கும் காப்பே தலை*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧚🏻♀ *தெரிந்து கொள்ளவும்*🧚🏻♀
*பெண் இன்றிப் பெருமையும் இல்லை.*
*கண் இன்றிக் காட்சியும் இல்லை*
🧚🏻♀ *அறிந்து கொள்ளவும்*🧚🏻♀
*பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.*
🧚🏻♀ *புரிந்து கொள்ளவும்*🧚🏻♀
*பெண்களுக்குரிய*
*சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது*
👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice 👌 very use ful
ReplyDelete