https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.02.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💓 *நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து*
*கொள்வது அவசியம்*
💐 *-அன்னை தெரசா.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை,*
*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*அண்ணன், தங்கை, அக்கா, தம்பி உறவுகளின் பலமும், பலவீனமும்?*
👨👩👧👦🧒🏻👧🏻👍👎🧒🏻👧🏻👍👎🧒🏻👧🏻
💝😇 *நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர்.👨👩👧👦 அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் '""அங்கிள்'"", பெண்கள் அனைவரையும் '""ஆன்ட்டி'"" என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். 🤦🏻♀இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!*
🧒🏻👧🏻 *அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன்,🙏 மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. 🤝சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள்.😇 அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் 'முறைக்கார' உறவுகள்.😇 கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.*🤝😇
👨👩👧👦😇 *அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே!🤝👨👩👧👦💐 அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்*.😇💐
😇💐 *இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை.🙅🏻♀😇 பக்கத்து வீட்டு 'அத்தை', எதிர்வீட்டு 'சித்தப்பா', கடைசி வீட்டு 'அப்பத்தா', தெரு முக்குக் கடை '""அண்ணன்'""என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. 😇🤝👨👩👧👦இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.😇🤝 உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, '""அண்ணே'""😇💐 என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். 💐அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை '"அண்ணி"', '"மதினி'" என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.*😇💐🤝
🙇🏻♀🤦🏻♀ *ஆனால் 'வெஸ்டர்ன்' கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், எனக்கு தெரிஞ்சி பிள்ளைக்கு ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்....🤦🏻♀ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு '"அங்கிள்'", "'ஆன்ட்டி'" என்றே பழக்குவது கொடுமை!*😡🤦🏻♀👊
💝 *ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில் அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகிபேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது.*💖
👨👩👧👦 *முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின்கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான் உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம்*💐😍
😇💐 *அரும்பாகி மொட்டாகிப் பூவாகி மலரும் மலரொன்றை ஆசையோடு,* *பாசத்தோடு கண்டு கண்கள் குளிரக் களிக்கும் பாக்கியம் அன்னை தந்தைக்கு அடுத்ததாக அண்ணனுக்கே கிடைக்கிறது.* 💐😇
👶🏻👧🏻🧒🏻 *நடை பழகும் நாட்களில்🤝 கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...*👍
🧚🏻♀ *அடம் பிடித்தோஅழுது புரண்டோ பொட்டோ, பூவோ*💐
🧚🏻♀ *முதல் முதலில் தங்கைக்கேவாங்குகிறான் அண்ணன்...*👍🧒🏻
🧚🏻♀ *'' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி,மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு...*💐🧚🏻♀
🧒🏻💐 *அண்ணனாக மட்டுமன்றிநண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும்*🤝😇
*மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...*🧚🏻♀💐
🧚🏻♀💐 *தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது*🧒🏻
🧚🏻♀ *தங்கைகளுக்கான முதல்சிபாரிசை அண்ணன்களே*
*முன்னெடுக்கிறார்கள்...*🧒🏻👍
🧚🏻♀ *அக்காக்களிடம் மறைத்தஅண்ணன்களின் காதலை,அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...*💐🧚🏻♀
🧚🏻♀💐 *அண்ணன்களுக்காகஅப்பாக்களிடம்*
*கோபம் கொள்வதில்*
*தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...*🧚🏻♀👍
🧚🏻♀ *தங்கைகளில்லா வீடு*
*அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து...*😜😉
🙇🏻♀ *திருமணமாகிச் செல்கையில்*
*அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ*😰
🧑🏻👨🏻 *அழாமல் நடிக்க அண்ணன்கள்*
*கற்றுக் கொள்கிறார்கள்...!!!*💐
🧑🏻🧒🏻👧🏻 *சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள்.🤷🏻♀😍 இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள்.*💐
🤨 *இன்றைய சமுதாய சூழலில் நற்பண்புகள், நல்லொழுக்கம் ஆகியவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதனின் வாழ்க்கைதரத்தை பணம் ஒன்றை மட்டும் கொண்டு நிர்ணயிக்கக் காண்கிறோம். தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளிலும்பணம் ஒரு பலம்வாய்ந்த இணைப்புச் சங்கிலியாக வடிவெடுத்துள்ளது. நெருங்கிய ஏழை சுற்றத்தாரை பணக்காரர்களில்பெரும்பாலானோர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமின்றி அப்படிப்பட்ட ஏழை எளிய,சொந்த, பந்தங்களுடன் உறவு பாராட்டினால் அவர்கள் அடிக்கடி வந்து தங்கள் தேவைகளுக்காக உதவி கோரிவிடகூடும் என்றுசெல்வந்தர்கள் பயப்படுகிறார்கள்.*🤨
🤨 *வம்சாவழியிலோ, இரத்த சம்பந்தப்பட்ட தொடர்பிலோ எந்த இணைப்பும் இல்லாதவர்கள் அனைவரும் பணம், என்ற ஒருகாரணியை வைத்துக் கொண்டு பணக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதை நாம் இன்று காண்கிறோம். இவர்கள் தம்வீட்டு விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கூட பணக்காரர்களையே விழுந்து, விழுந்து உபசரிக்கிறார்கள். தம் நெருங்கியஉறவினர்களை அவர்கள் ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற நிகழ்ச்சிகளில் கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.*🤨
👨👩👧👦 *ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.*🙇🏻♀
👨👩👧👦🧒🏻👧🏻 *சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.*🤝💐
🧒🏻👧🏻🤝 *எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது*🤝💐
🧒🏻👧🏻 *சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள்.🤝 அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.*💐👍
🧒🏻👧🏻 *சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள். நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவுகளை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். 👍அதன் மூலம் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கவலைகளையும், பிரச்னைகளையும் நம்பிக்கையான ஒருவரிடம் மனம் விட்டுப் பேச முடியும்.👍 அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். உங்களுக்கு சகோதரர்கள் இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை*🤷🏻♀🙅🏻♀
👨👩👧👦💐 *குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிகவும் முக்கியமானதாகும்.👍 சகோதரர்கள் பாசத்துடன் இணைந்திருக்கும் வரையில் குடும்பத்தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும். 👨👩👧👦🤝👍இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது.👍 குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.*🤝💐
👨👩👧👦🧒🏻👧🏻 *சகோதர உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். 👍ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வர வேண்டும்.*👍🤝💐
👨👩👧👦 *தாய்,தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகளைப் பார்க்கும் போது அவை பரஸ்பர உறவுகள் மூலம் புதுப்பிக்கப்படுவதையும், காலம் செல்லச் செல்ல குடும்பத் தொடர்புகள் தாய் வழி உறவினர்களுடன் சுருங்கி தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகள் விசேச வைபவங்களுடன் மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ளதையும் பெரும்பாலும் கண்டு கொள்ளலாம். சில போது தந்தை வழி உறவினை மறந்த நிலைமையில் உள்ளனர் என்று சொன்னாலும் மிகையாகாது.*🙇🏻♀
👨👩👧👦 *நவீன காலத்தில் சகல உறவினர்களையும் மறந்து தானும் தனது குடும்பமும் என்ற நிலைமை சமூகத்தினர்களிடையே அதிகரித்திருக்கின்றது. 🙇🏻♀சகோதர, சகோதரிகளுக்கிடையிலான உறவு பாதிப்புற்று ஆரோக்கியமற்றிருக்கின்றது.🙇🏻♀ தாய், தந்தையர்களை கவனியாது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற உதவாத பிள்ளைகளையும், சில கிராமங்களில் திருமண வைபவங்களின் போது தந்தையினை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை இடுகின்றவர்களையும் காணலாம்.*🙇🏻♀😔
💑 *திருமண பந்தத்தின் மூலம் இரு குடும்பங்கள் இணைந்து, அதனால் புதிய முகங்களும்,புதிய உறவுகளும் கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கப்பெற்ற உறவினர்கள் தூரமாகி செல்லும் நிலைமையினை குடும்பங்களில் அவதானிக்கின்றோம். திருமணத்திற்கு முன்பு உச்சத்தினை எட்டிய திருமணத்தின் மூலமான உறவுகள் திருமணத்திற்குப்பிறகு இருந்த தடம் தெரியாமல் திசை மாறும் நிலைமை குடும்ப உறவினர்களிடையே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.*🙇🏻♀😔
🙇🏻♀😔 *இந்நிலையில் குடும்ப உறவினர்களிடையே அன்பும்,பிணைப்பும் அற்றுப் போனமைக்கான காரணம் யாது ?*⁉ *அதனை வளர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? சிறந்த குடும்ப உறவின் பன்புகள் யாவை? போன்ற கேள்விகளுக்கான தெளிவினைப் பெற முயற்சிக்கலாம்.*🤷🏻♀🤷🏻♀
👨👩👧👦😔 *குடும்ப பிணைப்பு உறவினர்களிடையே குறைந்து போனமைக்கான காரணத்தினை எடுத்துக்காட்டாக பின்வருமாறு சுட்டிக் காட்ட முடியும். குடும்ப உறவினை பேணி நடப்பது பற்றிய போதிய அறிவில்லாமை,மார்க அறிவில் பலவீனமான நிலைமை, பணத்தாலும், பதவியாலும் பெருமையினை வெளிப்படுத்துதல், பெற்றோர் தமது குடும்ப உறவினர்களுடன் உறவைப் பேணாமையினால் பிள்ளைகள் அதை தொடர்கின்ற நிலைமை , குடும்ப உறவினர்களிடையே வெறுப்புணர்வினை வெளிப்படுத்திய பார்வை, சந்திப்பதில் நீண்ட இடைவெளி,உறவினர் நலனில் விருப்பினை வெளிப் படுத்தாமை, பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுதல், சொத்து பங்கீட்டில் நீதம் பேணாமை, உறவினர்கள் விடயத்தில் பொறுமை இழத்தல் ,பொறாமை, மற்றும் தீய எண்ணம் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.*🙇🏻♀😔
👨👩👧👦👆 *மேற்சொல்லப்பட்ட பல காரணங்களினால் குடும்பத்தினரிடையே பிளவுகள் ஏற்பட்டு இரத்த உறவினர்கள் பகைமையினையும், குரோதத்தினையும் வெளிப்படுத்தி வருடக் கணக்காக வாழ்ந்து வருகின்றமையினைக் காண்கின்றோம்.*🙇🏻♀😔
👉 *இந்நிலைமை மாற்றப்பட்டு, குடும்ப உறவினர்களுடன் உறவினை புதுப்பித்துக் கொள்ள சகலரும் முயற்சித்தல் அவசியமாகும்*👍
👨👩👧👦 *குடும்ப உறவுகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்.👍தமது உறவினர்கள் பற்றி பிள்ளைகளுக்கு அறிவூட்டி, அவர்களது உறவின் முக்கியத்துவத்தினைக் கூறி வழிப்படுத்தல் வேண்டும்.👍 மேலும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளில் தலையிட்டு சமரசம் செய்து வைத்தல் அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும்.👍 அவ்வாறு இல்லாவிட்டால் சிறிய பிரச்சினைகள் பிற்காலத்தில் பெரிதாகி பகைமையினை ஏற்படுத்தி விடும்*😔🙇🏻♀
😇👉 *முன்பெல்லாம் சுற்றத்தாரைப் பராமரிப்பது என்பது இயல்பாக இருந்தது.🤷🏻♀ எல்லார் வீட்டிலும் கணவனை இழந்த ஓர் அத்தையோ, மாமியோ பாசத்தோடு பராமரிக்கப்பட்டார்கள்.🤷🏻♀ அவர்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி அன்பு செலுத்தினார்கள்.🤷🏻♀ அவர்களுக்குச் செய்யும் செலவைத் தங்கள் கடமை என்றே உணர்ந்தார்கள்.👍 தன்னைச் சார்ந்திருக்கும் அத்தையையும் மாமியையும் பொருளாதாரச் சுமை என்று யாரும் கருதியது கிடையாது. *🙅🏻♀🙅🏻♀👍
🧚🏻♀ *அவர்களும் அந்தக் குடும்பத்தோடு இணைந்து அந்தக் குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்தார்கள். 😇சமையல் செய்வதிலிருந்து குழந்தை வளர்ப்பு வரை அவர்கள் செய்த சேவைகளும் பலப்பல.🤷🏻♀ தாயும் தந்தையும் இறந்தபோது விம்மி விம்மி அழுத பிள்ளைகள், தங்கள் அத்தையும் மாமியும் காலமானபோதும் அதே உணர்வோடு அழுது அகற்றினார்கள்.👍 புகலிடமற்ற அத்தை, மாமி போன்றோரெல்லாம் அண்ணன், தங்கை போலவே அக்காலக் குடும்ப அமைப்பின் அங்கத்தினர்களாக மாறியிருந்தார்கள்.*😇👍
🙇🏻♀👉 *ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.👎""உறவினர் திருமணம் எதுவானாலும் என் குழந்தைகளைக் கட்டாயம் அழைத்துச் செல்வேன்"""என்கிறார்கள்.ஏன் ⁉எனக் கேட்டதற்கு `பின்னே கல்யாணங்களில் மட்டும்தானே அத்தை யார், சித்தப்பா சித்தி யார் என்றெல்லாம் நம் குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த முடியும்?' என்கிறார்கள்*.🤦🏻♀🤦🏻♀ *அத்தையும் சித்தப்பாவும் சித்தியும் இன்று கல்யாணங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் தொலை(ந்துபோன) உறவாகிவிட்டார்கள்!*🤦🏻♀🤦🏻♀
*""நாமிருவர் நமக்கிருவர்"" என்ற கோட்பாடு மாறி, ""நாமிருவர் நமக்கொருவர்""என்ற கோட்பாடு தோன்றி, அது இப்போது இன்னும் வளர்ச்சி கண்டு விட்டது*.🤦🏻♀🙇🏻♀ *""நாமிருவர் நமக்கிடையே ஏன் இன்னொருவர்???""🤦🏻♀ என்று கேட்கிறது நவீன காலம்!*🤦🏻♀
🤷🏻♀👉 *""ஒரு பிள்ளை'க் கோட்பாடு உருவாகிய பின்,🤦🏻♀எதிர்காலத்தில் அத்தையோ மாமியோ சித்தப்பாவோ இருக்க வாய்ப்பே இல்லை.🤦🏻♀🙅🏻♀🙅🏻♀👎 இத்தகைய உறவுகள் இந்தத் தலைமுறையின் கடைசி மிச்சங்கள். 🤦🏻♀ஒன்று விட்ட அண்ணா,ஒன்றுவிட்ட அக்கா போன்ற உறவுகளெல்லாம் கூட முன்பு இருந்தன என்பது இன்று நினைத்துப் பார்க்கும் ஆச்சரியம்.🤦🏻♀ உறவுகள் இணைந்து வாழ்ந்தால் வாழ்க்கை எப்படி ஆனந்தமாக இருக்கும் என்பதை உடன்பாட்டு முறையில் சொன்ன இதிகாசம் 🔴ராமாயணம்.🔴 அதில் நான்கு அண்ணன் தம்பியரிடையே இருக்கும் ரத்த பந்த உறவில் விரிசல் இல்லாத தன்மையைக் காண்கிறோம்.*🤷🏻♀
🤷🏻♀👉 *உறவுகள் இணைந்து வாழாவிட்டால் வாழ்க்கை எப்படிச் சீரழியும் என்பதை எதிர்மறை நோக்கில் சொன்ன இதிகாசம் 🔴மகாபாரதம்.🔴சித்தப்பா -பெரியப்பா பிள்ளைகள் அண்ணன் தம்பிகளாய் இணைந்து வாழாததால் நேர்ந்த அவலங்களை அந்த இதிகாசத்தில் நெடுகப் பார்க்கிறோம்.🙇🏻♀ முற்காலத் தமிழ் மன்னர்களில் அமணன், குமணன் என்ற இரு சகோதரர்கள் இருந்தார்கள். அண்ணன் குமணன் நற்குணங்களின் மொத்த வடிவம். கொடை வள்ளல்.😇 அண்ணனின் பெருமை தம்பி அமணனுக்குத் தெரியவில்லை.🙇🏻♀ நாட்டைப் பறித்துக் கொண்டு அண்ணனைக் காட்டுக்கு விரட்டுகிறான்.* 🙇🏻♀
👉 *அண்ணன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பரிசு அறிவிக்கிறான்.🤷🏻♀ அண்ணன் குமணனைத் தேடிக் கானகம் செல்கிறார் ஒரு புலவர். அவருக்குப் பரிசளிக்கக் குமணனிடம் பொருளில்லை. தன் தலையை வெட்டியெடுத்துச் சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு வற்புறுத்துகிறான் குமணன். புலவரின் உள்ளம் உருகுகிறது. மீண்டும் வருவதாகச் சொல்லி, வாழைத் தண்டால் குமணன் தலைபோன்ற ஒரு வடிவத்தைச் செய்து துணியில் முடிந்து தம்பியைத் தேடி வருகிறார்.🙇🏻♀*
👉🙇🏻♀ *அண்ணனின் 'தலை'யைக் கண்டதும் தம்பியின் மனச்சாட்சி விழித்துக் கொள்கிறது.😔😰 ரத்த பாசம் தம்பியின் விழிகளில் கண்ணீரை வரவழைக்கிறது. 😭தான் நடத்திய நாடகத்தை விளக்கி அண்ணன்-தம்பியைப் புலவர் இணைத்து வைக்கிறார்.😊 அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உள்ள பாசம் என்பது இயல்பானது. 👍உணர்வு பூர்வமானது.👍 பகைமை என்பது அடுத்தவர்களின் சொற்கேட்பதால் செயற்கையாக உருவாவது.🤷🏻♀ ரத்த சம்பந்தமுடைய உறவுகளின் இடையே பிறர் குறுக்கிட்டுப் பிளவை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சகோதரர்களுக்கு உண்டு.*👍
👉🤷🏻♀🔴 *_ஒரு பெருமழை வந்து சொந்தமில்லாதவர்களையும் மதங்கடந்து சொந்தமாக்கும் அற்புதத்தை அண்மை வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது._*👍😇 *சொந்தமில்லாதவர்களிடமே நமக்குப் பாசம் தோன்றும்போது சொந்தங்களிடம் பாசமில்லாமல் இருக்கலாமா⁉⁉?ராமாயணம் எத்தனையோ உறவு நிலைகளில் பாசத்தைப் புலப்படுத்தியது.🎯 அண்ணன்-தம்பி, அப்பா-பிள்ளை, அம்மா-பிள்ளை, மாமியார்-மருமகள் என்றிப்படி அது வகுத்த உறவு நெறிகள் பற்பல.*🤷🏻♀
🤷🏻♀👉 *தாய்-தந்தை இறந்ததால் அநாதை ஆகிற குழந்தைகள் இன்று அதிகம்.*🙇🏻♀ *அநாதை இல்லங்களைத் தவிர வேறு புகலிடங்கள் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.*🙇🏻♀
*முன்பு அந்த நிலை இருந்ததில்லை.🙅🏻♀🙅🏻♀👍 உறவினர்கள் அத்தகைய குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி வளர்ப்பார்கள்👍. இன்று ஏனோ அந்த மனநிலை மாறிவிட்டது.*🤦🏻♀🙇🏻♀
👉😔😰 *ஒருசிலர் அப்படி முன்வந்தாலும் அத்தகைய குழந்தைகளைத் தங்கள் இல்லத்தில் வேலைக்காரர்கள் போல் நடத்தத் தலைப்படுகிறார்கள்.😰😔 மனிதர்களின் அற உணர்வு மங்கத் தொடங்கிவிட்ட காலம் இது. 🤦🏻♀🙇🏻♀""குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""என்கிறது அவ்வையார் எழுதிய ""கொன்றை வேந்தன்"" என்ற நூல்.*🎯
🔴💖 *உறவைப் பேணும்போது உறவினர்களின் குற்றங்களைப் பொருட்படுத்தக் கூடாது.🙅🏻♀🙅🏻♀ ஒரு காலத்தில் விரோதம் கொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வருவார்களானால் அவர்களை அன்போடு அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.*😇👍
🙇🏻♀ *உறவை விட நட்பே அதிகம் உறுதுணையாக இருப்பது இந்தக் காலம். எனவே நட்பை உறவாக்கிக் கொண்டு வாழவே பலரும் முற்படுகிறார்கள்.😰🤦🏻♀ நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். உறவினர்களை நாம் தேர்ந்தெடுக்க இயலுவதில்லை.😰 எனவே உறவினர்களிலும் யார் நண்பர்களைப் போல் பழகுகிறார்களோ அவர்களிடம் மட்டும் அதிக உறவு பாராட்டும் மனப்பான்மையும் இன்று தோன்றியிருக்கிறது.😰 ""எப்படியானாலும் உறவைப் போற்றுங்கள், உறவினரோடு கலந்து வாழ முயலுங்கள், உறவும் இணைந்ததே வாழ்வு..!!!""*😇💖🔴
😇 🔴 _*காரத்தை உணராத நாவினால் எந்நாளும் இனிப்பின் முழுமையான சுவை என்ன வென்று உணர முடியாது.🙅🏻♀ தோல்வியை காணாத ஒருவனால் எந்நாளும் வெற்றியின் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது. 🙅🏻♀அதே போல தான் உறவுகளில் சண்டை அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒருவனால் உறவின் முழு அன்பு மற்றும் பிரியத்தை உணர முடியாது.*_🙅🏻♀🔴
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♀*
*🏌🏻♂கார்த்திக் இராஜ்பவன்🏇🏼*
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@பிரபாகரன் சிதம்பரம், @sp vignesh*👏🎁
🥈 *@Sridevi, @tamizhmanig*👏🎁
🥉 *@Karthikeyan c🤗*👏🎁
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@இசையருவி, @பாலாசுப்ரமணியன்*👏🎁
🥈 *@KPA Palanivel*👏🎁
🥉 *@rajajjs, ஸ்ரீராம்*👏🎁
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
😇💐 *சரியான கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், ஒருவர் செய்யும் தவறினை, மற்றவர் வெகு எளிதாக கண்டறிந்து, அவரை நல்வழிப்படுத்தவும், சகோதர பாசம் வழி வகுக்கிறது.*😇🧒🏻👧🏻
😇💐 *சகோதர உறவு – உலகின் மிக உன்னத உறவு.தன்னலமில்லாத உறவு. இன்பத்தில் மட்டுமல்லாது, துன்பத்திலும் ஆதரவாய் தோள் கொடுத்து துணை நிற்கும் உறவு.மனதில் உள்ளதை வார்த்தைகளாய் வடிக்கும் முன்னரே, எளிதாய், இயல்பாய் புரிந்துக்கொள்ளும் உறவு….*🧒🏻👧🏻😇
😇💐 *சகோதர உறவு அமையபெற்றவர்கள், இப்பூவுலகின் அதிர்ஷ்டசாலிகள். உதிர உறவுகளிடத்தில் மட்டுமின்றி, நம் சக நண்பர்களிடமும், இந்த விலைமதிப்பில்லா நேசத்தை பாராட்டலாமே.....!!!*😇💐👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧚🏻♀ *அறிந்துகொள்ளவும்*🧚🏻♀
*வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.*
🧚🏻♀ *புரிந்துகொள்ளவும்*🧚🏻♀
*உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.*
🧚🏻♀ *தெரிந்துகொள்ளவும்*🧚🏻♀
*மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.02.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💓 *நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து*
*கொள்வது அவசியம்*
💐 *-அன்னை தெரசா.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை,*
*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*அண்ணன், தங்கை, அக்கா, தம்பி உறவுகளின் பலமும், பலவீனமும்?*
👨👩👧👦🧒🏻👧🏻👍👎🧒🏻👧🏻👍👎🧒🏻👧🏻
💝😇 *நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர்.👨👩👧👦 அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் '""அங்கிள்'"", பெண்கள் அனைவரையும் '""ஆன்ட்டி'"" என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். 🤦🏻♀இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!*
🧒🏻👧🏻 *அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன்,🙏 மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. 🤝சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள்.😇 அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் 'முறைக்கார' உறவுகள்.😇 கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.*🤝😇
👨👩👧👦😇 *அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே!🤝👨👩👧👦💐 அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்*.😇💐
😇💐 *இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை.🙅🏻♀😇 பக்கத்து வீட்டு 'அத்தை', எதிர்வீட்டு 'சித்தப்பா', கடைசி வீட்டு 'அப்பத்தா', தெரு முக்குக் கடை '""அண்ணன்'""என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. 😇🤝👨👩👧👦இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.😇🤝 உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, '""அண்ணே'""😇💐 என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். 💐அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை '"அண்ணி"', '"மதினி'" என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.*😇💐🤝
🙇🏻♀🤦🏻♀ *ஆனால் 'வெஸ்டர்ன்' கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், எனக்கு தெரிஞ்சி பிள்ளைக்கு ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்....🤦🏻♀ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு '"அங்கிள்'", "'ஆன்ட்டி'" என்றே பழக்குவது கொடுமை!*😡🤦🏻♀👊
💝 *ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில் அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகிபேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது.*💖
👨👩👧👦 *முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின்கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான் உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம்*💐😍
😇💐 *அரும்பாகி மொட்டாகிப் பூவாகி மலரும் மலரொன்றை ஆசையோடு,* *பாசத்தோடு கண்டு கண்கள் குளிரக் களிக்கும் பாக்கியம் அன்னை தந்தைக்கு அடுத்ததாக அண்ணனுக்கே கிடைக்கிறது.* 💐😇
👶🏻👧🏻🧒🏻 *நடை பழகும் நாட்களில்🤝 கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...*👍
🧚🏻♀ *அடம் பிடித்தோஅழுது புரண்டோ பொட்டோ, பூவோ*💐
🧚🏻♀ *முதல் முதலில் தங்கைக்கேவாங்குகிறான் அண்ணன்...*👍🧒🏻
🧚🏻♀ *'' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி,மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு...*💐🧚🏻♀
🧒🏻💐 *அண்ணனாக மட்டுமன்றிநண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும்*🤝😇
*மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...*🧚🏻♀💐
🧚🏻♀💐 *தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது*🧒🏻
🧚🏻♀ *தங்கைகளுக்கான முதல்சிபாரிசை அண்ணன்களே*
*முன்னெடுக்கிறார்கள்...*🧒🏻👍
🧚🏻♀ *அக்காக்களிடம் மறைத்தஅண்ணன்களின் காதலை,அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...*💐🧚🏻♀
🧚🏻♀💐 *அண்ணன்களுக்காகஅப்பாக்களிடம்*
*கோபம் கொள்வதில்*
*தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...*🧚🏻♀👍
🧚🏻♀ *தங்கைகளில்லா வீடு*
*அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து...*😜😉
🙇🏻♀ *திருமணமாகிச் செல்கையில்*
*அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ*😰
🧑🏻👨🏻 *அழாமல் நடிக்க அண்ணன்கள்*
*கற்றுக் கொள்கிறார்கள்...!!!*💐
🧑🏻🧒🏻👧🏻 *சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள்.🤷🏻♀😍 இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள்.*💐
🤨 *இன்றைய சமுதாய சூழலில் நற்பண்புகள், நல்லொழுக்கம் ஆகியவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதனின் வாழ்க்கைதரத்தை பணம் ஒன்றை மட்டும் கொண்டு நிர்ணயிக்கக் காண்கிறோம். தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளிலும்பணம் ஒரு பலம்வாய்ந்த இணைப்புச் சங்கிலியாக வடிவெடுத்துள்ளது. நெருங்கிய ஏழை சுற்றத்தாரை பணக்காரர்களில்பெரும்பாலானோர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமின்றி அப்படிப்பட்ட ஏழை எளிய,சொந்த, பந்தங்களுடன் உறவு பாராட்டினால் அவர்கள் அடிக்கடி வந்து தங்கள் தேவைகளுக்காக உதவி கோரிவிடகூடும் என்றுசெல்வந்தர்கள் பயப்படுகிறார்கள்.*🤨
🤨 *வம்சாவழியிலோ, இரத்த சம்பந்தப்பட்ட தொடர்பிலோ எந்த இணைப்பும் இல்லாதவர்கள் அனைவரும் பணம், என்ற ஒருகாரணியை வைத்துக் கொண்டு பணக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதை நாம் இன்று காண்கிறோம். இவர்கள் தம்வீட்டு விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கூட பணக்காரர்களையே விழுந்து, விழுந்து உபசரிக்கிறார்கள். தம் நெருங்கியஉறவினர்களை அவர்கள் ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற நிகழ்ச்சிகளில் கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.*🤨
👨👩👧👦 *ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.*🙇🏻♀
👨👩👧👦🧒🏻👧🏻 *சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.*🤝💐
🧒🏻👧🏻🤝 *எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது*🤝💐
🧒🏻👧🏻 *சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள்.🤝 அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.*💐👍
🧒🏻👧🏻 *சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள். நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவுகளை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். 👍அதன் மூலம் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கவலைகளையும், பிரச்னைகளையும் நம்பிக்கையான ஒருவரிடம் மனம் விட்டுப் பேச முடியும்.👍 அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். உங்களுக்கு சகோதரர்கள் இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை*🤷🏻♀🙅🏻♀
👨👩👧👦💐 *குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிகவும் முக்கியமானதாகும்.👍 சகோதரர்கள் பாசத்துடன் இணைந்திருக்கும் வரையில் குடும்பத்தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும். 👨👩👧👦🤝👍இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது.👍 குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.*🤝💐
👨👩👧👦🧒🏻👧🏻 *சகோதர உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். 👍ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வர வேண்டும்.*👍🤝💐
👨👩👧👦 *தாய்,தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகளைப் பார்க்கும் போது அவை பரஸ்பர உறவுகள் மூலம் புதுப்பிக்கப்படுவதையும், காலம் செல்லச் செல்ல குடும்பத் தொடர்புகள் தாய் வழி உறவினர்களுடன் சுருங்கி தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகள் விசேச வைபவங்களுடன் மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ளதையும் பெரும்பாலும் கண்டு கொள்ளலாம். சில போது தந்தை வழி உறவினை மறந்த நிலைமையில் உள்ளனர் என்று சொன்னாலும் மிகையாகாது.*🙇🏻♀
👨👩👧👦 *நவீன காலத்தில் சகல உறவினர்களையும் மறந்து தானும் தனது குடும்பமும் என்ற நிலைமை சமூகத்தினர்களிடையே அதிகரித்திருக்கின்றது. 🙇🏻♀சகோதர, சகோதரிகளுக்கிடையிலான உறவு பாதிப்புற்று ஆரோக்கியமற்றிருக்கின்றது.🙇🏻♀ தாய், தந்தையர்களை கவனியாது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற உதவாத பிள்ளைகளையும், சில கிராமங்களில் திருமண வைபவங்களின் போது தந்தையினை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை இடுகின்றவர்களையும் காணலாம்.*🙇🏻♀😔
💑 *திருமண பந்தத்தின் மூலம் இரு குடும்பங்கள் இணைந்து, அதனால் புதிய முகங்களும்,புதிய உறவுகளும் கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கப்பெற்ற உறவினர்கள் தூரமாகி செல்லும் நிலைமையினை குடும்பங்களில் அவதானிக்கின்றோம். திருமணத்திற்கு முன்பு உச்சத்தினை எட்டிய திருமணத்தின் மூலமான உறவுகள் திருமணத்திற்குப்பிறகு இருந்த தடம் தெரியாமல் திசை மாறும் நிலைமை குடும்ப உறவினர்களிடையே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.*🙇🏻♀😔
🙇🏻♀😔 *இந்நிலையில் குடும்ப உறவினர்களிடையே அன்பும்,பிணைப்பும் அற்றுப் போனமைக்கான காரணம் யாது ?*⁉ *அதனை வளர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? சிறந்த குடும்ப உறவின் பன்புகள் யாவை? போன்ற கேள்விகளுக்கான தெளிவினைப் பெற முயற்சிக்கலாம்.*🤷🏻♀🤷🏻♀
👨👩👧👦😔 *குடும்ப பிணைப்பு உறவினர்களிடையே குறைந்து போனமைக்கான காரணத்தினை எடுத்துக்காட்டாக பின்வருமாறு சுட்டிக் காட்ட முடியும். குடும்ப உறவினை பேணி நடப்பது பற்றிய போதிய அறிவில்லாமை,மார்க அறிவில் பலவீனமான நிலைமை, பணத்தாலும், பதவியாலும் பெருமையினை வெளிப்படுத்துதல், பெற்றோர் தமது குடும்ப உறவினர்களுடன் உறவைப் பேணாமையினால் பிள்ளைகள் அதை தொடர்கின்ற நிலைமை , குடும்ப உறவினர்களிடையே வெறுப்புணர்வினை வெளிப்படுத்திய பார்வை, சந்திப்பதில் நீண்ட இடைவெளி,உறவினர் நலனில் விருப்பினை வெளிப் படுத்தாமை, பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுதல், சொத்து பங்கீட்டில் நீதம் பேணாமை, உறவினர்கள் விடயத்தில் பொறுமை இழத்தல் ,பொறாமை, மற்றும் தீய எண்ணம் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.*🙇🏻♀😔
👨👩👧👦👆 *மேற்சொல்லப்பட்ட பல காரணங்களினால் குடும்பத்தினரிடையே பிளவுகள் ஏற்பட்டு இரத்த உறவினர்கள் பகைமையினையும், குரோதத்தினையும் வெளிப்படுத்தி வருடக் கணக்காக வாழ்ந்து வருகின்றமையினைக் காண்கின்றோம்.*🙇🏻♀😔
👉 *இந்நிலைமை மாற்றப்பட்டு, குடும்ப உறவினர்களுடன் உறவினை புதுப்பித்துக் கொள்ள சகலரும் முயற்சித்தல் அவசியமாகும்*👍
👨👩👧👦 *குடும்ப உறவுகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்.👍தமது உறவினர்கள் பற்றி பிள்ளைகளுக்கு அறிவூட்டி, அவர்களது உறவின் முக்கியத்துவத்தினைக் கூறி வழிப்படுத்தல் வேண்டும்.👍 மேலும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளில் தலையிட்டு சமரசம் செய்து வைத்தல் அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும்.👍 அவ்வாறு இல்லாவிட்டால் சிறிய பிரச்சினைகள் பிற்காலத்தில் பெரிதாகி பகைமையினை ஏற்படுத்தி விடும்*😔🙇🏻♀
😇👉 *முன்பெல்லாம் சுற்றத்தாரைப் பராமரிப்பது என்பது இயல்பாக இருந்தது.🤷🏻♀ எல்லார் வீட்டிலும் கணவனை இழந்த ஓர் அத்தையோ, மாமியோ பாசத்தோடு பராமரிக்கப்பட்டார்கள்.🤷🏻♀ அவர்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி அன்பு செலுத்தினார்கள்.🤷🏻♀ அவர்களுக்குச் செய்யும் செலவைத் தங்கள் கடமை என்றே உணர்ந்தார்கள்.👍 தன்னைச் சார்ந்திருக்கும் அத்தையையும் மாமியையும் பொருளாதாரச் சுமை என்று யாரும் கருதியது கிடையாது. *🙅🏻♀🙅🏻♀👍
🧚🏻♀ *அவர்களும் அந்தக் குடும்பத்தோடு இணைந்து அந்தக் குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்தார்கள். 😇சமையல் செய்வதிலிருந்து குழந்தை வளர்ப்பு வரை அவர்கள் செய்த சேவைகளும் பலப்பல.🤷🏻♀ தாயும் தந்தையும் இறந்தபோது விம்மி விம்மி அழுத பிள்ளைகள், தங்கள் அத்தையும் மாமியும் காலமானபோதும் அதே உணர்வோடு அழுது அகற்றினார்கள்.👍 புகலிடமற்ற அத்தை, மாமி போன்றோரெல்லாம் அண்ணன், தங்கை போலவே அக்காலக் குடும்ப அமைப்பின் அங்கத்தினர்களாக மாறியிருந்தார்கள்.*😇👍
🙇🏻♀👉 *ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.👎""உறவினர் திருமணம் எதுவானாலும் என் குழந்தைகளைக் கட்டாயம் அழைத்துச் செல்வேன்"""என்கிறார்கள்.ஏன் ⁉எனக் கேட்டதற்கு `பின்னே கல்யாணங்களில் மட்டும்தானே அத்தை யார், சித்தப்பா சித்தி யார் என்றெல்லாம் நம் குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த முடியும்?' என்கிறார்கள்*.🤦🏻♀🤦🏻♀ *அத்தையும் சித்தப்பாவும் சித்தியும் இன்று கல்யாணங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் தொலை(ந்துபோன) உறவாகிவிட்டார்கள்!*🤦🏻♀🤦🏻♀
*""நாமிருவர் நமக்கிருவர்"" என்ற கோட்பாடு மாறி, ""நாமிருவர் நமக்கொருவர்""என்ற கோட்பாடு தோன்றி, அது இப்போது இன்னும் வளர்ச்சி கண்டு விட்டது*.🤦🏻♀🙇🏻♀ *""நாமிருவர் நமக்கிடையே ஏன் இன்னொருவர்???""🤦🏻♀ என்று கேட்கிறது நவீன காலம்!*🤦🏻♀
🤷🏻♀👉 *""ஒரு பிள்ளை'க் கோட்பாடு உருவாகிய பின்,🤦🏻♀எதிர்காலத்தில் அத்தையோ மாமியோ சித்தப்பாவோ இருக்க வாய்ப்பே இல்லை.🤦🏻♀🙅🏻♀🙅🏻♀👎 இத்தகைய உறவுகள் இந்தத் தலைமுறையின் கடைசி மிச்சங்கள். 🤦🏻♀ஒன்று விட்ட அண்ணா,ஒன்றுவிட்ட அக்கா போன்ற உறவுகளெல்லாம் கூட முன்பு இருந்தன என்பது இன்று நினைத்துப் பார்க்கும் ஆச்சரியம்.🤦🏻♀ உறவுகள் இணைந்து வாழ்ந்தால் வாழ்க்கை எப்படி ஆனந்தமாக இருக்கும் என்பதை உடன்பாட்டு முறையில் சொன்ன இதிகாசம் 🔴ராமாயணம்.🔴 அதில் நான்கு அண்ணன் தம்பியரிடையே இருக்கும் ரத்த பந்த உறவில் விரிசல் இல்லாத தன்மையைக் காண்கிறோம்.*🤷🏻♀
🤷🏻♀👉 *உறவுகள் இணைந்து வாழாவிட்டால் வாழ்க்கை எப்படிச் சீரழியும் என்பதை எதிர்மறை நோக்கில் சொன்ன இதிகாசம் 🔴மகாபாரதம்.🔴சித்தப்பா -பெரியப்பா பிள்ளைகள் அண்ணன் தம்பிகளாய் இணைந்து வாழாததால் நேர்ந்த அவலங்களை அந்த இதிகாசத்தில் நெடுகப் பார்க்கிறோம்.🙇🏻♀ முற்காலத் தமிழ் மன்னர்களில் அமணன், குமணன் என்ற இரு சகோதரர்கள் இருந்தார்கள். அண்ணன் குமணன் நற்குணங்களின் மொத்த வடிவம். கொடை வள்ளல்.😇 அண்ணனின் பெருமை தம்பி அமணனுக்குத் தெரியவில்லை.🙇🏻♀ நாட்டைப் பறித்துக் கொண்டு அண்ணனைக் காட்டுக்கு விரட்டுகிறான்.* 🙇🏻♀
👉 *அண்ணன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பரிசு அறிவிக்கிறான்.🤷🏻♀ அண்ணன் குமணனைத் தேடிக் கானகம் செல்கிறார் ஒரு புலவர். அவருக்குப் பரிசளிக்கக் குமணனிடம் பொருளில்லை. தன் தலையை வெட்டியெடுத்துச் சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு வற்புறுத்துகிறான் குமணன். புலவரின் உள்ளம் உருகுகிறது. மீண்டும் வருவதாகச் சொல்லி, வாழைத் தண்டால் குமணன் தலைபோன்ற ஒரு வடிவத்தைச் செய்து துணியில் முடிந்து தம்பியைத் தேடி வருகிறார்.🙇🏻♀*
👉🙇🏻♀ *அண்ணனின் 'தலை'யைக் கண்டதும் தம்பியின் மனச்சாட்சி விழித்துக் கொள்கிறது.😔😰 ரத்த பாசம் தம்பியின் விழிகளில் கண்ணீரை வரவழைக்கிறது. 😭தான் நடத்திய நாடகத்தை விளக்கி அண்ணன்-தம்பியைப் புலவர் இணைத்து வைக்கிறார்.😊 அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உள்ள பாசம் என்பது இயல்பானது. 👍உணர்வு பூர்வமானது.👍 பகைமை என்பது அடுத்தவர்களின் சொற்கேட்பதால் செயற்கையாக உருவாவது.🤷🏻♀ ரத்த சம்பந்தமுடைய உறவுகளின் இடையே பிறர் குறுக்கிட்டுப் பிளவை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சகோதரர்களுக்கு உண்டு.*👍
👉🤷🏻♀🔴 *_ஒரு பெருமழை வந்து சொந்தமில்லாதவர்களையும் மதங்கடந்து சொந்தமாக்கும் அற்புதத்தை அண்மை வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது._*👍😇 *சொந்தமில்லாதவர்களிடமே நமக்குப் பாசம் தோன்றும்போது சொந்தங்களிடம் பாசமில்லாமல் இருக்கலாமா⁉⁉?ராமாயணம் எத்தனையோ உறவு நிலைகளில் பாசத்தைப் புலப்படுத்தியது.🎯 அண்ணன்-தம்பி, அப்பா-பிள்ளை, அம்மா-பிள்ளை, மாமியார்-மருமகள் என்றிப்படி அது வகுத்த உறவு நெறிகள் பற்பல.*🤷🏻♀
🤷🏻♀👉 *தாய்-தந்தை இறந்ததால் அநாதை ஆகிற குழந்தைகள் இன்று அதிகம்.*🙇🏻♀ *அநாதை இல்லங்களைத் தவிர வேறு புகலிடங்கள் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.*🙇🏻♀
*முன்பு அந்த நிலை இருந்ததில்லை.🙅🏻♀🙅🏻♀👍 உறவினர்கள் அத்தகைய குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி வளர்ப்பார்கள்👍. இன்று ஏனோ அந்த மனநிலை மாறிவிட்டது.*🤦🏻♀🙇🏻♀
👉😔😰 *ஒருசிலர் அப்படி முன்வந்தாலும் அத்தகைய குழந்தைகளைத் தங்கள் இல்லத்தில் வேலைக்காரர்கள் போல் நடத்தத் தலைப்படுகிறார்கள்.😰😔 மனிதர்களின் அற உணர்வு மங்கத் தொடங்கிவிட்ட காலம் இது. 🤦🏻♀🙇🏻♀""குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""என்கிறது அவ்வையார் எழுதிய ""கொன்றை வேந்தன்"" என்ற நூல்.*🎯
🔴💖 *உறவைப் பேணும்போது உறவினர்களின் குற்றங்களைப் பொருட்படுத்தக் கூடாது.🙅🏻♀🙅🏻♀ ஒரு காலத்தில் விரோதம் கொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வருவார்களானால் அவர்களை அன்போடு அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.*😇👍
🙇🏻♀ *உறவை விட நட்பே அதிகம் உறுதுணையாக இருப்பது இந்தக் காலம். எனவே நட்பை உறவாக்கிக் கொண்டு வாழவே பலரும் முற்படுகிறார்கள்.😰🤦🏻♀ நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். உறவினர்களை நாம் தேர்ந்தெடுக்க இயலுவதில்லை.😰 எனவே உறவினர்களிலும் யார் நண்பர்களைப் போல் பழகுகிறார்களோ அவர்களிடம் மட்டும் அதிக உறவு பாராட்டும் மனப்பான்மையும் இன்று தோன்றியிருக்கிறது.😰 ""எப்படியானாலும் உறவைப் போற்றுங்கள், உறவினரோடு கலந்து வாழ முயலுங்கள், உறவும் இணைந்ததே வாழ்வு..!!!""*😇💖🔴
😇 🔴 _*காரத்தை உணராத நாவினால் எந்நாளும் இனிப்பின் முழுமையான சுவை என்ன வென்று உணர முடியாது.🙅🏻♀ தோல்வியை காணாத ஒருவனால் எந்நாளும் வெற்றியின் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது. 🙅🏻♀அதே போல தான் உறவுகளில் சண்டை அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒருவனால் உறவின் முழு அன்பு மற்றும் பிரியத்தை உணர முடியாது.*_🙅🏻♀🔴
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♀*
*🏌🏻♂கார்த்திக் இராஜ்பவன்🏇🏼*
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@பிரபாகரன் சிதம்பரம், @sp vignesh*👏🎁
🥈 *@Sridevi, @tamizhmanig*👏🎁
🥉 *@Karthikeyan c🤗*👏🎁
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@இசையருவி, @பாலாசுப்ரமணியன்*👏🎁
🥈 *@KPA Palanivel*👏🎁
🥉 *@rajajjs, ஸ்ரீராம்*👏🎁
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
😇💐 *சரியான கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், ஒருவர் செய்யும் தவறினை, மற்றவர் வெகு எளிதாக கண்டறிந்து, அவரை நல்வழிப்படுத்தவும், சகோதர பாசம் வழி வகுக்கிறது.*😇🧒🏻👧🏻
😇💐 *சகோதர உறவு – உலகின் மிக உன்னத உறவு.தன்னலமில்லாத உறவு. இன்பத்தில் மட்டுமல்லாது, துன்பத்திலும் ஆதரவாய் தோள் கொடுத்து துணை நிற்கும் உறவு.மனதில் உள்ளதை வார்த்தைகளாய் வடிக்கும் முன்னரே, எளிதாய், இயல்பாய் புரிந்துக்கொள்ளும் உறவு….*🧒🏻👧🏻😇
😇💐 *சகோதர உறவு அமையபெற்றவர்கள், இப்பூவுலகின் அதிர்ஷ்டசாலிகள். உதிர உறவுகளிடத்தில் மட்டுமின்றி, நம் சக நண்பர்களிடமும், இந்த விலைமதிப்பில்லா நேசத்தை பாராட்டலாமே.....!!!*😇💐👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧚🏻♀ *அறிந்துகொள்ளவும்*🧚🏻♀
*வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.*
🧚🏻♀ *புரிந்துகொள்ளவும்*🧚🏻♀
*உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.*
🧚🏻♀ *தெரிந்துகொள்ளவும்*🧚🏻♀
*மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment