Sunday, 15 October 2017

விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றிய ஓர் அலசல்!!! அவர் மரணம் விடுதலையா? விடுகதையா?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :14.10.2017.*
         🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*எதிரிக்கு ஆயுதபலமுண்டு,ஆட்பலமுண்டு..*
*ஆதரவளிக்கும் நாடுகளுமுண்டு*

*நாம் தனித்து நின்று போராடுகிறோம்*

*எமக்கு எந்த நாட்டின் உதவியும் இல்லை*

*ஆனால் எமக்குள் ஒரே ஒரு பலம்*

*நமது லட்சியம் மட்டுமே.*

      💪 *-கேப்டன் பிரபாகரன்.*
💪

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால்...*

*அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.*

*போராடும் தருணத்தில் வெற்றியோ தோல்வியோ போராடியே ஆகவேண்டும்...!!*

💖💖💖💖💖💖💖💖💖💖💖
    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*விடுதலை புலிகள் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றிய ஓர் அலசல்!!! அவர் மரணம் விடுதலையா? விடுகதையா?*
👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨

   🔪 _*முதல் பாகம்*_🗡

💪 *_பத்தொன்பதாம் நூற்றாண்டின் போற்றப்பட்ட ஒரு தமிழ் தலைவன் இவர்...._*💪

💪 *_இலங்கை ராணுவ படைகளை நடுங்க வைத்த காவலன் இவர்...._*💪

💪 *_வீரம்,மானம் கொண்ட தமிழச்சி வயிற்றில் பிறந்த தமிழன் இவர்...._*💪

💪 *_மானமும் வீரமும் தமிழனின் உயிரென்று உலகிற்கு உணர்த்தியவர் இவர்_*💪

💪 *_தமிழீழத்தின் தன்னிகரற்ற தலைவன் இவர்...._*💪

💪 *_வீரம்,பணிவு,கருணை,தெளிவு,ஆற்றல்,அன்பு,அறிவு,அடக்கம்,பண்பு,மாண்பு,கனவு,ஒழுக்கம் என இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்த உருவம் இவர்..._*💪

💪 *_அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய விடுதலைக்காக காலம் கொடுத்த கரிகாலன் இவர்..._*💪

💪 *_"சுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தமற்றது" என்று கூறிய இவர் தமிழினத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்_*💪

🙏 *_இவர் தான் தமிழனின் மானம் காத்த தென்னவர்➡சொல்லுக்கு முன் செயலென்றவர்,முப்படைகளையும் கொண்டு அன்னைநிலம் காத்த மன்னவர் இவர் தான் என் இலங்கை தமிழினத்தின் பாதுகாவளன்_*💪

👨‍🎨 *விடுதலை புலிகளின் தலைவன் இவர்🐯*

💪🏻 *_வீரத்திற்கு புதிய இலக்கணம் வகுத்த இவர் பெயர் தான் ★★வேலுப்பிள்ளை பிரபாகரன்_👨‍🎨★★* 😎

💪🌍 *தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி  வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்*👨‍🎨

💪 *தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். 👍சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. 🌍பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான். 👨‍🎨சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை ""நான் தமிழன்"'💪 என்று துணிந்து சொல்ல வைத்தவர் 👨‍🎨பிரபாகரன் தான்.*👍

💻 *இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்*
💪👨‍🎨👍

👨‍🎨 _*விடுதலை புலி "பிரபாகரன்" வரலாறு*_👇

💖 _*வாழ்க்கைக் குறிப்பு*_👇

👨‍🎨💪 *இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில்   திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிறந்தவர் தான் பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் இலங்கை தமிழரின் காவலனாக உருவெடுக்க பிறந்தார்.💪👶🏻 வேலுப்பிள்ளை இலங்கை அரசில்  பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர்.  ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.இது தான் முதல் தாக்கம் பிரபாகரனிடம்.*💪

👨‍🎨👦🏻 *மாணவராக இருந்த போது பிரபாகரன் தமிழ் ஆதரவாளர்கள் குழுவில் இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு 💣வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் "புரட்சி இயக்கத்தில்" ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை 😱பெற்றோருக்கு புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.*😓

👨‍🎨💪 *பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, “உங்களுக்கோ, குடும்பத் துக்கோ நான் பயன்பட மாட்டேன்.👎 என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம்.🙅🏻‍♂ என்போக்கில் விட்டு விடுங்கள். 👍என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார் பிரபாகரன். 👍💪 _அதன் பின் வீடு திரும்பவேயில்லை_.🙅🏻‍♂ 1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறையும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது,இதனால் சிங்களர்கள் மீதும் 🏛அரசு மீதும் கடும் கோபத்தில் இருந்தார் பிரபாகரன்*😡👨‍🎨

👨‍🎨🐯 _*புதிய தமிழ்ப் புலிகள்*_🐯👨‍🎨

🏛 *பார்லிமென்டில் தமிழ்த்தலைவர்களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாணவர் பேரவை துவங்கப்பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை “தம்பி" என்றே எல்லாரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பஸ்சை எரிப்பது என்று முடிவு செய்தனர். அதன் படி 16 வயதாக இருந்த பிரபாகரன், பஸ்சை எரித்து தனது போராட்டத்தை  துவக்கினார்,இதுவே பிரபாகரன் செய்த முதல் அரசு எதிர்ப்பு போராட்டம் ஆகும்.*💪👍

👨‍🎨💪 *மாணவர் பேரவையில் இருந்தவர்களை, சிங்கள போலீசார் கைது செய்து கொழும்பில்  சித்திரவதை செய்தனர்.😰 இச்சூழ்நிலையில் பிரபாகரன் தமிழகம் வந்தார். பின் 1972ல் இலங்கை திரும்பிய அவர், “புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தை துவக்கினார். 👍ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.*💪👍

👨‍🎨1⃣ _*முதல் ராணுவ நடவடிக்கை*_

👨‍🎨💪 *1974ம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் தமிழ் ஆதரவு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் துப்பாக்கிச் சூடு🔫 நடந்ததில் ஒன்பது பேர் 9⃣பலியாயினர். 😰 இச்சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, 1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த, யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப் பட்டார். துரையப்பா, இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர், தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தவர். இச்சம்பவத்தை முன்னின்று நடத்தியவர் பிரபாகரன்.💪 _இதுதான் பிரபாகரனின் முதல் கொலை  நடவடிக்கை._*👨‍🎨👍

👨‍🎨💪 *1975ல் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்து, ஐந்து லட்ச ரூபாய் மற்றும், இரண்டு லட்ச ரூபாய் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றார். இதனால் சிங்கள போலீசார் புதிய தமிழ்ப்புலிகளை அழிக்க தீவிரம் காட்டினர். கடந்த, 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை – தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக,  புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார்.👍 இலங்கை உளவுப் படையினரை அழித்தல், போலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், ராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.*👍

👨‍🎨👨‍🎤 _*கொரில்லா இயக்கம்*_

👨‍🎤💪 *கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார்.👍 புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை ராணுவம் அவரை தேடத் தொடங்கியது.  👨🏻‍🚒போலீசார் மீதும், ராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல்⚔💣 நடத்தினர்.1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் 🙅🏻‍♂இலங்கை 🏛பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.*👍

👨‍🎤🔪 *அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தனா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப்படுத்தும் வேலையில் பிரபாகரன் ஈடுபட்டார். 1981ல் சிங்கள ராணுவமும், ஐக்கிய தேசிய கட்சியினரும் இணைந்து யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர்.🔥 தெற்காசியாவில் சிறந்ததாக கருதப்பட்டது இந்த நூலகம். 94 ஆயிரம் புத்தகங்கள் சாம்பலாகின.*🔥 😡 *_இந்த நூலகத்தில் இருந்த பல அரிய தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அப்போதைய சிங்கள வெறிகொண்ட அரசால் தான்,உலகம் அறியாமலையே பல நூல்கள் அழிந்தன._*🔥😡

👨‍🎤🔪 *1981ல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே ராணுவத்தினர் மீது புலியினர் நடத்திய முதல் தாக்குதல். 1982ல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத் துக்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணிவெடிகுண்டுகளை 💣புதைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த, 1983 உள்ளூராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், ராணுவத்தினரை நிலைகுலைய செய்தது, கண்ணிவெடித்தாக்குதலில் 13 ராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபாகரன் நேரில்  நடத்தினார். இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின.👍 இதையடுத்து  கண்ட இடத்தில் போராளிகளை சுடவும், சுட்டுத் தள்ளிய பின் பிணங்களை பிரேத பரிசோதனை இன்றி புதைக்கவும் வழிசெய்யும் ஆணையை சிங்கள அரசு பிறப்பித்தது.*🏛

⚫ _*கருப்பு ஜூலை:*_ ⚫

🖤 *அப்பாவி தமிழர்கள் மீதான  தாக்குதல்களை  சிங்கள ராணுவம் அதிகரித்தது  கருப்பு ஜூலை என்று அழைக்கப்படும், 1983 ஜூலை 23ல்,  சிங்களர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.🖤 1983 ஜூலை, தமிழ் ஈழப் போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம்.  ராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபாகரன் தொடங்கினார். அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.*👨‍🎤🔪

🌍 _*இந்தியா ஆயுத பயிற்சி*_🌍

⚫👨‍🎤 *கருப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திரா, இலங்கை பிரச்னையில் தலையிடுவது என்று முடிவு செய்தார்.🔪 இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முயற்சி செய்தார். 👍புலிகளுக்கு ராணுவ பயிற்சியும் ஆயுதமும்🔫💣 வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது.👍 இந்நேரத்தில், தமிழ் ஈழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர்.👨‍🎤🔪💣 இந்நேரத்தில் இலங்கை அரசு கலக்கம் அடைந்திருந்தது. தமிழ் ஈழ மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.*👵🏻🔫

👨‍🎤🔪 *அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார். இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு அக்., 1ம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.💑 இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர். இவர்களில் சார்லஸ் அந்தோணி போர் முனையில் மரணமடைந்துவிட்டார்.*😔

👨‍🎤 _*திம்பு மாநாடு*_💪

👨‍🎤🔪⚔ *1985ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் போர்நிறுத்தம் ஏற்பட்டது. பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை🙅🏻‍♂ பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.👎 இதன்பின், திரிகோணமலை அருகே, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது.😡🏛 இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் வெளியேறினார்.😔 இதையடுத்து, இந்தியாவுக்கும் – பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.*💔

👨‍🎤 _*எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்பு*_🤝

👨‍🎤🤝 *1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப் பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப் பட்டன. 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், _“தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்"_ என்றார்.*💪🔪👨‍🎤

👨‍🎤🔪🏛 *1987ம் ஆண்டில் டில்லியில் ராஜிவைச் சந்திக்கும் வழியில், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையும் பிரபாகரன் சந்தித்தார். 🤝ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் பற்றி அப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தனக்கு 😱அதிர்ச்சி அளித்ததாக 👨‍🎤பிரபாகரன் கூறினார். மற்ற தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்று கூறி, அப்போது ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் நிறைவேறியது.*💪👍

👨‍🎤 _*அமைதிப்படை*_🏳

👨‍🎤🏳 *இந்த ஒப்பந்தப்படி, ஆயுதங்களை புலிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இந்திய அமைதிப்படை இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடக்காமல் கண்காணிக்கும். இதுபற்றி பேசிய பிரபாகரன், “மக்களது விடுதலைக்காக, விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து, தமிழ்ஈழ மக்களின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறது.*🏛🏳

🏳 *_"நாங்கள் ஆயுதங்களை அளிக்காவிட்டால் இந்திய ராணுவத்துடன் மோதும் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.🙅🏻‍♂ தமிழ்ஈழ தனி அரசே நிரந்தரத் தீர்வைத் தரும்"_ என்றார். பலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள்🔪🔫💣 ஒப்படைக்கப்பட்டன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலிருந்த விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கோரி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய கொள்கை உறுதியால் உண்ணாவிரதத்திலேயே மரணமும் அடைந்தார்.*😔👎

👨‍🎤😔 *திலீபன் மரணத்துக்குப் பின், விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. “இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது" என்று கூறிய ஏழு புலிகள் சயனைடு குப்பிகளைச் சாப்பிட்டு மரணம் அடைந்தனர்.😔 புலிகளும் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர். 👎இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் போராடுவது குறித்து, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், “இந்திய ராணுவம் புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் எங்களது தற்காப்புக்காகப் போராடி வருகிறோம்" என்று பிரபாகரன் எழுதியிருந்தார்.*📩👨‍🎤

👨‍🎤 📩✍ *1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவுக்கு கடிதம் எழுதினார் பிரபாகரன்.✍ இந்த சமயத்தில் 👩‍🎤👩‍🎤பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார்.👍 பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர்ளை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு 🏳திரும்பியது. தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடந்து கொண்டது எனக் கூறி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராணுவத்தினரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை.🙅🏻‍♂👎 அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.*👨‍🎤⚔

👨‍🎤 _*குற்றச்சாட்டுகள்*_💣

👨‍🎤💣🛠  *1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். 👎இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். ராஜிவ் -ஜெயவர்தனே மற்றும் அமைதிப்படை 🏳விவகாரங்களில் பிரபாகரன் அதிருப்தி அடைந்தது அதற்கு காரணமாக சொல்லப்பட்டது.👎 2006ல் ராஜிவ் படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, “ஒரு துன்பியல் சம்பவம்"  என்றார்.*🔪

👨‍🎤🔪💣 *தமிழ் ஈழ விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலைகளிலும், 1990ல் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் பத்மநாபா மற்றும் அவரது சகாக்கள் 14 பேரை 🔫சுட்டுக் கொன்றது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. அதிபர் பிரேமதாசா, அதிபர் வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன்  குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது.*🛠🔍

✈🛳 _*முப்படை அமைப்பு*_👨🏻‍🚒

👨‍🎤💪👍 *புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை – 1984 ம் ஆண்டு முதல் பிரபாகரன் முயற்சி செய்ததன் விளைவாக 1992ல் உருவாக்கப் பட்டது) மற்றும் வான்புலிகள் (விமானப்படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது.* 👍

👨‍🎤💪 *1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.*👍

👨‍🎤💪 *2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம் போல் வெற்றி பெறவில்லை.👎 இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது.*🛠

👨‍🎤🔪 *2005ல் ராஜபக்ஷே அதிபர் ஆனபின், நார்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.*👍 *புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில்* *பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.*👍
*ஆண்டு இறுதியில், புலிகளின் கிழக்குப் பகுதியில் கடுமையாக சண்டை🛠 நடந்தது. 2009 புலிகளுக்கு சோகமானதாகவே😔 இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது.* 😔

👨‍🎤👍 *ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. இப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.*🔪

👨‍🎤💣🔪 *இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக்கணக்கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 😡😔புலிகள் இருக்கும் இடத்துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் அந்தோணி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஈழப் போராட்டத்தில் 70 ஆயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.*😡😔

✈ *_வான்படை உருவாக காரணமான சார்லஸ்_*🚀🛬

👨‍🎤🚀✈ *புலிகளின் வான்படை உருவாக காரணமாக இருந்த சார்லஸ் அந்தோணி பலியானது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:📃 👨‍🎤 "_புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று அதிகாலை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிவுக்கு வந்த பின், ராணுவ வீரர்கள் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டையில் பலியான புலிகளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், 24 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் சடலம் என தெரிய வந்துள்ளது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் சண்டையில் பலியானார்_" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*📃

👨‍🎤😔😡 *சார்லஸ் அந்தோணி இறந்த நிலையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. சார்லஸ், ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர். புலிகள் வான்படையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். தகவல் தொடர்பு பிரிவையும் கவனித்து வந்தார். சமீப காலமாக நடந்த சண்டைகளை சார்லஸ் தான் தலைமையேற்று நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதேபோல், தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின் புலிகள் அரசியல் பிரிவு தலைவராக பதவியேற்றவர் நடேசன். இவர், இலங்கையில் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது*😔👍💪


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :7.10.2017.*
         🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________

    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*விடுதலை புலிகள் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றிய ஓர் அலசல்!!! அவர் மரணம் விடுதலையா? விடுகதையா?*

👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨💪👨‍🎨

🔪 _*இரண்டாம் பாகம்*_🗡

👨‍🎤 *_பிரபாகரனின் உயிர் மர்மம்_*😳

👨‍🎤😔 *பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக கூறும் இலங்கை அரசாங்கம் அதனை நிரூபிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.*🔪🙅🏻

👨‍🎤🤔 *இதுவே, இன்று வரையிலும் பிரபாகரனின் மரணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போதைய இலங்கை அரசியலில் பிரபாகரனின் மரணம் குறித்த பேச்சுகளும் வலுப்பெற்றுள்ளன.*💪🔪

👨‍🎤🔪 *இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிய நிலையில், உயிரிழந்ததாக கூறப்படும் பிரபாகரனின் சடலத்தையும் காண்பித்தது.*😭

👨‍🎤🔪 *எனினும், அந்த சடலம் பிரபாகரனின் உடல் அல்லவென🙅🏻🙅🏻‍♂ மறுத்து ஏகப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.*👍

👨‍🎤🐯 *புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா,⁉ இறந்துவிட்டாரா⁉ என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. 👎😔இதை விடுதலைப்புலிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.*👍

👨‍🎤🔪 *பிரபாகரனது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 👍அவரது மனைவி, மகள், இளையமகன் ஆகியோர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.*🙅🏻😔

👨‍🎤🔫 *பிரபாகரனும் துப்பாக்கியும் இணைபிரியாதவை.👍 துப்பாக்கி இல்லாமல் பிரபாகரன் உடல் காட்டிய போது பலரின் சந்தேகம் உருவானது.*🤔👍

👨‍🎤 *ஆனால் யாராலும் அந்தச் சந்தேகத்தை பகிரங்கமாகவோ அல்லது ஊடகங்களில் எழுதவோ முடியாமல் போனது.😔👎 அந்தளவு இந்த விஷயத்தில் அரசின் அச்சுறுத்தல் இருந்தது.*🔪☹

👨‍🎤 *அப்படியானால் அரசு காண்பித்த பிரபாகரனின் உடல் பெய்யானதா அவர் உயிருடன் இருக்கிறாரா? ⁉என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.*🔪👍

👨‍🎤🏛 *இலங்கை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசும் போது, ராஜபக்சேவை வெற்றி பெறச் செய்ய வைக்க பிரபாகரன் நாட்டில் இல்லை என்றார். அப்படியானால் பிரபாகரன் இன்னும் வெளிநாட்டில் உயிருடன் இருக்கிறாரா?⁉ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.*🤔👍

👨‍🎤🐯 *புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் தமிழக📺 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரபாகரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை🙅🏻🙅🏻‍♂ அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்.*👍

👨‍🎤🐯 *கருணாவின் பேட்டிக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த இலங்கை ராணுவ அதிகாரி சரத் பொன்சேகா பிரபாகரன் ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகித் தான் மரணம் அடைந்தார் என்றார். இதுவும் முரணான தகவலாக இருந்தது.*👎

👨‍🎤📃 *பிரபாகரனின் மரண அறிக்கையை இலங்கை அரசு இந்தியாவுக்கு அளிக்கவில்லை.🙅🏻🙅🏻‍♂ இந்திய உளவு அதிகாரிகள் இலங்கையின் வடக்குப் பகுதியில் பிரபாகரன் பற்றிய உளவு வேலையில் ஈடுபவதாகவும் தகவல் வந்த வண்ணம் இருக்கின்றது.*🤔🔪

👨‍🎤📃 *மரண அறிக்கை வழங்காமல் இருப்பது பிரபாகரன் பற்றிய மர்மத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.*🔪

👨‍🎤 👨🏻 *பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் மனோகரன் மிக நீண்ட காலமாக டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார்.*👍

👨‍🎤👱 *அவர் தனது தம்பி பிரபாகரன் பற்றிய தகவலை காலம் வரும்போது தெரிவிப்பதாக சொல்லியுள்ளார்.👍 இப்படியாக மர்மம் நீடித்து வருகிறது.*🤔🔪

👨‍🎤👍 *_பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்பது அவருடைய ஆதரவாளர்கள் மற்றம் அவரை நேசிக்கும் பலரது கருத்துகள் மற்றும் விடுதலை புலிகள் இயக்கம் ஆணித்தனமாக கூறி வருகிறது அவர் உயிருடன் இருக்கார் என்று! இதற்க்கு ஆதாரமாக மேலே கூறப்பட்டுள்ள ஆதாரங்கள்!!_*👍🔪👆

👨‍🎤🔪 *பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தற்பொழுது இலங்கை அரசால் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பார்த்துக்கொண்டும் இருக்க மாட்டார் என்பது உண்மை.*👨‍🎤🙅🏻‍♂🙅🏻

👨‍🎤🐯💪 *கேப்டன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழ் மக்கள் மனதில்.*💝

😡 *உயிருடன் இல்லை சிங்கள அரசியல்வாதிகள் மனதில்.* *இதனால இவர்களுக்கு (சிங்கள அரசியல்வாதிகளுக்கு) பெருமூச்சு*😏

👨‍🎤 🐯 *தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும், சர்வதேசமும் பிரபாகரன் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தும் விதமாக மரணச் சான்றிதழை கோரியுள்ளனர்.*🔪

👨‍🎤🏛 *இதனை இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடந்த அரசாங்கமும் சரி, சமகால அரசாங்கமும் சரி அதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.*👎🙅🏻

👨‍🎤🐯 *பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக கூறும் இலங்கை அரசாங்கம் அதற்கான மரணச் சான்றிதழ் வழங்குவதில் காலத்தை கடத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றது.*🤔⁉🔪

👨‍🎤🐯 *_பிரபாகரன் உயிருடன் இருக்காரோ இல்லையோ ஆனால் அந்த ஒரு புலியால் இன்று உலகம் முழுவதிலும் பல புலிகள் உருவாகி உள்ளது._*👍

👊 *_எட்டப்பன் கருணா😡_*

🐯🔪 *புலிகள் இயக்கத்தில் இரண்டே இரண்டு நபர்கள் மட்டுமே கையில் துப்பாக்கியுடன் பிரபாகரனை சந்திக்க முடியும். முதலாமவர் 👉பொட்டு அம்மான். அடுத்தவர் 👉கருணா. தொடக்கத்தில் பிரபாகரனின் ஒட்டுமொத்த முக்கிய தளபதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கருணா, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தார்.*👊

🐯👊 *அதற்காக, “மட்டகளப்பு - அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய தென் தமிழீழத்தைச் சேர்ந்த புலிகள் இயக்கத் தோழர்கள் மதிக்கப்படவில்லை.🙅🏻‍♂🙅🏻 அவர்களின் உயிர் தியாகம் உதாசீனப்படுத்தப்படுகிறது. தென் தமிழீழ மக்களுக்காக போரிட்டு இவர்களின் மடியில் மடிவதையே எனது இறுதி லட்சியமாக கருதுகிறேன். இதில் எவரும் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை” என்று பிரபாகரனுக்கே கடிதம் எழுதினார்.*📃✍

👊✍ *இது தவிர, நிதி ஆளுமை சர்ச்சைகள், தனிப்பட்ட சொகுசு வாழ்க்கை என்றெல்லாம்கூட கருணாவுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் உண்டு. இப்படியான புகார்கள் வந்ததுமே கருணாவுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டார் பிரபாகரன்.*👍👨‍🎤

👨‍🎤🐯 *அதேசமயம், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.*

👨‍🎤🐯 *ஆனால், "தென் தமிழீழத்தின் ஏகோபித்த தளபதியாக வருவதற்காக இலங்கை அரசாங் கத்துடன் கைகோர்த்திருக்கிறார் கருணா" என்ற தகவல் வெளியானபோது 😰😳அதிர்ந்து போனார் பிரபாகரன்.* 👨‍🎤 *இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணாவுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், அதை நிராகரித்த கருணா, தென் தமிழீழ கோஷத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக தலைமைக்கு கடிதம் எழுதுகிறார்.*✍📃

🐯✍📃 *கடிதத்தின் இறுதியில் "பிரபாகரனின் தலைமையில் செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். அவரை நாங்கள் கடவுள் என பாவிக்கிறோம்" என்றெல்லாம் இருந்த வார்த்தைகள் பிரபாகரனை சாந்தப்படுத்தவில்லை.*
*06-03-2004-ல் கருணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களின் நாட்கள் எண்ணப்படும் என்பதை நன்கு உணர்ந்திருந்தவர் தனது நிஜமுகத்தை காட்ட ஆரம்பித்தார்.*😰

💺 *ரணில் விக்கிரமசிங்கே கட்சியின் எம்.பி-யாக இருந்த இஸ்புல், கருணாவின் உறவுக்கார பெண் ஒருவரை மணம் முடித்திருக்கிறார். அந்த உறவுப் பாலத்தை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கேயுடனும் அதைத் தொடர்ந்து சந்திரிகா, ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களிடமும் விசுவாசம் காட்டி நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.*

🐯🛎 *புலிகள் கூடாரத்தின் உள் முகத்துவாரம் வரையிலான விஷயங்களை அறிந்த நபர் என்பதால் கருணாவை கைக்குள் வைத்துக் கொண்டு புலிகள் குறித்த ரகசியங்களையும் அவர்களின் அசைவுகளையும் தந்திரமாக கிரகித்துக்கொண்டார் ராஜபக்சே. இதற்கு அவர் அளித்த சன்மானம், தனது கட்சியின் உபதலைவர் பதவி, அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி. புலிகள் இயக்கத்தை அடியோடு வீழ்த்திய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பின்னணியில் ராஜபக்சேவின் ராஜதந்திரமும் கருணாவின் துரோகமும் போட்டிபோட்டு பங்காற்றியது.*😡👊

👨‍🎤😡 *அதேசமயம், முள்ளிவாய்க்கால் முடிவு வரும்வரை தனக்கு என்ன முடிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் கொழும்பிலேயே முடங்கிக் கிடந்தார் கருணா. “ஈழப் போரில் ஒருவேளை நாங்கள் தோல்வியுற்றால், அதற்கு காரணம் துரோகமாக இருக்கும் அல்லது இயற்கையாக இருக்கும்” என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருந்தார் பிரபாகரன். அவர் சொன்னதுதான் நடந்தது. துரோகத்தை துருப்பாக வைத்து புலிகளை வீழ்த்திய இலங்கை அரசு, போதும் கருணாவின் சேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால்தான், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.*

👨‍🎤👎 *கைதுக்கான காரணம் ஒன்று சொல்லப்பட்டாலும் அவரை ஒரேயடியாய் முடக்கிப் போடுவதற்கான வேறு சில ஆதாரங்களையும் இலங்கை அரசு துருவிக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், வரலாறு திரும்பி இருக்கிறது. ஈழத்தில் மீண்டும் துரோகம் வென்றிருக்கிறது.*😡👊

🐯 *_ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்._* 🐯

👨‍🎤🐯 *_'விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது செயல்படுத்தப்பட்டு வந்த தடை நீக்கப்படும். இது வரவேற்கத்தக்கது._*👍

👨‍🎤🐯 *_ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருப்பது கடந்த 3 ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும். கடந்த 2005-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கியது._*👍

👨‍🎤🐯 *_அதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல🙅🏻... அது விடுதலைக்காக போராடும் இயக்கம்👍 என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது._*💪👍

👨‍🎤💪👍 *_வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். உரிமையும், அதிகாரமும் கோரி இலங்கைத் தமிழர் நடத்திவரும் அறவழிப் போராட்டத்திற்கு உலகின் ஆதரவை திரட்ட இது உதவும். விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல என்று உலகின் பல்வேறு நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது._*👍

🌍  *இது உலகத் தமிழருக்கு கிடைத்த வெற்றியாகும்.* 💪🏻👍

🌍👨‍🎤🐯 _இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்திருந்தன. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள 26 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும். தொடர்ந்து கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடை உடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தாயகத்தை அமைப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவியாக இருக்கும்._💪👍

👨‍🎤🐯🌍 _உலகில் எந்த நாடும் விடுதலைப் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்த இயக்கத்தை தடை செய்யவில்லை._👍 _மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு திட்டமிட்டு செய்த பரப்புரையால் தான் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அதை பின்பற்றி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளும் தடைகளை விதித்தன._

👨‍🎤🐯🌍 _விடுதலைப் புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான்.விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் இந்தியாவுக்கும் பொருந்தும் என்கிறார்கள் பிரபாகரனின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்._
👨‍🎤💪

👨‍🎤🐯 *முதன் முதலில் விடுதலை புலிகள் மீது தடை விதித்து இந்திய அரசு அன்றே தமிழர்களுக்கு எதிரானது என்பது உணர்த்தி உள்ளது.*👍 *அன்றிலிருந்து இன்றுவரை இந்தி(ய) அரசு தமிழர்களுக்கும் தமிழையும் அளிக்கும் நோக்கத்தோடு தான் செயலப்படுகிறது.*😡👊

👊  *இனியும் தடை தொடற வேண்டாம்.....*🙅🏻
💪 *எங்க கோரிக்கையாக இருப்பது விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்பது தான்.*👍🔪🌍
_👆 🔴 *(இப்படி நாம கேட்டா) தேச துரோக வழக்கு,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லாம் போட்டு உள்ள தள்ளிடுவாங்களோ?)*_

👨‍🎤🐯 💪 *பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும், தன்னை சுற்றி கடுமையான ஒழுக்கத்தையே கடைபிடித்து வந்தவர்  .*👍

👨‍🎤🐯💪 *தற்கொலை படை தாக்குதலை உருவாக்கியவர் அவர்தான். அல்-கொய்தா தற்கொலைபடை குண்டுதாரிக்கு முன்பே, பிரபாகரன் 200 தற்கொலைபடை குண்டுதாரிகளை வைத்திருந்தார். அதில் பெரும்பாலான தற்கொலைபடை குண்டுதாரிகள் பெண்களாகவே👩‍🎤 இருந்து வந்துள்ளனர். விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண் விடுதலை புலிகளை தவறாக பயன்படுத்துவது குறித்து எந்த சான்றும் கிடையாது.🙅🏻👍 அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக விளங்கியவர்.*👨‍🎤💪👍

🏛👨‍🎤🐯 *இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் அவரது குடும்பத்தினர் மற்றும் விடுதலை புலிகளின் 10 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் ஒரு படத்தில் கூட பிரபாகரன் மது கோப்பையுடன் இருக்கும் காட்சியை காண முடியவில்லை.🙅🏻💪👍 அவர் அவ்வளவு ஒழுக்கமான தலைவராக இருந்து வந்துள்ளார்.*💪👍

👨‍🎤🐯💪 *பிரபாகரன் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் ஒரு உறுதியான முடிவை எடுக்க கூடியவர்.👍 கடைசி நிமிட போர் வரையிலும் பிரபாகரனின் தலைமைத்துவம் மிகத்திறமை வாய்ந்ததாகவே அமைந்திருந்தது.💪👍 இறுதி போரில் கடைசி நிமிடங்கள் வரை விடுதலை புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டதும் தெரியவந்தது் .*👍💪

👨‍🎤🐯🔴 *கடைசியாக சொல்ல விரும்புவது!!*👇

👨‍🎤🐯🔴 *விடுகதையாகவே⁉  இருக்கிறது வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சர்ச்சை பிரபாகரன் இல்லாததால் விடுதலை இல்லாமல் இருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.*😔

💪 _*மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம் ..*_ 👍

🔴👨‍🎤🐯💪 _*நாம் வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்... "தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய, தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய, "சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாதவர் அண்ணன் பிரபாகரன் மட்டுமே*_👨‍🎤👍💪

👨‍🎤🐯💪 _*விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாக்கி...*_
👨‍🎤🐯💪 _*தமிழர்களது உரிமைக்காகவும் விடிவிற்காகவும் உயிர்த்தியாகம் செய்து..*_

👨‍🎤🐯💪 *_தமிழீழத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஒரே காரணம்தான் அந்த மக்களை_*
      👨‍🎤🐯💪 _*ஒருங்கிணைத்து எத்தனை எத்தனையோ தடைகளையும், அடக்குமுறைகளையும்*,_
      👨‍🎤🐯💪 _*எதிர்ப்புகளையும் மீறிப் போராட வைத்தது. வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி*_
      👨‍🎤🐯💪 _*ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அவர்களது போராட்ட உணர்வை சற்றும் குறைக்கவோ அகற்றவோ*_
*_இல்லை. தோல்விகள் தாற்காலிகமானவை..!! _வெற்றி மட்டுமே நிரந்தரம் என்பதும்...!!_* 💪💪👍
     👨‍🎤🐯💪 _*தமிழீழம் மட்டுமே தங்களது இறுதி லட்சியம்...!!என்பதும் விடுதலைப் புலிகளுக்கு,*_ 
      _*மட்டுமல்ல 👨‍🎤🐯💪ஒவ்வொரு ஈழத் தமிழர்களின் உதிரத்திலும் இரண்டறக் கலந்துவிட்ட*_
*_உணர்வாக இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் சத்தியம்!_*💪👍💪👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

🏆 *கமலா சுப்பிரமணியம் (KS)*👏

🏆 *பிராகாரன்*👏

🏆 *மனோஜ்*👏

*கலந்துரையாடல்~2®©*

🏆 *⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*👍கருத்து🤔*

👨‍🎨🐯💪 *வரலாற்றில் மிகபழமையும்,மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை பெற்றவர்.*

👨‍🎨🐯💪 *வீரமே ஆரமாகவும்,தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல்திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.*

💪 *கிழக்கே சீனா முதல்,மேற்கே உரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்கவிட்டனர்.*

👨‍🎨💪 *அந்த வீரமிக்க வழியிலேயே வந்த நம் மக்கள்,நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்கலாக நெளிந்து கொண்டிருந்த போது புலியாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமைக்குரியவர் 👨‍🎤 _அண்ணன் கேப்டன் பிரபாகரன்_💪ஆவார்.*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
 
*செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்*
*செயற்கரிய செய்கலா தார்.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     
*செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💪 *தெரிந்துகொள்ளவும்*💪
*பிறப்போடு பிறந்தது மரணம்.*

💪 *புரிந்துகொள்ளவும்*💪

*குனியாதே சுமப்பாய்.. நிமிர்ந்தால் உயர்வாய்...!!*

💪 *அறிந்துகொள்ளவும்*💪

*தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை [வீரதமிழன் கேப்டன் பிராபாகரன்].....💪👍*

💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥

💪 *முடிவுரை தொகுப்பாளர்கள்*💪

👮🏻 _*மணிவிஜய்*_👮🏻
*8428073724*

👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

👮🏻 _*உதயா*_👮🏻
*9500764969*

💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...