Friday, 12 January 2018

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டியவைகளும்?* *பின்லாந்து கல்வி முறையில் முதலிடம் இருப்பது பற்றியும்?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :25.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
*உலகம் ஒரு விசித்தினமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.*

💐 *~ஜார்ஜ்*💐

💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆

😇 *நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட,*

*நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்.*

📣 *தலைப்பு*📣

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டியவைகளும்?*

*பின்லாந்து கல்வி முறையில் முதலிடம் இருப்பது பற்றியும்?

🎒📝✍🖌📚📖📓📔🖥💻🎓
                  *பாகம்*➡1⃣

💝 *கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்🙏*

💖 📚 *வாழ்க்கையில் வளர்ச்சி அடைய கல்வி முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.👍 எனவே, தங்களது பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை போதிக்க பெற்றோர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.*👨‍👩‍👧‍👦

💖 🤔 *நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் கல்விமுறையை விட, அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலான கல்வி முறை அவசியமாகும்.*👍

📚 *கல்வி முறையின் வரலாறு பற்றி கொஞ்சம் பாப்போம்...*🌀👇

🌍 ✍ *17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டுகள் வரை, ஐரோப்பிய பேரரசுகள் உலகின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்தன. குறிப்பாக, பிரிட்டிஷார் அதிக பரப்பளவில் தனது பேரரசை நிறுவியதன் விளைவாக, இன்று உலகில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படும்*👍

🌍📋 *கணினி, தொலைபேசி, வான்வழி போக்குவரத்து இல்லாத அன்றைய காலத்தில், பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க காகிதம் சார்ந்த எழுத்து பணிகளுக்கும், சிறந்த கணித வேலைகளுக்கும் ஏற்ப திறன்படைத்த மனித வளம் தேவைப்பட்டது. அதிக தகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் திறன் படைத்த மூளை அந்த மனித வளத்திற்கு அத்தியாவசியம்.*💖👍

✍📋 *தொழில்நுட்பம் இல்லாதபோது, மிகச் சிறந்த நிர்வாகத்திற்கு, தகவல்களை சரியாக உள்வாங்கி அவற்றை தேவையான போது மிகத் தெளிவாகவும், விரைவாகவும் வெளிக்கொணரும் திறனும் அத்தகைய சாம்ராஜ்யத்திற்கு இன்றியமையாதது. அதேசமயம், விதிக்கப்படும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து, ஒரே மாதிரியான பணியை எதிர் கேள்வி கேட்காமல் திரும்ப திரும்ப செய்யும் பணியாளார்களாக இருக்க வேண்டும்.*✍

✍📋 *அத்தகைய பணியாளர்களை அதிகளவில், அதேசமயம் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில், உருவாக்குவதற்காக அன்றைய கல்வி முறை உரிய அலகுகளின் அடிப்படையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டது.*👍

🤙 *ஏன் கல்விமுறையில் மாற்றம் வேண்டும்...*❓❓❓

🗣 *நம்மில் பலரும் சொல்லும் ஒரு கருத்து, கல்வி முறையில் மாற்றம் தேவை. எதற்கு தேவை?❓ எப்படி மாற்றம் தேவை? ❓புது திட்டம் எப்படி இருக்கவேண்டும்?❓ மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும்?❓ இதைப் பற்றி என் கருத்துக்கள் சில.. என்னுடைய முன் கட்டுரையான "குழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா?"❓ என்னும் தலைப்பின் தீர்வாகவோ இல்லை அதன் தொடர்ச்சியாகவோ இந்த கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம்.*✍👍👍

⏳ *கடந்த 25 வருடங்களில் நம் கல்வித்துறை📚 ஒன்றும் பெரிய மாற்றத்தை பார்க்கவில்லை. 🙅🏻‍♂25 வருடங்களுக்கு முன் எப்படி நாம் கல்வி கற்றுக் கொண்டிருந்தோமோ, அப்படி தான் இன்றும் நடக்கிறது. 😰😏பாடங்கள் தான் ஏறிக்கொண்டே இருகின்றனவே தவிர, படிக்கும் முறையோ மாறவில்லை. 👊மேலும், பாடங்கள் அதிகமானது போல், கல்வி சொல்லிகொடுக்கும் நேரமோ அதிகமாகவில்லை.😏👊 அதே 8 வகுப்புகள் (Periods) தான். 25 வருடங்களுக்கு முன் இந்த 8 வகுப்புகளில் 5 பாடங்கள் தான் படித்தோம். ஆனால், அதே 8 வகுப்புகளில் இப்பொழுது 12 அல்லது 14 பாடங்கள் படிக்க வேண்டி உள்ளது. ஏன்?❓ உலகம் வேகமாக வளர வளர அதை குழந்தைகளுக்கு புகுத்த வேண்டும் என்ற என்னமா?❓ சரி, அப்போ இன்னும் 10 வருடம் போனால், இதே 8 வகுப்புகளில், 25 பாடங்கள் நடத்துவீர்களா?❓ யோசிக்கும்போதே பயமாக இல்லை?*❓😰😨🤕

✍🌀 *சற்று பின்னோக்கி சென்றால், நமக்கு நன்றாக புரியும். பள்ளியில் நமக்கு எவ்வளவு நேரம் இருந்தது,🤔 ஆசிரியருக்கு எவ்வளவு நேரம் இருந்தது என்று.🤔 ஒவ்வொரு ஆசிரியருக்கும், தன் மாணவனை செதுக்க நிறைய நேரம் கிடைத்தது.🤷🏻‍♂ ஆனால் இன்றோ, மாணவன் படித்தானா இல்லை😏 தூங்குகிறானா😏 என்று பார்க்க கூட நேரமில்லை.😣 என்னென்றால், நான் சொன்னது போல, அவர்களுக்கும், நிறைய பாடங்களை அதே காலகட்டத்தில் சொல்லி கொடுக்க வேண்டிய சுமை. அவர் என்ன செய்ய முடியும்?*❓🤷🏻‍♂

⁉👦🏻👧🏻 *எத்தனை குழந்தைகள், ஒரு வினாவை சிறிது மாற்றி கொடுத்தால் பதில் சொல்ல சிரமப்படுகிறது?❓ ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு. ஒரு சிறு குழந்தையிடம் 2+3 என்ன என்று கேட்டால், விரலை விட்டோ, அல்லது மனதிலோ கூட்டி 5 என சொல்லிவிடும். உடனே அடுத்த நிமிடமே, அதே குழந்தையிடம், 3+2 என்னவென்று கேட்டுப் பாருங்கள். திருப்பிக்கூட்டும். இது தான் நிலைமை. இது குழந்தையிடம் மட்டும் இல்லை. பெரிய மாணவர்களிடமும் தான். கொஞ்சம் கேள்வியை மாற்றிக் கேட்டால், "இது எங்களுக்கு சொல்லி தரவே இல்லை" என்று சொல்லுவார்கள். காரணம், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், திறமையை வளர்பதில்லை.😏 வளர்ப்பதற்கான முறையும் சிறிது சிறிதாக மறைந்துவிட்டது. இதுவெல்லாம் திறமையின் கோளாறுகள் தான்.*😔

👉 *ஒருவருக்கு கார் ஒட்டி கற்று கொடுக்கிறோம் என்றால், பயிற்சி முடிந்தவுடன் அவர் எந்த காரை கொடுத்தாலும் ஓட்ட வேண்டும். அப்பொழுதான் உங்கள் பயிற்சி நன்றாக இருந்தது என்று சொல்ல முடியும். அதுவே பயிற்சி முடிந்தவுடன், ஒரு புதிய காரை கொடுத்தால்..."எனக்கு இந்த காரை எல்லாம் ஓட்ட தெரியாது, நான் மாருதி 800 என்றால் ஓட்டிவிடுவேன்" என்று சொன்னால், அது பயிற்சியா? ⁉அது தான் நம் கல்வியில் நடக்கிறது.🤷🏻‍♂ ஒப்புக்கொள்ள மனம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இது தான் உண்மை.👍 இதை நான் சொல்லவில்லை. ஆராய்ச்சிகள் சொல்கின்றன.*👍

💁🏻‍♂ *சரி இதை எப்படி சரி செய்ய முடியும்?🤙 எப்படி இவ்வளவு வேகமாக வளரும் இந்த யுகத்தில் நாம் நம் குழந்தைகளை வளர்ப்பது?🤙 சரி, எப்படி தான் பாட திட்டத்தை மாற்றுவது?🤙 ஒருவனுக்கு "மீன் எப்படி பிடிக்க வேண்டும் என்று தான் கற்று கொடுக்க வேண்டுமே" தவிர "மீன் பிடித்து கொடுக்கக கூடாது".🙅🏻‍♂ நாம் அதை தான் செய்து கொண்டு இருக்கிறோம். 🤕சின்ன வயதில், சின்ன மீனை பிடித்து தருகிறோம். பெரிய வயதில், பெரிய மீனை பிடித்து தருகிறோம். ஏன்?❓ கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு மீன் பிடிக்கும் வித்தைகளை கற்று கொடுங்கள். திமிங்கலமோ, சுறாவோ பிடிப்பது அவன் திறமை.*👍🤷🏻‍♂

👉 *அவன் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கற்று கொடுங்கள்.👍 நம் இந்தியர்களின் பாரம்பரிய கல்விமுறையான "குருகுலம்" கல்வி முறையை சற்று உற்று நோக்கி பாருங்கள். அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு.👍 அதற்காக, நாம் குருகுலத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அம்முறை ஏன் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆராயுங்கள்.*👍🤷🏻‍♂

👉 *எதற்கும் விடை உண்டு.👍 எதையும் நம்மால் மாற்ற முடியும்.*💪

👉📚 *இந்த கல்வி முறை பணம் போட்டு பணம் அள்ளும் நமது வியாபார யுக்தி.😡 💶💷பணத்தால் ஒரு மருத்துவரை👨🏻‍⚕ வாங்கலாம்; ஆனால் ஆரோகியத்தை வாங்க முடியாது.🙅🏻‍♂😔 💷💶பணத்தால் இந்த  கல்வியை நாம் வாங்கலாம் ஆனால் புரிதலையும் ஞானத்தையும் ஒருபோதும் வாங்க முடியாது.*🙅🏻‍♂🙅🏻‍♂😔

📚 *கல்வி முன்னேற்றம் பற்றி நம்ம அப்துல் கலாம் அவர்கள் .. ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கூறிய கருத்து...*💖👇

🌍💖 *இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றியமைப்பதற்கு நமது கல்வி முறையும்ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கேற்றவாறு கல்விக் கொள்கையை நாம் மாற்றியமைக்கவேண்டும்.*👍👍

🌍💖 *சமூக வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது.👍 நல்ல ஆசிரியர்களால்தான் நல்லமனங்களை மாணவர்களிடம் உருவாக்க முடியும்.👍 அவர்களுக்குள் தன்னம்பிக்யைையும், மனஉறுதியையும் ஏற்படுத்த முடியும். அப்போதுதான் மாணவர்கள் காணும் கனவு நனவாக முடியும்.*👍👍

👧🏻👦🏻📚 *மாணவர்களுக்குத் தேவையான கல்வியைப் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு நல்ல வசதிகள்செய்து தரப்பட வேண்டும்.👍 வாழ்க்கைக்கு உதவும் வகையிலான கல்வி முறை இருந்தால்தான்ஆசிரியர்களால், நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.*👍

📚 👨🏻‍🏫 *ஆசிரியர்கள் தங்களது தொழிலை காதலிக்க வேண்டும்.👍 அப்போதுதான் ஈடுபாட்டுடன்போதனையில் ஈடுபட முடியும்.*👍

💝 🎖 *இங்கு விருது பெற்றுள்ள ஆசிரியர்கள், நாட்டிலுள்ள 20 கோடி மாணவர்களின் பிரதிநிதிகளாகஅமர்ந்துள்ளார்கள்.👍 உங்களது திறமைகள் உங்களுடன் நின்று விடக் கூடாது. அது விரவிப் பரவவேண்டும்,

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :25.10.2017* 🌹
__________________________________
📣 *தலைப்பு*📣

*கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டியவைகளும்?*

*பின்லாந்து கல்வி முறையில் முதலிடம் இருப்பது பற்றியும்?*

🎒📝✍🖌📚📖📓📔🖥💻🎓
                  *பாகம்*➡2⃣

*😳பின்லாந்து தரமான கல்வியில் 🎓முதலிடம்!...*😱

🎓👨🏻‍🎓👩🏻‍🎓 *‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும்.*🔍🗂

🌍 🎓 *மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது...*👍

*🤔அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?*📚❓

🎓 🎒 *👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...*😊

😡 *ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்..,*
*இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி..,*
*மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை...*🔪🙅🏻‍♂

*😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...*🙅🏻‍♂🔪

🎓📚🎒 *👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...*🎒👍

*👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...*👊

🎒 📚 *👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...*😇😍

🎒📚 *👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...*😍😇🎓

🎒📚 *👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...*😇😍

🎒📚🎓 *👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...*🙅🏻‍♂
*பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...*👊🙅🏻‍♂

🎒📚 *தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...*😇

🎒📚 *👌கற்றலில் போட்டி கிடையாது🙅🏻‍♂ என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...*🙅🏻‍♂😇

😍 *💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...*🙅🏻‍♂😍

😍 *👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...*🙅🏻‍♂😍

😍 *👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...*📚😍

😍 *👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு👨🏻‍⚕ மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...*😇

😇🏦 *👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...*🙅🏻‍♂😇

😍 *👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது.🙅🏻‍♂ அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...*😇😍👍

😍😇📚 *👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...*👍💖
*‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...*🙅🏻‍♂😜

😍📚 *👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...*📚😇👍

😍 *👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...*😇👍

🎓😍 *👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்...👍 ‘டியூஷன்’என்ற அருவருப்பான😖 கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...*🙅🏻‍♂😊

😍😇🎓 *👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...*🎓😇👍

🎓📚 *😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...*⁉

💝 *✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...*👍

🌍 *😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் 👦🏻👧🏻பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...*😇👍

💝😇 *👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...*😇👍

📚🎓 *👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...*👍😇

🌍📚🎓 *👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...*👍

🌍📚🎓 *👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...*👍

🎓📚💝 *ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...*🙅🏻‍♂😊

🌍🎓📚 *அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது...*🙅🏻‍♂ *ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...*🙅🏻‍♂
*எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...*👍😇

*😏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் 🤜தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...*👏👏

*👏மதிக்கத்தக்க மனநிலை.*🙏

💝🎓📚 *👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...*🎓📚👍

🎓📚 *👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...*👍

🎓📚 *👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...*👍

🎓📚 *அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..*🙅🏻‍♂
😰
👨🏻‍🎓👩🏻‍🎓 *👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...*👍

👨🏻‍🎓👩🏻‍🎓 *👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...*☹👍

*👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...*☹👍

*👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...*🎓👍

👨🏻‍🎓👩🏻‍🎓 *👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...*🎯
*குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...*🎯
*நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...*🎯
*தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி,🎯 முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று…🎯 என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...*
👍

👨🏻‍🎓👩🏻‍🎓 *👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...*🎯👍👌

👏👏👏👏👏👏👏👏👏👏👏

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :25.10.2017* 🌹
__________________________________

📣 *தலைப்பு*📣
*கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டியவைகளும்?*

*பின்லாந்து கல்வி முறையில் முதலிடம் இருப்பது பற்றியும்?*

🎒📝✍🖌📚📖📓📔🖥💻🎓
                  *பாகம்*➡3⃣

🗣👉 *இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...*🤔

🎓🤝 *பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...*👍

👦🏻👧🏻 *குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...*👍

👦🏻👧🏻 *முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...*👍

👦🏻👧🏻 *ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….*🙅🏻‍♂🔪

⚠ *1⃣ பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும்,கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.*😞

⚠ *2⃣ எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. 🔪மூடன், அறிவாளியாகலாம்...👍 பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... 👍ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.*🔪🙅🏻‍♂

⚠ *3⃣ தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.*👍😇

⚠ *4⃣ லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.*👍🤗

⚠ *5⃣ ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.*👍🤗

⚠ *6⃣ 🗣குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள்🙅🏻‍♂ நிறைகளை பற்றிப் பேசுங்கள்.*👍

⚠ *7⃣ பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், 🙅🏻‍♂அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள்.👍 உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.*👍

⚠ *8⃣ வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள்,👍 ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.*👍

⚠ *9⃣ எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.*👍

⚠ *1⃣0⃣ பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள்....😠 வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல🙅🏻‍♂ மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.*👍

⚠ *1⃣1⃣ நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.*👍

⚠ *1⃣2⃣ மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.*👍

⚠ *1⃣3⃣ உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.*👍

⚠ *1⃣4⃣ வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.*👍

⚠ *1⃣5⃣ சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...*👍👍

⚠ *முதலில் நாம் மாற வேண்டும்.*⚠

💝 👨🏻‍🎓👩🏻‍🎓 *இந்த முடிவுரையானது ஒவ்வொரு ஏழை குழந்தைக்கும் இலவசமான ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கொடுக்க வேண்டியது ஒரு அரசின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்துவதே ஆகும்....*👍🔪

💝 👨🏻‍🎓👩🏻‍🎓 *அதேசமயம் தனியார் துறை வசம் சென்ற கல்வியில் நடைபெறும் முறைகேடுகளையும்,அரசின் கல்வி தொடர்பான சட்டங்களை தங்களது வியபார யுக்தியாக மாற்றி ஒரு போலியான தரமான கல்வி தருவதாக பெற்றோரை ஏமாற்றி வருகின்ற தனியார் பள்ளிகளின் முகத்திரையை கிழிப்பதும்🔪 ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்பதை கண்டிப்பாக இந்த முடிவுரை வலியுறுத்தும்....*🎓🤝🙏

🤝  *ஆதரவு தாருங்கள்....!!!!சமுதாய பணியாக மாறட்டும்....!!!*👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 சிந்தனைவாதிகள்*👑

*🥇@⁨தமிழன் navaseK⁩*

*🥈@⁨kasi6652⁩, @⁨🔥ARAVINTHSAMY🔥*⁩

*🥉@⁨SP.Vignesh⁩, @⁨DEVENDRANhp⁩*

*கலந்துரையாடல் ~2*

*🥇@⁨😆😝Rishi😂🤣⁩*

*🥈@⁨sukumar ❤Zhorba⁩, @⁨☂ Kudaykul Malay ☂⁩*

*🥉@⁨Deepa Senthil 🎻  🎉 🎊🌹⁩, @⁨🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼⁩*

*மற்றும்💐*

*🆕இன்று புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை...👌🏼👌🏼✅*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

📚 *கல்வி கற்கும் திறமை என்பது மாணவர்களுக்கு மாணவர்கள் வேறுபடும்...👍என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு அவர்களின் மீது தங்கள் எண்ணங்களை திணித்து விடாமல்🙅🏻‍♂ அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டும்.*🔪

📚 *கல்வி என்பது  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று இல்லாமல் கற்கும் கல்வி வாழ்க்கை கல்வியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே விருப்பம்..*👍🔪

*📚இலவச கல்வி என்ற திட்டம் எப்போது நம் நாட்டிற்கு வருகிறதோ அன்றைக்கு தான், அனைத்திற்கும் முழுமையான வெற்றி☹.*

*📚ஒவ்வொருவருக்கும் இங்கு, ஒவ்வொரு கல்வி முறை இருப்பதாலேயே, இங்கு பணக்காரர்கள், ஏழைகள் என தனித்துவமாக காண முடிகிறது🤦🏼‍♂.*

*📚இந்த முறைகளை முற்றிலுமாக மாற்றி ஒரே நாடு, ஒரே கல்வி முறை மற்றும் திறமைகேற்ப மேல்படிப்புகளை தொடர வைக்க வேண்டும்.🤷🏼‍♂*

*📚இதெல்லாம் ஒரு நாள் நிச்சயமாக சாத்தியமாகும். நம் அப்துல்கலாம் ஐயா சொன்னது போல கனவு காண்போம்🤔🤝*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்*
*கெழுமையும் ஏமாப் புடைத்து*              

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*ஒரு தலைமுறையில் பெறும் கல்விஅறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*🔘கற்கள் கடவுளாவது சிற்பியால்.*

*🍒விதைகள் விருட்சமாவது விவசாயியால்.*

*👱🏻மாணவர்கள் பண்பாளர்களாவது ஆசிரியரால்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...