Friday, 25 August 2017

மழைநீரினை சேகரிக்கும் முறைகளும், மழைநீரை சேமிப்பதன் அவசியம் பற்றிய ஓர் அலசல்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧
  🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :  24.08.2017.* 🌹                  🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷   
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_"இயற்கையான மரங்களே நமது உற்றதோழனாக, களைப்படைந்த பயணிக்குத் தனதுநிழலையும், பசித்தோருக்குப் பழத்தையும் கொடுத்து உதவுகிறது"._*
🌱 *Dr.A.P.J.அப்துலகலாம்     .*💐🌳

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*தண்ணீரின் சிக்கனம்,*

*_விலை கொடுத்து வாங்கும் போது மட்டும், தானாகவே வந்துவிடுகிறது._*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
========= ====== ====
*மழைநீரினை சேகரிக்கும் முறைகளும், மழைநீரை சேமிப்பதன் அவசியம் பற்றிய ஓர் அலசல்:*
💦💦💦💦💦💦💦💦💦💦
           *பாகம்*➖ 1⃣

*_மழையில்லாது போகுமாயின்  விவசாயம் செய்யமுடியாது,மரங்களும் இருக்காது,உயிரினமும் இருக்காது  மனிதன் உட்பட._*

🤙 *_மழை 🌧 எவ்வாறு உருவாகிறது_*❓

🌞வெப்பத்தின் காரணமாக 🌊கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் 💧நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி 💨காற்றில் கலந்து 🌪மேல் சென்று பின்பு மேகங்களை☁ உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர்🚰 🌧மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி⚡ மழையாக பொழிகிறது🌧.
இந்த நிகழ்வை ♻ *நீர் சுழற்சி*♻ என்று குறிப்பிடுவர்.

💦 *மழைநீரின் சிறப்பு:*💦

_அமிர்தம் என்பது ஒருவரைச் சாகாவரம் பெறச் செய்யவும், இறந்தவரை மீண்டும் உயிரூட்டவும் பயன்படும் அற்புத அருமருந்து. ஆனால் இவ்வமிர்தம் அனைவருக்கும் கிடைக்காது, ஆயினும் இவ்வுலகில் உள்ள உயிர்கள் இறக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருப்பது மழையாகும், ஆதலால் வானத்தில் இருந்து பொழியும் இம்மழையை அமிர்தம் என்று அழைக்கலாம். வள்ளுவனும், இதை_

🌧 *_"வான்நின்று உலகம் வழங்கி வருததால் தானமிர்தம் என்றுணரற் பாற்று"._*

🌧 _மழை இல்லையெனில் இவ்வுலகில் தானமும் தவமும் நிலைக்காது , பெரிய கடலும் வற்றிப்போகும், வானத்தில் இருந்து ஒரு துளியும் விழவில்லையெனில் பூமியில் ஒரு சிறிய புல்லும் தலை தூக்காது என்று மழையின் அவசியத்தை நமக்கு ஆழமாகவும், அழகாகவும் எடுத்துக் கூறுகிறார்._

🌧 *_"அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசைத் தோற்றம் கமுகூறு தெங்கு கரும்போடு வாழை அமுதூறு காஞ்சிரை ஆங்கது வாமே- திருமந்திரம் (திருமூலர்)."_*

🌧💧⛈💧🌧💧⛈💧🌧💧⛈

*நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு*
*தொழில்நுட்பம் உதவுகிறது.*

*மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?*❓

🌧 *பெய்யும் மழைதண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும். நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்.*

🌧 *ஏன் மழைநீரை சேகரிக்க வேண்டும்?*❓

💧 *இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீரை அறுவடை செய்ய வேண்டும். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர்தான் மிகவும் சுத்தமானது.* *தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமித்தால் நல்லது.*
*மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்*
*நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன்,*
*மழைநீரும் உபயோகப்படும்*
*கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.*

💧 *அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.*
*இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.*
*மழைநீர்* *அறுவடையினால் வெள்ள சேதம் குறையும், மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.*
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧
🌧 *மழைநீர் சேகரிப்பு எந்தபகுதிகளுக்கு ஏற்றது?*❓

💧 *நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு*
*அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும்* *பகுதிகளுக்கு*
*மழைநீர் நில்லாமல்* *ஓடக்கூடிய பகுதிகளுக்கு*
*மலைபிரதேசங்களில் மழைநீர் அறுவடை அவசியம்*
*அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும்* *பகுதிகளுக்கு*
*பிரச்சினைக்குரிய* *நீர்வளம்,உப்புத்தன்மை அதிகமுள்ள* *பகுதிகளில் மழைநீர் அறுவடை தேவை.*
*மக்கள் தொகை/எண்ணிக்கை குறைவாக உள்ள* *பகுதிகளுக்கு*
*மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாக காணப்படும்* *பகுதிகளுக்கு*
*கிடைக்கும் நீர்* *குடிப்பதற்கும்,மற்ற உபயோகங்களுக்கு* *பயன்படுத்த முடியாத வகையில் இருக்கும் பகுதிகளில்,மழைநீர் அறுவடை செய்ய வேண்டும்.*

⛈ *மழைநீர் சேகரிப்பில் கிடைக்கும் நீரை எதற்கு பயன்படுத்தலாம்?*❓

🌧 *குடிப்பதற்கு,* *குளிப்பதற்கு, சமையல் செய்வதற்கு*
*கழிவறைகளில் பயன்படுத்தலாம்.*
*துணி துவைப்பதற்கு,* *பயிர்களுக்கு பாசனம் செய்ய*
*கால்நடைகளுக்கு என எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்யவும்* *சேமிக்கும் மழை நீரை பயன்படுத்தலாம்.*👍
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧
🤙 *எப்படி மழைநீரை சேமிப்பது ?*❓🌧⛈

🌧 _*எந்த மழைநீர் சேகரிப்பு  அமைப்பிலும் மூன்று உறுப்புகளிருக்கும். அவை மழை கொட்டும் பரப்பு, நீரை கொண்டு போகும் அமைப்பு மற்றும் சேமிப்பு அமைப்பு.*_
_*மழைநீர் சேகரிப்பில்  இரண்டு முறைகள் உள்ளன.*_

🌧 *_வீட்டுக்குகூரை அல்லது கட்டிடக்கூரைகளிலிருந்து மழைநீரை சேமிக்கும் முறை_*
_*நிலங்களில் அல்லது*_ *_பெரிய நிலப்பரப்புகளிலிருந்து மழைநீரை சேமித்து, பயிர் பாசனத்திற்கு பயன்படுத்தும் முறை._*

🌧 *_ஆறு முக்கியமான உறுப்பு - மழைநீரை அறுவடை அமைப்பில் உள்ளன._*👇👇👇

🔷 *கொட்டு பரப்பு /பெய்யும் பரப்பு:* பெய்யும் மழையை சேமிக்கும் கூரை._
_கொண்டு_ _போகும்அமைப்பு - கூரை அல்லது_ _நிலப்பரப்பில் பெய்யும்,அறுவடையாகும் நீரை சேமிக்க கொண்டு செல்ல குழாய்கள்,_
_கால்வாய்களை பயன்படுத்துதல்._

🔷 *கூரையை சுத்தம்செய்தல்:* முதலில் பெய்யும் மழை நீரைக் கொண்டு,_ _கூரையை சுத்தம் செய்து,அசுத்தங்களை நீக்கி, வேறு இடத்துக்கு அந்நீரை எடுத்துச் செல்லும்  குழாய்கள்._

🔷 *சேமிப்பு:* அறுவடையாகும் நீரை, கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக,_ _தொட்டியில் சேகரிக்க வேண்டும்._

🔷 *சுத்திகரித்தல்:* அறுவடை செய்த மழைநீரை வடிகட்டி, புறஊதாக்கதிர்களை பயன்படுத்தி,_ _குடிப்பதற்கு உகந்த வகையில் சுத்திகரிக்க வேண்டும்._

🔷 *பகிர்தல்:*
சேகரித்த மழை நீரை விநியோகம் செய்ய ஒரு சிறிய மோட்டார், ஒரு தொட்டி தேவைப்படும்._
_கிராமப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு_
_கிராமங்களில் ஒரு சில இடங்களில்_ _பொதுக்கிணறுகளை அமைக்க வேண்டும்._ _கிணறுகளின் பக்கத்தில் (சுமார் 10-20 அடிக்குள்ளாக) கைப்பம்புடன்_ _இணைந்த ஆழ்குழாய்_ _கிணறுகளைப் போட வேண்டும்.கிணறு மற்றும் ஆழ்குழாய்_ _கிணறு உள்ள இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள_ _மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்._ _மனிதன், ஆடு, மாடு, இருசக்கர வானங்கள்,_ _துணிபோன்றவற்றை அந்த இடத்தில்_ _கழுவவோ, சுத்தம் செய்யவோ கூடாது._
_ஏற்கனவே குளங்கள், குட்டைகள்_ _கிராமங்களிலிருந்தால், அவற்றை 3_ _வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி சுத்தம் செய்யவேண்டும்._
_கிராமப்புறங்களில் சிறிய ஆறு,_ _கால்வாய்கள் இருந்தால் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமித்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்._

🔷 _கூரைகள் வழியாக மழைநீரை அறுவடை செய்து சேமிக்க வேண்டும்._

🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*🌧மழைநீர்  சேமிக்கப்படுகிற முறைகள்:💧*

🏡🏠 *_கிராமப்புறம்:_*

⛈ வழிந்தோடும்      மழைநீரை கீழ்கண்ட முறைகளில் சேகரிப்பு செய்தல்:
💦கல்லி ப்ளக்
💦கான்டூர் வரப்பு
💦கேபியன் கட்டுமானம்
💦உறுஞ்சு குளங்கள்
💦தடுப்பணை கட்டுதல்
💦ரீசார்ஜ் ஷாப்ட்
💦வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்
💦நிலத்தடி நீர் அணைகள்

கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇
*i. கல்லி ப்ளக்:*
💁🏻‍♂உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம்  போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.
மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும்.
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*ii. கான்டூர் வரப்பு:*

💁🏻‍♂நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது.
குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த  முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது.
சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு  ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது.
இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும்.
சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும்.
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*iii. கேபியன் கட்டுமானம்:*
💁🏻‍♂சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக்கட்டுமானம் உதவுகிறது.
நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம்.
கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது.
கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது.  சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும்.  காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும்.

💁🏻‍♂ *இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது.இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நிரைத்தடுக்கிறது.* *பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது.*
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*iv. உறுஞ்சு குளங்கள்:*

💁🏻‍♂இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.
நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது.
இவ்வமைபுகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும்  நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம்.
உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது.  பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்படவேண்டும்.
மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும். 

💁🏻‍♂ *இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை.* *நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின்  அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை.*
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*v. தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை:*

💁🏻‍♂ *லேசான சரிவுள்ள  சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.  தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும்.*

💁🏻‍♂ *இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது.*

💁🏻‍♂ பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும்.
நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது.

💁🏻‍♂ *சிறிய நீரோடைகளை தடுத்து  நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது.  ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது.*
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧
*vi ரீசார்ஜ் ஷாப்ட்:*

*இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை.*

*மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டளாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்.*
*நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதிரய் கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும்.இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம்.*

💁🏻‍♂இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது.  சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும்.
மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

💁🏻‍♂ *குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக,* *அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம்.*
*வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது.*

💁🏻‍♂ *இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.*
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*vii. வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்*
ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம்.
சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது.
🌧💧⛈💧🌧💧⛈💧⛈💧🌧

*viii.நிலத்தடி நீர் அணைகள்:*
நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது.
நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் உடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும்
தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர்  கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும்.
நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய  நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம்.
தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு  நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧
  🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :  24.08.2017.* 🌹                  🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷   
____________________________________

🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
========= ====== ====
*மழைநீரினை சேகரிக்கும் முறைகளும், மழைநீரை சேமிப்பதன் அவசியம் பற்றிய ஓர் அலசல்:*
💦💦💦💦💦💦💦💦💦💦
*பாகம்*➖ 2⃣
⛈💧🌧💧🌧💧⛈💧⛈💧🌧

*_நகர்புறம்_*
மேற்கூரையில் விழும் / வழிந்தோடும்      மழைநீரை கீழ்கண்ட முறைகளில் சேகரிப்பு  செய்தல்
💦ரீசார்ஜ் குழி
💦ரீசார்ஜ் டிரன்ச்
💦குழாய் கிணறுகள்
💦ரீசார்ஜ் கிணறு

🏬 *நகர்புறங்களில்* *நிலத்தடிநீர் சேமிப்பு*
*நகர்புறங்களில்,* *கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும்.* 👍

⛈ *கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.*

1⃣ *ரீசார்ஜ் குழி*
*நீர் ஊடுருவும்* *பாறைகள்* *நிலமட்டத்தில் காணப்படும்* *பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது.*
*இம்முறை 100 ச.மீட்டர்  கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும்* *மழை நீரை* *சேமிக்கவும்* *உதவுகிறது.மேலான பூமி நீர் மட்டம் உள்ள* *இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது.*

💁🏻‍♂ *இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.* *சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம்,  2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன.* *கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு  சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும்.*
*அதனை, எளிதாக அகற்றிவிடலாம்.  சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது.*

💁🏻‍♂ *குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள்,* *இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய* *மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு/சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம்.*
*குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்படவேண்டும்.*

⛈ *முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது.*
⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧
2⃣  *ரீசார்ஜ் டிரன்ச்*
*இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய* *கட்டிடங்களுக்கு* *ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும்.*
*குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக* *அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும்.*
*நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு,*

💁🏻‍♂ *அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன.*
*நீர் சேமிப்பு குழிக்குகட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம்.*

⛈ *முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.*
*சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும்.*💧
⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧
3⃣
  *குழாய் கிணறுகள்*
*மேல்மட்ட நிலத்தடிநீர்* *விரைவில் உளர்ந்து* *விடுவதால்,* *கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில்,* *மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம்.*

💧 *10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும்.முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும்.* *குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும்.குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது.*

💧 *வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ  விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும்.*

💧 PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது.* *இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும்.*

💧வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும்
கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், *வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். *வடிகட்டும் குழியின்* *அளவு கூரையிலிருந்து* *கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும்.*

💧 *வடிகட்டும் குழியானது,*
*அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும்.* *குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது.* *சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது.*

⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧
4⃣ *குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு*
*மேல் மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில்,* *கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில்,* *குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு,* *சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன.*
*இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம்,* *தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது.*

💧 *சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது.*
*1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி,சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு* *கட்டப்படுகிறது.இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது.*
*கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின்  அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை* *அமையும்.*

💧 *குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக,* *மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது.*
*நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள,* 3-5 *மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது.* *வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள  ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு,* *ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது.* *இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது.*

⛈💧🌧💧⛈💧🌧💧⛈💧🌧

💧 எல்லா ஊரிலும்  _*குடி நீர் தட்டுபாடு*_‼

💧 அனைவருக்கும் _*தண்ணீர் வேண்டும்*_‼

ஆனால் யாருமே _*மழைநீரை சேமிக்க*_ முன் வர மாட்டார்கள்.😡
🌧💧⛈💧🌧💧⛈💧🌧💧⛈

🌧 _*சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.*_

🔴 *_ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,  தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்._*

🌍 _*நம் பாரத நாடும் பழம் பெரும் நாடு. இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை வற்றா வளம் சுரக்கும் பேராறுகள் அன்று தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக அமைவது மழையே.‘உயிரின் உறைவிடம் உடல்.*_

🌧 *_மழைநீரின் உறைவிடம் நிலம்’ எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சமாளிக்கலாம்._* 👍
⛈ _*“விண்ணின் மழைத்துளி...!!மண்ணின் உயிர்த்துளி..!!”👍 என்பதை உணர்ந்து,*_
*_ஒவ்வொருவரும்_*
*_மழைநீர் சேமிப்பில் ஈடுபட்டால் நாடு நலம்பெறும்...!!👍🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

🥇 *⁨கற்றது கால்நடை மருத்துவம்⁩*
🥈 *DEVENDRANhp⁩*
🥉 *navaseK ⁩⁨& S Im A Mad*🙋🏻‍♂⁩

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤  
     
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அனைவரும் உயிர்வாழ ஆக்சிஜனும்,தண்ணீரும்   அனைவருக்கும் தடையின்றி கிடைக்க  மழைவளம் பெருக அனைவரும் *_"🌳மரம் வளர்ப்போம் மழைபெருவோம்🌧."_*

அனைவரும் நல்லவர்களாக மாறுங்கள், ஏனெனில் *நல்லவர்கள் உள்ள இடத்தில் மழை பெய்யுமாம்* என்பதை ஔவை அழகாகச் சொல்கிறார்,

*_"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பொய்யும் மழை" மூதுரை._*

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_"நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு."_*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
                       
*எப்படிபட்டவர்க்கும் நீரில்லாது💧 உலகவாழ்க்கை🌏 நடைபெறாது.   அதுபோல மழையில்லாது போனால் வறட்சியினால் ஒழுக்கமும்🤦‍♂ நிலைபெறாது போகும்.*
   
👴🏻👵🏻👴🏻👵🏻👴🏻👵🏻👴🏻👵🏻👴🏻
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

👴🏻 *🌞வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை🌘, அது போன்று ☁வானம் பார்த்த பூமியை🌏 கேட்டால் தெரியும் மழையின்🌧 அருமை.*👵🏻

👴🏻 *"சிறுதுளி பெருவெள்ளம்."* 👵🏻

💎💎💎💎💎💎💎💎💎💎

🤔 *சிந்தனை :*🤔

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*_"அவனின்றி அணுவும் அசையாது”_*என்ற வாக்கியத்தைவிட *_“மழையின்றி மண்ணுயிர்கள் வாழாது”_* என்பதுமிகவும் பொருத்தமாக இருக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

🌱   👨🏻‍💻 ✍ *கனகராஜ்*
*9043493815*

  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*               
             *9486552988*🌳       
                                                                  😎 🌱  *மணி விஜய் -* 
             *8428073724*🌳

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 comment:

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...