Tuesday, 13 March 2018

குடும்பங்களும், பண்டிகை நாள் கொண்டாட்டமும்*

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :16.01.2018.*
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________

🔎 *அறிவோம்*🔍
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

😇 *உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும்.உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும்*

💐 *சாக்ரடீஸ்*💐
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

💘 *இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் தான்,*

💘 *இன்னொரு இதயத்தைக் கவர இயலும்..!*

               💝 *அட்மின்*💝
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

👨‍👩‍👧‍👦 *குடும்பங்களும், பண்டிகை நாள் கொண்டாட்டமும்*🎉🎊

🏡👨‍👩‍👧‍👦🎉🎊🏡👨‍👩‍👧‍👦🎉🎊🏡👨‍👩‍👧‍👦🎉


🏡 👨‍👩‍👧‍👦 *குடும்பம் என்பது ஒரு அழகான தோட்டம்.உறவுகள் அங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள்.*💐
👨‍👩‍👧‍👦 *எந்த ஒரு குடும்பத்திலும்* *பெற்றவர்கள் பிள்ளைகள் மீதும் பிள்ளைகள் பெற்றவர் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டிருப்பது இயற்கையே.*💐

🏡👨‍👩‍👧‍👦 *ஆனால் அதை எத்தனை குடும்பங்களில் பரஸ்பரம் வெளிப்படுத்தவோ,பகிர்ந்து கொள்ளவோ செய்கின்றனர்?⁉*🙇🏻‍♀

🏡🙇🏻‍♀ *இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும்,படிப்பு,பணம் சம்பாதித்தல் என்றுமாகவே பெரும் பொழுது கழிந்து விடுகிறது.*🙇🏻‍♀

🏡👴🏻👵🏻 *பழங்கதைகள் பேசுவதும் மலரும் நினைவுகளும் சுகமானவை.*😍

🏡💝 *தன் பெற்றோர் சின்ன பிள்ளைகளாக இருந்த போது என்னென்ன குறும்பு செய்தார்கள் என்று தாத்தா பாட்டி வாயால் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா??💖?*😉
*கேலியும்,கிண்டலும் , ஆட்டமும் ,பாட்டும் ,போட்டிகளும் விளையாட்டும் ஏதோ விஷேஷ நாட்களில் கூடியிருக்கும் போதும்,*🤷🏻‍♀

🏡💖 *_குடும்பம் மொத்தமும் கூடிப் பேசி மகிழும் தருணங்கள் விலை மதிக்க முடியாத சொர்க்க நேரங்கள்._*💝😍

🏡👨‍👩‍👧‍👦😇 *நம் எல்லோர் வாழ்க்கையிலும் மேடு, பள்ளங்கள்,இன்ப,துன்பங்கள் இருப்பது இயல்புத்தான்.அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப செய்யும் தொழில்,குடும்ப உறவு,ஆரோக்கியம் போன்ற பல்வேறு தளங்களில் அன்றாடம் பல சோதனைகளையும்,சிரமங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது.*🤝💐

🏡😇 *அத்தகைய சோதனைகளையும்,சிரமங்களையும் அவ்வப்போது மறக்கடிக்கும் விதமாகத்தான் நம் வாழ்வில் பல்வேறு கொண்டாட்டங்கள்,விழாக்கள் வருகின்றன.*💐🤝

👨‍👩‍👧‍👦💑 *திருமணங்கள்,பிறந்தநாள் விழாக்கள்,குழந்தை பிறப்பு,காது குத்து, புதுமனை புகுவிழா,பதவி உயர்வு,வெளிநாட்டு பயணம்,விளையாட்டில் வெற்றி,விருதுகள்,பரிசுகள் என்று எவ்வளவோ நிகழ்வுகள் நம்மைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி நமது துயரங்களையும்,வேதனைகளையும் தற்காலிகமாக மறக்கடிக்க செய்கின்றது.*😇💐

💑 *அதுவும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கென்று நம்மில் பலர் தங்களது சக்திக்கு மீறி க்கடன் வாங்கி செலவழித்து விட்டு பிறகு கடனை அடைக்க கஷ்டப்படுவதும் உண்டு.*☹

👨‍👩‍👧‍👦😇 *எது எப்படி இருந்தாலும் நமது குடும்ப நிகழ்வுகளுக்கான கொண்டாட்டங்களும்,அதற்கான செலவுகளும் நம்மையும்,நம்மை சுற்றி உள்ள, நம்மை சேர்ந்த உறவுகளை சுற்றி நிகழ கூடியவை எனலாம்.*💐😇

🏡🎑🎇 *பண்டிகைகள் , கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள் எல்லாவாற்றிலும் ஒரு பொருள் பொதிந்த அர்த்ததை நம் முன்னோர்கள் வழிகாட்டி சென்றிருக்கிறார்கள்.*🤷🏻‍♀
*புத்தம் புதிய உடைகள், விதவிதமான பலகாரங்கள், புதிய திரைப்படங்கள், தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் என நம்முடைய பண்டிகைகள் கால ஓட்டத்தில் சுருங்கி போய்விட்டது.*🙇🏻‍♀

🏡🙇🏻‍♀ *பண்டிகைகளை டி.வி முன் அமர்ந்து கொண்டாடி, ஹோட்டலில் சாப்பிட்டு மகிழும் கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நாம்,🙇🏻‍♀ கிராமங்களில் ஊர் கூடி, ஆடிப் பாடி, விளையாடிக் கொண்டாடி, அதே மகிழ்ச்சியுடன் அன்பு கலந்து சமைத்த உணவின் சுவையை அறிந்திருக்கிறோமா???*⁉🤙

🏡👨‍👩‍👧‍👦 *தீபாவளியோ... பொங்கலோ... மாசி கொடையோ.... திருமணமோ... அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் ஆகியோரோடு இணைந்து கொண்டாடுவது என்பதே ஒரு சந்தோசம்.😍இதுபோன்ற நாட்களில்தான் நம் குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை போன்றோர்களைப் பற்றியும், அவர்களின் அறிமுகம் கிடைக்கும்.*😍💝

🏡👨‍👩‍👧‍👦 *இன்றைக்கு உறவுகளுடன் கொண்டாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.🙇🏻‍♀ இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.*🙇🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *பேருந்து, ரயில்களில் டிக்கெட் போட்டு அடித்து பிடித்து போய் அப்படி விசேசங்களை கொண்டாட வேண்டுமா?⁉🤙🤕 நாம் இருக்கும் ஊரில், நம் வீட்டில் கொண்டாடினால் என்ன?🤙⁉ என்று கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.*🤕🙇🏻‍♀😔

🏡👨‍👩‍👧‍👦 *ஆனால் உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு செல்வதே ஒரு சந்தோசம்.😍💐 நம்முடைய சொந்தங்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பதே ஒரு மகிழ்ச்சி.*💐😍👨‍👩‍👧‍👦

🏡👨‍👩‍👧‍👦 *பணத்தை நோக்கி பயணப்படும் இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போனோமா? 😏வீட்ல ரெஸ்ட் எடுத்தோமா😏 என்று மாறிவிட்டனர்.🙇🏻‍♀ இதில் எங்கே உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு போவது என்று கேள்வி கேட்கின்றனர் இளைஞர்கள்.*🤕🙇🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *நட்பு என்பது குறுகிய காலகட்டம், இறுதி வரைக்கும் வரப்போவது உறவு.👍 உறவினர் வீட்டு விசேசத்திற்கு செல்ல நேரமில்லை என்பது பொய்...😔🙇🏻‍♀ மனதிருந்தால் மார்க்க முண்டு எனலாம்.*👍🤷🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *நண்பர்கள் வீட்டுக்கு போக முடிகிற உங்களால் உறவினர்கள் வீட்டுக்கு ஏன் போகமுடியவில்லை ஏன்????*⁉👊

🏡👨‍👩‍👧‍👦 *பணம், வேலை போன்றவைகளை நோக்கிய பயணமாக இருப்பதால் உறவுகள் வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. 🙇🏻‍♀அது காலம் கடந்து ஒரு வலியை ஏற்படுத்தும். நம்முடைய பெற்றோர்கள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருந்தனர்.🤷🏻‍♀ ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் இதை ஏன் விரும்புவதில்லை.*🤙⁉

🏡👨‍👩‍👧‍👦 *இன்றைக்கு நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு உறவினர்களுக்கு கொடுப்பதில்லை.🙅🏻‍♀🙅🏻‍♀👎 உறவினர்கள் போட்டியும், பொறாமையுடனும் இருக்கின்றனர் என்பதால் அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது.🤷🏻‍♀ உறவினர்களை விட்டு ஒதுக்கிவிட்டனர்.🤷🏻‍♀ இன்றைக்கு நட்புக்குள்ளும் போட்டி, பொறாமை உணர்வு வந்துவிட்டது.👍 அப்போது உறவினர்களின் அருமை தெரியவரும்.*👍

🏡👨‍👩‍👧‍👦 *உறவுக்காரர்கள் முக்கியமில்லை என்கின்றனர் சிலர்,🤷🏻‍♀ ஆனால் என்ன பிரச்சினை என்றாலும் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்கின்றனர் சிலர்.*🤷🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *நம்முடைய சமூகம் உறவுகளால் பின்னப்பட்டது. 👨‍👩‍👧‍👦இதை மாற்ற நினைத்தாலும் முடியாது🙅🏻‍♀ அதுதான் உறவின் சக்தி*👍

🏡👨‍👩‍👧‍👦 *மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கு  அச்சாணியாய் திகழும் உறவுகள் இன்று இளைய தலைமுறையால் விரும்பப்படாத ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்ராகிவிட்டது.*🤷🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *இதற்கு மிக முக்கியமானக் காரணம் பிளவுபட்ட கூட்டுக் குடும்பங்களே. அப்பா, அம்மாவோடு பல உறவினர்களோடு கூடி வாழ்ந்தவர்களிடம் உள்ள நற்பண்புகளை தனியறையில் தனிமைப்படுத்தப்பட்ட இன்றைய தலைமுறையினரிடம் எதிர்பார்ப்பது நியாயம் அல்ல.*🤷🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *தொடர்கதையாய்த் தொடர வேண்டிய உறவுகள் இன்று விடுகதையாய் இருக்கின்றன.🙇🏻‍♀  தான் மட்டும் என்கிற குறுகிய மனப்பான்மை வளரக் காரணமாய் இருப்பதும் இன்றைய தனிக்குடும்பங்களே.🙇🏻‍♀🤕  மனிதர்கள் சிறந்து விளங்கும் சமூகத்தைப் பெற வேண்டும் என்றால் குடும்ப உறவுகளைத் தவிர நமக்கு வேறு வழி இல்லையென்று போதிக்கிறது நமது சரித்திரம்.*👍💖

🏡👨‍👩‍👧‍👦 *குடும்பத்தின் தன்மை குறுகினாலும் அதிலும் மகிழ்வோடு, மன நிறைவோடு வாழ்வது அவசியம்.😇  அமைதியான உறவுகள் ஆழ்ந்த அர்த்தமுடையவை..!!!*😍💖👍

🏡👨‍👩‍👧‍👦 _*இன்றைய அவசர உலகில் உறவுகள் பெரும்பாலும் ஏனோதானோ என்ற மேலோட்ட நிலையிலேயே வாழ்கின்றனர்.🤕இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து வாழ்வது தான்.🙇🏻‍♀ வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாமல் உறவுகள் தொழிலின் காரணமாகவும் சில பிரச்சனைகள் காரணமாகவும், இடப்பெயர்வுகளாலும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுகிறார்கள்.*_🤕🙇🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 *_இந்தப்பிரிவு பல உறவுகள் தமது வேர் எது என்று தெரியாது வாழும் நிலையை உருவாக்கிவிடுகிறது.🤷🏻‍♀ ஒவ்வொருவரின் இடங்கள் தொலைதூரமாகி விடுகிற காரணத்தினால் உறவுகள் இல்லாமலே வாழப் பழகுகிறார்கள்.🤷🏻‍♀ அவர்கள் தனியாக வாழவேண்டும் என்று வாழவில்லை,🙅🏻‍♀ வாழ்க்கை சூழல் அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜம்.👍 இவ்வாறு தனித்து நிற்கின்ற உறவுகள் அடுத்த சந்ததி யார்?????⁉ தங்கள் பெற்றோரின் உறவுகள் யார்????⁉ என்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது._* 🤕🙇🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 _*இன்றைய உலகில் உறவுகள் பரந்துபட்ட திசையிலே வாழ்வார்கள். 🤷🏻‍♀குடும்ப விழாக்கள் என்றால் மட்டுமே உறவுகளை அழைக்க வேண்டியிருக்கிறது.🤕 வந்து போகும் தூரமாக இருந்தால் நேரில் வந்து அழைப்பார்கள்.🤷🏻‍♀ அல்லது தபால், இணையத்தளம். தொலைபேசி என்று காலங்கள் மாறிவிட்டன.🤷🏻‍♀ வருஷம் ஒரு முறையோ, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வரும், இந்த சூழல் குடும்ப உறவுகளை விரத்தி அடையச்செய்கிறது.🙇🏻‍♀🤕 அந்த நிலையிலும் அந்த அழைப்புகளுக்குப் போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்போது உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் பிடுங்கிவிடுகிறது.*_ 🤕🙇🏻‍♀😔

🏡👨‍👩‍👧‍👦🙇🏻‍♀ _*இதனால் தலைமுறைகளிற்கு இடையிலான இடைவெளி நிரந்தரமாகி விடுகிறது.🤕 காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடுகிறது.🤕 சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள்.😊 ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான்.🤷🏻‍♀ இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.🤷🏻‍♀ """பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான்"""" இதுவும்.👍 இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.*_👍💖😇

🏡👨‍👩‍👧‍👦💖 _*உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ தாங்களாகவே முயன்று தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள்.🤷🏻‍♀ இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.🤷🏻‍♀ இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.🤷🏻‍♀ நண்பர்கள் இடையில் கிடைத்த உறவுகள் முதலிடத்தை தட்டிச்செல்கிறது.👍 இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கௌரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது.🤕 அப்போது மனச்சிக்கலிற்கு ஆளாகிறார்கள்.*_🙇🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 _*உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள், தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.🤷🏻‍♀ ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம். 🤷🏻‍♀இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம்.🤪 இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.😍 அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.*_💖👍💐

🏡👨‍👩‍👧‍👦💖 _*இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல.🙅🏻‍♀🙅🏻‍♀ இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல.🙅🏻‍♀ தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்.👍 அலட்சியமாக, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன.🤷🏻‍♀ 😇💐நட்பை நேசியுங்கள்......!!!!!, உறவுகளை மதியுங்கள்....!!!*_😇💐

🏡👨‍👩‍👧‍👦💐 _*""""சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு """" அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்....*_🙅🏻‍♀
 *_தொலைத்து விட்டால் அங்க அடையாளங்கள் இல்லாமல் போய்விடும். 😔அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.👍 உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.👍உறவுகள் இல்லாவிட்டால் எங்கிருந்து நான் வந்தேன்? ????என்று உங்களையே  கேள்விகேட்கும் நிலையும்வந்துவிடும். என்வே, நாம் எங்கிருக்கிறோம் என்பது முக்கியமில்லை.🙅🏻‍♀நமது உறவுகளுடன் இருக்கிறோமா என்பது தான் முக்கியம்...._*👍😇💐👨‍👩‍👧‍👦🏡

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🤼‍♂சிறந்த அட்மின்🤼‍♂*
                  🏆 *ks*🏆

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅  *Karthikeyan c🤗⁩*🤝
🏅 *🏁ஜான் 🔴ழைழா,🏁* 🤝
🏅 *ஞாலமைந்தன்⁩*🤝
🏅 *Jaiganesh*🤝

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅 *இசையருவி*🤝
🏅 *porkodisriram⁩*🤝
🏅 *Tharun Kumar T.M⁩*🤝

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤       
          *🤔கருத்து👍*

🎊🎉😇 *சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம்.*🏡

👨‍👩‍👧‍👦 *குடும்பம் அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம்.*😇💐

🏡👨‍👩‍👧‍👦 _*ஒரு மனிதன் வாழ்வின் உள்ளார்ந்த சாரங்களைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான அடிப்படைத் தேவை குடும்ப உறவுகளோடு அவன் கொண்டுள்ள பிணப்புத்தான்.😍  சாதகமான உறவுகளைப் பெறுவோமாயின் ஒவ்வொருவரும் சாதனையாளர் தான்.*_😇💐

🏡😇 _*செல்வங்களை அடைவதாலோ, தனி மனித வெற்றியாலோ கூட சந்தோஷத்தை அடைய முடியாது.🙅🏻‍♀ ஆனால் மற்றவர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வதே அதை அடைய ஒரே வழி.👍💐  அன்பிற்கு பதிலாய் கோபத்தைப் பகிர்வதால் அடிப்படை உறவுகளும் கூட ஆட்டம் கண்டு விடுகின்றன*_🙇🏻‍♀🤷🏻‍♀

🏡👨‍👩‍👧‍👦 _*இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்வது காலத்தின் கட்டாயமாய்... பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம்..!!!*_💐😇

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்*
*நண்பென்னும் நாடாச் சிறப்பு*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     

*குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவுகொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💞 *அறிந்து கொள்ளவும்*💞

*இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.*

💞 *புரிந்துகொள்ளவும்*💞

*பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்*

*ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.*

💞 *தெரிந்துகொள்ளவும்*💞

*எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...