Wednesday, 14 March 2018

இரத்த தேவைகளும், அவற்றை சரி செய்வதற்கான நடைமுறைகளும்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :12.02.2018.* 
         🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🌟  *அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.*

💐 *- கில்ப்பின்.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*நான் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.*

*அது தான் என்னை மனிதனாக்கியது.*

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

*இரத்த தேவைகளும், அவற்றை சரி செய்வதற்கான நடைமுறைகளும்*

💉✔🧐💉✔🧐💉✔🧐💉✔

💉🌡 *இரத்த தானம் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்*📌

💉 *இரத்த தானம் கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.*♦

💉 *இரத்ததானம் அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது.*♦

💉 *அதன் பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.*♦

💉 *இரத்ததானமளிக்கும் நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.*♦

💉 *தானமளித்த 3 மணி நேரத்திற்கு பிறகு புகைப் பிடிக்கலாம்.*♦

💉 *இரத்த தானம் அளிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் மது அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்.*👎♦

💉 *இரத்ததானம் பற்றிய தவறான நம்பிக்கைகள்*📌🙅🏻‍♂👇👇👇👇👇👇👇👇

♦ *நான் இரத்த தானம் அளித்தப் பின் சோர்வாகவும், அசதியாகவும் உணர்கிறேன்.😟 இரத்ததானம் செய்தபின்பு நீங்கள் நீராகாரங்கள் அருந்துவதாலும் மற்றும் நன்றாக உணவருந்துதலும் நீங்கள் சோர்வாகவும், அசதியாகவும் உணரமாட்டீரகள்.*🙅🏻‍♂♦

💉 *நான் சாதாரண வேலைகளை தொடர முடியாது. 🙅🏻‍♂இரத்த தானம் அளித்த பிறகு வேலைகளை செய்ய வேண்டாம் என்று கூறினாலும் உங்களால் எல்லா வேலைகளையும் தொடரமுடியும்.*👍♦

💉 *எனக்கு இரத்தம் குறைவாக இருக்கும்.🙅🏻‍♂ நீங்கள் மருத்துவரால் தானமளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்டால் தானமளித்தப் பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.*👍♦

💉 *நான் மது அருந்த முடியாது. 🙅🏻‍♂நீங்கள் இரத்ததானமளித்த மறுநாள் மது அருந்தலாம்.*😏

💉 *இரத்தம் பற்றிய உண்மைகள்*👍🌡

💉 *இரத்தம் என்பது உயிரை பாதுகாக்கும் திரவம். இது உடலிலுள்ள இதயம், தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் மூலமாக உடலில் சுழற்சி செய்கிறது.* 🎯

💉 *இரத்தம் நமது உடம்பிற்கு உணவு, தாது உப்புகள், ஹார்மோன்கள், உயிர்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர் உயிரி மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்துச் செல்கிறது.*🎯

💉 *இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரிமில வாயுவை எடுத்துச்செல்கிறது.*🎯

💉 *இரத்தம் நோய்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது.*🎯

💉 *உங்களுடைய உடலை ஆரோக்யமாக வைத்திருக்கிறது.*🎯

💉 *உங்களுடைய உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள இரத்தம் இருக்கும்.*🎯

💉 *இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.*🎯

💉 *கிரோனுலோஸைட்ஸ் என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள், இரத்த நாள சுவர் மீது உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.*🎯

💉 *இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.*🎯

💉 *இரண்டு, மூன்று சொட்டு இரத்ததில் காணப்படும் சுமார் ஒரு பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் இருக்கும். இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஒட்ட மண்டலத்தில் உயிருடன் இருக்கும்.*🎯

💉 *இரத்த தகடுகள் இரத்த உறைதலுக்கு உதவிப் புரிந்து லுகீமீயா மற்றும் இதர புற்றுநோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.*🎯

💉 *இரத்த தானம் ஏன் செய்ய வேண்டும்?*🧐❓❓❓❓❓❓

💉 *இரத்தம் ஒரு உயிரோட்ட திரவம், எல்லா உயிர்களும் இதனைச் சார்ந்த்தே. இரத்தமானது 60% திரவ பொருளாலும் 40% திட பொருளாலும் ஆனது.*❣

💉 *திரவ பொருள் பிளாஸ்மா என்றழைக்கப்படுகிறது.*❣

💉 *இது 90% நீராலும், 10% உணவுப்பொருள், ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களாலும் ஆனது. இரத்தம் எளிதில் உணவு மற்றும் மருந்துகளால் நிரப்பிக் கொள்ளும்.*❣

💉 *ஆனால் இரத்தத்தின் திடப்பகுதிகளான இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தகடுகள் போன்றவைகள் இறந்தால் மீண்டும் உருவாக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும்.*❣

💉 *இப்படியாக உள்ள நீங்கள், ஒரு நோயாளிக்கு இரத்த மாற்றம் செய்ய எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம், அவர்களின் உயிரைவிட விலைமதிப்பு மிக்கதாகிறது.*❣

💉 *சில சமயங்களில் நம்முடைய உடல் இரத்த பரிமாற்றத்திற்கு ஏற்றதாக இல்லாமல் கூட இருக்கலாம். நீங்கள் அறிந்த்து போலவே இரத்தத்தை அறுவடை செய்யமுடியாது, தானத்தால் மட்டுமே வழங்க முடியும்.*❣

💉 *ஆகவே, இரத்தம் தேவைப்படும் நபருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்.*❣👍

💉 *இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 250 CC அளவுடைய 40 கோடி யூனிட்டுகள் இரத்தம் தேவைப்படுகிறது.*👍🧐

💉 *ஆனால் 5,00,000 யூனிட்டுகள் மட்டுமே தானமாக கிடைக்கிறது.*😔🤕

❓ *கேள்வி பதில்கள்*✔

👉 *இரு கொடைகளுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளிக் காலம் எவ்வளவு?*❓

➡ *ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதத்துக்கு ஒரு முறையும், பாதுகாப்பாகக் குருதிக் கொடை அளிக்கலாம்.*❗

👉 *குருதிக்கொடை அளிக்க வயது மேல் வரம்பு என்ன?*❓

➡ *குருதிக்கொடை அளிக்க வயது மேல்வரம்பு 65. எனினும், முதல் தடவை குருதிக்கொடை அளிப்பவரையும் 60 வயதுக்கு மேற்பட்டத் தொடர்ந்து குருதிக்கொடை அளிப்பவரையும் மருத்துவரின் வழிகாட்டுதல் படி ஏற்றுக்கொள்ளலாம்.*❗

👉 *குருதிக் கொடையின் போது எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது. இது எவ்வளவு விரைவில் உடலால் ஈடு கட்டப்படும்?*❓

➡ *350 மி.லி. முதல் 450 மி.லி. வரை எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு இருக்கும். பொதுவாக 24 மணி நேரத்தில் இந்த இரத்தம் உடலால் ஈடுகட்டப்படும்.*❗

➡ *சிவப்பணுக்களை முழுமையாக ஈடுகட்ட 4-5 வாரங்கள் தேவைப்படும்.*❗

👉 *குருதிக் கொடைக்குப் பின் பலவீனம் அடைய அல்லது தொற்று எதையும் பெற வாய்ப்புண்டா?*❓

➡🙅🏻‍♂ *இல்லை. நீங்கள் நல்ல உடல் நிலையோடு இருந்தால் எந்த கவலையும் இல்லை.* 🙅🏻‍♂❗

➡ *ஆய்வகம் அல்லது ஊர்தியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனிக்கப்பட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவானதே.*❗

👫👬 *நம் செய்ய வேண்டியவைகள் என்னென்ன?*❓❓

✔ *நெகட்டிவ் வகை இரத்தங்கள் கிடைப்பது மிக அரிது. நெகட்டிவ் வகை சம்பந்தமான இரத்தம் தேவைப்பட்டால் உடனடியாக அதனை செக் செய்து நம்மால் முடிஞ்சா உதவினை செய்ய முற்பட வேண்டும்.*✔👍

✔ *இரத்த வகையினை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமானதாகும்.*✔👍

✔ *வாழ்நாளில் நம் யாருக்காவது, ஒருவருக்காவது தனது இரத்தத்தை கொடுத்து, ஒரு உயிரையாவது யாராயாவது காப்பாற்ற முற்படலாம்.*✔👍

✔ *இரத்த சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் தங்களின் பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.*✔👍

✔ *சிலர் வெப்சைட்டில் பெயரை பதிய வைத்து, தேவையான நேரத்தில் பலர் கால் செய்தால் கூட, அட்டண் செய்வது கிடையாது. இதனால் பிறருக்கு நேரம் விரையமாகிறது.*✔👍

✔ *இரத்தம் முழு மனதோடு கொடை அளிப்பவர் மட்டுமே வெப்சைட்டில் பதிவு செய்தல் வேண்டும். கடமைக்காக பதிவு செய்வதால் எந்த ஒரு பலனும் இருக்கப் போவதில்லை.*🙅🏻‍♂

✔ *இரத்தவகை பதிவுகளை செக் செய்யாமல் யாருக்கும் நம் forward செய்ய கூடாது.*🙅🏻‍♂🙅🏻‍♂

✔ *எந்த ஏரியாவில் இரத்தம் தேவைப்படுகிறதோ, அந்த ஏரியா குழுக்களில் முதலில் மெசஜ் forward செய்ய வேண்டும்.*✔✔👍

✔ *விழாக்காலங்களில், நடிகர், நடிகைகள் பிறந்தநாள், அரசியல் தலைவர்கள் பிறந்தநாளில் முற்றிலுமாக இரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.*🙅🏻‍♂

✔🔴 *முடிந்தவரை அனைவரும் நேரடியாக இரத்தம் கொடுக்க முன் வர வேண்டும்.*🔴✔👍

💝 *வாழ்க்கையில அதயாச்சும் உருப்படியா பண்ணுவோமே.😉*💝

*நன்றி🤝🏼💐*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

               🏆👏 *KS*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🥇🥈🥉 *இன்று பங்கேற்ற அனைவருமே சிறந்த பேச்சாளர்கள்.*👏👏👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🤷🏻‍♂ *நம் அனைவருக்கும் என்ன பந்தம் ? நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம்*

🤷🏻‍♂ *உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும் இரத்த சொந்தம் ஆகிடுமா ?*

🤷🏻‍♂ *இரத்தம் தானம் தந்து, வாழ்ந்து வந்தால், நாம் இரத்த சொந்தம் ஆகிடலாம்*👍

🤷🏻‍♂ *உடல் உறுப்பு தானம் தந்தால் இறந்த பின்னும் வாழ்ந்திடலாம்*👍

😇 *என்றும் வாழும் போதே, மனிதனாய் வாழ்ந்த இன்பம், இரத்த தானத்தால் தான் சாத்தியமே*👍

😇 *சாவின் அருகில் சென்று திரும்பியவன், நம்மை தெய்வமாக கும்பிடுவான்*👍

😇 *ஊர் பெயரும் யாதென அறியாதவன், உன்னை உளமார வாழ்த்திடுவான்*👍

😇 *உறைந்து போகும் இரத்தம் கூட, உயிரோட்டம் பெற்றிடுமே*👍

😇 *உரியவருக்கு நீயும் தந்தால், அவர் உயிர் தந்து காத்திடுமே*👍

😇 *பதினெண் அகவை தாண்டி விட்டால், நாற்பத்து ஐந்து மேல் உடல் எடையிருந்தால், இரத்தம் தானமாக தந்திடலாம்,*👍

😇 *அந்த எமனையும், இதனால் வென்றிடலாம்*👍

😇 *உடல் நிலை உன்னில் உன்னதமாயிருந்தால்,உடனே இரத்தம் தந்திடலாம்*👍

😇 *மூன்று மாத இடைவெளியில், முழுமனதாய் இரத்தம் தந்திடலாம்*👍

😇 *தானம் தந்த இரத்தமது, மீண்டும் ஊரிடுமே இரண்டு நாளில்*
*புதிய ரத்தம் ஊற்றெடுத்து, உடல் புத்துணர்ச்சி நம் வாழ்நாளில்*👍

🤷🏻‍♂ *இரத்தத்திற்கு விலை பேசி அதை வியாபாரம் ஆக்கிடாமல், தானமாக நாமும் தந்து தரணி போற்ற தனித்து நிற்போம்*🤷🏻‍♂

🤷🏻‍♂ *பணத்தை தானம் தர மனம் தயங்கினாலும், இரத்தம் தானம் தர வீண் தயக்கம் வேண்டாம்*🙅🏻‍♂

😇 *இரத்த தானத்தில் தனி புகழிடம் தாய் தமிழகத்துக்கே இன்று முதலிடம்👌🏼👌🏼👏🏼👏🏼*

😇 *இந்த இடம் நிலைத்திருக்க  உறுதி கொள்வோம் இந்நாளில்*👍

😇 *தாய் தந்த நம் உயிரை, நாமும் இரத்த தானம் தந்து தாயாவோம்🤰🏻😇*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்*
*குறியெதிர்ப்பை நீர் துடைத்து.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      
*வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே தானம்.பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்ப் பார்த்துத் தருவதே ஆகும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

♥ *அறிந்துகொள்ளவும்*❤

*செயவன திருந்தச் செய்*

♥ *புரிந்துகொள்ளவும்*♥

*காலம் பொன்போன்றது*

♥ *தெரிந்துகொள்ளவும்*♥

*தருமம் தலைகாக்கும்*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *மணி மாதேஷ் ~ 8428073724*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...