Sunday, 24 September 2017

வீர பெண் சிங்கங்கள் (பொதுநலனில் ஈடுபட்ட பெண்கள்) செய்த சாதனைகள்*?????

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :23.09.2017.*
         🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
  🔎 *அறிவோம்*🔍
⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳
💐 *கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் "அன்னையாக" முடியும்...*

😇 *ஆனால்  கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட "அன்னையாக" முடியும்*

💐 *~அன்னை தெரசா*💐

👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

*ஒரு முனையில் அடிவாங்கும் பாறைக்கே வலி அதிகம் என்றால்,*

*இரு முனையிலும் அடி வாங்கும் உளியின் நிலை என்ன?*😔

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*வீர பெண் சிங்கங்கள் (பொதுநலனில் ஈடுபட்ட பெண்கள்) செய்த சாதனைகள்*?????
🦁👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🦁

     _*💐பாகம்⚜1⃣💐*_

🏹💐 😇 _*நம்மை பெற்ற அன்னை அனைவருக்குமே வீரப்பெண்மணி தான். அதனையும் மீறி சில பெண்கள் யாரோட துணையும் இல்லாமலும், கணவரை தவற விட்டு தனிமையாக வாழ்க்கை நடத்தி பிள்ளைகளை வளர்ப்பவர், பல போராட்டங்களுக்கு இடையே வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள், பொதுநலனுக்காக தன் வாழ்வை அர்பணிக்கும் பெண்கள், பலரை எதிர்த்து சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களுமே வீரப் பெண்மணிகள் தான். சரி முடிவுரைக்கு போவோம்.*_👍

👱‍♀ _*தமிழக வரலாற்றில் பெண்கள் அரசியலிலும், கல்வியிலும், ஆரம்ப காலம் தொட்டே ஈடுபட்டு வந்தனர்.*_

👱‍♀ 👵🏻 _*சங்க கால பெண் புலவர்களான அவ்வையார், பொன்முடியாள் அரசவை புலவர்களாகவும், துாதுவர்களாகவும் செயல்பட்டு வந்தனர்.*_

👱‍♀ _*பல்லவர், சோழர், பாண்டியர் கால அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், கல்வி கேள்விகளிலும், சமூக செயல்பாடுகளிலும் சிறப்புடன் திகழ்ந்தனர்.*_👍

🏹 _*விடுதலை வேட்கை 19ம் நுாற்றாண்டுக்கு பின்னரே, தமிழ்நாட்டில் வீறு கொண்டு எழுந்தது. விடுதலை வேட்கை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த பெண்கள் பலர் உண்டு.*_👱‍♀🏹👍

🏹🦁🏹🦁🏹🦁🏹🦁🏹🦁🏹

🏹 _*இராணி வேலுநாச்சியார்  (கி.பி 1730 - 1796)*_🏹

🔱 *கிளர்ச்சி செய்த பாளையக்கார பெண்களில் முக்கியமானவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயரை எதிர்த்து அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிர்த்து போராடிய வீரமங்கை ஆவார்..   வீரமங்கை சிவகங்கை இராணி வேலு நாச்சியார் துவங்கி தன்னையே வெடிகுண்டாக மாற்றிக்கொண்ட தியாகத்தின் உருவான அவரது """பணிப்பெண் குயிலி""", ""கிட்டூர் ராணி சென்னம்மா"", வேங்கையாய் மாறிய ""ஜான்சி ராணி"" ""லட்சுமிபாய்"", அயோத்தியின் தியாக சின்னமான ""பேகம் ஹசரத் மஹல்""', விசுவாசத்தின் மறுவடிவமான அதனாலேயே வெள்ளையர்களாலும் போற்றப்பட்ட ""ஜல்காரி பாய்"", நான்காயிரம் படை வீரர்களை திரட்டி ஆங்கிலேயர்களை பந்தாடிய ""ராம்காட் ராணி"",*
*""அவந்திபாய்"" போன்றோர் சிலரே வரலாற்றுப் பக்கங்களில் கிடைக்கின்றனர்*

🔱 *மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து சுதந்திர போராட்ட இயக்கங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தனர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ""சொர்ணத்தம்மாள்,"" ""பர்வதவர்த்தினி"" ""அகிலாண்டத்தம்மாள்"",""கே.பி.ஜானகி அம்மாள்"",""தாயம்மாள்"",""சீலக்காரம்மாள்"", ""விசாலாட்சி"", ""முத்தம்மாள்"" ""பத்மாஸனியம்மாள்"","" தமயந்தி அம்மாள்"" ""மீனா கிருஷ்ணசாமி"" ""திருக்கொண்டா லட்சுமி"" ""வத்கலாமணி""*

🏹 _*சொர்ணாத்தம்மாள்*_🏹

🔱 *மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் துணிச்சலில் சிகரமாக திகழ்ந்தனர். அவர்களுள் சொர்ணத்தம்மாள் அன்னிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ல் காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம், அவரது வேண்டுகோளான,“செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத்தீயை மூட்டினார். ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் வைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.*

🏹 _*கே.பி.ஜானகியம்மாள்:*_🏹

🔱 *மதுரையை சேர்ந்த குருசாமியின் மனைவி ஜானகியம்மாள். நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகம் வந்தபோது, முத்துராமலிங்க தேவருடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து விடுதலை உணர்வை ஊட்டினார். 1937-ல் ஆறு மாதம், 1941-ல் ஒன்பது மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலை போராட்ட வீரருக்குரிய ஓய்வூதியத்தை நிராகரித்து இறுதி வரை தியாக வாழ்வு வாழ்ந்தார்.மதுரையில் மட்டும் சுதந்திர வேட்கையை துாண்டிய பெண்மணிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சித்து பாக்கியலெட்சுமி, சீதாலெட்சுமி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, திருக்கொண்டாலட்சுமி அம்மாள், முத்தம்மாள், பத்மாஸணியம்மாள், மதுரை மேலுாரை சேர்ந்த தமயந்தி அம்மாள்.*

🏹 _*செல்லம்மாள்*_🏹

🔱 *அருப்புக்கோட்டை செல்லம்மாள் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் அமிர்தம்மாள் அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்*

🏹 _*விருதுநகர் ராஜாமணி அம்மாள்*_🏹

🔱 *கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.*

🏹 _*ராஜபாளையம்மஞ்சம்மாள்*_🏹

🔱 *1930-ம் ஆண்டு அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். இதற்காக 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.*

🏹 _*யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி*_🏹

🔱 *1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காக உருவான பெண்கள் அடங்கிய குழுவில் தலைமைதாங்கி வீரு கொண்டு போராடினர்*

🏹 _*எஸ்.அம்புஜம்மாள்*_
_*ஞானம்மாள*_🏹

🔱 *அந்நிய துணிக்கடை முன்பு பத்து நாட்கள் தொடர் மறியல் செய்தனர்.*

🏹 _*என்.எம்.ஆர்.எஸ்.பர்வதவர்த்தினி*_🏹

🔱 *மதுரையில் அதிகம் வாழும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுப்ராமன் மனைவி பர்வதவர்த்தினி அம்மாள். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சுப்ராமன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருந்த நேரத்தில், கணவர் வழியில் பர்வதவர்த்தினி மதுக்கடை மறியலில் ஈடுபட்டு வந்தார். மறியல் செய்த பெண்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கண்டன ஊர்வலம் நடத்தினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.*

🏹 _*முத்துலட்சுமி ரெட்டி  (சூலை 30, 1886 - சூலை 22, 1968)*_🏹

🔱 *தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், விபச்சார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் என பெண்ணுரிமைக்கான சட்டங்கள் கொண்டுவரக் குரல் கொடுத்தவர். நகராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க உரிமை வேண்டும், பெண்களுக்குத் தனியாகக் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும், பெண் நீதிபதிகள் நிறையப்பேர் நியமனம் செய்யப்பட வேண்டும்-குழந்தைத் திருமணம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவென்றே தனது வாழ்க்கையை அர்பணித்தவர்.*

🔱 _பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த *ஸ்திரி தர்மா* என்ற இதழை நடத்தினார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பெண்கள் நலனுக்காக பாடுபட அனைத்து இந்தியப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்துப் பாடுபட்டார்_

🔱  _1930 ஆம் ஆண்டு அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். அந்த இல்லம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, கைத்தொழில் பயிற்சிப் பிரிவு, செவிலியர் பயிற்சிப் பள்ளி, பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி, முதியோர் இல்லம். என பல்கிப் பெருகி வளர்ந்து உள்ளது._

🏹 _*மூவலூர் இராமாமிர்தம்(1883 - 1962)*_🏹

🔱 *நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரை சேர்ந்த இவர் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்..*

🔱 1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார்

🔱தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. 1947லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது.

🏹 _*கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (பிறப்பு: 1926)*_🏹

🔱கிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள். கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை மூடப் போராடினார்.

🔱நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு *"உழுபவனின் நில உரிமை இயக்கம்"*(லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.

🔱2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

🏹 _*டாக்டர் தருமாம்பாள்*_🏹

🔱தஞ்சாவூரை சார்ந்த இவர் பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய *""வீரத்தமிழன்னை""*அவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர்.

🔱 *1930ல் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.*

🔱தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.
*""தந்தை பெரியாரின்""* கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார்.

🔱டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்.

🔱 *தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்*

🔱தமிழாசிரியர்களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, *‘இழவு வாரம்’* கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார்

🔱 1951ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் *தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ""‘வீரத்தமிழன்னை’""* என்ற பட்டத்தை வழங்கினார்.

🔱வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்

🔱மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959 ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.
பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டது.

🏹 _*அன்னை தெரசா  (ஆகஸ்டு26, 1910 - செப்டம்பர் 5, 1997)*_🏹

🔱1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர்

🔱1955 ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார்.

🔱பிறகு 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கினார்.

🔱 *இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.*

🔱அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

🏹 _*சரோஜினி வரதப்பன்*_🏹

🔱சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே சமூக சேவையில் நாட்டம் கொண்ட சரோஜினி, ஏராளமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தனது தாயார் ஞானசவுந்தராம்பாளுடன் இணைந்து *"பெண்கள் இந்தியா கூட்டமைப்பு"*மூலம் பல்வேறு சமூக சேவையாற்றி வந்தார்.

🔱இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் உறுப்பினராக இருந்த அவர், 1973ஆம் ஆண்டு, நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினையும், 2009ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் அவர் பெற்றார். தனது 80வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் இவர் தனது 92 வயதில் இயற்கை எய்தினார்.

🏹 _*M.லட்சுமி*_🏹

🔱1973 ஆம் ஆண்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து சமூதாயத் தொண்டாற்ற துவங்கினார். 1989 - 1994 அறிவொளி இயக்கத்தில் இணைத்து கல்விக்காக தம்மை அற்பணித்தார். அதன் பிறகு பொதுமக்களுக்காக, அரசாங்கத்திடம் இருந்து பல உதவிகள் வாங்கித் தருவதற்காக போராடி வந்தார். இதனாலேயே 2002 இல் இவர் இருக்கும் பகுதியான உப்பிளிப்பாலயத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று இயக்குனராக பதவி வகித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கி இவரது முயற்சியினால் பொதுமக்களிடையே முதலீடுப் பெற்று நல்ல நிலைமைக்கு உயர்த்தினார். 2008 இல் தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பில் இணைந்து ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் , குண்டு எறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துக்கொண்டு  வெற்றிபெற்று பதக்கங்களை அள்ளி குவித்துள்ளார்.

🏹 _*சிகப்பி ஆச்சி*_🏹

🔱 இவர் கல்வி சேவையில் அதிக ஆர்வம் கொடுத்தார்.
இவருடைய முயற்சியால் *""ராணி மெய்யம்மை பள்ளி""* உருவானது..

🔱1973ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

🔱மேலும் சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார்.
மேலும் இவரும் இவரது குடும்ப உறுபினரான குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

🔱பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது.

🔱 *பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் ""மாமியார்"" பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் ""மாமனார் பெயரையும்"" சூட்டுவது இவரது வழக்கம்.*

🔱 கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் *‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’*என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திட்டம் நிறைவேறியது.
மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது உயிருடன் இல்லை.

🏹 _*கவிஞர் சுகதகுமாரி (கேரளா)*_🏹

🔱30 ஆண்டுகளுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கில் தொடங்குவதாக இருந்த நீர்மின் திட்டத்தை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்தார். *“அரன்முலா “*வில் தொடங்கவிருந்த விமான நிலைய கட்டுமான பணிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் *கூடங்குளம் அனுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.*

🔱ஆதரவற்ற மனநலம் பாதித்த நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையமாக 1985-ல் கேரளாவில் தொடங்கப்பட்டது 'அபயா' இல்லம். ஆனால் தற்போது அவர்களுக்காக மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களுக்கு தஞ்சமளிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகவும், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மையமாகவும், பின்தங்கிய பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான குறுகியகால அடைக்கலத்திற்கான இல்லமாகவும் இருக்கிறது அபயா.

🏹 _*அருணா ராய்*_🏹

🔱ராஜஸ்தானை சேர்ந்த இவர். சென்னையில் பள்ளிப்படிப்பு, டெல்லியில் உயர்கல்வி, பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அடுத்தடுத்த படிகளை எளிதாகக் கடந்தவர்.

🔱 கணவர் சஞ்ஜித் பங்கர் ராயுடன் இணைந்து ராஜஸ்தானில் எளிய மக்களிடையே பணிபுரிய ஆரம்பித்தார். 1987-ல் *‘மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்'*என்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான அமைப்பை நண்பர்களுடன் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்க்ரியில் நிறுவினார்..

🔱 *ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா,* உணவு உத்தரவாதச் சட்டம் போன்றவை தேசிய அளவில் சட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்படவும் காரணமாக இருந்தவர்.

🔱 தமிழகத்தில் மது ஒழிப்புக்கு போராடும் பெண்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

🏹 _*மதுரை சின்னப்பிள்ளை அம்மாள்*_🏹

🔱 *"Dhan Foundation"* எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான *"களஞ்சியம்"* எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார். *"களஞ்சியம்"*என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.

🔱அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.

🔱 *இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது. பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது, இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களையே சாரும்.*

🏹 _*அஞ்சலி கோபாலன்*_🏹

🔱1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனையும் தொடங்கினார்.

🔱 2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவினார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது.

🏹 _*சுதா நாராயணமூர்த்தி*_🏹

🔱கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கணவருடன் இணைந்து *இன்போசிஸ்* அறக்கட்டளையை 1996-ல் தொடங்கினார். இதன்மூலம், சமூகத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். கல்வி, கிராமப்புற முன்னேற்றம், சுகாதாரம், மருத்துவம், கலைகள், கலாச்சார மேம்பாட்டு என பல்வேறு துறைகளில் இந்த அமைப்பு சேவை செய்து வருகிறது.

🔱 கர்நாடகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி, நூலக வசதிகள் ஏற்படுத்தித் தர தீவிர முயற்சி எடுத்தார். அங்கு இதுவரை 50,000 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 10,000 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
*நாட்டின் பல மாநிலங்களிலும் சுனாமி, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டபோது, வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ""பில்கேட்ஸ் பவுண்டேஷனின் சுகாதாரப் பிரிவு உறுப்பினராகவும்""" உள்ளார். பெண் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.*

🏹 _*சுனிதா கிருஷ்ணன்*_🏹

🔱இவர் தனது 8 வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தந்தவர், தனது 12 வயதில் ஒரு பள்ளியை நடத்தியவர், 15 வயதில் தலித் சமூகத்திற்கான கல்வி இயக்கத்தைத் தொடங்கியவர், அந்த காலகட்டத்தில் மனித விலங்குகள் எட்டுபேரால் சிதைக்கப்பட்டவர் சுனிதா கிருஷ்ணன்.

🔱 தனது 8 வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தந்தவர், தனது 12 வயதில் ஒரு பள்ளியை நடத்தியவர், 15 வயதில் தலித் சமூகத்திற்கான கல்வி இயக்கத்தைத் தொடங்கியவர்.

🔱 1996 ல் இவர்‌ *ப்ர‌ஜ்வாலா*என்ற அமைப்பை தொடங்கி இதன் முலம் பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. *இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும்  காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.*

🔱 *க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து..*

🏹 _*லீலாவதி மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினர் (1996)*_🏹

🔱மாதர் இயக்கத்தின் மங்காப்புகழ் பெற்ற லீலாவதி சுறுசுறுப்பான ஊழியர். தான் வாழ்ந்த பகுதி மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் காகப் போராடியவர்.

🔱 ரேசன் கடை முறைகேடுகள், மாநகராட்சி யின் இலவசக் குடிநீரைக் காசுக்கு விற் பது போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பினார். இன்னலுறும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க இடைவிடாது பாடுபட்டு வந்தார்.

🔱 *இவர் 1997ல் சமுக விரோதிகளால் வெட்டி கொலைசெய்யபட்டார்.*

🏹 _*கவுசல்யா பெரியசாமி*_🏹
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதேபோல் பாதிப்படைந்த
ஜோன்ஸ், வரலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து 98ல், *""பி.டபிள்யு.என்., - ""'பாசிட்டிவ் வுமன் நெட் வொர்க்'""* என்ற அமைப்பை உருவாக்கினார்..

🔱இதன் முலமாக இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகளுக்கு இலவச மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

🏹 _*கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (பிறப்பு: 1926)*_🏹

🔱 கிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள். கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை மூடப் போராடினார்.

🔱 *நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்" (லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.*

🔱 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.👍

_*அடுத்த பக்கம்*_
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :23.09.2017.*
         🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
         👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*வீர பெண் சிங்கங்கள் (பொதுநலனில் ஈடுபட்ட பெண்கள்) செய்த சாதனைகள்*?????
🦁👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🏹👱‍♀🦁

       💐 _*பாகம்*_⚜2⃣💐

🏹 _*மேரி*_🏹

🔱 1978-79களில், சேலத்தில் இயங்கி வரும், சேலம் சமூக சேவை அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் மூலமாக, கர்ப்பிணிகள், சிறுமிகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு, சத்துணவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வந்தார்.

🔱 மேலும் 1998ல், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுவில் சேர்ந்து ஏராளமான பெண்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் உதவி பெற்றுத் தந்திருக்கிறார். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்டுத்திக்கொள்ள வைப்பதுதான் அவரின்  நோக்கம் இதன்முலம் 2000-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். மேலும் சாதி எதிர்ப்பு, மதுவிலக்கு, விவசாயம், மீனவர் பிரச்னை, பெண் குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வு பாடல்களைப் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்.

🏹 _*டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்*_🏹

🔱 *"""மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண்"" ராஜம்மாள் தேவதாஸ்.*

🔱இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார்.

🔱கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.
*வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்தனர்.*

🔱 கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு *பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.* ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார்.

🔱 *‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.*

🏹 _*ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லிஜெயராம்(  24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016)*_🏹

🔱 *தமிழக அரசியலில் கோலோச்சிய முதல் பெண் திரைக்கலைஞர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த திரைத்துறை மற்றும் அரசியலில் ஒரு பெண்ணாக தனித்துவத்துடன் இயங்கி சாதனை படைத்தவர். கட்சியிலும் ஆட்சியிலும் தனது அதிரடியான நடவடிக்கைகளால் ""இரும்புப் பெண்மணி"" எனப் பெயரெடுத்தவர். இந்திய அரசியலிலும் தவிர்க்கமுடியாத தலைவியாகத் திகழ்ந்த பெண் அரசியல்வாதி.*

🔱இவர் கொண்டுவந்த *"""தொட்டில் குழந்தை திட்டம்"""*முலமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் பாடுபட்டார். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

🔱 *2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திடவும் முதலமைச்சராக இருந்தபோது ஜெ. ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்*

🏹 _*அஞ்சலி கோபாலன்*_🏹

🔱 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் *நாஸ் பவுண்டேஷனையும்* தொடங்கினார்.

🔱 2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவினார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது.

🏹 _*திருமதி. பரிமளா தேவி (57)*_🏹

🔱 திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் தனது 43 வயதுமுதல் வீட்டில் இருக்கும்பெண்களுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் , கல்லூரி  கல்லூரிகளிலும் சென்று  கைவினைபொருட்கள் செய்யும் பயிற்சியை  கற்று தருகிறார் . இதன் மூலமாகபயனடைந்தோர் ஏராளம்

🔱 *தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி தன்   கணவரின்  ஆதரவுடன் உடல் தானம் செய்ய   பதிவு  செய்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் ஆவார்.*

🔱மேலும்  உடல்தானத்தை பற்றி  பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பலபேர்  உடல்தானம்  செய்ய முன்வந்து பதிவு செய்துவருகின்றனர்.

🔱இவரது சேவை மனப்பான்மையை பாராட்டி திண்டுக்கல் ரோட்டரி கிளப் சார்பில்சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் பரிமளா  தேவிக்கு *""சாதனைபெண்""*என்ற பாராட்டு  கிடைத்தது.

🏹 _*தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்*_🏹

🔱 *""நேசவிழுதுகள்""* எனும் நண்பர்கள் குழுவை உருவாக்கி அதன் முலமாக படிக்க கஷ்டபடும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

🔱 மேலும் சென்னை வெள்ளத்தில் நேச விழுதுகள் மற்றும் *""shine treechy”"*என்ற அமைப்புடன் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டார்.

🔱 *இவருக்கு 2016 சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருதை பிரணாப்முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.*

🏹  _*மேதா பட்கடர்*_🏹

🔱 *மதுபானங்கள், போதை பொருட்களுக்கு எதிராக தனியாளாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்..*

🔱மேலும் தேசியஅளவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

🏹 _*டாக்டர் கமலி ஸ்ரீபால்*_🏹

🔱 *25 ஆண்டுகளாக, அல்லல்படும் அரிவையருக்காகவும், சிக்கலில் சிக்கும் சிறார்களுக்காகவும் பல உதவிகள் செய்துவருகிறார்..*

🔱 ப்ரோபஸ் கிளப் மற்றும் ரஷிய நாட்டுக் கலை, அறிவியல் மையம் இணைந்து டாக்டர் கமலி ஸ்ரீபாலுக்கு சிறந்த சமுதாய பணிக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது

🏹 _*சௌந்தரம் ராமச்சந்திரனின்*_🏹

🔱 நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. *வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.*

🔱 *செல்வச்செழிப்புமிக்ககுடும்பம்அவருடையது.ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார்.ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை.* *தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும், ஒடுக்கப்படுவதையும், புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.*
*தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார்*

🔱 கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவரானதும் கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

🔱 *இவர் ஆரம்பித்த காந்திகிராமிய பல்கலைகழகம்  பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.*

🏹 _*வீரம்மாள் (திருச்சி)*_🏹

🔱வீரம்மாள் பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்தவர் அதன் பின்பு படிபடியாக முன்னேறி. திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார். ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவரால் கைவிடபட்ட பெண்களுக்காக திருச்சியில் *"‘அன்னை ஆசிரமத்தைத்"" துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை ஏற்படுத்தினார் அதன் முலமாக பலர் பயனைடந்துள்ளனர்.*

🏹 _*மீனாட்சி*_🏹

🔱கோவையில் " பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மேம்பாட்டு கூட்டமைப்பு" (Society for Positive Mothers Development) என்ற அமைப்பின் மூலம்
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சில உதவிகளை (மருத்துவ உதவி, அலோசனை, யோகா, சத்துணவு, கல்வி) செய்து வருகிறார்.

🏹 _*காயத்ரி ராஜேஷ்*_🏹

🔱இவர் கோயம்புத்தூரில் பெண் தொழில் முனைவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாய், *""‘பெண்கள் தொழில்முனைவு செல்’""* (All Women Entrepreneur Cell- AWEC)என்னும் இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.

🏹 _*வைரமணி*_🏹

🔱 *கோயம்புத்தூரில் வெட்டியான்(ள்) வேலை பார்க்கும் இவர் ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.*

🏹 _*மூதாட்டி ரத்னபாய்(81)*_🏹

🔱நாகர்கோவில் மக்கள் கஷ்டப்படக் கூடாது, தலைமுறை, தலைமுறையா செஞ்ச படகு சேவையையும் விடக் கூடாதுன்னு தன் பேரன் வாங்கி கொடுத்த படகில். விளாத்துறை ஊராட் சியிலிருந்து மறுகரை மெது கும்மல் ஊராட்சிக்கு படகு  சேவை செய்து வருகிறார்.

🏹 _*மாரியம்மாள் வைகோவின் தாயார்*_🏹

🔱 தன்னுடைய 95 வயதில் கலிங்கபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்று குரல் கொடுத்தவர்.

🏹 _*சிவகாமி*_🏹

🔱 48 ஆண்டுகளுக்கு முன்பு நேரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, அதன் கிளைகளாக நேரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், குழந்தைகள் காப்பகங்கள், அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளி, மகளிர் மன்றம் போன்றவற்றை அமைத்து, தலைவராக உள்ளார். 130 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

🔱பல்வேறு சேவைகளை பாராட்டும் வகையில், 2009ல் குழந்தைகளுக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகி தேசிய விருதை முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார் அப்போது அவருக்கு வயது 82.

🏹 _*கவிஞர் சக்தி ஜோதி*_🏹

🔱பெண்களின் பொருளாதார சுயசார்புக்காகவும் சூழலியல் மேம்பாட்டுக்காகவும் *""‘ஸ்ரீ சக்தி டிரஸ்ட்’""* என்ற நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து செயலாற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஜோதியின் பின்னால் 46 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை நிர்வகிக்கிறார்.

🏹 _*ஜெயா (சென்னை)*_🏹

🔱 ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் செயல்படுத்திய நுண்கடன் திட்டம் ஏராளமான பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.

🏹 _*திருமதி.பவானி*_🏹

🔱திருநெல்வேலியை சேர்ந்த இவர் தன் கணவருடன் சேர்ந்து காலிபர் ஷூ வாங்கி இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி உதவுகிறார்.

🏹 _*டாக்டர் பானுமதி(சினிமா துறை)*_🏹

🔱 சென்னை சாலிகிராமத்தில் டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நிறுவி, அதன்மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கிவந்தார்

🏹 _*டி.எஸ்.கனகா டாக்டர்*_🏹

🔱 *ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற பெருமைக்குரியவர். மருத்துவ சேவைக்காக திருமண வாழ்க்கையைத் தவிர்த்தார்..*

🔱 மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகள், இலவச மருந்துகள் என்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார். இதற்கென்று கட்டணம் எதும் பெறுவதில்லை வேலைக்குச் செல்லும் இளைஞர்களைக் கருத்தில் கொண்டு விடுமுறை நாட்களில் சிகிச்சை அளிக்கின்றார்.

🏹 _*அனுசுயா*_🏹

🔱 உடுமலையை சேரந்த இவர் கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் அவர் சேவையின் நோக்கம். கிராமப் புறத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்புகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறார்.

🏹 _*ஜெனோவா புஷ்பம்*_🏹

🔱 திருநெல்வேலியை சேர்ந்த இவர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.

🏹 _*தெ.சிவகாமி, செ.கோமதி, கனகேஸ்வரி*_🏹

🔱 திருப்பூரை சேர்ந்த இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து *""நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை""* முலமாக சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர்களுக்கு முடித்திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடை, உணவு வழங்கப்படுகிறது.

🏹 _*ஜெயலட்சுமி*_🏹

🔱 தமிழகத்தில் முதன் முதலில் சுயநிதிக் கல்லூரியை துவங்கினார் அந்த கல்லுரியின் பெயர் அம்மன் கல்லூரி இதன் முலமாக நூற்றுக்கணக்கான  மாணவர்கள் பல உதவிகள் பெற்று படிக்கிறார்கள்.. +2 வில் 1000க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்லுரி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்குகிறார்.

🔱 *""ஈரோட்டின் இரும்பு மனுஷி'""*பல பொதுச் சேவை நிறுவனங்கள் வழங்கிய, "சிறந்த சமூக சேவகி' விருது என, பல விருதுகள் பெற்றுள்ளார்.

🏹 _*சாந்தி ரங்கநாதன்*_🏹

🔱 சென்னையை சேர்ந்த இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையினை ஆற்றி வரும் டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், டி.டி.கே. மருத்துவமனை மற்றும் சுவாமி தயானந்தா கல்வி மையம் ஆகியவற்றை நிறுவியுள்ளார்.

🏹 _*விஜயஸ்ரீ*_🏹

🔱 இவர் *""ஸ்ரீ மாதா டிரஸ்ட்""* இணைந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகள், இலவசமாக தங்கி, மருத்துவம் பார்க்கும் ஏற்படுத்தினார்

🔱 அதன்பிறகு *""ஸ்ரீ மாதா கேன்சர் கேர்""* நிறுவினார். அங்கு வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

🏹 _*திலகவதி ஐ.பி.எஸ்*_🏹

🔱 *திலகவதி தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி.*

🔱 பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண் உரிமைக்காக குரல் கொடுத்துவருகிறார்

🏹 _*ராதா*_🏹

🔱 கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் பள்ளியில் இடைநின்ற மாணவிகளை மீண்டும் படிப்பை தொடர வைத்தல், ஆதரவற்ற முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தல்- பின்னர் அவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்தல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தல், பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களை மீட்டு மறுவாழ்வு அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

🔱 *""பெற்றோர்கள், தங்கள் மகள்கள் மீது அவநம்பிக்கைகொள்ளக்கூடாது. மகள்களும் தங்கள் நடத்தை மூலம் பெற்றோருக்கு நம்பிக்கை யூட்டவேண்டும். தேவையற்ற எதிலும் கவனத்தை செலுத்தமாட்டோம் என்பதை உணர்த்தவேண்டும்"”* என்ற வேண்டுகோளை ராதா முன்வைக்கிறார். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி- கல்லூரி- சமூக அமைப்புகளில் செய்துகொண்டிருக்கிறார்.

🏹 _*எம்.சுமதி*_🏹

🔱 இவரது கணவர் குடியின் பிடியில் மாட்டி பல கஷ்டங்கள் துன்பங்களை கடந்து மீண்டுவந்தார்.

🔱 அதன்பிறகு தன் கணவரை போன்று பொதுமக்கள் பலரை மதுவிலிருந்து மீட்க கணவரின் உதவியுடன் பலரிடம் கடன் வாங்கி தற்போது *"""எம்.கே. பவுண்டேஷன் (மது போதை மறுவாழ்வு மையம்)"""* என்ற சமூக சேவை மையத்தை 2014-ல் விருதுநகரில் அமைத்துள்ளார்.

🏹 _*கவிதா (திருப்பூர்)*_🏹

🔱 தன் கணவருடன் சேர்ந்து இன்றளவும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஆதரவற்று சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவளித்து உதவி வருகிறார்.

🏹 _*வளர்மதி*_🏹

🔱 நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வருகிறார்..

🏹 _*திரு & திருமதி பெரியசாமி*_🏹

🔱 இவர் சென்னையில்  *பசுமை உலகம்*என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வருகிறார்..

🔱 இதில் பணி சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு , மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களும் உலகில் உள்ள சக மனிதர் போல வாழ்கை வாழ அவர்களுக்கு தேவையான தைரியம் வழங்குகிறது.

🏹 _*சபரிமாலா*_🏹

🔱 *’நீட்’ தேர்வுக்கு எதிராகவும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா அதற்குத் துறை ரீதியாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது அரசுப் பணியை உதறித் தள்ளியிருக்கிறார்..*

🔱 மேலும் இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக, நடுவராக இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு வசதிகள் இருந்தும் தன் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்.

🏹 _*சினேகா மோகன்தாஸ் (23)*_🏹

🔱 உணவு வங்கி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.

🏹 _*சுஹாசினி சினிமா நட்சத்திரம்*_🏹

🔱 இவர், தன்னுடைய, *'நாம் பவுண்டேஷன்'* என்ற, தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு உதவி வருகிறார்.

🏹 _*அனுரத்னா மருத்துவர்*_🏹

🔱இவர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைவர் பொருப்பில் உள்ளார்.. இவர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைவரான பிறகு மக்களின் மருத்துவ குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தார்..

🔱 2015ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பல முகாம்களில் பிரசவ வலியால் பெண்கள் அவதிப்பட்டனர். முகாம்களிலேயே  அவரது மருத்துவக் குழுவினருடன் தைரியமாக சிசேரியன்கூடச் செய்து முடித்தார்.

🔱 மேலும் வர்தா புயலின்போது பொன்னேரி இருட்டில் மூழ்கியிருந்தது. ஆனால் தங்கள் மருத்துவமனையில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து இரவு, பகலாக மருத்துவ உதவி செய்தார்.

🔱 *அவசரக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத் தால் அனுரத்னாவுக்கு இரண்டு முறை சிறந்த மருத்து வருக்கான மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப் பட்டுள்ளது. பொன்னேரியில் அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காகவும் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது.*

🏹 _*நர்மதா நந்தகுமார்*_🏹

🔱 *மதுவுக்கு எதிராக தன்னுடைய ஆசிரியப் பணியை விட்டுவிட்டு மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் புயலாகப் புறப்பட்டார். அந்த நேரத்தில்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. உடனடியாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். தொகுதி முழுவதும் சைக்கிளில் தனியாகப் பிரசாரத்தை மேற்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தத் தேர்தலில் 300 வாக்குகளைப் பெற்றார்.*

🔱 *அம்பத்தூர் ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை தனியாளாக ஒரே வாரத்தில் அகற்றினார்.*

🔱  தஞ்சாவூரில் காவிரி நீருக்காக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். விவசாயிகளிடம் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வூட்ட தஞ்சைக்கு விரைந்தார். தஞ்சை பெரிய கோவில் உள்ள அகழி முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்து, தஞ்சாவூர் மக்களைக் கவர்ந்தார்.

🔱 *மெரினா போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மதுரை பாலமேட்டுக்குச் சென்று ஒரு மாட்டு வண்டியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டார்*

🔱 *மணல் மாஃபியாக்களை எதிர்த்து கருர்ரில் தனியாளக போராடினார்.*

🏹 _*ஜெயகொடி*_🏹

🔱 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை  சேர்ந்த *மாற்று திறனாளி ஜெயக்கொடிமாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்*

🔱 மங்காபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி (29). இவரது ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கால் செயலிழந்தது. தாய் இறந்து, தந்தையும் வேறு திருமணம் செய்து விட்டதால், உடன் பிறந்தவர்கள் தயவால் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின் தீப்பெட்டி அட்டை ஒட்டி தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

🔱 சொந்த வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டாலும் விளையாட்டில் ஆர்வத்தை மட்டும் விட வில்லை. 2009ஆம் ஆண்டு மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

🔱 2010ல் அருப்பு கோட்டையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்

🏹 _*திருவண்ணா மலையைச் சேர்ந்த பிரித்தீ*_🏹

🔱 விபத்தில் உடல் உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தே செயல்படும் இவர்.

🔱 *விபத்துகளில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சோல் ஃப்ரி என்ற அறக்கட்டளையை தொடங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் பயிற்சி, சுய தொழில் ஆகியவற்றை வழங்குவதற்கு பாடுபட்டு வருகிறார்.*

🔱 இவருக்கு 2017 சுதந்திரதின விழாவில்  துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

🏹 _*ஆ.நந்தினி*_🏹

🔱 *தமிழகத்தில் மது அடிமையில் இருந்து விடுபட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி மாணவி  ஆ.நந்தினி 29.07.2013 அன்று முதல் இன்றுவரை தனியாளக தமிழநாட்டின் நலனுக்காக உண்ணாவிரதம் மற்றும் சைக்கிளில் சென்று பிரச்சாரங்கள் நடத்தி போராடி கொண்டிருக்கிறார்..*👍

*அடுத்த பக்கம்*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...