Tuesday, 31 October 2017

தமிழரின் பார்வையில் இந்திய இறையாண்மை

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :திங்கள்*🌹

🌹 *தேதி :30.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
*சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!*

💐 *ஏங்கல்ஸ்*💐

💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*புண்பட்டவர்களின் புலம்பலைப் பொறுமையாக கேட்பதும்,*

*சமூக சேவைதான்.*

📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*தமிழரின் பார்வையில் இந்திய இறையாண்மை*
🌍👀🤔😴🤔🇮🇳👀🤔😴🤔🌍

😇 *கலந்துரையாடல் குழு சார்பாக*
*இன்றைய தலைப்பிற்கு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்கணிப்பு ஓர் அலசல் உங்களின் பார்வைக்காக....*😆

🤓 *அண்ணே நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் ஆனா ஊனா இறையாண்மை பாதிக்கப்படுகிறதுனு சொல்லுறாங்களே அப்படினா என்ன அண்ணே?*❓🤔

🤗 *இறையாண்மை னா ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு இயக்கமோ, ஒரு அமைப்போ, ஒரு சமூகமோ தனக்கான அடையாளங்களுடன், தனது பாரம்பரியத்துக்கு தக்கவாறு, தன்னுடைய கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் ஏற்றவாறு தன் சமூகத்தை கட்டி எழுப்ப அல்லது உருவாக்க வரையறுக்கப்படும் ஒரு கொள்கை.👍அந்தக் கொள்கை வழி நிற்றலும், அதன் வழி தொடர்தலும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணமாகும்டா தம்பி.*🤷🏻‍♂

🤓 *அப்படியாண்ண நம்ம நாட்டோட இறையாண்மை என்னண்ணே?*❓🤔

🌍 🤗 *இந்தியாவின் இறையாண்மை என்னான்னா "வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது"  இது நம்மைப் பற்றிய விசயங்களை சுருங்கச் சொல்லி நிறைய விளக்கும் ஒரு தாரக மந்திரம். நம்மிடையே பல்வேறு விதங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. இனத்தால், மதத்தால், மொழியால்,கலாச்சாரத்தால், உடையால், உணர்வால்... இப்படி பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் அந்த வேறுபாடுகளைத் தாண்டி "இந்தியர்" என்கிற உணர்வால் ஒன்றுபட்டு இருப்பதையே இந்த "இந்திய இறையாண்மை" சுட்டுகிறது தம்பி.*🤷🏻‍♂

🤓 *அப்படியாண்ணே நம்ப ஆளுங்க எல்லாத்துக்கும் இது தெரியுமாண்ணே?*❓🤔

🤗 *நம்பல்ல பலருக்கு இது தெரிவதில்லை, புரிவதில்லை என்பது வேறு விஷயம்.*🙆🏻‍♂ *குறிப்பாய் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு.... இது என்ன அப்படின்னே தெரியாது.*🤦🏻‍♂ *இதுபுரிந்திருந்தால் நம்மை சாதி வாரியாகத் துண்டாட மாட்டார்கள்.*🔪 *இங்கே சாதீயப் பெயர்ச் சொல்லித்தான் பலக் கட்சிகள் தங்கள் பிழைப்பை நடத்துறாங்கடா தம்பி.*🤷🏻‍♂

🤓 *அண்ணே போங்கண்ணே எனக்கே யாரும் சொல்லல.*🤓

🤗 *ஆமாண்டா தம்பி. இந்திய தேசம் இவ்வளவு இழிவுகளை சந்திக்கக் காரணம், இந்த தேசத்தின்"குடிமக்களின் சிந்திக்காமையும் விழிப்புணர்வின்மையும்"  தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. நம்மிடையே இருக்கும்... சின்னச் சின்ன பொறுப்பற்றத்தனமும், 🔪அலட்சியமும்தான்.🔪 நம்முடைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.🔪 அவனை விட நான் உயர்வானவனாக தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்கிற முனைப்பில்தான் நம்மை நாம் இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.*🤦🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே புரியுர மாதிரி சொல்லுங்க.*❓🤔🤔

🤗 *வீட்டின் குப்பையை வீதியில் வீசுவதில் தொடங்கி, குடிநீரை பயன்படுத்த தெரியாத அறியாமையில் இருந்து... எச்சில் துப்புவது முதல்...சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் வரை எதிர்வீட்டுக்காரன்தான் நம்முடைய அதிக பட்ச இலக்காக இருக்கிறான். அல்லது பக்கத்து வீட்டுக்காரன். நம்முடைய சுகாதாரம், சுத்தம், தேவைகள், அத்தியாவசங்கள் யாவும் நமது வீட்டைச் சார்ந்ததாக மட்டுமே கருதுகிறோம். அது நமது நாட்டைச் சார்ந்தது என்கிற அறிவை நாம் இன்னும் பெறவில்லை.*🤦🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே நாம தமிழனா?❓ இந்தியனா?*❓🤔

🤗 *இந்தியனாக இருக்கிற ஒருவன் 🔥தமிழனாக, 🔥கன்னடனாக, 🔥தெலுங்கனாக, 🔥மலையாளியாக, 🔥பஞ்சாபியாக, 🔥குசராத்தியாக, மற்றும் 🔥மராட்டியனாக இருக்க நினைக்கிற போது, இந்திய இறையாண்மை நிச்சயம் பாதிக்கப் படும். 🔥அப்படி பாதித்து விடக் கூடாது*🙅🏻‍♂🙅🏻‍♂

🔥 *இதில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உலகின் வேறு நாடுகளில் தங்களது வேரினை பாதிக்கவில்லை.🙅🏻‍♂ அப்படி பதிக்காமல் போனது அவர்களது யோகமாக போய்விட்டது. ஆனால், இதில் தமிழன் மட்டும் விதி விளக்களிக்கப் பட்டவனாகிறான்.🤕🙇🏻 இவனுக்கு உலகின் பல நாடுகளில் வேர் இருக்கிறது.*👍

😠 *நிறுத்துங்கண்ணே வேரா? 😳❓நாம மனுசனா மரமாண்ணே?*❓

🤗 *நான் வேர் என சொல்வது, தமிழர்கள் தங்களை அதிகாரப்பூர்வக் குடிகளாக வெளிநாடுகளில் குடியேற்றம் பெற்றுள்ளதை பற்றியது*😊

😏 *போங்கண்ணே இலங்கைல போய் செத்துகிட்டு தான் இருக்காங்க இந்திய இறையாண்மை என்ன பண்ணுச்சுண்ணே?*❓🤙🤙🤙🤙

😡 *இலங்கைப் பிரச்சனைக்கு ஒருத் தமிழன் துடிக்கிறான். ஆனால் ஒரு சிங்களவனோ ( நான் சொல்வது இலங்கைவாழ் சிங்களவன் அல்ல.. இந்தியாவில் வாழும் சிங்களவன் ) பஞ்சாபியோ, மராட்டியனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ... எவனும் துடிக்காமல் போனது ஏன்...??? ⁉😡ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவனது இனம் இல்லை. அதனால் அவன் அமைதிக் காக்கிறான்.*😠

😏 *சரி. நம்முடைய பக்கத்து மாநிலம் தமிழ்நாடு, நமது மொழியின் தாய் தமிழ்... என்கிற உணர்வில் ஆதரவு மட்டுமாவது தருகிறானா என்றால் அதுவும் இல்லை. 🙅🏻‍♂அவன் நமக்கே தண்ணீர் தர மறுக்கிறான். நம்மிடம் மின்சாரம் பெறுகிறான்.*👊

🤜 *இப்படி இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரே இனமாக என் தமிழினம் இருக்கிறது. 🤦🏻‍♂ஒன்று நம் உணர்வுகள் புரிந்து மற்றவர்களும் நமக்கு ஆதரவளித்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும்...🔪 அல்லது தமிழனாக நாம் போராடி நம்முடைய உரிமையை பெறவேண்டும். 🔪அதற்கு தடையாக இருக்கும் ஒன்றை நாம் இறையாண்மை எனக் கொள்வது எப்படிடா தம்பி சாத்தியம்..*🤙🤷🏻‍♂🤷🏻‍♂

🤜 *எமது விரல் கொண்டு எம் கண்ணை குருடாக்குவது போல இந்திய இறையாண்மைப் பேசும் இந்திய அரசு நமது ஆயுதங்களை கொடுத்து தமிழ் இனம் அழிய உதவியது இந்திய தமிழனுக்கு எதிரான செயல் இல்லையாடா தம்பி.🤷🏻‍♂ இந்திய தமிழர்கள் இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலமாக இருக்கும் போது, எப்படி அந்த இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு ஆயுதம் வழங்கியும், படை அனுப்பியும் உதவலாம் நீயே யோசிடா தம்பி. இதைவிட கொடுமை நம்ம இனத்தை அழித்தவனுக்கு இந்தியாவில் சிவப்புக்கம்பள விரிப்பில் வரவேற்பு இதுதாண்டா தம்பி நம்ம இறையாண்மை.*👊🤷🏻‍♂🤷🏻‍♂

🤓 *அண்ணே முன்னாடி தான் இந்தியா, ஒருமைப்பாடுன்னு பேசுனீங்க இப்ப தமிழ் இனத்தை பத்தியே பேசுறீங்க....*🤔🤔

🤜  *தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் 👊. . .இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எதையும் பெருசா செய்யல. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது.*👊👊👊👊

🤓 *அண்ணே இந்தி கத்துறது தப்பில்லையே? ❓அதுவும் எழுத்துதாண்ணே?*❓🤔🤔

🤜 *எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது.🙅🏻‍♂ இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . .👊ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை கோக்கும். . . . .இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து.👍 எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? ❓🤙👊. . . . கூட்டரசு  என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.😡*

🤓 *அண்ணே கூட்டரசா அப்படின்னா?*❓🤔

🤗 *பல மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பே கூட்டரசு.*🤝🤝

🤓 *அண்ணே சும்மா சிரிப்பு மூட்டாதிங்கண்ணே.*🤣😂

🤗 *மாணவப் பருவத்திலிருந்து ‘இந்தியா எனது தாய்நாடு - இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று வளர்கிறோம்.ஆனால், கள நிலவரமோ வேறு விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் நமது அண்டை மாநிலங்களால் உருவாக்கப்படுவதும், அதனைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ‘இறையாண்மை என்பது, ஒருவனைப் பலியிட்டு மற்றவருக்குப் படையலிடுவதல்ல. மாறாக, வளங்களைச் சமமாகப் பகிர்வதே’ என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்வார்களான்னு தெரியலடா தம்பி.*🙆🏻‍♂🤦🏻‍♂

🤜 *ஒரு மாநிலத்தவர் மின்சாரம் வேண்டும், ஆனால் தண்ணீர் தர மாட்டோம் என்கிறார்கள்.*😡

🤜 *மற்றொரு மாநிலத்தவர் காய்கறிகளும், அரிசியும் வேண்டும். தம் மாநில மருத்துவ கழிவுகளை கொட்ட இடம் வேண்டும் ஆனால் தண்ணீர் தரமாட்டோம் என்று நம் மாநில மக்களை அடித்தும், பெண்களை மானபங்கம் செய்கின்றனர்*😡

😡🤜 *இந்த இரு மாநிலத்திற்கும் இடையில் எரிவாயுவை எடுத்து செல்ல நம் மாநில விவசாய நிலம் வேண்டுமாம்*👊😡

🤜 *இன்னும் சொல்ல போனால் குஜராத், மகாராஷ்டிராவின் மீனவர்கள் பாகிஸ்தானால் கைதுசெய்யப்படும்போது இந்தியமீனவர்கள் கைதுன்னு செய்திவாசிக்கும் தொல்லைகாட்சிகள் நம்மீனவர்கள் இலங்கை கடற்படை மூலம் கைதுசெய்யப்படும்போது தமிழகமீனவர்கள் கைதுன்னு செய்திவாசிக்கும் முறையே எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடுகிறது*👊😡

🤓 *அண்ணே நாட்டுல தான்ண்ணே இவ்வளவு பிரச்சனை பேசாம நாம காட்டுலையோ இல்லை மலையிலையோ போய் வாழ்தடலாண்ண*🤔🤔

🤗 *தம்பி காட்ட மட்டும் உட்டுட்டாங்கனு நினைக்குறையா,😏 வளத்தை அழிக்க அவங்களை எல்லாம் காட்டைவிட்டு துரத்தி அடிக்குறாங்க, போவலன்ன நக்சல் அன்றுறாங்க. இன்னும் புரியனும்னா நாகராஜசோழன் MA. MLA , வனமகன் படத்தை பாருடா தம்பி புரிஞ்சுக்குவ.*🤐

🤓 *அண்ணே நம்ம அரசியல்வாதிகள் என்னதான் செய்யுறாங்க?*❓🤔

🤕 *அத ஏம்பா கேக்குற ஒருத்தருக்கு நம்ம பிரதமர் பேரே தெரியில, இன்னொருத்தர் தெர்மாகோல போட்டு அணைய மூடுறார், இன்னும் நிறைய கூத்தா போயிட்டு இருக்கு*🤦🏻‍♂🤦🏻‍♂

🤜 *இந்தியாவிலேயே மூன்றாவது அதிக அவை உறுப்பினர்களை கொண்டது தமிழகம் ஆனா அவங்க பெருசா ஒன்னும் செய்யல*👊

🤜 *கர்நாடக, கேரள மாநில உரிமைக்காக அம்மாநில அமைச்சர்கள் பதவி விலகுவதாக கடிதம் தராங்க நம்ம ஆளுங்க ஒன்றும் இல்லை*🤦🏻‍♂

🤜 *இங்க ஒருத்தர் இலங்கை பிரச்சனைக்காக டில்லி போனாருனு பாத்தா அவரு பெண்ணுக்கு அவைல இடம் வாங்கி தர போயிருக்கார்.*🤦🏻‍♂

🤓 *ஆமாண்ணே இதுக்கு என்ன தான் தீர்வு?*❓🤔

🤒 *எனக்கு தெரிஞ்சத சொல்லுறேண்டா தம்பி*👇

🤜🤦🏻‍♂ *தமிழக அரசிற்கு இறையாண்மை  இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு நீதி வழங்கப்படாது.*🙅🏻‍♂🔪

😳 *அண்ணே என்னண்ணே தனிநாடு கேக்குறீங்களா?*❓🤔

🤒 *தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு.☹ தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு.☹ கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக🤝 இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும்.👍 கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும்,👍 ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். 👍இதன்படி  நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம்.🤝👍*

🤓 *அண்ணே நடக்குறத பேசுங்கண்ணே.*🤓

🤗 *அட தம்பி நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் சட்டம் இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது.🔪🙅🏻‍♂ என்றாலும் தற்போதைய அரசியல் சட்டத்தின்  அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.👍*

🤓 *அண்ணே பேச நல்லா இருக்கும் ஆனா?*❓🤔

🔥🌍 *1957 இல் ஜம்மு-காஷ்மீருக்கெனத் தனி அரசியல் சட்டம் இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் ஜம்மு-காஷ்மீர்க் குடிமக்கள் பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் சட்டம் (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, ஜம்மு-காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது.*🔪

🔥 🌍🔴 *இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.*🔴🔪

🔥🌍 *எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் சட்டம் இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப கூட்டரசின்  இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.*🔪

🤒🤗 *தம்பி எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன், நீ நல்லா யோசித்து முடிவெடு.*🤗

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1⃣ சிறந்த பேச்சாளர்கள்*

🏅 *தமிழன் navask*
🏅 *Jaiganesh2881*
🏅 *Syed Basha*
🏅 *க.நிருபன்கதிர்*
🏅 *மயிலை முருகன்*

👑 *கலந்துரையாடல் 2⃣ சிறந்த பேச்சாளர்கள்*©®
🏅 *Rishi Bm*
🏅 *☂ Kudaykul Malay ☂*⁩
🏅 *AK⁩*
🏅 *🌹Ravi💞kalai🌹*⁩
🏅 *பிராபகரன் சிதம்பரம்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🤔 *வேற்றுமையில் ஒற்றுமை...ஆம் உண்மையே....*

😔 *வேற்றுமை* *(தமிழகம்,தமிழ் மக்கள்)*
😞 *ஒற்றுமை (பிறமாநிலங்கள்)*

🤔 *இறையாண்மை என்றால் என்ன?*
*யார் அடித்தாலும் வாங்கிகொள்ளவதா???*😡

😡  *இந்தியாவை வல்லரசு நாடாக்கும் அரசியல்வாதிகளே இறையாண்மை என்றால் என்ன என்றாவது சொல்லுங்களேன் ........*👊

🔥 *பொறுமையாய் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் சகித்து போவன், கோழை அல்ல, அவன் பொங்கினால் பெரும் எரிமலை....!!*

🔥 *அடி வாங்குவதால் அடிமை என்று எண்ணிவிடாதே....*

🔥 *வலியும் வேதனையும் அனைவருக்கும் ஒன்று என்று எண்ணு...!!!*

🔥 *உரிமையும்,கடமையும் அனைவருக்கும் வேண்டும் என நினை...!!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*'எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்'*
*'தண்பகத்தான் தானே கெடும்'*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*படைவளமும், தன் ஆட்சி மீது நம்பிக்கையும் கொண்ட ஆட்சியாளர், தம் மக்களை அடக்கியா ஆளுவார்? தம் எதிரிகளை ஒடுக்கி, நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் ஒருவருக்கு ஏதேனும் தொல்லைகள் வர முடியுமா என்ன? தன் குடிமக்களின் குறைகள் என்னவென்று நாள்தோறும் கேட்டுத் தெரிந்து, மக்களின் உணர்வுகள், துயரங்கள் பற்றிய அக்கறை பெரிதும் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எளிமையாகக் காணுமாறு வாழும் தலைவரின் ஆட்சியில் என்ன தவறு நேர முடியும்? அத்தனை மக்களிடமும் அளவளாவி, அவர்தம் தேவைகளையும் முறையீடுகளையும் சீர்தூக்கிப், பலரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவெடுக்க ஒருவரால் இயலுமா? தலைவரிடம் தம் குறை சொல்ல எளிதில் இயலும் என்றால் கூட்டம் அலைமோதத் தானே செய்யும்? சற்றும் நேரமின்றி, ஏனோதானோவென்று போகிற போக்கில் முடிவெடுத்துக் குழப்பம் ஏற்படுத்தும் ஆட்சி, தன் இறையாண்மை சீர் கெட்டு, வெளிப்பகை ஒன்று தேவையின்றி, தானே கெட்டு அழிந்து விடாதா? எத்தனை தான் இரக்கமும் அன்பும் மக்களிடம் இருந்தாலும், தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து ஆட்சி செய்வதே நல்லாட்சிக்கு அழகு!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

☄ *தெரிந்து கொள்ளவும்*☄

*கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா????*

☄ *அறிந்துகொள்ளவும்*☄

*பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.*

☄ *புரிந்துகொள்ளவும்*☄

*நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.*

*உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🌟 *புதிய முடிவுரை தொகுப்பாளர் (🤴🏻அறிமுகம்🤴🏻)* 🌟

    👨🏻👨🏻👨🏻‍💻✍ *SPVIGNESH*
        *9789468428*✍👨🏻👨🏻👨🏻‍💻

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, 29 October 2017

நேதாஜி பற்றி மறைக்கப்பட்ட வரலாறு


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🔎 *மறைக்கப்பட்ட* 🔍 

⚖ *உண்மைக்காக* ⚖
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :சனி*🌹

🌹 *தேதி :28.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
💪 *இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டி வைக்கும் ஆற்றல், இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை.*

💪 *~நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்*💪

💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
💪 *அரசை எதிர்த்து போராடி,வீரத்துடனும்,துணிவுடனும் வாழ்ந்து மறைந்த ஒவ்வொருவர் மரணமும் இங்க மறைக்கப்பட்டு தான் இருக்கிறது.*😡 *ஒவ்வொருவர் மரணமும் இங்கு சர்சையாகவே தான் இருக்கு.*

         📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*மக்களிடம் அதிகம் அடையாளம் படுத்தப்படாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஒரு அலசல்.*

👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈

                  *பாகம்*➡1⃣

👨‍✈🙏 _*இவர் கடந்து வந்த கரடு முரடான பாதையில் அவ்வளவு வீரம், எண்ணிலடங்காத தியாகம்,கணகிளடங்காத போராட்டம்,மறக்கமுடியாத சிறை வாழ்க்கை,சர்ச்சை குறைய மரணம் இப்படி அனைத்தும் கலந்த கலவை தான் 🇮🇳 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.🇮🇳*_

👨‍✈🇮🇳💪 *20 ம் நூற்றால் இந்த உலகம் சந்தித்த ஈடு இணையற்ற மாபெரும் வீரன் இவர்,பிறந்த இந்திய மண்ணினி மீது பாசம்,மக்களின் மீது அன்பு,சுதந்திர வேட்கை,எவருக்கும் அஞ்சாத போகுணம்,எதற்கும் பயபுடாத அஞ்சா நெஞ்சம் என இவை அத்தனையும் மொத்தனாக குத்தகைக்கு எடுத்து சுத்தமான தேசிய தலைவர் எங்கள் 🇮🇳சுபாஷ் சந்திர போஸ்.*💪👍

💪🏻 👨‍✈ *ஜனவரி(JANAUARY) 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்.* 👦🏻💪
   
👨‍✈ 🔥 _*கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால் பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அதுதான்.*_👍
    
👨‍✈💪🇮🇳 _லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா⁉ 👉 *"வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன"* ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி._🙁

👨‍✈💪🇮🇳 *ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய சுபாஷ் சுந்திர போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. 😡அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, _1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்.!_*👍

👨‍✈🇮🇳 *சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார்.  `ஸ்வராஜ்’என்ற📰 பத்திரிகையிலும் பணியாற்றினார்.*👨‍✈

👨‍✈💪🔴 _*"குருதியைக் கொடுங்கள், உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்"*_என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்.💪👍

💪🏻👨‍✈ _*நேதாஜியின் கொள்கை*_👨‍✈💪🏻

👨‍✈💪 *"நான் தீவிரவாதிதான், எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை"*👍 _1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழக்கமிட்டார்!!!._👍

👨‍✈🇮🇳 *போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். _"மரியாதைக்குரிய தலைவர்"_ என்று  அர்த்தம்!!*👨‍✈👍💪

👨‍✈🇮🇳🔥 _ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான விரிசலை அதிகமாக்கிய சம்பவம்._ 😰 *இருவரும் ஒரு கட்சியில் இருந்து மாறி மாறி கருத்து பத்திவிட்டதால் பல சர்ச்சைகள் அரங்கேறியது🤕 அன்று,காங்கிரஸ் தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வலுத்தது நேதாஜி கு.* *காங்கிரஸ் தலைமை நேதாஜி கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை*😡

அதனால்,
  
👨‍✈🇮🇳 *_1939 -ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.👍 நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ்._* 😡😡

👨‍✈💪 *பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.😏 இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளி யேறினார்.*😞

👨‍✈🇮🇳💪 *‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங் கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில்* *அடைத்தது.‘ இரண்டாம் உலக ப்போர் நடந்து கொண்டிருந்த* *மும்முரமான கால கட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவே டம் அணிந்து* *சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடை ந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தா னை அடைந்தார். ரஷ்யா* *வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என நினைத்த நேதாஜி இந்து குஷ் கணவாய்* *வழியாக ரஷ்யாவை* *அடைந்தார். _எதிர்பாராத விதமாக 🔴""ஹிட்லரின்"""அழைப்பு வரவே, அவரின் அழைப் பை ஏற்றுபின்னர் ஜெர்மனியி லுள்ள மாஸ்கோவை அடை ந்த அவர், இந்திய சுதந்திரத் தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்._*💪🤝

👨‍✈💪 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால்,  அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். 😰 அப்போது அவர் ஆரம்பித்தது தான்
💪👨‍✈ *"ஃபார்வர்டு பிளாக்" கட்சி.*💪👨‍✈
   
👨‍✈💪 *பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் சந்திர போஸ் , 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்தார்.*👍

👨‍✈💪🔫💣 *ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி    _"இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்" என்று ஹிட்லர் கை குலுக்க,_ 💪🇮🇳 _வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்,_ _என்று உடனே பதில்_  _அளித்தார்நேதாஜி._*👍💪👨‍✈

👨‍✈💑 _திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. 😍இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு. ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த *"இந்திய சுதந்திர அரசு"* என்ற அமைப்புக்கு ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி.!_👨‍✈💪

👨‍✈💪👍 *"இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்"* _இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது._👍

👨‍✈💪 *1944-ல் ஆசாத் ஹிந்த் வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, _"தேசப்பிதா"_ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் "சுதந்திர இந்தியா"என்று பொருள்.*👍
   
👨‍✈👴 *_காந்திக்கும் போஸீக்கும் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை "தேசப் பிதா" என்று அழைத்தாரோ, அப்படியே காந்தி, போஸை "தேச பக்தர்களின் பக்தர்" என்று அழைத்தார்!!_*👍🤝

👨‍✈💪👍 *_சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது._*👍

👨‍✈💪 _தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக *"ஜெய் ஹிந்த"... அதாவது,"வெல்க பாரதம்"* என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி அவர்கள் , அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் *செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!!!*_💪👍
   
👨‍✈💪  *_பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், "இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல"_*👨‍✈💪👍

👨‍✈💪 *ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி.* 🤗💪👍
   
👨‍✈💪 *_பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!!!_*👨‍✈💪👍

👨‍✈💪 *1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது.😣 அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!*💪👍
   
👨‍✈💪 *டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார்.*👨‍✈💪👍

👨‍✈💪 உடனே நேதாஜி, *"சுதந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்"* என்றார்.💪👍 _ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று._👨‍✈💪👍

👨‍✈😱😔 *1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது.😱 ஆனால், தைவான் அரசாங்கமோ. அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது.*😰😳

👨‍✈😡 🔴 *_இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை.👎 நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!_*🔴

👨‍✈✍  😔 *"ஒரு இந்தியனின் புனித யாத்திரை" இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!*✍👨‍✈😰😔

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🔎 *மறைக்கப்பட்ட* 🔍 ⚖ *உண்மைக்காக* ⚖
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :சனி*🌹

🌹 *தேதி :28.10.2017* 🌹
__________________________________

         📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*மக்களிடம் அதிகம் அடையாளம் படுத்தப்படாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஒரு அலசல்.*

👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈

                  *பாகம்*➡2⃣

👨‍✈🔎 *நேதாஜி மரணம் பற்றிய சர்ச்சை*🔍👨‍✈

👨‍✈🔎 ✈ *நேதாஜி 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும்.*😰

😴 *ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும்*

👨‍✈🔎😰 *ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.*🤔🙄

👨‍✈🔎⁉நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மர்மம் விலகவில்லை. நேதாஜி பிழைத்திருந்ததற்கான சாத்தியங்கள், சாட்சியங்கள் தவிர்க்க முடியாதவை.நேதாஜி மரணம் பற்றி உண்மை அறிய இந்திய அரசால் மக்களின் கேள்வியாள கமிட்டி அமைக்கப்பட்டு விசாரித்தனர்.⁉

🔎 *ஷாநவாஸ் கமிட்டி*🔍

👨‍✈⁉ *_நேதாஜி 1945, ஆகஸ்டு 16 அன்று தபே விமான நிலையத்தில் நடந்த விபத்தில் தான் இறந்தாரா என்பதை ஆய்வு செய்ய இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக முதன்முதல் நியமிக்கப்பட்ட குழு ஷாநவாஸ் கமிட்டி._*
நேதாஜி காணாமல் போய் 11 ஆண்டுகளுக்குப் பிறகு- 1956- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது.
அது விபத்து நடந்த இடமான தைவானுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காரணம் அந்த அரசுடன் சுமுக உறவு இல்லை என்று அரசால் கூறப்பட்டது.
1956 மே 18 ல் ஜப்பான் சென்றபோது ஷாநவாஸ் தைவான் செல்ல அனுமதி கேட்ட பொழுது அவர் இறந்துவிட்டார் ஆய்வு செய்ய வேண்டாம் என கூறப்பட்டட்டது.🙁 காங்கிரஸ் அரசு இது குறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. ஷாநவாஸ் கமிட்டி ஜப்பான் அறுவை சிகிச்சை நிபுணர்களைச் சந்தித்தது. அவர்கள் "தீவிரமாகக் காயம்பட்ட நேதாஜிக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால் காயம் காரணமாக பின்னர் அவர் இறந்தார்" என்றும் கூறினார்கள். ஷாநவாஸ் கமிட்டி அதையே அறிக்கையாக சமர்ப்பித்தது. ஆனால் கமிட்டி உறுப்பினரும் நேதாஜியின் மூத்த சகோதரருமான சுரேஷ் சந்திர போஸ் கமிட்டி முடிவுடன் ஒத்துப்போக மறுத்துவிட்டார்.👎

🔎 *கோஸ்லா கமிஷன்*🔍

👨‍✈🔎⁉ 1974 இல் தொடங்கப்பட்டு 4 வருடங்கள் கழித்து அறிக்கை சமர்ப்பித்து எந்த திட்டவட்டமான முடிவுக்கும் வரவில்லை.👎

🔎 *ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன்*🔍

👨‍✈🔎⁉ 1999- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் 2005-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அது எழுத்துப்பூர்வமான சாட்சிகள், மருத்துவ பதிவுகள், விமான நிலைய பதிவுகள் ஆகியவற்றை ஆதாரமாக எடுத்துக் கொண்டது. 🙁

🔎 இந்த கமிஷனிடம் 5 கேள்விக்கு பதில் கூறும்படி கூறப்பட்டது...❓👇👇

👉 *1⃣.சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டாரா? உயிருடன் இருக்கிறாரா?*⁉

         *_பதில் : சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டார்._*😏🤦🏻‍♀

👉 *2⃣.இறந்து விட்டார் என்றால் கூறப்பட்ட விமான விபத்தில் தான் இறந்தாரா?*⁉

          *_பதில் : விமான விபத்தில் இறக்கவில்லை. ரஷ்யாவிற்குத் தப்பியிருக்கலாம்._*🤦🏻‍♂

👉 *3⃣.ஜப்பானியக் கோவிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தியா?*⁉

         *_பதில் : ஜப்பானியக் கோவிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தி இல்லை._*🤦🏻‍♀

👉 *4⃣.வேறு இடத்தில் இறந்தார் என்றால் எங்கே? எப்போது? எப்படி?*⁉

         *_பதில் : நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாததால் கூற இயலாது._*🤦🏻‍♂

👉 *5⃣.உயிருடன் இருக்கிறார் என்றால் எங்கே?*⁉

        *பதில் : கேள்வி பொருந்தாது.*🤦🏻‍♀

🔎 ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் 2005-ல் சமர்ப்பித்த அறிக்கையை காங்கிரஸ் அரசாங்கம் காரணம் கூறாமல் நிராகரித்தது. 👊இந்த கமிஷன் பாரதீய ஜனதாக் கட்சி அரசால் அமைக்கப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பு காங்கிரஸ் அரசு வந்துவிட்டது.😡

👨‍✈ 😡 *ஜப்பான் கோவிலில் உள்ள அஸ்தி நேதாஜி உடையது இல்லை என்று உறுதிபட கூறிய இந்த அறிக்கையை இந்திய அரசு உட்பட எந்த அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.*👎

👉 *ஹபிபுர் ரஹ்மான்*👈

👨‍✈ நேதாஜியுடம் சென்று உயிருடன் திரும்பிய ஒரே நபர் இவர் மட்டுமே, இவரிடம் நேதாஜி இறப்பு பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போதிலும் அவர் விமான விபத்தில் தான் இறந்தார் என கூறினார்,ஆனால் பல குறுக்கு விசாரணை மேற்கொண்டு போதில் அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை அதனால் தன் தலைவனுக்கு விசுவாசமாக இருக்கிறார் என விமர்சனம் வைக்கப்பட்டது.இவரை நேச நாடுகள் எதிரியாக பார்த்தது.👍😏

👨‍✈ போன்ஸ்லே என்பவர் ஹபிபுர் ரஹ்மான் பற்றிக் குறிப்பிடும்போது *"எனக்கு ஹபிபுர் ரஹ்மானைத் தெரியும். அவர் தனது தலைவருக்கு ஏதாவது உறுதி மொழி கொடுத்திருந்தாரானால் அவர் இறக்கும் வரை அவர் அதை மீற மாட்டார்"* இது மிகவும் கேள்விகளை எழுப்பியது சர்ச்சை மேலும் அதிகரித்தது...☹

👨‍✈💪 *1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரம்.*🔍

      👨‍✈🔎 *1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் குறிப்பிட்டார்.* இதன் காரணமாகவே நேதாஜி இறப்பு பற்றிய சர்ச்சை அதிகரித்தது, இதன் பிறகே நேருவாள் ஷா நவாஸ்கான் கமிஷன்  அமைக்க  தூண்டியது.⁉

       👨‍✈🔎 *விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.*⁉

      👨‍✈🔎 *இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும்.*🔪

      👨‍✈🔎 *1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.*🔪

      👨‍✈🔎 *மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.*🔪

      👨‍✈🔎 *நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய காங்கிரஸ் அரசாங்கம் தயாராக இல்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும்,😡 ஒருவேளை ஆராய்ந்திருந்தால் கண்டிப்பாக இந்த மர்மம் அனைத்தும் இருந்திருக்காது.*🔪

🔎🔪 இதை எல்லாம் தாண்டி தற்பொழுதும் அரசுக்கு பலர் கேள்வியையும் கோரிக்கையையும் வைத்து தான் வருகிறார்கள் அவ்வப்போது சில சர்ச்சைகள் வந்தும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அவை கீழ் கண்டவாறு 👇👇

👨‍✈🔎 நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான். சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு☹
*கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரி 11 ம் தேதி இப்படி ஒரு அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுப்பிரமணிய சாமி. அப்போது நேதாஜி பற்றிய தகவலை அறிய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட  பொழுது அதற்க்கு 41 ஆவணங்கள் உள்ளதாக அறிககை சமர்ப்பித்து அதில் 2 ஆவணங்களை மட்டுமே வெளியிட்டது மற்றது எதையும் வெளியிட மறுத்து விட்டது என்பது குறிபோடத்தக்கது.*☹ இந்த ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு மத்திய அரசிடம் மற்ற ஆவணங்களையும் வெளியிடும்படி வைகோ,ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ்,திருமாவளவன்,மு.க.ஸ்டாலின் என் கோரிக்கை வைத்தனர், பிறகு வெளியிடாததற்கு எதிர்ப்புகளையும் மத்திய அரசுக்கு தெரிவித்தனர். 🔪

👨‍✈🔎 *இவைகளையெல்லாம் மீறியும் நேதாஜி பற்றிய மர்மத்தை வெளியிடாமல் மத்திய அரசு அமைதி காத்துகொண்டு தான் உள்ளது.*😡

👨‍✈🔎 இன்று வரை நேதாஜி மரணம் பற்றி கொடுக்கப்பட்ட அறிக்கைகளிலில் நேதாஜி உயிருடன் இருக்கார் என்பதையும் நிரூபிக்க முடியவில்லை,👎உயிருடன் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை.👎 மேலும் மர்மம் அறிய அமைக்கப்பட்ட கமிஷன் மூலம் கொடுக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளிலும் முன்னுக்கு முரணான கருத்துகள் மற்றும் வேறுபாடுகள் பல உள்ளதும் தெரிந்தது இதனால் இன்று வரை ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தான் தவித்து வருகிறது மத்திய அரசு.😡🔪

👨‍✈🔎 *மத்திய அரசிடம் மீதம் உள்ள ஆவணங்கங்களை சமர்பித்தால் மேலும் விவரங்களை அறிய முடியும் என்பது தான் மக்களின் கருத்து.*  *குராஜாத் முதல்வராக மோடி இருந்த பொழுது அவரிடம் மனு கொடுத்த சிலருக்காக மத்திய அரசிடம் மோடி கோரிக்கை வைத்தார் ஆனால் தற்போதைய மத்திய அரசாகவே பயணம் செய்து கொண்டிருக்கும் பாஜக அரசும் முழுமையான அறிக்கையை கொடுக்க முடியவில்லை என்பது மிகவும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.*😰

👨‍✈🔎 *இந்திய அரசு கோப்புகள் வெளியீடு.*
👇👇
👨‍✈🔎 *_தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள்._* 📃

👨‍✈🔎 *_நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில் அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இதனால், மத்திய அரசு கடந்த ஜனவரி 23-ம் தேதி நேதாஜியின் 119-வது பிறந்தநாள் அன்று நேதாஜி தொடர்பான 100 ஆவணங்களையும், மார்ச் மாதம் 50 ஆவணங்களையும், 25 ஆவணங்களையும் வெளியிட்டது. இவை 1956-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலானவை. இவை அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையத்திலும் இந்த ஆவணங்களை பார்க்க முடியும். இந்த ஆவணங்களை ஆய்வு செய்து, ‘நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது நேதாஜி ரஷ்யாவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்’ என்கிறார்கள்_*😰

✈ _*விமான விபத்து ஒரு நாடகம்*_✈

👨‍✈🔎✈ *இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி ஜப்பானில் இருந்தார். பிரிட்டன் சார்பாக போரிட்ட இந்திய வீரர்களை ஜப்பான் அப்போது கைது செய்திருந் தது. ‘எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்’ என்ற அடிப்படையில் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்துக்கு அந்த வீரர்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அந்த வீரர்களை ஜப்பான் விடுதலை செய்தது.☹ அவர்களையும் தென் தமிழகத்தில் இருந்து பசும் பொன் முத்துராமலிங்க தேவரால் அனுப்பப்பட்ட 5,000 இளைஞர்களையும் கொண்டு ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது.*🔪

👨‍✈🔎 *அதேசமயம் 1945 ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக ஜப்பானின் டோக்கியோ ரேடியோ அறிவித்தது. அது உண்மை யில்லை என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.🔪 உண்மையில், விமான விபத்து ஜப்பானிய அரசும் நேதாஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த விபத்தில் நேதாஜியின் உதவியாளரான ரஹ்மான் மட்டும் உயிர் பிழைப்பதுபோல காட்டி, அவரது வாக்குமூலம் மூலம் நேதாஜி உயிரிழந்துவிட்டார் என்று வெளியுலகுக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே நேதாஜி ரஷ்யாவுக்குள் தப்பிச் சென்றார். நேச நாட்டு படையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நேதாஜி இதை செய்தார்.*👨‍✈🔪

👨‍✈🔎 *இந்த ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகும் இன்னும் சில கோப்புகள் மறைக்கப்பட்டு இருக்கிறது அதையும் வெளியிடவேண்டும்,இந்த கோப்புகளில் உண்மை எந்த அளவிற்கு உள்ளது என்றும் விமர்சனத்ததை தெரிவித்து வருகின்றனர்.*📃☹

👨‍✈⚔ *விடுதலை பற்றிய நேதாஜி* 🇮🇳

👨‍✈🇮🇳 *நேதாஜியிம் சுதந்திர இந்திய மையம்*🇮🇳👨‍✈

👨‍✈🇮🇳 *1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்”* *என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர 📻இந்திய வானொலியை பெர்லினில் இருந்து* *தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப் போர் பற்றிய* *செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.👍 பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்”* 👨‍✈ *தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமை யேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரி ல் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். 👍பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத் தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்த படியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல்ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின் வாங்கியது.* _*அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்...!!!!👍நம்பிக்கை யுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தலத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை..!!!” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.*_💪👍👨‍✈

👨‍✈🇮🇳💪 *அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப்பெற்றது.*🇮🇳💪👍

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🔎 *மறைக்கப்பட்ட* 🔍

⚖ *உண்மைக்காக* ⚖
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :சனி*🌹

🌹 *தேதி :28.10.2017* 🌹
__________________________________
         📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*மக்களிடம் அதிகம் அடையாளம் படுத்தப்படாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஒரு அலசல்.*

👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈🔍👨‍✈🔎👨‍✈

                 *பாகம்*➡3⃣

👨‍✈ _*நேதாஜி பற்றி மறைக்கப்பட்ட வரலாறு.*_👨‍✈

👇👇👇👇👇👇👇👇👇👇👇

👨‍✈ *நேதாஜியின் காதல்*💑

👨‍✈ _*1933ல் ஒரு காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆஸ்திரியாவில் தங்கியிருந்தார் நேதாஜி. இந்த காயம் அவரது காதலுக்கு வித்திட்டது.*ஆம்! அங்கு தான் தனது காதல் துணையை கண்டார் நேதாஜி. ஆக்ரோஷம் நிறைந்த மனதில், காதல் கோஷம் அரங்கேறிய காலம் அது._😍

👨‍✈😍 _நேதாஜி அவரது காதல் துணை எமிலியை இருவருக்கும் பொதுவான நண்பராக திகழந்த மருத்துவர் மதூர் என்பவர் மூலமாக தான் சந்தித்தார்._😍

👨‍✈😍 _இவர் வியன்னாவில் வாழ்ந்து வந்த இந்திய மருத்துவர் ஆவார்._😍

👨‍✈😍 _எமிலியின் ஆங்கிலம் மற்றும் டைபிங் திறன் சிறப்பாக இருந்தது. எனவே, தனது தி இந்தியன் ஸ்ட்ரகில் எனும் புத்தகத்தை எழுத எமிலியை வேலைக்கு அமர்த்தினார் நேதாஜி._
😍

👨‍✈😍 _எமிலி வியன்னாவில் வாழ்ந்து வந்த ஆஸ்திரியா கத்தோலிக் குடுமபத்தை சேர்ந்தவர். நட்பாக துவங்கி, காதலாக மலர்ந்து 1937-ல் எமிலி மற்றும் நேதாஜி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்பு வரை எமிலி இந்தியா வந்ததே இல்லை._🙅🏻

👨‍✈💑 _திருமணம் முடிந்து நேதாஜி இந்தியா திரும்பினார். மற்றும் 1941-1943 ஜெர்மனியில் எமிலி, நேதாஜி வாழ்ந்து வந்ததாக புரளி செய்திகள் மூலம் அறியப்படுகிறது._
_நேதாஜியின் குடும்பத்தாருக்கே இவர் திருமணம் செய்துக் கொண்டதும், அவருக்கு அனிதா எனும் பெண் குழந்தை இருப்பதும் தெரியாது. 😱🙅🏻ஒருமுறை எமிலி நேதாஜியின் சகோதரர் சாரத் சந்திர போஸிற்கு கடிதம் எழுதினார்.✍ அப்போது தான் அவர்கள் இவரது திருமணம் பற்றி அறிந்ததாக அறியப்படுகிறது._📩

👨‍✈🇮🇳 *அந்தமான் தீவும் நேதாஜியும்*👨‍✈

👨‍✈🇮🇳 *நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போக்கில் அந்தமான் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. இதுகுறித்து 1943 நவ. 8ந் தேதியன்று நேதாஜி வெளியிட்ட அறிக்கையொன்றில்,*
👨‍✈🔎 *எவ்வாறு பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறைக்கூடம் முதன்முதலில் விடுவிக்கப்பட்டு அதில் சிறைபட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பெற்றனரோ, அதேபோன்று எந்த அந்தமானில் இந்தியப் போராட்டக்காரர்கள் வதைபட்டனரோ அதுவே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முதலில் விடுவிக்கப்பட்டுள்ளது,” என்று எழுதினார்.*✍

👨‍✈🔎 *எனினும் போரின் முடிவில் அந்தமான் மீண்டும் ஆங்கிலேயர் வசப்பட்டது.*

👨‍✈🔎 *சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்துவைப்பது அத்துணை உசிதமல்ல என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கருதினர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு – அவ்வாறு ஒரே சிறையில் அடைத்தால் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக இருக்கும் என்பதுடன் இதர கைதிகள் மத்தியில் சுதந்திரப் புரட்சிக் கருத்துகளைப் பரப்பவும் இயலும் என்று ஆங்கிலேயர் அஞ்சினர். 😰எனவே, தொலைதூரப் பகுதியில், தீவாந்தரத் தண்டனையுடன் தனித்தனி அறையில் அடைத்திட எண்ணி அவர்களைக்கொண்டே உருவாக்கியதே செல்லுலார் சிறைக்கூடம்.*👍

👨‍✈🔎 *1906ல் திறக்கப்பட்ட இந்த சிறைக்கூடத்தில் இறுதியில் மொத்தம் 693 தனித்தனி அறைகள் (Cells) இருந்தன. 1889ல் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றபோது பூனாவிலிருந்து 80 புரட்சியாளர்கள் கைதியாக அந்தமான் வந்தடைந்தனர். 1909-1921 காலத்தில் போராட்ட அலை மீண்டும் எழும்பியபோது 132 பேர் தீவாந்தரத் தண்டனைக்காக இங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1932-38க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மேலும் 379 போராட்டத் தியாகிகள் கைதிகளாக இங்கு வந்து சேர்ந்தனர்.*👍

👨‍✈🔎 *செல்லுலார் சிறையில் அன்றாட வாழ்க்கை மிகவும் கொடூரமானதாக இருந்தது. 😭பணிச் சூழல் குறித்து கேட்கவே வேண்டாம், அதிலும் குறிப்பாக முதன்முதலில் வந்தவர்கள் பட்டபாடு நமது கண்களில் உதிரத்தை வரவழைக்கும். குறைந்த அளவில் உணவும் உடையும், ஆனால் வேலையோ மிகக் கடினமானது. அத்தகையக் கடின வேலைகளுக்குப் பழக்கமில்லாதோர் தமது அன்றாட இலக்கைப் பூர்த்தி செய்யாவிட்டாலோ மேலும் கொடுந்தண்டனைகளுக்கு ஆளானர்.*😰😭

👨‍✈🔎 *போராளிகளை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்தம் மனவுறுதியைத் தகர்ப்பதே சிறை அதிகாரிகளின் நோக்கமாகும். எண்ணை பிழிவதற்காக செக்கில் கைதிகளைப் பிணைத்து இயக்குவது, தேங்காய் மட்டை உரித்து கயிறு திரிப்பது, மலையைத் தகர்த்து சாலை அமைப்பது, சதுப்பு நிலங்களை நிரப்புவது, காடு அழித்து சீராக்குதல், செங்கல் சூளை, கட்டிட வேலை போன்ற கடினமானப் பணிகள். அவற்றுள் மிகக் கொடுமையானது அமிலத்தன்மை அதிகம் கொண்ட ‘ராம்பன்’ என்ற புல்வகையிலிருந்து கயிறு திரிப்பதாகும்.*😰

👨‍✈🔎 *அமிலத் துளி உடலில் பட்டவுடன் இடைவிடாது அரிக்கத் தொடங்கி இறுதியில் ரத்தக்கசிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.😭 உண்ணாவிரதம்- 1937 ஜூலையில் பாரதத்தின் ஏழு பிரதேசங்களில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன்கு, அந்தமான் செலுலர் சிறையில் உள்ள சுதந்திரப் போராட்டக் கைதிகளை தாயகத்திற்கு திருப்பி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. தமது இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் செலுலர் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்டக் கைதிகள் 1937 ஜுலை 27 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*😰

👨‍✈💪 *சிறையிலிருந்தே சீறினார்*👨‍✈💪

👨‍✈💪🇮🇳 *1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நிணைத்தது ஆங்கில அரசு. 👊ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. 👍இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.*

👨‍✈💪 _*விடுதலையை நிராகரித்தார்*_ 👨‍✈💪

🔴  _*மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். 👨‍✈😔அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. 👉ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், 👉இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது.😔 சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க...... என்னை என் நாட்டுக்கள் வரக்கூடாதென்று சொல்ல ...இவர்கள் யார்? ❓❓இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” 👨‍✈😡என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த 👨‍✈🦁அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.*_💪👍
  
👨‍✈🇮🇳 _*இந்திய சுதந்திரத்தின் முக்கியபங்கு பெற்ற நேதாஜி.*_🇮🇳👨‍✈

👨‍✈🇮🇳 _இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய காரணமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான், இவரின் அர்ப்பணிப்பும், தியாகமும் பொன் எழுத்தில் பொறிக்கபட வர்ந்தியவை._ ஆனால் காகித எழுத்துக்களில் கூட எழுதப்படவில்லை...
🇮🇳🙏👍

👨‍✈🇮🇳 *_திட்டமிட்டு மறைக்கப்பட்டது நேதாஜியின் சுதந்திர போராட்ட தியாகத்தை,சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ? அந்த பெயரையும் புகழையும் அனுபவித்து வருவது யாரோ?_*😔

👨‍✈🇮🇳 அகிம்சை முறையில் போராடி கொண்டிருந்த காந்திஜி இடம் சொன்னார் நேதாஜி *"அகிம்சை வழியில் போராடி கொண்டிருந்தாள் பல ஆண்டுகாலம் இந்திய சுதந்திரத்திற்க்காக போராட்டம் இழுத்து கொண்டே தான் போகும்,கோடிக்கணக்கான இந்தியர்களை சிறிய அளவு வெள்ளையர்களை கொண்ட வெள்ளையர்களின் ராணுவம் அடிமை படுத்தி வைத்திருக்கிறது ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது"* என கூறினார் நேதாஜி, மேலும் *அவர்களை நான் ஆயுத ரீதியில் விரட்ட திட்டமிட்டுளாதாகவும் காந்தி இடம் கூறினார் நேதாஜி.*💪

👨‍✈🇮🇳 உங்கள் கருத்து என்ன என நேதாஜி காந்தியிடம் கேட்டபொழுது _*"அகிம்சையை போதிக்கும் நான் எந்த சூழ்நிலையிலிம் ஆயுதம் ஏந்த மாட்டேன்"* என கூறினார்._👍

👨‍✈🇮🇳 நேதாஜி தனித்து போராட ஆரம்பித்தார்,முதல கட்டமாக தமிழகம் வந்து இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் *_"வெள்ளையனை எதிர்க்க ராணுவ தடவாலம் அமைத்து தான் அவர்களை விரட்ட முடியும் என  இளைஞர்களிடம் கூறி ஆதரவு திரட்டினார்_* பின்னர் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சென்று ஆதரவு திரட்டினார் ஆனால் இந்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது.😔👎

👨‍✈🇮🇳 மீண்டும் ஒரு முறை தமிழகம் வந்தார் நேதாஜி அப்பொழுது ஆயிரக்கணக்கானோர் நேதாஜிக்கு ஆதரவு தந்தனர்,அந்த இளைஞர்களுக்கு மறைமுகமாக ராணுவ பயிற்சி அளித்தார் நேதாஜி.அந்த இளைஞர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவரால் தான் அனுப்பப்பட்டனர்.

👨‍✈🇮🇳 _தமிழக இளைஞர்கள் பலர் நேதாஜியுடம் இணைந்தனர்.அப்போது நேதாஜி  தலைமையில் ஒரு ஆயுத புரட்சி ஆரம்பித்துள்ளார்கள்  என வெள்ளையர்களுக்கு தெரியவர இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்தனர்._👍💪

👨‍✈🇮🇳 *காந்தியின் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் நேதாஜியை காட்டியும் கொடுத்தனர்,அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் வெள்ளையர்கள்.*😔

👨‍✈🇮🇳 *_வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து வெளிநாடுகள் சென்றார் நேதாஜி, வெளிநாடு சென்று இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார்.ஹிட்லர் சந்திக்கவே பல காலங்கள் தேவைப்பட்டது._*💪👍

👨‍✈🇮🇳 _எல்லாம் தயாரான பின்பு இந்தியாவில் உள்ள வெள்ளையர்களின் ராணுவ படையை கணக்கிட ஆரம்பித்தார். தகவலை எல்லாம் அறிந்த பின்னர் தமிழகத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் *"நான் வெளிநாட்டில் மிக பெரிய ராணுவ தண்டவாளம் அமைத்துள்ளேன் இந்த ராணுவத்தில் இணைத்து இந்திய சுதந்திரத்திற்கு ஆயுதம் ஏந்தும் படி"* கேட்டு கொண்டார் இது இந்தியா முழுவதும் தெரிய வந்தது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கப்பல் மூலம் வெளிநாடு சென்றடைந்தனர்._ 💪👍

👨‍✈🇮🇳 *_ஆயுத பயர்ச்சி எல்லாம் கொடுத்து எத்தனை ராணுவத்தினர் வெள்ளையர்களிடம் உள்ளனர் என கூறி பயர்ச்சியை மேற்கொண்டார்._*_👍 *ஒரு பக்கம் காந்தியும் அகிம்சை வழி போராட்டம் நடந்து வந்தது.*_👍

👨‍✈🇮🇳 *நேதாஜி திட்டமிட்டபடி கப்பல் மூலம் டெல்லி சென்றடைந்து வெள்ளையர்களை தாக்கினார்,வெளிநாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கு வரும் ஆயுதங்கலையும்,கடல்வழி பாதைகளையும் தடுத்தார் நேதாஜி. ஆனால் இது உண்மை அல்ல 👎இதை அனைத்தையும் தடுத்தது ஜெர்மனி தான் எனவும் ஒருபுறம் கூறப்படுகிறது.*
_தொடர்ந்து வெள்ளையர்களால் போராட முடியவில்லை,வெள்ளைரகளுக்கு ஆயுத தேவை ஏற்பட்டது,பொருளாதார பிரச்னையும் ஏற்பட்டது,இதனால் வெள்ளையர்கள் இந்தியாவில் இருப்பது கேள்விக்குரியானது,தோல்வியின் பாதைக்கு சென்றது வெள்ளையர்கள் படை.வெள்ளையர்களின் தோல்வியை அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை இந்த சூழ்நிலையில் காந்தியும் அகிம்சை வழி போராட்டத்தில் இருந்து பலர் நேதாஜி ஆயுத போராட்டத்திற்கு சென்றனர். ஒருகட்டத்தில் காந்திஜி நேதாஜியை கடுமையாக கண்டித்தார் *நேதாஜி மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என கண்டித்தார்.* 😡பிறகும் நேதாஜி படை வெள்ளையர்களை கதிகலங்க வைத்தது,காந்தி ஜி தரப்பில் இருந்து நேதாஜியை காட்டியும் கொடுத்தது இதனால் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கு வேலை செய்வார்களாள் நேதாஜி தப்பித்தார். பிறகு ஆயுத போராட்டம் தீவிரம் ஆனது அப்பொழுது வெள்ளையர்கள் வெளியேறும் நேரமும் வந்தது ஆனால் *வெள்ளையர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்க பட்டனர் எனும் வரலாறு இருக்க கூடாது என்பதால் காந்தியை நாடிய வெள்ளைரகள் உங்களின் அகிம்சை வழி போராட்டத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கிறோம் என கூறினார்கள் வெள்ளையர்கள்,இந்தியாவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டு வெளியேறினார்கள்,*😏 தற்பொழுது வரை இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் நன்றி மறந்து நேதாஜியின் மகத்தான போராட்டத்தை திட்டமிட்டு மறைத்துள்ளனர்._😡

👨‍✈💪 *நேதாஜியின் இந்த வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள் அல்லது ஆதாரமாக எந்த விடயமும் இந்திய அரசிடம் இல்லை என கூறப்படுகிறது.*😡

👨‍✈🇮🇳 *இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த நேதாஜியின் வாழ்க்கை முழுவதும் புரளி, மர்மங்கள் நிறைந்த இரகசியமாகவே நீடித்து வருகிறது.*😡😔

😡 *உண்மைகள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் தான் தற்பொழுது இருந்து வருகிறோம்.*😔

👨‍✈🇮🇳💪 *நேதாஜி எனும் ஒரு தனி நபர் ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் ராணுவத்தில் ஈடுபடுத்தினார் எனும் வரலாறு பேசிக்கொண்டே இருக்கும்.*💪👍

👨‍✈💪🇮🇳 _*இந்திய விடுதலைக்கு அரும் பாடுபட்டவர்களில் பச்சோந்தியாக சிலர் அவர்கள் பெயர்களை முன்னிருத்தியது அப்போதே அரசியல் விளையாடி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.*_😡

👨‍✈💪🇮🇳 _*இந்திய விடுதலைக்கு அனைவருமே பாடுபட்டனர் ஆனால் அதை தலைமை தாங்கியவர்களுக்கே இங்க பெருமையும் புகழும் நிற்கும்,நேதாஜியை இழிவு படுத்திய ஒரு கூட்டம் நேதாஜி உடன் விடுதலைக்காக போராடிய ஒவ்வொருவரையும் இழிவுபடுத்தியது போன்றது தான்.*_😡👊

👨‍✈💪🇮🇳 _*உண்மைகள் என்று வெளிப்படுமோ அன்று வீரம் காக்கப்படும்...!!!!*_ 👨‍✈💪🇮🇳 _*உண்மைகள் எல்லாம் இங்க மறைக்கப்படுவதால் இங்கு வீரமும்,அர்ப்பணிப்பும் மறைக்கிறது...!!*_👎😔

👨‍✈💪🇮🇳 _*நேதாஜி எனும் வீரனின் மரணம் மற்றும் அவர் மீதான இழிவான விமர்சனங்கள் அனைத்திற்கும் தீர்வாக இருக்க வேண்டியது ஒரு கட்சி தான் ஆனால் அந்த கட்சியோ அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமைதியாகவே கடைசி வரை இருந்தது,அது இன்றும் தொடர்கிறது.*_😡👊

👨‍✈🇮🇳💪 _*வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக் கூடாது.💪 அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை.🇮🇳💪 அவரது சாம்பல் தைவானின் வானத்திலோ, ஜப்பானின் கோவிலிலோ, இல்லை இமையமலையின் பனிகளிடையோ…எங்கு வேண்டுமானால் இருக்கலாம். 🙏ஆனால் அவர் பேசிச் சென்ற சொல் ஒவ்வொன்றும் சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நாசியிலும் கலந்திருக்கிறது...!!🇮🇳💪 அதை நாம் பறைசாற்ற உரக்கச் சொல்வோம் ‘ஜெய் ஹிந்த்...!!!!’*_💪🇮🇳👍

😡👊🔥 _*அரசியலில் அமைதி என்பது ஒரு மானக்கெடு என்று கூறி விடைபெருக்கிறோம்..*_🔥

🔥 *👸🏼🤴🏼தலைவர்களின் மர்மமான வரலாற்று பயணம் தொடரும்....* 💪🏻👍🔥

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑

🏆 *Spvignesh*

🏆 *~Su*

🏆 *~Kumaran. G*

🏆 *காவியா பில்டர்ஸ்*

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

🏆 *☂ Kudaykul Malay* ☂⁩

🏆 *😆😝Rishi😂🤣⁩*

🏆 *👉🏻இரவி ராகுல் 😘⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

👨‍✈💪🇮🇳 *"எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்" என கூறிய இந்திய புரட்சிநாயகன் 🇮🇳 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.*👨‍✈💪👍

👨‍✈💪🇮🇳 *தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.* 👍💪🙏

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்*
*புறப்படுத்தான் ஆகும் மறை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

💪 *அறிந்துகொள்ளவும்*💪

*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.*

😏 *புரிந்துகொள்ளவும்*😏

*காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?*

*குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்*😏

😓 *தெரிந்துகொள்ளவும்*😠

*குப்பை உயரும் கோபுரம் தாழும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🔥 *முடிவுரை தொகுப்பாளர்*🔥

*😍மணி மதேஷ் 😍 - 8428073724*

         👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈

*😍உதயா யுவா😍 - 9500764969*

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...