Tuesday, 17 October 2017

தீபாவளியும் அதனை சார்ந்த செலவுகளும்? யார் யார் எதற்காக அதிக செலவு செய்தீர்கள்?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :செவ்வாய் கிழமை*🌹

🌹 *தேதி :    17.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*பூக்களைக் கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, பூக்களைப் போலவே தோன்றி மறையும் மனிதனாகப் பிறந்தவனும் பல நன்மைகளைச் செய்ய முடியும்.*

💐 *புத்தர்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎

*சிந்தனை எது வேண்டுமானாலும் இருக்கலாம்.*

  *ஆனால் அது உனக்கானதாகவும் இருக்கட்டும் ...!!*
■★■★■★■★■★■★■★■★■★

📣 *தலைப்பு*📣

*தீபாவளியும் அதனை சார்ந்த செலவுகளும்? யார் யார் எதற்காக அதிக செலவு செய்தீர்கள்?*
🎇💸🎆💴🎇💷🎆💶🎇💸🎆

*🎇தீபாவளி என்றாலே இனம் புரியாத நிலை, அறியாத சந்தோசம் வந்து என்ன செய்வதென்றே தெரியாமல் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்க செய்யும் ஒரு வித கிளர்ச்சியின் வெடித்தல் தான்💃🏼🕺. எதையாவது செய்து விட மாட்டோமா என்று எதையெதையோ செய்து விட்டு தூங்கி விடும் ஒரு வகை புது கலாச்சாரத்தை இன்றைய 👨‍👩‍👧‍👧நவீன குடும்பம் பின் பற்றுகிறது.*

*😍பண்டிகை என்பது மனிதன் தன்னை புத்துணர்வு படுத்த எடுத்துக் கொள்ளும் இளைப்பாறல். அது தேவையான கொண்டாட்டம். இந்த சமூகம் கொண்டாட்டத்தின் வழியே உறவை வளர்த்த சமூகம். குடும்பமாய்.... உறவுகளாய்... பக்கத்துக்கு வீட்டோடு.... எதிர் வீட்டோடு... சேர்ந்து உணவுகளை  பரிமாறிக்கொண்டு நாம் பண்டிகைகளை கொண்டாடினோம்..  .🎇தீபாவளியில் பட்டாசுகளை வெடிக்கவிட்டோம்.🎉🎊*

*😰😥ஓடி ஓடி உழைத்த மனதின் அமைதி.... சிரிக்க......சிந்திக்க... புரிந்து கொள்ள... புரிய வைக்க.... ஒரு தவம் கலைந்த கொண்டாட்டம்🕺... உற்சாக நதியின் மொத்தங்களின் பக்கங்கள் அனைத்தும் கவிதையாய் கிறுக்கி 👶👦👧விட்டு சிரிக்கும் பிள்ளையின் மனதுக்குள் திரும்பும் நமக்கான பாதை தீபாளியாகவே இருக்கிறது.   ஆசையின் ரூபம் சேர்ந்து கொண்டே வந்து ஒரு நாளில் அவனை அவனுக்காக வாழ வைத்து வைக்க அன்றொரு நாள் போதுமானதாய் இருக்கிறது. இருக்கும் 💵👔👖👗பணத்தையெல்லாம் துணி எடுக்கவும்... தின்பண்டம் வாங்கவும் செலவழிக்கிறோம்.*

*😁மகிழ்ச்சி செலவு என்று இரண்டு திசைகளைப் பற்றியும் போகிற போக்கில் ஒரு சேரதான் பார்க்க 🤔வேண்டி இருக்கிறது.*

*💵💵காசு எல்லாரிடமும் எல்லாமுமாக இருப்பதில்லை. அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடுகிறது🤦‍♀. அதன் பொருட்டே 🎇தீபாவளி    💵காசுகளாலும் காட்சிகளாலும்....ஆடைகளாலும்.. 🍩இனிப்புகளாலும். அதையெல்லாம் தாண்டி ஒரு வித தேடல் இருக்கிறது. ஒரு வித உயிர்ப்பு இருக்கிறது. மன நிறைவையும் மகிழ்ச்சியையுமே தந்திருக்கிறது...* 

*👶குழந்தையோடு கொஞ்சும் மனநிலையை, குடும்பத்தோடு இருக்கும் பாதுகாப்பை 🎇தீபாவளி தரத்தானே செய்கிறது. 💵குடும்பம் என்றால் செலவுகள் இருக்கத்தான் செய்யும். 😌கஷ்டங்கள் மட்டுமா வாழ்வு. 💁🏻💁🏻‍♂இஷ்டங்களும் தானே. வீட்டுக்கு தகுந்த வாசல்படி தானே அழகு. நமக்கு என்ன முடியுமோ அது தான் கொண்டாட்டம். அதிகம் ஆசைப் படுதலே துன்பம்.  பாட்டி தாத்தா பெரியம்மா பெரியப்பா.. சித்தி சித்தப்பா... அண்ணன் தம்பி தங்கை என்று அங்கங்கே 💵பொருளாதார ரீதியாக பிரிந்து கிடக்கும் சொந்த பந்தங்கள்... மாப்ள மட்சான் நண்பன் தோழி என்ற வீதிக்காரர்கள் என்று ஆளுக்கொரு பட்டாசும்.. ஆளுக்கொரு 🍩💁🏻இனிப்பும் சந்தோசம் தானே.* 

*😌வாரம் முழுக்க வேலை.. மாதம் முழுக்க வேலை.. வருடம் முழுக்க வேலை. 💵💵பொருளாதாரத்தின் பின் ஓடி ஓடி களைத்த உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் ஆக தீபாவளி மயில் இறாகய் வருடி விட்டு போகும்.  🎇தீபாவளி என்பது வெறும் செலவை மட்டும் தரும். இஷ்டத்தோடு கொண்டாடியது ஒரு காலம். கஷ்டம்  வந்தாலும் கொண்டாடுவது ஓர் அனுபவம். இங்கே இனி ஒவ்வொரு தீபாவளியும் நம் வாழ்வின் பக்கத்தின் அனுபவமாகவே இருக்கட்டும். அது கூட்டு வாழ்வின் முன்னுதாரணமாக இருக்கும். சந்தோசத்தை வெளியில் தேடுவது பொருளாதாரம் மானுடம்.அதை உள்ளிருந்து அள்ளி தருவது மானுடம் பூரணத்துவம் 💁🏻😁மகிழ்ச்சியில் தான். கொண்டாடிக் கிடக்கவே இந்த பிறவி ஆக.. இந்த 💁🏻🎉தீபாவளி மகிழ்ச்சி தான்.*

*😁💁🏻மகிழ்ச்சி எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் செலவும். இங்கு எதுவும் சும்மா கிடைப்பதில்லை. கேட்ட 👖👗👔துணி எடுத்து தரவில்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் 😌மனைவியை வைத்துக் கொண்டு எங்கிருந்து மகிழ்ச்சியை கொள்வது. 2000 ரூபாய்க்கு வெடி வேண்டும் என்று மகன் கேட்கையில்.... காசில்லாத அப்பன் எங்கிருந்து       மகிழ்ச்சி கொள்ள!*

*🎇🎉தீபாவளி செலவு தான். தீபாவளி வருகிறது என்றாலே அந்த மாதம் முதல் தேதியில் இருந்தே 🤔கணக்கு போடும் ஆட்களை நாம் அறிவோம். தீபாவளி மனம் சமபந்தப் பட்டது என்ற காலத்தைக் கடந்து விட்டோம். இது காசுக்கு வாழும் காலம். இங்கே.. தீபாவளியை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டம் நாம்மை சுற்றி இருக்கிறது. 🍩இனிப்புகளாலும் 👔துணிகளாலும்..... 🎉வெடிகளாலும் நாம் ஏமாறவே ஒவ்வொரு தீபாவளியும் வந்து கொண்டிருக்கிறது. காசை கரியாக்கி கரியை புகையாக்கி.....சந்தோஷம் என்ற பெயரால் சுற்றுசூழலைக் கெடுத்து வானத்தை அடைத்து வீதியை நிரப்பி..... குப்பைகளாலும் சத்தங்களாலும் ஊர் முழுக்க இருக்கும் சிற்றுயிர்களை அடித்து விரட்டி விட்டு சந்தோஷம் கொள்கிறோம்🤦‍♀*

*💁🏻🤦‍♀அந்த செலவு இந்த செலவு என்று ஒரு நாள் கூத்துக்கு மீசையை மட்டும் அல்ல. முகத்தையே எடுத்து விட்டு பின் முண்டமாய் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வட்டி கட்டிக் கொண்டு அலைவது எந்த விதத்தில் நியாயம். ஊருக்கு பெருமை காட்டி உள்ளுக்குள் புகைந்து வாழ்வைதை தான் இந்த 🎇🎉தீபாவளியும் காட்டியது. செலவு தான் தீபாவளி. அதுவும் அதீத செலவு. ஒரு கிலோ கோழியில் இருந்து.... ஒரு கிலோ இனிப்பு வரை.. 🤦‍♀தொட்டதெல்லாம் கை மீறிய செலவு.*

*😁😍மகிழ்வு என்பது முகத்தில் இருந்தது என்பதை விட அகத்தில் இருந்ததா என்றொரு கேள்வி வருகிறது. சிவகாசி பிழைக்கிறது தான். சிலபோது ஏற்படும் விபத்தில் மொத்தமாய் சாகிறதே. 😳😱அதுவும் படிக்க வேண்டிய எழுத வேண்டிய பிஞ்சுக் கைகள் பட்டாசு வேலையில் ஈடுபடுவதை நாம் எல்லாரும் உணர்ந்தே இருக்கிறோம். பின் எப்படி வெடித்து அதை கொண்டாட்டம் என்று நம்ப முடிகிறது. ஆக, கொண்டாட்டங்கள்... செலவில் இல்லை. பகட்டில் இல்லை. அது குடும்பத்தில் இருக்கிறது. சரியான திட்டமிடுதலுடன் தீபாவளியை எதிர் நோக்கியவர்களுக்கு அது அழகான அற்புதமான கொண்டாட்டம் தான். அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து... ஆற அமர குளித்து...*
*🍩அளவாக வீட்டில் செய்த இனிப்பு உண்டு... நம்மை பிடித்திருக்கும் நரகாசுரனை விரட்டி அடித்து விட்டு இன்னும் பலமாய் வேகமாய் இந்த உலகின் ஓட்டத்தை எதிர் நோக்க நாம் கொண்டாடி இருந்தால் அது தான் மகிழ்வு.. அவரவர் வசதிக்கு ஏற்ப புத்தாடை இருந்தால் அது தான் நிறைவு. என் வருமானம் இது. இதற்குள் என் 🎇🎉தீபாவளி அழகு என்று உணர்ந்த குடும்பத்துக்கு தீபாவளி கொண்டாட்டம் தான். அது செலவின் பதிவேட்டில் வராது. அது அழகியலின் சந்தோசத்தில் நிரம்பும். காக்கா குருவியை, வீதி நாய்களை அடித்து விரட்டும் பாட்டாசுகள் இல்லாமல் காற்றை மாசாக்கும் தூசுகள் நிறைந்து வழியாமல்... தேவைக்கு ஜோதியாய் நிரம்பி மலரும் சிறு சிறு வெடிகளுடன் கொண்டாடினால் இந்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும்.*

🎇💃🏻🕺🏻 *தீபாவளி என்றாலே தனி கொண்டாட்டம் தான்.*
*சிறியவர் முதல் பெரியவர் வரை செம்ம ஜாலியான சந்தோஷம்*🎉🎊

🎇 *தீபாவளி செலவுகள் என்னென்ன*❓❓❓❓

🎇👦🏻👧🏻👨🏻👩🏻 *குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிய துணி ஸ்வீட் பலகாரம் என்று தீபாவளி கலகட்டும்*🎉🎊

🎆🏘 *வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது.*

🎇🚲🏍🚘 *புது பைக், கார் இதுபோன்ற அத்தியாவசிய பொருட்கள் சில ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வது.*🎉🎊

🎇💸 *தீபாவளி போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு போனஸ் கிடைக்கும்.*
*அதனால் இன்னும் மகிழ்ச்சி தான்.*🎉🎊

🎇👨🏻👩🏻 *இளைஞர்கள்*.
*தீபாவளினா புதிய திரைப்படம் மற்றும் நண்டர்களோடு இன்ப சுற்றுலா புதிய துணி இதெல்லாம் விட பண்டிகை அன்று நண்பர்களோடு சரக்கு அடிப்பது தான் பெரிய சந்தோஷமாக நினைக்கிறார்கள்..*🎉🎊

🎆👨🏻 *ஆண்கள்*
*தன் குடும்பத்தினர் கூட வெளியே செல்வது பசங்க மனைவிக்கு புதிய துணி பட்டாசு ஸ்வீட் இதெல்லாம் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக இருபாங்க*🎊🎉

🎆👩🏻 *மனைவியுடன் துணிக்கடைக்கு சென்றாலோ அல்லது ஷாப்பிங் சென்றாலோ பர்ச்சஸ் பன்ற ஆசையே போய்விடும் அவ்வளவு நேரம் செலக்ட் பன்னுவாங்க.*😰

🎆🎊🎉 *தீபாவளி போனஸ் வந்தால் உடனே நகைகடை தான் விதவிதமான நகைகள் வாங்கி தரனும்.*😏

🎇🎊🎉 *வீட்டிற்கு தேவையான பொருட்கள் டிவி, வாஷிங் மிஷன், பிரிட்ஜ், பர்னிச்சர் அல்லது சமைக்க தேவையான பொருட்கள் குக்கர், மிக்ஸி, கிரைண்டர், கிச்சன் செட் என விதவிதமாக வாங்குவார்கள்.*😊

🎇👦🏻👧🏻  *குழந்தைகள்*
*அழகு அழகாக புதிய துணிகள் விதவிதமான பட்டாசுகள் அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருள்கள் என்று  வாங்கி தர சொல்லி  மகிழ்வார்கள்.*🎊🎉

*👨‍❤‍👨திருமணம் ஆன பிறகு வரும் தீபாவளி 👨🏻ஆண்களுக்கு  தல தீபாவளி தான்*. *மனைவியின் பெற்றோர்களுக்கு தான் பெரிய செலவு*.
*மருமகனுக்கு ஜெயின், மோதிரம் புதிய துணிகள் என்று செலவு ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கும்.😍*

🎇🎊🎉 *மற்ற நாட்களை விட இந்த மாதிரி விஷேச நாட்களில் பொருட்கள் வாங்குவது தான் விஷேச நாட்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.*🎊🎉

🎇💸💶 *தீபாவளி செலவுகள் என்றால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான். இந்த நல்ல நாளில் கூட குழந்தைகளுக்கு துணி எடுத்து கொடுக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பெற்றோர்கள்.*😨

🎇 *பக்கத்து வீட்டில் விதவிதமான பட்டாசு, ஸ்வீட், ஆடம்பரமான பொருட்களை பார்த்து ஏங்கும் ஏழை குழந்தைகள்.*😰

*💁🏻😳😌வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனைத்தும் வந்து கொண்டே தான் இருக்கும்*.
*🎇🎉பண்டிகை நாட்களில் இருக்கும் கஷ்டத்தை ஒரு புரம் ஒதுக்கி விட்டு. 😍💃🏼🕺மனநிறைவோடு பண்டிகை கொண்டாடுவோம்.👍*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑

*🏆🎖⁨இசையருவி⁩*, *⁨Kishore Media😃⁩*
*⁨🏆🎖Pachamannu (Pm)⁩,விஜய்⁩*
*🏆🎖Satheesh SS⁩*

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

*🏆🎖sukumar ❤Zhorba*⁩
*⁨🏆🎖🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼⁩*
*🏆🎖bamase14⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

*💵🤔வருமானத்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப செலவு செய்யலாம்.*
*ஆடம்பரமான செலவுகள் தேவையா?*

*💁🏻🎇இந்த விஷேச நாட்களில் கூட நல்ல உணவு இல்லாமல் நல்ல துணி இல்லாமல் எத்தனையோ ஆதரவற்ற 😌குழந்தைகள் உள்ளனர். எவ்வளவோ 👳முதியோர் உள்ளனர்.*

*💁🏻உங்கள் பக்கத்தில் இருக்கும் 👦👧ஏழை குழந்தைகளுக்கோ, வயதான முதியவர்க்கோ உங்களால் முடிந்த உதவிகளை 👳செய்யுங்கள்.*
*அல்லது குழந்தைகள் காப்பகம் முதியோர் இல்லங்கள் சென்று அவர்களுக்காக ஒரு வேளை நல்ல🍱 உணவை கொடுங்கள்.*

*🎇😁இதுதான் உண்மையான பண்டிகை மகிழ்ச்சி.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை*
*போகா றகலாக் கடை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.*

*பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.*

*விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு அறுவடையை நினைக்கலாமா?*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👩🏻‍💻✍ *SM*✍👩🏻‍💻

*👩🏻‍💻✍GK✍👩🏻‍💻*

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...