🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *தீபாவளி* 🎭
🎉 *ஸ்பெஷலுக்கான*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வெள்ளி*🌹
🌹 *தேதி :27.10.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!*
💐 *லியனார்டோ டாவின்சி*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
*இரவு என்பதே தூங்கி ஓய்வு எடுக்கவே...அந்த நேரத்தில் உடலையும் ,மனதையும் தூங்காமல் சோர்வடையசெய்து உங்கள் லட்சியங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதீர்கள்*
📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*இரவில் தூக்கம் தொலைக்கும் மனிதர்களை பற்றி ஒரு அலசல்*
🌚😴😰😨😓🤔🙄😥😢🤕🌚
😇 😴 *ஆழ்ந்த தூக்கம்தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும்.😍 அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம்.🤷🏻♀படுத்ததும் தூங்கிப்போனால் அது அவருக்கு வரம்...!!!👍 தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்..!!!👎😔சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும்போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும்.*😓
🌝🌚 *நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது.😓 சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும்.🌀 நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள்.🤦🏻♀ அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது? மனதை ஒருமுகப்படுத்துவது என்பது ஒருமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன?🤙 அதுதான் இன்சோம்னியா (Insomnia). அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம்*💔
😔
👉 💢 *இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும்.😵 ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.*👊🙅🏻🙅🏻♂
👉💢 *இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும்.*👎
👉💢 *காய்கறிகள்,பழங்கள,புரத உணவுகள்,பால் மற்றும்வாழைப்பழம்,*
*முழுத் தானியங்கள்*
*ஆவியில்* *வேகவைக்கப்பட்ட உணவுகள்*
*ஆகவே,சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான்.*👍 🔴 *ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.🙅🏻🔴 என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண்.😰🤕 மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.*🤷🏻♀
🌍🔍 *இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரிய வந்தது.*
*ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை🎶 கேட்டுக்கொண்டிருக்கும் போதே* *தூங்கிப்போவார்களாம்.அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே* *தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. அதாவது, சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.*🤷🏻♀
🌍🔍 *சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம்📚 படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறார்களாம். இவை தவிர, கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் இங்கிலாந்துகாரர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.*😲🤗
🌍🔍 *ஆய்வின் நிறைவாக, அதில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, `எங்களது தூக்கம் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணமே, அருகில் குறட்டைப் போட்டுக்கொண்டு தூங்குபவர்கள்தான்’என்றும் கூறியுள்ளனர்*🙊🤣
👉💟 *நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன்சுரக்கிறது. இந்த ஹார்மோன் ⬆அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம்வரும்.👍 ⬇குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது.👎 இந்த ஹார்மோனோநம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும்,குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும்சுரக்கும்.🤷🏻♀பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின்முன் 👩🏻💻👨🏻💻உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணிநேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்றஉணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.*😰🤕😓😔
👉 📲🖥 *இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் 👦🏻👧🏻குழந்தை களுக்குக்கூட ஏற்படும்.😓😵 இதனால்தான் டி.வி&யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.*🤷🏻♀👍
😴 _*தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்*_😴👇👇
😴👉 *காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன*🤷🏻♀
😴👉 *எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள்.🙅🏻 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். 👊தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்🙅🏻.தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும்.*🤷🏻♀
😴👉 *படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து.*🤷🏻♀👍
😴👉 *ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’*🤗👍
😴😬 *சிலருக்கு தூங்குற நேரத்துல தூக்கம் வர மாட்டுது. அத தவிர பாக்கி எல்லா நேரத்துலயும் தூக்கம் வரும்.*🤓
😴👦🏻👧🏻 *சில பசங்களுக்கு பரீட்சை டைம்ல புத்தகத்தை பார்த்து படிக்கும் போது தன்னால தூக்கம் வரும்.😜 தூக்கத்துலயே சிறந்த தூக்கம், எப்ப வரும் தெரியுமா? கிளாஸ்ல வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போது நம்மள அறியாம ஒரு தூக்கம் வரும் பாருங்க.😜 அதுக்கு ஈடு இணையான சுகமான தூக்கம், வாழ்க்கைல வேற எங்கயுமே எப்போதுமே அதுபோல தூங்க முடியாதுங்க.*🤓🤗🤠
😴👉🤗 *சிலருக்கு பரீட்சை எழுதும் போது question papera பார்த்ததும், அதுக்கு பதில் தெரியலனா, தூக்கம் வந்துரும். மாணவர்கள் பெரும்பாலும் பரீட்சை ஹாலில் தான் சுகமாக தூங்குறாங்கனு,🤗 www.தூங்காதே தம்பி தூங்கதே.com புள்ளி விவரம் சென்ற ஆண்டு கூட ஒரு அறிக்கைய வெளியிட்டுருக்கு.*😜
😴💖 *தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் ஓய்வளிக்கிறது. அதே போல தூங்காத மனிதர்களின் மனமும் சோர்வடைவதை காணலாம். சரியான தூக்கம் இல்லையே என்ற எண்ணமே, மனதிற்குள் கோபமாகவும், துக்கமாகவும் மாறக் கூடும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.*😰😴
😴💖 *நல்ல சீரான தூக்கம் மனதை ஆனந்தமான நிலையில் வைத்திருக்க உதவும். மனமே நமது அன்றாட காரியங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.💖 மனம் ஆனந்தமாக இருந்தால் நமது வேலையும் திருப்தியாக இருக்கும்.*💝
💁🏻♂🌚 *இரவு நேரங்களில் பேருந்து ஓட்டுபவர்கள் தூங்காம கண் விழித்து, தன் குடும்பத்தை காப்பாற்ற, தன் உயிரையும், தன் தூக்கத்தையும் பணயம் வைத்து பேருந்தை இயக்குவார்கள்.🤷🏻♂ ஆனா நம்ம ஆளுங்க சுகமா படுத்து தூங்கிகிட்டு குறட்டை கூட விடுவாங்க. நம்ம அரசு பேருந்து சத்தத்தை விட, அவங்க குறட்டை சத்தம் பயங்கரமா கேட்கும். சில ஆளுங்க ஆளே இல்லாத, மூணு பேரு சீட்ல போயி தனியா உக்காந்துப்பாங்க. யாரும் வரலான வீட்ல தூங்குற மாதிரி, காலை நீட்டி போட்டு படுத்துருவாங்க. வீட்ல கூட அப்படி தூங்கிருக்க மாட்டாங்க. ஆனா நம்ம டிரைவர் கொஞ்சம் கண் அசந்து தூங்குனா சோலி முடிஞ்சிது.☹ நம்மில் சிலர் டிரைவர்களை மதிப்பது கூட இல்லை என்பது வருத்தமான விசயம்.*🙇🏻😰
💁🏻♂😏 *டிரைவர்னாலே பொண்ணு கூட, குடுக்க மாட்றாங்கங்க 😠. ஐயயோ முடிவுரை திசை மாறிட போகுது.*
💁🏻♂🙇🏻 *டிரைவரா இருப்பவங்க எப்ப தூங்குவாங்க, எப்ப சாப்பிடுவாங்கனு அவங்களுக்கே தெரியாது.😰 குடும்பத்துக்காக கூட சரிவர டைம் ஒதுக்க முடியாது. இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைப்பவர்களில் டிரைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.*👍
💁🏻♂😴 🌚 *எல்லோரையும் போல, இரவில் டிரைவர்களும் ரெஸ்ட் எடுக்க தூங்குனா, நாட்டுல பொருளாதார சூழ்நிலை ரொம்ப மந்தமாகிடும்.*😰
⚠😴 🌚 *உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.😡 இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன.👊 இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.*👊
⚠😴🌚 *அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும்*🙇🏻♀🤦🏻♀
⚠ 👉 🌚 *சில நிறுவனங்களில் இரவு நேர வேலை செய்யும் கட்டாயத்தால், இயற்கைக்கு மாறாக தூக்கப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.😰 இதனால், உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பல நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.*😡👊
⚠💔 *மன அழுத்தம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் மட்டுமே அல்ல.* *பாதிக்கப்பட்டவரின் உடல்/மனம் மற்றும் அவரது குடும்பத்தை மட்டுமே அது பாதிப்பதில்லை.* *உண்மையில், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் லாபம் மற்றும் செயல்திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதே ஆராய்ச்சி முடிவுகளின் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.*😵😔
⚠👉💝 *திருமணமும் வேலையும் நன்றாக அமைந்து விட்டால் ஒருவரின் வாழ்வே மேன்மையடையும். இன்றைய சூழ்நிலையிலோ, ஒரு நிறுவனத்தில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஈடுபாடு இல்லாமல் செய்கின்றனர். ‘மகிழ்ச்சியான தொழிலாளர்களால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது ஒரு கூற்று. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முதலில் வேலையை வெறுப்பார்கள்.*😖
🌾 *விவசாயிங்க தன்னுடைய வருமானத்திற்கும், அடுத்தவங்க பசிய போக்குவதற்கும், தன்னுடைய நிலத்தையே சுத்தி சுத்தி வருவாங்க.*
🌾 *இவங்களுக்கு விவசாயம் தான் உசுருனு சொல்லலாம். இவங்களுடைய தூக்கம் வானிலை அறிக்கை போன்றது. இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப இவங்க தூக்கம் மாறுபடும்.*
🌾 *ஒரு கதிரிலிருந்து நெல் வரதுக்குள்ள இவங்க தூக்கத்தை இழந்து படாதபாடு படுவாங்க. அந்த நெல் சாகுபடி செய்து நல்ல விலை போனதுக்கு அப்புறம் தான் விவசாயிங்களுக்கு நிம்மதியான தூக்கமே வரும். (குறிப்பு : நெல் சாகுபடி பண்றங்க மட்டும் விவசாயி இல்ல. உணவு தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் அனைவருமே விவசாயிகளே🤷🏼♂).*
🌾😰 *உணவு தானியங்கள் சரிவர விலை போகலானாலும், தண்ணீர் பிரச்சனை, விவசாயம் செய்ய வாங்கிய கடன் பிரச்சனை, நிலம் பிரச்சனை (மீத்தேன் போன்ற திட்டங்கள்), இதனால இவங்க தூக்கம் மட்டும் இல்ல. வாழ்க்கையும் சேர்ந்து கெடுதுனு சொல்லலாம்.*😰
🌚 👨🏻🚒 *இரவு நேர பணியில் இருக்கும் காவல்துறை, இவங்களை பத்திங்கனா, பாவம் தன்னுடைய குடும்ப நலன், பொதுமக்கள் நலன் மற்றும் போக்குவரத்து நலன்களை கருதி, சம்பளத்துக்காவும் இரவு நேரத்துல உழைப்பாங்க, சில நேரங்களில் சில காவல்துறையினர் மட்டும் கிம்பளத்துக்காவும் (லஞ்சம்) பாடுபடுவாங்க, அதாங்க போற வர புது டிரைவர்ங்க கிட்ட பணம் பறிக்குறது.*😣
🌚👨🏻🚒 *இவங்க கொஞ்சம் அசந்து தூங்குனா புதிய, பழைய டிரைவர்ங்களுக்கு வேணும்னா கொண்டாட்டமா இருக்கும். ஆனா சில நேரங்களில் பொதுமக்கள் நலன், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.😰 இவ்வளவு காவல்துறைகள் இரவு டூட்டி பார்த்துமே, சில நேரங்களில்; சில சம்பவங்கள் நடக்க தான் செய்யுது. என்னத்த சொல்ல🤦🏼♂*
🌚📺🗞 *ஊடகம், பத்திரிக்கை இவங்களோட இரவு பணியும் சிறப்பு வாய்ந்தது. பத்திரிக்கை துறைல எல்லாரும் இரவுல ரெஸ்ட் எடுக்க தூங்குனாங்கனா, காலைல நியூஸ் பேப்பரே ஸ்தம்பித்து போயிடும்.*📡
🌚📺 *ஊடகத்துல maximum repeated செய்தி தூங்குறாங்கனு தான் தோணுது. யாராவது எங்கேயாவது சம்பவம் நடந்து தகவல் கொடுத்தா தான் போவாங்க.*😕
🌚🚒 *தீயணைப்பு துறையும் இதே ரகம் தான். தகவல் கொடுத்தா தான் போவாங்க. அதுவரை ஓய்வு கிடைக்கும். கொஞ்சம் நிம்மதியா தூங்கலாம்.*😕
🌚 🚒 *ஊடகம், தீயணபை்பு என்னைக்காவது ஒருநாள் தான் இரவுல திடிர்னு வேலை வரும். அதுவரை டெய்லி தூங்கலாம்ல.*😟
🌚 👨🏻⚕ *மருத்துவம், உண்மையாவே ரொம்ப கஷ்டம் தாங்க. எப்பவுமே சீரீயஸ் கேஸ் (எமர்ஜென்சி) வந்துட்டே இருக்கும். இவங்க தூங்க ஆரம்பிச்சா, ஊருல பாதி பேரு செத்துருவாங்கனு தான் சொல்லணும்.*😰😓
🌚♒ *மின்சாரத்துறை, கரண்ட் போனா போதும். போன் பண்ணியே டார்ச்சர் பண்ணிடுவாங்க. சில நேரங்களில் நல்ல மனிதர்கள் இருந்தா தூக்கத்தை விட்டு சேவை செய்ய வருவாங்க. இல்ல விடிஞ்சா தான் வெளிச்சம்😏.*
🌚👨🏼 *வாட்சுமேன்கள், இவங்க வாங்குற சம்பளம் ரொம்ப கம்மி, பாவம் தன்னுடைய குடும்ப நலனுக்காக, தான் குடும்பத்துல உள்ளவங்களுக்கு பாதுகாப்பு குடுக்காம, அடுத்தவங்க குடும்பத்தை, கடை, வளாகம், வீடு பள்ளிக்கூடம், கல்லூரி, பெரிய லிஸ்ட் போகும். இவங்க தூங்க ஆரம்பிச்சா ஊருல பல திருட்டு அரங்கேறும்.*😰😓
🌚🇮🇳 *இராணுவம், இராப் பகலா தன் குடும்பத்தை பிரிஞ்சி நாட்டை பாதுக்காப்பவர்கள். இவங்க தூங்க ஆரம்பிச்சா, நம்ம நாடே சின்னாபின்னாமாகிடும்.*😰😓
🌚😰 🦈 *மீனவர்கள், தன் குடும்பத்தோட வறுமைய நினைச்சி, கடல்ல தான் இவங்களோட பாதி வாழ்க்கையே போகும். இவங்க தூக்கமே எப்பவாது கடல்ல தான் இருக்கும். 😓மீனவ பெண்மணிகளும் கடலில் போன கணவன், அப்பா, புள்ள, உறவினர்களை நினைத்து சிலர் தூங்குவதில்லை.*😓
🌚 🤕😰 *இதுபோக நைட் டூட்டி, எல்லா இடத்துலயுமே இப்ப சிப்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க. அது படி வேலை பார்ப்பாங்க. சிலர் இரவுல மட்டுமே வேலை பாக்குற நிலைமைய தேர்ந்தெடுந்திருப்பாங்க. எல்லாத்துக்கும் காரணம் குடும்ப சூழ்நிலை தான்.*
🤔 *சரி முக்கியமானதை விட்டாச்சி*🤔
😣👊 *லவ் பண்றவங்க இருக்காங்களே விடிய, விடிய சாப்டியா செல்லம்😍, என்ன சாப்ட்ட, கை கழுவுனியா,என்ன பண்ற என்ன பண்றன்னு மட்டுமே விடியவிடிய பேசிக்கிட்டுகொடுமை படுத்துவாங்க,🤦🏻♂🤦🏻♀ இவங்க இம்சை இருக்கே 😭😭😭 பக்கத்துல நம்ம தனியா அவங்க கூட மாட்னோமா தொலஞ்சோம்.*😏🤦🏻♂🤦🏻♀
💘🤕😭 *லவ் பெயிலர் ஆனவங்க இருக்கானே, அவங்களும் தூங்காம, மத்தவங்களையும் தூங்க விடாம, கவிதைனு சொல்லி, மொக்கை போட்டு சாவடிப்பானுங்க. இவனுங்க தண்ணிய போட்டும் தெளிவா ஒளறுவானுங்க. ஸ்டேட்டஸ் கூட, பூங்குயிலே மாங்குயிலே சேதி ஒண்ணு கேளுனு, வச்சிருப்பானுங்க. இதுபோல நம்ம குழுல பல சந்ததிகள் உலா வராங்க.*😉😜
🤗🤓 *அப்புறம் சில அறிவுஜீவிகள், ஞானிகள், வருங்கால இந்தியாவை காப்பாத்த போறவங்க, புத்திசாலிகள், விஞ்ஞானிகள் இவங்க யாருக்குமே தூக்கமே வராது.*😎
😉😜 *புதுசா மொபைல் நோண்டுறவன், புது பொண்ண கரெக்ட் பண்ண நினைக்கிறவன் இவங்களுக்கும் தூக்கம் வராது.*😝
👊 *வெட்டி வேலைக்காக தூங்காம இருந்து உடம்ப கெடுத்துக்காதிங்கப்பா. முடிஞ்ச வரை நல்லா தூங்குங்க டைம் கிடைக்கிறப்பலாம் தூங்குங்க.*👍
💝😍 *இன்று நீங்கள் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட வேண்டும் என்றால்,அதற்கு நீங்க நேற்று இரவு நிம்மதியாக தூங்கி இருக்கவேண்டும்.ஆழ்ந்த தூக்கம் மனதிற்கும் ,உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.நன்றாக தூங்கியிருக்காவிட்டால் சோர்ந்து போய் காணப்படுவீர்கள்.*😟😞
🙇🏻🙇🏻♀ *அடுத்தடுத்த நாட்கள் நீங்க தேவையான அளவு தூங்கியிருக்காவிட்டால்,உடல் பல்வேறு நோய்களுக்கு அச்சாரமாகிவிடும்.😔😰👍மனம் அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும்.இன்றைய நமது வாழ்க்கைமுறை தூக்கத்தை தொலைக்கக்கூடியதாகவே இருக்கிறது.பரபரப்பு நிறைந்த பகல் வேளையில் மூழ்கி இரவுவருவதே பலருக்கு தெரிவதில்லை.*🤷🏻♀😔😓
💝 😇 _*ஆயிரமாயிரம் கவலைகளும்,கஷ்டங்களும் இருந்துகொண்டே தான் இருக்கும் அவர்களே மனிதர்கள்.😇 எதுவாயினும் நம் உடல்நல ஆரோக்கியம் மிகவும் அவசியமானது.*_💝
👌💖 *பொதுவாக இரவு 9 மணிக்குள் உறங்குவதும்.காலை ஐந்து மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது.*💖👌
⚠👉 _*அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.*_💝👍
⚠👉🔴 _*நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.👍 நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.*_🙏
💝 😇 _*கடைசி காலத்தில் ஆரோக்கியம் மிக முக்கியம்*_💝😇👍
😇😍 _*எல்லா பிரச்சனைகளையும் நினைத்து நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதால் பிரச்சினை சரியாகாது.🙅🏻மாறாக மன அழுத்தமும்,விரகத்தியும்,சோர்வும் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.🙇🏻♀🙇🏻அவற்றை எதிர்கொண்டு வாழும் இனிமையான வாழ்வை தொலைப்போம்.😓ஆகையால் எத்தனை ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அவற்றைஎல்லாம் ஒவ்வொரு இரவிலும் அதாவது தூங்கும் முன் சற்று தூர ஒதுக்கி தள்ளி வைத்து தூக்கத்தின் மூலம் ஓய்வு பெற்று வாழுங்கள்...😍 இனிமையான புதிய விடியல் புதிதாக நம்மை பிறக்கவைத்து வழி அமைத்துகொடுக்கும்....!!!😇👍🙏*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
🏅 *தமிழன் navask*
🏅 *SpVignesh&Kumaran.G*
🏅 *jaiganesh& நிருபன்கதிர்*
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
🏅 *Deepa Senthil 🎻 🎉 🎊🌹*
🏅 *😆😝Rishi😂🤣*
🏅 *sukumar ❤Zhorba*
_*🆕இன்று புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை👌👍🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
😴 *இவ்வளவு பெரிய முடிவுரை ஒரே பார்ட்டா போட்டதுக்கு காரணம், இன்னைக்குனாச்சும் நீங்க எல்லாரும் நிம்மதியா தூங்கணும்ங்கிற ஒரே காரணம் தான்😬.*
😇 *ஒருவருக்கு 8 மணி நேர தூக்கம் நிச்சயம் தேவை. அதிக நேரம் கண் விழித்தால் ஆயுள் குறையுமாம்.*
😇 *இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை.*
😇 *டைம் கிடைக்கிறப்ப, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கால்குலேட் செய்தாவது தூங்குங்க. ரொம்ப நேரம் தூங்குனா சோம்பேறி ஆயிடுவிங்க.😇*
👉 *உடம்பு சரியில்லாதவங்க (நோயாளிகள்) மாத்திரையோ, ஊசியோ போட்டா உடனே தூக்கம் வந்துடும். காரணம் ரொம்ப சிம்பிள். எந்த அளவுக்கு நம்ம தூங்குறோமோ அந்தளவுக்கு நம் உடல்நிலை சீராகும். அதற்காக தான் மருந்து பொருட்கள் கூட இவ்வாறு தரப்படுகிறது.*
*ஓகே குட் நைட் தூக்கம் வருது. டாட்டா 👋🏻👋🏻👋🏻👋🏻 பாய்... பாய்...*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி*
*விழிப்பது போலும் பிறப்பு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம்வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
😉 *அறிந்துகொள்ளவும்*😉
*காற்றுள்ள போதே தூங்கிவிடு, கரண்ட் போனா தூக்கம் வராது.*
*தூங்குற நேரம் தெரிஞ்சா*
*எழுந்திக்கிற நேரம் நரமாகிடும்*
😉 *புரிந்துகொள்ளவும்*😉
*தான் தூங்காவிட்டாலும் தன் கடிகாரம் ஓடும்.*
😇 *தெரிந்துகொள்ளவும்*😇
*உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👩🏻✈🏹 *_GK_🏹*👩🏻✈
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *காளையன் அரசு 8072020151*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment