🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வியாழன்*🌹
🌹 *தேதி :26.10.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
💁🏻 *தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான்,*
*உலகை அறிந்தவன் கோப ப்பட மாட்டான்,*
*இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்*
💐 *பகவத் கீதை*💐
💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*மனிதன் பணத்தினை உருவாக்கினான். இன்று பணம் மனிதனை அழிக்கின்றது.*
*விலைமதிப்பில்லாத உயிரையும் அச்சடித்த காகிதம் பறிக்கின்றது.*
📣 *தலைப்பு*📣
*கந்து வட்டிகள், வட்டிக்கு பணம் வாங்குதா சரியா? தவறா? கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்த முடியாதா?*
👨👩👧👦💷✅⁉💷❎😰⁉✅😰⁉
🏛 *தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கந்துவட்டி சட்டம் சொல்வது என்ன?*❓
⚖ 🕹 *2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.*👍
⚖🕹 *18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம்.*📌
⚖🕹 *தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூலுக்கு தடை.*🙅🏻
⚖🕹 *2013 - கந்து வட்டி கொடுமைகள் பற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம்.*📃
⚖🕹 *கந்து வட்டி கொடுமையை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி நியமனம்.*📌
⚖🕹 *கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.*📌
⚖🕹 *கந்துவட்டி கொடுமைகளை அறிவதற்கு மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.*📌
⚖🕹 *காவல் துறையில் புகார் அளிக்கும் போது அதன் நகலை கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும்.*📌
⚖🕹 *புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.*📌
⚖🕹 *மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களில்📺 விளம்பரம் செய்ய வேண்டும்.*📌
⚖🕹 *சட்டம் குறித்த தகவல்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும்.*📌
⚖🕹 *கந்துவட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.*👍
⚖🕹 *2014 - கந்துவட்டிகாரர்களை கைது செய்ய கேரளா பின்பற்றிய ஆப்ரேஷன் குபேராவை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தல்.*📃
⚖🕹 *2014ம் ஆண்டு கந்துவட்டி விடுபவர்களை கைது செய்ய கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா திட்டம் அமல்.*📌
⚖🕹 *கேரளாவில் 773 பேர் கைது, 1448 பேர் மேல் வழக்கு.*📌
⚖🕹 *கந்து வட்டி வசூலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது.*👍
💸🤹🏻♂ *கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல👨👩👧👦 குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். 😔பலரோ தற்கொலை செய்து கொள்கின்றனர்.*😭
*கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003இல் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரியவில்லை.*👎
💸🤹🏻♀ *சிக்கும் அப்பாவிகள்*
*கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான்* *இலங்கை வேந்தன் என்று கூறுவார்கள்.* *கடன் பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல.* *ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு சுழலில் சிக்கிக் கொள்கின்றன.*😔
💸🤹🏻♀ *வட்டி எத்தனை வட்டியடா?*
*கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி,தினவட்டி, ராக்கெட் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் உள்ளது. வட்டிக்கு* *பணம் வாங்கும் பல அப்பாவி மக்கள்தான் பலியாகி வருகின்றனர்.*😰😔
💸 ✅❎ *வட்டிக்கு பணம் வாங்குவது சரியா? தவறா?*🎯
💸🎯 *சாதாரண மக்களிடம் தேவைக்கு குறைவான வருமானம் தான் இருக்கும். தங்களின் வருமானத்திற்கு, பசங்க படிப்பிற்கோ அல்லது மருத்துவ செலவுகள், வீட்டு தேவைக்காக வட்டிக்கு பணம் வாங்குவது இயல்பானது..*🤷🏻♀
💸🎯 *தங்களின் தொழிலுக்கு பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கி தான் ஆகனும். ஒரு தொழில் தொடஙக வேண்டும் என்றால் சரியான ஆவணங்கள் இருந்தும் கூட வங்கியில் பணம் கிடைப்பதில்லை. அந்த ஆவணங்கள் வேண்டும் இந்த ஆவணங்கள் வேண்டும் என்று அலகடிக்கிறார்கள். இதனால் அவர்களின் வேலை வருமானம் பாதிப்படைகிறது இதனாலே வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள்.*🤷🏻♀
💸🎯 *வருமானம் குறைவாக உள்ள பட்சத்தில் சேமிப்பு என்பது இருக்காது.*🙅🏻😞
👨👩👧👦💸🎯 *வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றாலோ அரசு 🏨மருத்துவமனைக்கு சென்றால் சரியான வைத்தியம் பார்ப்பது இல்லை. 😰அல்லது அங்கும் பணம்💶 இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கிறது. 😔(ஒரு சில இடத்தில்)*
*அதனாலே தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு சென்றால் ஆகும் செலவிற்காக மற்றவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது தவிர்க்க முடியாதது தான்.*😰😔
💸🎯 *தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதால் அங்கு பள்ளி கட்டணத்திற்காகவும், கல்லூரி படிக்கும் பசங்களுக்காக கட்டணம், தங்கும் விடுதி, உணவு இதர செலவுகளுக்காக கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழ்நிலை இருக்கிறது.*😰
💸🎯 *இன்றளவும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு வாடகைக்கு, தண்ணீர்க்கு, மின்சாரம், பசங்க செலவு இவ்வளவு செலவுகளுக்கும் வருமானம் போதாமல் வேற வழியில்லாமல் தான் கடன் வாங்குகிறார்கள்.*😰💶
💸🎯 *தற்போது இருக்கும் பொருட்களின் விலைவாசி ஏற்றம் கூட மக்களின் அன்றாட தேவைகளை பாதிப்படைய வைக்கிறது.*😰😞
💸🎯 *வசதியானவர்கள் கூட தங்களின் தொழிலுக்கு கடன் வாங்குகிறார்கள்.*
*ஒரு சிலர் ஆடம்பரமாக வாழ்வதற்கு கடன் வாங்குகிறார்கள்.*📌
💸🎯 *கடன் கொடுப்பவர்கள்*
*ஒரு சிலர் கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று அதிகமான வட்டி வாங்குகிறார்கள்.*⬆ 😠 *ஒரு நாள் கூட தவறாமல் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் இல்லை என்றால் வார்த்தைகளாலும் மனதாலும் துன்புறுத்தல் செய்வார்கள்.*😰
🎯💸 *ஒரு சிலர் ஞாயமாகவும் வட்டிக்கு கொடுக்கிறார்கள்.* 🤷🏻♀
🎯💷💸 *பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் தேவையான ஒன்றாக இருக்கிறது.👍 இருப்பவர்களிடம் இருந்து இல்லாதவர்கள் கடனாக வாங்குகிறார்கள்.*😰
🎯💸💷 *இன்னும் ஒரு சிலர் கடனாக பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமலும் ஏமாற்றுகிறார்கள்.😠 இன்னும் சிலர் வேறொரு இடத்திற்கு மாறி போய்ட்டு திரும்ப தராமலும் இருக்கிறார்கள்.*😰😔
🎯💸💷 *ஒரு சிலர் இதுவே தங்களின் வேலையாக இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து நல்லவர் போல காமித்து சீட்டு பணம், போடுவது கடன் வாங்கிட்டு ஊர விட்டு போவது இந்த மாதிரி பல ஏமாற்றும் வேலையை செய்கிறார்கள்.*👊😡
🎯💸💷 *சரியான வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தங்களின் வேலையாக பார்க்கிறார்கள்*. 👍
🎯💸💷 *கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காததால் இதனால் இவர்களுக்கும் பல பிரச்சனை வருகிறது.*💔🖤😰
🎯💸💷 *பணம் தேவைக்கு வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இதையே தொழிலாக செய்பவர்கள் இருக்கிறார்கள் இரண்டு பக்கமும் சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.*🤷🏻♀
💸💷 *கடன் வாங்கும் சூழ்நிலை ஏன் உருவாகிறது?*❓
🏛 *தமிழ் நாட்டில் அரசு பள்ளிகள் இருக்கிறது ஆனாலும் தனியார் பள்ளிகளில் பசங்களை படிக்க வைப்பதற்கு காரணம். கல்வி தரம் பள்ளி கட்டிடங்கள் சுகாதார வசதி குறைபாடு.😰 அரசாங்க பள்ளிகளில் படிக்க வைப்பது கட்டாயம் ஆனால் தான் அரசு பள்ளிகள் தரமாக உயரும்.*⬆
🏨 *மருத்துவமனைகள்*
*இந்தியா அளவில் தனியார் மருத்துவமனைகள் மட்டும் சிறப்பாக இருக்க காரணம்.*🔴 *கார்ப்பரேட் கம்பெனி வருமானத்திற்காகவும், பலரின் சுயநலத்திற்காக மருத்துவமனை இருக்கிறது. மருத்துவம் என்பது பணத்திற்காக பல புதுப்புது நோய்களை உருவாக்கியுள்ளது. அந்த ரெஸ்டு இந்த ரெஸ்டு என்று புனிதமான மருத்துவத்தை பணத்திற்காக வியாபாரம் செய்கிறார்கள்.* 🔴 🏛 *அரசாங்க மருத்துவதுறை மட்டும் தான் உலக தரமாகவும், சிறப்பாகவும் அரசாங்க மருத்துவமனையில் மட்டும் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சட்டம் வந்தால் மட்டும் தான் சிறப்பாக இருக்கும்.*🤷🏻♀😰
🏛👊 *சரியான அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் சரியாக செயல்பட்டால் மட்டுமே பொருளாதார பிரச்சனை கடன் பிரச்சனை வராது. அதிகாரிகள் சம்பளம் போதாமல் ஏழை மக்களிடம் லஞ்சம் என்று கொள்ளை அடிக்கிறார்கள்*. 😡👊
🏛 *அரசியல் வாதிகள் மக்களின் நலத்திட்டம் மற்ற பணிகளுக்குகான பணிகளிக்காக இருக்கும் பணத்தை அவங்களே பிரித்து எடுத்து கொள்கிறார்கள்*. 😡👊
💸💷😞 *ஏழை மக்களுக்கு எந்த உதவியும் நலத்திட்டமும் சென்றடைவதில்லை.*🙅🏻😔
*ஊருக்கே சோறு போடும் விவசாயிக்கு சோறு கிடைப்பதில்லை*. 😰
*விவசாயின் பொருளுக்கு அவர்களாலே விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை.😰 விவசாயம் செய்ய வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். சரியான வருமானம் கிடைக்காததால் கடனை திரும்பி கொடுக்க முடியாமல்தற்கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள்.*
🎯💸💷 *ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் ஏதோ தேவைக்காக மட்டும் தான் கடன் வாங்குகிறார்கள்.👍 நம்முடைய பொருளாதார பிரச்சனை அதிகமான வரி இவைகள் மூலம் நிறைய பாதிப்பு வருகிறது.*😰😔
*🏠வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பன்னிப்பார் என்பது பழமொழி*.
*🏡சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. ஒரு சிலர் கடன் வாங்கியாவது வீட்டை கட்டி முடிக்கிறார்கள்*.
*💑அதுபோல திருமணம் கூட சொந்தம் நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து பிரமாதமாக திருமணம் செய்கிறார்கள். 💑திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ஆதலால் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.👌*
*🤦🏻♂😓இன்னும் சிலர் குடும்ப சூழ்நிலை, கடன் காரணமாக வெளிநாடு செல்லவும் நேரிடுகிறது.*
*👨🏻💻💵வங்கியில் கடன் வேண்டும் என்றால் நகைகள் வேண்டும், பத்திரங்கள் வேண்டும். எதாவது ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். ஆனால் இதெல்லாம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்.*😌🙆🏻♂
*💵💵ஆயிரம், இரண்டாயிரம் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றால் கடனாக 🏛அரசோ, அல்லது வங்கிகளிலோ கடன் கொடுப்பது இல்லை. வட்டிக்கு தான் வாங்க வேண்டி இருக்கிறது.😌*
*🏛தமிழ் நாடே கடனில் தான் இருக்கிறது. இந்த கொடுமைய எங்க சொல்றது🤦🏻♂🙆🏻♂*
*👉நல்ல அரசியல், 👉நல்ல அதிகாரிகள், 👉நல்ல குடிமக்கள். அனைவரும்*
*✅சரியானவர்களாவும், 👍நேர்மையானவர்களாகவும் இருந்தால் மட்டுமே நம்முடைய பொருளாதார வாழ்க்கை மேம்படும். 🌍இந்தியாவும் வல்லரசாக மாறும்.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
🎖 *Isaiyaruvi*
🎖 *Jaiganesh*
🎖 *Karthikeyan c🤗*
🎖 *Kumaran. G*
🎖 *~👀~ @Prabha K1*
*🎖தமிழன் navasek*
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
🎖 *☂ Kudaykul Malay ☂*
🎖 *Rishi Bm*
*🎖Rams*
*🎖Arun*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*பணம் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. எல்லோருக்கும் எல்லா சமயமும் பணம் கையிருப்பு இருக்காது.*
*கடன் கொடுப்பவர் தங்களின் வருமானத்திற்காக தருகிறார்கள்*.
*கடன் வாங்குபவர் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வாங்குகிறார்கள்*.
*இரு தரப்பினரும் சரியான முறையில் நடந்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்* *றெல்லாம்*
*குறியெதிர்ப்பை நீர துடைத்து.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும்.* *மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?*
*விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?*
*விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?*
*விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.*
*வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👩🏻💻✍ *SM*✍👩🏻💻
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment