🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :4.10.2017.*
🌹 *கிழமை : புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
*இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல.*
*கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.*
*---மாவீரன் நெப்போலியன்---*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*முடியும் என்று நம்பினால்,*
*உன் வாழ்வில் முடியாதது என்று, எதுவும் இல்லை.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*பொது இடங்களில் சட்டத்தை பின்பற்றாமல் இருப்பதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கிறோம்?*
*உதாரணமாக சிக்னலில் நிற்காமல் போவது... பொது இடங்களில் எச்சில் துப்புவது...*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
⚠ *பொது இடங்களில் சட்டம் என்பது பிறருக்கு என்றே எண்ணுகிறோம்.*
*அதை நாம் பின்பற்ற மறுக்கிறோம்.....!!*
*மறக்கிறோம்....!!*
⚠ *ஒருவித பாதிப்பு ஏற்படும் போது மட்டுமே சட்டத்தின் நியாபகம் வருகிறது....மற்றபடி தனக்கு என்பதில் சட்டத்தை சட்டை போல் தேவை படும் போது பயன்படுத்திக்கொள்கிறோம்...இல்லை என்றால்....அதை மீற நாமே முன்னிர்க்கிறோம்....*
⚠ *ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்திலும் நாம் கவனக்குறைவாக இருப்பதினால் தான் பல பாதிப்புகளையும் நாம் அடைகிறோம்...*😞
🚯🚭 *பொதுவாகவே சாலைவிதி,தூய்மை நடவடிக்கை,குப்பைகளை சீர்படுத்தி ஒருசேர போடுவது,பொது இடங்களில் அசுத்தம் செய்வது இவை எல்லாமே நம் நலன் கருதியே உள்ளது.மக்களால் இதை ஒழுங்குபட சீர்செய்து கூட ஏற்று நடக்க இயலவில்லை.அதன் பாதிப்பும் மக்களுக்கே என்பது தெரிந்த ஓன்று.இருப்பினும் ஏற்க மறுக்கிறோம்.*
🚯 *பின்பு நம் நாடு மேலை நாடு போல் தூய்மையாக வேண்டும் என்று மட்டும் சட்டம் பேசுகிறோம்.*😏
⚠ *அன்றாடம் பல சட்டங்கள் இயற்றப்பட்டுக்கொண்டுதான் உள்ளது.*
🚭 *புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்... என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எல்லா திசைகளிலுமே பரவிக் கிடக்கிறது. இதுபோன்று போதை பொருட்களுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.*🎯
♨ *இதனை பெயரளவுக்கு மட்டுமே செய்யாமல், பொது மக்களை எளிதாக சென்றடையும் வகையிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சினிமா தியேட்டர்களில், திரைப்படம் தொடங்கும் முன்னர், காண்பிக்கப்படும் புகை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது.*🎯
♨🚭 *புகை பழக்கத்துக்கு அடிமையான நடுத்தர வயதுக்காரர் இருமிக்கொண்டே இருப்பார். அவரை ஏக்கத்துடன் பார்க்கும் அவரது சிறுவயது மகளின் முகம் கலக்கத்துடன் காணப்படும். இதனைப் பார்த்து மனம் மாறி, மகளின் பாசத்துக்கு கட்டுப்பட்டு புகைப்பழக்கத்தை அந்த தந்தை விடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விளக்கப்பட்டிருக்கும்.*🎯
♨ *இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கொடுக்கப்படுவதில்லை.*😞
🚭 *பொது இடத்தில் ஒருவர் புகை பிடிப்பதால் அவர் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. சிகரெட் புகையை சுவாசிக்கும் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2004-ம் ஆண்டு பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது.*👍
🚭 ☑ *இதன்படி, பொது இடத்தில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிதில் பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ‘‘பொது இடத்தில் புகைபிடிக்கக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்’’ என்கிற வாசகங்களும் பளிச்சிட்டன.*
♨ *ஆனால் காலப்போக்கில் அது காணாமலேயே போய்விட்டது. பெட்டிக்கடைகளில் சிகரெட் வாங்குபவர்கள் கடையில் நின்று மற்ற பொருட்களை வாங்கும் பொது மக்களை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அங்கேயே நின்று சிகரெட்டை பற்றவைத்து ஊதிதள்ளுகிறார்கள். அதே நேரத்தில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்கிற சட்டமும் காற்றில் பறந்த நிலையிலேயே உள்ளது.*
♨ 🚭 *இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 16 வயதில் இருந்து 17 வயதுக்குட்பட்டவர்களில் 44 லட்சம் பேர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. ஆண்டுக்கு 7 லட்சம் பேர் வரை இந்தியாவில் புகை பழக்கத்தால் உயிரிழப்பதும் கண்டறியப்பட்டது.*🔍
*💁🏻♂பொதுநலன் கருதியே உருவாக்கபடுகின்றன நமது சட்டங்கள்*
*😌ஏன் அவசியம் மக்களுக்கு தொந்தரவு பாதிப்பினால்தான் உருவாக்கபடுகின்றன சட்டங்கள்*
*👍தான் சரியாக இருக்கனும் தன்னுடைய சொந்தபந்தங்கள் தவறுசெய்தால் சுட்டிகாட்டும் நீங்கள் பொதுஇடத்தில் நடக்கும் 🙅🏻♂தவறுகளை கேட்பதில்லை அதனால்தான் இந்த சட்டங்கள் அவசியமாகின்றன*
*👨🏻🏫👩🏻🏫படித்தவர்கள் படிக்காதவர்கள் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான சட்டத்தினை உருவாக்கும் அவசியம் என்ன?*
*🍌வாழைபழம் சாப்புடும்போது சுவையாக இருக்கும் தோலை நடுதெருலே போட்டா நாளைக்கு நீயும் கீழே விழுவே உன்னைபார்த்து யாராவது போடுவாங்க🤦🏻♂*
*👉குப்பையே குப்பைதொட்டிலே போடனும் (வீட்டுளையா போடுவாங்க) நீங்க போடவில்லைனா 😳😱அந்த காய்ச்சல் இந்த காய்ச்சலுனு நீங்கதான் போகனும்.*
*பொது இடங்களில் பயணங்களின் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் சின்ன டிப்ஸ்🤒.*
*👉🏻பயணங்களின்போது பிறருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம். பிறர் அமரும், உறங்கும் இடங்களில் சாப்பிட்டு மீந்த உணவுகளையும், தண்ணீர், காப்பி போன்றவற்றையும் சிந்தி சக பயணிகளுக்கு சிரமம் தரக் கூடாது. பொது இடங்களில் போதைப் பொருட்களை உபயோகிக்காமலும், மதுபானங்களை அருந்தாமலும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.*
*👉🏻பஸ், ரயில் பயணங்களின்போது இரண்டு, மூன்று பேர் அமரும் இருக்கைகளில் ஜன்னல் ஓர இருக்கைகளைக் காலியாக விட்டு அமரக் கூடாது. ஜன்னல் பக்கம் நகர்ந்து அமர்ந்தால் அடுத்து வரும் முதியோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் சிரமமின்றி உட்கார ஏதுவாயிருக்கும்.*
*👉🏻பயணங்களின்போது கைபேசியில் சப்தமாகப் பேசுவது பிறருக்கு இடைஞ்சலாகயிருக்கும். கைபேசியில் சப்தமாகப் பேசி சகபயணிகள் ஆட்சேபித்தால் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கியமான காரணம் கைபேசியில் பொது இடங்களில் உரக்கப் பேசுவதே எனப்படுகிறது.*
*👉🏻உங்கள் கைகளில் நகம் வெட்டுவது, தலை முடியை சீவுவது, வாய் கொப்பளிப்பது, எச்சில் துப்புவது, பழம், கடலைத் தோல்களைக் கீழே போடுவது போன்ற செயல்கள் பொது இடங்களில் அருவருப்புக்கும், ஆட்சேபத்துக்கும் உரிய செயலாகும்.*
*👉🏻சாதாரணமாக தானியங்கி கதவுகள் உள்ள ரயில், பஸ், லிப்ட் போன்ற இடங்களில் பிறருக்கு உதவுகிறேன் என்று தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தின்றி உதவலாம்.*
*👉🏻பஸ், ரயிலில் பயணிகள் ஏறி இறங்கும் வழிகளில் அதை அடைத்துக் கொண்டு நிற்கவோ, அமரவோ கூடாது. வழியில் இருக்க நேர்ந்தால், பிற பயணிகள் வரும்பொழுது அங்கிருந்து நகர்ந்து அவர்களுக்கு வழி விடவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணச்சீட்டு வாங்குமிடங்களில், பஸ், ரயிலில் ஏறுமிடங்களில், வணிக வளாகங்களில், Rest room என்று சொல்லக்கூடிய கழிப்பிடங்களில் கூட 'Are you in the queue?' என்று கேட்டபடி மிகவும் கட்டுப்பாடாகவே செயல்படுவார்கள்.*
*👉🏻பொது இடங்களில் பிறர்க்கு இடைஞ்சல் தரும் வகையில் உரக்கப் பாடவோ, ஒலி எழுப்பவோ கூடாது. அரட்டை அடிக்காமலும், கூச்சலிடாமலும் அமைதியாகப் பயணிக்க வேண்டும். முதியோர்கள், பெண்களிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.*
*👉🏻இருமல், தும்மல் வந்தால் பிறர்க்கு நோய் பரவாமல் இருக்க வாயைக் கைகளால் அல்லது கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும். வேறு ஏதாவது உடல்நிலைக் கோளாறு அல்லது சிரமம் இருந்தால், சற்று நேரம் பொறுத்து பிறர்க்கு தொல்லை தராத வகையில் பயணம் செய்யவேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பதால் தங்களுக்கு மட்டுமின்றி, பிறர்க்கும் புகையை சுவாசிப்பதால் ( Passive smoking) உடல்நலம் கெட வாய்ப்புண்டு. எனவே பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது ஆட்சேபனைக்குரியது.*
*👉🏻நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக பயணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால், ஆரவாரமின்றி அமைதியாகவும், உடன் பயணிப்பவர்களுக்கு இடையூறு இன்றியும் பயணிப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் பயணம் இனிதாகும்.*
🍺🍻🍷🥃 _*குடி குடியை கெடுக்கும்...*_
😏 *இப்படி போட்டு மதுபானங்கள் விற்கலாம்....*
🚭 _*புகைபிடிப்பது வீட்டிற்கும் நாட்டிற்க்கும் கேடு..*_
😏 *இப்படி போட்டும் அதை விற்கலாம்...*
🔪 *ஆனால் அதன் விற்பனையை தடை செய்ய முடியாது..ஏனென்றால் அரசிற்கு இலாபம்....இப்படி அரசு இருக்கையில்....*🔪
🤒 *மக்களும் சட்டங்களை படித்துவிட்டு மறந்துவிட்டே சென்று சட்டத்தை மீறுவதை அல்வா சாப்பிடுவதுபோல் அருந்திவிட்டு செல்கிறார்கள்....*😏👊
*🚙🛵வாகனம் செல்லும் போது 🚦சிக்கல்களில் நிற்பது கூட இல்லை.*
*🚗ஒருசிலர் 🚦சிக்னல் டைம் முடிவதற்குள் கிளம்பி விடுகின்றனர் இதனால் அவங்களுக்கு மட்டும் பாதிப்பு மட்டுமில்லாமல் 🤦🏻♂எதிரே வருபவர்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது.*
*🛣சாலைவிதிகளையும் பின்பற்றுவதில்லை.*
*🚘தாறுமாறாக வண்டியை ஓட்டிக்கொண்டு போகிறார்கள் இதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகிறது.😭*
*🚚அதிகமான வேகத்தோடு செல்வதாகவும், 🥃🍷மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலும் பல விபத்து ஏற்படுகிறது🤦🏻♂.*
*🚑ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடுவதில்லை🤦🏻♂*
*💁🏻♂இதற்கான சட்டம் இருந்தும் மீறுகின்றனர்*
*🏞பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் சிலர் வெட்டுவது,*
*🌴🌳மரங்கள் அழியும் அளவிற்கு மரக்கிளைகளையும் வெட்டுவது,*
*வனத்துறை பல கட்டங்களில் எச்சரிக்கை செய்தும் அதனை பொருட்படுத்தாமல் மேற்கண்ட செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.*
*💁🏻♂இது வனச்சட்டம் 1927ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.*
*🌊கடற்கரையில் உள்ள சதுப்பு நிலக் காடுகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் பல வகையான வெளிநாட்டு பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வந்து தங்குகின்றன. இவற்றை வனத்துறை ஊழியர்களின் தொடர் கண்காணிப்பையும் மீறி, சிலர் உணவிற்காக வேட்டையாடுவதாகவும் புகார்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது.*
*🌊கடலில் உள்ள அரியவகை 🐬திமிங்கலம் போன்ற 🐟🐠மீன் வகைகள், 🐢ஆமைகள், அட்டைகள் போன்றவற்றை பிடிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.*
*💁🏻♂இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்🙅🏻♂ என்றும், மீறினால் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துக் கொண்டு தான் இருக்காங்க.*
*ஆனா இதெல்லாம் காதுல கூட வாங்குறது இல்ல😞*
*🏘ஊர் பலகைகளில் 📑நோட்டிஸ் ஓட்டுவது, பேருந்து நிலையங்களில் நோட்டிஸ் ஓட்டுவது, தேவையில்லாத பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்களை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, பொது இடங்களில் 🤦🏻♂கட்சி மீட்டிங் போட்டு, பொதுமக்களை துன்புறுத்துவது, 🛣ரோட்டோரங்களில் குப்பைகளை கொளுத்துவது, 🌊ஆறுகள் அருகில் இருந்தால் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவது இதுபோன்ற அனைத்து கேடுக்கெட்ட வேலைகளுக்கும், சட்டங்களும், உரிய தண்டனைகளும், இருக்கின்றன.💁🏻♂*
*💢ஆனால் இந்த சட்டத்தை அனைவரும் தவறு செய்து, அவரவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர் என்பதே மறுக்கப்படாத உண்மை😒.*
*🏍ஹெல்மெட், 🛵லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டுவது 👨🏻✈போலீஸ் பிடித்தால் லஞ்சம் கொடுத்து தப்பித்து போறது இதெல்லாம் சட்டத்தை மீறுவது தான்.🤦🏻♂*
*🙅🏻♂லஞ்சம் வாங்குவதும், 🙅🏻♂கொடுப்பதும் சட்டப்படி குற்றம்.🚫*
*👨🏻நம்முடைய வேலை ஆக வேண்டும் என்பதற்காக என்ன வேணாலும் பன்னலாம் என்பது மக்களின் மனநிலையாக இருக்கிறது.😌😌*
*🏘பொது இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.*
*😳😱என்னது பத்தாயிரமா? இத இந்தியா புல்லா அமல்படுத்துனா, சீக்கிரம் வல்லராகிடும். நாலு பேருகிட்ட இதுபோல பைன் போடுறது தப்பே இல்ல☹👊*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
*🏆நா ராமகிருஷ்ணன்,*
*🏆ப்ரியா யுவராஜ்* *🏆ksivasaravanan*,
*🏆Basha*,
*🏆Pachamannu (Pm),* *🏆மகாராஜன்,*
*🏆இசையருவி*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
*திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.*
*அதுபோல நாம்ம சட்டத்தையும் விதிமுறைகளையும் பின்பற்றினால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்*
*சட்டம் என்பது நமக்கு நன்மை தர கூடியதாக இருப்பதற்கு நாம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒழுக்கம் விழுப்பந்* *தரலான் ஒழுக்கம்*
*உயிரினும் ஓம்பப் படும்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி*
*சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.*
*சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?*
*சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.*
*சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா*
*சர்க்கரை என்றால் தித்திக்குமா?*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*✍👨🏻💻கந்தசாமி~ 9080669640*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment