🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சி*
*குழுமத்தின் ®© 👁*
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :05.10.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_" நாம் பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோரற்கடிக்கப்பட்ட பாதையில் நாம் பயணிப்பதற்க்குச் சமம் ."_*
🌱 *Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் .*💐🌳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
*தீமை செய்வதற்கு மட்டும் பயப்படு*
*வேறு எதற்காகவும் பயந்து ஓடாதே. எதிர்த்து நிற்பவனே பல சாதனைகள் புரிகிறான்.*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻💼
*_பேரிடர் மேலாண்மை அனுபவங்களும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஓர் ஆய்வு._* ===================
🌏 🌊 🔥☄⛈🌨🌪💨🗾🌋🏔
*🎄🌳இயற்கையின் அருட்கொடையாக எண்ணற்ற வளங்களை பெற்றும் அதன் முக்கியத்துவம் கருதாத 💁🏻♂மனிதன் அளவுக்கு அதிகமாக ஆசைபட்டு, அவசியத்திற்க்கு உபயோகிக்காது, ஆடம்பரத்திற்க்கு உபயோகபடுத்தியதால் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான அபாயங்களில் ஒன்று பேரிடர்.🤦🏻♂*
🤔 *எந்த இடம், எந்த நேரம், எந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு அடையாளத்தோடு ஒவ்வொரு பொழுதிலும் ஏதேனும் ஒரு பேரழிவு எங்கேனும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.*🤔😔
*🤦♂தன்னை மறந்து மனிதன் எப்போது 🏞இயற்கையை புறக்கணிக்க ஆரம்பித்தானோ அந்த தருணத்திலிருந்தே இயற்கையும் மனிதர்களை புறந்தள்ளி கொண்டிருகின்றன என்பதற்கு உதாரணம் தான் பேரிடர் என்பது.🤦♀*
*🤷♂நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், 🏞இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம்.*
*🌳🌴காடு சீர்படுத்தி நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது பண்டைய பண்பாடு*. *😌இருப்பினும்,* *தாங்கள் அழித்த 🏞காடுகளுக்குப் பதிலாக குளம் வெட்டி வளம் பெருக்குவதை மேன்மையான அறமாகக் கருதி இயற்கைச் சமன்மையைப் பேணிப் பாதுகாத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.*🤷♀
*👴🏼👳நமது முன்னோர்கள் 🏞இயற்கையின் அவசியத்தை உணர்ந்து வாழ்ந்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக 🏞இயற்கையின் அவசியத்தை பாடலாக தொகுத்துள்ளார்கள்,*
💧 *ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘நீரின்றியமையாது உலகு‘ என்றார் வள்ளுவர்.*💧
*🌏நிலம், 💧நீர், 🌫காற்று, 🔥நெருப்பு, ☁வான்வெளி உள்ளிட்ட ஐந்துபூதங்களின் அவசியத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது*
.
*"🏝மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல"*
*🤦♂ முன்னோர்களின் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றாத நாம் இயற்கை பேணிகாப்பதிலும் மெத்தனமாக நடந்துகொள்கிறோம்.ஆதலால்😔 கடைசியில் 🌊இயற்கை பேரிழப்புகள் ஏற்ப்பட்டு உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதத்தையும், சொல்லொன்னா சோகத்தையும் ஏற்ப்படுத்தி விடுகின்றன😭😭. பதிலேதும் இல்லாமல் மனித மனம் அழுது தொலைக்க எத்தனை காரணங்கள் உலகத்தில்.....*😭
☠ *_பேரிடர் வகைகள்:_*☠
🤔 *பெரிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்:*🤔
*👉பெரும் வெள்ளம்*.
*👉ஆழிப் பேரவை (சுனாமி).*
*👉கடும் வறட்சி*.
*👉நிலநடுக்கம்*.
*👉சூறாவளிப் புயல்.*
🤔 *சிறிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்:*🤔
*👉பனிப்புயல்.*
*👉பனிப்பொழிவு.*
*👉இடி, மின்னல்.*
*👉நிலச்சரிவு.*
*👉புயல்காற்று.*
🤦♂ *பெரிய அளவிலான செயற்கைப் பேரிடர்கள்:*🤦♀
*👉தீ விபத்து.🔥*
*👉வெடி விபத்து.💣*
*👉இராசயன வெடி.💣*
*👉தீவிரவாதத் தாக்குதல்.🔫*
*👉தொற்று நோய். 😷*
🤦♂ *சிறிய அளவிலானச் செயற்கைப் பேரிடர்கள்:*🤦♀
*👉சாலை🛣, ரயில்🚞,*
*👉விமான🛬 விபத்துகள்*
*👉விழாக்களில் ஏற்படும் விபத்துகள்.*
*👉தொழிற்சாலை விபத்துகள்.*
*👉விஷம் கலந்த உணவு, சாராயம்*.
🤔 *இந்தியாவில் கடந்த காலங்களில் நடந்த சில பேரிடர்கள் உங்கள் பார்வைக்கு சிந்தித்து செயலாற்றிட:* 🤔
*🌏இந்திய நிலப்பரப்பில் 54% 🗾புவி அதிர்ச்சி பகுதி என்றும் 40% மில்லியன் ஹெக்டேர் பகுதிகள் வெள்ளம்🌊 பாதிக்கும் பகுதி* *என்றும் புள்ளி விவரங்ககள் தெரிவிக்கின்றன🙆🏻♂😱.*
🌬 *போபால் விஷவாயு:*🌬
*😪🤦🏻♂கடந்த 1984 ஆம் ஆண்டு - போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டது யாருக்கும் மறந்து போயிருக்காது.*
*🌏உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தாகக்* *கருதப்படும் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவான இதில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது😭😭. ஆனால், 5,295 பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் கூறுகிறது.😡*
*🗾குஜராத் நிலநடுக்கம்:*🗾
*🤧2001ஆம் ஆண்டு - குஜராத் மாநிலத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் - 13805 பேரை பலி வாங்கியதாக கூறப்படுகின்றது. 🌍இந்தியாவின் 52 வது குடியரசு விழாவின் சுகமான தருணத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 55,000 பேர் வரை படுகாயமுற்றனர்.😨*
🌊 *ஆழிப் பேரலை(சுனாமி):*🌊
*😱😥2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் ஆசிய ஆப்ரிக்க பிராந்தியத்தில் ஏற்ப்படுத்திய சோகம் இன்றுவரையிலும் அதன் அடையாளங்களை மாற்ற முடியாதபடிக்கு சக்கையாய் பிழிந்துபோட்டது கடற்கரை ஒர கிராமங்களை.*
*😲😫கிட்டத்தட்ட 2,50,000 உயிர்களை பலிகொண்ட கடல்கோளின் கோரபசிக்கு இந்தியாவில் மட்டும் 10749 பலியானார்கள். இது மிகப்பெரிய மனித பேரழிவாக கருதப்படுகிறது.*
🌊 *பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு:*🌊
*🤧🤧2008 ஆம் ஆண்டு பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 250 பேர் பலி. 30 லட்சம் பேர் வீடிழந்தனர். *அதே சமயத்தில் அமெரிக்காவில் 24 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட புயலில் மொத்தம் 147 உயிர் பலிகள்தான்.* *😱😳வீடிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 30000 மட்டும்தான். இதன் ஒப்பீடுகள் ஒன்றைத்தான் நமக்கு திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருகின்றன. அது *நாம் இயற்கையின் விதிகளை மீறிவிட்டோம் என்பது.*
🌊 *உத்தரகாண்ட்ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு & நிலச்சரிவு :*🌊
*😱😪2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளபெருக்கும், நிலச்சரிவும் அந்த மாநிலத்தை மட்டுமல்லாமல் தேசத்தையே நிலைகுலைய செய்தது*.
*🏛தமிழ்நாட்டில் ஏற்ப்பட்ட சில பேரிடர்கள்:*
*🌊சென்னை பெருவெள்ளம்:*
*🏛சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்திற்கு இந்த 🌨மழை தான் காரணமா? இல்லை. மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும், வெள்ள வடிகால்களில் கைவிடப்பட்ட பராமரிப்புப் பணிகளும் தான் இந்தப் பேரிடருக்கான மிக முக்கியமான காரணிகள்.*
*🏛சென்னை மாநகருக்கான மிக முக்கியமான 💧நீர் ஆதாரங்கள் நான்கு – அவை, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழாவரம் ஏரி மற்றும் செங்குன்றம் ஏரி. இந்த நான்கு ஏரிகளில் இருந்து சென்னை நகருக்குள் கொசஸ்தலை ஆறு, அடையாறு மற்றும் கூவம் ஆகிய மூன்று நதிகள் பாய்கின்றன. இந்த மூன்று நதிகளையும் 🌊🌊சென்னை கடற்கரை ஓரம் ஓடும் பக்கிங்ஹம் கால்வாய் இணைக்கின்றது.*
*💁🏻♂கூவம் – அடையாறு நதிநீர் இணைப்பு 1876-77 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கி சுமார் பல லட்சம் மக்களை பலிவாங்கியது.*
*😭😪கடந்ந சில ஆண்டுகளாக சென்னையும் கடலூரும் பல முறை மழையினால் எண்ணற்ற இன்னல்களை பார்த்து அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.*
*🤔 கடந்த 50 ஆண்டுகளில் பல மாநிலங்களின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக மாறியுள்ள காரணத்தினால் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் கடும் வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. 1984 முதல் 2003ஆம் ஆண்டு வரையில் 🌍இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைச் சேதங்களைக் கணக்கிட்டால், 85 🌊வெள்ளப் பெருக்கும், 51 புயலும், அளவு கோலில் 5 ரிக்டருக்கும் மேலாக 10 நிலநடுக்கங்களும், 8 வறட்சியும் ஏற்பட்டுள்ளது.* இது *மட்டுமல்லாமல் 🌊இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகளால 10,000ம் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.* 🤔
🤔 *1963 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளில் இருந்து முக்கியமான பாதிப்புகளில் 84 % 🌊வெள்ளம், வறட்சி, 🌋வெப்பமண்டல சூறாவளியால் ஏற்பட்டவை* *என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.🤔*
*💁🏻♂இவற்றிலிருந்தெல்லாம் நாம் நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் அவசரமாய் என்பது தற்போதைய நெருக்கடி...*
👷 *பேரிடர் மேலாண்மை:*👷♀
*🌏இந்த உலகமும் உயிர்களும் நிலைக்குமென்று யாராலும் சொல்லமுடியாது. முடியுமா என்ன?*
👨🏻🚀 *பேரிடர் மேலாண்மைக் குழுக்கள்:*👩🚀
*👮🏻மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு.*
*💂♀மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு*
*👷ஊராட்சி ஒன்றிய மேலாண்மைக் குழு.*
*👨🏻✈ஊராட்சி மேலாண்மைக் குழு.*
*இந்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்:* *🌏இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 23 டிசம்பர் 2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், *பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.*
*👷தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையதின் கீழ் தேசியப் பேரழிவு மீட்புப் படை* *அமைக்கப்பட்டுள்ளது. உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மொத்தம் 10,400 பேர் உள்ளனர். அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும்* *அமைக்கப்பட்டுள்ளது.*
*1⃣காசியாபாத் (உத்தரப் பிரதேசம்)*
*2⃣ பட்டியாலா (பஞ்சாப்)*
*3⃣கொல்கத்தா (மேற்கு வங்காளம்)*
*4⃣குவஹாத்தி (அசாம்)*
*5⃣கட்டாக் (ஒடிசா)*
*6⃣அரக்கோணம் (தமிழ்நாடு)*
*7⃣பு னே (மகாராஸ்ட்டிரம்)*
*8⃣காந்திநகர் குஜராத்*
*9⃣பட்னா (பீகார்)*
*1⃣0⃣ குண்டூர் (ஆந்திரப் பிரதேசம்)*
*பேரிடர் பாதுகாப்பு வழிமுறைகள்:*
🌏நிலம்,💧நீர்,🌪காற்று, 🔥நெருப்பு, ☁ஆகாயம் என பஞ்ச பூதங்களால் ஆனது நம் உலகம். இந்த ஐந்து வகையிலும் நமக்கு எதிர்பாராத பேரிடர்கள் ஏற்படு கின்றன. இந்த இயற்கைப் பேரிடர் ஒவ்வொரு நாட்டுக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மாநிலத்துக்கும் தகுந்தாற்போல ஏற்படுகிறது.
பேரிடர்களைப் பொறுத்த வரை, *வரும் முன் தடுக்கும் Pro-active management, வந்த பிறகு நிலைமையை சீராக்க மேற்கொள்ளும் Reactive management* என்று இரு வகைகள் உண்டு.
*_முக்கியமாக, எதிர்பாராத பேரிடர்கள் வரும்போது அவற்றைச் சமாளிக்கும் பேரிடர் மேலாண்மையை (Disaster management) மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்._*
🤔 *இக்கட்டான நேரத்தில் பயம், பதற்றம் வருவது இயல்பானதுதான். ஆனால், கடந்த கால இழப்புகளைப் பார்க்கும்போது பயமும் பதற்றமும்தான் இழப்புகளைப் பெரிதாக்கி இருக்கின்றன. அதனால், ஒரு நிமிடம் பிரச்னை என்ன, நிலைமை என்ன, குழந்தைகள், பெரியவர்கள், பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்று சமயோசிதமாக யோசிக்க வேண்டும். விரைவாகவும் செயல்பட வேண்டும்.*🤔
🗾 *நிலநடுக்கம்:*🗾
*👉நிலநடுக்கம் வரும்போது கட்டிடங்களை விட்டு திறந்தவெளிக்கு வந்துவிட வேண்டும்.*
*👉லிஃப்ட்டை பயன்படுத்துவதை விட, படிகளில் வெளியேறுவது நல்லது.*
*👉உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்கிற அளவு உயரத்தில் இருக்கும்பட்சத்தில் குதிப்பதிலும் தவறு இல்லை.*
*👉மண் சரிவு ஏற்படும்போதும், பாறைகள் உருண்டுவிழுகிறபோதும், பெரும்பாலும் நேராக கீழ்நோக்கித்தான் மண்ணும் பாறைகளும் வரும். அதனால், இடது அல்லது வலது பக்கமாக பக்கவாட்டில் ஓடி தப்பித்து விட வேண்டும்*.
🌊 *வெள்ளம்:*🌊
*💧அனைவரும் சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக்கொள்வது அவசியம்.*
*💧 பள்ளமான இடங்களில் கட்டங்கள் கட்டுவதை தவிர்த்து: வெள்ளம் வெளியேர சரியான வடிகால்களை அமைக்க வேண்டும். அமைத்தாலும் நீர் வெளியேறுவதை தடுக்காதிருக்க வேண்டும்*.
*💧கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெள்ளம் மேலே ஏறும்.அதனால், அதிகாரிகள் வரட்டும் என்று* *காத்திருக்காமல்*, *கூடிய வரை தாழ்வான பகுதிகளில்* *வெள்ளத்தை மடைமாற்றும்* *வேலைகளை தங்கள் பகுதிகளில் இருப்பவர்களே செய்து தற்காத்துக்கொள்ளலாம்.*
💧 *பூகம்பம் வந்தால் கீழே வர வேண்டும் என்பது போல, மழை வெள்ளம் வரும்போது உயரமான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.*
*💧தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து இருந்தால் வீட்டின் மின் இணைப்பை துண்டிப்பது அவசியம். ஏனெனில், மின்சாரமானது தண்ணீரில் கசிந்து தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கிவிடும்.*
*💧தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கு சுகாதாரமாக இருப்பது அவசியம்.*
🔥 *தீ விபத்து:*🔥
*🔥பெரும்பாலான தீ விபத்துகளுக்குக் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது*.
*🔥தொழிற்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கும் மின் கசிவே காரணமாக இருக்கிறது.*
*🔥மின்சார சாதனங்களுக்கு பக்கத்தில் தேவையற்ற பொருட்களை அடுக்கி வைத்திருப்பதும் இந்த அபாயத்தை அதிகப்படுத்தும்.*
*🔥தீ விபத்து ஏற்படும்போது தீ உடலில் பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். ஓடினால் தீ அதிகமாக பரவும். அடுத்தவர் மீது தீ பரவினால் அவர்களை கீழே தள்ளி உருளச் செய்ய வேண்டும்.*
🔥 *தீ பெரிய அளவில் பரவி அணைக்க முடியாத அளவில் இருந்தால் 101 மற்றும் 102 என்ற எண்களுக்கு போன் செய்து தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடவேண்டும்.’’*
☁ *ஆகாயம்:*☁
*☁வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தாலே வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும். 🌳*
*🤦♂சுனாமி, புயல், 💧மழை, 🌨பெருவெள்ளம் ஆகியவை இயற்கை பேரிடர்கள். அவைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாதுதான். ஆனால் அவைகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். ஏனெனில் நாம் மனிதர்கள். மந்தைகள் இல்லை.🤦♀*
*🤦♂ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் ஊடகங்களும் சரி ஆட்சியாளர்களும் சரி அவற்றை தடுப்பது பற்றியும், அதிலிருந்து காத்துக்கொள்வது பற்றியும் நமக்கு திகட்டும் அளவுக்கு பேசுகிறார்கள். இவை அனைத்தும் ஒன்றிரண்டு வாரங்கள் மட்டுமே நடக்கின்றன பின்னர் அதைப்பற்றி எவரும் திரும்பிப்பார்ப்பதில்லை.🤦♀*
*🤦♂ பேசுபவர்களும் மறந்து போகிறார்கள், பாதிப்பிற்கு உள்ளானவர்களும் மறந்து போகிறார்கள். மீண்டும் ஒரு பேரழிவு நிகழும் போது சற்றும் குறையாத இழப்புகளை மீண்டும் சந்திக்கிறோம்.🤦♀*
🤝 *இனிமேலாவது இயற்கை பேரிடர்களை முடிந்தளவு வராதிருக்க இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ முயற்ச்சிப்போம்.*
*வருமுன் காப்போம்! வந்தாலூம் சமாளிக்க முயற்சித்து முற்படுவோம்.*🤝
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
*🎖Pachamannu (Pm)*
*🎖Su*
*🎖DEVENDRANhp*
*🎖jaiganesh2881*
*🎖நா.ராமகிருஷ்ணன்*
*கலந்துரையாடல் 2®©*
*🥇@thalapurusoth🙃*
*🥈@padma*
*🥉@Mani*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👉 *பேரிடர் காலத்திலாவது சுயநலம் பார்க்காது நம்மால் முடியுமென்று நினைத்து முடிந்தளவு உதவிசெய்வோம். நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும் என்று செயல்படுங்கள்.நிச்சயமாக நம்மால் உதவமுடியும்.இதுவரை உதவியவர்களுக்கு வாழ்த்துக்கள், உதவாதவர்கள் இனியேனும் உதவிசெய்யுங்கள்,நலமாக வாழ்வோம் மற்றவர்களையூம் வாழவைத்து.*👈
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு*
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையை தர எண்ணும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*" வினை விதைத்தவன் வினை அருப்பான் ".*
☘☘☘☘☘☘☘☘☘☘
🤷♂ *சிந்தனை :*🤷♀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ஒன்று மட்டும் தெளிவு, நாம் என்ன செய்தாலும் இயற்கையின் பேரழிவுகளை தடுக்க முடியாது.*
*கடல்கோளையும், நிலநடுக்கத்தையும் தடுக்கவாமுடியும்? வெள்ளத்தையும், பஞ்சத்தையும் நிறுத்தவா முடியும்?*
*ஆனால், ஒன்று செய்யலாம்... இவற்றின் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியும்...*
*இயற்கை வளங்களை ஆடம்பரத்திற்க்காக உபயோகிக்காது, அவசியத்திற்க்கு உபயோகித்து இயற்கையை மீண்டும் முடிந்தளவு புதுப்பிப்போம்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌱 *கனகராஜ்.வே.*🌳
🌱 *9047493815*🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎🌱 *மணி விஜய் -*
*8428073724*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment