Wednesday, 8 November 2017

விசித்திரமான நோயால்(தூக்கத்தில் நடப்பது போன்று....) பாதிக்கப்பட்டவர்களும், அவர்களைச் சுற்றி உள்ளவர்களும்?* ⚠⁉🤔⚠⁉🤔⚠⁉🤔⚠⁉

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :செவ்வாய்*🌹

🌹 *தேதி :7.11.2017* 🌹
__________________________________
💓 *அறிவோம்*💓
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🦋 *இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்!!!*

💐 *அன்னை தெரசா*💐
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *இங்கு ஒவ்வொரு மனிதர்களுக்கும், ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றது.*

*சிலருக்கு உடலளவில், சிலருக்கு மனதளவில்...*

📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*விசித்திரமான நோயால்(தூக்கத்தில் நடப்பது போன்று....) பாதிக்கப்பட்டவர்களும், அவர்களைச் சுற்றி உள்ளவர்களும்?*
⚠⁉🤔⚠⁉🤔⚠⁉🤔⚠⁉

😇 *கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்🙏*

💁🏻‍♂ *இன்னைக்கு சூழ்நிலையில் மனிதன் எந்த நோயும் இல்லாமல் பிறப்பது/வாழ்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம்... அதுவும் இலக்கிய வடிவில் சொல்லனும்னா...*

*_அவ்வையே அரிது எதுவோ?_*

🔆 _அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது_

🔆 _மானிடராய் பிறந்த காலையின்_
_கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது_

😊 *இப்படி அரிதாக பிறக்கும் மனிதனுக்கு ஏற்படும் விசித்திரமான நோய்கள் மற்றும் அவர்களை சுற்றியுள்ளவர்களின் நிலமைகளை பாப்போம்.. வாங்க...*🤒

🤔 *நம் உலகில் வினோதங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சமே இல்லை.🙅🏻‍♂ பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் எல்லாவற்றிலும் சில வினோதங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கும். மனிதர்கள் பெரும்பாலும் கடவுளிடம் வேண்டுவது, "நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம்" ஆனால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் கூட தீர்க்க முடியாத நோய்கள் என்று பல இருக்கின்றன.*📌

*👨🏻‍⚕ மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம்*
*(Central Hypoventilation Syndrome)*

🔰 *இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட்  நகரில் வசித்து வருபவர்  லியாம் டெர்பிஷைர் (17) .*

⚠ *இந்த வாலிபரை  வினோதமான  ஒரு நோய் தாக்கியுள்ளது. வாலிபர் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.*🤕

⚠ *உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் வாலிபரின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.*📌

⚠ *இந்த நோய் தாக்கியுள்ள நபர் தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது.*😱

⚠ *இதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் இரத்தக்கொதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது.*😳

⚠ *‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது.😔 ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.*😔

⚠ *இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது’*😔

*👨🏻‍⚕யானைக்கால்*
*(Elephantiasis)*

⚠ *பெரும்பாலானோர், கொசுக்கடியை பற்றி, கவலைப்படாமல் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி, பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பின், அது கொசு பெருக வழிவகுக்கும்.*
*'எங்களை, கொசு ஒன்றும் செய்யாது. ரொம்ப நாளாக இப்படித் தான் நாங்கள், கண்டு கொள்ளாமல் வாழ்கிறோம்' என்பவர்கள், ஒரு முக்கிய உண்மையை உணராமல் உள்ளனர். ஆம்... கொசு, டெங்கு, மலேரியாவை மட்டும் பரப்புவதில்லை... யானைக்கால் நோயையும் உண்டாக்கும்.*😞

⚠ *குறைந்தது ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டிற்குப் பின்தான், இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்*📌

⚠ *குணப்படுத்த முடியாத நோய்கள் என்ற வரிசையில், யானைக்கால் வியாதியும், மிகவும் முக்கியமான ஒன்று. கட்டுப்படுத்தவே முடியும்*😓

*👨🏻‍⚕Progeria*
*(ப்ரோஜெர்ஜியா)*

⚠ *பிலிப்பைன்ஸ் நாட்டின் Ana Rochelle Pondare எனும் பெண் பார்ப்பதற்கு 144 வயதுடையவர் போல் தோற்றமளித்தாலும் மிக அண்மையில் தான் அவரது 18 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.*😔

⚠ *இவர் தனது சிறு வயதிலேயே Progeria என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.*😔

⚠ *மரபணு குறைபாடு காரணமாக இவரது வளர்ச்சி சாதாரணமானவர்களை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.*📌

⚠ *பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14 வயதினிலேயே உயிரிழந்து விடுவர்.*😳

⚠ *Ana Rochelle Pondare தனது 18 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.*😳

⚠ *இந்த நோய் முதலில் 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது 46 நாடுகளில் 134 குழந்தைகளுக்கு இந்த நோய் உள்ளது தெரியவந்துள்ளது.*🔍

🔴 *இந்த நோய் 40 லட்சத்தில் ஒரு நபருக்கு மட்டுமே உள்ளது.*🔴

*👨🏻‍⚕எண்ண சுழற்சி நோய்*
*(Obbsessive Compulsive Disorder)*

⚠ *கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ணத் துாண்டுதலின் பேரில் ஒரு செயலை மறுபடி மறுபடி செய்வதே இந்நோயின் அறிகுறி.*🤕

⚠ *ஏழு வயது குழந்தைக்கும், எழுபது வயதுக்காரருக்கும் கூட இந்நோய் வரலாம்.*
*ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கியவர்கள் சில விசித்திரமான செயல்களைச் செய்வர்.*😧

⚠ *உதாரணத்திற்கு, கை கழுவுவது! இவர்கள், ஒரு முறை கை கழுவியவுடன் நிறுத்த மாட்டார்கள்; தொடர்ந்து ஐந்தாறு முறை கழுவுவார்கள்! தங்களின் கைகளில் இருக்கும் கிருமி போகவில்லை என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணம், அவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கும். அந்த சிந்தனையில் இருந்து வெளியேற முடியாமல் கஷ்டப்படுவார்கள்.*😔

⚠ *நம்மில் பலர் வெளியில் கிளம்பிப் போகும்போது, வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை இழுத்து சரிபார்ப்போம். அப்போதும்கூட, சந்தேகம் தீராமல், பூட்டில் தொங்குவதும் உண்டு. ஒருவகையில், இதுவும் இந்நோயின் அறிகுறிதான்! இதற்கெல்லாம் சிகிச்சை முறைகள் உள்ளன என்றாலும், இவையெல்லாம் நோயின் தீவிரத்தை பொறுத்துதான்.*😔

*👨🏻‍⚕வாட்டபவுட்ரீ நோய்*
*(Whataboutery)*

⚠ *இது உண்மையில் நோய் அல்ல. விசித்திரமான மனநிலையின் பொதுப்போக்கு. ‘ஒரு குற்றச்சாட்டோ கடினமான கேள்வியோ முன்வைக்கப்படும்போது, அதற்குப் பதிலாக வேறொரு குற்றச்சாட்டை வைக்கும் அல்லது வேறொரு பிரச்சினையை எழுப்பும் உத்தி அல்லது பழக்கம்'*📌

⚠ *உதாரணமாக,*
*“ஏன்டா தம்பியை அடிச்சே?” என்று உங்கள் மூத்த பையனிடம் கேட்டால், “அவன் மட்டும் அன்னைக்கு எனக்குக் கொடுக்காம ஐஸ்கிரீம் தின்னான். அவனைக் கேட்டீங்களா?” என்று அவன் பதில் சொல்வான் அல்லவா! அதுவும் ஒரு வகை ‘வாட்டபவுட்ரீ’தான்.*📌

😜 *இத கேள்வி படும்போது உங்களுக்கு அரசியல்வாதி ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...*🤐

*👨🏻‍⚕Narcolepsy மற்றும் Cataplexy*

⚠ *பிரித்தானிவைச் சேர்ந்த ஒரு பெண் வாய்விட்டுச் சிரித்தாலே உறங்கிவிடும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.*😅

⚠ *பிரித்தானியாவின் Nottingham நகரை சேர்ந்த 20 வயதான ஜெசிக்கா(Jessica Southall) என்ற யுவதி.*📌

⚠ *அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடி தூங்கிவிடுவார்.*📌

⚠ *தூங்கும் சமயத்தில் அவர் மூளை செயல்பாட்டில்தான் இருக்கும், அருகில் இருக்கும் விடயங்களை அவரால் உணர முடியும் ஆனால் எழுந்து செயற்பட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.*😲

⚠ *தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்தும் குறித்த யுவதிக்கு இந்த நோய்த் தாக்கம் குறையவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.*📌

*🤔இது நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷால்க்கு வரமாதியே இருக்கு...*😝

*👨🏻‍⚕ஸ்க்லெரோட்ர்மா*
*(Scleroderma)*

⚠ *37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்.*📌

⚠ *இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜெய் விர்தியின் தோல் மற்றும் மூட்டுகள் கடினமாகிவிட்டன, நோயின் பாதிப்பு நுரையீரல்களுக்கும் பரவிவிட்டது. இவரின் உடல் நிலை மேலும் மோசமாகும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.*

⚠ *இந்த நோயின் பாதிப்பு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது, இது நான் மட்டுமே உணரக்கூடிய விசித்திரமான நோய் என்கிறார் ஜெய் விர்தி.*📌

*👨🏻‍⚕மர மனிதன் நோய்.*
*(Human Papillomavirus)*

⚠ *HPV எனும் தொற்றின் மூலம் பரவக் கூடியது இந்த நோய். முகம், கழுத்து, தோள், கால், கைகள் போன்ற உடல் பாகங்கள் எல்லாம் மரம் போல உருமாற ஆரம்பித்துவிடும்.*📌

⚠ *25 வயதான அபுல் பஜந்தர் என்ற இளைஞனுக்கு விசித்திரமான நோய் தாக்கியுள்ளது.இதன் காரணமாக அவரது கை, கால்கள் மரத்தில் உள்ள பட்டை போல நாளுக்கு நாள் உருமாறி வருகிறது. இந்த நிலைமை காரணமாக அவரால் எழுந்து நடக்கவோ தனக்கு தேவையான காரியங்களை செய்யவோ முடியாமல் தவித்து வருகிறார்.*📌

⚠ *இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.*📌

⚠ *அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் படிப்படியான அறுவை சிகிச்சை மூலமாகவே இவரது நோயை குணப்படுத்த முடியும் என்பதால் குறைந்தது 6 மாத காலத்தின் பின்னரே அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்துள்ளனர்.*😔

*👨🏻‍⚕டிரைமெதிலாமினூரா*

⚠ *அமெரிக்காவை சேர்ந்த எல்லி ஜேம்ஸ் (44) என்ற பெண்மணி உடல்துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருவதால், அவர் மீது மீன் மற்றும் அழுகிய முட்டை நாற்றம் வீசுகின்றது.*🤥

⚠ *இதனை தவிர்க்க இவர் பலவித சோப்புகள், வாசனை திரவியங்களை பயன்படுத்தியபோதிலும், இவரது துர்நாற்றம் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.*🤥

⚠ *இதனால் இவரது நெருங்கிய உறவினர்கள் கூட, இவர் அருகில் செல்வதற்கு தயங்குகின்றனர்.*😔

⚠ *இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய துர்நாற்றம் வீசுகின்றது என்றும் தற்போது விட இன்னும் இந்தப் பெண் தினமும் பலமுறை குளித்து, அடிக்கடி வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.*😔

*👨🏻‍⚕Werewolf Syndrome*
*(வேர்வ்ஃப்ஃப் சிண்ட்ரோம்)*

⚠ *இந்த நோயின் தாக்கத்தினால் உடலெங்கும் அதிகமான முடி வளரும். இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை, General Hypertrichisis மற்றும் Localised Hypertrichisis.*📌

*👨🏻‍⚕மயிர் மிகைப்பு*
*(ஹைபர்ட்ரிசோசிஸ்)*

⚠ *மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, மூன்று ஏழைச் சகோதரிகள். சவிதா வயது 23, மோனிஷா வயது 18, சாவித்திரி வயது 16 ஆகிய மூன்று சகோதரிகளும், புனே அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர்.*👩‍👩‍👧

⚠ *மூன்று பேருக்கும், உச்சியிலிருந்து, உள்ளங்கால் வரை, அடர்த்தியாக ரோமங்கள் வளர்ந்துள்ளன. புருவம், தாடை, கன்னம், மூக்கின் கீழ் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. திடீரென இவர்களின் முகங்களை பார்த்தால், ஓநாய்களை பார்ப்பது போல் இருக்கும்.*😵

⚠ *இவர்கள் வெளியில் சென்றாலே, "ஓநாய் சகோதரிகள் வந்து விட்டனர்' என, வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் கிண்டலடிப்பது வழக்கமாகி விட்டது.*😔

⚠ *இவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள், நான்கு சுவர்களுக்குள் முடங்கி விட்டன.*😔

⚠ *ரோமங்களை நீக்குவதற்கு எத்தனையோ, மருந்துகள், பசைகள் உள்ளன. ஆனாலும், இவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.😔 பலமுறை இவற்றை பயன்படுத்தியும், ரோமங்கள் வளர்வதை தடுக்க முடியவில்லை. இவர்களின் திருமணமும் கேள்விக் குறியாகி விட்டது.*😔

🔴😞 *இவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்கும் மனிதர்கள் உங்கள் அருகில் இருந்தாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ... நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என்பதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்...*👇

*🙏ஒருவர் நோய்வாய்ப்பட்டவர் என்று தெரிந்தால் அவரிடம் இருந்து விலகி செல்ல நினைக்காதீர்கள்*🙅🏻‍♂

*🙏அவர்களும் உங்களை போல் ஒரு மனிதரே... உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் கவனிக்காமல் விலகிச் செல்வீர்களா...?*❓😔

*🙏அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை... தயவுசெய்து அவர்களை காட்சி பொருளாய் பார்க்க வேண்டாம்... அது அவருக்கு இருக்கும் பிரச்சினையைவிட அதிக வலியைத் தரும்...*😔

*🙏 அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி கேலிக்கையாக புறம்பேச வேண்டாம்.*🙅🏻‍♂😠

*🙏சக மனிதர்களை போல், நாங்களும் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதே, அவர்களின் ஆசை. இந்த சாதாரண ஆசை கூட, நிராசை ஆகி விடும் போல் இருக்கிறது...*😔

🦋 _*பறக்கும் பட்டாம்பூச்சியை பிடித்து*_
_*சிறகை உடைக்கும் குழந்தை போல்*_
_*மனிதர் வாழ்க்கையை எடுத்து*_
_*களி நடம் புரியும் தெய்வம்*_

🙏👆 *மேல் கூரிய வரிகளில் வாழ்கின்ற மனிதர்களிடம் நாம் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம்... இந்த முடிவுரையை கருணை வடிவம் அன்னை தெரசா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... நன்றி.*🙏🙏😇💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑

💐 *SpVignesh*💐

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

🥇 *🦀கல்கி🦀⁩*

🥈 *singarammohanraj⁩*

🥉 *AK⁩*

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

💖  *சாதாரன மனிதர்கள் மின்சாரம் பாய்ந்ததும் ஒளிரும் மின்விளக்குப் போன்றவர்கள். கடும் உழைப்பு என்ற மின்சாரம் பாயும்வரை அவர்கள் ஒளிர்வது உறுதி.*👍

💝 *ஆனால் குறையோடு பிறந்தும் சில துறைகளில் சாதிப்பவர்கள் திரிவிளக்கு போன்றவர்கள்🌟 தொடர்ந்து எண்ணெய் வார்த்து திரியை மாற்றினாலும் பலத்த காற்று வீசினால் அவர்கள் அணைந்து போகும் அபாயம் உண்டு.*😔

😇 *அப்படிபார்த்தால் மின்விளக்கு தரும் ஒளியைவிட திரிவிளக்கு தரும் ஒளி அதிக மகிமை வாய்ந்தது அழகு வாய்ந்தது.*💐

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்*
*என்பும் உரியர் பிறர்க்கு*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். ஆனால் தூய்மையான அன்புடையவரோ தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

🔹 *அறிந்துகொள்ளவும்*🔹

*வைத்தியன் பாராத நோய் தீருமா?*

🔹 *புரிந்துகொள்ளவும்*🔹

*எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?*

🔹 *தெரிந்துகொள்ளவும்*🔹

*”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...