Monday, 4 December 2017

அணைகளின் பாதுகாப்பு முறைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா... புதிதாக கட்டப்படும் பாலங்கள் இடிந்து விழ காரணங்கள் என்ன...


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 04.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : திங்கள்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல*_
_*செயல்கள் எதையும் செய்ய முடியாது.*_

                     _*-ஜேம்ஸ் ஆலன்.*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியின்றி உழைப்பவர்க்கு ஒரு போதும் உயர்வு வராது..,*_
_*தெளிவான சிந்தைக்கு பிறகு தொடங்கும் வேலை உயர்வுக்கு முதல் படி....*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*அணைகளின் பாதுகாப்பு முறைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா... புதிதாக கட்டப்படும் பாலங்கள் இடிந்து விழ காரணங்கள் என்ன...*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🏜வறட்சி, பெருவெள்ளம்🏝 என நீர் சார்ந்த பேரிடர்கள் நம்மைத் 😭தீண்டி செல்லும் போதெல்லாம் நம் கவனம் குவியும்🤔 இடம் அணைக்கட்டுகள்.🗾*_

_*💧நீர்நிலைகள் அல்லது அணையை சரியாகப்😥 பராமரிக்காமல் போவதால் மக்கள் எதிர்கொள்ளும்😳 பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.😢😭*_

_*🧐ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த👍🏻🤝🏻 அணைகளின் தற்போதைய நிலை😨 வருத்தமளிப்பதாக உள்ளது.😓*_

_*🤔காரணம், இந்தியாவில்🇮🇳 உள்ள பெரும்பாலான🙆🏻‍♂ அணைகள் மோசமான😨 நிலையிலேயே இருக்கின்றன.👎🏻*_

_*🇮🇳இந்தியாவின் தற்போதைய அச்சுறுத்தல்களில்🌬 முக்கியமான ஒன்று ☝🏻பழைய அணைகளின் பராமரிப்பு 🤝🏻மற்றும் பாதுகாப்பு.💪🏻*_

_*🤔அணைகளின் பயன்பாடுகள்...*_🤔

_*✅வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.*_

_*✅நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.*_

_*✅விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களுக்கு பயன்படுகிறது.*_

_*✅குடி நீர் தேவைக்கான நீர் ஆதாரமாக விளங்குகிறது.*_

_*அணைகளின் பாதுகாப்பும், எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தும்!*_

_*🤔அமெரிக்க தொழில்நுட்பத்தின் 🔬படி அணையின் சராசரி🙄 வாழ்வு 50 வருடங்கள் என கணக்கிடப் பட்டுள்ளது.🤝🏻*_

_*ஆனால் இதனை 🗜எல்லா அணைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது என்பது வேறு⚙ விஷயம். 🤷🏻‍♂காரணம் அணையின் தன்மை,💪🏻 கட்டுமான தரம், அணை அமைந்துள்ள நிலப்பகுதி என ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் இவை மாறுபடும். 🤔அதே சமயம் நாம் இந்தப் புள்ளிவிவரத்தில் 📊இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவெனில்,🤔 பழைய அணைகளை,🆕 அப்படியே விட்டுவிடாமல் வலுவுடன் பாதுகாத்து💪🏻 வரவேண்டும் என்பதே!🤝🏻 தற்போது இந்தியாவில் 🇮🇳100-க்கும் மேற்பட்ட அணைகள் 100 வயதைக் கடந்துள்ளன; 😳500- க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் 50-100 வயதில் உள்ளன.*_😱👍🏻

_*🇮🇳இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அணைக்கட்டுகளின்🗾 பாதிப்பு நிலை பற்றிய ஆய்வு அரசாங்கத்தால்🔬 அறிவியல் பூர்வமாக இன்னும்💯 செய்யப்படவில்லை 🤷🏻‍♂என ஹிராகுட் அணை திட்ட முதன்மை👷🏻‍♂ பொறியாளர் கருண்குமார் சுபாகர் தெரிவித்துள்ளார்.🗣*_

_*இதுபோன்ற மிகப்பெரிய😱 அணைக்கட்டில் 🗾பாதிப்பு ஏற்பட்டால் விளையும் பாதிப்பு😳 எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.😱😨 எனவே இந்தியாவில் இருக்கும் எல்லா அணைகளையும் 👍🏻🤝🏻 பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் இணைந்து ✊🏻செயல்பட வேண்டும். அத்துடன் அணைக்கட்டு 🗾கட்டியதால் வெளியேறிய மக்களுக்கு இழப்பீடு💰 வழங்குவதிலும் அரசுகள் கவனம் 👀செலுத்த வேண்டும்.*_✅

*🛣தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்துவதால் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களில்  விரிசல்😪 ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.🙆🏻‍♂*

*🏛தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள், 🛣சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பெருகி வரும் 🚙போக்குவரத்திற்கேற்ப நகர் பகுதிகளிலும், நகரையொட்டியுள்ள வெளிப்புற பகுதிகளில் புதிய பாலங்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.😏*

*👉இதற்காக, மத்திய, மாநில 🛣நெடுஞ்சாலைத்துறையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து பாலம் கட்ட பரிந்துரை செய்கின்றனர்.🤝*

*👉🤔அதன்பிறகு பாலம் கட்டுவதற்கு 💴நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.* 

*🤔இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் 💴💴நிதியை கொண்டு மேற்கொள்ளப்படும் 🛣பால பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கான்ட்ராக்டர்களுக்கு 🛣நெடுஞ்சாலைத்துறை கெடு விதிக்கிறது🤔.*

*🤔ஆனால், கூடுதல் 💴நிதியை பெற வேண்டும் என்பதற்காக 🛣பாலத்திற்கான கட்டுமான பணிகளை வேண்டுமென்றே கான்ட்ராக்டர்கள் காலம் தாழ்த்துகின்றனர்.🙆🏻‍♂*

*👉💴கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் 🛣பாலம் தொடர்பான பணிகளை  செய்கின்றனர். அதுவும், அரைகுறையாக பாலப்பணிகளை முடித்து விட்டு செல்கின்றனர்.🤦🏻‍♂*

*🤔🛣அந்த பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து அதன் பிறகு தரச்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே பில் 👨🏻தொகையை ஒப்பந்ததாரர்களிடம் 💴செட்டில் செய்ய வேண்டும்😏.*

*😏ஆனால், 🛣நெடுஞ்சாலைத்துறை தர கட்டுபாட்டு அதிகாரிகள் பெரும்பாலும் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை.🙅🏻‍♂* 

*🙆🏻‍♂ஒரு சில அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றாலும் 💴கமிஷன் கைமாறியதால் உயர் அதிகாரிகள் தரச்சான்றிதழ் கொடுத்து விடுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்🙆🏻‍♂🤦🏻‍♂.*

*👉இதனால், வேறு வழியின்றி தரக்கட்டுபாட்டு அதிகாரிகளும் சான்றிதழ் தருகின்றனர்👨🏻🙆🏻‍♂*.
*👨🏻‍💻உயர் அதிகாரிகள் கமிஷன் வாங்கியதால் கான்ட்ராக்டர்களும் தங்களது இஷ்டத்திற்கு கட்டுமான பணிகளை செய்கின்றனர்.🤦🏻‍♂*

*🛣பாலத்தில் விரிசல் ஏற்பட்டாலோ, சேதமடைந்தாலோ கான்டிராக்டர்கள் 😏அலட்டி கொள்வதில்லை.*

*👉🛣சில பாலங்கள் தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பாலத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது😳.*

*🤔அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால்... சம்பந்தப்பட்ட உதவி 👨🏻‍💻பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்😏*.

*🤔ஆனால், அதன்பிறகு இந்த பிரச்சனையை அப்படியே 👨🏻‍💻அதிகாரிகள் மூடி மறைத்து விடுவார்கள்.🤗*

*🛣பாலங்கள் கட்டும் பணிகளில் நிதி பற்றாக்குறை எனக்காரணம் கூறி சில ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது😳.*

*😳பல ஆண்டுகளாக நடந்த வந்த இப்பணிக்காக கூடுதலாக சில 💴கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே 🛣கட்டுமான பணியை ஒப்பந்த நிறுவனம் செய்து முடித்தது🤔.*

*🛣பாலம் திறக்கப்படுவதற்கு முன் விரிசல் ஏற்படுவது.. என்ற நிலை கூட சில பாலங்களில் நிகழும்.🤦🏻‍♂*

*👉இதனால், பாலத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது😱😳...*

*👉சில தவறுகள் வெளியே தெரிவதற்கு முன்பு 👨🏻கான்டிராக்டர்கள் இரவோடு, இரவாக 🛣பாலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் நிகழ்வுகளும் இங்கு நடக்கிறது😏...*
*🤔பொதுவாக, ஒரு 🛣பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளில் கட்டுமானத்தில் குறைபாடு இருந்தால் கான்டிராக்டர்களே 💴செலவு செய்து சரி செய்து தர வேண்டும்🤕*.

*🙆🏻‍♂இல்லையெனில் 🛣நெடுஞ்சாலைத்துைற ஆய்வு செய்து, பாலத்தின் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்🤝*.

*👉இதற்கான 💴💴பணத்தை கான்டிராக்டர்களிடம் இருந்து பெற வேண்டும்.🤗*

*👉இ்ல்லையெனில் கான்டிராக்டர்களை 😳🙆🏻‍♂பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும்,*

*👨🏻அவர்கள் மீது 👨🏻‍✈போலீசில் புகார் கொடுத்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்👍.*

*👉இதையெல்லாம் செய்ய 🛣நெடுஞ்சாலைத்துறை தவறி வருவதால் சமூக ஆர்வலர்கள் 👨🏻‍⚖நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாலப்பணிகளில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது😌.*

*👉இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:🗣*

*🛣பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ளும் 👨🏻ஒப்பந்த நிறுவனங்களில் தொழில்நுட்ப தகுதியோடு உள்ள 👨🏻‍💻பொறியாளர்கள் இருக்க வேண்டும்👍.*

*🤔ஒரு காலத்தில் 👨🏻‍💻பொறியாளர் பாலம் அமைபதற்காக திட்ட வடிவமைப்பு போட்டால், கான்ட்ராக்டர்கள் தரப்பிலும் திட்ட வடிவமைப்பு போட்டு தருவது வழக்கம்.🤷🏻‍♂*

*👉இந்த பால திட்ட வடிவமைப்பு குறைந்த 💴செலவை கொண்டு இருக்கும் பட்சத்தில் 👨🏻கான்ட்ராக்டர்கள் கொடுக்கும் வடிவமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும்✉*.

*🤗ஆனால், இப்போது அது போன்று கான்ட்ராக்டர்கள் செய்வதில்லை.🙅🏻‍♂*

*🤔காரணம், அவ்வளவு திறமை வாய்ந்த தொழில்நுட்ப 👨🏻‍💻பொறியாளர்கள் கான்ட்ராக்டர்களிடம் இல்லை🙅🏻‍♂*. 

*🛣நெடுஞ்சாலைதுறையால் ஒரு பாலம் கட்டப்படுமானால் 100 ஆண்டுகள் நிற்க வேண்டிய மேம்பாலங்கள்  15 ஆண்டுகளில் பலவீனமாகி விடுகிறது🙆🏻‍♂🤦🏻‍♂.*

*🤔இதை கண்காணிக்க வேண்டிய 👨🏻‍💻அதிகாரிகளும் 💴கமிஷன் கைமாறியதால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.🤦🏻‍♂*

*🤔ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்களில் பாலத்தில் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை 👨🏻கான்ட்ராக்டர்கள் 💴செலவில் செய்து முடிக்க வேண்டும்🤷🏻‍♂*.

*✉ஒப்பந்த விதிகளை கான்ட்ராக்டர்கள் மீறி இருந்தால், அந்த 👨🏻கான்ட்ராக்டர்களை பிளாக் லிஸ்டு செய்ய வேண்டும்.🤕*

*🤗அவ்வாறு செய்தால் மட்டுமே தரமான 🛣பாலம் கட்டி முடிக்கப்படும்.🤝*

*🛣நெடுஞ்சாலைத்துறை மூலம் 2016-17ம் நிதியாண்டில் 177 பாலங்கள் கட்டப்பட்டன🤗. 🛣நெடுஞ்சாலைத்துறையில் முதல் வகுப்பு கான்டிராக்டர்களாக பதிவு செய்திருந்தாலே அவர்கள் பால பணிகளை டெண்டர் எடுக்க தகுதியுடையவர்.🤝👍*

*🛣நெடுஞ்சாலைத்துறையில் ப்ரஸ் ஸ்ரெட்ஸ் ஸ்லாப், பி.டி ஸ்லாப் 👨🏻‍💻தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக பாலம் அமைக்கப்படுகிறது🛣👍*.

*🚟🚆ரயில்வே மேம்பாலம் ரயில்வே துறை உடன் இணைந்து மாநில அரசு 50-50 சதவீதம் 💴நிதி பகிர்வு செய்து கட்டப்படுகிறது👍*.

*🤔100 ஆண்டு தாக்கு பிடிக்க வேண்டிய பாலங்கள் 15 ஆண்டில் பலவீனமாகிறது🤷🏻‍♂🤦🏻‍♂*:

*🛣🛣பாலம் என்பது நிரந்தர சொத்து. இந்த பாலங்கள் 100 ஆண்டு வரை நிலைத்து நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கட்டப்படுகிறது😳🤷🏻‍♂*.

*👉ஆனால், கான்டிராக்டர்களின் தகுதியின்மை காரணமாக 15 ஆண்டுகளில் 🚟மேம்பாலம் பலவீனமடைந்து விடுகிறது.🤦🏻‍♂*

*🛣பாலம் கட்டி 20 ஆண்டுகளில் அந்த பாலம் 🚙🛵வாகன ஓட்டிகளால் பயன்படுத்த முடியாத நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.🤦🏻‍♂🙆🏻‍♂*

                 _*🙏நன்றி*_🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🏅 சிவராஜ்⁩*_
_*🏅 Ganesh Narayanan⁩*_
_*🏅⁨ மயிலை முருகன் 🦅.⁩*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🏅 singarammohanraj*_
_*🏅 இராமச்சந்திரா*_
_*🏅 நேர்த்தி*_
_*🏅 Siva Sbm SP🍎🍎🍎*_

_*🆕 கலந்துரையாடல் 2 குழுவில் இணைந்த புதிய நண்பர்களின் பதிவுகள் அருமை...👌🏻🤝🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் உறுதி தன்மை இப்பவும் நம்மை பிரமிக்க வைக்கிறது.. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் கட்டப்படும் ஒரு பாலம் உறுதி தன்மை கொண்டதா என்பது... நம்மை யோசிக்க வைக்கிறது... இவை அனைத்திற்கும் காரணம் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே... எல்லா பிரச்சனைகளின் முடிவிலும் நாம் அரசை தான் குற்றம் சொல்கிறோம்... அப்படி பட்ட அரசை கொண்டு வந்தது நாம் என்பதை மறந்துவிட வேண்டாம்... இனியாவது சிந்திப்போம் செயல்படுவோம்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை*_
_*அதிர வருவதோர் நோய்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*ஆனையை முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது  பாம்பின் கால் பாம்பு அறியும்*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐

👨🏻‍💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்களை ஈர்ப்பதற்க்கு தேவைபடுகிறதா கட்அவுட் கலாச்சாரம்


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *விழிப்புணர்ச்சி க்காக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
           🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :03.12.2017* 🌹
       🌷 *கிழமை : ஞாயிறு* 🌷   
____________________________________

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

          _*💞அறிவோம்:*_💕

_*சிலர் மக்களை ஏமாளிகள் என்று ஏமாற்றுகின்றனர் வெற்று விளம்பரத்தால்....*_
_*விளம்பரம் இல்லா அரசியல் வீட்டு படியைகூட தாண்டுவதில்லை.......*_

_*✍நாளைய தலைவன்✍*_

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

   _*♥நிர்வாகிகள் எண்ணம்:*_♥

_*எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல், லஞ்சத்தில் ஊறித் திளைத்து வளர்ந்துவிட்டு, மண்ணுக்குள் கட்டவுட் வளைவுகளை, மக்களையும் புதைத்துவிட்டு, தங்களை சிறந்த கச்சிகளாகவும், தலைவர்களாக விளம்பர படுத்தி என்ன பயன்.....*_

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*மக்களை ஈர்ப்பதற்க்கு தேவைபடுகிறதா கட்அவுட் கலாச்சாரம்......!!!*_

===========================

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*😃மக்களின் வாழ்க்கை,♻ பழக்க வழக்கங்கள்,♻ அவர்களின் வாழ்வில்🧐 கலந்த சினிமா 🎥வெறி அனைத்தையும் நம் கண்முன் 👀பிரதிபலிக்கும் கட்டவுட்🔲 கலாச்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு 😓பற்றி இன்றைய விவாதத்தில்🗣🤝🏻 பார்த்தோம்... எங்கள் பங்குக்கு சில...😎 உங்கள் கருத்துக்களுடன்...*_🤝🏻👍🏻

_*🛣சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு🚗🚕 இடையூறாக 🚫கட்டப்பட்ட பிளக்ஸ் பேனர்களால்🔲 விபத்துகள் ஏற்படுவதும்,😓 சில சமயம் சமூக மோதல்களுக்கு⚔ வழிவகுத்ததாலும் 🎭பிளக்ஸ் போர்டுகள்🔲 வைப்பதற்கென்று 🕺🏻சில வழிமுறைகளை 🧐தமிழக அரசு 🇮🇳கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்தது.♻✅*_

_*🤝🏻அதன்படி ஒரு நிகழ்ச்சி🎙🎉 நடப்பதற்கு 2 நாட்களுக்கு 👨🏻‍🎨முன்பு பிளக்ஸ் போர்டுகள்🔲🕺🏻💃🏻 வைக்கவேண்டும். 🔵அந்த நிகழ்ச்சி முடிந்ததும் 🔚2 நாட்களுக்குள் 🔲போர்டுகளை அகற்ற வேண்டும். 🚫போர்டுகளை🔲 வைக்க அந்தந்த உள்ளாட்சி 🎏அமைப்புகளிடம் அனுமதி👨🏻‍✈👩🏻‍✈ பெற வேண்டும். ✅போர்டு அளவுக்கு ⚖ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள்🎏 இதற்காக கட்டணம்💰 வசூலிக்க வேண்டும்.✅ கட்டணம் செலுத்தி,👥 உள்ளாட்சி அமைப்பின் அனுமதி 🤝🏻பெற்று அதை கொண்டுபோய் 👣உள்ளூர் போலீஸ் நிலையத்தில்🚔 காட்டி அனுமதி ✅வாங்கிய பிறகே பிளக்ஸ்🔲 போர்டுகளை 🕺🏻💃🏻வைக்க வேண்டும் 🤝🏻என்று அந்த விதிமுறைகளில்🤔 கூறப்பட்டன.🗣*_

_*🧐இந்த விதிமுறைகள் காற்றோடு🌬 கரைந்துவிட்டதால்,❄ பொதுநல வழக்கு ஒன்றில்,⚖ ‘‘உயிரோடு இருப்பவர்களின் 👨🏻👱🏻‍♀படம் பிளக்ஸ் போர்டுகளில்🔲 இடம்பெறக் 🕺🏻💃🏻கூடாது’’🚫 என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.👨🏻‍⚖*_

_*ஆனாலும், 😳கோவையில் நடக்கும் 🎊எம்ஜிஆர்✌🏻 நூற்றாண்டு 💯விழாவுக்காக 🎊🎉அவினாசி ரோட்டில்🛣 வைக்கப்பட்ட அலங்கார வளைவு, ⛲31 வயது இளைஞரின் 👨🏻உயிரை குடித்தது. 😓அமெரிக்காவில் ✈🛫இருந்து 👨🏻திருமணத்துக்கு பெண் 👱🏻‍♀பார்ப்பதற்காக வந்தவர், 👀அலங்கார 🎊🎉வளைவில் 😨மோதி கீழே 🙆🏻‍♂விழுந்தபோது அந்த வழியாக 🛣எதிர் திசையில்⏪ வந்த லாரி 🚚இளைஞர் மீது ஏறியதில் 😱அவர் சம்பவ இடத்திலேயே 😓உயிர் பிரிந்தது.⚰😞*_

_*😲இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியதுடன் இந்த சம்பவத்தை 🚫கண்டிக்கும் வகையில் சாலையில்🛣 விபத்து 🚑நடந்து இடத்தில் எழுதப்பட்ட ✍🏻வாசகத்தால் மக்களிடையே 👬👭மிகப்பெரிய விழிப்புணர்வை👀 ஏற்ப்படுத்தியிருக்கிறது.💥👍🏻*_

_*🤔முன்னெல்லாம் கட்அவுட்டுக்கு 🔲பால் ஊத்தினாங்க.....🥛*_
_*இப்போ 🙄கட்அவுட் நமக்கு பால் ஊத்துங்க.....⚰😭*_

_*🐯தமிழகத்தில் சமீப காலமாய் 🍃எழுதப்படாத✍🏻🚫 ஒரு வரலாறு எழுச்சிப்பெற்று🙋🏻‍♀🙋🏻‍♂🤝🏻 வருகிறது. 👍🏻அது எந்த நிகழ்வானாலும்☹ உடனடியாக சுவரொட்டி தயாரித்து 📇ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான்.*_✅

_*🛃தேர்தல் நேரங்களில்🕐 அரசியல் கட்சிகள் தங்களை 🕺🏻💃🏻விளம்பரம் செய்து கொள்ள மாபெரும் கட்டவுட்கள்🔲 வைத்து தங்கள் வெட்டி விளம்பரங்கள் 😠மூலம் மக்களுக்கு அதிக தொந்தரவு😭 செய்வார்கள்... 🤦🏻‍♂ பத்திரிகை 🗞நிருபர்🎙 யாரேனும் கேள்வி கேட்டால்... 🤔மக்களின் விருப்பம் கேட்டறிந்த👂🏻 பிறகு தான் நாங்கள் அவர்களிடத்தில் கட்டவுட்🔲 பேனர்கள் வைத்தோம் என்று வாய் 😠கூசாமல் பொய்கூறுவார்கள்...*_🗣

_*🤔அந்த நேரத்தில் புதிதாக யாரேனும்👀 வெளியூரில் இருந்து வந்து ஒரு முகவரியை🙇🏻‍♂ கண்டறிய... 👁பெரும்பாடு படுவார்கள்...🤦🏻‍♂ குழப்பம் அடைந்து அவர்கள் நண்பரின்😟 உதவி நாடினால் 👥🗣அவர் தெரு பெயரை கூறி வழி சொல்லாமல்🛣 அரசியல் பேனர்களின்🔲 பெயர்களை ♻கூறி வீட்டுக்கு வழி🛣 கூறுவார்கள்... 🗣அதான் கொடுமையிலும் கொடுமை...*_🤦🏻‍♂

_*🤔ஒருகாலத்தில் சினிமாத்துறையை📺 மட்டுமே ஆக்கிரமித்திருந்த🔛 இந்த சுவரொட்டிகள்🔲 ஒட்டும் பழக்கம்... 😇பின்பு அரசியலை 🎏ஆக்கிரமித்து இன்று சாமானியன் 👨🏻வீட்டு 🏠விஷேசம் 🎊🎉வரை பரவிக்கிடக்கிறது...😂*_

_*🌹பிறந்தநாள்,🎂 திருமணம், 👰🏻🤵🏻காதுகுத்து,👂🏻📍தொடங்கி🔛 இரங்கல்⚰ செய்திவரையும்...😭 அரசியல் தலைவர்களின்🤴🏻 அசைவுகளில் தொடங்கி,🚶🏻‍♂ அரசியலில் பதவி🗣 வழங்கியற்கு நன்றி..🙏 தலைவர் பிறந்தநாள்..🎂 தலைவர் வருகை, 🛣🎊மற்றும் கட்சி 🎏புகழ்... என தினம் தினம் ♻புதுசுபுதுசா யோசிச்சு🤔 போஸ்டர்📇 அடித்து ஒட்டியாக வேண்டும்🤩 என்ற பழக்கம் அனைத்து மக்களையும் 👥பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.😏*_

_*🛣சாலையை மறித்து 🔚ஒரு இடத்தில் மட்டும்🤨 பிரம்மாண்ட கட்அவுட்கள்🔲 வைக்கப்படுவதில்லை 🤷🏻‍♂விழா நடைபெறும்🛣 திடலுக்குச் 🚶🏻‍♂🏃‍♂செல்லும் சாலையில் ஆங்காங்கே😩 பிரம்மாண்ட கட்அவுட்🔲 வைக்கப்படுகின்றன.😳😱*_

_*🤔சில இடங்களில் போஸ்டர் 📇ஒட்டுவதற்க்கு முன்பதிவும் ✍🏻கூட செய்துவிட்டுபோகிறார்கள்..🤦🏻‍♂ சிலசமயம் இது கைகலப்பாக 🤼‍♂மாறி வெட்டுக்குத்துவரை⚔ சென்றிருக்கிறது.😓*_

_*🤔இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் 🗜விளம்ரங்கள், 🕺🏻💃🏻ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், 😧 🤦🏻‍♂கல்வி நிறுவன 🏣மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், 📇கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் 😲🤦🏻‍♂என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை👀 முகம்சுழிக்க வைக்கிறது.😰*_

_*🧐இது போதாதென்று டிஜிட்டல் பேனர்கள்📇 பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக☹ விஸ்வரூபம்🎭 எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... 😨ஒருவர் இறந்துவிட்டால் ⚰😓அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் 📇தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில்🕐 வைத்துவிடுகிறார்கள்...😦 இதுவே ஒரு அரசியல் மாநாடு.. 🤨அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள்,🎂 வருகை, 🕺🏻அறிவிப்பு,🗣 பிறவிழா இப்படி எதாவது🤭 ஒன்று இருந்தால் பேனர்களின் 😲எண்ணிக்கை வழக்ககத்தைவிட 🤥எல்லை மீறி சென்று விடுகிறது. 😱இவைகள் சாலைகளை 🛣மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை 🗑காடாக மாற்றி கொண்டிருக்கிறது.😖*_

_*🤩சென்னை போன்ற பெருநகரங்களில்⛩ வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால்🔲 வாகன ஓட்டிகள் 🚎🚌சாலையில் 🛣போதிய கவனம்👀 செலுத்தமுடியவில்லை.😓 பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும்,🕺🏻💃🏻 அரசியல் 🤴🏻போஸ்டர்களையும் 🔲பார்த்து 👀கொண்டே முன்னே செல்லும்➡ வாகனங்களில் இடித்து💔 விபத்துக்குள்ளாகிறார்கள்.🚌💥😓 இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...?🤔 இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...?🤔😞*_

_*🤨கட் அவுட் போஸ்டர்🔲 இல்லாத புதிய 🆕அரசியல் கலாசாரத்தை♻ உருவாக்குவதாக ⬜மேடை போட்டு கத்தியவர்களின்🗣 போஸ்டர்களும்📇 கட்டவுட்களுமே 🔲அதிகம் இடம் பெறுகின்றன.😢👍🏻*_

_*😨ஆட்சியில் இருப்பவர்களே ❕❗இந்த போஸ்டர் 🔲வழக்கத்தை கடுமையாக பின்பற்றி🚫 ஊரையே அசிங்கபடுத்தி☹ கொண்டிருக்கிறார்கள்.😭 அவர்களுக்கு இணையாக🤝🏻 அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்...🤦🏻‍♂ நாம் ஆளும் மாநிலம் அழகாக 💓சுத்தமாக😃 வைத்திருக்க வேண்டும்👍🏻 என்ற எண்ணம்🤔 ஆள்பவர்களுக்கும்..😩 அதைச்சார்ந்த நகர,🏭 மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். 🤝🏻👍🏻ஆனால் அவர்களே 😳இதை எல்லாம் கண்டுகொள்ளாமல்👀 அவர்களும் போஸ்டர் 📇ஒட்டி கொண்டு விளம்பரம்🕺🏻💃🏻 தேடி கொண்டிருந்தால் யார் 🤔தான் இதை கட்டுபடுத்துவது?😓*_

_*⚖உயர்நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில்👨🏻‍⚖ உயிருடன் இருப்பவர்களின்👨🏻👱🏻‍♀ புகைப்படங்களை📸 கட்டவுட்டுகளில் 🔲பயன்படுத்த தடை🚫 விதித்துள்ளது. 👨🏻‍⚖அதனால் இனி அரசியல் கூட்டம் ,⛩ திருமணம் 👰🏻🤵🏻போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமின்றி🎊🎉 படம் வெளியிடும் போதும்  கட்டவுட்பயன்படுத்த📇 முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.♻*_

_*🛣சாலையை சேதப்படுத்த 🕳யார் அதிகாரம் கொடுத்தது.?🤔*_

_*👨🏻‍⚖சட்டத்தை அரசியல்வாதிகள் மதிக்காதப்போது, 😢சாதரண மக்கள் 👥எப்படி மதிப்பார்கள்,🤦🏻‍♂கட்டுப்பாடுடன் நடக்க🤝🏻 வேண்டிய அரசுகள் 🇮🇳கட்வுட்டை வைத்து ஆட்சி செய்கிறார்கள்.👎🏻🙏*_

_*😨"ஓவர் விளம்பரம் ஒடம்புக்கு ஆகாது" 😰இது தான் இப்போது தமிழ்நாட்டு🐯 அரசியல்ல 🎏நடந்து கொண்டிருக்கிறது.😧*_

_*😌இன்னைக்கு அரசியல்வாதிங்க கொஞ்சம் ஆட்டமா 🕺🏻💃🏻ஆடுனாய்ங்க..🤦🏻‍♂*_
_*அதுவும் பொதுக்கூட்டம் னு😕 ஒன்னு ஆரம்பிச்சிட்டா🔛 போதும், அந்த கட்சி தலைவர் வர வழியெல்லாம்🛣 பேனரும், 🔲ஃபிளக்ஸ் ம் ஒரே அராஜகம் தான்..🔱*_
_*பொதுமக்கள் பாதிப்பு😓 குறித்தெல்லாம் 😩கவலைபட மாட்டாங்க..🤫 ஏன்னா... 🤔தங்கள் தலைமைக்கு தங்கள் இருப்பை  தெரியப்படுத்தவும்..🙁 தலைமையின் கடைக்கண் 👁பார்வை👀 தங்கள் மீது படுவதற்காகவும் 😠மட்டுமே செய்யும் இவர்களிடம் அதை எதிர்பார்க்கவும்😳 முடியாது.*_🤦🏻‍♂

                          _*🙏நன்றி*_🙏

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

_*🏅சிவராஜ்⁩*_
_*🏅Su⁩*_
_*🏅மன்னை மணிவர்மன்⁩*_
_*🏅SP.Vignesh*_

_*🆕கலந்துரையாடல் 2 குழுவில் புதிதாக இணைந்தவர்களின் கருத்து அருமை 👌🏻👍🏻*_

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤ 
      
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀

_*🇮🇳இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்🤷🏻‍♂ இல்லாத அளவுக்கு கட்-அவுட் கலாச்சாரம்♻ தலைவிரித்தாடுவது👀 தமிழகத்தில் மட்டும்தான்.🤦🏻‍♂ உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், 🔲பதாகை வைக்கக்கூடாது என்ற தடையை 🚫விரிவாக்கி யாருக்கும் 😟கட்-அவுட், பதாகை அமைக்கக்கூடாது 🤐என ஆணை👨🏻‍⚖ பிறப்பிக்கப்பட்டால் அது முழுமையானதாக இருக்கும். 🤝🏻அரசியல் கட்சிகள் 🎏மட்டும் தான் கட்-அவுட் கலாச்சாரத்தை♻ மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் 🤷🏻‍♂கூற முடியாது. 😢இவர்கள் மக்களை ஈர்ப்பதற்காக🔛 இதை செய்யவில்லை..🤦🏻‍♂ பதவிக்காகவும்,🛋 குறைந்தபட்சம் உள்ளூர்களில் 🤴🏻தங்களின் செல்வாக்கையும், 🕺🏻சிறு அதிகார மையம் தாங்கள் தான் 😥காட்டுவதற்கு மட்டுமே... 👊🏻திரையுலகில் 🎥கட்அவுட், பேனர் என்பது வியாபார📺 யுக்தியாக மட்டுமே இருந்து வந்தது..🤫 மக்களின் எதிர்பார்ப்பை😳 எகிற வைத்து கல்லாகட்டுவதற்கு💰 மட்டுமே செய்யப்பட்ட இந்த முறை...😲 பிற்காலத்தில் நடிகர்கள் அரசியலில் 😯 இறங்கும்போதும் தங்கள் கல்லாபெட்டி🚮 நிறையவேண்டும் என்பதற்காக, அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்து, 😢இப்போது அது அரசியலின் 🤜🏻மோசமான கலாச்சாரமாக மாறிவிட்டது..*_🤛🏻
                            ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 திருக்குறள்: 📜  * 

_*கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்*_
_*கோடாமை சான்றோர்க் கணி.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

     *_📜 விளக்கம்: 📜_*

_*கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
                                 
*_📝 பழமொழி : 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்💕*_

_*பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் தலைவன் மக்களே காரணமென்பான்.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*வேலைக்காக வெளுக்க போனவன் வெள்ளாவி மொடாவுக்கு தீயெரிக்கவும் வேணும்.*_

_*💞புரிந்து கொள்ளவும்💕*_

_*முளைத்த பயிறு... வெளைஞ்ச கதிரை வெளிவிட்டுதான் ஆக வேண்டும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💎💎💎💎💎💎💎💎💎💎

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  _*முடிவுரை  ✍தொகுப்பாளர்கள்:*_

_*✍ ராமலிங்கம் அங்கப்பன்*_
_*📱 0060122646502*_

  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*               
             *9486552988*🌳       
                                                                

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

_*© copyrights விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...