Friday, 12 January 2018

சாதிக்கும் ... “லட்சிய கனவுகளுடன்” பயணிப்பது பெற்றோர்களா? பிள்ளைகளா? அதில் தடையை ஏற்படுத்துவது வீண் “கனவு”எண்ணங்களா.?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 29.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*நம்முடைய லச்சியத்துக்கும், கனவுகளுக்கும் இடையில் வாழும் வாழ்க்கையே நரக வாழ்க்கை...!!!*

*-அரிஸ்டாட்டில்*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*எப்பொழுது உங்களை உலகம் அல்லது ஒருவன் கீழ் நோக்கி இழுக்க நினைக்க ஆரம்பிக்கிறதோ, புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அவர்களை விட உயரத்தில் இருக்குறீர்கள்.*

*எண்ணங்களை தூய்மைப்படுத்துங்கள், உலகம் உங்கள் எண்ணங்களை வணங்கும்*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*சாதிக்கும் ... “லட்சிய கனவுகளுடன்” பயணிப்பது பெற்றோர்களா? பிள்ளைகளா? அதில் தடையை ஏற்படுத்துவது வீண் “கனவு”எண்ணங்களா.?*

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

💁🏻‍♂ _*தற்போதைய சூழலில் ரொம்ப பரவலா நாம பார்க்கிற கேட்கிற விஷயத்தைப் பத்தி தான் இன்னைக்கு பாக்கபோறோம்...*_🤗

🙇🏻‍♂😴 _*நான் டாக்டர் படிக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்...😞 ஆனா என்னால படிக்க முடியாம போச்சு...😔 எப்பாடு பட்டாவது என்னோட பையன டாக்டர் ஆக்கிடனும்ப்பா...*_👍

💁🏻‍♂ _*இப்படி ஒரு பக்கம் நம்மளோட 👨‍👩‍👧‍👦அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும் பால்ய ஆசைகளையும், நிறைவேற்ற இயலாத இயலாமைகளையும் தங்களோட பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றனும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு...*_☹

🤜 _*இன்னொரு பக்கம்*_🤛

🤕🤦🏻‍♂ _*ச்ச... என்ன வாழ்க்கைடா இது... நம்ம விரும்பின படிப்பு படிக்க முடியல...😏 அம்மா அப்பா சொல்றங்களேன்னு இதை படிக்க வேண்டியதா இருக்கு... 😞அவங்க ஆசைகளுக்கான கருவியா நாம அப்படின்னு மனப்புலம்பல்கள் கொண்ட நமது இளைய தலைமுறை...*_🤕

💁🏻‍♂ _*இது பொதுவாக நம்ம எல்லாரும், நம்ம வீட்ல ஆகட்டும், பக்கத்து வீட்டுல ஆகட்டும், இல்ல தெரிஞ்சவங்க வீட்ல ஆகட்டும், இப்படி பிள்ளைகளோ அல்லது பெற்றோர்களோ இப்படி சொல்றதை கேட்கற விஷயம் தான்.*_🤷🏻‍♂

💁🏻‍♂ 🤜 _*இப்படி பெற்றோர்கள் பார்த்து பிள்ளைகளுக்கு அமைத்து கொடுக்கும் எதிர்காலம் நல்லா இருக்குமா. ⁉இல்லை அவங்களா அவங்களுக்குன்னு ஒரு எதிர்காலம் அமைத்துக் கொண்டால் அவங்க வாழ்க்கை நல்லா இருக்குமா...?*_⁉🤔🤙

👼👦🏻👧🏻 _*பிள்ளைகளின் கல்வி, வேலை சார்ந்த விஷயங்களில் பெற்றோர்களின் கடமை.*_👨‍👩‍👧‍👦

🔥🎓 _*படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது சிறு வயது முதலே ஒருவருடைய ஆர்வத்திற்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். இந்த விசயத்தில் யாருடைய வற்புறுத்தலும் இருக்கக்கூடாது.🙅🏻‍♂ வற்புறுத்தல் இருந்தால் பின்பு அவர் கடமைக்காக படிக்க வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.*_😰🤷🏻‍♂

🔥🎓 _*ஆர்வத்திற்கு தகுந்தவாறு ஒருவர் தன்னுடைய படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும்போது சாதனைகள் பல அந்த படிப்பில் அவர் புரிவார். 👍நல்லதொரு சாதனை புரியும்போது அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை. நல்ல சம்பளமும் கிடைப்பதற்கு வாய்ப்பாகிறது. அவருக்கு ஆர்வம் உள்ள துறையில் வேலையும் கிடைத்து உற்சாகமாக பணியும் ஆற்றுவார். உற்சாகமாக பணியாற்றும் போது பதவி உயர்வு சுலபமாக கிடைத்து பெரிய பதவிகளை அடைவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.*_🤷🏻‍♂

🔥🎓  *_ஆனால் ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் அறியாமல் காதில் விழுந்த செய்திகளையும், மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு அந்த பிள்ளைக்கு அவருக்கு விருப்பம் இல்லாத ஒரு படிப்பை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்._*😰

🔥🎓 _*ஆர்வம் இல்லாத படிப்பை பெற்றோர்கள் அல்லது தவறான ஆலோசனையின் பேரில் விருப்பம் இல்லாமல் படித்து எதிர்காலமே கேள்வி குறியாகும் சூழ்நிலை உருவாகிறது.*_🙇🏻‍♂

🔥 🤜 _*எனவே ஒருவர் நல்லதொரு வேலை வாய்ப்பு பிற்காலத்தில் கிடைக்க வேண்டும்*_ _*என்றால் அவர் சிறு வயது முதல்*_ _*தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பை*_
*_பொருத்து அமையும்._*🤛🤷🏻‍♂

🧐 👨‍👩‍👧‍👦 _*இந்த விசயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடன் அவர்கள் பிள்ளைக்கு அவர்களுடைய பிள்ளையின் ஆர்வத்திற்கு தகுந்தவாறு படிப்பினை தேர்வு செய்வதற்கு உதவி செய்யவேண்டும். விருப்பம் இல்லாத படிப்பை படிக்கச் சொல்லி நிர்பந்தம் செய்யக்கூடாது.*_🙅🏻‍♂

😇💐 _*சில பிள்ளைகள் யாருடைய அறிவுரையும் இல்லாமல் அவர்களாகவே அவர்களுக்கு ஆர்வம் உள்ள படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.🎓 அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விட வேண்டும்.*_😇💐

_*👦🏻👱🏻‍♀பிள்ளைகளின் கனவு லட்சியம் என்று தலைப்பு வைத்த போது🤪 ஆண் பெண் என்று இன்று விவாதத்தில் பதிவுகள் வந்தது. 😲இது நாங்கள் எதிர்பாரத்த ஒன்று தான்🤩 இந்த ஆண் பெண் என்று பார்த்தோமானால் 👀அதற்கு பல விவாதங்கள் வைத்து பேசினாலும் அப்படி பேசினாலும் அதிக நிறை குறைகளே மிஞ்சும்.☹*_

_*🧐ஆனால் இப்போ இருக்கும் பெற்றோர்களில்👨🏻👱🏻‍♀ பெரும்பாலானவர்கள் தங்களுடைய பிள்ளைகளை 👦🏻👩🏼ஆண் பெண் என்று வேறுபாடு பாராமல் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.*_👍🏻

_*🤨பொதுவாக...*_

_*😲☹வீன் எண்ணங்களில் தோன்றும் எந்த மனப்போராட்டங்கள் ஏற்பட்டாலும் முற்றிவிடும் முன்பு 🧐வெளிப்படையாக பேசினால் எதாவது நல்ல முடிவு கிடைக்கலாம்,🤝🏻 பாதிப்பின்றி முடித்துக் கொள்ளலாம் 👍🏻இல்லை என்றால் காழ்புணர்வும்,😟 முகமுறிவும் தான் மிஞ்சும். 😕இதில் நமது குறைபாடும் உண்டு. நாம் அடுத்தவரை நாடுவது என்பது வெறும் நட்புக்காக, 😏நேர போக்கிற்காக கூட இருக்கலாம். 😨ஆனால் அவர் விருப்பத்துடன் தான் செய்கிறார் / உடன்படுகிறார் என்ற தவறான 🤨அனுமானத்தை வைத்திருப்பதால் அவை மோசமாகும் போதுதான் நமக்கே அதுபற்றி தெரியவரும்.😲 மனிதர்களின் மனநிலை வேறு வேறு என்பதால் இவை வாழ்க்கை முழுவதுமே 💕அவ்வப்போது எவருடனாவது ஏற்படும் ஒரு விரும்பதாக நிகழ்வுகள் தான். 💔பாடம் என்று எடுத்துக் கொள்ளலாம். 😟ஆனால் அதை அளவு கோலாகவைத்து எல்லோரையும் எடை போட முடியாது😢 இருந்தாலும் அதுபோன்ற ஒத்த நிகழ்வுகளில் சிறுது முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.*_😨👍🏻

_*😃பெற்றோர்களின் லட்சியம் என்பது முழுக்க முழுக்க பிள்ளைகளின்👦🏻👩🏼 வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும்.🤔 அதற்கு பெற்றோற்களாக என்ன செய்ய வேண்டும் என்பதே...!!?🧐*_

_*🤨காரணம் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் விதம் 😨எப்படி என்பது சில பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை 😟என்பது கசப்பான உண்மை.☹*_

_*🤔சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே🐾 ஏற்பவர்களாக இருப்பார்கள். 👍🏻பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள்.☹ குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. 😲தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு👀 ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும்.👍🏻 சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை😟 ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம்🧐 தோன்றி அடம் பிடிப்பார்கள்.🙇🏻‍♂ ஆனால் அவர்களின் போக்கிலே விட்டு சரியான தருணம் பார்த்து 👀அவர்கள் கேட்பதில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு 🤨புரியும்படி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார்கள்.😃*_

_*👦🏻👩🏼குழந்தைகளின் மாணவ பருவத்திலே பெற்றோர் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.👍🏻 அவர்கள் எந்தப் பாடங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்கிறார்கள், 🤨எந்தப் பாடங்களில் அவர்கள் புத்திசாலித்தனம் அதிகமாகத் தெரிகிறது🤠 என்பதை அவதானித்து அந்தப் பாடங்களினால் வருங்காலத்தில்🧐 அவர்களுக்கு நன்மை உண்டா என்பதை அறிய வேண்டும். 🤝🏻குழந்தைகள் தெரிவு செய்த பாடங்கள் சரியாயின் அவர்களுக்கு துணையாக இருந்து 😃மேலும் மேலும் வளர உதவ வேண்டும். 🤩 அவர்களின் லட்சிய பாதைக்கு ஒரு நல்ல தலைவனாக இருந்து வழிநடத்த வேண்டும்.👍🏻🤝🏻*_

_*🗣பெற்றோர் தம் சுயநலத்திற்காகவும் சுய கௌரவத்திற்காகவும்😏 பிள்ளைகளின் எதிர்காலத்தை 🧐பாழாக்கக் கூடாது. 😨அவர்கள் விரும்பும் துறையில் ஆர்வம் மிகுதியாகும்போது🤔 அவர்கள் அத்துறையில் வெற்றியடைவது நிச்சயம்.💪🏻 அதற்கு தகுந்த உதவிகளை செய்வது பெற்றோர் கடமையாகும்.🤓*_

_*👨🏻👱🏻‍♀பெற்றோரின் வழிகாட்டலும் பிள்ளைகளின் 👦🏻👩🏼விருப்பமும் ஒன்றாக இணையும்போது வாழ்வு சிறப்பாக அமையும்.👌🏻🤝🏻*_

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

*🎖 Ram Kumar⁩*
*🎖 🏁ஜான்🔴ழைழா🏁⁩*
*🎖 இசையருவி*
*🎖 நான் மகான் அல்ல*
*🎖 சுரேஷ் பாபு*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

*🎖இன்னைக்கு தலைப்பு சம்மந்தமா பதிவுகள் போட்ட அனைவரும் சிறந்த பேச்சாளர்களே*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
😇 *மனித வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒற்றை வரி கவிதையாய் மாறிப்போய் விட்டது வெற்றி.* 😏

🔥 *உலகில் உள்ள அனைவரும் எப்பாடுபட்டாயினும் வெற்றி பெற உழைக்கிறோம். அதற்காக வெற்றி எனும் பாதையை நோக்கி மனிதன் ஓடிக்கொண்டே தான்இருக்கின்றான்.*👊

🔥 *ஆனால் சிலர் மட்டுமே வெற்றிக்கான ஏனிப்படிகளை சரியான விதத்தில் அமைத்துக்கொண்டு தனது எல்லையை அடையாகிறான்.*👍

🔥 *மீதி பலரோ தோல்வியை தழுவி துக்கத்தில் துவண்டு விடுகின்றனர், ஆனால் தோற்றவர்களுக்கு ஏனோ இன்னும் புரியவில்லை வெற்றி எனும் முகவரியை அடையப்பயன்படும் பாதையின் பெயர் தான் தோல்வி என்று.*👍

🔥 *வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். 👍ஒரு வெற்றியைப் பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.*👍

🔥 *அந்த வகையில் வெற்றி எனும் பாதையை நோக்கி பயணிப்பதற்கு முன்பு அதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டால் உங்கள் லட்சியப்பாதையை அடைந்துவிடலாம்*👍

🔥 *தளராத முயற்சியும், உழைப்பும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் அவனுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.நமது உழைப்பு எப்படிப்பட்டதாய் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.*👍

🔥 *நாம் என்ன செய்கிறோம், அதை ஏன் செய்கிறோம், அதைச் செய்வதால் நமக்கு என்ன பலன், அதற்கு போதுமான உழைப்பை நாம் மேற்கொள்ளுகிறோமா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.*👍

🔥 *இவைகளையெல்லாம் சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் இலட்சியத்தை அடையலாம், ஆனால் ஒருவேளையாவது நீங்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பதன் மூலம் தான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்.*👍👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

*ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்*
*நீள்வினையால் நீளும் குடி.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*💞 அறிந்து கொள்ளவும்* 💕

*ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.*

*💞 தெரிந்து கொள்ளவும்* 💕

*லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.*

*💞 புரிந்து கொள்ளவும்* 💕

*ஒவ்வொரு நொடியும் படைப்பதற்கான நொடியே. அதை வீணாக்க வேண்டாம்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 *அன்புத்தோழன்⁩*
📱 *+91 96775 27522*

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...