Wednesday, 14 March 2018

2000 க்கு பிறகு உலகில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் பற்றிய ஒரு அலசல்


https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :04.03.2018.* 
         🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*தேவைக்கு மேல் பணமும்,பொருளும்*
*கிடைத்தற்கு அதிகமான புகழும் சேர்ந்துவிட்டால்,*
*பிறகு கிடைக்கும் அனைத்தும் வெறும் தூசியாகவே இருக்கும்,*
*தன்னலம் தாண்டி பிறர்நலம் யோசிப்பவன் மனித குளத்தின் கடவுள்..*

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
*அறிவோம்*
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

*விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்க தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றெடுக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.*

         💐*_-தலைவர் பிரபாகரன்_*💐

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*2000 க்கு பிறகு உலகில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் பற்றிய ஒரு அலசல்.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

           *_💝பாகம் - 1⃣💝_*
        💐💐💐💐💐💐💐💐

உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது,ஆனால் எந்த மாற்றமும் அடையாமல் பல வருடங்களாக இறவா நிலையுடன் சில பழக்கங்கள் மட்டும் நம்முடன் தொடர்ந்து வருகிறது.
இறவா நிலையுடன் இருக்கும் பழக்கங்களில் முதன்மையானது காதல். காதலுக்கு அடுத்த படியான நிலையில் இருப்பதுதான் தீவிரவாதம்.

பல வருடங்களாக தீவிரவாதம் நம்மை ஆட்டுவிக்கிறது,ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ  ஒரு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுகொண்டே தான் உள்ளது,இதில் மக்கள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகிகொண்டே தான் உள்ளது,தீவிரவாதம் என்ற பெயரில் பெண்கள் விற்கடுகின்றார்கள்,பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்,குழந்தைகள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன,பள்ளிக்கூடங்களில் குண்டு வெடிக்கிறது,பல இடங்களில் துப்பாக்கிசூடு நடத்தப்படுகிறது,கோவில்-சர்ச்-மசூதி என பிரார்த்தனை தளங்களில் குண்டு எரியப்படுகிறது,வருடா வருடம் குறைந்தபட்சம் 10 பேரின் குரல்வளைகளும் அருக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புது புது பயங்கரவாத இயக்கங்களும்,அமைப்புகளும் உருவாகிறது,தன் நாட்டின் மீது அவ நம்பிக்கை உருவாகிய மக்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேற்கும் பணியும் நடந்து வருகின்றன.
உலக நாடுகள் ஒற்றுமை இழந்த தீவிர வாதத்தை வளர்த்தும் வருகிறது,எதிரி நாட்டை அளிக்க தீவிர வாத அமைப்பையும் வெவேறு நாடுகள் பயன்படுத்தியும் வருகின்றன.

தீவிரவாத தாக்குதல் வருடா வருடம் அதிகரித்து வருகின்றது என்பதற்கு முக்கியகாரணம் உலக நாடுகளின் ஒற்றுமையின்மை என்பதும் குறிப்பிட தக்கது தான்...

கடந்த 2000 ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது,உலக அளவில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுகொண்டே தான் இருக்கிறது என்பதை நாம் செய்திகள் மூலம் அறியலாம்.

அது போல கடந்த 18 வருடங்களில் உலகம் சந்தித்த கொடூர தீவிரவாத தாக்குதல் பற்றியும் பின்னணி பற்றியும் பாப்போம்..

ஆண்டு 2⃣0⃣0⃣1⃣

9/11 என கூறப்படும் தாக்குதல் அதாவது 2001 செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம் என கூறப்படும் உலக வர்த்தக மைய கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.இதை நான்கு போயிங் விமானம் மூலம் பயங்கரவாதிகள் நிகழ்த்தி காட்டினர்.இதில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,தென்கோபுரம் 56 நிமிடங்களும் வட கோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்தது.

*_இந்த தாக்குதலில் மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர்,இதில் 300கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் ஆவர்._*
*_காயமடைந்தோர் 6291 பேர் என அறிவித்தது அமெரிக்கா_*

அமெரிக்க விசாரணையின் படி இந்த தாக்குதல் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர் என்று கண்டறிந்தனர்.ஆப்கான் தீவிரவாதி ஒசாமா பின்லேடன் என கண்டறியப்பட்டது உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக போர் முழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்தன.
*_இரட்டை கோபுரத்தைத் தகர்த்தது என்னவோ பின்லேடன்தான். ஆனால் அதற்கான விதை போட்டது அமெரிக்காதான் என்பது அப்போது பலருக்குத் தெரியாத உண்மை.  ஒசாமாதான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்றால் ஜிம்மி கார்ட்டர், ரீகன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட அமெரிக்க அதிபர்களுக்கும் இந்தத் தாக்குதலில் மறைமுகப் பங்குண்டு என்பது மறுக்க முடியாததே._*

*_இன்றுவரை இந்த தாக்குதல் பின்லேடன் செய்தாரா என சந்தேகமும்,சாட்சியமும் அமைந்துள்ளது,இந்த தாக்குதல் அமெரிக்காவின் சதியே என்றும் கூறப்பட்டு வருகின்றது._*
*_இந்த தாக்குதலை செய்தது இஸ்ரேல் தான் எனவும் பல நிபுணர்கள் கூறிவருகின்றனர்_*

*இதுவே 2001 ம் ஆண்டு நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதல் ஆகும்.*

*2⃣0⃣0⃣4⃣*

*பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்*

*ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசில் பெஸ்லான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் செச்சினியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 2004, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆரம்பித்தனர். 777 பாடசாலைப் பிள்ளைகள், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 1,100 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மூன்று நாட்களின் பின்னர் ரஷ்யக் காவற்படையினர் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை பீரங்கி வண்டிகள், வெப்ப அமுக்க ஏவுகணைகள், மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். பல தொடர்க் குண்டுவெடிப்புகளினால் பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆயுததாரிகளுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் சரமாரியான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. 186 பிள்ளைகள் உட்பட 334 பணயக் கைதிகள் இந்த முற்றுகையின் போது கொல்லப்பட்டனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் காணாமல் போய்விட்டனர்.*

*செச்சினிய பிரிவினைவாதிகளின் தலைவர் ஷமீல் பசாயெவ் இந்த பணயக்கைதிகள் நிகழ்வுக்கு உரிமை கோரினார். ஆனாலும் இந்நிகழ்வின் பயங்கரத்துக்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டினைக் குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தை அடுத்து ரஷ்யாவில் பல அரசியல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கிரெம்ளினுக்கும், ரஷ்ய அதிபருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.*

*2⃣0⃣0⃣5⃣*

*எகிப்து குண்டு வெடிப்பு*

*எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் ஷார்ம்-எல்- ஷேக் சுற்றுலாத் தலத்தில் கடந்த சனிக்கிழமை தொடர் கார் குண்டுகள்வெடித்தன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 88 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.*
*தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கடும் கண்டனம் தெரிவித்தார்.* *தீவிரவாதிகளின் இந்தமிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.*

*எகிப்து நாட்டின் விசாரணை அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாகபாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் தேடப்படுகின்றனர். ஷார்ம்- எல்- ஷேக் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த இவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பின் தலைமறைவாகி விட்டனர்.*

*தில்லி குண்டு வெடிப்பு*

கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தில்லியில் உள்ள சரோஜினி நகர், பாஹர்கஞ்ச், கால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 67 பேர் உயிரிழந்தனர். 225 பேர் காயமடைந்தனர்.
தீபாவளிக்கு இருநாள்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிகளில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்புகள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காஷ்மீர் பிரிவினைக்காக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர், காஷ்மீரைச் சேர்ந்த தங்கள் பயங்கரவாதிகள் மூலம் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக லஷ்கர் பயங்கரவாதிகள் முகமது ரஃபீக், ஹசன் ஃபாசில், தாரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியது; அதனைத் திட்டமிட்டு அரங்கேற்றி பலரைக் கொலை செய்தது; தேசத்துக்கு எதிராக பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
*முகமது ரஃபீக், ஹசன் ஃபாசில் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை போலீஸ் தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை சில நாள்களுக்குள் விடுவித்து விட்டது.*

*இவ்வழக்கை விசாரித்த தில்லி காவல் துறைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. "12 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை'' என்று குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.*

*2⃣0⃣0⃣6⃣*

*11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்.*

*11 ஜூலை 2006 அன்று மும்பை புறநகர் இரயில்வேயில் அடுத்தடுத்து 11 நிமிடங்களில், நிகழ்ந்த ஏழு குண்டுவெடிப்புகளைக் குறிக்கும். இக்குண்டுகள் மும்பை மேற்கு புறநகர் இரயில் நிலையங்களிலும் அவற்றுக்கு அருகே உள்ள சாலைகளிலும் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகள் மாலை 6:24 முதல் 6:35 மணிக்குள் நிகழ்ந்தன. இந்நிகழ்வில் குறைந்தது 200 பேர் இறந்தனர். மேலும், குறைந்தது 700 பேர் காயமுற்றனர்.*

*முதலாவதாக கால் இரயில் நிலையத்திலும், அதனைத் தொடர்ந்து மாகிம், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை இரயில் நிலையங்களிலும் குண்டு வெடித்தது.*

*இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு இரயில்வேயின் அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. மும்பையில் நகர்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.*

*இந்த சம்பவத்தை தொடர்ந்து தில்லி, பெங்களூர், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. முக்கிய நகரங்களில் காவல் துறையினர் ரோந்து வந்தனர். விமான நிலையங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.*

*மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பளித்தது.*

*செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல்*

*ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள்  தெரிவித்துள்ளார்கள்.இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.*

*2⃣0⃣0⃣8⃣*
*26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல்*

*_இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும். தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே உளவு உதவிகளை பெற்றிருந்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானின் ஐஎஸ்ஐ  ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் . தாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர்._*


https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :04.03.2018.* 
         🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*2000 க்கு பிறகு உலகில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் பற்றிய ஒரு அலசல்.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

                   *_💝பாகம் - 2⃣💝_*
                 💐💐💐💐💐💐💐💐

2⃣0⃣1⃣4⃣

*14-04-2014 இல் 223 நைஜீரிய இக்போ பழங்குடி மாணவிகள் கடத்தல்*

*_ஆங்கில பள்ளிக்கூடத்தில் தங்கிப் படிக்கும் 223 நைஜீரிய இக்போ பழங்குடி வளர்இளம் பருவ மாணவிகளை, போக ஹராம் மத அடிப்படைவாத தீவிரவாதிகள் 14-04-2014-இல் கடத்தி சென்று விட்டனர். இதுவரை கடத்தப்பட்ட மாணவிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் கிட்டவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் நைஜீயாவின் அன்னடை நாடுகள் கடத்தப்பட்ட மாணவிகளை தேடி வருகின்றனர்._*
*_ஆங்கில பள்ளிக்கூடத்தில் தங்கிப் படிக்கும் 223 நைஜீரிய இக்போ பழங்குடி வளர்இளம் பருவ மாணவிகளை, போக ஹராம் மத அடிப்படைவாத தீவிரவாதிகள் 14-04-2014-இல் கடத்தி சென்று விட்டனர். இதுவரை கடத்தப்பட்ட மாணவிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் கிட்டவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் நைஜீயாவின் அன்னடை நாடுகள் கடத்தப்பட்ட மாணவிகளை தேடி வருகின்றனர்._*
*_வடக்கு நைஜீரியாவில் 40 சிறார்களை இவ்வமைப்பு கடத்திச் சென்றது._*
*_பெண்களை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தல்.._*

*🛑பிண்ணனி🛑*

*போகோ அராம் (Boko Haram, "மேற்கத்திய கல்வியே ஒரு பாவச்செயல்" எனப் பொருளாகும் என்ற அமைப்பு நைஜீரியா முழுமையும் சாரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் ஓர் நைஜீரிய இசுலாமியக் குழுவினர் ஆகும். இந்தக் குழுவினருக்கு தற்போது எவ்வித தலைமையும் ஒழுங்கமைப்பும் இல்லை.இந்த அமைப்பின் அலுவல்முறையான பெயர் ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத். இது அராபிய மொழியில் "நபிகள் நாயகத்தின் உரைகளையும் ஜிகாத்தையும் பரப்பிட அர்ப்பணித்தவர்கள்" எனப் பொருளாகும் மேலும் இவ்வமைப்பு இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு  எனும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகத் துணைநிற்போம் என அறிவித்துள்ளது._*

*2⃣0⃣1⃣5⃣*

*இந்த வருடமே உலகின் அதிக அழுவுகளை சந்தித்த வருடம்...*

1⃣) *நைஜீரியாவில் நடந்த தாக்குதல்*

*_2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்த இரண்டே நாட்களில் நடந்தேறியது அந்த தீவிரவாத தாக்குதல். ஜனவரி 3-ம் தேதி நைஜீரியாவின் பேகா என்னும் நகரத்தில் உள்ள நைஜீரிய ராணுவ நிலையத்திலும், நைஜீரியாவின் ஒருங்கிணைந்த  பன்னாட்டு ராணுவ தலைமையகத்திலும் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தால் நடத்தப்பட்டது அந்த தாக்குதல். நான்கு நாட்கள் அந்த நகரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போகோ ஹராம்,  கிட்டத்தட்ட 2000 உயிர்களை காவு வாங்கியது. அங்கே அமைக்கப்பட்டிருந்த அனைத்து ராணுவ தளவாடப் பொருட்களையும் கைப்பற்றியது._*

*_நகரம் மொத்தத்தையும் சூறையாடியது. பேகாவில் நடந்த தாக்குதலால் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இருந்து ஏறக்குறைய 30000க்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. பேகா படுகொலை என அழைக்கப்படும் இந்த நிகழ்வு,  இந்த வருடத்தில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலாக பார்க்கப்படுகிறது._*

*2⃣)சிரியாவில் நடந்த தாக்குதல்*

*_இந்த வருடம் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலுக்கு அதிக முறை பலியாகிய நாடுதான் சிரியா. தீவிரவாத இயக்கங்களுக்கு நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே வேறுபாடு தெரியாது. அப்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் சிரியாவின் கிராமங்கள் மீதும் நகரங்கள் மீதும் கடந்த ஜூன் 25ல் நடத்திய தாக்குதல்தான் இந்த வருடம் அந்த நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல். கோபன் என்ற நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் எதிர்பாராத நேரத்தில் வெவ்வேறு வகையில் தாக்கியது ஐஎஸ்ஐஎஸ்._*

*_வெடிகுண்டுகள் நிரம்பிய கார்களை பொது இடங்களில் பார்க் செய்வது போன்ற முறைகளை பயன்படுத்தி ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 154க்கும் அதிமானோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பிறகே சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு  எதிராக குரல்கள் வலுவாக எழத்தொடங்கின._*

*3⃣)நைஐீரியாவில் நடந்த இரண்டாவது தாக்குதல்.*

*_நைஜீரியாவில் ஏற்பட்ட தொடர் தீவிரவாத தாக்குதல்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  பிரதமர் குட்லக் ஜோனாதன் பதவியிழந்தார். அவரை தொடர்ந்து அதீத எதிர்பார்ப்புடன் பதவி ஏற்றார் முகமது புஹாரி. ஆனால் முகமது புஹாரி பதவி ஏற்ற பின்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அப்படி நடந்த முக்கியமான  பெரிய தாக்குதல்தான் இது. ஜூன் 30-ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல், ஜூலை 1-ம் தேதி வரை தொடர்ந்தது. நைஜீரியாவின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து  இரண்டு நாட்கள் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.இந்த தொடர் தாக்குதலில் போகோ ஹராமின் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் தாக்குதல்களால் ஏற்கனவே நிலைகுலைந்து போய் இருந்த நைஜீரியா,  இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் முடங்கியது. 145க்கும் அதிகமான பேரை காவு வாங்கிய இந்த தாக்குதல்,  முகமது புஹாரியின் ஆட்சியின் மீதிருந்த மக்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கியது._*

*4⃣)ஈராக்கில் நடந்த இரண்டாவது தாக்குதல்*

*_ஈராக்  தலைநகர் பாக்தாத்தில் உள்ள சடார் நகரத்தில் உள்ள  விவசாயிகள் சந்தையில் வந்து நின்றது அந்த லாரி. காய்கறிகளை குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் அந்த லாரியை,  தக்காளி விற்பதற்காக கொண்டு வந்திருப்பதாக தாக்குதல் நடத்திய தீவிரவாதி பொதுமக்களிடம் கூறியுள்ளான். பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தபின் அந்த லாரியில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளான். எதிர்பாராத இந்த சம்பவத்தால் 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; 76 பேர்  இறந்ததாக கூறப்படுகிறது.  இதில் நெரிசலில் இறந்தவர்களே அதிகம். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டது._*

2⃣0⃣1⃣8⃣

*சிரியா 2018*

*_சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன._*

*_இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்._*

*_இந்த நிலையில் சிரிய அரசு வான்வழி தாக்குதலில் குளோரின் வாயுவை பயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை சிரியாவின் ஓரியண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது._*

*_இதுகுறித்து சிரியா கண்காணிப்புக் குழு கூறும்போது, "கவுடாவில் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். இதில் இறந்தவர்களின் மருத்துவ அறிக்கையின் மூலம் சிரிய அரசு ரசாயன தாக்குதலை நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு சுவாச குறைப்பாடு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது._*

*_தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறும்போது, "மூன்று வயது குழந்தை ஒன்று முச்சு திணறலில் இறந்தது. அவர்கள் தாக்குதலுக்கு குளோரின் வாயுவை உபயோகித்துள்ளனர் என்று சந்தேகிக்கிறேன்" என்றார்._*

*_சிரியா உள்நாட்டு போரில் இது வரை இரண்டரை லட்சம் அப்பாவி மக்கள் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது..._*

*2⃣0⃣0⃣9⃣*

*மே 18 2009 ம் ஆண்டு தமிழர்கள் என்றும் மறக்க முடியாத வலியை கண்ட நாள்,முள்ளிவாய்க்கால் ஈழ இனப்படுகொலை நாள்.*

*_ஈழத்தின் இறுதி போர் என்று கூறப்படும் இந்த படுகொலை தீவிரவாதத்தையும் தாண்டிய ஒரு அநியாய செயல்,ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகிறீர்கள் என்று கூறி பல லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்த இடம் தான் முள்ளிவாய்க்கால்._*

*அழியாத சுவடிகளில் இதுவும் ஒன்று தமிழனுக்கு...*

*முள்ளலிவாய்க்கால் பகுதியில் மட்டும் 150000 கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் முள்ளிவாய்க்கால் முழுவதிலும் 2009 ம் ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர்.*

*இன படுகொலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் விதவைகள் ஆனார்.*

*பலர் படுகாயம் அடைந்தனர்.*

*50000க்கும் அதிகமான குழந்தைகள்,ஆண்கள்,பெண்கள் என மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.*

*இன்றும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது.*

*இது வெறும் தீவிரவாதம் என்று செல்லக்கூடியது கிடையாது,இது இன்று வரை ஒரு போர் குற்றம் னு தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க ஆனால் அதுவல்ல உண்மை இது ஒரு இனத்தை அளிப்பதற்கான போர்.*

*மாண்ட இனம் தோன்றியது னு கூறுவார்கள் அது தமிழினத்திற்கு மட்டுமே பொருந்தும்.*

*_இந்த இன படுகொலைக்கான தீர்வு இன்றும் கிடைக்கவில்லை ஐ.நா தீர்மானம் மட்டும் போடப்பட்டுகொண்டே இருக்கு ஆனால் தீர்வு இல்லா ஒன்று ஈழ பிரச்சனை..._*

இந்த ஒரு செயலை செய்தவர் *ராஜபக்செ* ஒரு மிக பெரிய தீவிரவாதியே...

*ஆனால் ஒன்று மாண்ட இனம் தாம் தமிழனினம் ஆனால் மீண்டும் உயிர்பெற்று ஒரு நாள் உலகை அசைத்து பார்க்கும்...*

     *💐💐💐💐💐நன்றி💐💐💐💐💐*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

           *சிறந்த அட்மின்*

 *அருள்முருகஇன்பன்*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

*🏆🥇@⁨R.j⁩*

*🏆🥈 @⁨ஆண்டவன் கட்டளை Ak⁩*

👑 *கலந்துரையாடல்2⃣*👑

*🏆🥇 @⁨sriramkrm⁩*

*🏆🥈 @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*📜 திருக்குறள் 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்*
*தொகுத்தவற்றுள் எல்லாந் தலை*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆         

*கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *💝முடிவுரை தொகுப்பாளர்கள்💝*

    🖋 *_மணி மாதேஷ் - 8428073724_*🖋

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

  🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...