🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :26.03.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பும்,தூத்துக்குடி மக்களின் அவல நிலையும்,மக்கள் போராட்ட நுணுக்கங்களும் ஒரு அலசல்.*
🏭🔥😡😰🏭🔥😡😰🏭🔥😡
🔥 *பாகம்*🔥2⃣
🏭 🔥 *தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை ஸ்டெர்லைட் உள்ளது.*🏭😓
*இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும் என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.*😥😓
*ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.*😡👊
🏭😡 *இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார்.*😡👊🏭
🏭😡👊 *பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணப்பெட்டியுடன் கிடைத்தது.*😡
*அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது.*
*அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த]ந்ததால் நழுவி விட்டனர்.*👊😡
🔥😡👊 *போராடிய மக்களை நடுத்தெருவில் விட்டதுடன்.சிலர் ஆலை ஏகப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பையும் ,நல்ல வாழ்வையும் தருகிறதாக வேறு பேசவும்,சுவரொட்டிகளை அவ்வப்போது பணம் வரும் போதும்.மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போதும் ஓட்ட ஆரம்பித்து கைகூலிகளாகவே ஆகி விட்டனர்.*😡👊
🏭 *ஸ்டர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தவுடனே அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்து விட்டது.அருகில் உள்ள கிராமங்கள் நிலங்கள் விசத்தன்மையுடன் பாலையாகி விட்டது.செடிகள்-பயிர்கள் கருகி விட்டன.*😡👊
*அப்பகுதில் உள்ள குட்டைகளில் நீர் அருந்திய கால் நடைகள் நூற்றுக்கணக்கில் மடிந்து விழுந்தன.*😡👊😓
🔥😡👊 *ஆனால் அப்பகுதில் உள்ளவர்கள் கோரிக்கைகள்-குறைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை.*😡👊
🔥😡👊 *தனது ஆட்சியில் ஜெயலலிதா அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டியது முதல் அடுத்து வந்த கலைஞர் ஆட்சியிலும் ஆலை ஆட்சியினரால் பாதுக்காக்கப்பட்டதே ஒழிய மக்கள் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.😡👊ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கில் வைகோ வாதாடியும் வருகிறார்.*
*இந்த ஆலையில் இருந்து விசவாயுக்கள் வருவதையும்,நிலத்தடி நீர் விசமானதையும்,நிலங்கள் சாகுபடிக்கு பயனின்றி விசத்தன்மையுள்ளதாக மாறிவருவதாகவும் முதலில் அறிக்கை தந்த மத்திய அரசின் மாசு தொடர்பான ஆய்வு நிறுவனம் "நீரி"வழக்கு எதிர்ப்பு என்றானதும் அரசு துறைக்கே உரிய குட்டிக்கரணம் போட்டு ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து மக்களை அரசின் பாதுக்காப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டது.*😡👊
🔥😡👊🏭 *ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறம் மட்டும் உயிர் இழக்கவில்லை.மனிதர்களும் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அவ்வப்போது ஆலை வெளியிடும் நச்சுக்காற்றால் சிறு வயதினரும்-வயதானவர்களும் திடீரென இறந்து வருகிறார்கள்.*😡👊😓
🔥🏭😡👊 *ஆலையில் தினசரி விபத்து வாடிக்கையான ஒன்று.வார,வாரம் யாரா வது தொழிலாளி இறந்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்கு விபத்து எற்பட்டால் உடனே மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுவார்கள்.இறந்ததும் அப்படியே வழியனுப்பி வைத்து விடுவார்கள்.90 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்கள்.அதுவும் வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் இங்கு தமிழகத்தில் அதிர்வுகள் தெரியாது.இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு தொகை அவர்கள் வாயை அடைக்க கொடுத்தும் விடுகிறார்கள்.*😡👊
*அதையும் தாண்டி மதாமாதம் ஒரு விபத்து என்ற பெயரில் ஸ்டெர்லைட் செய்யும் கொலைகள் வெளியே வந்தும் விடுகிறது.அது அரசின்-காவல்துறையின் ஒத்துழைப்புடன் மறைக்கவும் பட்டு விடுகிறது.*😡👊
🔥😡👊🏭 *இதை மறைப்பதிலும் -ஸ்டெர்லைட் பற்றிய எதிர்மறை செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் ஆலையை விட பத்திரிக்கைகளும்-அரசும்தான் ஆர்வம் காட்டுகிறன.*😡👊
*தினத்தந்தி,தினகரன் ,மாலைமுரசு போன்ற பத்திரிகைகள் மறந்தும் ஸ்டெர்லை ஆலை ஆளைக் கொன்று விட்டது.அதில் இருந்து விசவாயு கசிவு என்று போடுவதில்லை.ஒரு ஆலையில் இருந்து கொஞ்சம் வாயு கசிவு ,ஒரு ஆலையில் வேலை பார்த்தவர் விபத்தில் மரணம்.இவ்வாறுதான் செய்திகளை வெளியிடுவார்கள்.*
*பத்திரிக்கை முதலாளிகளுக்கு ஸ்டெர்லைட் தரும் விளம்பரம் நிரு பருக்கோ ஸ்டெர்லைட் தரும் புத்தாண்டு உடைகள்,காலண்டர்,டைரி ,இனிப்பு,அப்புறம் முக்கியமான கவர் ,இது தவிர அவ்வப்போது உற்சாகப்பான விருந்து,நல்ல நாள் பொல்லாத நாள்களில் தரும் கவர் அன்பளிப்புகள்,வெள்ளி,தங்க நாணயங்கள் போதாதற்கு விளப்பரங்க்கள் மூலம் கிடைக்கும் கழிவுத்தொகைகள் இவ்வளவு ஸ்டெர்லைட் தரும்போது வாயைத்திறக்க மனாசாட்சியுள்ள நிருபருக்கு முடியமா?ஸ்டெர்லைடில் இறந்த தொழிலாளியோ அல்லது இறக்க காத்திருக்கும் மக்களோ இப்படி அள்ளி தருவார்களா?*
*அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் மூலம் இந்த கிராமத்தில் இந்த நற்பணி செய்யப்பட்டது என்ற செய்திகள் மட்டும் பரவலாக வரும்.*😡👊😥😓
🔥😡👊🏭 *இப்போது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியின் போது தாமிரத்தாதுமணலில் தாமிரத்தை பிரிக்கும்போது தாமிரம் மட்டும் கிடைப்பதில்லையாம்.உடன் தங்கம்,பிளாட்டினம்,வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களும் கிடைக்கும்.ஆனால் அவற்றை அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது கடத்தி விடுகிறார்கள்.இப்படி கடத்தும் போது பலமுறை பிடிபட்டும் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் அரசும் ஸ்டெர்லைட்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வழக்குகள் என்னவாயிற்று என்றெ தெரியாமல் போய் விட்டன.வரி எய்ப்பு,வழமையான ஒன்று .இப்படி மக்களையும் ,அரசையும் ஒரே நேரம் ஏமாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன்தான்.*😡👊
*ஒரு கன மீட்டருக்கு 80 மைக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று மக்கள் நல அரசு அனுமதி கொடுத்துள்ளது.*
*அப்படி திறக்கும்போது கந்தகத்தில் கொஞ்சம் அதிகம் திறந்து விட்டது.*
*அன்று குறைவாக 65 மைக்ரோ கிராம் மட்டுமே கந்தக டை ஆக்சை டு வெளியேறி இருப்பதாக தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்.*
*ஆனால் அதற்கே தூத்துக்குடியின் பலபகுதிகளில் மக்கள் சுவாசிக்க முடியாமல்,துன்பப்பட்டனர்.இருமல்,மூக்கடைப்பு,உடல் அரிப்பு ,கண்களில் எரிச்சல் பார்க்கமுடியாமலும்-சுவாசிக்க முடியாமலும்-பேசக்கூட முடியாமலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் புக அங்கு மருத்துவருக்கும் அதே தொல்லை.*
*இதை விட அபாயம்.செடிகள்,மரங்கள் கருகி விட்டது.ஸ்டெர்லைட் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மரங்கள் இலைகள் கருகி மொட்டையாகி விட்டன.*
*ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசின் சொல்படியோ அல்லது ஸ்டெர்லைட் ஆளை சொல்லிக்கொடுத்தபடியோ "ஒரு ஆலையில் இருந்து அனுமதித்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் கந்தக் தை ஆக்சைடு வாயு வெளியேறியுள்ளது.* *அதனால் மக்கள் சிறிது பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான். அதனால் மார்ச் 28-ம்(2013) தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.*👊😥
🔥😡👊🏭 *முதலில் வழக்கம் போல் தனது ஆலையில் இருந்து எந்த வாயு கசிவும் இல்லை என்ற ஸ்டெர்லைட் பின்னர் வெறு வழியில்லாமல் வாயை மூடி க்கொண்டுள்ளது.வாயு வெளியேறுவதற்கு முதல் நாள்தான் ஆலையில் பாஸ்பரிக் அமிலத்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி அதில் விழுந்து இறந்து போய் மக்கள் சாலை மறியல் செய்து ஓய்ந்திருந்தார்கள்.*😓😥
🔥🏭😡👊 *ஆலை என்ன விளக்கம் தரும்."நான்தான் குற்றம் செய்து விட்டேன்.நான்தான் வாயுவை திறந்து அல்லது கசிய விட்டேன் என்றா? "*
*கண்முன்னே பல ஆதாரங்கள் கிடைத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொள்கிறது.இதில் மட்டும் என்ன விதி விலக்கு இருக்கும்.விசாரணை என்ற பெயரில் இந்த குற்றம் பல நாட்கள் கழித்திடும்.வழக்கம் போல் மக்கள் இச்சம்பவத்தை தங்கள் அன்றாட பணிகளில் மறந்திடுவார்கள்.அப்போது பெயருக்கு ஒரு சின்ன கண்டிப்புடன் ஸ்டெர்லைட் விட்டு விடப்படும்.அதுவும் பத்திரிக்கைகளை வராமல் ஸ்டெர்லைட் பார்த்துக்கொள்ளும்.அவ்ளோதான்.*😡👊
🔥🏭😡👊 *அனுமதிக்கப்பட்ட கந்தக டை ஆக்சைடு வாயுவை வெளி யெற்றும் 80 மைக்ரோகிராமில் 15 கிராம் பாக்கியிலேயே இந்த பாதிப்பு என்றால்?*
*80 கிராமும் வெளியானால்???*👊😡
🏭😡👊 *2013 ஆம் ஆண்டே இந்த அவல நிலை என்றால் இப்போ 2018 ல் இருக்கோம் 5 வருடம் கழிந்தது,எவ்வளவு கழிவுகள் கசிந்திருக்கும்.... யோசிங்க...*😡👊
🏭😡👊 *இப்போது இந்த சம்பவத்தி னால் கொஞ்சம் ஓய்ந்திருந்த ஸ்டெர்லை எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாகியுள்ளனர்.*
🏭😡👊 *ஆனால் அது இந்த விலை போன அரசுகளை என்ன செய்யும்.?*
*அணில் அகர்வாலின் கவனிப்பை இந்த வாக்குகள் மட்டுமே போடும் மக்களால் தர இயலுமா?*⁉😡👊
🔥🏭😡👊 *_மராட்டிய மாநில இரத்தினபுரி மக்கள் இதே ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மண்ணில் இருந்து விரட்ட எடுத்த ஆயுதங்களை தமிழக மக்களும் எடுப்பதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாகுமா?_*⁉
*_அதைத்தான் ஸ்டெர்லைட் அணில் அகர்வாலும்,மத்திய-மாநில அரசுகளும் விரும்புகின்றனவா?_*⁉😡👊
🔥🏭😡👊 *2013 கு பிறகு போராட்டங்கள்,எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அதை அனைத்தையும் சமாளித்து தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்கி கொண்டே தான் இருந்தது..*😡👊
🔥🏭😡👊 *ஆனால் 2018 ம் ஆண்டின் தொடகத்திலையே ஸ்டெர்லைட் ஆலை விருவுபடுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின அதன் பிறகு மக்களும் மீண்டும் கொதித்தெல ஆரம்பித்தனர்.*💪💪
🔥🏭😡👊 *_ஆலையிலிருந்து வெளியாகும் விஷப் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மக்களுக்குச் சிறிய பாதிப்பு முதல் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அம்மக்கள் அஞ்சுகின்றனர்._*😓😥
*_பல வருடங்களாக நீடிக்கும் இந்தப்போராட்டம், தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் குமரெட்டியபுர கிராம மக்கள்._*
*_அதோடு, குழந்தைகளோடு போராட்டக் களத்திலும் இறங்கினர்._* *_உண்ணாவிரதம் இருந்து கைதாகி, பின் ஜாமினில் வெளிவந்தார்கள்._*
*_இந்தப் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, மார்ச் 24 . 2018 இல் முறையாக அனுமதி பெற்று பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிருந்தனர். ஆனால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையக் காரணமாகக் கூறி பேரணி செல்வதற்கு அனுமதி மறுத்துவிட்டது காவல்துறை. ஆனபோதும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் பெரும் அதிர்வலையை அரசியல் வட்டத்தில் கிளப்பியுள்ளது._*👊😡
🔥🏭😡👊 *_இந்நிலையில் லண்டனில் உள்ள தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகார்வாலின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கருத்துகளை அடங்கிய பதாகைகளை உயர்த்தியபடி, பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் ஆலையை மூடச் சொல்லி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்._*💪💪
🔥💪💪 *ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து தமிழகத்தின் உரிமைக்காக நடைபெறும் மிக பெரிய போராட்டம் இதுவாகவே இருக்கும்.*💪💪👍
🔥🏭💪 *தூத்துக்குடி மக்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றே அறவழியில் நடந்துகொண்டு இருக்கிறது.*💪🏭👍
🔥🏭💪 *லண்டனில் அனில் அகர்வாலின் வீடு முன்பே தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது இதில் தமிழர் பாரம்பரிய கலையான பறையடித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.*💪🏭👍
🔥🏭😱 *இதில் ஒரு அதிர்ச்சி என்னவென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் உலகம் முழுவதும் நடைபெற்றது ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு போராட்டம் தூத்துக்குடி மற்றும் லண்டனை தவிர வேறு எங்கும் நடைபெறவில்லை என்பதே.....*😰😨😓😥
🔥🏭💪 *_ஆனாலும் தூத்துக்குடியில் மட்டுமே 24 ம் தேதி இரவுக்குள் 75000 ம் பேருக்கு மேல் கூடி மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றினர்,பிறகு 25 ம் தேதி இதன் எண்ணிக்கை கூடி 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்...._*💪🏭👍😓
🔥🏭💪 *இந்த ஒரு லட்சம் பேர் ஏன் போராட்டம் பண்ணுறாங்க னு புரிந்துகொள்ளுங்கள் தமிழக மக்களே!!!*🏭💪👍
🔥🏭😡👊 *தூத்துக்குடி மாவட்ட பிரச்சனை தானே அவர்களே போராட்டம் செய்யட்டும் னு விட்டா,இது மத்திய மாநில அரசின் மிக பெரிய பலமா அமைந்திடும்...*
*இந்த போராட்ட மொத்த தமிழகத்தின் எழுச்சி போராட்டமாக அமைய வேண்டும்...*
*அதற்க்கு மொத்த தமிழக மக்களும் கள போராட்டத்தில் ஈடுபட வேண்டும்...*💪💪👍
🔥💪💪 *உலகமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல இந்த போராட்டத்தையும் கவனிக்க களம் காணுங்கள் நம் இலக்கை வெற்றி பெற செய்யுங்கள்..*
💪💪🔥
🔥🏭😡👊 *தூத்துக்குடி மக்கள் தினம் தினம் இந்த ஆலையால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள், தாயின் கருவறையை மட்டுமே பார்த்துவிட்டு இறந்த சிசுக்களின் எண்ணிக்கை எவ்வளவோ????*
*புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரோ???*
*இந்த நச்சு காற்றை சுவாசித்து,நஞ்சு நீரை குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனையோ???*👊😡😥😰
🔥😡👊😰 *சிந்தித்து பாருங்கள்,தமிழன் ஒரு இழிச்சவாயன் என்பதாலா இந்த தேவை இல்லா நிறுவனங்கள் நம் தமிழகத்திற்கு மட்டும் வந்தேறுகிறது???*😡👊😰
🔥😡👊😰 *தமிழன் மூடன் என்பதாலா இந்த அதிமுக அரசு தொடர்ந்து பல துரோக செயல்களில் ஈடுபட்டு வருகிறது???*😡👊😰
🔥😡👊 *தமிழன் எதிர்க்க மாட்டான் என்ற தைரியதாலா ஸ்டெர்லைட் ஆலை விரிவு பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது???*😡👊😰
🔥😡👊 *போராட்டங்களை எல்லாம் உதறி தள்ளி அவர்களுக்கு தேவையான பணத்திற்காக வேசி வேலையை தான் நம் தமிழக அரசு நமக்கு செய்கிறது....*😡👊
😡👊 *_உணருங்க மக்கா_*
😡👊🏭 *_கார்ப்பரேட் ஊடகம் என நாம சொல்லிக்கொண்டிருக்கும் இதே வேளையில் தான்,அதற்கமு தகுந்தாற் போலவே அனைத்து ஊடகங்களும் நடந்து கொண்டு இருக்கிறது_*😡👊
😡👊 *ஸ்ரீதேவி இறப்பிற்கு லைவ் டெலிக்காஸ்ட்,நிமிடத்திற்க்கி நிமிடம் செய்தி என ஒளிபரப்பிய ஊடகங்கள் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லையே!!!👊😡 தெரிகிறதா ஊடகங்கள் யாருக்கு வேலை செய்கிறார்கள் என்று!!!!*👊😡
😡👊🔥 *மக்களே இன்று உன்னை நம்பியும் என்னை நம்பியுமே இந்த போராட்டம் நடைபெறுகிறது💪👍 அரசை நம்பி அல்ல,ஊடகங்களை நம்பியும் அல்ல.*👎👎
🔥💪😡👊 *இது நம் உரிமை போராட்டம்,களம் காணுங்கள் கார்பரேட் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட செய்யுங்கள்...*💪😡👊
🔥😡👊💪 *இன்றும் விழிக்கவில்லை எனில் நாளை நம் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக தான் பிறப்பார்கள் நச்சு காற்றை சுவாசிப்பதால்...*😡👊😰
🔥💪😡👊 *வந்தாரை வாழ வைப்பது தமிழனின் குணம்👍,துரோகம் செய்பவனை அடியோடு பிடிங்கி எடுப்பது நம் மரபு...*😡👊💪
🔥💪💪 *எடுத்துடலாம் வாங்க!!!!!*👍
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *அருள்முருகஇன்பன்*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *Sp Vignesh and ஜெய்கணேஷ்*
🥈 *பிஸ்மி*
🥉 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன்*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@Sheikmom @VKR* 🥈 *@அ. கந்தன் @🙏think Positive🙏*
🥉 *@🌹ரவி💖கலை🌹 @santhakumar3936*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
*😕நம்முடைய ஜனநாயகம் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கிறதா?🤔*
*☹ஜனநாயகத்தின் நான்கு தூண்களான மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் போன்றவை சரியான வழியில் தான் இயங்கி கொண்டிருக்கிறதா?🤔*
*👉🏼மக்கள் பிரதிநிதிகள் : மக்களுக்காக, மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்ட எம்பி சசிகலா புஷ்பாவிற்கு இரண்டாவது திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது. தூத்துக்குடி எம்எல்ஏ திமுகவை சார்ந்தவங்க கீதா ஜீவன். பாவம் அவங்களுக்கு என்ன வேலையோ?🤔. இவங்க இருவரை மட்டும் குறை சொல்லவும் முடியாது. நாட்டுல முக்கால்வாசி எம்பி, எம்எல்ஏ என்ன பண்றாங்களோ அத தான் இவங்களும் பண்றாங்க. தூத்துக்குடில போராட்டம் நடக்குது தெரியுமானு கேட்டா, மெரினா போராட்டத்தை விடவா, நடந்தா நடந்துட்டு போகட்டும், அதுக்கு நாங்க என்ன பண்றதுனு கேட்பாங்க. ஆளுங்கட்சி சரியில்லைங்கனு சொல்லி எஸ்கேப் ஆகிடுவாங்க. ஓட்டு கேட்க மட்டும் மக்கள் கிட்ட வருவாங்க. நம்மளும் ஆராத்தி எடுத்து வரவேற்போம்.🤦🏼♂😞*
*👉🏼அரசு ஊழியர்கள் : இவங்க அப்பவே ஒழுங்கா இருந்திருந்தா, ஸ்டெர்லைட் ஆலையே இங்க வந்திருக்காது. பங்களா வீடு கட்டவும், பசங்களை கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கணும். அதுக்காக ரோட்ல பிச்சையெடுக்கவும் முடியாது. இதுபோல நாலு தொழிற்சாலைகளுக்கு கையெழுத்து போட்டா போதும். ஓஹோஹோனு போயிடலாம் என்ற எண்ணம். அவங்க குடும்பத்தை காப்பாத்த ஊர்ல இருக்கிற குடும்பத்தை அழிப்பாங்க. அவன் குடும்பமும் சேர்ந்து தான் அழியப் போகுதுங்கிறது அப்புறம்தான் அவனுக்கே புரியும்.😏*
*👉🏼நீதிமன்றங்கள் : முதல்ல அனுமதி கொடுப்பாங்களாம், அப்புறம் தடை போடுவாங்களாம், அப்புறம் பைன் போடுவாங்களாம். என்ன பண்றோம்னு அவங்களுக்கும் தெரியாது. மக்களுக்கும் புரியாது. பணம் இருந்தா போதும். எப்படி வேணாலும் தீர்ப்பை மாத்திக்கலாம்.😓*
*👉🏼ஊடகங்கள் : எத எத போடணும்னோ அதெல்லாம் போட மாட்டானுங்க. எத எத போடக் கூடாதோ அதெல்லாம் டைம்முக்கு கரெக்ட்டா போட்ருவானுங்க. மக்களுக்காக ஊடகமா? இல்ல அதுவும் ஒரு தொழிலா? வருமானம் எங்க வருதோ, அத தான் பாப்போங்களோ🤔.*
*😐இந்திய ஜனநாயக தூண்கள் எல்லாம் உடைஞ்சி போயி ரொம்ப நாளாச்சு.*
*🤝🏻💪🏼இனிமே மக்களுடைய ஒற்றுமை தான் எல்லாமே.*
*👉🏼💪🏼நீ, நான் சேர்ந்து நாமாகுவோம்🤙🏻. நம் மண்ணை நாமாகவே மீட்டெடுப்போம்💪🏼*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்*
*ஊதியமும் சூழ்ந்து செயல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
♨ *அறிந்துகொள்ளவும்*♨
*கொடிக்கு காய் கனமா?*
*ஏழைபேச்சு அம்பலம் ஏறாது*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.*
♨ *தெரிந்துகொள்ளவும்*♨
*கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்*
*ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை*
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
*உதயா யுவா ~ 9500764969*
*மணி மாதேஷ் ~ 8428073724*
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment