Monday, 26 March 2018

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பும்,தூத்துக்குடி மக்களின் அவல நிலையும்,மக்கள் போராட்ட நுணுக்கங்களும் ஒரு அலசல். பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :26.03.2018.* 
         🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

♨ *நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.*

💐 *-காந்திஜி*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🌟 *அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பும்,தூத்துக்குடி மக்களின் அவல நிலையும்,மக்கள் போராட்ட நுணுக்கங்களும் ஒரு அலசல்.*

🏭🔥😡😰🏭🔥😡😰🏭🔥😡

🔥 *பாகம்*🔥1⃣

😇 *_கலந்துரையாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம். 🙏நம் தமிழ் சொந்தங்கள் தினமும் வீட்டிலும், அலுவலகத்திலும் போராடுகிறார்களோ இல்லையோ தினமும் ஆங்காங்கே அரசுக்கு எதிராக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். போராட்டத்திலே தமிழர்களுடைய முக்கால்வாசி வாழ்க்கை அற்பணித்து விடுகிறார்கள். சரி தலைப்பிற்க்கு வருவோம். இன்றைய நவீன கால உலகில் மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு நம் அரசும் சில முயற்ச்சிகளை மேற்கொண்டது அது முடியாத பட்சத்தில் தனியாரை நாடுகிறது. இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று 🏭கார்ப்பரேட் நிறுவனங்களும் சுற்றுசூழல் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலை படாமல் தன்னுடைய லாபத்திற்காக பல்வேறு தொழிற்சாலைகளை ஏற்படுத்தினர். இதற்கு அரசும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர்._*🌇🏭

🏭🤜😰 *_இன்றைய நவீன சூழ்நிலையால் நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்ய அன்றாடம் அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தனியாரும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது. ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்? அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள். அவர்களின் நிம்மதியை கெடுத்த ஆலை.. ஸ்டெர்லைட்!_*🏭😰

🔥🏭😰 *_இந்த ஆலையை எதிர்த்து உண்மையிலேயே மக்களின் அச்சம் நியாயமானது தானா? மக்களின் எதிர்ப்புக்கு காரணம் இருக்கிறதா? அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற பல விசயங்களை அலசுவோம்.♻ ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்ததே தனிக்கதை. இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன._*🔥🏭

🔥 🏭 *_இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது. அதாவது, 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. காரணம் ஏன் என்னறால் ரத்தினகயின் பிரபலமான பொருள் என்னவென்றால் அல்போன்சா மாம்பழமாகும். இந்தியாவில் மாம்பழம் சீசன் வந்தாலே இந்த அல்போன்சா மாம்பழம் தான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த மாம்பழம் விளையும் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்க பட்டது. நாட்கள் செல்ல செல்ல விவசாய நிலங்கள் பாழைடைந்தது. அதாவது அல்போன்சா மாம்பலத்தில் சுவை குறைந்தது. அதில் விஷதன்மை அதிகமாக இருந்தது என்று வெளிநாட்டு நிறுவனங்கள் அதை நிராகரித்தது. காரணம் அல்போன்சா மாம்பழம் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட மாம்பழத்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். அதன் காரணம் என்னவென்று ஆராய்ந்த போது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு பொருட்கள் முறையாக பராமரிக்கபடாமல் அங்குள்ள மண்ணில் கொட்டபட்டது. இதனால் மண்ணின் இயற்க்கை தன்மை அழிந்தது மேலும் அங்குள்ள குடி நீரும் விஷதன்மையாக மாறியது._*😰😡

🏭😰 *_இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், 'இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்' என சமாளிக்க பார்த்தார். ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், 'ஆலையை அகற்ற வேண்டும்' என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது._*👍

🔥🏭 *_இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின.  இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம்_*😡

🔥🏭 *_துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது 'பை ப்ராடக்ட்' என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்._*👊

🔥🏭👊 *_அனில் அகர்வால் கணக்கு இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. பொது மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கி போராட்டத்தில் குதித்தன. 'மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை எங்களுக்கு தேவை இல்லை. இதை இந்த மண்ணில் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்று அரசியல் கட்சியினர் வேகம் காட்டினார்கள்._*☹

🔥🏭 *_இந்த கட்சிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அனில் அகர்வாலுக்கு தெரிந்து இருந்தது. வீர வசனம் பேசிய தலைவர்கள் அவரை சந்தித்த பிறகு மவுனம் காக்க தொடங்கினார்கள். ஆலைக்கு எதிராக தினமும் புதிய பெயர்களில் அமைப்புகள் முளைத்தன. உண்ணாவிரதம்,. ஆர்ப்பாட்டம் என ஸ்டெர்லைட்டை மிரட்டியவர்களை அழைத்து பேசியது, ஆலை நிர்வாகம். இதில் 'கவரப்பட்ட' சில கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் போராட்ட பந்தலை பிரித்துக் கொண்டு வீடுகளில் போய் முடங்கினார்கள்._*😰

🔥🏭 *_சில அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே மக்களுக்காக கடைசி வரை போராட்ட களத்தில் நின்றன. சுமார் இரண்டு வருடமாக சாதி, மதம், தொழில் வேறுபாடுகளை மறந்து எழுச்சியுடன் போராடிய மக்கள், 1996 சட்டமன்ற தேர்தலை துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டனர். அன்றைய மகளிர் அமைப்புகளும் உத்வேகத்துடன் இதில் ஈடுபட்டனர். மக்களின் இந்த முடிவு அரசியல் கட்சிகளை அதிர வைத்தது._*

🔥🏭 *_ஸ்டெர்லைட்டை முன்வைத்து தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து வைத்து இருந்தனர். ஆலை நிர்வாகமும் அரசியல் சூழலில் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தென் மாவட்டத்தில் சாதிக்கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து என வெடித்த கலவரம் குக்கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்பாவி மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன._*😡👊

🔥🏭 😡👊 *_விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து கொளுத்தபப்ட்டன. மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர் பலிகள் ஏற்பட்டன. எங்கும் பதற்றம் நிலவியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். இந்த மோதல் ஸ்டெர்லைட் போராட்டத்தை திசை திருப்பியது. அதுவரையிலும் போராட்ட களத்தில் அண்ணன் தம்பியாக நின்றவர்கள், சாதி மோதலுக்கு பின்னர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவே தயங்கினார்கள்._*😡👊😰

🔥🏭😡 *_ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. அதே சமயம் சாதிக்கூட்டங்கள் பலத்த ஆரவாரத்துடன் நடந்தன. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த மைதானங்களில் சாதிக் கூட்டங்கள் ஆரவாரமாக நடந்தன. மக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ல தொடங்கினார்கள். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முனை மழுங்கி போய் கிடந்தது._*

🔥🏭😡 *_இந்த சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்ட தமிழ் மாந்தன் தலைமையிலான 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்' சட்ட ரீதியிலான போராட்டத்தையும் கையில் எடுத்தது. இந்த இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் ம.தி.மு.க.வும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது._*👍

🔥🏭😡 *_பிறகு எவ்வாறு இந்த போராட்டம் மீண்டும் உயிர் பெற்றது என்று யோசிக்கிறீர்களா அதற்கான பதில் இதோ👇🏻_*

😓😥 *_கடந்த பிப்ரவரி 14 காதலர் தினம் அன்றைய தினம் அனைவரும் சிறப்பாக காதலர் தினத்தை கொண்டாடினர். முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர் என அனைத்து இணைய பக்கத்திலும் சிங்கிள், கமிட்டட்னு ஸ்டேடஸ் பறக்க விட்டனர். அன்றைய தினம் தான் தூத்துகுடியின் கருப்பு தினம் ஆரம்பித்தது. பிப்ரவரி 14 தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த 250 பேர் ஸ்டெர்லைட் ஆலை முன்பு போராடினர். சிறியவர்கள், பெரியவர்கள் மாணவ மாணவிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக போராடினர். அதை எந்த விபச்சார ஊடகமும் வெளிக்காட்டவில்லை. சில ஊடகங்கள் விளம்பரம் போல ஓரமாக போட்டுவிட்டு சென்றது. அன்று போராடிய அத்தனை பேரையும் காவலர்கள் வலுகட்டாயமாக அப்புறபடுத்தினர்._*😓😥

🏭🤜 *_ஒரு சிலர் இணையத்தில் கேட்டிருந்த கேள்வியை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன். சரியான பதில் வேண்டும்._*

🏭🤜 *_1) ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் உள்ளே வேலை செய்யும் 5000 தொழிலாளர்களின் நிலைமை???_*

🏭🤜 *_2) இந்தியாவில் காப்பர் ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் 40% வருவாய்கான தீர்வு?_*

🏭🤜 *_3) ஏன் மூட வேண்டும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் விதிமுறைகள்படி இயங்க வைக்கலாமே?_*

🤜 *_அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம்.💝_*

🏭🤜 *_1)ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்யும் அனைத்து தொழிளாலர்களும் குடும்ப வருமையின் இக்கட்டான சூழ்நிலையில் ஒப்பந்த தொழிளாரகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ளபடுகின்றனர். அவர்களுக்கான மருத்துவ சேவை எதும் அங்கு கிடையாது ஆஸ்துமா வந்தாலும் சரி அல்சர் வந்தாலும் சரி வேலை பார்த்துதான் ஆகனும். அந்த ஆலை முழுவதும் எப்போதும் சுவாசிக்க ஏற்ற காற்று இருப்பதில்லை. சம்பாதித்த பணத்தில் முக்கால்வாசி பின் வரும் காலங்களில் மருத்துவ செலவுக்கு போய்விடும். அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்._*🔥

🏭🤜 *_2) முதலில் சில விபரங்களை தருகிறேன் பிறகு இதற்கான பதிலை நீங்களே புரிந்து கொள்வீர்கள்._*🔥

🏭🤜 *_காப்பர் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் உலகின் மூன்றில் ஒரு பங்கு காப்பர் உற்பத்தி செய்யும் நாடு  சிலி. பெரு, அமெரிக்கா, கனடா, சீனா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா, போலந்து ஆகியவையும் முக்கிய உற்பத்தியாளர்கள்._*

🏭🤜 *_ஏற்றுமதி செய்யும் நாடுகள் சிலி, பெரு, ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், போலந்து, பெல்ஜியம், இந்தோனேஷியா, கனடா, பிரேசில், அமெரிக்கா, அர்ஜென்டீனா, மங்கோலியா._*

🏭🤜 *_இறக்குமதி செய்யும் நாடுகள் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா மற்றும் ஜெர்மனி._*

🏭🤜 *_உலக உற்பத்தியில் 4&6 சதவிகித காப்பர் இந்தியாவில் சுத்திகரிக்கப்படுகிறது. இதன் அளவு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன்; உலகத் தேவையில் 3&4% இந்தியாவின் தேவை; அதாவது, சுமார் 5.5 லட்சம் டன்கள். எனவே, காப்பரை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து இதற்குத் தேவையான மூலப் பொருளை இறக்குமதி செய்கிறது இந்தியா. இந்தியாவின் முக்கியமான காப்பர் சுத்திகரிப்பு நிறுவனங்களாக பிர்லா காப்பர், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ், ஹிந்துஸ்தான் காப்பர் ஆகியவை விழங்குகின்றன._*

🏭🤜 *_இப்போ இந்த இரண்டாவது கேள்விக்கு பதில் ஒரளவு புரிந்திருக்கும் நினைக்கிறேன். இந்தியாவில் சுத்திகரிப்புக்காக மட்டுமே உலக உற்பத்தியில் 4&6 சதவீதம் காப்பர் பயன்படுத்தபடுகிறது. ஏற்றுமதியில் கிடைக்கும் லாபத்தை இந்த காப்பர் சுத்திகரிப்பில் இருந்து வெளியாகும் கழிவுகளை அகற்ற இந்திய அரசாங்கம் எவ்வளவு செலவிடுகிறது என்று ஏன் இன்று வரை தெரியபடுத்தாமலே இருக்கிறது?.. இந்தியா ஒன்றும் குப்பை கூடம் இல்லை இதே சுத்திகரிப்பு ஆலையை மற்ற நாடுகள் ஏன் எற்றுகொள்ளவில்லை என்று தெரியுமா. அவ்வளவு ஏன் இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் இருக்கும் லண்டனில் ஏன் அனுமதிக்கவில்லை என்று தெரியுமா. அவர்கள் சுதாரித்துகொண்டனர். நம் அரசு லஞ்சம் வாங்கியது இதுவே சுற்றுசூழல் அழிவிற்கு மிக பெரிய காரணம், மக்களையும் சுற்றுசூழலையும் அழித்து லாபம் ஈட்டி என்ன செய்ய போகிறது._*

🏭🤜 *_3) சுற்றுசூழல் அமைச்சகம் விதிமுறை படி செயல்படுத்தலாமே ஏன் மூடவேண்டும் என்று கேட்க தோன்றினால் நாம் இன்னும் தன் அறிவின் ஒரு துளியை கூட பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். இத்தனை வருடமாக இயங்கிவரும் இந்த ஆலை சுற்றுசூழல் அமைச்சகத்தின் கண்காணிப்பில் இல்லாமல் இருந்ததா?? அப்படியானால் இழுத்து மூட வேண்டியது ஸ்டெர்லைட் ஆலையை அல்ல சுற்றுசூழல் அமைச்சகத்தை தான். இத்தனை வருடமாக கண்காணிக்கத சுற்றுசூழல் அமைச்சகம் இனி இந்த மாதிரியான தவறுகளை கண்காணிக்கும் என்று எதன் மூகாந்திரத்தை வைத்து நம்ப முடியும்._*😰😔

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...