Tuesday, 13 March 2018

பொங்கல் திருவிழாவில் நாம் பின்பற்றிக்கொண்டு இருப்பதும்,பின்பற்ற மறந்ததும் பற்றி ஓர் அலசல்....????

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :12.01.2018.*
         🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*பொங்கல் திருவிழாவில் நாம் பின்பற்றிக்கொண்டு இருப்பதும்,பின்பற்ற மறந்ததும் பற்றி ஓர் அலசல்....????*
🎑🌞🎋🎑🐂🎋🎑🌞🎑🎋🐂

    🎑🌾 _*பாகம்↔2⃣*_🎑🌾

🔆 *தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து,🤷🏻‍♀ வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை அறிகிறோம்.*🎑😇

🎑🔆 *தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.*🤗💐

🎑🔆 *பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள் - அதாவது தாத்தா-பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில் - ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டு, பொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும் காண முடிகிறது.*😇💐

🎑🙇🏻‍♀ *ஆனால், இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து, மைக்ரோ குடும்பங்கள் (கணவன் - மனைவி, ஒரு குழந்தை அல்லது இரண்டு) பெருகி விட்ட நிலையில், இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையை ஏதாவது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகையின் அருஞ்சிறப்பு தெரிய வரும்.*🤗💐

🎑🎋 *அதிலும், அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரகதியாகி விட்டன.🙇🏻‍♀ மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது எனலாம்.*🙇🏻‍♀

🎑🔆 _*அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும், காடு-கழனிகளும் மருகிக் கொண்டிருக்கின்றன.🤷🏻‍♀ தமிழகத்தில் சிறு நகரங்கள் தொடங்கி, பெருநகரங்கள் வரை தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கொடுத்தது போக எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தைத் திருநாளில் ஏற்போமாக...!!*_🎑😇💐

🎑😇💝 _*கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க மாட்டோம்...!!🙅🏻‍♀🙅🏻‍♀ என்ற உறுதியையும் ஏற்பதுடன்👍, முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோமாக...!!!*_💐😇

🙇🏻‍♀ *தற்போது பொங்கல் பானைகளுக்கு பதிலாக சில்வர் பாத்திரத்தில் பொங்கல் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.*

🙇🏻‍♀ *முதலில் வாசலில் வைத்து பொங்கல் கொண்டாடினார்கள். ஆனால் தற்போது  வீட்டினுள்ளே எல்லாம் நடக்கிறது.*

🙇🏻‍♀ *முதலில் விறகுகளில் பொங்கல் செய்தோம். ஆனால் தற்போது கேஸ், சிலிண்டர அடுப்புகளில் பொங்கல் செய்கின்றோம்.*

🙇🏻‍♀ *முன்னோர் காலத்தில் அனைவரும் சேர்ந்து சூரியனை பார்த்து வாசலில் பொங்கல் கொண்டாடினோம்*

🙇🏻‍♀ *ஆனால் தற்போது நாலடி சுவற்றுக்குள் பொங்கல் கொண்டாட வேண்டிய சூழ்நிலை*

🙇🏻‍♀ *போன வருடம் பொங்கலுக்கு விடுமுறை  கொடுப்பதில் கூட தடுமாற்றம் ஏற்பட்டது.*

😔 *இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்கள், காலம் மாறிப் போச்சி.🙆*

😔 *பொங்கல் பண்டிகையும் மாறுகின்றது.*

😔 *போக போக பொங்கல் பண்டிகை கூட மாறி விடுமோ?*

⚜ *அனைவரும் பழயதை எப்போதும் மறக்க கூடாது. இப்படி பழையதை மறந்து மறந்து திரிவதால் தான் மகன் தாயை மறக்கிறான். முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான்*😔

⚜ *அனைத்திற்குமே ஆரம்ப நிலை  பழைய வரலாறு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்* 👍

⚜ *வளர்ச்சி என்ற பாதையில் நல்வழிகளை மறந்து, தீயதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்*😔

👉 *ஓல்டு இஸ் கோல்ட்*👈

🎑 *அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*🎑💐😇

🎑💝😇 _*பொங்கட்டும் இந்த ஆண்டு பொங்கி வரும் பாலைப் போல்...!!!*_💐🌞

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🎑💐🎋 *இன்று பங்கு பெற்ற அனைவரும் சிறந்த பேச்சாளர்களே*😇💐

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
          *🤔கருத்து👍*

🎑😇 *தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல்பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள்திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.*💐🤗

🎑 *பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்குஇதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.*💐👍

🎑 *சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள்,குறிப்புகள் உள்ளன.*👍💐

🎑 *வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையைவிளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் தனிப் பெரும்திருநாளான பொங்கல், மதச் சார்பற்ற ஒரு பண்டிகை, தமிழ் இனத்தின் திருநாள்.*💐👍

🎑 *பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்பு, தமிழ் மாதங்களில் தலை மாதமான தை மாதத்தின் பிறப்பு. தைத் திங்களில்தொடங்கும் எதுவும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூண்றி விட்ட ஒன்று.😇👍 தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று...!!*💐👍

🎑 *தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது.* 💐👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சிறப்பொடு பூசனை செல்லாது வானம்*
*வறக்குமேல்* *வானோர்க்கும் ஈண்டு*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     
*வானமே பொய்த்து விடும்போது,* *அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🧐 *அறிந்துகொள்ளவும்*🧐

*சர்க்கரை என்றால் தித்திக்குமா?*

🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐

*சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?*

*சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்.*

🧐 *புரிந்துகொள்ளவும்*🧐

*ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை*

*பொங்களும் போச்சு, பொழுதும் போச்சு கரும்பை கடிக்கதான் ஆல் இல்லை.*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...