Tuesday, 13 March 2018

பொங்கல் திருவிழாவில் நாம் பின்பற்றிக்கொண்டு இருப்பதும்,பின்பற்ற மறந்ததும் பற்றி ஓர் அலசல்....????

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :12.01.2018.*
         🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.*

*~விவேகானந்தர்*

🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,*

*நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.*

💖💖💖💖💖💖💖💖💖💖💖

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*பொங்கல் திருவிழாவில் நாம் பின்பற்றிக்கொண்டு இருப்பதும்,பின்பற்ற மறந்ததும் பற்றி ஓர் அலசல்....????*
🎑🌞🎋🎑🐂🎋🎑🌞🎑🎋🐂

    🎑🌾 _*பாகம்↔1⃣*_🎑🌾

🎑 _*தை பிறந்தால் வழி பிறக்கும்*_

_*தரணியிலே ஒளி பிறக்கும்*_

_*தை மகளின் வருகையிலே*_

_*பரணி சொல்லும் வழி பிறக்கும்...!!!!*_

😇💐 *மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. “*💐😇

🎑 _*பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன.😇 நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது,😇அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, நமது குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கிறன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.*_🤗

🎑 _*இவை அனைத்துக்கும் அவசியத் தேவையாக இருந்து அவற்றைத் தடையின்றி இயக்கும்🌞 கதிரவ மூர்த்திக்கு 🙏நன்றி சொல்லும் விழாவாகவும் பொங்கல் பண்டிகை இருக்கிறது. வீடுகளில் சூரிய ஒளி வந்து நிறையும் முற்றங்களில் வைக்கப்படும் பொங்கல் படையலின் ஒவ்வொரு செயலிலும் கதிரவ வழிபாடு மறைந்திருக்கிறது.*_😇

🎑 _*மண்பாண்டங்களில் பொங்கல் வைக்கப்படுகிறது. அந்த மண்பாண்டம் என்பது மண்ணால் செய்யப்பட்டு, நெருப்பில் சுடப்படுவது. 🤷🏻‍♀மண் பானைகளின் உடம்பில் சுண்ணாம்பினால் சூரிய, சந்திர உருவங்கள் வரையப்படுகின்றன. சுண்ணாம்பு என்கிற பொருள் உள்ளுக்குள் நெருப்பு மிகுந்த பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த மண்பாண்டத்தை அடுப்பில் வைத்த பிறகு, அடுப்புக்கான நெருப்பு கற்பூரத்தால் ஏற்றப்படுகிறது.*_

🎑 _*பொங்கல் பானைகளின் கழுத்தில் சுற்றப்படும் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் ஆகியவை தாவரவியல்ரீதியில் வெப்பத்தை முக்கியக் கூறாகக்கொண்டவை. ஒன்று🔍👍, வெப்பம் மிகுந்ததால் விளைந்த தாவரம்.🤷🏻‍♀ இன்னொன்று வெப்பம் குறைந்ததால் விளைந்த தாவரம்.🤷🏻‍♀ 🌞 ‘கதிரவ மூர்த்தியே, எமக்கு நீ மிகுந்தாலும் நன்மை செய்கிறாய், குறைந்தாலும் நன்மை செய்கிறாய். உனக்கு எம் வந்தனங்கள்’🙏 என்பதைச் சொல்லாமல் சொல்வதே பொங்கல் பானைகளில் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் கட்டுவதன் காரணம்.*_🎑😇

🎑 *பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் கட்டப்படும் தோரணங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பூக்கள், தாவரங்களைக்கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம்.😇 பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பூக்களாக, பெரும்பாலான பகுதிகளில் அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பூக்களாக ஆவாரம் பூக்களும், சிறுபீழைப் பூக்களும் இருக்கின்றன. இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகளைப் போலவே இவ்விரு பூக்களும் வெப்பத்தைப் பெருக்கி, குறுக்கி, தனக்குள் பொதித்து வைத்திருப்பதால் கதிரவ வழிபாட்டில் முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றன.😇 பொங்கலின் அடையாளங்களாக இருக்கும் 🎑🎋கரும்பு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய், பச்சரிசி போன்றவையும் வெப்பத்தை முக்கிய உறுப்புகளாகக் கொண்டவைதாம்.*🤗

🎑 _*பொங்கல் என்பதற்கு `பொங்கி வழிதல்', `பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும்.*_🎑😇

🎑😇 _*பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஆனந்தக் குரலில் ஆரவாரமிட்டு குதூகலிக்கிறோம்.🤗 பொங்கல் பொங்குவது என்பதே வெப்பத்தின் மிகுதியால்தான். ‘கதிரவனே, உன்னுடைய வெப்பம் மிகுந்ததனால், பானையில் உள்ள இனிப்புப் பொங்கல் பொங்கி வழிகிறது.🤗 அதைப் போலவே எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்’ என்பதாகத்தான் ‘பொங்கலோ பொங்கல்’ என்ற குரலும் குலவைச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.*_🎑🤗💐

🎑😇 *மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.*🙏😇

🎑😇 *பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும்🙏 வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.*🙏💐

🎑😇 *அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, 🌞சூரியன்,🐄🐂 கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 🙏நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.*🎑😇

🎑🌞 *கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல் ஆறு மாதங்கள் _‘""உத்தராயணம்’"""_ என்றும்,🤷🏻‍♀ சாந்தத்தைப் பெறும் அடுத்த ஆறு மாதங்கள் """‘தட்சிணாயணம்’"" என்றும் அழைக்கப்படுகின்றன.👍 உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும் என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு.🔍👍 அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும், தட்சிணாயணம் முடியும் நாளும் பொங்கல் பண்டிகையே ஆகும்.*🎑😇

🌞 *கதிரவ மூர்த்திக்கு நம்முடைய கடந்த கால வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக நன்றி சொல்லவும்🙏, எதிர்கால வாழ்க்கைக்கான வேண்டுதல்களை முன்வைக்கவும், எல்லோருக்குமான நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டம் காரணம் அமைக்கிறது.*🤗💐

🎑🌾 *விளைந்த பயிரை அறுவடை செய்து தானியமாக்குவதற்கு தொழிலாளர்கள் உதவுகிறார்கள்.😇 பயிர் நடுவதற்கு ஏதுவாக உழவுக்கும், அறுவடைக்குப் பின் போரடிப்பதற்கும், விளைந்த தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் கால்நடைகள் பெரிதும் உதவுகின்றன.*😇👍

🎑😇 *எனவே தான் விவசாயத் தொழிலாளர்களை வீடுகளுக்கு அழைத்து, சூரியனுக்குப் படைத்த பொங்கல் உள்ளிட்டவற்றை அளித்து வயிறாரச் சாப்பிடச் செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான வேஷ்டி, துண்டு, சேலை உள்ளிட்ட துணிகளையும் வழங்கி கவுரவிக்கிறோம்.*😇💐🙏

🎑🙏 *துணி-மணிகளுடன் சிறிய தொகை ஒன்றை பொங்கல்படியாக அளிக்கும் வழக்கமும் உள்ளது.*💐😇

🎑😇 *பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 🙅🏻‍♀1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 👍2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது.👍🙏 சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு _★★★ புதியீடு★★★_ என்று பெயர் இருந்தது.🙏😇👍 அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.*🎑💐

🎑🤗 *பொங்கல் பண்டிகை மொத்தம் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.4 ஆம் நாள் காணும் பொங்கல்......*🎑🤗

💝 _*முதல் நாள் போகிப் பண்டிகை*_💝

       🎑😇 *தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.🤗 பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.🤗 வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.*👍😇💐

        🎑😇 *இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள்.*🤗 *பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய*
*காட்சியாகும்.பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர்.* *அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது.* *அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. 🤷🏻‍♀போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.*🤷🏻‍♀💐

     🧐 *போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.*🔍🤷🏻‍♀

💝 _*இரண்டாம் நாள் தைப்பொங்கல்*_💝

🎑 *தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.*🎑

      🎑 *தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர்.🤷🏻‍♀ மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். பலர் புத்தாடை வாங்குவர்.*🤗

       🎑 *பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.🤗 புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.*😇💐🎑

💝 _*மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்*_💝

          🐂🎑 *மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.🤗 மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.*🤗💐

🎑🐂 *அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.🤷🏻‍♀ கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள்.😊 மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள்.😊 கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.🤗 திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.*😇💐

      🎑🙏 *உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.😇 தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.🤗 தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.*🐂🎑😇

🎑😇 _*இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ★★★ஜல்லிக்கட்டு★★★ விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.*_🐂🤗👍

       🎑😇 *உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.🙏💐 பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.🧐 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.*🧐🤗🎑🐂

💝 _*நான்காம் நாள் காணும் பொங்கல்*_💝

      🎑😇 *காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். 🤗காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.🤗 உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.*🤗😇

       🤗👩🏻👱‍♀ *இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.*🤗

🎑🤗 *இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*😇💐

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :12.01.2018.*
         🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*பொங்கல் திருவிழாவில் நாம் பின்பற்றிக்கொண்டு இருப்பதும்,பின்பற்ற மறந்ததும் பற்றி ஓர் அலசல்....????*
🎑🌞🎋🎑🐂🎋🎑🌞🎑🎋🐂

    🎑🌾 _*பாகம்↔2⃣*_🎑🌾

🔆 *தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து,🤷🏻‍♀ வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை அறிகிறோம்.*🎑😇

🎑🔆 *தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.*🤗💐

🎑🔆 *பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள் - அதாவது தாத்தா-பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில் - ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டு, பொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும் காண முடிகிறது.*😇💐

🎑🙇🏻‍♀ *ஆனால், இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து, மைக்ரோ குடும்பங்கள் (கணவன் - மனைவி, ஒரு குழந்தை அல்லது இரண்டு) பெருகி விட்ட நிலையில், இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையை ஏதாவது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகையின் அருஞ்சிறப்பு தெரிய வரும்.*🤗💐

🎑🎋 *அதிலும், அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரகதியாகி விட்டன.🙇🏻‍♀ மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது எனலாம்.*🙇🏻‍♀

🎑🔆 _*அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும், காடு-கழனிகளும் மருகிக் கொண்டிருக்கின்றன.🤷🏻‍♀ தமிழகத்தில் சிறு நகரங்கள் தொடங்கி, பெருநகரங்கள் வரை தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கொடுத்தது போக எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தைத் திருநாளில் ஏற்போமாக...!!*_🎑😇💐

🎑😇💝 _*கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க மாட்டோம்...!!🙅🏻‍♀🙅🏻‍♀ என்ற உறுதியையும் ஏற்பதுடன்👍, முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோமாக...!!!*_💐😇

🙇🏻‍♀ *தற்போது பொங்கல் பானைகளுக்கு பதிலாக சில்வர் பாத்திரத்தில் பொங்கல் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.*

🙇🏻‍♀ *முதலில் வாசலில் வைத்து பொங்கல் கொண்டாடினார்கள். ஆனால் தற்போது  வீட்டினுள்ளே எல்லாம் நடக்கிறது.*

🙇🏻‍♀ *முதலில் விறகுகளில் பொங்கல் செய்தோம். ஆனால் தற்போது கேஸ், சிலிண்டர அடுப்புகளில் பொங்கல் செய்கின்றோம்.*

🙇🏻‍♀ *முன்னோர் காலத்தில் அனைவரும் சேர்ந்து சூரியனை பார்த்து வாசலில் பொங்கல் கொண்டாடினோம்*

🙇🏻‍♀ *ஆனால் தற்போது நாலடி சுவற்றுக்குள் பொங்கல் கொண்டாட வேண்டிய சூழ்நிலை*

🙇🏻‍♀ *போன வருடம் பொங்கலுக்கு விடுமுறை  கொடுப்பதில் கூட தடுமாற்றம் ஏற்பட்டது.*

😔 *இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்கள், காலம் மாறிப் போச்சி.🙆*

😔 *பொங்கல் பண்டிகையும் மாறுகின்றது.*

😔 *போக போக பொங்கல் பண்டிகை கூட மாறி விடுமோ?*

⚜ *அனைவரும் பழயதை எப்போதும் மறக்க கூடாது. இப்படி பழையதை மறந்து மறந்து திரிவதால் தான் மகன் தாயை மறக்கிறான். முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான்*😔

⚜ *அனைத்திற்குமே ஆரம்ப நிலை  பழைய வரலாறு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்* 👍

⚜ *வளர்ச்சி என்ற பாதையில் நல்வழிகளை மறந்து, தீயதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்*😔

👉 *ஓல்டு இஸ் கோல்ட்*👈

🎑 *அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*🎑💐😇

🎑💝😇 _*பொங்கட்டும் இந்த ஆண்டு பொங்கி வரும் பாலைப் போல்...!!!*_💐🌞

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🎑💐🎋 *இன்று பங்கு பெற்ற அனைவரும் சிறந்த பேச்சாளர்களே*😇💐

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
          *🤔கருத்து👍*

🎑😇 *தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல்பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள்திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.*💐🤗

🎑 *பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்குஇதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.*💐👍

🎑 *சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள்,குறிப்புகள் உள்ளன.*👍💐

🎑 *வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையைவிளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் தனிப் பெரும்திருநாளான பொங்கல், மதச் சார்பற்ற ஒரு பண்டிகை, தமிழ் இனத்தின் திருநாள்.*💐👍

🎑 *பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்பு, தமிழ் மாதங்களில் தலை மாதமான தை மாதத்தின் பிறப்பு. தைத் திங்களில்தொடங்கும் எதுவும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூண்றி விட்ட ஒன்று.😇👍 தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று...!!*💐👍

🎑 *தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது.* 💐👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சிறப்பொடு பூசனை செல்லாது வானம்*
*வறக்குமேல்* *வானோர்க்கும் ஈண்டு*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     
*வானமே பொய்த்து விடும்போது,* *அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🧐 *அறிந்துகொள்ளவும்*🧐

*சர்க்கரை என்றால் தித்திக்குமா?*

🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐

*சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?*

*சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்.*

🧐 *புரிந்துகொள்ளவும்*🧐

*ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை*

*பொங்களும் போச்சு, பொழுதும் போச்சு கரும்பை கடிக்கதான் ஆல் இல்லை.*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...