Wednesday, 9 August 2017

இந்தியாவில் மனித கழிவுகள், சாக்கடை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகள் அகற்ற இன்றும் மனிதர்களே ஈடுபடுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் தீர்வு என்ன ?*

🚧 *முடிவுரையில் குறிப்பிட்ட ஜாதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது... இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல... பண்படுத்த மட்டுமே... இதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல...🙏🏼🙏* 🚧

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭  
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
         🌹 *தேதி :09.07.2017.* 🌹                  🌷 *கிழமை : புதன்கிழமை* 🌷    
____________________________________

அறிவோம்
■■■■■■■■■■■■■■■■■■■■
*எந்த ஒரு மதம் சமத்துவம் , சுதந்திரம், சகோதரத்துவத்தை கற்றுக்கொடுக்கிறதோ அம்மதமே என் மதம்.*
- *அம்பேத்கார்*


★★★★★★★★★★★★★★★★★★★   
         👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖     ===================
*இந்தியாவில்  மனித கழிவுகள், சாக்கடை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகள் அகற்ற இன்றும் மனிதர்களே ஈடுபடுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் தீர்வு என்ன ?*

அட்மின் thought
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ *இவர்கள் தான் இதை செய்யவேண்டும்  என்று எண்ணாதே..!!*
*நம்மை நாமே சுத்தம் செய்ய தயங்காதே...!!*
*அசுத்ததை அப்புறப்படுத்துபவனே தூய்மையானவன்...!!அதை வேடிக்கை பார்த்து முகம் சுழிப்பவன் அசிங்கமானவனே..!!*

●○●○●○●○●○●○●○●○●○●○●○
💐💐💐💐💐💐💐

*பாகம் -1*

💐💐💐💐💐💐💐💐

*🤜🏼தீண்டாமை ஒரு பாவச்செயல்!🤛🏼*
*🤜🏼 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!🤛🏼* 
*🤜🏼தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!🤛🏼*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
  
  💁🏻‍♂💁🏻‍♂ *இந்தியா வல்லரசு கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த காலத்திலும் மனித கழிவுகளையும், சாக்கடையும் மனிதனே சுத்தம் செய்யும் அவல நிலை இன்னும் தொடருகிறது... இதைப்பற்றிய சில செய்தித் துளளிகளை முதலில் காண்போம்...* 👇🏼👇🏼

*Manual scavenging உடன் தொடர்புடைய சட்டங்கள்*


*🗣 1⃣ Employment of manual scavengers and construction of dry latrines prohibition act,1993.(மனிதர்களை மனித கழிவுகளை அகற்ற மற்றும் வெளியேறும் வசதி இல்லாத கழிவரைகள் கட்டுவதை தடை செய்யும் சட்டம்)*


*இந்த சட்டம் மனிதர்கள் மனித உபாதைகளை கையில் அள்ளுவதை தடை செய்கிறது.வெளியேற வசதி /வடிகால் வசதி இல்லாத கழிவரைகளை கட்டவோ பராமரிக்கவோ கூடாது ,மீறினால் ஒருவருடம் சிறை தண்டனையை வழங்க வழி வகுக்கிறது..*


  *🗣 2⃣ மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்யும் மற்றும் அவர்களை அத்தொழிலிருந்து மீட்டெடுக்கும் சட்டம்,2013 .*

_*⛔"1993 முதல் மனித கழிவு அகற்றும் பணியிலும், கழிவுநீர் கால்வாயிலும் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்திற்க்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்"⛔* என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..._ 

   *☹ இவ்வாறு இறந்து போன 1268 பேரில் 18 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது...😣*

*🤷🏻‍♂அனைத்து மாநில அரசுகளும், " எங்கள் மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பிரச்சினை இல்லவே இல்லை" என்றே சாதிக்கின்றன...🤷🏻‍♂*  
   *☹ஆனால் நாடெங்கும் 7,94,000 பேர் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது...🙊🙊*

*👨🏼‍🎓உயர் நீதிமன்றத்தில் சபாய் கர்மசாரி அந்தோலன் அமைப்பு தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:👨🏼‍🎓* 
   *👉🏼கடந்த 2014 ஜனவரி 1ம் தேதி முதல் 2017 மார்ச் 20ம் தேதி வரை சாக்கடை மற்றும் செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட சென்னை,  திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் பலியாகியுள்ளனர்...*     
     *👉🏼 கடந்த ஜூன் மாதம்  நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 363 துப்புரவு பணியாளர்கள் நகர்ப்புறங்களில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும் 27,659 வீடுகளில் பராமரிப்புக்கு ஏற்ற வகையில் இல்லாத கழிப்பறைகள் உள்ளன...* 
  *இந்த கழிப்பறைகளை சுமார் 1.49 லட்சம்  துப்புரவு பணியாளர்கள் இரவு நேரத்தில் சுத்தம் செய்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன...😥😥*

*_😥2014 மார்ச் 18- ரசாயன குழாயை சுத்தம் செய்த போது 7 தொழிலாளர்கள் உயிரழந்தனர்...😥_*

*கடந்த மார்ச் மாதம் 2017 ல் கடலூரில் 3 பேரும்,ஆந்திராவில் 2 பேர் மற்றும் பெங்களுரில் 7 பேர்  சாக்கடையை சுத்தம் செய்யும் போது  விசவாயு தாக்கி உயிரிழந்தனர்.*😭😭


*மனித கழிவுகளை அகற்ற மனிதர்களையே அதுவும் ஒரு குறிபிட்ட சமூகத்தையே ஈடுபடுத்திய வரலாறும் காரணமும் .*👇🏻👇🏻👇🏻


*📖பழங்காலத்துல ரிக் வேதப்படி சாதியை பிரிச்சாங்க. பாங்கிஸ் ன்ற சமூகத்தினர் ஒடுக்கப்பட்ட சாதி னு சொன்னாங்க. அப்ப இருந்த டாய்லெட் சிஸ்டம் Dry toilet System. கழிவு வெளியேற வசதி இல்ல. வடிகால் இல்ல. அப்ப அந்த கழிவுகளை அப்புறபடுத்த இந்த சாதியை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துனாங்க. வெறும் கையோட தினமும் மனித கழிவுகள அள்ள வச்சாங்க. வராதவங்கள மெரட்டி பயமுறுத்துனாங்க.*😡😡

*அந்த சமூகத்தினர் மனிதகழிவுகளை அகற்றவும் தெருக்கள சுத்தம் செய்யவுமே பொறந்தவங்க மாதிரி பாவனை செய்யப்பட்டது.*😩😩

*சமூகத்துல அவங்களுக்கு அந்தஸ்த்து, மரியாதை  பறிக்கப்பட்டது.*😭😭

*பிரிட்டிஸ் ஆட்சி செஞ்சப்ப கூட. பிரிட்டீஸ் ராணுவம் தொழில் கூடம் பப்ளிக் டாய்லெட் எல்லத்துக்குமே அந்த சமூகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்துனாங்க..*😭😭

*நாளடைவில் அதுவே அவங்க தொழிலா நெனச்சாங்க.*😭😭


*பிற்காலத்தில் கழிவரை வெளியேற வசதிகள் உள்ள கழிப்பிடம் கட்டின பின்னாடி கூட பப்ளிக் டாய்லெட் ல அடைப்பு,சாக்கடை வெளியேறும் குழாய்கள் அடைப்பு,குப்பை அள்ளுதல் எல்லாத்துக்கும் கட்டாய படுத்தி ஈடுபடுத்துனாங்க.*😩😩

*இப்பவும் அந்த சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு,இரயில் நிலையம், பப்ளிக் டாய்லெட் ல லாம் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துற கேடுகெட்ட சமூதாயம் இது. இந்த சகிச்சிக்க முடியாத செயலை தடை செஞ்சும் இந்தியா ல அரசாங்கம் கான்ட்ரேக்ட் ஆட்கள் மூலமா  செஞ்சிட்டு தான் இருக்காங்க..*😣

*காரணங்கள்*😤😤

1. *போதுமான விழிப்புணர்வு இல்ல அந்தசமூகத்தினருக்கு.*😩😩
2.அன்றாட வயித்துப்பிழைப்புக்கு வேற வழி இல்லாததால், 😩😩
3. *இயந்திரங்களை பபயன்படுத்த  இயக்க போதுமான தொழில்நுட்பம் கண்டு பிடிக்கல. அப்படியே கண்டு பிடிச்சாலும் அத வச்சி ஆபரேட் பண்ண காசு தரணும்.*🤦‍♂😣😣
4. *இந்த சமூகத்து மக்கள் எந்த வேலைக்கு கூப்டாலும் வாருவாங்கனு நெனக்கிற காண்ட்ரக்டர்ஸ்.*🙄🙄
5. *நம்ம சாதில பொறந்தா எந்த வேலையா இருந்தாலும் செய்யணும், எந்த வேலைக்கு போனாலும் தான் கேவலமா பாப்பாங்க அதுக்கு இதயே செஞ்சிட்டு போயிராம் லாம்னு நினைக்குற  மைன்ட் செட்.*🤦‍♂🤦‍♂
6. *அதிக காசு தரன்னு காண்ட்ரக்டர் சொன்னத ஏமாந்து போய் மாட்டிக்கிற அப்பாவித்தனம். வேலை செஞ்சா தான் காசு தருவன்னு சொன்னா செஞ்சி தான ஆகணும்*.😩😩
7. *அரசியல்வாதி களின் அலட்சியப்போக்கு ஒரு பக்கம்.என்னதான் மத்திய அரசாங்கம் Manual scavenging தடை பன்னனும்னு சட்டம் போட்டாலும் அத ஃபாலோ பன்னாம இருக்காங்கநம்ம மாநில அரசு.அப்படி ஒரு சட்டம் இருக்கான்னு கூட தெரியாது.அதுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் கூட எடுக்கல,*..🤦‍♀🤦‍♂
8. *தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் துறை வடிகால் வேலைய தனியார் கான்ட்ரேக்டர்ஸ் கிட்ட குடுக்குறாங்க. அவங்க தான் ஆளுங்ள பிடிச்சி தேவபட்டா மிரட்டி கூட இந்த மாரி வேலைல ஈடுபட வக்கிறாங்க*.😡😡
9. *தமிழ்நாட்ல நெறய சுகாதார ஆய்வாளர் காலியிடம் இருக்கு. கார்ப்ரேசன் முனிசிபால்ட்டி வேலைய கவனிக்க இயந்திரம் பயன்படுத்தாம வேற வழி இல்லாம குறிபிட்ட சமூகத்த இந்த வேல பாக்க வக்கிறாங்க*..😡😡.....
 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭  
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
         🌹 *தேதி :09.07.2017.* 🌹                  🌷 *கிழமை : புதன்கிழமை* 🌷    
____________________________________

💐💐💐💐💐💐💐

*பாகம் -2*

💐💐💐💐💐💐💐💐

⛔ *தீர்வுகள் என்னென்ன???*❓

🔴 *இவர்களின் வேலை முழு அரசுடைமையாக்கப்பட வேண்டும்....*

♨ *குறைந்த பட்சம் இவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவையாவது முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.*

🔴 *இவர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15000 to 20000ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும்..*

🚮 *இதை ஒரு இனத்தை சார்ந்தவர் மட்டுமே செய்ய அரசாங்கம் ஊக்குவிக்க கூடாது...*

🚮 *முடிந்த அளவு மெசின் மூலம் அகற்றும் முறையை கையாள வேண்டும்..*

🚮 *முடியவே முடியாத பட்சத்திற்கு மட்டும் மனிதர்களை பயன்படுத்துவதென்பது இன்றியமையாதது.. இருப்பினும் அவர்களின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.*

🚮 *அனைத்து வகையான பாதுகாப்பு உபகரனங்களும் அணிந்த பிறகே வேலையில் ஈடுபடுத்த பட வேண்டும்...*

🚮 *இதை ஆய்வுக்காக வீடியோவாக பதிவு செய்து  வைக்க வேண்டும்.*

👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦 *மக்களாகிய நாம் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது... உதவியைவிட உபத்திரம செய்யாமல் இருப்பதே மேல்.வீட்டுக் கழிவைக் கொண்டு எவ்வாறு செடி வளர்ப்பது...*👍

😱 _2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி நாடாக மாறும்' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம்._

🚽 _குளம், குட்டைகள், ஆறுகளை_ _ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும்,_ _தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால்,கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்._ 

🚽 _அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத் தோட்டத்துக்குப் பாசனம் செய்ய முடியும்.  இயற்கையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் உடையவர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர்._ _அதனாலதான் வீட்டுத் தோட்டம் போட்டு பராமரிக்கும் முறையில் நம்மால் முடிந்த உதவியை இது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு செய்யலாம்..._
_நாமும் பயன் பெறலாம். தோட்டத்துக்கு வீட்டுக் கழிவுகளையே உரமாக்கிவிட முடியும். அதே போல் வீட்டில் எந்தக் கழிவு நீரையும் வெளிய விடாமல் அதையும் தோட்டத்துக்கே பாய்ச்சிடலாம்._

🏟 *செப்டிக் டேங்க் கிளீன் செய்யத் தேவையில்லை!*🙅🏻‍♂

🚽 _'அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை வெச்சு மண்புழு உரம் தயாரிச்சு பயன்படுத்திக் கொள்ளலாம். அதேமாதிரி தென்னைமரத்தின் அடிப்பகுதியைச் சுத்தி தேங்காய் நாரை வரிசையாக அடுக்கினால் தென்னைக்கு எப்பவுமே ஈரப்பதம் கிடைச்சுட்டே இருக்கும். 'செப்டிக் டேங்க்' கழிவு நீரை செடிகளுக்குப் பாய்ச்சினா செடிகள் கறுத்துடும், கிருமிகள் உருவாகும்னு சொல்வாங்க._

🚽 _*ஆனால் வீட்டு செப்டிக் டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்'ங்கிற பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விட்டுவிடு்ம் போது இந்த பாக்டீரியா, மலத்தை சாப்பிட்டு விடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தும்போது, கழிவறையை சுத்தம் செய்ய பினாயிலை பயன்படுத்துனா பாக்டீரியாக்கள் செத்துடும். அதே நேரத்துல ஆரஞ்சு, எலுமிசைச் பழத்தோல்களை காய வெச்சு அரைச்சு அது மூலமா கழிவறையை சுத்தப்படுத்தலாம்.*_

👇🏼மனித கழிவுகளை, சாக்கடையை மனித தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை குறைக்க சில வழிகள்...👇🏼*

   _*💁🏻‍♂தங்கள் வீட்டுக்கழிப்பறையில் கூட தேவையில்லாத குப்பைகளை தவறவிடாதீங்க..* எ.கா சோப் கவர், பிளாஸ்டிக் கவர், தலைமுடி.._

  *💁🏻‍♂ திறந்தவெளி அசுத்தம் செய்யாதீங்க..*

  *💁🏻‍♂ கண்ட இடங்களில் குப்பை போடாம, குப்பை தொட்டி பயன்படுத்துங்க..*

  *💁🏻‍♂பொது கழிப்பறையை வீட்டு கழிப்பறை மாதிரி நெனச்சு பயன்படுத்துங்க..*

  *💁🏻‍♂தங்களது கழிப்பறை யை தாங்களே சுத்தம் பண்ணுங்க..* 

🏛 *அரசுக்கு சில வேண்டுகோள்...*🏛

   👉🏼 *இந்த தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை உய்த்துங்க..*
  👉🏼 *இந்த பணியில் பணி புரிபவர்கள் விஷவாயு தாக்கி இறப்பவர்கள் பலர்.. அதற்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க முயற்சி பண்ணுங்க..*
   👉🏼 *தேவையான பாதுகாப்பு கொடுங்க..*

 👉🏼 *கை உறை, மாஸ்க் , போன்ற பாதுகாப்பு பொருள்கள் கொடுங்கள்...*

இந்த தொழிலாளிஐளுக்காக சில வரி பாடல்...
   *_🎵🎵 சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு..._*
  _நாலு நாளு லீவு போட்டா நாரிப்போகும் ஊரு..._🎵🎵

 _🎵🎵 எந்த தொழில் செய்தால் என்ன,,, செய்யும் தொழில் தெய்வம் என்று *பட்டுக்கோட்டை* பாட்டில் சொன்னாரே..._🎵🎵

ரிப்பீட்டேஏஏ..😎😎.

🚧  *செய்யும் தொழிலே தெய்வம்..* 🚧

  *எந்த தொழில் செய்தாலும் அதை கடமை உணர்வோடும், மரியாதையுடனும், பக்குவமாக செய்பவர்கள் நம் தமிழர்கள்.. அதுவும் சிறப்பு வாய்ந்தவர்கள் இது மாதிரியான சிறுதொழிலாளர்கள்..*
  
  _மாட்டு சாணத்தை காலில் மிதித்துவிட்டாலே, ஏதோ காலில் ஆசிட் அமிலம் பட்டதுபோல் துடித்து போகிறோம் நம்மில் பலர்.._   *_அப்படி இருக்கையில் நம் கழிவுகளை, குப்பைகளை சுத்தம் செய்யும் இந்த தொழிலாளியும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று எண்ண நம் மனம் ஏற்பதில்லை.._*

  _🤜🏼நீங்கள் இந்த தொழிலாளிகளை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டாம்... *மனிதர்களாக பார்ப்போம்...🤛🏼*_

*நாகரீகம் என்ற பெயரில் நாசமாய் அழிக்கும் நாடு நம் நாடு.. மனிதனை மனிதனாக பார்க்காது நடந்துகொள்ளும் நம் நாட்டில் சமூக நீதியை எதிர்பார்ப்பது என்பது முடியாதது...* 😏😏

_இந்த வருடத்தில் 27 பேர் இறந்துள்ளனர் நம் நாட்டில்...😭😭_

*உணவுக்காக தானே இந்த வேலையை செய்கிறோம், இந்த வேலை செய்து அதில் சாப்பிட்டு உயிர் வாழ்வதை விட பசியில் உயிர் இழந்தாலும் பரவாயில்லை 😏😏 என இந்த சகோதரர்கள் நினைத்தால் நம் நிலை என்ன ஆகும்???* 😠😠
 
  கொஞ்சம் யோசிங்க....👊🏼👊🏼

இந்த தொழிலை செய்யும் சகோதரர்களே.....🤝🤝
   *☹நீங்கள் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும்.. நம்முடைய கனவுகளை , லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னார்...*

   *🤷🏻‍♂ ஆனால் இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் அம்பேத்கார் வருவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்...🤷🏻‍♂*

*கடமைையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.*🤷‍♂🤷‍♂

*கை ரிக்சா, கைவண்டி போன்ற நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாத தொழில்களை ஒழித்துக் கட்டிய அரசும் சமூகமும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே 😡 சுமத்தப்பட்டுள்ள இந்த அடிமைத் தொழிலை இன்னமும் ஒழிக்காமல் இருப்பதன் காரணம் வெளிப்படையானது, அரசாங்கத்திலும் ஊறிப்போயுள்ள இந்த ஆதிக்க சாதிப் புத்தி.*😤😡


*உன்னத சேவை செய்யும் இவர்களுக்கு ஊதியமோ 100 , 200 உன்னை அழிக்கும் அரசியல்வாதிகளுக்கோ 1.05லட்சம்..! அடேய் நீயும்  மனிதன் தான்  இவர்களும் மனிதர்கள் தான்... உன் மனைவி தொடுவாலா உனது மலத்தை.*.?😣😣

😭😭😭 *_ஒடுக்கப்பட்ட தமிழனின் ஓலக்குரல்_😭😭😭:*

🙏 _ஐயா ஒரு நிமிசம் !!!  நாங்க மனிதனாக பிறந்ததை தவிர வேறென்ன பாவம் செஞ்சோம்?_

😓 _நாய் போற பாதையிலே நாங்க போனா தீட்டுனு சொன்னிங்களே... நாயை விட கேவலமா ஐயா.. நாங்க நாயை விட கேவலமா??_😭😭😭

😓 _ஊருக்குள்ள வந்தா பாவம் வந்து சேருமின்னு தீண்டாமை சுவரொன்னு கட்டினியலே ஐயா.. இப்படி ஒரு இழி பிறவி எங்களுக்கு தேவை தானா ஐயா???_😭😭😭

😓 _செருப்பு காலோட போவாத, தோள்ல துண்டு போடாதனு சொன்னியலே ஐயா... உங்களுக்கு செருப்பாக உழைச்சத விட வேறென்ன பாவம் செஞ்சோம் ஐயா???_😭😭😭

😓 _காப்பி, டீ குவளை கூட குடுக்காம எங்களுக்கு கொட்டாங்குச்சியில் குடுத்தியலே ஐயா... உங்க வீட்டு மாடு கூட அலுமினிய பாத்திரத்தில் கஞ்சி குடிச்சத பாத்து போய் வெம்பி நின்னேன் ஐயா..!!!_😭😭😭

😓 _என் நண்பன் வீட்டுக்கு போகும் போது " அவனலாம் ஏன் டா வீட்டுக்கு கூப்பிட்டு வர" அவன் அம்மா கேட்டு முடிக்கையிலே பாதி தொண்டை போன தண்ணி இறங்காம திணறி நிக்க... "நீயெல்லாம ஏன் டா இன்னும் உயிரோட இருக்க"னு மனசாட்சி கேக்குதுங்க ஐயா!!! என் மனசாட்சி கேக்குதுங்க ஐயா!!!_😭😭😭

😓 _என் வீட்டு பெண் புள்ள நல்ல சட்ட போட்டு போனா பறைச்சி போறா பார்ரா... பறைச்சி போறா பார்ரானு... அவ காதுபட சொல்லும் போது.. கூனி குறுகி போய் கதறி வந்து அழுத கதை தெரியுமா ஐயா??? உங்களுக்கு தெரியுமா ஐயா???_😭😭😭

😓 _சாதிவிட்டு சாதிமாறி காதலிச்சா... அவன் மேல் சாதிகாரனுன்னா அவன நல்லவனா தூக்கி கொண்டாடுறிங்க... அத நான் செஞ்சா சாதி புத்திய காட்டிட்டானு என்ன பந்தாடுறிங்க..!_😔😔😔

😭 _*என்ன படச்ச கடவுள் தான் சொன்னான கீழ்சாதினு என்ன???* *அப்படி படச்சா நிஜமா அவன் கடவுள் தானா என்ன???*_😭😭😭

😓 _என் புள்ளையும் படிப்பான், நாளைக்கு நல்ல வேளைக்கு போவான்... சாக்கடையென்ன, மலமென்ன உயிர கூட குடுத்து அவன தூக்கி நிறுத்துவனு என் பொஞ்சாதிக்கு செஞ்சிருக்கேன் சத்தியம்... குட்ட குட்ட குனிஞ்ச நாங்க ஒரே முட்டா எழும்புவோம் நிச்சயம்... அது நிச்சயம்..._😭😭😭

🙏 _*ஐயா எங்களுக்கு Cash less இந்தியா வேண்டாம்...*_
_*Caste less இந்தியாவ குடுங்க.. ஐயா Caste less இந்தியாவ குடுங்க*_😭😭😭

😡 *ஒரு மனிதனின் கழிவை இன்னொரு மனிதன் அள்ளிக்கொண்டிருக்கும் என் நாட்டிற்க்கு என்ன ..........க்கு வல்லரசு கனவு..? தூக்கி கடாசிட்டு மனசன மனுசனா பாக்க பாடம் எடுத்த பொறவு காணலாம் வல்லரசு கனவு...*😔😔😔..


🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

🥇@⁨devendranhp⁩
🥈 மஹாராஜன்
🥉 Jaiganesh & பாரத தமிழன்

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                   
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தன் வேலையை தானே செய்தால் பிறரை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.. நீங்க சாப்ட்ட தட்ட நீங்க கழுவுனா அப்பறம் எதுக்கு வேலைக்காரங்க..*

  *நீ திருந்து ஊர் திருந்தும்...*

  *ஊர் திருந்தினால் மாவட்டம் திருந்தும்..*

  *மாவட்டம் திருந்தனால் மாநிலம் திருந்தும்...*

*உங்க வீட்டு பாத்ரூம நீங்க சரியா பயன்படுத்துனா அந்த தொழிலுக்கு ஆளே தேவையில்லை... கழிவு சேமிப்பு டேங்க்ல இருந்து கழிவுகள் லாரி(லாரி பம்ப்) மூலமா வெளியேற்றப்படும்...*

🤜🏼 *ஏற்பட்ட அடைப்பை எடுப்பதற்கு ஆள் தேடுவதை விட, அடைப்பே ஏற்படாது செயல்பட்டால் மனிதனை மனித கழிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்த தேவையில்லை...* 🤛🏼
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள்: 📜_*

*நகையுள்ளும் இன்னா நிகழ்ச்சி பகையுள்ளும்*
*பண்புள பாடறிவார் மாட்டு*
.◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம்: 📜_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்.. பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் இருக்கும்.*
  
*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆ 
*😠தெரிந்து மிதித்தாலும்........ 😠தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...😭😭*
...d 

 *அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை.. 🤷🏻‍♂ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.* 🙊🦊

💎💎💎💎💎💎💎💎💎💎


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

👨🏻‍💻 *நான் மகான் அல்ல*
+6598648093

👨‍💻 *நிருபன் கதிர்*
+91 7358614182
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...