🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :10.08.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
😇 *" இறைவன் நம்மை மூளையுடனும் சிந்திக்கும் திறனுடனும் படைத்திருக்கிறான்*
😇 *எனவே சிந்திக்கும் திறனையும் ஆராய்ந்து உணரும் வலிமையும் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.*👍
🌱 *Dr.A.P.J.அப்துலகலாம் .*💐🌳
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*நம் நாட்டில் நல்லவனாக நடிப்பதை விட😎,*
*வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம்😥.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*உணவுபாதுகாப்பு சட்டத்தால் தமிழக மக்களின் நிலை பற்றிய ஓர் அலசல்:*
🌾🍚🎍🍚🌾🍚🎍🍚🌾🍚🎍
🏛 *அரசாங்கத்தால் இயற்றப்படும் பல சட்டங்கள் மக்களுக்காக என்று ஆரம்பிக்கின்றனர் தடபுடலாக. ஆனால் அத்திட்டத்தினால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் நன்மைகளுக்கு அளவேயில்லை.*
🍚 *பல மாநிலங்ள் மக்களுக்கு இலவச உணவு கொடுத்துக்கொண்டிருக்கும் போது உணவுப்பாதுகாப்புச் சட்டம் யாருக்காக.*
🍚 *உணவுப் பாதுகாப்பு சட்டம் யாருக்காக மக்களுக்காகவா அல்லது மக்களை மாக்களாக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்ரேட் முதலைகளுக்காகவா வாங்க பார்ப்போம்.*
🌾🏛🎍🏛🌾🏛🎍🏛🌾🏛🎍
🍚 *உணவுபாதுகாப்புச் சட்டம்:*⚠
👨🏻🍳 _*அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில், உணவு பாதுகாப்புசட்டம், காங்கிரஸ் தலைமை யிலான, ஐ.மு., கூட்டணி அரசால், 2013ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, வறுமை கோட்டுக்கு கீழ், வறுமை கோட்டுக்கு மேல் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பயனாளிகளுக்கும், மாதத்துக்கு, 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ, ஒன்று முதல், மூன்று ரூபாய் விலையில் வழங்கப்படும்.*_
🌍 *இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐநா அறிக்கை:* 📃
🌍 *இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் தோராயமாக 23 கோடிக்கும் அதிகமானோர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழும் மரணங்களில் 33% பெரியவர்களும், 50% குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றனர். மேலும், 6 கோடி குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்சியின்றியும், 2.5 கோடி குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றியும், 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றியும் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது, 'வல்லரசு' இந்தியாவின் நிலை ஆப்பிரிக்க கண்டத்தைவிட மிகவும் மோசம்.*
🌍 *ஏகாதிபத்திய நாடுகளால் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களும் உணவு தானியங்களுக்காக வழங்கப்படும் மானியங்களைக் குறைப்பது, ரேசன் கடைகளை நீக்குவது உள்ளிட்டவைகளை நோக்கமாக கொண்டிருக்கின்றன.*
🏛 *இந்த அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தான் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, *ஐநா அறிக்கையை காரணமாக வைத்து நாட்டில் மக்கள் உணவுக்கு திண்டாடுகிறார்கள் எனவே அவர்களுக்கு உதவுகிறோம் என்று கூறிக்கொண்டு, வறுமைக்கோட்டை குறைத்து மதிப்பீடு செய்து கோடிக்கணக்கான மக்களை இலக்குக்கு வெளியே தள்ளிவிட்டு, மானியங்களை, ரேசன் கடைகளை ரத்து செய்யும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தை உருவாக்கி விட்டு மக்கள் எதிர்த்துவிடக் கூடாது என்பதற்காக உணவுப் பாதுகாப்பு என்று பெயரையும் வைத்திருக்கிறது அரசு.*
🌾🏛🎍🏛🌾🏛🎍🏛🌾🏛🎍
🤜 *உணவுப்பாதுகாப்பு சட்ட வரம்புகள்:*🤛
🤜 *தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உணவு வழங்கல் திட்டங்கள் அனைத்தும் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது நீக்கப்பட்டுவிடும்.*
🤜 *திட்டக் கமிசனால் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். என்று கணக்கிடப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் உணவுப் பாதுகாப்பை வழங்கும்.*
🤜 *நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் போன்று தீவிரவாதத்தால், பாதிக்கப்பட்ட அதாவது அரசை எதிர்க்கும் பகுதியிலிருக்கும் மக்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.*
🤜 *பொருளாதார நெருக்கடியில் அரசு இருக்கும் போது இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படும்.*
🌾🏛🎍🏛🌾🏛🎍🏛🌾🏛🎍
🏛 *இத்திட்டம் செய்யப்போவது என்ன?*🤙❓
💁♂ *வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்கள்வறுமைக்கோட்டுக்க நிர்ணயிக்கப்பட்ட அளவு கண்டறியப்பட்டு அக்குடும்பங்களுக்கு மாதம் தோறும் 25 கிலோ அரிசியோ, கோதுமையோ சலுகை விலையில் வழங்கப்படும்.*
💁 *இதற்கான செயல் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்து தீட்ட வேண்டும்.*
💁♂ *இதை உறுதிப்படுத்துவது குறித்தும், நிறைவேற்றத் தவறுபவர்களை தண்டிப்பது குறித்தும் வரைவுகள் ஏற்படுத்தப்படும்.*
💁 *உணவுக்குப் பதிலாக பணமாக கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.*
🌾🏛🎍🏛🌾🏛🎍🏛🌾🏛🎍
😶 *மறைக்கப்பட்ட உண்மை:*😶
🤦♂ *அரசு 25 கிலோவுக்கு பதில் பணம் கொடுப்பது குறித்து ஆலோசிப்பது மக்களுக்கு உணவு வழங்கலில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக அல்ல. இதன்பின்னே பெரும் சதித்திட்டமே மறைந்து கிடக்கிறது.*
🤦♀ *ரேசன் கடைகள் மூலம் அரிசியோ கோதுமையோ மக்களுக்கு வழங்க வேண்டுமென்றால் விவசாயிகளிடமிருந்து அரசு பெருமளவில் கொள்முதல் செய்ய வேண்டும்.*
🤦♂ *ஆனால் பல ஆண்டுகளாக அரசு நேரடியாக கொள்முதல் செய்வதிலிருந்து படிப்படியாக விலகி வருகிறது. மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருப்பதோடு, அவ்வாறு கொள்முதல் செய்வதற்கு வசதியாக கடைக்கோடி கிராமம் வரை சாலை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது.*
🤦♀ *இந்த நிலையில் உணவுக்குப் பதிலாக பணமாக கொடுப்பது என்பது கொள்முதலை முற்றாக கைவிடுவதும், ரேசன் கடைகளை மூடுவதுமே அரசின் நோக்கம் என்பதின் வெளிப்பாடு தான்.*
🌾🏛🎍🏛🌾🏛🎍🏛🌾🏛🎍
🏛 *அரசு மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் எண்ணமிருந்தால் அது என்ன செய்திருக்க வேண்டும்:*🤙
🤔 *விவசாய நாடான இந்தியாவில் உணவு உற்பத்தியில் போதுமான இலக்கை எட்ட அனைத்து விதங்களிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.*
🤔 *ஆனால் பல பத்தாண்டுகளாக அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது என்பது வெளிப்படை.*
🤔 *நீர்நிலைகளை பராமரிக்க மறுத்தது, உர நிறுவனங்களை கொழுக்க வைப்பதற்காக வேதிஉரங்களை விளைநிலங்களில் கொட்டி நிலத்தை மலடாக்கியது, பணப்பயிர் திட்டங்களை ஊக்குவித்ததன் மூலம் உணவு தானிய உற்பத்தியிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியது.*
🤔 *மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருந்தும் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கண்டு கொள்ளாமல் விட்டது.*
🤔 *விவசாயிகளுக்குத் தெரியாமல் மரபணு மாற்ற திட்டங்களை புகுத்தியது, விதை நெல்லுக்கும் அன்னிய நிறுவங்களிடம் கையேந்தும் அவல நிலைக்கு விவசாயிகளை கொண்டு வந்தது.*
🤔 *விளைபொருளுக்கு உரிய விலை தராமலும், விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிக்கு தராமல் மறுத்ததும், வர்த்தகச் சூதாடிகளை அனுமதித்து விவசாயிகளை கருவறுத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக பசுமைப்புரட்சி எனும் புரட்டுத்திட்டம் என்று விவசாயத்திற்கு எதிராக இந்திய அரசின் நடவடிக்கைகளை கூறிக் கொண்டே போகலாம்.*
🤙❓🤙❓🤙❓🤙❓🤙❓🤙
🤔 _*விவசாயத்தை ஒழித்துவிட்டு அரசு எப்படி மக்களுக்கு உணவு வழங்கும்?*_
🤙❓🤙❓🤙❓🤙❓🤙❓🤙
🤦♂ *அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஒவ்வொரு அசைவிலும் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் லாபத்தையும், அவர்களது வளர்ச்சியையும் தவிர வேறு எந்த வித எண்ணமும் இல்லை என்பது திண்ணம். இதை புரிந்து கொள்வதும் இதற்கு எதிராக விழிப்படைவதும் ஒன்று திரள்வதையும் தவிர மக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு வேறு வழியில்லை.*🤦♀
🏛 *தமிழகத்தில் நிலை:*🏛
💁♂ _உணவுபாதுகாப்பு சட்டப்படி முன்னுரிமை கார்டுகளுக்கு(PHH) மட்டுமே ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மானிய விலையில் பொருட்கள் வழங்கமுடியும்._
💁 _தமிழகத்தில் உள்ள 1கோடியே 94லட்சத்து 14ஆயிரத்து116ரேசன் கார்டுகளில் முன்னுரிமை கார்டுகள்(PHH) 15முதல் 20லட்சம் ரேசன் கார்டுகளுக்கு மட்டுமே ரேசன் பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும்._
🏛 *தமிழக அரசு :* 🏛
🏛 _*அனைத்து கார்டுகளுக்கும் மானிய விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் அதற்கான மானியத்தை தமிழக அரசே வழங்கிவிடும் என்று கூறுகிறது.*_
🔭 *தொலைநோக்கு பார்வை:*🔭
🤜 _*மக்களுக்கு மானிய விளையில் பொருட்கள் கிடைக்க, மத்திய அரசு கொடுக்கும் மானியம் அல்லாது தமிழக அரசு 5500கோடி ஒதுக்குகிறது.*_
🤜 _*மத்திய அரசு பொருட்களின் விலையை ஏற்றினாலோ அல்லது மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலோ தமிழக அரசு என்ன செய்யும்.*_
🤜 _*மானியத்தை அதிகரிக்குமா அல்லது ரேசன் பொருட்கள் வாங்குபவரின் எண்ணிக்கையை குறைக்குமா.*_
🤜 _*அப்படி குறைத்தாலோ அல்லது முற்றிலுமாக ரேசன் கடைகளை மூடினாலோ அப்பொருட்களையே நம்பி பிழைப்பு நடத்தும் 2கோடி சாமனிய மக்களின் குடும்ப நிலையும், நியாய விலைக்கடைகளில் பணியை நம்பியுள்ள 40ஆயிரத்திற்க்கு மேற்ப்பட்ட குடும்பங்களின் நிலை என்னவாகும்.*_
🤙❓🤙❓🤙❓🤙❓🤙❓🤙
*மத்திய அரசின் 2017ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு புதிய விதிகள்களின் படி இனி வரும் காலங்களில் யாருக்கெல்லாம் ரேசன் பொருட்கள் கிடைக்காது.*
💁♂ *வருமான வரி செலுத்தும் நபர் உள்ள குடும்பம்.*
🤜 *மக்கள் ஏழைகளாக தான் இருக்கனும்.வரி செலுத்துமளவுக்கு முன்னேறக்கூடாது.* 🤛
💁 *தொழில் நிறுவன வரி செலுத்தும் குடும்பத்தினர்.*
🤜 *Made in India என்று நாங்கள் சொல்லுவோம் ஆனால் நீங்கள் எப்படி தொழில் தொடங்கி வரி செலுத்தலாம்.*🤛
💁♂ *ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பத்தினர்.*
🤜 *ஒரு நாளைக்கு ரூ.36 இருந்தாலே போதும்.அப்படியிருக்க ஒரு நாளைக்கு ரூ.273.97(1,00,000/365) மேல் ஏன் சம்பளம் வாங்குகிறாய். நாங்களே ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வாயிலாக ரூ.180தான் தருகிறோம்.*🤛
💁 *5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாய குடும்பத்தினர்.*
🤜 *நிலமிருந்தால் விவசாயம் செய்வ மானமுடன்.நிலமில்லையென்றால் எங்களிடம் பிச்சை கேட்டு சொல்வதெர்கொல்லாம் ஆமா சாமியென்பாய்.* 🤛
💁♂ *மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்கள்.*
🤜 *படித்து வேலைக்கு வந்த திமிர்ல கேள்வி கேட்பாய், நீயும் உன் பிள்ளைகளும்.இனிமேல் யாரும் படிக்கவும் கூடாது,வேலைக்கும் வர கூடாது.*🤛
💁 *4 சக்கர வாகனம் கொண்டவர்கள்.*
🤜 *இருசக்கர வாகனமே வாங்காது நடந்தால் தான் வலிமையாக இருப்பாய் அப்படியிருக்க 4சக்கர வாகனம் கேக்குதா உனக்கு.* 🤛
💁♂ *மூன்று அறைகளுக்கு மேல் வீடு இருக்ககூடாது.*
🤜 *வீடே இருக்ககூடாது,வேண்டுமாயின் இருஅறைகள் போதுமே,மூன்றே அதிகம்.*🤛
🤦♂மேற்சொன்ன எதுவும் எங்களுக்கு இல்லையென்று நீங்கள் ஏமாற்ற முடியாது ஏனெனில் *அனைத்திற்கும் ஆதாரம் ஆதார் எண்.* 🤦♀
*மேலும் யார் யாருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளதெனில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளியை தலைவராக கொண்ட குடும்பம். அன்னபூர்ணா திட்டத்தில் உறுப்பினராக கொண்ட குடும்பத்தினர், ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *Utilities*
🥈 *💥Raja Atheist 💥,& நான் மகான் அல்ல*
🥉 *jaiganesh2881& alaguganesh77*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👊 *ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியத்தில் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எவரும் குறை கூற இயலாது.* அதற்கென முன்னெடுக்கப்பட்டுவரும் *மின்னணு ரேஷன் அட்டை, முழு கணினிமயம் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.*
👊 ஆனால், இந்த நோக்கத்தைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இப்போது வெளியாகியிருக்கும் அறிவிக்கையின் நிபந்தனைகளைப் பார்க்கும்போது *அரசின் எண்ணம் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, சமூக நலக் கடமைகளிலிருந்து தன்னைப் படிப்படியாக விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தில் அது இருப்பதாகவே தோன்றுகிறது.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*"பாத்தூண் மரீஇ யவனைப் பசியயென்னுந்*
*தீப்பிணி தீண்ட லரிது"*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களை பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வள்ளலார்.*
*"தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையேல்*
*ஜெகத்தினை அழித்திடுவோம்" பாரதி*
👴🏻 *" "*👵🏻
💎💎💎💎💎💎💎💎💎💎
🤷♂ *சிந்தனை :*🤷♀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ஏற்கெனவே மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு விவகாரம், பெட்ரோலிய மண்டல விவகாரம் நெடுவாசல்,கதிராமங்கலம், ஜிஎஸ்டி விவகாரம் என்று பறிபோகும் தமிழக மாநிலத்தின் உரிமைகளைக் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் தமிழக மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது இந்த அறிவிக்கை பத்தோடு பதினொன்று விட்டுவிடுவோமா இல்லை ஜல்லிக்கட்டு போல் வெற்றியாக்குவோமா !.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👨🏻💻 🌱 *கனகராஜ்.வே.*🌳
🌱 *9047493815*🌳
👩💻 🌱 *கமலி.*🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎 🌱 *மணி விஜய் -*
*8428073724*🌳
😎 🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment