Saturday, 12 August 2017

குருகுல* *கல்வி* முறை --- *தற்போதய* *கல்வி* முறை *ஓர்* *அலசல்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭  
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :11.08.2017.* 🌹                  🌷 *கிழமை : வெள்ளிக்கிழமை* 🌷    
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.*

*-சாக்ரடீஸ்*

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*யாரையும் நம்பாதே*

*உன்னை நம்பி பலர் இருக்கிறார்கள். நீ எடுக்கும் முடிவினால் யாரும் பாதிப்படைய கூடாது.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍
       
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================
*குருகுல* *கல்வி* முறை --- *தற்போதய* *கல்வி* முறை  *ஓர்* *அலசல்*
📜🎒✍📜🎒✍📜🎒✍📜🎒

👳🏼‍♀ *நம்முடைய தமிழ் நாகரிகம் பழம் பெருமை வாய்ந்து ஓரே காரணம் ---காலம் காலமாக அரசனுடைய மகனும் சாதாரண மக்களுடைய மகனும் குருகுல கல்வி முறையில் சமமாக நடத்தப் பட்டனர்.மேலும் சமூக நீதி சமமாக அனைவருக்கும் கற்று கொடுக்கப்பட்டன...*
*மேலும் திருமணம்* *செய்தலில்* *ஆசிரியருடைய பங்கு மிகவும் அதிகம்*
*ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது...*

🙏 *குருகுலம் -- ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அன்னை தான் முதல் ஆசான்.அதாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாக தாயே முதல் எடுத்துக் காட்டாக அமைவது அன்பு என்ற ஓன்றை மட்டுமே குழந்தைக்கு கற்றுத்தரும்.பிறகு தந்தையிடம்*

🙏 *குருகுலத்தில் பண்பாடு,ஒழுக்கம்,பாரம்பரிய முறைப்படி மரியாதை மிகுந்த சமுதாயம் உருவாக முடிந்தது*

👳🏼‍♀ *குரு என்பவர் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் கூட கூட இருந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் கூட நிலை தடுமாறாமல் கப்பலின் மாலுமி போல செயல்பட்டு சீடன் தலைமுறைக்கு ஒரு வழி காட்டியாகவும் ஆசானாகவும் இருந்துள்ளார்*

👳🏼‍♀ *குருகுல கல்வியில் மாணவர்கள் எந்த துறையில் சிறந்தவர்கள் என்று குருவே கண்டுபிடித்து அதற்கேற்ப குழந்தைகளுக்கு பயிர்ச்சி கொடுப்பார்* 

🤦🏻‍♂ *இன்றைய சூழலில் சொந்த காசில் சூன்யம் வைத்து கொள்வது தான் தற்கால கல்வி முறையைக்கு எடுத்து காட்டாக கூறலாம்*
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

👉 *ஆனால் இன்றோ பிடிக்குதோ பிடிக்கலையோ வகுக்கபட்ட பாட திட்டத்தை படித்தே தீர வேண்டும்*

👉 *தமிழர் பண்டைய நாகரீகம் குருகுல கல்வி முறையில் வம்சம் வம்சமாக மத,இன,சாதி வேறுபாடு இன்றி கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவே இன்றைய வானவியல்,கோள்கள் பற்றிய அறிவு திடம் மிக்க கருத்துக்கள் நிறைந்த சித்த மருத்துவம்,சோதிடம், கட்டிட கலை,குடவோலை முறையில் மக்கள் ஆட்சி நடத்துதல் மேலும் பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்துள்ளதை யாராலும் மறைக்கவும் முடியாது.....தடுக்கவும் முடியாது*

👉 *மக்கள் வம்சம் வளர்வதற்கு ஆசானே மாணவருடையே நலன் கருதி திருமணம் செய்து வைக்கவும் உரிமையுடையவராய் இருந்திருக்கிறார்.*

👉 *அதாவது பிள்ளை பெறுவதோடு பெற்றோர் கடன் பாதி அல்ல முழுவதும் முடிவடைந்தது..மீதி அனைத்தும் ஆசிரியர் முடிவுக்கு விடப்பட்டது.*

👨🏻 *தாய் தந்தையைக் காட்டுவார்*
*தந்தை குருவைக் காட்டுவார்*
*குரு உன்னை உனக்குக் காட்டுவார்*

🔰 *கல்வி கற்பிக்கும் ஆசிரியர். தனி மனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணியாகிறார். இளம் தலைமுறையினரோடு நெருங்கிப் பழகும் ஆசிரியர்கள் மாணவர்களை உரிய முறையில் புரிந்து கொண்டு செயல்பட்டால் கல்வியின் சவால்களைச் சமாளித்து விட முடியும்.*
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

👉 *பல கல்வி நிறுவனங்கள் கல்வியின் மேன்மை பற்றி அறியாத பெரு வணிகர்களால் இலாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன*

👉 *பெற்றோரும் தம் வருமானத்திற்கு மீறி பணத்தைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர்*

👉 *பிளாஸ்டிக்கில் அரிசி மற்றும் செயற்கையான முட்டையைச் சீனா தயாரிப்பது போல இந்தியா செயற்கையாக மதிப்பெண் போடும் மாணவர்களை உருவாக்கி வருகிறது*

👉 *அன்று அன்பையும் , மரியாதையும் தந்து அறிவை பெற்ற கல்வி* 

👉 *இன்று பணத்தை கொடுத்து பண்பை கெடுத்து பணத்தை மட்டுமே அறுவடை செய்யும் கல்வி*

🙏 _*குருகுல கல்வியோ---தற்கால கல்வியோ குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையும்,* *மனிதனை சகமனிதன் உயர்வு,தாழ்வு இன்றி சமமாக கருதும் சூழலும்,பிற உயிரினங்கள் மீது கருணை பொழியும் மனப்பான்மையும்,தன்னை போல பிறரையும் நேசிக்கும் பாங்கும்,சுயநலமின்றி பொது நலன் கருதி செயல்படும் தன்மையும், தான்........நான்...... என்ற ஆணவத்தை மட்டுப்படுத்தி கட்டுபாடுடன் வாழ கற்றுக்கொடுப்பதாகவும்,மாயையிலிருந்து விடுபட ஆன்மீக அறிவு பசிக்கு இரை போடுவதாகவும் ,எப்பிறவியிலும் மங்காத புகழுடன் வாழும் வகையில் கற்றல் நடைபெற்றால் அதுவே மிகச் சிறப்பான கல்வி*_👍

👉 _தனது இரு குழந்தைகள் கல்விக்காகவும் தனது வேளச்சேரி வீட்டையே *ஆஷ்ரம்*என்ற பெயரில் குழந்தைகள் பள்ளிக்கூடம் ஆக திறந்து வைத்தார் பிரபல நடிகர் ரஜினிகாந்த். இந்த பள்ளியில் கூட குருகுல கல்வி போல ஆனால் தற்கால சூழலிலுக்கு ஏற்ப ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி கூடம் ஆக நடத்தி வருகிறார்_

👉 *புத்தகப் பாடங்களுக்கு விளக்கம் கூறும் ஆசிரியர்கள் தத்தமது சொந்த நம்பிக்கைகளை, புரிந்து கொள்ளல்களையே மாணவர்கள் முன்னால் வைக்கிறார்கள். அவ்வகையில் ஒரு பாடத்தின் நோக்கத்தை உயர்த்துவதும் தரந்தாழ்த்துவதும் ஆசிரியர்களின் கையிலும் உள்ளது.*
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

👉 *ஒரு குருவை – ஆசிரியரை் தங்களது வழிகாட்டியாக எடுத்து கொண்டு ‎அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவை-ஆசிரியரையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள்*

📜 *குருவை தேர்ந்தெடுப்பதில் கூட சாதி இல்லை என்னும் போதே நம் தமிழ் கலாச்சாரத்தில் சாதி இரண்டொழிய.* *(ஆண்சாதி--பெண்சாதி) வேறில்லை என்பது நிருபனமாகிறது.அதே போல குருவும் தன்னிடம் வரும் மாணவனிடம் சாதி, மத வேறுபாடு பார்த்ததில்லை...*
*காலப் போக்கில்  ஏற்பட்ட பல்வேறு கலாசார கலப்பே இம்முறைகள் அழிந்து தற்போதய பிரிவினைகள் ஏற்பட்டது.*
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

📜 _குருகுல கல்வி முறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மீது மதிப்பும் மரியாதையும் தனது தாய்,தந்தையரைத் தாண்டி இவ்வுலகில் எப்படி வாழ்வது என்பது பற்றிய முழுமையான களப் பயிற்சி மூலம் ஆணவம்,கன்மம்,மாயை பற்றியும்  இந்த மும்மலங்களே நம்முடைய பிறப்புகளுக்கும்,செயல்களுக்கும் காரணமாக அமைகிறது பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து அதனை அகற்றும் வழி பற்றி நடைமுறையில் அனைத்து துறைகளிலும் உள்ள மன்னர் முதல் மன்னருக்கு தேர் ஒட்டும் தேரோட்டி வரை கற்றுக் கொடுத்தது._

📜 _நல்வித்ககத்தால் நன்மையும் தீயொழுக்கம் என்றும் இடுப்பை தரும் என்பதை தெளிவாக குருகுல கல்வி முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவே இன்றைய அளவும் பல்வேறுவிதமான தாக்குதல்களுக்கு இடையேயும் தமிழ் வளர்ச்சி பெற்று தலைமுறை தலைமுறையாக எடுத்து வரப்பட்டுள்ளதற்கு குருகுல கல்வியே என்பது மறுப்பதற்கில்லை._

📜 *பண்டைய காலத்தில் குருகுல கல்வி பயில ஐந்து அல்லது ஆறு வயதிற்கு மேல் இருக்க வேண்டும்*

✍இன்றைய ஜனநாயக முன்னாடியே          * *குடவோலை_* * பத்தாம் நூற்றாண்டு நடைமுறையில் இருந்த ஒரு சிறந்த மக்கள் ஆட்சிக்கு குருகுல கல்வி முறையே காரணம்

✍ஒரு இனத்தை அழிக்க முடிவு செய்தால் அந்த இனத்தின் தாய் மொழி கல்வியையும், கல்வி முறையில் மாற்றம் செய்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் தமிழ் இனம் இன்று வரை இருப்பது கண்கூடு
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

✍தற்கால கல்வி முறை 1970 முதல் முற்றாக செயல் இழந்து தனித்துவம் இன்றி அந்த 75 அப்போலோ நாட்கள் போல சென்று கொண்டு இருக்கிறது,காரணம் முறையான கல்வியாளர்களும் தமிழக அரசில் எம்.எல்.சி. என்ற முறையில் ஏதே ஒரு கண்காணிப்பு இருந்தது அந்த முறை போன பிறகு முழுமையாக தற்கால கல்வி முறை பணம் சம்பாதிக்க பயன் படும்   அதிலும் குறிப்பாக *ஒரு* *முறை* *முதலீடு* *வாழ்நாள்* *வருமானம்* என்ற சிற்றறிவாளர்கள் கையில் சிக்கிய பூமாலை போல கிடக்கிறது
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

👉 *தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம்?*
 *அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்?*
 *என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம்*
*ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது* *‎பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல ‎கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய ‎தவறாகவும் அமைந்து விடலாம்*

💻 _இக்கால கல்வி முறையில் ஒரு மாணவனை அல்லது மாணவியை எழுத்தர் பதவிக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அளவில் தான் வெள்ளையர்கள் கொண்டு வந்த முறையையே பின்பற்றி வருகின்றனர் காரணம் நம்மை ஆட்சி செய்ய அவர்களுக்கு தேவையான கணக்கர் தான் அதிகாரத்தில் கைவைப்பவராக இருந்தால் தேச துரோக வழக்கு போட்டு வாழ்வில் வேறு எந்த வேலையும் செய்யாமல் இயலாதபடி செய்வது தான் இன்றும் தொடர்கிறது_

👉 *மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கலாச்சாரத்திலிருந்து (இப்பொழுதெல்லாம் கணக்குப்பாடத்தையே மனப்பாடம் செய்து தான் எழுதுகின்றார்கள்)*
 *மாணவர்களை முற்றிலுமாக மாற்றி புரிந்து கொண்டு படிக்கும் நிலையை உருவாக்கி அதில் பழக்கப்பட்டவுடன் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக சிலபஸ் ஏற்றி தரம் உயர்த்த வேண்டும்*
📜🎒📜✍📜💻📜🎒📜✍📜

😇 தற்போதய கல்வி முறை மூலம் மக்களை ஏற்றுமதி செய்வது அல்லது இங்கிருந்தே வெளிநாட்டு காரனுக்கு வேலை செய்வது போன்ற வாய்புகள் தான் ஏற்படுத்தப் படுகின்றன... *நமக்கு* *என்ன* *நேர்ந்தால்* என்ன *காசு* *வந்தால்* *போதும்* என்கிறீர்களா ? தயவு செய்து உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள்.... காரணம் *மனம்*.......பல அமெரிக்கா,ஐரோப்பிய,ஜப்பான்,நாட்டவர்கள் *திருவண்ணாமலை*இன்றும் பிற வட மாநிலங்களில் இமயமலையில் சுற்றுவது எதற்காக.? சற்றே சிந்தியுங்கள் கல்வி என்பது ஏதோ படித்தேன்... வேலைக்கு போனேன்.....சம்பாதித்து குடும்பம் நடத்தினேன் என்பதல்ல வாழ்க்கை............. *மரணம்*ஒவ்வொருவரும் வாழ்க்கையிலும் முத்தமிட வரும் தருவாயில் எதிர்கொள்ள *பக்குவப்பட்ட* *மனிதனாக* *மாற்ற* *வேண்டியது* *கல்வி* .......அது குருகுலமோ தற்காலமோ.....அதுவே சிறந்த கல்வி

😇 *கல்வி கண்ணாக கவசமாக இருக்கவேண்டும்...!!*
*காசாக,கவலையாக இருக்க கூடாது...!!!*

🙏 *நன்றி*💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

🥇 *Raja Atheist*
🥈 *mani.B&jaiganesh*
🥉 *வள்ளுவர் தாசன்*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                   
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔥 *தற்போது கல்வி என்பதே வியாபாரமாக ஆகிப் போய் விட்ட நிலையில், மீண்டும் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், குறைந்தது இந்தியர்களான எமது பிள்ளைகள் நன்நடத்தை பயின்று நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.*

🔥 *இவற்றை எமது தாய்நாட்டு அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஆனால் அரசியலால் சீரழிந்து போயுள்ள எமது நாடுகளின் அரசாங்கங்கள் தமது மற்றைய கடமைகளையே சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் இருக்கும் போது அவர்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.*

☹ *ஆனாலும் எமது நாடுகளில் இன்றும் பணபலம் கொண்ட தனிப்பட்ட சிலர் இம்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.*
  
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருமைக்கண்* *தான்னற்ற கல்வி ஒருவற்*
*கெழுமையும் ஏமாப் புடைத்து*
                                               
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஒரு தலைமுறையில் பெறும் கல்விஅறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

அறிந்துகொள்ளவும்,
*அறிய அறியக் கெடுவார் உண்டா?*

புரிந்து கொள்ளவும்
*அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.*

தெரிந்துகொள்ளவும்
*சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி*
                            

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

👨🏻‍💻 *மகாராஜன் 8197723347*
👨🏻‍💻 *@⁨✨ ɱкʂ ✨⁩(கந்தசாமி) 9080669640*


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*           *9486552988*🌳        
                                                                  😎 🌱  *மணி விஜய் -*  
             *8428073724*🌳

 😎    🌱     *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 comment:

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...