Tuesday, 15 August 2017

ஜனநாயகம் என்றால் என்ன ? தமிழகத்தில் பின்பற்றபடுகிறதா ?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் :திங்கட்கிழமை* 🌹
🌹 *தேதி :14.08.2017* 🌹
__________________________________

🕵🏻‍♀ *அறிவோம்*🕵🏻
✨✨✨✨✨✨✨✨✨✨✨
*எல்லோரும் தம்மை விட்டு விட்டு* *வேறுயாரையோ*
*சீர்திருத்த முயலுகிறார்கள்......*

------- *தாகூர்*------

😎 *அட்மின்தாட்ஸ்*😎
✨✨✨✨✨✨✨✨✨✨✨
*ஒரே குறிக்கோள்* !
*எல்லையற்ற ஊக்கம்* !
*தளர்வில்லாத நெஞ்சுறுதி* !
*சளைக்காத உழைப்பு* !
*நேர்மையான பாதை* ! *வெற்றிகிடைக்காமலா போய்விடும்...!!!!*

📯📯 *தலைப்பு*📯📯

*ஜனநாயகம் என்றால் என்ன ? தமிழகத்தில் பின்பற்றபடுகிறதா ?*
⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉
🏰 *முதல்பாகம்*🏰
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🏰நாம் நமது *71வது* சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.
அனைவருக்கும் *சுதந்திரதின 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳வாழ்த்துக்கள்*.

🌍 _நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சுதந்திரத்தின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டதா, ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெறுகிறதா_ 🤔
*ஜனநாயகம் என்றால் என்ன?*

🗣 _*இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக (காட்சிப்பொருளாக) மாறியுள்ளது.*_

_ஜனநாயகம் என்பது *"மக்கள் ஆட்சி"* என கூறலாம். ‘Democracy’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறையான்மை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது._

_ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு அது மூன்று முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவை_
*1. _சமத்துவம்_*
*2. _மக்கள் இறைமை_*
*3. _சுய ஆட்சி._*

🗣 *_இறைமை எனப்பொருள்படும் ஆங்கிலச் சொல் 'Sovereignty' என்பதாகும். இலத்தீன் மொழியில் 'Superanus' என்ற சொல்லிலிருந்து பெற்றப்பட்டது.  'Superanus' என்றால் மேலானது என்று பொருள். சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகாரங்களையும் உருவாக்குவதற்கும், வேண்டியபோது நீக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் உள்ள தத்துவம் இறையான்மை எனப்படும்._*

🗣 *_ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும்,அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் "தம்மைத் தாங்களே" "ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது". "தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும்" அளவுக்கே செயல்படுகிறது என்பதுமேயாகும்._*

🗣 *_ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர்._*

⭐ *_இறைமை பற்றிய கோட்பாடுகள் காலத்திற்குக் காலம் பல அறிவியலாளர்கள் அவரவர் வாழ்ந்த காலச்சூழ்நிலை, தாக்கம் ஆகியவைகளை பொருத்து  பிரதிபலிக்கின்றன._* _இவ்வகையில் "Jean Boadin, Hobbes, Locke, Rousseau, Austin,_ _Grotics, Hegel, John Milton, Laski, Maciver,_ _Maine"என இவர்கள் பட்டியல் நீண்டு_
_கொண்டேபோகிறது..._
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *ஜீன்போடினின் இறமை*
*பற்றிய கோட்பாடு*🥁

*_ஜீன் போடின் 1530 – 1596 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த அரசியலறிஞராகும். இறைமை பற்றிய கோட்பாட்டாளர்களுள் காலத்தால் முந்தியவராக இவர் கருதப்படுகின்றார். 1576ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசு (Republic) என்ற நூலில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை இவர் முன்வைக்கின்றார்._*

🥁 *_போடினின் கருத்துப்படி இறைமை என்பது மக்கள் மீதும், குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்றார்._*
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *தோமஸ் கொப்ஸ்  இறைமை பற்றிய கோட்பாடு*🥁

🥁 _1588 – 1679 காலப்பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலப்பகுதியில் இங்கிலாந்தில் சிவில் யுத்தம் நடைபெற்றிருந்தது._

🥁 *_மனிதன் சுயநலம் மிக்கவன், விலங்கு வாழ்க்கை வாழ்பவன் என்ற தனது சிந்தனையின் அடிப்படையில் இறைமை பற்றிய கோட்பாட்டினை இவர் வடிவமைக்கின்றார். 1642 இல் இவரால் வெளியிடப்பட்டிருந்த Decive என்ற நூலின் மூலமாக இறைமை பற்றிய கோட்பாடு வெளியிடப்பட்டிருந்தது._*

🗣 _இவரின் கருத்துப்படி *“நிபந்தனை எதுவுமின்றி"*மக்கள் தமது அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்து விடுகின்றார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து அதிகாரம் பெற்ற மன்னனே *"இறைமையின் உறைவிடம்"*என்றும் அதனால் அந்த மன்னனே சகல *"அதிகாரங்களும் கொண்டவனாக அச்சமுதாயத்தில் விளங்குவான்”*என்றும் கூறுகின்றார்._
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *ஜோன் லொக்கின் இறைமை பற்றிய கோட்பாடு*🥁

🥁 _ஜோன் லொக் 1632 – 1704 காலப்பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர்.1642 ஆண்டிலிருந்து பிரித்தானிய மன்னனுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியும்.1688 ம் ஆண்டு பிரித்தானியாவின்_ _*“மகோன்னதப் புரட்சியையும்”(Glorious Revolution in Britain) இரண்டு அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 1690 ம் ஆண்டில் "அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள்"*_
_(Two Treatises of Government) என்ற நூலை வெளியிட்டார்._

🥁 *_இறைமை மக்களிடமும் மன்னனிடமும் காணப்படும். சட்டவாக்கம் அதிகாரம் மக்களிடம் இருக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். மக்களின் விருப்பத்தை மீறி ஆட்சி செய்ய அரசனுக்கு அதிகாரம் கிடையாது. மக்கள் விரும்பும் போது அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் எனக் கூறுகின்றார்._*
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *ரூசோ  இறைமை பற்றிய கோட்பாடு*🥁

🗣 *_ரூசோ 1712 – 1778 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த சிந்தனையாளர்._*

🥁 *_இவர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள்,'அரசு தோன்றுவதற்கு முன்னர்' பொது நல நோக்கம் கொண்டவர்களாகவும் முன்னேற்றமடைந்தவர்களாகவும் மாறிவிட்டனர்' என்ற கருத்தின் அடிப்படையில் மக்கள் அரசியல் அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ள தகுதியானவர்கள் என்ற முடிவிற்கு வருகின்றார். இதன் அடிப்படையிலேயே  இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை  முன்வைக்கின்றார்._*

🥁 *_இறைமை என்பது, அரசின் மேலான அதிகாரமாகும். இவ் இறைமை முழு நிறைவானதும் நிச்சயமானதும் பிரிக்க முடியாததும், பாரதீனப்படுத்தப்பட (ஜப்தி , மாற்றிக் கொடுக்க இயலாத) முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட முடியாததுமாகும் எனக் கூறுகின்றார்._*

🥁 *_இறைமையின் உறைவிடமாகப் பொது விருப்பத்தையும்”_*
_(General Will) மக்களையுமே காண்கின்றார். இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாகவே கருதப்படுகின்றது._* *_மாறாக எல்லோருடைய எல்லா விருப்பங்களையும் குறித்து நிற்கவில்லை. பொது நன்மையை விரும்பும் தனி நபர்களின் இணைப்பு பொது விருப்பமாகக் கொள்ளப்படுகின்றது._*
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *ஜோன் ஓஸ்ரின் இறைமை பற்றிய கோட்பாடு*🥁

🗣 *_இவர் 1790 – 1859 காலப்பகுதியில் வாழ்ந்தவர்._*

_ஜோன் ஓஸ்ரின்,1832ம் ஆண்டு_ *_“சட்டவியலுக்கான விளக்கவுரை”_*
*_(Lectures on Jurispurudence) என்ற நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலின் மூலமாக இறைமை பற்றிய தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார்._*

🥁 *_இறைமையாளனின்_* *_அதிகாரம்_*
*_சட்டரீதியாக முழுநிறைவானதும் எல்லையற்றதுமாகும்._* *_இறைமை பிரிக்கப்பட முடியாததுடன் இரண்டு நபர்களுக்கிடையில் வெவ்வேறான முறையில் செயற்படுத்தப்பட முடியாததுமாகும்._* *_இதனால் ஒருவர் ஏனையவர்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமையாகும் என்கிறார்._*

🥁 *_இறைமை அதிகாரம தலை சிறந்த மனிதனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறுவதன் மூலம் மக்கள் இறைமை என்ற கருத்துடன் முரண்படுகின்றார்._*
*_இவருடைய சிந்தனை முடியாட்சிக்கு பொருத்தமானதாகும்._*
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🥁 *Laski லாக்ஸ்கீ கோட்பாடு*🥁

🥁 *_ஒரு அரசின் இறைமையானது பன்மைத்தன்மை கொண்டதும்,அரசியல் திட்ட ரீதியானதும், பொறுப்புடையதுமாகும்.மட்டுப்படுத்தப்படக் கூடிய இவ் இறைமையானது, மேலாண்மை பெறுவதை விட கட்டுப்படுத்தப்படக் கூடியது. நிரந்தரமானது என்பதை விட தேர்தல் தொகுதிகளின் விருப்பத்தினால் அது மாறுபட்டுச் செல்லும். அதன் அதிகாரங்கள் வியாபிக்கக் கூடியவை உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் அதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தபட்டவையாகவும் மீள் பார்வைக்குரியவையாகவும் காணப்படும்.” எனக் கூறுகின்றார்._*
⚜♨⚜♨⚜♨⚜♨⚜♨⚜

🔅 *பென்தம் (Benthum) என்பவர் இறைமை*🔅

🌟 *_இறைமை என்பது “சட்டத்தின் மூலம் எல்லையற்றதாகவிருந்த போதிலும் நீதி முறைப்படி எல்லையற்றதல்ல. ஒரு இறைமையாளர் தனது அதிகாரத்தைச் சட்டங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நிலைநாட்டிக் கொள்ள முடிந்தபோதிலும் இவ் இறைமையின் நோக்கம் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும்” எனக் கூறுகின்றார்._*

🌟 *_பன்மைவாத சிந்தனையாளர்களின் கூற்றுப்படி, அரசும் ஏனைய அமைப்புக்களும் சமூகத்தில் சில அந்தஸ்துக்களை பெற்றிருக்கின்றன._* *_இதில் அரசு அதிக முக்கியத்துவத்தினையும் அதிக கௌரவத்தினையும் பெற்றிருப்பதை ஏற்க்க மறுக்கிறார்கள்._*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*இத்தகவல்களில் சில தவறான தகவல்களாக இருந்தால்,பிழைக்கு மண்ணிக்கவும். அடுத்த பாகத்திற்க்கு போக வேண்டியகட்டாயம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் : திங்கட்கிழமை*🌹
🌹 *தேதி :14.08.2017* 🌹
__________________________________

📯📯 தலைப்பு 📯📯
*ஜனநாயகம் என்றால் என்ன ? தமிழகத்தில் பின்பற்றபடுகிறதா ?*
⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉
🏰 *இரண்டாம்பாகம்*🏰
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆

👑👑🌹 *தமிழகத்தில் ஜனநாயகம்*🌹👑👑

📜 _*"குடவோலை" என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்வு செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேர்தல் முறை.*_

📜 _*"குடவோலை" முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்ததாக நம்பப்படுகிறது. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.*_

🗣 _*கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.*_

❌ _*முக்கியமாக, "குற்றமற்றோரையும்" "தகுதியுள்ளோரையும்" மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்தார்கள்.*_
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
*சபை உறுப்பினராகத்* *தேர்ந்தெடுக்கப்படத் தேவைப்படும் தகுதிகள்.*

🔴🔴 *(முதல் கல்வெட்டு)*🔴🔴

👁‍🗨 _*கால் வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*வயது 30-க்கு மேல் 60-க்குள் இருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும்.*_

👁‍🗨 *_கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாதுஅவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது._*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

🔴🔴 *இரண்டாவது கல்வெட்டு*  🔴🔴

👁‍🗨 _*கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக்கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*அந்த நிலத்தில் சொந்த மனை இருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*வயது வரம்பு, முந்தைய கல்வெட்டில் 30-க்கு மேல் 60-க்குள் என்று இருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35-க்கு மேல் 70-க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*_

👁‍🗨 _*மந்திரப் பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்பவனாக இருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*1/8 நிலமே இருந்தாலும், ஒரு வேதத்திலும் நான்கு பாஷ்யத்திலும் நிபுணராக இருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும்.*_

👁‍🗨 _*கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாதுஅவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.*_

👁‍🗨 _*ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முதல் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை).*_

👁‍🗨 _*தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரி மக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் - இதுபோன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.*_

👁‍🗨 _*ஆகமங்களுக்கு*_ _*எதிராக,பஞ்சமாபா தகங்கள் செய்தார்,*_ *_கொள்கையை மீறுபவன்,பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள்_* _*அதற்கான பரிகாரங்களைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும்,*_ _*உறுப்பினராகும் தகுதி அற்றவரே.அவர்களது உறவினர்களும் உறுப்பினராக ஆக*_ _*இயலாது.கொலைக் குற்றம் செய்யத் தூண்டுபவர்,*_ _*கட்டாயத்தினால் கொலைக் குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை*_ _*அபகரிப்பவர்,ஊர்*_ *_மக்களுக்கு_* _*விரோதியாக*_ _*இருப்போர்,*_
_*கழுதை ஏறியோரும்,*_ *_பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராக ஆகத் தகுதி அற்றவர்கள்._*🤷‍♂
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

🔥 _*ஜனநாயகம்*_
*_"சுதந்திரத்துடன்"_* *_"சட்டத்துக்கான அவசியத்தையும்" அதனை_* _*"அமுலாக்குவதையும்" இணைக்கப்*_
_*படுவதற்கான ஒரு* *முயற்சியேயாகும்.இது*  
_*பெரும்பான்மையினன் முடிவுக்கு*_
_*"அனைவரும் கட்டுப்பட வேண்டும்" என்று "ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு"* *இருப்பதாகவும்*  *கருதுகிறது.*_

🔥 _*"மக்களாட்சி" என கூறப்படுகின்ற "ஜனநாயகமானது" "மனித உரிமைகளை பாதுகாத்தல், வாக்குரிமை, தேர்தல், சகிப்புத்தன்மை, சமத்துவம், ஊடக சுதந்திரம்", போன்ற பல பண்புகளை கொண்டுள்ளது. மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்.*_

🔥 _*சமூக அமைப்பைப் பொறுத்தவரையில் தனிப்பட்டவர்கள் தமது நடத்தைகளை வெளிப்படுத்துவதுடன், குழுக்களாகவும் இணைந்தே தமது நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். எனவே இங்கு சமூகமைப்பில் ஏதோவோர் வகையில் தன்னை வெளிப்படுத்தும் தன்மை காணப்படுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் சமூக செயற்பாட்டில் பங்குபெறுகிறார்கள். இதன் மூலம் தமக்குரிய அந்தஸ்தையும் தீர்மானிக்கின்றனர்.*_

🔥 _*சமூகம் இயங்கு*_ _*முறையில்*_
_*பங்குபெறுதல் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய சிற்சில தனிப் பண்புகள் எனலாம். இத்தனிப் பண்புகள் ஒரு சந்ததியிடமிருந்து மறு சந்ததிக்கு தொடர்ந்து கடத்தப்படுகின்றன. இத்தகைய பண்புகள் நீடித்துக் கொண்டு செல்வதனால் இதனையே சமூகமயமாக்கம் (Socialization) என அழைக்கின்றனர்.*_

🔰_*ஆளுவோருக்குள்ள கடமையையும், ஆளப்படுவோருக்குள்ள உரிமையையும் வற்புறுத்திக்காட்டுவது அரசியல் விஞ்ஞானமாகும். மக்களையும், மக்களுடைய சொத்துக்களையும் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் கடமையாகும். மக்களைக்காப்பாற்றுவது என்பது மக்களுடைய சுதந்திரத்தையும், வாழ்க்கையையும் காப்பாற்றுவதாகும்.*_

🕹  _*100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தலில் 50 சதவீதம் மக்கள் வாக்களிக்க வில்லை என்றால் எப்படி ஒரு சிறந்த ஆட்சியாளனை தேர்ந்தெடுக்க முடியும்? நாட்டுப்பற்று என்பது எது?*_🤷‍♂

🗣 _*நம்மை ஆளக்கூடிய அரசை நாமே தேர்ந்தெடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு இருந்தும், அதை படித்தவர்கள் பண்பாளர்கள் சரிவர பயன்படுத்தாதது ஏன் ? வேதனை*_🤦‍♂

🕹 *_உண்மையான 🇮🇳🇮🇳நாட்டுப்பற்று உள்ள இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தனது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும்._*👊

🗣 _*அப்பொழுதுதான் சிறந்த கட்சியை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்த முடியும். அதன் பிறகு ஊழல் பேர் வழிகளும், உதவாக்கரைகளும் தானாக ஓரங்கட்டப் படுவார்கள்.*_

🗣 _*இன்று அரசியல் ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறி "வீறுநடைபோடுகிறது'இதற்கு காரணம் மக்களின் தெளிவான தீர்ப்பு இல்லாததே.*_ 👎

🔰 *_மக்கள் எந்த சலனத் திற்கும் ஆளாகாமல் மதுவுக்கும் பணத்திற் கும் அடிமையாகாமல் சுயமாக சிந்தித்து யார் வந்தால் சிறப்பாக ஆட்சி அமையும் என்று சீர்தூக்கி பார்த்து வாக்களித்து, ஊழல் இல்லாத, ஜனநாயக முறையில் ஆட்சி அமையந்திட வழிவகை செய்ய வேண்டும்._*🤝

🤒 *சரி முடிவா* *என்னத்தான்*
*சொல்லவாறிங்க* *அப்படித்தானே கேட்குறீங்க !*🤔🤔 *சொல்லுரேன்.........*

‼  *_ஜனநாயம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறமுடியாது.........._*

🗣 _*உங்க மொழில் சொன்னால்.........*_

_*அத*_
*_விவரிக்க வார்த்தை இல்லீங்க. 🤷‍♂ 🤷‍♂அப்படி வார்த்தைகளை தேட முடிந்தால் நீங்கள் ஒரு சிந்தனைவாதி. 🙏🙏அத்தோடு ஒரு மெய்யியலாலர் என்பதையும் உணர்த்துகிறது._*😎🌹
👍👍👍👍👍👍👍👍👍👍👍

🔴 *காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில், தனது உயிரை தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சார்ந்த தியாகி.இளையராஜா அவருக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரது ஆத்மா சாந்தியடைய குழுவின் சார்பாக இறைவனை வேண்டுகிறோம்.*

🙏
*_நன்றி நன்றி நன்றி_*🙏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑

🥇 ⁨ *நான் மகான்அல்ல* 
🥈💥 *Raja Atheist*💥⁩
🥉 *jaiganesh2881*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀ 

🔰 _*பணக்காரர்கள்,*_
_*படித்தவர்கள்,*_
   *_வியாபாரிகள், உயர்ந்த பதவியில் உள்ளவர்கள்,_ _அதிகாரிகள் இவர்கள் எல்லாம் ஓட்டு போடுவதை அலட்சியப்படுத்து_ _கின்றார்கள்._*
*_ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ? நாங்கள் என்ன "கஞ்சிக்கா கஷ்டப் படப் போகின்றோம்" என்று ஆணவப் பேச்சில் ஆனந்தம் அடைகின்றனர்._*

🕹 _*ஓட்டு போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வரவேண்டும். வாக்களிக்க மறுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கவேண்டும். இனி வரும் காலங்களில் இதில் கவனம் செலுத்தாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்காது, வேரோடு அழிந்து போகும்.*_

🌍 _*ஜனநாயக நாட்டில் அனைவரும் நல்வழியில் போகணும்ங்க.*_

*போகாதவங்களை வேற என்னங்க பண்றது?*

*எத்தனை பேரை தான் திருத்துவது😴.*

😇 *ஆனால் ஒன்று தவறை நன்கு அடையாளம் கண்டு கொண்டோம்......*
*அதை களையெடுத்தால் தான்*
*நாளை சமுதாயம் இக்கேள்வியை நம்மிடம் திருப்பி கேட்காது...*
*நாளைய வாழ்வும் அதிலே தான் அடங்கி உள்ளது.....*👍

😇  _*சிந்தித்து*_
_*செயல்படுங்கள் என் இனிய*_
_*இளைங்ஞர்கலே......*_
_*அவர்களை வாழ வழிவிடுங்கள் என் மூத்த மக்களே....*_🙏

🇮🇳 *வாழ்க பாரதம்*🇮🇳🇮🇳

🇮🇳🇮🇳 *வந்தேமாதரம்*🇮🇳

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்துகொள்ளவும்
*குனியக் குனியக் குட்டுவான்,* *குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.*

அறிந்துகொள்ளவும்
*கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.*

புரிந்துகொள்ளவும்
*காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்..!!*

*கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...!!*

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻✍ *ராமலிங்கம் அங்கப்பன்*

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *கமலி*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...