Sunday, 20 August 2017

தற்போது அதிகரித்து வரும் கொலை கொள்ளைகள் பற்றிய ஒரு அலசல்*.. *காரணமும் தீர்வும் என்ன?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :20.08.2017.* 🌹                  🌷  *கிழமை:* *ஞாயிறு* 🌷   
____________________________________
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        =================

*தற்போது அதிகரித்து வரும் கொலை கொள்ளைகள் பற்றிய ஒரு அலசல்*..
*காரணமும் தீர்வும் என்ன?*
🔪⚔🗡⚔🔪⚔🗡⚔🔪⚔🗡

👉 *_வாழ்-ஒழுக்கமாக!!!_* 👍
👉 *_வாழவிடு-நேர்மையாக!!!_*👍

🔪⚔🗡⚔🔪⚔🗡⚔🔪⚔🗡

🔥 🌍 *உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் பேர் வன்முறைக்குப் பலியாகிறார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆப்பிரிக்காவில், ஒவ்வொரு வருடமும் 1,00,000 பேருக்கு 60.9 பேர் என்ற வீதத்தில் கொடூரமாக கொலை செய்யப்படுவதாக கணக்கிடப்படுகிறது.*

😱 *பாதுகாப்பானவையாக கருதப்பட்ட இடங்கள், அமைப்புகள், இன்று பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பவையாக கருதப்படுகின்றன ஆட்களுடைய விஷயத்திலும் இதைத்தான் பார்க்கிறோம்.*

🏌🏻 🛠⚙ *உதாரணமாக, பெரும்பாலான விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளும் கடைகளும் பயங்கர குற்றச்செயல் புரிவதற்கு ஏதுவான இடங்களாக இப்பொழுது கருதப்படுகின்றன.*

😰 *இளைஞர்களிடையே வன்முறையும் சட்டவிரோத செயல்பாடுகளும் அதிகரித்து அது கொலையில் முடிகிற நிலை ஒருபுறமிருக்க, மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல்களும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களை குறி வைத்து கொலை செய்வது, கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.*😔😡

🔪⚔🗡⚔🔪⚔🗡⚔🔪⚔🗡

⁉ *தற்போது அதிகரித்து வரும் கொலைகளுக்கான காரணங்கள்*👇

🔪 *தன்னுடைய சுயநலம் மற்றும் கோவத்தினால் கொலை செய்றாங்க*.

🔪 *சுயநலம்னா சொத்து பிரச்சனைகாக பரம்பரை சொத்து அல்லது வாங்கிய சொத்தில் மற்றவர்கள் என்னுடையது என்று சொல்லும் போதும்.*
🔪 *உறவினர்கள் சொத்தில்  பாகபிரிவினையால் வருகிறது.*

🔪 *தொழில் மற்றும் வியாபாரம்*.
*தொழிலில் போட்டி, பொறாமையாலும்*.
*அதிக வருவாய் ஈடுபடுவதற்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் மீதும் கொலை செய்றாங்க*.

🔪 *வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடிக்கும் போது இடைஞ்சலாக இருப்பவர்களை கொலை செய்றாங்க*..
*பணம் மீது கொண்ட மோகத்தால்..*

😡 *கணவன் மனைவி மீது ஏற்படும் சந்தேகம் மற்றும் பொருளாதார பிரச்சனை கருத்து வேறுபாடு போன்ற காரணத்தால் வரும் டென்சன் நாளடைவில் கொலை செய்யும் அளவுக்கு போகிறது*..

😡 *பெண்கள் மீது கொண்ட மோகத்தால் கற்பழித்து கொலை செய்றாங்க. சிறிய குழந்தை முதல் பாலியல் வன்முறை செய்து கொலை செய்றாங்க.*.

🔪 *தன்னை ஒரு பெண் விரும்பவில்லை என்றால் கூட ஆசிட் ஊற்றுவது கொலை செய்வது..*🤦🏻‍♀
🔪 *பண பிரச்சனை கடன் பிரச்சனையால் கொலை செய்றாங்க..*

🔪 *அரசியல் பின்னணி பதவிக்காகவும் பதவியை தக்க வைக்கவும் கொலை செய்றாங்க.*

🔪 *ஒரு சில இடங்களை கையக படுத்த இடையூறாக இருப்பவர்களை கொலை செய்றாங்க..*

🔪 *கொலை செய்வதற்கு என்றே பல ஆட்கள் இருக்காங்க எப்படி கொலை செய்வது என்றும்*.
🙄 *கொலை செய்யும் போது எந்த தடயமும் இல்லாமலும் திட்ட மிட்டும் செய்றாங்க.*
😖 *இது தனியாகவும் கூலிப்படை மூலமாகவும் செய்றாங்க*.

😔 *கோவத்தினால் கொலை செய்வது 10% மட்டும் தான்*.
😡 *பதிவிக்காக தேவைகளுக்காக கொலை செய்வது தான் அதிகம்.*

😱 *கொள்ளை*😱

🤦🏻‍♀ *தற்போது நாளிதழ் மற்றும் செய்திகளில் அதிகமான செய்தி கொள்ளை என்று தான்*.

🤦🏻‍♀ *பசிக்காக சிலர்*
*சிலர் தான் கொள்ளை அடிக்கிறார்கள்*..
🤦🏻‍♀ *அத்தியாவசிய செலவுக்களுக்காக கொள்ளையடிப்பது தான் அதிகம்.*

🤦🏻‍♀ *மணல் குவாரியில் இருந்து மணல் கொள்ளையடிக்கிறார்கள்*.
🤦🏻‍♀ *வரி என்ற பெயரில் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்*.

🤦🏻‍♀ *கம்பெனி தொழிற்சாலை மற்றும் பல இடத்தில் உழைப்பாலியின் உழைப்பை கொள்ளை அடிக்கிறார்கள்*.

🤦🏻‍♀ *மக்களின் தேவைகளுக்காக ஒதுக்கும் நிதிகளை அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள்.*

🤦🏻‍♀ *உழைப்பதற்கு சோம்பேறித்தனம் இருப்பவர்கள் தான் கொள்ளை அடிக்கிறார்கள்*.

🤦🏻‍♀ *வேலை வாய்ப்பு கிடைக்காமல் வருமானத்திற்கு வழியில்லாமல் கொள்ளை அடிக்கிறார்கள்..*
🤦🏻‍♀ *அரசு அலுவலத்தில் சம்பளம் பற்றாமல் கிம்பளம் என்ற பெயரில் கொள்ளை*

🤦🏻‍♀ *வங்கிகளில்,ஏடிஎம், நகை கடைகள் பூட்டி இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்கிறார்கள்.*
🤦🏻‍♀ *வசதியானவர்கள்  வீட்டில் தான் பெரும்பாலும் கொள்ளை அடிக்கிறார்கள்*.
🤦🏻‍♀ *பூட்டி இருக்கும் கடைகளில் கொள்ளை அடிக்கிறார்கள்*

🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪

🤦🏻‍♂ *தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 9950 படுகொலைகள் நடந்துள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொள்ளைகள் மற்றும் திருட்டுகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.*

💣 *தினமும் வெடிகுண்டு கலாச்சாரம், ரவுடிகள் கொலை,கொல்லைகல், ஆளும் கட்சி, எதிர் கட்ச்சி பதவியை பிடிக்க ஏற்பட்ட மோதல், கொலைகள், வெடிகுண்டு வீச்சுகள், வழிப்பறி ஆகியவை நடந்த வண்ணம் உள்ளன.*

🔥 *போலீஸ் அதிகாரிகள் ஜாதி ரீதியாகவும், திறமையற்ற அதிகாரிகளை அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் என்பதற்காக நியமித்துள்ளதாலும் தமிழகத்தில் கொலை, கொள்ளைகளை தடுக்கமுடியவில்லை என்று சமூகத்தில் பரவலாக பேசப்படுகிறது.*

🔥 *நீதி கெட்ட சமயத்தில் நீதிக்காக போராடிக்*
*கொண்டிருக்கிறோம்.*

🔥 *"தன்னை அழிக்க நினைப்பவர்களை நாம் அழிக்க தயங்க கூடாது” இதை சொன்ன நாம் மாவோயிஸ்ட் தீவிரவாதி.*

🔥 *மகாபாராதத்தில் திரெளபதி அனைவரின் முன்னிலையிலும் துகிலுரிக்கப்படும் பொழுது, என்ன செய்வது என்று  புலம்பி கொண்டிருந்தார்.  அதே போல தான் இங்குள்ள அரசியல் தலைவர்களும் தங்களது கையாலாகத்தனத்தால் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். உதவ கண்ணன் வருவான! தன்னை காப்பான!என மக்கள் ஏங்குகின்றனர்.*

👊 *நீங்கள் கண்ணனா* *அல்லது திரெளபதியா*
*என்பது உங்கள் முடிவில் இருக்கு.*👍👊

🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪
😡 *"நான் நல்லா இருக்கனும்னா என்ன வேணும்னாலும் செய்யலாம் தப்பில்லை" இன்று பெரும்பாலானவர்கள் பேசும் "பொன்மெழி"*😡

👊 *நான் நல்லா இருக்கனும்னு நினைத்தால் நலம். நான் மட்டுமே நல்லா இருக்கனும்னு நினைத்தால் அது சுயநலம்.*

👊 *அதிகமான குற்றங்கள் சுயநலத்தால்தான் நடக்கிறது. சுயநலம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.*

👊 *வன்முறைகள், போர், பயங்கரவாதம், கொலைகள், கொள்ளைகள், குடும்பத்தில் பிரிவுகள், உடன்பிறப்புகளின் உறவில் பிரிவுகள், பழிக்குப்பழி முரண்பாடுகள், சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள், பணம் பதவிக்காக நடக்கும் போராட்டங்கள், மனஅழுத்தம், இளம் உள்ளங்கள் போதைக்கும், குடிபழக்கத்திற்கும் அடிமையாகி தங்களையும் அழித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிக்கின்றனர்.*
🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪🗡🔪

🔴  *_குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் அதேசமயத்தில்,இத்தகையவர்கள் ஏன் இக்குற்ற ச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணமும் அவர்களிடமிருந்து அறியப்படுவது அவசியம்._*

🔴 *_ஒவ்வொரு குற்றச்செயல் பின்னணியிலும் பல்வேறு காரணங்கள் நிச்சயம் காணப்படும்.அவ்வாறு காணப்படும் காரனங்களில் அவர்கள் உளவியல் பிரச்சினை களுக்கு உள்ளாகியிருப்பின் அவர்களது தண்டனைக் காலங்களில் அத்தகையவர்கள் மன சிகிச்சைக்கும் உற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அத்தகைய தாழ்வான நடத்தைகளினால் ஏற்படுகின்ற குற்றச் செயலை குறைக்க முடியும்._*👍

🔴 *_புரிகின்ற குற்றங்களுக்கான காரனங்கள் கண்டறிவதும்.அக்காரணங்களிலிருந்து குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் விடுபட்டுக் கொள்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலமும் இத்தகையவர்களால் சமூக, குடும்ப மட்டத்தில் ஏற்படுகின்ற அச்சம்,பீதியை அகற்றி ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கவும் முடியும்._*👍👍👍

👇 *அறிவோம்*👇

🔴 *மத்திய அரசின் குற்ற புள்ளிவிவரப் பிரிவு....*
*இந்தியாவிலுள்ள மாநிலங்களை 6 வகையாகபிரிக்கிறது.*
🔴 *அதில் நமது தமிழ்நாடு குற்றம் உள்ள மாநிலங்களில் 2வது வகைப்பாட்டில் வருகிறது.*

🔴 *அதாவது தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை குற்றங்கள் நடைபெறுகிறது.*
*இது இந்தியாவை பொறுத்தவரை அதிக குற்றம் நடக்கும் மாநிலங்களில் 2வகை மாநிலமாகும்.*

🔴 *தமிழகத்தில் 2015 இல்  மொத்த கொலைகள் 1807. இரட்டை கொலை,மூன்று கொலை. இதில் இறந்தவர்கள் 1918*.

🔴 *தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி 2015 இல் 18183 இந்த வழக்குல்களில் ஒரு கொலை மட்டும் செய்யப்பட்டுள்ளது.*

🔴 *மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கும் அதாவது அடிப்படுவது,மரணம்,கற்பழிப்பு போன்ற குற்றங்கள் தமிழகத்தை பொறுத்தவரை வருடத்திற்கு 40,000 லிருந்து 60,000 வரை பதியப்படுகிறது.*

🔴 👆 _*இவை அனைத்து புள்ளி விவரங்களும் தேசிய குற்றவியல் பிரிவில்உள்ள பதிவாகும்.*_
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

😇 *சினிமாவில் தான் (ஹீரோ) வில்லனாக நடித்தால் ரசிக்க வைக்கும்*.

🙅🏻 *ஆனால் நிஜ வாழ்க்கையில் கொலை கொள்ளைனு போனால் சமூகத்தில் நல்ல மதிப்பு கிடையாது*.

🙅🏻 *வீட்டிலும் நிம்மதி இருக்காது. பசங்க கூட மரியாதை தர மாட்டார்கள்.*

👍 *தகுதியற்ற வேலை, ஆடம்பரமாக வாழ்வதற்கும் என்று நினைக்காமல் உழைத்து சம்பாதிப்பது தான் இன்பமாக வாழ்க்கை என்று உணரட்டும்*👍
    
*வாழ்....!!👍 வாழவிடு....!!!*👍👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🏅 *Arafath*🤷🏻‍♂🔝🔜⁩
🏅 *⁨KS⁩*
🏅⁨ *Su*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
⚔ *கௌவுரவக் கொலையாம்...*
⚔ *கொலை செய்யுறதுல என்னயா கௌவுரவம்....*🤦🏻‍♂

👍  *நம்மலால எத்தனை பேர் வாழ்ந்துருக்கான் அப்படிங்குறது தான் கௌவுரவம்...*💪

🤙 *எத்தனை பேர் செத்துருக்கான் ங்குறதுல இல்ல.*🤦🏻‍♂

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள்: 📜_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தீயவை தீய* *பயத்தலால் தீயவை*
*தீயினும் அஞ்சப் படும்*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
         ◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்ளவும்
*செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.*

புரிந்து கொள்ளவும்
*நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.*

தெரிந்துகொள்ளவும்
*பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.*

*கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

👨🏻‍💻✍ *ராமலிங்கம் அங்கப்பன்*
*0060122646502*

👩🏻‍💻✍ *SM*✍👩🏻‍💻

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *சங்கிலி பூதத்தான்*
*9150751098*
😎  *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...