Tuesday, 22 August 2017

உறவு முறைகளின் சிறப்பு ,தேவை ,பயன்* *விளக்கம்*

💞💞💞💞💝💝💝💝💝💖💖
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
💞 *கலந்துரையாடல் குழு* 💞
__________________________________
🌹 *நாள் : திங்கள்* 🌹
🌹 *தேதி :21.06.2017* 🌹
__________________________________

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

💠💠 *அறிவோம்* 💠💠

*''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும்,* *ஏனெனில் நான் ஒரு அறிவாளி''*

*.......சாக்ரடீஸ்*.........
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

💠 *நிர்வாகிகள் எண்ணம்*💠

*இறைநம்பிக்கை உள்ளவனிடம்* *கேட்டுப்பார் பக்தியின் பிணைப்பு என்ன என்று* *தெரியும். உறவுகளின்*
*மீது நம்பிக்கை* *உள்ளவனிடம் கேட்டுப்பார் பாசத்தின்*
*பிணைப்பு என்ன என்பது புரியும்.*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹👨‍👩‍👧‍👦 *தலைப்பு*👨‍👨‍👧🌹

*உறவு முறைகளின் சிறப்பு ,தேவை ,பயன்* *விளக்கம்*
👨‍👩‍👦‍👦👶🏻👦🏻👧🏻👨🏻👩🏻👱🏻‍♀👱🏻👴🏻👵🏻👨‍👩‍👧‍👦

💝 *உறவின் முக்கியத்துவதை உணர்த்துவது, பெற்றோரின் கடமையே மேலும், நம் உறவினர்கள் பற்றிய சரியான உறவு முறைகளை விவரித்து, உறவினர்களுக்கும் நமக்குமுள்ள ரத்த பாசத்தை, பிள்ளைகளுக்கு விவரிக்கும் போதுதான், நம் பிள்ளைகள் அதன் அருமையை உணர்வார்கள். இன்றைய பெற்றோர்கள் நேற்றைய பிள்ளைகள்.*🤷‍♂

🙅‍♂ *"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”*🙆‍♂

💖 *உறவு முறைதான், தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும். எனவே, ஒரு நல்ல ஆரோக்கியமான, உணர்வுபூர்வமான உறவினர்கள் இருப்பது, நமக்கு பலம்.*

🤦🏻‍♂ *"அங்கிள்" இது கலாசார சீரழிவு. ஒருவரை ஒருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் நம் பாரம்பரியத்தை சமாதியாக்கும் செயல்.*

💖 *அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, தம்பி,தங்கை, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி, பங்காளி, மச்சினிச்சி, என்று....... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் ஒரு பெயர் உண்டு.*😇

💖 *அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு.*😇

💖 *சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள்.*😇

💖 *அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கான’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள்.*👍

💖 *அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யவும், உரிமைக்கு உட்பட்ட சொந்தங்களே!*😇

💖 *அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்களாக பார்க்கப்படுகிறது.*😇

👨‍👩‍👦‍👦👶🏻👦🏻👧🏻👨🏻👩🏻👱🏻‍♀👱🏻👴🏻👵🏻👨‍👩‍👧‍👦

👫 *பேருந்து, ரயில்களில் டிக்கெட் போட்டு அடித்து பிடித்து போய் அப்படி விசேசங்களை கொண்டாட வேண்டுமா? ஏன் நாம் இருக்கும் ஊரில், நம் வீட்டில் கொண்டாடினால் என்ன? என்று கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.*

💖 *உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு செல்வதே ஒரு சந்தோசம். அதை அனுபவித்தால்தான் புரியும். நம்முடைய சொந்தங்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பதே ஒரு மகிழ்ச்சி.*😇

💔 *கூட்டுக் குடும்பமாகவும் ஜாலியாகவும் இருக்க ஆசைதான் ஆனால் என்னால் முடியாது. காரணம் என்னுடைய வேலை அப்படி மாறிவிட்டது என்கின்றனர் இன்றய தலைமுறையினர்.* 🤦‍♂

💔 *நண்பர்கள் வீட்டுக்கு போகமுடிகிற அவர்களால் உறவினர்கள் வீட்டுக்கு ஏன் போகமுடியவில்லை.* *எல்லாம் பணம், வேலை* *போன்றவைகளை நோக்கிய பயணமாக இருப்பதால் உறவுகள் வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை.*

☹ *'கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’  இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை.*👍

🙅🏻‍♂ *இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது, ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது,  வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது இது நான் செல்ல நார்வே நாட்டு "கவிஞர் அர்னா கர்பார்க்" சொன்னது.*💁🏼‍♂

💝 *உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. நம்முடைய சமூகம் உறவுகளால் பின்னப்பட்டது. இதை மாற்ற நினைத்தாலும் முடியாது அதுதான் உண்மை.*

💝 *இரண்டு ஆத்மாக்கள் ஓர் ஆத்மாவாக ஐக்கியமாகி.....ஓர் ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால்... அந்த உறவே புனிதமான உறவு.*

💝 *பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எங்கே பந்தம் நம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.*

👵🏻 *“அற்ற களத்தின்ற நீர்ப்பறவைபோல்*
*உற்றழித் தீர்வா ருறவல்லர்-* *அக்குளத்திற்கொட்டியு மாம்பலும்* *நெய்தலும் போலவே*
*ஒட்டி யுறுவா ருறவு!”*

*......ஔவையார்*👵🏻

*~~விளக்கம்~~*

💖 *குளத்தில் நீர்வற்றிய* *உடன் விலகிச்செல்லும் *
*பறவைகள் போல,* *நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச்* *செல்பவர்கள் உறவினர்அல்லர்.அந்தக் குளத்திலேயே* 
*அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் , கொடிகளைப் போல,நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து  கொள்பவர்களே நம் உறவுகள். அப்போ நீங்க பறவையா அல்லது அல்லியானு நீங்கதான்சொல்லனும்*👍

👨‍👩‍👦‍👦👶🏻👦🏻👧🏻👨🏻👩🏻👱🏻‍♀👱🏻👴🏻👵🏻👨‍👩‍👧‍👦

💖 *பெரும்பாலான நேரங்களில், கடைப்பிடிக்க முடியாத பக்குவமற்ற சில சட்டதிட்டங்கள் மனிதனை திசை மாற்றுகிறது. தான் சுதந்திரமாக இயங்குவதற்குப் போதிய வசதி இல்லை என்று கருதும்போது, வாழ்க்கையின் அற்புதமான தருணங்கள் வீணாகின்றன. எப்போ ஒருவருடைய ஏமாற்று வேலை அவரை சுற்றியுள்ள பலரையும் சேர்த்து பாதிக்கிறதோ, அப்போது நம் இதயம் வலித்தாலும், உறுதியான முடிவுதான் எடுக்க வேண்டி வருகிறது.*

👨‍👩‍👧‍👦 *குடும்பம் உறவு என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைப்பேயாகும்.* *அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத் தன்மை முதலிய நல்லியல்புகள் எல்லாம் குடும்ப உறவுகள் அமைப்பிலிருந்தே பூத்துக் குலுங்குகின்றன.*
*சமுதாய வாழ்விற்கு மனமும்,மகிழ்வும், நிறைவும் கிடைக்க செய்கிறது.*

😇 *ஆக உறவு என்பது மனித பிறப்போடு* *சம்பந்தப்பட்டது. அதை பேணுவது மனித*
*இயல்போடு சம்பந்தப்பட்டது.*😇

🌷 *நன்றி* 🌷
🌷 *நன்றி* 🌷

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑

💐🤝🤝🤝 *இன்றிலிருந்து குழுவில் உள்ள அனைவருமே நல்ல உறவினர்கள் ஆவார்கள்*👏👏👏்💐

🤣 *இன்றைய தலைப்பில் பங்குகொண்டு அனைவரும் அம்மாவழி சொந்தங்கள்....*🤣😂
😂 *பதிவிடாதவர்கள் அப்பாவழி சொந்தங்கள்...ஆவார்கள்*🤣😂🤣😂

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤      

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*'வாழ்வதற்கு பணம் தேவைதான்,ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடது.கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற மிருக வாழ்க்கைத் தரத்திற்கு மனிதன் தாழ்ந்து கொண்டிருப்பதை* *இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்து கொண்டிருக்கின்றனர்*
*உங்களது சொந்த பிரச்னைகளுக்காக  உறவுகளின்மேல் வெறுப்பை காட்டாதீர்.*
*இந்நிலை இப்படியே நீடிக்குமானால் வருங்காலத்தில் குடும்பம் என்னும் சமுதாயக் கட்டமைப்பு இல்லாமலே போய்விடும்.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்*         
*சுற்றத்தார் கண்ணே யுள.*          

*_📜 விளக்கம் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஒருவன் வறியவனான
காலத்திலும் அவனுக்கும் தமக்கும்
இருந்த பழைய காலத்து உறவைப்
பாராட்டிப் பேசுகின்ற பண்புகள் என்பது சுற்றத்தார்கள் மற்றும் நெருங்கிய
உறவினர்கள் இவர்களிடத்தே உண்டு.

*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்:-
*பிறரோடு அதிகமாகப் பழகாதே!பேசாதே!*

தெரிந்துகொள்:-
*அதிகமாகப் பழகி பேசுபவர்களைப் பிறர் என்று நினைக்காதே!*

புரிந்துகொள்:-
*பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால், உன் சிறப்புக்களை ஊர் புகழும்.*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻✍ *ராமலிங்கம் அங்கப்பன்*
*0060122646502*
✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *கமலி*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...