🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👶🏻👧🏻👩🏻👩🏻🎓👩🏻⚕👩🏻🌾👩🏻💼👩🏻🔬👩🏻🚒👩🏻✈👩🏻🚀
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :22.08.2017.* 🌹 🌷 *கிழமை : செவ்வாய்க்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
👸🏻 _*புதுமைப்பெண்*_👸🏻
👳🏻♀👸🏻👳🏻♀👸🏻👳🏻♀👸🏻👳🏻♀👸🏻👳🏻♀👸🏻👳🏻♀
💪 *நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,*
*நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,*
*திமிர்ந்த ஞானச்* *செருக்கும் இருப்பதால்*
*செம்மை மாதர்* *திறம்புவ தில்லையாம்...*
*அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்*
*அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை*
*உமிழ்ந்து தள்ளுதல்* *பெண்ணற மாகுமாம்*
*உதய கன்னி உரைப்பது கேட்டீரோ...!!!*😇
👸🏻 *உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,*
*ஓது பற்பல நூல்வகை கற்கவும்,*
*இலகு சீருடை நாற்றிசை நாடுகள்*
*யாவுஞ் சென்று புதுமை* *கொணர்ந்திங்கே*
*திலக வாணுத லார்நங்கள் பாரத*
*தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்..*
*விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை*
*வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்...!!*👍
👸🏻 *சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்...!!*
*சவுரி யங்கள் பலபல செய்வராம்...!!*
*மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்..!!*
*மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்...!!*
*காத்து மானிடர்* *செய்கை* *யனைத்தையும்*
*கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்...!!*
*ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்...!!*
*இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ...!!!*
🙏 *போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!*
*இப்புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டிங்கே..!!!*
*மாற்றி வையம் புதுமை யுறச்செய்து*
*மனிதர் தம்மை*
*அமர்க ளாக்கவே*
*ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்*
*அருளி நாலொரு கன்னிகை யாகியே*
*தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்*
*செல்வம் யாவினும்* *மேற்செல்வம் எய்தினோம்....!!!*
👳🏻♀ *மகாகவிஞர் சுப்பிரமணிய பாரதியார்*👳🏻♀
🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
👰🏻 *பெண்கள் மீதான குற்றங்களுக்கு அவர்களின் உடையும் காரணமாகிறதா? அவர்களின் அழகு பராமரிப்புகள் ஆபத்தை தருகிறதா? பெண்ணியம் பேசி தவறான வழியில் செல்கிறார்களா?*
*பாகம்*➖1⃣
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
👸🏻 *_பெண் என்பவள் கண்ணாக காத்து நிற்பவள். கலங்கமில்லாத கெளரவத்தை போற்றி பாதுகாப்பவள். இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.இன்றைய காலத்தில் அனைத்திலும் ஆணுக்கு பெண் சரிசமமாக வளர்ந்து சாதனை புரிந்து கொண்டிருக்கும் போது,பல பிரச்சனைகளுக்கும் பெண்களேதான் காரணமாக அமைகிறார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தான் இன்று இத்தலைப்பு வைக்கப்பட்டதன் காரணமே......_*
👸🏻 *_ஒரு பெண் நல்ல எண்ணங்களோடும், குணங்களோடும், தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், பொறுப்போடும், பொறுமையோடும், இருந்தாலே போதும் வீட்டிலும் ,நாட்டிலும் பல பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கவும், தவிர்க்கவும் முடியும் எனலாம்._*👍
🤷🏻♀ *_மேலும் இன்று நிகழும் பிரச்சனைகள் பலவற்றிக்கு பெண்கள் உடையிலேயே காரணம் சொல்லப்பட்டு வருகிறது.இதற்கு காரணம் வளர்ந்து வரும் hi tech டெவலப் மெண்ட் ஆஹ்...இல்லை பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்ணின் அடக்கத்தை மறந்து வருகிறோமா?????_*😓
🕵🏻♀ _*ஒரு பெண்ணுக்கு எது அழகு????? தம் உடல் அழகை அனைவருக்கும் காட்டுவதா???? இல்லை தம் அறிவால் பிறர் போற்றும் படி சாதிப்பது அழகா????*_
👰🏻 *_பெண்கள் என்றாலே வெளித்தோற்றத்தை பராமரிக்க அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள் என்ற எண்ணம் தான் உள்ளது. அதற்கேற்றார்ப்போல் தான் அனைத்து மாற்றங்களும்..._*
*_முன்னேற்றம் என்றபெயரில் கட்டுக்கடங்காமல் நாகரிகம் வளர்ச்சி என்ற காட்டுத்தீப்போல் பரவிக்கொண்டு வருகிறது._*👩🏻🎤
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
🕵🏻♀ _*பெண்ணியம் என்பது சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பேசுவது, சுதந்திரமாக பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உணர்த்துவது தான் பெண்ணியம்*_👍
_*ஆனால் இங்கோ🤦🏻♀*_
🤦🏻♀ _*பெண்கள் இன்று மேலாடை (ஷால்) போடக் கூட யோசிக்கின்றனர்.*_
🤦🏻♀ _*மேலாடைகளை ஒரு பொருட்டாக கூட நினைப்பதில்லை. இருசக்கர வாகனங்களில் போகும் கூட, தன் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டைலுக்காக பறக்க விடுகின்றனர். இதனால் பெரும் விபத்துக்கள் நடைபெறுகிறது.*_
🤦🏻♀ _*டி சர்ட்களில் கூட வசனங்கள் சரியில்லாதவாறு, கேலிக் கூத்தாகவும், ஆண்களை சுண்டி இழுக்கும் விதமாகவும் அணிகின்றனர்.*_
🤦🏻♀ _*டி சர்ட்கள் போட்டாக் கூட மேலாடை அணிவதில்லை. கேட்டால் சுதந்திரம் என்று சொல்வார்கள்.*_
🤦🏻♀ _*பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று கூறி ஆங்கில வருடப் பிறப்பு கூட இரவு நேரங்களில் பீச், பஃப், போன்ற இடங்களில் ஆண்களுக்கு நிகராக கொண்டாடி மகிழ்கின்றனர்.*_
🤦🏻♀ _*தன் உடல்களை டாட்டூஸ் என்ற கார்ட்டூன்களை தன் உடல் முழுவதும் வரைந்து கொண்டு தானே கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் என்ன நன்மை என்று புரியவில்லை🤔.*_
🤦🏻♀ _*குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் கூட தன் அழகு போய்விடுமோ என்று கூட சில பெண்கள் நினைக்கிறார்கள். காலக் கொடுமை.*_
🤦🏻♀ _*கட்டாயமாக குழந்தைகளுக்கு 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகள் நலனை மேலும் அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு உருவாக்கும் என்ற சிந்தனை கூட பெண்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்ற சந்தேகம் எழுகின்றது.*_
👉 🏌🏻♀ _*பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது கூட, அதற்கேற்றவாறு ஆடைகள் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.*_
⛹🏻♀🤾🏻♀🤽🏻♀ _*உதாரணமாக பி.வி.சிந்து, சானியா மிர்சா, சாய்னா நேவால், கபடி, கிரிக்கெட், மல்யுத்த போட்டிகளில் கலந்துக் கொள்ளும் பெண்கள், அவரவர் விளையாட்டுக்கேற்ப ஆடை அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது.*_👍
🤦🏻♀ _*அதை கூட ஒரு சில (நோட் திஸ் : குறிப்பிட்ட) இளைஞர்கள் பார்வை, தவறான கண்ணோட்டங்களில் பார்க்க நேரிடுகிறது.*_
😴 _*இந்த இடத்தில் பார்க்கும் போது யார் மீது குற்றம் சுமத்துவது?*_
🤒 _*அதே போல நாங்கள் அணிவதில் என்ன தவறு என்று சில பெண்கள் நினைக்கின்றார்கள்.*_
👩🏻⚖ _*பெண்களே ..! ஒன்று நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள் விளையாட்டு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு..😏*_
👩👩👧 _*உலக அளவில் தமிழ் பெண்களுக்கு என்று, ஒரு தனி மதிப்பு மரியாதை உண்டு. அது தற்போதும் நீடிக்கின்றதா என்று கேட்டால் ❓ கேள்விக்குறி தான்.*_
🤦🏻♀ _*கோலம் போடத் தெரியாத பெண்கள், சமைக்க கூட கற்றுக் கொள்ளாத பெண்கள், விருந்தினர்களை எவ்வாறு கவனிப்பது போன்ற அடிப்படை தேவைகள் தமிழ் பெண்களுக்கு உண்டான கலாச்சாரம் மாறி வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே...*_
🤦🏻♀ _*பெண்ணியம் என்று சொல்கிறோம். பெண்களுக்கு அழகு என்பது மேக்கப் போடுவதில் இல்லை. பொட்டு வைப்பது, பூ சூட்குவது, வளையல் அணிவது, இன்னும் பல இருக்கின்றது. தற்போது இதை அனைவரும் சரிவர பின்பற்றுகிறார்களா ❓*_
🤦🏻♀ *கண்ட கண்ட கிரீம்களை தடவி, அழகு என்ற பெயரில் பெண்கள், தங்களை தாங்களாகவே வேறொரு கோணத்தில் நினைத்துக் கொள்கிறார்கள்.*
👩🏻⚖ _*பெண்களிடம் அழகை யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை.பெண், பெண்ணாக இருக்கிறாளா என்பதை மட்டுமே அனைவரும் ரசிக்கின்றனர்.*_😇
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
😰 _*இன்றைய காலத்தில் ஒரு கல்யாணத்திற்கே ஆயிரம் செலவுகள் ஆகிறது ......இதில் மேக்கப் க்கு தனி செலவு ஒத்துக்கப்படுகிறது.*_🤦🏻♀
_*மேலும் பள்ளி,கல்லூரி, வளர்ச்சி போல் இன்று பியூட்டி பார்லர் வளர்ச்சியும் பெரும்பங்கு உள்ளது.*_
🤦🏻♀ _*இன்று எதற்கெடுத்தாலும் அது ஒரு cream ம் பயன்படுத்தி சரி ஆகிவிடும் என்று நம்பவைத்து ஏமாற்றுவது. குறிப்பாக 30 நாட்களில் சிவப்பழகு.....*_🤦🏻♀🤦🏻♀🤦🏻♀
_*இப்டி எல்லாமே ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கிரீம் கொண்டு நிறத்தை மாற்றிவிட்டார் என்றால் நம் நாட்டில் உள்ள அனைவரும் இன்று அந்த கிரீம் ம் பயன்படுத்தி சிவப்பாக மாறிஇருக்க வேண்டுமே அல்லவா?????*_
_*அழகுக்கு ஆடம்பரம் தேவையா???பாரமரிப்பு என்ற பெயரில் ஏன் இந்த போலி வேலை....????*_
_*அழகு என்ற பெயர் ஆபத்திற்கு வழிவகுக்கிறது.....*_
🏢 _*இந்த கார்ப்பரேட்டுகள் முக்கியமாக குறி வைப்பதே பெண்களை தான்.அவர்களை கவர்வதற்க்கு என்ன கட்டுக்கதைகளை வேண்டுமென்றாலும் கிளப்பி விட தயங்க மாட்டார்கள்.அவ்வாறு செய்வதன் விளைவுதான் காஸ்மெட்டிக்ஸ் (cosmetics ) என்று சொல்லப்படும் அழகு சாதன பொருட்களின் அமோக விற்பனை. கார்ப்பரேட்டுகளின் பொய் பித்தலாட்டங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியானவை.*_🤦🏻♀
🙇🏻♀ _*ஒரு பெண் தன்னை அழகாக காட்டிக்கொள்ளும் போது ஆண் அந்த அழகை ரசிக்கிறான்.* *ஒரு பெண் தன்னை கவர்ச்சியாக காட்டிக்கொள்ளும் போது ஆண் உடலழகால் கவரப்படுகிறான்.*_ _*விளைவு????அவனுடைய உணர்வு தூண்டப்படுகிறது. இது அவளை மட்டும் பாதிக்கும என்றால் அது தவறு.ஒரு ஆண் தேர்வு செய்வது அவனைவிட பலவீனமான பெண்னை தான். நாகரிமற்ற உடைகள் அணிந்த தைரியாமான பெண்ணினால், நாகரிகமாக உடை அணியும் பலவீனமான பெண்களும் பாதிப்புக்குள்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.*_👍👍👍👍
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👶🏻👧🏻👩🏻👩🏻🎓👩🏻⚕👩🏻🌾👩🏻💼👩🏻🔬👩🏻🚒👩🏻✈👩🏻🚀
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :22.08.2017.* 🌹 🌷 *கிழமை : செவ்வாய்க்கிழமை* 🌷
____________________________________
💖💖💖💖💖💖💖💖💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
😇 *நல்லவன், கெட்டவன் என்று யாருமில்லை....!!!*
😇 *அனைவருக்கும் தவறு என்பது சகஜம் தான்...*
*ஆனால் தப்பு என்பது தண்டனைக்குரியதுவே....!!*👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
👰🏻 *பெண்கள் மீதான குற்றங்களுக்கு அவர்களின் உடையும் காரணமாகிறதா? அவர்களின் அழகு பராமரிப்புகள் ஆபத்தை தருகிறதா? பெண்ணியம் பேசி தவறான வழியில் செல்கிறார்களா?*
*பாகம்*➖2⃣
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
👩🏻⚖ _*ஆடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம். இதற்கு பெண் மட்டும் விதிவிலக்கல்ல. பெண்கள் எந்த வகையான ஆடை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால், அது பார்ப்பவர்களுக்கு ஆபாசமாகத் தெரியக் கூடாது. தற்போது பெண்கள் அனைத்துத் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆகையால், அவர்கள் இடத்திற்கேற்ப, விருப்பத்திற்கேற்ப உடை உடுத்துவதே சரியானது.*_👍
🤦🏻♀ _*எடை குறைந்தால் ரேஷன்..!!உடை குறைந்தால் ஃபேஷன்...!!!*_ _*என்றிருப்பதால்தான் பெண்கள், ஆண்களால் பலவிதமான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். ஆண், பெண்ணின் உடலமைப்பு வேறு. பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை அணிவதுதான் அவளுக்கு நல்லது.*_👍
🕵🏻♀ _*அதிலும் பெண்கள் அணியும் உடைகளுக்குத்தான் எத்தனை சர்ச்சைகள்? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு ஆண்களும் காரணம் என்பதை மறந்து, பெண்களின் ஆடையை ஒரு காரணமாகக் கூறுவது தவறு என்கிறபோதும் ஆண்களை அறிந்த பெண்கள் சரியாக ஆடை உடுத்தவும் அறிந்துகொள்வதில் தவரில்லையே??????*_
🕵🏻♀ _*ஆடை என்பது உடலை மூடி, கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்தவா? அல்லது மற்றவர் கண்களுக்கு விருந்தளிக்கவா??*_
🕵🏻♀ _*பெண்களின் ஆடை குறித்துக் குறை சொல்வது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேதனை தரும் செய்தி. செல்லும் இடத்துக்குத் தகுந்தாற்போல் உடையணிவதுதான் நம்மையும் நம் தகுதியினையும் காப்பாற்ற உதவும் சரியான வழி.*_
👩🏻⚖ _*ஆடை மனிதனின் மானத்தை மறைக்கத்தானே தவிர அடிமைத்தனத்தை, சுதந்திரத்தைக் கட்டுபடுத்த அல்ல.*_
🤦🏻♀ _*ஆண்களைவிடப் பெண்கள் உடல்ரீதியாக மாறுபட்டவர்கள் என்கிறபோது, ஆடைக் கட்டுப்பாடு தவறு என்று சொல்ல முடியுமா? அரை நிர்வாணம்தான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை பெண்களுக்கு வேதனைதான் தரும்.*_😔
🕵🏻♀ _*பெண் தன் உடல் தெரியும் வண்ணம் ஆடை அணிவது அவளது தனிப்பட்ட விருப்பம்தான். எனினும் அவளின் அந்த உடலை பல ஜோடிக் கண்கள் ரசிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உடலை மறைத்து உடை அணிய வேண்டும் என்பது பிற்போக்கான எண்ணமே இல்லை. ஆணின் மனநிலை கவர்ச்சியாக உடையணியும் பெண்ணைச் சற்று ஆபாசமாகத்தான் பார்க்கும். கண்ணியமாக உடையணிபவளைக் கண்ணியமாகத்தான் பார்க்கும். இயற்கையாகவே ஆண், பெண்ணை இச்சையோடுதான் பார்க்கும்படி படைக்கப்பட்டான். இது தெரிந்தால் எந்தப் பெண்ணும் கண்ணியமாக உடுத்துவாள்.*_👍
♨ _*ஆண்கள் ஆசையை அடக்கியவர்களே தவிர ஆசைப்படாதவர்களாக இருந்திருக்க முடியாது.*_♨
🕵🏻♀ _*ஆடைக் குறைப்பு அல்லது துறப்பது என்பதுதான் சுதந்திரம் என்று கருதுகிறீர்களா?*_
👩🏻⚖ *_பெண்கள் விஷயத்தில் மட்டும் ஆடையைக் குறைப்பதுதான் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பெண்களையும், பெண்களின் உடலையும் வியாபார, விளம்பரக் காட்சிப்பொருளாக இந்த உலகம் மாற்றுகிறது. இது அடிமைத்தனம் என்று பெண்களுக்கும் புரிவதில்லை._*😔
👩🏻⚖ _*இன்று நாகரிகம், நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் படும் பாட்டை எடுத்துச்சொல்வோர் யார்? எந்தப் பொருளையும் விளம்பரப்படுத்த பெண்களை ஏன் அரைகுறை ஆடைகளுடன் காட்ட வேண்டும்? சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களில் தொன்னூறு சதவிகித விளம்பரங்கள் பெண்களின் உடம்பைக்காட்டித்தானே வருகின்றன. இவைதான் பெண்கள் பெற்ற முன்னேற்றமா? ஆண்கள் பார்த்து ரசிக்கும் பொருளா பெண்கள்? சிந்திக்க வேண்டாமா?*_😣
😡 _*ஊடகங்களும் விளம்பரங்களும் பெண்களை அழகுசாதனப் பொருட்களின் நுகர்வோராகவே காட்டுகின்றன. இதில் யதார்த்தம் என்னவென்றால் பெண்களுமே இத்தகைய மாயையிலேயே நிலைத்து ஆடைகள் மட்டுமே தங்களை வெளிப்படுத்தும் என்று மயங்குவதே.*_
🤒 _*பெண்களை அதிகமாக ஆடை அணியச் செய்து அவர்களின் உடலை மூடச்சொல்வது பெண் சுதந்திரத்தில் குறுக்கிடுவது என்று முழங்கும் பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்வோரும், பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் சினிமா, மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதும் சாயம் பூசி மறைப்பதும் ஏன்? இதையும் அந்த சினிமாவில் நடித்த நடிகையின் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?*_😏
🙇🏻♀ *_கவர்ச்சி உடையணிந்து செல்லும்போது மட்டுமல்ல, பாரம்பரிய உடையணிந்து செல்லும்போதும் பெண் கண்டனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகிறாள். கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்பதை மறந்து, அது பெண்ணுக்கான அடையாளம் என எண்ணும் பிற்போக்கு எண்ணமே பெண்ணை ஒவ்வொரு விஷயத்திலும் குறைகாண முற்படுகிறது._*
👩🏻💼 *_நமது நாட்டில் பெண்களும் படித்து, ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்க வர்க்கத்தினரால் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. பாலியல் சுரண்டலுக்கு, வன்முறைக்கு எளிதாக ஆளாகிறார்கள். பெண் சுதந்திரம் என்று போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணுரிமைவாதிகளும், இயக்கங்களும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துக்காகப் போராடவேண்டும். இதன் மூலம்தான் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியும். உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்._*👍
😔 _*பெண்களின் ஆடைகள் பேசப்படும் அளவுக்கு அவர்களின் திறமைகள் பேசப்படுவதில்லை.*_
👩🏻⚖ _*ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதில் ஆடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன*_
👩🏻⚖ _*இங்கு உரிமை என்பதற்கு ஒரு வரையறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. உரிமை என்பது சுய ஒழுங்குகளையும் கண்ணியத்தையும் பாழ்படுத்துவதாக இருத்தல் கூடாது.*_
🕵🏻♀👩🏻⚖ *_ஆடையில் சுதந்திரம் என்பது ஒரு பெண்ணுக்கு ஆபத்தாகத்தான் முடியும். எனவே ஆடைக் கட்டுப்பாடு பெண்களின் கண்ணியத்தைக் காக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது._*🙏
👶🏻👧🏻👩🏻👵🏻👩🏻🎓👩🏻🍳👩🏻⚕👩🏻🚒👩🏻✈👩🏻🚀👩🏻🎨
👸🏻 *பெண்ணியம் பற்றி பேசுபவர்களுக்கு... 👇🏽👇🏽👇🏽*
👩🏻💼 _*உடல் அமைப்பாலும், உள்ளத்தின் உணர்வுகளாலும் ஆண் பெண் இருவரும் வேறுபட்டிருந்தாலும் இந்த உலக வாழ்க்கையின் இயக்கத்திற்கு இருவரும் சமமான பங்கையே அளிக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றொருவரின் இயக்கம் என்பது சாத்தியப்படாத ஒன்று.*_
🕵🏻♀ _*நம்முடைய புராணக் கதைகளில் மட்டுமில்லாமல், சிவன் பாதி சக்தி பாதி எனும் அர்த்தநாதீஸ்வரரின் உருவமும் இக்கருத்தைத்தான் வலியுறுத்துகின்றது.*_
🕵🏻♀ _*சம உரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும். இது இரு பாலுக்கும் பொதுவான ஒன்று. ஆண் பெண் சமத்துவம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், நாட்டிற்கும் வேறுபடுகிறது.*_
🕵🏻♀ _*இந்த சமூகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் குறிப்பிட்ட சில வரைமுறைகளை வரையறுத்துள்ளது.*_
🕵🏻♀ _*அந்த வரையறைக்குள் இருவரின் பங்கு இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது; இன்னமும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.*_
🕵🏻♀ _*உடலால் வலிமையான ஆண் குடும்பத்தை காப்பாற்ற வெளியே சென்று வேலை செய்ய வேண்டும் என்றும், அவனுக்கு அடுத்து இருக்கும் பெண் குடும்ப பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோட்ப்பாட்டைக் கொண்டிருந்தனர் அதைக் காலங்காலமாக கடைப்பிடித்தனர்.*_
🛡⏳ _*கால மாற்றத்தில் இந்த நிலை மாற இருவரும் வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட சம உரிமை என்ற குரல் வலுவாகியது.*_
😇 _*இந்த சம உரிமையும், இந்த சமுதாயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான பங்கும் எதன் அடிப்படையில் கோரப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துக் கொண்டனரா என்பதுதான் தெரியவில்லை.*_
😇 _*சம உரிமையை நிராகரிப்பதாலும், தவறாக புரிந்துக் கொள்வதாலும் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. இன்றைய சூழலில் சம உரிமை என்ன என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.*_🙏
👸🏻 _*பெண்கள் அவர்களின் நற்பண்புகளால் மதிக்கப்பட வேண்டுமே தவிர...!!!*_
🙅🏻 _*அவர்களின் அநாகரிக செயல்களால் மற்றவர்களால் மிதிக்கப்படக்*_
_*கூடாது....!!!*_
👩🏻⚖ *_இதை முதலில் பெண்களும் அறிய வேண்டும்..!!_*👍
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர்கள்:*👑
🥇 🎉 *navaseK*🎉
🥈 🎉 *surajthoothuvansuresh023*🎉
🥉 🎉 *நிருபன்கதிர்*🎉
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😏 *ஆடை அணிவதில் கண்ணியம் இல்லையெனில் பெண்ணியம் பேசி என்ன பயன்...❓* *ஆடவர்கள் நம்மை எப்படி நோக்குகிறார்கள் என்பதில் எங்கிருக்கு பெண்ணியம்...!!*
👩🏻💼 *நாம் நம்மை எவ்வாறு அவர்களின் முன் நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது பெண்ணியம்...!!!*👍
*_📜 திருக்குறள்: 📜_*
*தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற*
*சொற்காத்துச் சோர்விலாள் பெண்*
💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்ளவும்
*தன் வினை தன்னைச் சுடும்*
தெரிந்து கொள்ளவும்
*பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.*
புரிந்துகொள்ளவும்
*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.*
🕊🌹🕊🌹🕊🌹🕊🌹🕊🌹🕊
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*📠
✍👩🏻✈ *கமலி*👩🏻✈✍
🕊🌹🕊🌹🕊🌹🕊🌹🕊🌹🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment