🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :31.08.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
👍 *_நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே._*
*_நியேட்சே._*💐
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
👍 *செயற்கையாக எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும்…*
👎 *ஆனால் ஒரு சொட்டு நீரை உருவாக்க முடியாது.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
💧 *நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் நதிகள் இணைப்பு பற்றிய ஓர் அலசல்:*
💦💦💦💦💦💦💦💦💦💦
💧 *இயற்கை நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம். இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது.*
*இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை என்றே நம்மனம் சொல்லும்.*😔
♻ *ஐம்பூதங்கள் எனப்படும் 🌖நிலம், 🌊நீர், 💨காற்று, 🔥நெருப்பு, 🌤ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.*
♻ *இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன.*
💦 *_"நீரின்றியமையாது உலகு"_*
எனவே இயற்க்கையை காப்பற்ற நீர் நிலைகளை பாதுகாப்பு மற்றும் நதிகள் இணைப்பு பற்றி காண்போம்.
⚔ *உலகில் அடுத்த ஒரு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படுமானால் அது நீருக்காக மட்டும் தான் இருக்கும்.*💧
💧 *உலகில் தீர்வு காண வேண்டிய ஒரு முக்கியப்பிரச்சினை தண்ணீர். ஒரு பக்கம் நதிநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய அளவில் அழிவு உண்டாக்கி கடலில் போய்ச்சேருகிறது. மறுபக்கம் தண்ணீர் பற்றாக்குறை பஞ்சம் பட்டினி குடிக்க தண்ணீர் இல்லை . நம் நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால் நீர்நிலைகளை பயன்படுத்தி குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடு குளம், குட்டைகள், ஆறு, ஏரி, ஆறுகள் நிரம்பி விவசாயம் செழித்து, தொழில் வளர்ச்சிக்கும் நீர்மின், போக்குவரத்து திட்டங்களைச் செயல்படுத்தவும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.*
💧 *_நீர்நிலைகள்:_*💧
*குளம், குட்டைகள், ஆறு, ஏரி, ஆறுகள், நதிகள் என 48வகையான நீர்நிலைகள் உள்ளன.*
💧 *_நீர்நிலைகள் பாதுகாப்பு:_*💧
💧 ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, இருப்பதை அழித்து அதன் அழகைக் கூட்டுவது இல்லை. இயற்கை வளங்களைக் காத்து அதன் அழகை காட்டுவதே ஆகும்.
🌾 *"நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்”*என காந்தியடிகள் சொன்னதை இதுபோன்ற விவாதங்களில் மட்டுமே நினைவு கூற வேண்டிய நிர்பந்தத்தில் நாம் உள்ளோம்.
🌾 *விவசாயத்தை காக்க ஒரு நெடுவாசல் கதவு திறந்தால் போதாது. நிறைய கதவுகள் அடைக்கப்பட்டு, விவசாயம் கிட்டத்தட்ட இருளாக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. இயற்கை வளங்களை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவே இந்த நிலைக்குக் காரணம்.*😔
💧🌊💦🌊💧🌊💦🌊💧🌊💦
💧 *_நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்தல்:_*
💧நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற *ஒரு பராமரிப்பு வேலைகள்தான் !*
💧நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும் !
💧 *நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது,*
💧 *நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவுநீர் குட்டைகள், சம மட்டக்கரைகளை அமைப்பது,*
🤙 *நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளையும், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளையும் முற்றாகத் தடை செய்வது.*
🤙 *விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை உருவாக்குவது.*
🤙 *நீண்டகால அடிப்படையில், சேதமடைந்த வனக்காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது.*
🤙 *விவசாய நிலங்களில் உரம் – பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது.*
🤙 *ஆற்றுநீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது.*
🤙 *தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடை !*
🤙 *தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு செய்வதை தங்கள் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும் !*
💧🌊💦🌊💧🌊💦🌊💧🌊💦
🌧 *மழைபொழிவில் தென்மேற்குப் மற்றும் வடகிழக்கு பருவமழை*🌧
🌧 _இரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. ! அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீ.–ம், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீ–ம் கிடைக்கிறது. குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீ.-நீரும் கிடைக்கிறது !_
🌧 _தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. இதில் கணிசமான அளவு கடலில் கலந்துவிடுகிறது ! கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்!_
🌊 *_17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) ஆகியவை மூலம் ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! (ஒரு கன மீட்டர் நீர் =1000 லிட்டர்). இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது._* *_எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது 24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !_*
💧🌊💦🌊💧🌊💦🌊💧🌊💦
*🌊இந்திய ஆறுகள்:*🌊
🌊 *தீபகற்ப இந்திய ஆறுகள்:*
🏔இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.🌊
🏔🌧மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை *புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.*
🌊 *கோதாவரி:*🌊
👉1450 கி.மீ நீளம்.
🌊மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.
🌊 *கிருஷ்ணா:*🌊
👉1290 கி.மீ நீளம்.
🏔மகாராஸ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
🌊 *துணையாறு :துங்கபத்திரா*
🌊 *நர்மதை:*🌊
👉 1290 கி.மீ நீளம்.
🏔 மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.🌊
🌊 *மகாநதி:*🌊
👉890 கி.மீ நீளம்.
🌊அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.
🌊 *காவிரி:*🌊
👉760 கி.மீ நீளம்.
🌊குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.
🌊 *துணையாறுகள்:* பவானி, நொய்யல், அமராவதி, கபினி🌊
🌊 *தபதி:*🌊
👉720 கி.மீ நீளம்.
🌊மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
🌊 *தாமோதர்:*🌊
👉 530 கி.மீ நீளம்.
🌊சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.
🌊 தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.
🏔மேற்கு மலைத்தொடரில் மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.🌊
🌊 *புற தீபகற்ப இந்திய ஆறுகள்:*🌊
🗻 இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.🌊
🌊 *சிந்து:*🌊
👉 3000 கி.மீ நீளம்.
🌊பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.
🌊 திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
🌊 இதன் துணையாறு சட்லெஜ் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
🌊 *இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.*
🏔சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.
🌊 *பிரம்மபுத்திரா:*🌊
👉2900 கி.மீ நீளம்.
🏔கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை நதிகளில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.
🌊இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.
🌊 *கங்கை:*🌊
👉2510 கி.மீ நீளம்.
🗻இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.
🌊கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.
🌊 *முக்கிய துணையாறுகள்:*👇 யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி
🌊 கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.
💧🌊💦🌊💧🌊💦🌊💧🌊💦
🌊 *கடல் நீரில் பாதை வகுத்து கண்டங்களை இணைத்தோம்.*
🌧 *வான் மண்டலத்தில் பறந்து சென்று அண்ட சராசரங்களையும் ஆய்வு செய்தோம்.*
💧 *ஆனால் இந்த மண்ணில் தோன்றி ஓடிச்சென்று வீணாய் கடலில் கலக்கும் நதிகளையா நம்மால் இணைக்க முடியாதா என்ன!*
🌧இல்லையேல் இயற்கையாக பெய்த மழையினால் அமைந்த நீர்நிலைகளை துறந்து *_செயற்கையான மழைபொழிவு பெற மேக விதைகளை (Cloud Seeding)_* தூவும் நிலையை அடைவோம்.
💧 *வாருங்கள் நீர்நிலைகள் உயிர்ப்போடிருக்க ஒன்றுபட்டு நதிகளை இணைப்போம். விவசாயம் செழிக்க செய்து மற்ற தொழில்களையும் வளம்பெறச்செய்து, உலகில் வலிமைபெற்ற பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றுவோம்!!*👍
💧 *எந்தவொரு உயிரினமும் அளவுக்கு மீறி எதையும்அடைய நினைப்பதில்லை.*
😔 *ஆறறிவு ஐந்தறிவை அழகாக பழக்குகிறது. ஆனால் இந்த ஆறறிவு அழிவுக்கு பழகி இயற்க்கையை அழிந்துகொண்டு இருக்கிறது.*😔💧
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *S I'm A Mad*
🥈 *Rahul& goodlifesiva1978*
🥉🍃 *கந்தசாமி*🍃
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💧 *தண்ணீரை நம்மால் உருவாக்க முடியுமா?*❓
😅 *ரொம்ப ஈசியான கேள்வியா இருக்கே! ஆனால் பதில் கொஞ்சம் கஷ்டம்.*
🤔 *இதுல என்ன கஷ்டம்...*
💧 *H2O இது நீரின் மூலக்கூறு குறியீடு.*
💧 *ரெண்டு ஹைட்ரஜன் அணு ஒரு ஆக்சிஜன் அணு சேத்தா தண்ணீர் கிடக்கபோகுது. அறிவியல் கோட்பாடுகளின்படி இது சரிதான். ரெண்டு ஹைட்ரஜன் அணு ஒரு ஆக்சிஜன் அணுவையும் ஒரு டப்பால போட்டு ஒரு குலுக்கு குலுக்கினா தண்ணீர் ரெடி ஆகிடுமா!*
💧 *அப்டினாதான் இயற்கைல ஏராளமா கிடைக்ககூடிய ஹைட்ரஜனயும் ஆக்சிஜனையும் வச்சி தண்ணீர் தயாரிக்கலாமே.*
💧 *பெரிய பெரிய பன்னாட்டு கம்பெனிங்க அவங்க ஊர்லையே தண்ணீர் தயாரிச்சி மற்ற பொருள்கல போல உற்பத்தி பண்ணுவாங்களே.*
💧 *ஏன் அவங்க இங்கயும் மற்ற மூன்றாம் நாடுகளுக்கும் போறாங்க? ஏன்னா தண்ணீரை அவ்வளவு சுலபமா தயாரிக்க முடியாது.*🙅🏻♂
💧 *2H↓2 + O↓2 → 2H↓2O + சக்தி இது தண்ணீர் உற்பத்தி செய்யகூடிய ரொம்ப சிம்பிள் பார்முலா.*
💧 *ஆனால் நிஜத்தில் ஹைட்ரஜன் அணுவும் ஆக்சிஜன் அணுவும் சுலபமாக வினை புரியாதபடி இயற்கையில் கிடைகிறது. அவைகள் நிலையான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்டவைகளாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் Saturated Level என்பார்கள். அப்படி இருக்கும் அணுக்கள் எளிதில் எதனுடனும் வினைபுரியாது. இவை இரண்டையும் சேர்க்க நமக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைபடும் மற்றும் தண்ணீர் உற்பத்தி ஆவதோடு அதிக அளவிலான சக்தி வெளிப்படும்.*
😱 *வெளிப்படும் சக்தி மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.*
🔴 *ஒரு விபத்து இதனை எளிதாக விளக்குகிறது. மே 6, 1937, அன்று ஹிண்டன்பர்க் என்ற ஹட்ரோஜன் நிரப்பட்ட ஆகாயகப்பல் அட்லாண்டிக் கடலை கடந்து நியூ ஜெர்சியில் தரை இறங்கியது. அப்போது நிலை மின்சாரம் (Static electricity) காரணமாக ஹைட்ரஜனில் தீப்பொறி ஏற்பட்டு, காற்றில் உள்ள ஆக்சிஜனோடு கலந்து மிகபெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஆகாய கப்பல் முழுவதும் அரை நிமிடத்தில் எரிந்து சம்பல் ஆனது. இந்த வெடிப்பின் காரணமாக நிறைய தண்ணீரும் உருவானதாக கருதபடுகிறது. கிட்டத்தட்ட 36 பேரின் உயிரை பலிவாங்கியது இந்த விபத்து.*
💧 *ஒரு சில சொட்டு தண்ணீருக்கே இவ்வளவு சவால்கள் என்றால், அதிக அளவிலான தண்ணீர் உற்பத்தி என்பது வெறும் கனவுதான்.*
💧 *ஆனால் இயற்கை நாம் இவ்வளவு கஷ்டபடகூடாதுன்னு தான் இவ்வளவு தண்ணீரை நமக்கு கொடுத்துள்ளது.*
💧 *நமக்கு என்றால் மனிதனுக்கு மட்டும் அல்ல, பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தான்.*
💧 *தண்ணீரை வீணாக்காமல் இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.*👍
🙏 *கடவுளுக்கு அடுத்து அதனால்தான் வான் சிறப்பு என்று மழையின், தண்ணீரின் இன்றியமையாத தேவையை திருவள்ளுவர் ஒரு அதிகாரமாக படைத்தாரோ.*
🙏 *மனிதன் மட்டும் பூமி அல்ல, தண்ணீர் மனிதனுக்கு மட்டும் அல்ல.*
💧 *ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்க முடியாத நாம் தண்ணீரை வீணாக்க தகுதியற்றவர்கள்.*😔
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை"_*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_பெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை. மழையில்லாது வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாக காக்க வல்லதும் மழையாகும்._*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👴🏻 *_ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு._*👵🏻
👴🏻 *_நீரின்றி அமையாது உலகு_*👵🏻
💎💎💎💎💎💎💎💎💎💎
🤷♂ *சிந்தனை :*🤷♀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*_செப்டம்பர் 1, 2017ம் தேதி, “நதிகளை மீட்போம்” விழிப்புணர்வு பேரணியில் இணையுங்கள்._*
*_நம் தேசத்தின் உயிர்நாடிகளாம் அழிந்து வரும் இந்திய நதிகளின் காக்க குரல்கொடுப்போம்._*
*ஏனொனில் நதிகளை அழித்தால் போதும் மற்ற நீர்நிலைகள் தானாக காணாது போய் கானல் நீராக மறையும்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌱👨🏻💻 *கனகராஜ்.வே*🌳
🌱 *9047493815*🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -* *9486552988*🌳
😎 🌱 *மணி விஜய் -* *8428073724*
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment