Friday, 1 September 2017

கிராம மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன என்ன செய்யலாம்??*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
  🌹 *தேதி : 01.09.2017.* 🌹                                    *🌷கிழமை : வெள்ளிகிழமை🌷* 
____________________________________

💐💐💐💐💐💐💐💐💐💐💐
*நிர்வாகிகள் எண்ணம்*

*நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே...*

*இங்கு நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்.*
💐💐💐💐💐💐💐💐💐💐💐. 👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
      ===================
*கிராம மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன என்ன செய்யலாம்??*
💐💐💐💐💐💐💐

*கிராமங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை அரசியவாதிகள் புரிந்து கொண்டதால் ஓட்டுக்கு மட்டும் கிராம மக்களை பயன்படுத்தி கொண்டு ஒவ்வொரு எலெக்ஷன் ளையும் *"கிராமங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி" எனவே ~நமது~ கிராமத்திற்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கோம்,எங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் எல்லாம் நல்லபடியா செஞ்சி கொடுப்போம் னு சொல்லி ஓட்டு வாங்கிடுறாங்க.*

_இதையும் நம்பி வாக்கை வீணாக்கி விடுகிறார்கள் கிராமமக்கள்..._

_கிராம மக்களின் ஓட்டு என்பது மிக அவசியமான ஒன்று ஒரு வேட்பாளரையோ , ஒரு முதலமைச்சரையோ வெற்றிபெற செய்ய முக்கிய கருவியாக இருப்பது கிராமம் தான்.நகர மக்களை விட கிராம மக்கள் தான் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள், ஆனால் நகரமக்கள் இங்கு கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், கிராம மக்களிடம் ஏன் இந்த விழிப்புணர்வு இல்லை என்றால் அவர்களை மங்கவைத்துள்ளார்கள் இந்த அரசியல் கட்சிகள்._

_ஓட்டுரிமை உள்ளவர்களில் கிராமத்தில் 50 % மக்கள் 50 வயதுக்கு மேலானவர்கள் தான், 35 % மக்கள் 30 வயதிலிருந்து 50 வயது வரையுள்ளவர்கள், மீதம் உள்ள 15  சதவிகிதம்  மக்கள் இளைஞர்கள். இளைஞர்கள் இங்கு சரியாக ஓட்டு போட்டாலும் எப்பொழுதும் 50 % ஓட்டுரிமை கொண்ட பெரியோர்களால் தான் ஒரு கட்சி வெற்றிபெருக்கிறது._

_அந்த 35 % ஓட்டுரிமை உள்ளவர்கள் கொஞ்சம் யோசித்து போட்டாலும்,சிலர் காலம் காலமா இவங்களுக்கு தான் போடுறோம் இப்போவும் இவங்களுக்கே போடலாம் என்று போடுறாங்க._

*சரி ஒரு சில கேள்விகள் கிராம மக்களிடம் வைத்தோம் அவங்க கூறிய பதில்கள் கீழே பாப்போம்,இது எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது.* *இதை முடித்துவிட்டு மீண்டும் விழிப்புணர்வுக்கு வருவோம்.* 👇👇👇

கேள்வி பதில் கீழே : 👇👇👇

*1⃣.உங்களின் ஓட்டு சின்னம் பார்த்தாா?  சாதி பார்த்தா?  இலவசம் பார்த்தா? வேட்பாளரை பார்த்தா?* 🤔

*40 வயது கொண்ட படிக்காத பெண் :  _சின்னம் பார்த்து தான் போடுறேன்._* 🏳🏳🏳

*48 வயது கொண்ட ஒரு ஆண் : _தம்பி நான் என்னோட சாதிகாரனுக்கு தான் பா ஒட்டு போட்டேன்,அவங்க நெறைய நல்லது செஞ்சிருக்காங்க பா..._ இந்த பதில் போதுமானது.* 😡😡

*2⃣.உங்க சட்டமன்ற உறுப்பினர் யார்,பாராளுமன்ற உறுப்பினர் யார்,எதை கொண்டு ஒருவருக்கு வாக்களித்தீர்கள்.* 🤔
👉👉 *(தர்மபுரியை சேர்ந்த ஒருவரின் பதில்.)*
*_சட்ட மன்ற உறுப்பினர் யார் :தெரில பா, இதுக்கு முன்னாடி கே.பி. அன்பழகன் இருந்தார் னு நெனைக்குறேன்._*
*நாடாளுமன்ற உறுப்பினர் யார் : அன்புமணி ராமதாஸ் பா.* (சரியான பதில் சொல்லி இருக்காங்க.)
*_எதை கொண்டு ஒருவருக்கு வாக்களித்தீர்கள் : எப்போ எலெக்ஷன் வந்தாலும் அவங்களுக்கு தான் போடுவேன் அதனால இப்போவும் அவங்களுக்கு தான் போட்டேன்._*  😧😧

👉👉 *48 வயது கொண்ட ஒரு ஆண்: முதல் ரெண்டு கேள்விக்குமே எனக்கு பதில் தெரில தம்பி.* *தம்பி நான் 6 எலெக்ஷன் ளையும் இவங்களுக்கு தான் ஓட்டு போடுறேன் பா.... "சென்சார் கட்".*

*3⃣.ஓட்டு நாம் ஏன் போடுகிறோம்...????நீங்கள் ஓட்டு போடும் நபரை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்???* 🤔

👉👉 *_ஓட்டு ஏன் போடுறோம் னா அவங்க நம்மளுக்கு ஏதாவது நல்லது பண்ணுவங்களான்னு தான் போடுறோம்._*  👉🏻 *ஓட்டு போடலைனா செத்ததுக்கு சமம்.* 👈👏👏 *_நான் சின்னத்தை பார்த்து தான் ஓட்டு போடுறேன்,நான் படிகாதவ எனக்கு தெரிஞ்சி நல்லவங்க யாருன்னு தெரிதோ அவங்களுக்கு ஓட்டு போடுறேன்._* 😕😕

👉👉 *நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டுவருவாங்கனும்,எங்களை மாதிரி ஏழைகளுக்கு எதாவது நல்ல உதவி செய்வாங்க னு தான் ஓட்டு போடுறோம்.* 👏
*என் சாதிகாரங்க எங்க சமூகத்துக்கு நல்லது செய்வாங்க னு அப்டிங்குற அடிப்படையை வைத்து நான் ஓட்டு போடுறேன்.*

*4⃣.இப்ப தமிழ்நாட்டுல எத்தனை கட்சிகள் இருக்கு அதெல்லாம் யாரால தொடங்கப் பட்டது இப்போ யார் அந்த கட்சிகளின் நிர்வாகிகள்.* 🤔

👉👉 *_எனக்கு தெரிஞ்சி அதிமுக,திமுக, பாமக,விஜயகாந்த் து ஒரு கட்சி (கட்சி பெயர் தெரியாது)._* ☹
*_அதிமுக கு யார் னு எனக்கு தெரியாது சசிகலா னு சொல்லுறாங்க, எடப்பாடி னு சொல்லுறாங்க எனக்கு தெரில._* 😂😂
*திமுக கு கருணாநிதி*
*பாமக கு ராமதாஸ்.*
*விஜயகாந்த கட்சியை அவர்தான் நிர்வாகம் பண்ணுவார்.*

👉👉 *திமுக,அதிமுக,விசிக,பாமக, தேமுதிக.*
திமுக -- ஸ்டாலின்
அதிமுக  -- தெரில தம்பி, யாரு இப்போ அந்த கட்சியை நடத்துறாங்க னு.
விசிக  -- திருமாவளவன்
பாமக -- ராமதாஸ்
தேமுதிக -- விஜயகாந்த்  *(இதைலாம் சரியா சொல்லுறவர் சரியா ஓட்டு போட தெரில யோசிச்சி.)*

*( _மேலே குறிப்பிட்ட கேள்விகள் நாளிலும் அந்த முதல் பதில் ஒருவருடையதே._)* *(இரண்டாவது பதிலும் ஒருவருடையதே.)*

*(இதை பல பேரிடம் கேட்டு சொல்லலாம் னு ஆசை தான் எனக்கு கிடைச்ச நேரத்துல இவரிடம் மட்டும் கேக்க முடிந்தது).*

*_மேலும் சிறிய உரையாடல் இதே நாலு கேள்வியாள வைத்து...._*

*_இரு நண்பர்களிடையே நடந்த ஒரு விவாதம் அதை சிறுது உரையாடல் வடிவில் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது._

*நண்பன் 1: ஏல மாப்ள என்னல இந்த பக்கமா போர*

*நண்பன் 2 : அது ஒன்னுமில்லை பங்கு ஓட்டு போட பூத்துக்கு போறேன் அங்கிட்டு வண்டிய குறுக்கமறுக்க போட்டு வச்சிருக்கானுவ அதான் இந்த பக்கமா போறேன்..*

*நண்பன் 1: அது சரி, யாருக்கு மாப்ள ஓட்டு போட போற..*

*நண்பன் 2 : என்ன மாப்ள இப்படி கேட்டுபுட்ட நம்ம ஜாதிகார பயலுக்குதான் போட போறேன்.. நம்மள நம்பி தானவே அரசியல்  வந்துருக்கான் நாமலே விட்டு கொடுத்துறலாமா  கால்ல விழுந்ததுலாம் மறந்துட்டியாவே..*

*அதுமட்டுமல்ல அவன் ஜெயிச்சா நாளைபின்ன எதாவது பிரச்சனைனா தயங்காம போய் நிக்கலாம் பாரு.. அதுபோவ இலவசமா தட்டு தரேன் சொல்லிருக்காம்ல. இப்பவேற ஓட்டுக்கு 2500 கொடுத்துருக்கான் மூனு ஓட்டு 7500 ஆச்சு ஒரு மாசம் செலவுக்கு ஓடும்ல.*

*நண்பன் 1 : அதெல்லாம் சரி மாப்ள எந்த நம்பிக்கைல ஓட்டு போடுத..*

*நண்பன் 2 : பங்காளி எவன் வந்தாலும் இருக்குறத சுருட்டதான் போறானுவோ.. அதுமட்டுமல்ல இந்த கட்சி தான் போன தேர்தலயும் ஜெயிச்சுது அது போதும் மாப்ள பெரிய கட்சி நம்ம பய வேற வேற என்ன நம்பிக்கை வேணும் மாப்ள..*

*நண்பன் 1 : சரி மாப்ள தமிழ்நாட்டுல எத்தனை கட்சி இருக்கு மாப்ள..*

*நண்பன் 2 : அதெல்லாம் எதுக்கு மாப்ள தெரிஞ்சுகிட்டு துடைப்பகட்டைல இருந்து தூக்குசட்டி வர சின்னமா வச்சிட்டு சுத்துதானுவ..*

*அது தெரிஞ்சு என்னத்த செய்ய சொல்லுத நமக்கு தேவை காசு கிடச்சுதா.. நம்ம பயலா நாள பின்ன பஞ்சாயத்துனா வருவானா இது  போதும் மாப்ள..*

*நண்பன் 1 : அது சரி மாப்ள.. நம்ம தொகுதில இன்னொருத்தன் நிக்காம்ல.. அவன பத்தி என்னல நினைக்க..?? அவனுக்கு ஓட்டு போட்டா என்ன மாப்ள..??*

*நண்பன் 2 : யாரு அந்த சில்வண்டு சில்வண்டு பயலுவலா அவனுக கிடக்கானுவ கிருக்குபயலுவ.. ஓட்டுக்கும் குடிக்கும் சல்லி பைசா குடுக்க வக்கில்ல இவனுவள நிப்பாட்டி என்ன கிடைக்கபோவுது ஊர் பிரச்சனைனா மட்டும் முன்னாடி வந்து தீத்துவைக்கானுவ இலவசமா ஓன்னும் கொடுக்கமாட்டானுவ ஓட்டு மட்டும் வேணுமாம் எல்லாம் வெட்டி சீன் மாப்ள.. அதுமட்டுமில்ல வே இவனுவ வேற ஆளுக செட் ஆவ மாட்டானுவ..*

*நண்பன் 1 : அட ஆக்கங்கெட்ட கூவ நீயெல்லாம் மனுசனாவே.. மானங்கெட்ட பயல வந்துடான் ஓட்டு போடுதேனு ஓட்ட வண்டிய தூக்கிட்டு..*

*நண்பன் 2 : என்னவே மண்டைக்கு சரியில்லையா பாத்து பேசுவே..*

*நண்பன் 1 :  எல்லாத்தையும் கேட்டுட்டு தான் ல பேசுதேன்.. ஜாதி பாத்து ஓட்டு போடுதியே அவனுக்கு தேவை ஜாதி இல்ல உன் ஓட்டு தான் ஜாதிய பாத்து ஓட்ட போட்டு நமக்குள்ள பிரிவினைய ஏற்படுத்துதானுவ அதுலதான் அவனுக கிங்கா நிக்கானுவ எவன் வந்தாலும் ஆட்டைய போடுதானுவ இவனுக தான் பெரிய கட்சி எப்பவுமே ஜெயிக்குதுனு மறுபடியும் நீங்களாம் கண்ணமூடி ஓட்டு போடுறதுனாலா தான்வே அவனுவ இருக்குறத சுருட்டிட்டு போறானுவ. அவன் இன்னைக்கு கால்ல விழுதான்னு ஓட்டு போடுதியே நாளைக்கு எதாவது பஞ்சாயத்துனா நீ தான் ல அவன்கால்ல விழுந்து கிடக்கனும்..*

*அந்த சில்வண்டு பயலுகல விட நீங்க எல்லாரும் தான்வே ஓட்டு போட பிச்சை கேட்குறீங்க... உனக்கு தட்டு இலவசமா குடுத்தானு ஓட்டு போடுதியே அது ஒன்னும் நீ தீவனம் தீங்க இல்ல நாளைக்கு நம்ம பிரச்சனை னா தட்ட தூக்கிட்டு அவன் வீட்டு வாசல்ல நிக்கனுவே. நமக்கு பிரச்சனைனா நாம அவன தேடி போக கூடாது ல அவிங்க தான்  வரிசனா முன்னாடி வரனும். உன் ஓட்டு உன்னோட உசுருக்கு மேல பலம் உள்ளது ல.. அதை சரியான முறைல பயன்படுத்துவே..*

*என்ன ல பேச வச்சி முக்கருத்துட்டேன் நினைக்கியாவே..* *மண்டைல முளை இருக்குல யோசிச்சு பாருவே புரியும்..*

*சரி விஷயத்துக்கு வருவோம்.👇👇👇.*

*ஏன் இந்த பர்டிகுலர் நாலு கேள்விகள் னு ஒரு சிலர் எண்ணலாம், கிராம மக்களிடம் இந்த நாலு கேள்விக்கான பதில் நாம் தெரிந்து கொண்டாலே அவர்களை நாம் 90 விழுக்காடு மாற்றிவிடலாம்,அவர்களுக்கு சரியான நபரை தேர்வு செய்யும் முறையை சொல்லி கொடுக்க முடியும்.*  😌😌😌

சில information கீழே 👇

*தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.* 

*இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.* 🤙

*மேலும் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.* 🏆

*தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் கணக்கெடுப்பின்படி மொத்தம் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2 கோடியே 93 லட்சம் பேர் ஆண்கள் 2 கோடியே 99 லட்சம் பேர் பெண்கள். 5 ஆயிரத்து 40 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.* 😮

*_இதில் நகர்புறங்களை விட கிராமபுற வாக்காளர்களே அதிகம்._* 🙃
*_இவற்றில் பெண்களின் ஓட்டு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது_* (மூக்குத்தி,ஒரு புடவை, ஒரு வெண்கல குடம் கொடுத்தா ஓட்டு போடப்போறாங்க இவங்க னு அரசியல்வாதிகள் இத கொடுக்கிறாங்க.)
*_பெரும்பாலான அரசியல்கட்சிகள் கிராமபுற ஓட்டுகளை நம்பிதான் இருக்கிறார்கள்._* (நோட் திஸ் பாயிண்ட் மக்கா).

*_ஏனென்றால் கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும்_*

*_தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது_*

*_கிராமபுறங்களில் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பது பெரும்பாலும் முன்னதாகவே அங்குள்ள  பெரியவர்களால் முடிவு செய்யபடுகிறது._* 😡😡😡

*_ஜாதி ரீதியாகவே பெரும்பாலும் தேர்ந்தெடுக்க படுகிறார்கள் இதில் 100க்கு 30 பேர் வாக்களிப்பதில்லை._* 😒😒

*_அவர்களின் பெரும்பாலான பதில்கள் எந்த கட்சியும் சரியில்லை யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை._*  😕
இப்படி இவர்கள் ஒட்டு போடாததால் இதை பயன்படுத்தி
*_அவர்களின் ஓட்டுகள் கள்ள ஓட்டுகளாக மாற்றபடுகிறது._* 😐

*_மேலும் கிராமபுற வாக்காளர்களிடம் ஓட்டு பெற அரசியல்வாதிகள் பயன்படுத்தும் யுக்தி ஜாதி மற்றும் இலவசங்கள் மற்றும் பணம் என்ற போர்வைகள் தான்._* 😰

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
*இவர்களிடம் இருக்க மற்றும் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு..*
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠

*👉ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  ஜாதி மத ரீதியில் அல்லாமல் சமுக அக்கறை கொண்டவராக அனைவருக்கும் பரிச்சயமாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.*

*👉ஜாதி, மதம், இலவசத்தின் அடிப்படையில் ஓட்டு கேட்க்கும் அரசியல் கட்சிகளை தவிர்க்க வேண்டும்.*

*👉வேட்பாளரின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைவருக்கும் புரியும்படியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்* * அவர்களின் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் வெற்றிபெரும் கட்சி இது தான் என்று அவர்களுக்கே ஓட்டலிக்காதீர்.*

*👉அவர்களின் திட்டங்களில் தொகுதியின் வளர்ச்சிக்கு எவ்விதம் உதவிகரமாக இருக்கும் நடைமுறக்கு இது சாத்தியமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.*

*👉கிராம மக்களின் அவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு வளர்ச்சி திட்டங்களை பற்றிய புரிதல் ஏற்படுத்த வேண்டும்*

*👉திட்டச் செயல்பாடுகளை பொதுமக்கள் ஆய்வு செய்து திட்டச் செயல்பாடுகள் குறித்து பொதுகருத்து கணிப்பு செய்யவேண்டும்.*

*👉இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும்*

*👉உங்களின் ஒவ்வொரு ஓட்டும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து செயல்படவும்.*

*👉யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லையெனில் நோட்டாவில் ஓட்டு போடலாம் இதன் முலமாக கள்ள ஓட்டுகள் தடுக்க படுகிறது.*

*👉தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி  பல்வேறு பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தலாம்.* *முக்கியமாக ஒரு கிராமத்தில் உள்ள பள்ளி(10 to 12 ம் வகுப்பு) கல்லூரி மாணவர்கள் மூலம் நடைமுறை அரசியலை பெற்றோர்களுக்கும் ஊர் பொது மக்களுக்கு எடுத்துரைக்க வைக்கலாம்,அதற்க்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும்.*

*👉பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணம் வாங்காமல் வாக்களிப்பது குறித்து வாகாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.*

*👉ஏனென்றால் மற்ற தேர்தலைவிட உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.  குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தான் தீர்வு கிடைக்கும்.*

*👉கிராம சபா கூட்டங்கள் தவிர்த்து மாதம் ஒரு முறை ஊர்மக்களை கூட்டி இளைஞர்கள் அந்த மாதத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கலாம்,இதற்க்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்.* *இந்த கூட்டங்களிலையே பல நல்ல விஷயங்களுக்கு அஸ்திவாரம் அமைக்கலாம்.*

*👉கிராம நிகழ்ச்சிகளில் அரசியல் விழிப்புணர்வு போன்ற நாடங்கங்களை அரங்கேற்றலாம்.* *இதன் மூலம் முதியவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்வார்கள்.*

*இளைஞர்களும் எந்த கட்சி சாராமல் மக்களுக்கு எடுத்துரைத்தை வேண்டும்.* *ஒரு கட்சி சார்ந்து மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது தவறு.* 😏😏

*👉கிராம சபா கூட்டம் தவிர்த்து மற்ற கூட்டங்களில் மக்களிடையே அரசு அறிமுகம் செய்யும் புது புது திட்டங்களை பற்றியும் அதில் நல்லது கெட்டதுகளை எடுத்துறப்பதும் நல்லது.*

*_இதை எல்லாம் செய்தாலே மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்._*

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
*ஓட்டு போடும் முன்னர் ஒவ்வொரு வாக்காளர்களும் செய்துகொள்ளவேண்டி உறுதி மொழி*
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

*என் மனசாட்சிப்படியே நான் வாக்களிப்பேன்..*

*ஜாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ நான் வாக்களிக்கமாட்டேன்..*

*வாக்களிக்க பணம் எக்காரணம் கொண்டும் வாங்க மாட்டேன்..*

*என் வாக்கு என்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கிறது..*

*என் வாக்கு ஐந்தாண்டு ஆட்சிக்கான அதிகாரம்.*

*எனது வாக்கு எனது உரிமை, எனது கடமை,எனது பெருமை..*

*என் வாக்கு உயிருக்கு சமமானது..*
*விலை மதீப்பீடு செய்ய முடியாது..*

____________________________

*ஜாதி அடிப்படையிலே ஒருவரை ஒரு இடத்தில் நிற்க வைத்து வெற்றி பெற வைக்கிறார்கள், எனவே ஜாதியை பார்த்து ஓட்டலிக்காதீர்கள்.*

*அது உன்னை நாதி இல்லாமல் ஆக்கிவிடும்.*

*தட்சனையை பார்த்து ஓட்டு போடாதே.*

*நாளை உன் பிரச்சனையை காண அவனுக்கு நேரம் இருக்காது.*

*இலவசத்தை கண்டு ஓட்டு போடாதே.*

*நாளை உன் வசம் எதும் இல்லாமல் போய்விடும்.*

*காலில் விழுகிறார் என்று இறக்கம் காட்டாதே..*

*நாளை இறக்கமே இல்லாமல்  உன் காலைவாரி அவர் காலில் விழவைப்பார்*

*உனக்கு வேலை செய்யவே நீ அவர்களை தேர்ந்தெடுக்கிறாய் நீ அவர்களுக்கு முதலாளி.*

*ஓட்டலிங்கள் அது உங்கள் உரிமை உங்கள் ஒரு ஓட்டால் ஆட்சியே மாற்ற கூடும்.*

*_கள்ள ஓட்டுக்கு நீ இடம் கொடுக்காதே._*

💐💐💐💐💐 *நன்றி* 💐💐💐💐💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த பேச்சாளர்கள்:*👑

🥇 @⁨goodlifesiva1978⁩
🥈 @⁨⁨S Im A Mad⁩ , @⁨We Are Nokers💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻⁩
🥉 @⁨Rahul⁩ , @⁨⁨கற்றது கால்நடை மருத்துவம்⁩⁩.

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*சத்தியத்தை மதிக்காமல் அதை*
*சாக்கடையில் போட்டுவிட்டு*
*சுத்தமான* *மனிதனைப்போல் பிறரை*
*சூழ்ச்சி செய்து அழிப்பவனே கொலைகாரன்!...*

இது நம் அரசியல்வாதிகள் தான் இதை புரிந்து நல்லவன் எவனோ அவனை தேர்ந்துடுங்க..

*நாட்டின் நலனே தன் நலனாய்*
*எந்நாளும் உழைக்கும் ஒரு வீரன்*
*தூற்றும் மக்கள் துயரைக்கூட*
*துடைத்தெறிவான் அவன்  தலைவன்!...*

*_இப்படி ஒரு தலைவரே நமக்கு தேவை தேடி வாக்களியுங்கள்._*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👨‍👩‍👧‍👧

*_📜 திருக்குறள்: 📜_*

*இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி*
*மாசறு காட்சி யவர்க்கு.*

💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.*

  💐💐💐💐💐💐💐💐

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆

*அரண்டவன் கண்ணுக்கு இருடாதெல்லாம் பேய்.* னு இருக்கும் கிராம மக்களே அப்படி இல்ல....

ஒருவனாவது இங்கு நல்லவன் இருப்பான் *அக்கரைக்கு இக்கரை பச்சை* னு உங்களுக்கு தோணனும்,ஒரு நாள் கண்டிப்பா தோணும்  அப்போ உங்கள் ஓட்டை அவங்களுக்கு போடுங்க...

*நெருப்பில்லாமல் புகையாது* என்பதால் நெருப்பு கொளித்திட்டோம், நீங்க புகைந்து காட்டுங்க.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*

👨🏻‍💻 *மணி விஜய் - 8428073724*

💐💐💐💐💐💐💐💐

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

👨 *சங்கிலி பூதத்தான் : 9150751098*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...