Sunday, 10 September 2017

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுடன் போராட வேண்டுமா ? அல்லது சகித்து போக வேண்டுமா ?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________

🌹 *நாள் :ஞாயிற்றுக்கிழமை * 🌹
🌹 *தேதி :10.09.2017* 🌹
__________________________________

🍁 *அறிவோம்*🍁
❣❣❣❣❣❣❣❣❣❣❣
*என்னால் மனத்தை  ஒருமுகப்படுத்த முடியவில்லை* *என்ற எண்ணமே*  *ஒரு தடைதான்.*

____🍁 *ரமணர்*🍁___

🎭 *அட்மின்தாட்ஸ்*🎭
❣❣❣❣❣❣❣❣❣❣❣
*உன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது* *எண்ணங்களால் திசை திருப்பப்படுவது அன்று*  *அதில் பயணிப்பது*
*அது ஒரு பயிற்சி.*

     🎯 *தலைப்பு*🎯
========================
*வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுடன் போராட வேண்டுமா ? அல்லது சகித்து போக வேண்டுமா ?*
💖😊😩😔☹😏🤒🙄😣😰💖

💖 *போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது .ஏன் ❓நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.*
*ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டதான்.*🤷🏻‍♂

⚔ *வீதியில் நின்று போராடுவதும், நாட்டுக்காக போராடுவது மட்டும் போராட்டம் அல்ல, உயிர் வாழ்வதற்கான போராட்டமும் உண்மையான போராட்டம்தான், இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.*🤷🏻‍♂

🙄 *வாழ்க்கையில் பலபேர் பல வேலையில் சக மனிதர்கலுடன் பிரச்சனை,*
*மேலதிகாரிகளுடன் பிரச்சனை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்சனை, திருமண வாழ்கையில் பிரச்சனை,  வியாபாரத்தில் பிரச்சனை, விளையாட்டில் பிரச்சனை, காதலில் பிரச்சனை, தந்தை'மகன்' உறவில் பிரச்சனை, ஆன்மீகத்தில் பிரச்சனை, அரசியலில் பிரச்சனை என எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித பிரச்சனைகளையோடு வாழ்ந்துவருகிறார்கள்.*🤷🏻‍♂

💁🏻‍♂ *பொதுவான பிரச்சனைகளுக்கு கோபம், பொறாமை, பொறுமையின்மை, பேராசை, சுயநலம்,* *பிடிவாதம்,* *விதண்டாவாதம்,* 
*போன்றவற்றைக் குறிப்பிடலாம்.*

💁🏻‍♂ *என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை,  நான் செய்தேன், நான் சாதித்தேன்,*
*வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமைபடுதல், என்னைதவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணம்.*🤦‍♂

💖 *ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகளை நீங்கினால் அல்லது விட்டுக்கொடுத்து போனால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி, மகிழ்ச்சி, பற்று, பாசம் சாந்தி,சமாதானம்,போன்றவை நித்தமும் ஒளிவீசும் எனலாம்.*😇

👆👆👆👆👆👆👆👆
*நாம் பார்த்தவை அனைத்தும் தனிமனித பிரச்சனைகள் மட்டுமே*
👆👆👆👆👆👆👆👆

👇👇👇👇👇👇👇👇
*சமுகத்தாலும், அரசுகளாலும் அங்கிகரிக்கப்படாத அல்லது கிடைக்காத பிரச்சனைகள்.*
👇👇👇👇👇👇👇👇

👁‍🗨 *தரமான மருத்துவம்*

👁‍🗨 *சுகாதாரமான சூழல்*

👁‍🗨 *சுத்தமான குடிநீர்*

👁‍🗨 *தடையற்ற மின்சாரம்*

👁‍🗨 *தரமான பொதுகல்வி*

👁‍🗨 *பெண்கள் பாதுகாப்பு*

👁‍🗨 *லஞ்சமில்லா நிர்வாகம்*

👁‍🗨 *பாதுகாப்பான பொது போக்குவரத்து*

👁‍🗨 *அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு*

👁‍🗨 *மீத்தேன் திட்டம், அனல் மின் திட்டம், எரிவாயு குழாய் பதித்தல், பண மதிப்பிழப்பு, விவசாயி தற்க்கொலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கடற்கரைகளில் அணுமின் நிலையங்கள், டாஸ்மாக், மணல் கொள்ளை, இரும்புத் தாது கொள்ளை என பிரச்சனைகள் தொடர்கின்றன*

🙄 *பட்டியலிட்டுள்ள பிரச்சனைகளைக் கணக்கிட்டால் வின்னை தொடுகிறது....*
*இவைகளை இன்று நாம் போராடியே பெறவேண்டியதாக இருக்கிறது.* *இதுமட்டுமா இதைவிட இன்று நாம் போராட வேண்டியது வேறாக இருக்கிறது.*😏

🔴 *Breaking news*🔴
          👇👇👇
    🔴 *நீட் தேர்வு* 🔴
          👇👇👇
🔴 *முக்கிய செய்தி*🔴
          👇👇👇
⚔ *இதுதான் இன்றய தமிழகத்தில் அனைவராலும் பேசப்பட்டும், போராடப்பட்டு வரும் முக்கிய பிரச்சனை.*🏃

⚔ *பிரச்சனைகள் இல்லா*
*வாழ்க்கை எங்கதான் இருக்கு, கண்டிப்பாக* *சந்தேகமே! இந்த ஆளும் அரசாலும்,* *ஆண்ட அரசாலும் நாம் நமது உரிமைகளை போராடிதான் பெறவேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம்.*

💖 *வாழ்க்கை என்பது பிறப்பு முதல் இறப்புவரை மட்டுமே! அது ஆண்டவனாக இருந்தாலும் சரி, அந்த  ஆண்டவனே ( இறைவன்தாங்க ) இருந்தாலும் சரி இறப்புவரை மட்டுமே வாழ்க்கை.*
💖😊😩😔☹😏🤒🙄😣😰💖

🤷🏻‍♂ *சகிப்புத் தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. அது ஒரு பரதநாட்டிய கலை போன்றது.*😇

🤕 *ஐயோ என்னால் தாங்க முடியவில்லையே என்ற அலறல் சத்தம் ஒவ்வோர் உள்ளத்திலும் இருக்கிறது. சிரித்துக் கொண்டே அவற்றைச் சகித்து கொள்ளும் பழக்கம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.*🤷🏻‍♂

😏 *காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவு படுக்கைக்கு போகும் வரை துன்பங்களையே சந்திப்பவர்கள் உண்டு. இதில் சகிப்பு தன்மையை எப்படி வரவழைப்பது?🤔*

❤ *மனம் மரத்துப் போய் விட்டதா, உணர்சிகளை கொன்றுவிட்டீர்களா, எந்த அடியையும் தாங்கும் உள்ளதைப் பெறவேண்டுமா கொஞ்சம் நிதானத்தை கடைபிடிங்க.*👍

🤗 *நாம் விரும்பி பிறக்காததுப் போலவே, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவையல்ல.*

💝 *கோடானகோடி மக்களுக்கு நடுவிலே இல்லை. கோடானகோடி குணங்களுக்கு நடுவிலே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.*
😇 *எல்லாம் நிறைந்ததுதான் இந்த உலகம் என்று கண்டு கொண்டுவிட்டால் சகிப்புத் தன்மை தானா வந்துவிடும்.*

🤷🏻‍♂ *ஒன்று நடந்தே தான் தீரும் என்றால், அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.* 🤙

👍 *இதைத்தான் விதி என்று சொல்கிறோமோ.*

👍 *எது நடக்குமோ அது நடந்தே தீரும்.*

💖 *எதையும் நினைத்து கவலைப்படாதே... அட இவ்வளவு தானா வாழ்க்கை. இதுக்கு தான் இத்தனை போராட்டாமா?*❓

⚔ _நதிகள் தங்களை கடலில் இழந்து விடுவதைப்போல, நற்குணங்களும், சகிப்புத்தன்மையும் கவலையில்  இழக்கப் படுகின்றன._

🤷🏻‍♂ *நடந்தே தீரப் போகிற ஒன்றுக்காக நாம் ஏன் அழ வேண்டும்?*❓

⚔ *ஏமாற்றம், தோல்வி, நடுக்கம், எரிச்சலூட்டும் சூழ்நிலை, இரக்கமற்ற மனிதர்கள், நேரமில்லாத உழைப்பு, இவற்றுக்கு நடுவே தான் ஒரு மனிதன் வாழ முயற்சி செய்கிறான். வாழ்ந்தே ஆக வேண்டும் என்று தீர்மானிக்கிறான். வாழ்ந்து விடுவோம் என்று துணிகிறான். அவனுக்கு சகிப்புத் தன்மை தானாகவந்து விடுகிறது.*
💖😊😩😔☹😏🤒🙄😣😰💖

🛡 *பிறக்கும் போது வாழ்க்கைக்கு என்று ஒரு நோக்கம் இல்லை, பிறந்த பிற்பாடு அமைகின்ற சூழ்நிலை ஒரு  நோக்கத்தை தோற்றுவித்து விடுகிறது. இதற்க்கு முக்கிய தேவை சகிப்புத்தன்மைதான்.*

🛡 *நிரந்தரமானது துன்பமல்ல, வந்து போவதுதான் இன்பம், இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாகக்  கண்டு கொள்ளவேண்டும்.*

🛡 *சகித்துக் கொள்ளப்  பழகுங்கள், இன்னும் பழகிக் கொண்டு இருப்பவர்கள் பலர்.*
*அழுவதால் பிரச்சனை தீரும் என்றால், மனது விட்டு  அழத் தயாராகுங்கள்.*

⚔ *எவ்வளவு பெரிய தத்துவங்களைப் பேசுகிறவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வருகின்றன.*

⚔ *அவநம்பிக்கையைக் குறைப்பது அல்லது போக்ககூடியது சகிப்புத்தன்மையே.*
*சகிப்புதன்மையின்   மூலமே சிறந்த அனுபவங்கள் சேகரிக்கப்படுகின்றன.*

⚔ *அளவு கடந்து துன்பங்களை அனுபவித்தவன், தன் வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுதினால் உலகமே பயங்கரமாக காட்சி அளிப்பதாக தோன்றும்.*

🛡 *மரத்தின் மேல் கிளையிலே பாம்பு🐍... கீழே புலி🐯.... நடுக் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தான் வாழ்க்கை.💝*

🤔 *மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.*🤒

🤷🏻‍♂ *ஒன்று நடந்துதான் தீரும் என்றால், அதில்  கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?🤗*

🛡 _*போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவதுதான் நம் வாழ்க்கையா என பலர் நினைக்கலாம், நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம், ஆனால் இது எப்போதும் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.*_🤷🏻‍♂

😇 _*தைரியத்திலும், தன்நம்பிக்கையிலும், வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.*_😇👍

   🌹🌹 *நன்றி*🌹🌹

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑

🥇⚡SACHIN RAJESH⚡⁩

🥈SP.Vignesh⁩

🥉Kannan Raja

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤       

     🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🤔 *நாம் போராட வேண்டுமா,❓ வேண்டாமா ❓என்பது சக மனிதர்களே தீர்மானிக்கின்றனர் !*

👉 *போராடி பெறுவது மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறது !சகிப்புத்தன்மை என்பதும் சமகாலம் முதலே இருந்து வருகிறது !*

😰 *வாழ்க்கை போராட்டத்துக்கும், வசதி போராட்டத்துக்கும் வேறுபாடு அறிந்து போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் !*

😇 *அன்பான,அமைதியான,நிம்மதியான,* *மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமானால்* *சகிப்புத்தன்மையுடன்*
*வாழபழக வேண்டும் !*

😇 *அப்பாவிடமும்,*
*அம்மாவிடமும்,* *ஆசிரியரிடமும், சக தோழர்களிடமும், சகோதர சகோதரிகளிடமும் இதை அதிகமாக காணலாம் !*

👍 *வாழ்க்கையே ஒரு போராட்டம், வாழ்ந்துதான் பார்க்கனும் இது தத்துவமில்லை எதார்த்தம் என்பது உண்மை !*

🤷🏻‍♂ *சுவையான உணவிற்க்கு உப்பும், காரமும் சரியான அளவில் இருப்பது அவசியம் அதுபோல மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போராட்ட குணமும், சகிப்புத்தன்மையும்* *சரியான* *விகிதங்களில்*
*இருப்பது அவசியம் !*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*அறத்தா றிதுவென வேண்டா சிவிகை*
*பொறுத்தானோ* *டூர்ந்தான் இடை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

அறிந்துகொள்ளவும்:-

*அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு !*

தெரிந்துகொள்ளவும்:-

*இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே !*

புரிந்துகொள்ளவும்:-

*இளகின இரும்பை கண்டால் கொல்லனும் ஓங்கி அடிப்பான் !*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *இராமலிங்கம் அங்கப்பன்* *60122646502*

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
(வழக்கறிஞர்)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...