Tuesday, 12 September 2017

சந்தனகடத்தல் வீரப்பன் வாழ்ந்த காலம் எப்படி இருந்தது?* *இன்றும் வீரப்பனின் மரண சர்ச்சை ஓயாமல் இருக்க காரணம் என்ன?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :12.09.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய்க்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹

*வாய்ப்புக்காக*
*காத்திருக்காதே*
*உனக்கான வாய்ப்பை*
*நீயே ஏற்படுத்திகொள்.*

     -  *டாக்டர். A.P.J. அப்துல் கலாம்.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================

*சந்தனகடத்தல் வீரப்பன் வாழ்ந்த காலம் எப்படி இருந்தது?* *இன்றும் வீரப்பனின் மரண சர்ச்சை ஓயாமல் இருக்க காரணம் என்ன?*
👨‍🎤💪👨‍🎤🌳👨‍🎤🐘👨‍🎤💪👨‍🎤🌳👨‍🎤

*அட்மின் கருத்து.*
_____________________

🎯  *நல்லவன் என்ற பெயரை எடுத்து நடிப்பதைவிட..*

🎯 *கெட்டவன் என்ற பெயரோடு வாழ்ந்திடு நல்வனாக..*

🎯 *எல்லாருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது..*

💪💪💪💪💪💪💪💪💪💪💪

👨‍🎤🌳 *தமிழ்நாடு கர்நாடக எல்லையில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு பக்கத்தில் கோபிநந்தம் என்னும் கிராமத்தில் வசித்துவந்த முனுசாமிக் கவுண்டர் மற்றும் புலித்தாயம்மா ஆகியோருக்கு 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் நாள் பிறந்த வீரமான ஒரு மகன்.*💪

👨‍🎤🌳🐘 *அவன் சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல் என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்தவன்.*😳

👨‍🎤 *சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனதுறை அதிகாரியிலிருந்து நாட்டின் பல பிரபலங்கள் வரை கன கச்சிதமாகக் கடத்திக்கொண்டு போய் காட்டுக்குள் வைத்துக்கொண்டு இரண்டு அரசுகளையே மிரட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் வனத்திற்குள் தனி ராஜாங்கம் நடத்தி வந்தவன்.*

👨‍🎤 *இத்தனை நாச வேலைகளையும் அஞ்சாமல் செய்துவந்த அந்த மனிதனுக்குள் ஒரு ஓரத்தில் மொழிப் பற்றும் இருக்கத்தான் செய்தது.*

👨‍🎤 *இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசமும் அதிகமாகவே இருந்திருக்கின்றது.*

👨‍🎤 *அவன் தான் கூசிமுனுசாமி வீரப்பக்க கவுண்டர் என்ற இயற்பெயரைக் கொண்டு பின்பு சந்தனக் கடத்தல் என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் வரவழைத்துக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன்.*

👨‍🎤🌳 *சந்தனகடத்தல் வீரப்பன் என்றாலே ஒரு காலத்தில் தமிழகம் அலறியது தமிழக கர்நாடக,கேரள படையினர் சுற்றி வளைத்து தேடியும் எவறாலும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் சுற்றி சுற்றி திரிந்தவர் காட்டுக்குள்ளே...* *ஒரு புறம் சந்தனகடத்தல்,யானை தந்தம் கடத்தல் என குற்றவாளியாக இருந்தாலும் மற்றுமொரு புறம் அவர் நல்ல ஒரு மனிதனாக இருந்திருக்கிறார் அந்த காட்டை சுற்றியுள்ள மக்களுக்கு இவர் நண்பர்.*😊

🔎 *ஒரு சிறிய அறிமுகம்.*🔍

👨‍🎤💪 *சந்தனகடத்தல் வீரப்பனின் இயற்பெயர் கூசு முனுசாமி வீரப்பக்கவுண்டர் 1952 இல் பிறந்து வீரத்துடன் 2004 ம் ஆண்டு கொல்லப்பட்டார்.*

👨‍🎤😔 *இவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்து வந்தது என்பது ஒரு மருத்துவ அறிக்கை,வீரப்பன் மலையூர் மம்மட்டியன் என்பவர் மேல் ஈர்ப்பு கொண்டு அவருடன் கைகோர்த்து கொள்ளையனில் செயலாளியாக செயல்பட்டார்.*
*ஒரு முறை இரு கொள்ளை பிரிவுகளுடன் நடந்த சண்டையில் மம்மட்டியான் கொல்லப்பட்டார்.*

👨‍🎤 *வீரப்பனின் முதல் கொலை என்பது வீரப்பனின் குரு _மம்மட்டியானை_ கொன்ற சகோதரனை கொன்றது தான்.*

👨‍🎤 *இவரது குடும்ப வாழ்க்கையும் காட்டினுள்ளே இருந்தது இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளும் உண்டு.* *பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் தன் குடும்பத்திற்கு கொடுத்தாரோ இல்லையோ அதை அந்த காட்டை சுற்றி உள்ளவர்களுக்கு கொடுத்தார் வீரப்பன்.* *வீரப்பனின் வீடு கடைசி வரை குடிசை வீடாகவே இருந்தது.*😔

👨‍🎤🌳 *சந்தனகடத்தல் எனும் பெயர் இதுவரை வராத இவருக்கு அவருடைய உறவினர் செவி கவுண்டருடன் உதவியாளராக சேர்ந்து சந்தனகடத்தல் தொழிலில் ஈடுபட்டு தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார்.*
*சந்தனகடத்தல் விவகாரத்தில் 1972 இல் முதன் முறையாக கைது செய்யப்பட்டார் அப்பொழுதைய அவருடைய புகைப்படங்களையே 5 வருட பத்திரிக்கை செய்திகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.*

🗣 *அதன் பிறகு என்ன நடந்தது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.*

👨‍🎤🌳🐘 *சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர், அவர் இருந்த வரை அவர் கொண்டு குவித்ததாக கூறப்படுபவர்களின் எண்னிக்கை 184 ஆகும்.* *இதில் பெறுபாலானோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆவர்.* *_(பல பொண்ணுங்களோட சாபம் சார் யார விட்டது._*)

⏳👨‍🎤 *_சிலநூறு பேர்களை வைத்து கொண்டே தமிழக,கர்நாடக,கேரளம் என மூன்று மாநிலங்களையும் ஆட்டி படைத்தார்,மத்திய அரசே இவரை கண்டு* *அஞ்சும் அளவிற்கு இருந்தது.*
*_1993 ல் குற்றங்கள் அதிகரிக்கிறது,கொலைகளும் அதிகரிக்கிறது என இவரை உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுபவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் சன்மானம் என அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்,பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த சன்மானம் அதிகரிக்க கொல்லப்படும் வரை அவர் தலைக்கு 5 கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என அப்போதைய ஆட்சி அரசு தெரிவித்தது._*

👨‍🎤 *அதன் பிறகு அதிரடி படையினர்,காவல்துறை,வீரப்பன் எதிர்ப்பு மக்கள் என அனைவரும் அவரை கண்டுபிடிக்க விரைந்தனர்.* *அப்பொழுதும் 2004 ம் ஆண்டு வரை இந்த அனைவருக்கும் ஆட்டம் காட்டி வந்தார் வீரப்பன். 2004 ம் வருடம் அவருடைய வீரத்திற்கு முடிவுகட்டப்பட்டது அவறை சுட்டு கொன்றதாக போலீஸ் அறிவித்து பிறகு அரசு மூலம் கைகள் நிறைய பணம்,ஒவ்வொருவருக்கும் வீடு என சகல வசதிகளும் பெற்று வாழ்ந்து வருகின்றனர் அந்த அதிகாரிகள்.*

💪💪💪💪💪💪💪💪💪💪💪
*_கொஞ்சம் விளக்கமா பார்ப்போம்._*
💪💪💪💪💪💪💪💪💪💪💪

👨‍🎤 *நிச்சயமாக எதிர்மறையாகத்தான் வீரப்பனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.*
👨‍🎤 *ஆனால் வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்களோ தங்களின் காவல் தெய்வமாகத்தான் வீரப்பனைப் பார்க்கிறார்கள்.*😊

👨‍🎤 *செல்வந்தர்களிடமிருந்து பணத்தை களவாடி ஏழை எளியவர்களுக்கு வாரிவழங்கும்*
*அன்றையக் கால ரொபின்ஹுட்தான் வீரப்பன் என்கிறார்கள் சத்தியமங்கலம் காட்டைச் சுற்றியுள்ள கிராமவாசிகள்..*

👨‍🎤 *அந்த ஊர் மக்கள் அவனை மோலக்கண் என்றும் ஒரு சிலர் வீரப்பன் என்றும் அழைத்தனர்.*

👨‍🎤 *அவன் ஒரு கொள்ளை கூட்ட தலைவனாக இருந்திருந்தால்..*
*அவன் இறந்தபிறகு அவன் அளவு அதிகமாக செல்வங்களைச் சேர்த்துவைத்தவன் இங்கு யாரும் இருந்திருக்க முடியாது.*🙅🏻‍♂

👨‍🎤 *இத்தனைக் கோடி பணம் மறைத்துவைத்திருந்தான் என்று எந்தச் செய்தியும் அவ்வளவாக இல்லாத அளவுக்கு ஏழைப்பங்காளனாகத்தான் இருந்திருக்கிறான்.*

👨‍🎤🐘 *வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும்..*

👨‍🎤 *வீரப்பன் இருந்த காலம் வரை மேற்கு தொடர்ச்சி மலைகளின் வளம் சுமார் 10 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக கிரீன் பீஸ் அமைப்பு கூறியிருந்தன...உலகில் எந்த காடுகளும் இந்த வளர்ச்சியை அடையவில்லை*

👨‍🎤🐘🌳 *வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, அஞ்சி நடுங்கிய வனத்துறையினர், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருகின்றனர்.*

👨‍🎤 *வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ?*❓🔪

🌍🌳 *இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?*❓

🔴 *நீலகிரி மாவட்டம்  குந்தா,* *கோயம்புத்தூரில் போத்தனூர்*
*தேனி மாவட்டம் ஆண்டிபட்டி,*
*தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர்,*
*திருவண்ணாமலை சின்னகடை மேலும் பல பகுதிகளில் இன்றளவும்*
*சந்தனமரங்கள் வெட்டி கடத்தபடுகிறது.*🔪🎯

👨‍🎤 *வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம்.*

👨‍🎤 *வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம்.*😏

🔴👨‍🎤 *வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா..??*❓🔪

🔴 *அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா..??*❓🔪

🔴 *மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா..?*❓🔪

🔴 *இயற்கை வளங்களை யார் தான் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா?* ❓

🤒 *நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?*⁉🤙

👨‍🎤 *வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.*😔

😡 *இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், உணர்ந்திருக்கிறார்கள் இவர்கள் தான் குற்றவாளி இல்லையா??* ⁉

📺 *இதையெல்லாம் இந்த ஊடகங்கள் வெளிகாட்டாமல். தமிழனை காலம் காலமாகவே முட்டாளாக்கி கொண்டிருகிறது.* *இன்றும் அது தான் தொடர்கிறது.*😰
⚖🕹 *நீதிவான்கள் ,சிந்தனைவாதிகள் அனைவரும் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் உண்மையை உலகிற்கு உணர்த்த.*

👨‍🎤 *இந்த பொய் பிரச்சாரத்தை மெய்பிக்கும் வகையில் இப்போது வெளிடப்பட்ட வனயூத்தம் என்ற திரைப்படத்திலும் வில்லனாக சித்தரித்தும், ஆளுங்கட்சிக்கு சோப்பும் போடப்பட்டுள்ளது என்பது இந்த கயவர்கள் எதுவரை ஊடுருவி உள்ளார்கள் என்பது சிந்திக்க வேண்டும்.*

👨‍🎤 *அந்த ஊர்மக்களை பொறுத்தவரை வீரப்பன் கொஞ்சம் கெட்ட போராளி அவ்வளவே !!!*

👨‍🎤 _*ஏன் இன்றும் அந்த சத்தியமங்களைத்தை சுற்றி உள்ளோராகள் எல்லாம் அவரை காவல் தெய்வமாக தான் பார்க்கிறார்கள்.*_🙏

👨‍🎤 *_வீரப்பனை பற்றிய அறியாத பல விஷயங்களையும் நக்கீரன் பத்திரிகை வெளிக்கொண்டு வந்து மக்களின் மனதில் வீரனாய் பார்க்க வைத்து._*💪

👨‍🎤 *நக்கீரன் கோபால் மூலம் இயக்குனர் கவுதமன் இயக்கத்தில் வீரப்பனின் வாழ்க்கையை _சந்தனகாடு_ எனும் தொடராக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் ஒலிபரப்பட்டது.*

👨‍🎤💪 *_வீரப்பன் எனும் தனி மனிதன் இயற்கை மருத்துவம்,அவர் இருந்த காலத்தில் இருந்த அரசியல் நிலவரம், குற்றவாளிகள் யார், எப்படி ஒரு குழுவை வழிநடத்தனும், உடற்பயிற்சி என எல்லாத்தையும் கொண்டவராக திகந்தவர். சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த, வீரப்பனை கொன்ற விஜயகுமார், வீரப்பன் குற்றவாளியாக அல்லாமல் இருந்திருந்தால், பல குற்றங்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அவர் ஒரு சிறந்த தலைவராக இருந்திருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார் அவ்வளவு திறமைகளை வைத்திருந்தவர் அவர்._*👍

⏳👨‍🎤 *_அன்றை அரசியல் சூழ்நிலையில் அவர் கடத்தி கொன்றவர்கள் அனைவருமே குற்றவாளிகளே தவிர நல்லவர்கள் என்று அதில் கூறக்கூடிய அளவிற்கு யாரும் இல்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்._*🔴

⏳👨‍🎤 *அன்றைய சூழ்நிலையில் அவர் குறிப்பிட்ட விஷயம் இப்பொழுது வரை நடந்தது கொண்டு உள்ளது அது என்ன னா " _அரசியல் வாதிகள் போல மேடைல ஏறி உங்களை காப்பதுறேன் உங்களுக்கு அத பண்ணுறேன் இத பண்ணுறேன் னு சொல்லி நாடகம் போட்டுக்கிட்டு கடைசில அவங்க குடும்பத்துக்கு சம்பாதிக்குறதுக்கு போயிடுவாங்க_"*😏 *எனும் இந்த வார்த்தைகள் அன்று முதல் இன்று வரையுமே நடந்து வருகின்ற ஒன்று தான். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை இல்லாமல் இருந்திருக்குமோ என்னமோ.*🤔

👨‍🎤 *நக்கீரன் பேட்டியின் போது அரசியல் பற்றி பேசி இருப்பார் வீரப்பன் அந்த  காட்சிகளை பார்த்து அன்றை அதிமுக, காங்கிரஸ் அரசு கதிகலங்கி நின்று கொண்திருந்தது அதன் பிறகே தேடுதல் வேட்டை மிக தீவிரமாகியது என்பது மற(று)க்க முடியாத உண்மை.*👍

🐘👨‍🎤 *யானைத்தந்தம், சந்தன மரம் கடத்தல் தொழிலில் அதிகளவு பணம் சம்பாதித்து வந்த வீரப்பனின் அடுத்து முக்கியமான குற்றச் செயல்தான் ஆட்கடத்தல் மற்றும் மிரட்டல், பிணைத் தொகை இவை. இந்தத் தொழிலில் முக்கியமாகக் கடத்தப்பட்டவர்கள் பலரும் கல் குவாரி தொழிலதிபர்கள்.*

👨‍🎤 *ஒருவரைக் கடத்தினான் என்றால் ஒரு கேசட் மட்டும் கடத்தப்பட்டவரின் உறவினருக்கு வரும் அந்தக கேசட்டில் அவர் என்னென்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று அனைத்தும் இருக்கும். அதன் படி செய்துவிட்டால் கடத்தப்பட்டவர் சிறு கீறல்கூட இல்லாமல் திரும்பிவிடுவார்.*👍

👨‍🎤 *வீரப்பன் சொன்னது படி நடந்துகொள்ளாவிட்டால். கடத்தப்பட்டவரின் சடலம் கூட உறவினருக்குக் கிடைக்காது.*🙅🏻‍♂

⏳ 👨‍🎤 *இப்படிப் பல கடத்தல்கள். இதில் முக்கியமான கடத்தல்தான் கன்னட சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் கன்னடத் திரைப்பட நடிகர் ராஜ்குமாரை 30 கோடி ரூபாய்க்காக கடத்தியது.*

⏳ 👨‍🎤 *அதனை அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி. இருவரும் ஒன்று கூடி பேசிவிட்டு. ராஜ்குமாரை விடுவித்துக்கொள்ள தூது அனுப்ப முடிவெடுக்கிறார்கள்.*

👨🏻‍🏫 *தூது போனது நக்கீரன் புலனாய்வு சஞ்சிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால்.*

📛 *அத்தோடு நெடுமாறனும் அனுப்பி வைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட 109 நாட்கள் வரை வீரப்பனிடம் பணயக் கைதியாக இருந்த ராஜ்குமார் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் விடுதலை செய்யப்படுகிறார்.*

📛 *அதே போல உள்ளூர் அமைச்சர் எச்.நாகப்பாவை 2002-ம் ஆண்டு கடத்தினார், ஆனால், கேட்டது கிடைக்கவில்லை என்பதற்காக நாகப்பாவை கொலை செய்துவிட்டனர்*

🔴😱 *இந்தக் கடத்தல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடையச் செய்தது.*😳

👨‍🎤💪 *34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது வந்தார்..*

👨‍🎤💪 *வீரப்பனின் உயிருக்குக் காவலாக இருந்து வருவது கிராமத்தினருக்கு அவன் செய்துவரும் உதவிதான். நாட்டின் வளத்தைச் சுரண்டி உதவி செய்வது குற்றம் என்றாலும் உதவும் மனப்பான்மையை அவன் பெற்றிருந்ததுதான் சிறப்பு.*

👨‍🎤🤒 *வீரப்பனின் அட்டாகாசம் தாங்காமல் இரு மாநில போலிஸ்களும் சேர்ந்து ஒரு போலிஸ் குழுவை உருவாக்கி வீரப்பனை பிடிக்க ஆப்ரேஷன் குக்கூன் (Operation Cocoon) ஒரு திட்டம் தீட்டீனர்.*

⛔ *இந்தத் திட்டத்தில் விஜயகுமார் தலைமையேற்று நடத்திமுடித்தார்.*

👨🏻‍🚒 *இதற்க்கு முக்கிய உதவியாக இருந்தவர் இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை..*

👨🏻‍🚒 *யார் இந்த வெள்ளை துரை..??* ❓🤔
*தமிழ் தேசிய திவிரவாதியாக அறிமுகம் செய்துகொண்டு சுமார் 4 ஆண்டுகள் திவிரவாதியாக வீரப்பனுடன் வாழ்ந்துள்ளார்.*👨‍🎤

👨‍🎤 *பல நாட்கள் காத்திருந்து வியூகம் அமைத்து, சிங்கத்தைக் காட்டில் வேட்டையாடுவது கஷ்டம் அதனால் சிங்கத்தை நாட்டுக்கு வரவழைத்து பிடிக்க முயற்சி எடுத்தனர்.*

👨‍🎤 *அதன்படி வீரப்பனும் கண்ணுக்கு சத்திர சிகிச்சை செய்துகொள்ள காட்டை விட்டு வெளியே வரவழைத்தனர்.*

👨‍🎤 *அதன்பிறகு இதேபோல் ஒரு தினத்தில் சரியாக 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் திகதி ஒரு வண்டியில் வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சென்றுகொண்டிருக்கையில் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுகொல்லப்பட்டார் என்பது ஒரு கதையாக உள்ளது* *வீரப்பனை சுட்டு கொன்ற விஜயகுமார் அவர் எழுதிய புத்தகத்தில் "வீரப்பன் விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க செல்லும் பொழுதே சுட்டுக்கொள்ளப்பட்டதாக கூறியிருக்கிறார்"* *இந்த இரண்டும் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.*

👨‍🎤  *இத்தனை நாச வேலைகளையும் செய்துவந்த அந்த மனிதன் பேசிய கேசட்டை பிரபாகரன் விரும்பி பார்க்கும் அளவுக்கு மொழிபற்று இருக்கதான் செய்தது *💪👍

😴🤔🙄 *இந்தச் சம்பவத்தில் பல சந்தேகங்களும் உண்டு.*

🔴 👨‍🎤 *அதில் முக்கியமானது வீரப்பனை சுட்டுகொன்றார்களா❓ அல்லது கொன்றுவிட்டு சுட்டார்களா ❓என்பது.*🤒😴

👨‍🎤 *காரணம் வீரப்பனை மோரில் விஷம் கலந்து அவனை குடிக்கவைத்து விட்டுதான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.*😰😴

👨‍🎤 *வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ?❓ தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ❓?*🤙

🐘🐘 👨‍🎤 *வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும்*

🤒 *ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல..*😣

💯 *அதுமட்டுமல்ல கர்நாடக காவேரிப் பிரச்சினையைக் கூட ஒற்றை ஆளாக இருந்து சமாளித்திருப்பான் வீரப்பன், ஓக்கனேக்கல் நீர் பிரச்சனைகூட வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் வந்திருக்காது.*🙅🏻‍♂

🛑 _*வீரப்பன் கொலையாளி என்று சட்டத்தில் சொன்னாலும் இல்லை அவன் ஒரு கொடையாளி என்றுதான் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.*_👍

⛔ *ஆனாலும், வீரப்பனை நியாயப்படுத்த முடியாது. நிச்சயமாக குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் உதவி செய்திருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது.*👍

😊 *நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும் அந்த பாற மனசுல நீர் இருக்கும்…*

😣 *வீரப்பன் மட்டும் தான் வளங்களை அழித்து கொலை செய்தானா❓?*
🔥 *மதுரை பிஆர்பி  கிராணைட் கற்கள் முலமாக 890 கோடி மோசடி செய்ய பட்டுள்ளது மேலும் பல உயிர்கள் நரபலி கொடுத்துள்ளனர்*

🔥 *இவர்களை உயிருடன் பிடிக்க தெரிந்த அரசுக்கு வீரப்பனை கூட்டாளியாக சேர்ந்து சுட்டு கொன்றதன் நோக்கம் என்ன..??❓*
*இதற்கு பிண்ணணியல் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன..??❓*
*விடை கொடுக்காத அரசியல்வியாதிகளும், விபச்சார ஊடகங்களும் இருக்கும் வரை மக்களை முட்டாளாக்கி வைத்துள்ளனர்.*👊

🔎 *மேலும் சில கேள்விகளுக்கு நமது தமிழக மற்றும் மத்திய அரசுகள் பதில் உரைத்தால் வீரப்பனை நாங்க (மக்கள்) குற்றவாளியாக ஏற்றுக்கொள்கிறோம்.*

👊 *அவர் கொள்ளையன் எனில் கொள்ளையடித்த பணங்கள் எல்லாம் எந்த வங்கியில் அவர் சேர்த்து வைத்துள்ளார்?* *இதற்க்கு ஒரு ஆதாரம் மக்களுக்கு கொடுங்க.*😣

😡 *வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை  பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் என்ன ? பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் எல்லாம் தவறுக்கு சிறைவாசம் சென்று வந்தார்கள்?*❓

🔎 *இந்திய மதிப்பில் 5 கோடி மதிப்பு கொண்ட (அப்பொழுதைய சூழ்நிலையில்) யானை தந்தங்கள் கடத்தப்பட்டதாக புகார் உள்ளது. சரி அந்த யானை தந்தம் வாங்கியவர் யார் என்று கண்டுபிடித்தீங்களா? கண்டுபிடிக்கவில்லை என்றால் யானை தந்தம் அவர் தான் கடத்தினார் என்று எந்த விதத்தில் கூறு்கிறீர்கள்?.*❓

🔎 *_மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் ஆதார பூர்வமாக பதில் மக்களுக்கு உரைத்தால் மக்களாகிய நாங்கள் வீரப்பனை குற்றவாளியாக ஏற்று கொள்கிறோம்._*

🙏 *கடைசியா சொல்லுறோம் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டியது அரசின் கடமை ஆனால் அதை அரசு தவறிவிட்டது அதை தான் வீரப்பன் செய்தார்.*👍

🙏 *அவர் மண் சமாதியை நாங்க (மக்கள்) கோபுரம் கட்ட கூட அனுமதிக்க மாட்டன்றீங்க ஏன்??* *அரசிடம் எதிர்பார்ப்பது இது தான் இதை நீங்க செய்ங்க னு நாங்க சொல்லல செய்றவங்களை செய்ய விடுங்க போதும். _(சத்தியமங்கலம் மக்கள்)_*

*நன்றி.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 Spvignesh
👑 பச்சமண்ணு (PM) O+ve⁩

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💪 *யாருக்கும் பயந்து வாழாமல் தவறு என்றால் எதிர்த்து நின்று வாழ்வது தான் வீரம்.*

💪 *அப்படி வாழ்ந்தால் உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் என்பது தான் வீரப்பன் வாழ்க்கையின் நீதி.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்*
*துணைவலியும் தூக்கிச் செயல்.*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        

*செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் கொண்ட இந்த உலகத்தில் நுனி நாக்கில் இருக்கும் அமுதம் யாருக்கும் தெரிவதில்லை அடி நாக்கில் உள்ள நஞ்சு தெரிகிறது.*

*நஞ்சை பார்க்காமல் அமுதத்தை பாருங்க.*

*மின்னுவதெல்லாம் பொன்னல்ல.*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

*😍உதயா யுவா - 9500764969*

*😍மணி விஜய் -8428073724*

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎  *கமலி*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...