🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :13.09.2017.*
🌹 *கிழமை : புதன்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹
*வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை*
💐 *காண்டேகர்*💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து அதிகளவில் ஏற்பட காரணம் என்ன? அனுசரிப்பு இல்லாததா,புகுந்த வீடு தொல்லையா?*
💑💔❣💔❣💔❣💔❣💑
*அட்மின் கருத்து.*
_____________________
💑 _*அன்பு,பாசம்,காதல்,விட்டுக்கொடுத்தல்,சகிப்புத்தன்மை, அனுசரிப்பு,பாராட்டி பேசுவது,கர்வம் ஆணவம் இவற்றை ஒதுக்கி,சின்ன சின்ன சண்டை,அதன் பின் சமாதானம் என்று...ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும் விவாகம் ஆனது ரத்து ஆகாமல்... வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இணைந்து வாழலாம்...!!*_💐
💑💔💑💔💑💔💑💔💑💔💑
_*👨👩திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்*_😍💑
💑 *மனைவி/கணவன்மார்களே உங்கள் தந்தை/தாயிடம் காட்டும் அந்த உறவில் ஓர் பகுதியை உங்களின் மனைவி/கணவனிடம் காட்டுங்கள்*
💑 *கணவனும் மனைவியும் தினமும் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசிக்கிட்டா, எந்தப் பிரச்னையும் வராது. அது கூட்டு குடும்பமா இருந்தாலும் சரி… தனி குடித்தனமா இருந்தாலும் சரி*
👩🏻💼👩🏻 *வேலைக்கு சென்று தானும் பணம் சம்பாதிப்பதால், தனது வாழ்க்கைக்கு பணம் போதும் கணவன் வேண்டாம் என்று எண்ணுபவர்களும் உள்ளனர். அத்தகைய அகங்கார எண்ணங்கள் குடும்ப அமைதியை கெடுக்கின்றன*😔
👩🏻 *ஒரு பெண் தனது இள வயதில் தந்தையாலும், பின்னர் கணவனாலும், அதன் பின்னர் வளர்ந்த மகனாலும் பராமரிக்கப்பட வேண்டியவள்*
💑👵🏻👱♀👩🏻 *பெண்கள் தான் அதிகம் பாதி்க்கபடுகின்றனர் கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்று எண்ண தோன்றினாலும், உண்மை-நிலை அதுவல்ல* *வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் தம்பதையர்களுள் வேண்டுமானால் - அதிகமான பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம்* *ஆனால் மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த தம்பதியர்க்குள் இந்த உண்மை முற்றிலும் மாறுபடுகிறது*
*வறுமைகோட்டிற்கு கீழுள்ளோரில் மிக குறைந்தோரே - விவகாரத்து வரை செல்கின்றனர் என்பதே பேருண்மை*
*அவர்கள், சமுதாயம், நியாயம்,தர்மம் நம்பிகொண்டிருப்பதால் வாழ்க்கையை சகித்து வாழ்கின்றனர்* *அவர்களுக்கு விவாகரத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை*
💑👱♀👵🏻 *மருமகளுக்கு*
*மாமியாராக பார்க்காமல் அட்லீஸ்ட் அனுபவம் வாய்ந்தவங்க சொல்றாங்க எதுக்கும் கேட்டு வைப்போமே அப்படின்னு அனுசரிச்சு போயிட்டா குடும்பத்துக்கு நல்லது*
*மாமியாருகளுக்கு*
*இப்ப வர்ற மருமகள் எல்லாம் படிச்சு முடிச்சு வெளி உலகம் தெரிஞ்சவங்களா புத்திசாலியாகத்தான் வர்றாங்க அதனால அவங்ககிட்ட இருந்து நாம கத்துக்கலாம் அல்லது அவங்க போக்கில் விட்டுடலாம் அதான் நல்லது*
💑👵🏻 *மாமியார்கள் முக்கியமாக புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இப்ப இருக்கிற அதே தெம்பும் தைரியமும் எப்பவும் இருக்குமா? வாழ்க்கை நிறைவடையற நேரத்துல கூட இருக்கப் போவது மருமகள்கள்தான் என்பதை யோசிச்சால் நல்லது*😇
💑👵🏻 *நான் கஷ்டப்பட்டேன், அதனால உன்னையும் படுத்துவேன் அப்படின்னு நினைக்கிற மாமியார்கள் கொஞ்சம்மாத்தி (ஏதோ நான்தான் கஷ்டப்பட்டேன், அதே கஷ்டம் என் மருமக படக்கூடாதுனு நினைச்சா நல்லது)*😇
💑👱♀👵🏻 *மருமகளோட ப்ரைவஸி விஷயத்துலயும் தலையிட/கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சா அவ்வளவுதான்*
*அத்தை சொன்னாங்க அப்படிங்கறது மாறிப் போய் என்னங்க, உங்க அம்மாவை கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்க அப்படின்னு மருமகள்கள் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க*
*மாமியார்களுக்கு சொல்லும் சேதி இதுதான். இது எதுக்கு உங்களுக்கு? சொந்த காசுல சூனியம் வச்ச்சுக்கற வேலை...ம். மகனுக்கு பிடிச்சிருந்தால் மருமகள் அது போல நடந்துக்க போறா அவ்வளவுதான் இது நம்ம டிபார்ட்மெண்ட் இல்லவே இல்லன்னு இருப்பதுதான் நல்லது*
💑 *கணவருடைய சப்போர்ட் இருந்ததுன்னா மருமகள் மனதளவில் தைரியமாகவும், மாமியார் ஏற்படுத்தும் பிரச்னைகளை பெரிசு படுத்தாமயும் இருக்க பழகிடுவாங்க*😇
💑 *ரெண்டு பேருமே அன்பாவும் மரியாதையாவும் நடந்துக்கிட்டா ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்குவீங்க உங்க மனைவி/கணவன் சொல்றதையும் ஏத்துக்குவீங்க*👍
😍 _*விட்டுகொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை*_😍
💑 *உங்க மனைவி/கணவன் சொல்ற எல்லாத்தையும் நீங்க ஒத்துக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா அவங்க என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. . . . உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினையை பத்தி பேசிட்டு இருக்கும்போது நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்ற மாதிரி நடந்த்காதீங்க. அப்படி செஞ்சீங்கனா உங்க பிரச்சினைக்கு தீர்வே கிடைக்காது*🙄😴
💑 *கணவனுவும் மனைவியும் நாகரிகவளர்ச்சியென்கிற பெயரில் போலியான காரணங்களை சட்டங்களை கொண்டு கடையில் கிடைக்கும் சாக்லேட்மாதிரி விவாகரத்து வாங்கிகொண்டு போகிறார்கள்*
*கல்வி மற்றும் வேலைகளை சுலபமாக பெற்று பணத்தினால் வேறுவாழ்க்கை தேடி கொள்ளலாம் என்ற நிலைக்கும் வந்து விட்டனர்*😏
⚔💑 *ஈகோ, தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய அடிப்படையாகிறது.*
❣😏 *சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.*
❣😏 *பேருந்தில் கனமான செருப்பால் காலை மிதித்துவிட்டு, சர்வ சாதாரணமாக ஸாரி சொல்பவரிடம் சண்டைக்குப் போவதில்லை. விட்டுத்தான் கொடுக்கிறோம்.*
❣😏 *கண்மூடித்தனமாக ராங் சைடில் வந்து மோதும் இரு சக்கர வாகனக்காரன் இடித்துவிட்டு, சாரி மட்டும் சொன்னால், ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். இரண்டு திட்டுகளை மட்டும் மனதில் சொல்லிக் கொண்டு விட்டுக்கொடுத்து விடுகிறோம்.*
💑 *வாழ்க்கை முழுக்க இணைந்து வாழும் வாழ்க்கைத் துணையிடம் எதையும் விட்டுக்கொடுக்காமல் சண்டைக்கோழியாக நிற்கிறோம். செய்வதையும் செய்துவிட்டு சாரி கூடக் கேட்பதில்லை. ஈகோ தடுக்கிறது.*
💑 *சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் உறவுக்கு வலு சேர்க்கும். அதிகமாகும் விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடும். அந்த நல்லப் பழக்கத்தை முதலில் கடைப்பிடிக்கப் பழகுவோம்.*
👵🏻 👱♀ *மகன் மட்டும் உள்ளவர்கள் மருமகளை பெண்ணாக ஏற்றுக்கொள்கிறார்கள்* *மகள் மட்டும் உள்ளவர்கள் மருமகனை மகனாக ஏற்றுக்கொள்கிறார்கள்*
💑 *வெளி இடங்களில் யார் யாரிடமோ அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் நமக்கு வீட்டு மனிதர்களிடம் அட்ஜஸ்ட் செய்ய முடிவதில்லை*😔
💑 *திருமணத்திற்கே உரிய பிரச்சினைகள் உண்டு அவற்றுள் தலையாயது ஒருவர் அடுத்தவரை அதிகாரம் செய்ய விரும்புவது* *(நினைப்பது)*
💑💔💑💔💑💔💑💔💑💔💑
💔 *உடல் ரீதியாக தாய்-தந்தையரை விட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்.*
💔 *சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும்.*
💔 *கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம்.*
💔 *கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்டதினாலேயே கூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும்.*
💔 *மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையப் பெற்ற பெற்றோர்களைக் கொண்ட தம்பதிகளுக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.*
💔 *திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது.*
💔 *திருமணம் ஒரு ரொமான்டிசத் தன்மைகொண்டது என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள், யதார்த்தத்தில் அப்படி இல்லை என்று தெரிய வரும்போது ஏமாற்றமடைகிறார்கள்.*
💔 *திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம்.*
💔 *சிறு வயதில் திருமணம் செய்தவர்களிடையே மணமுறிவுக்கு காரணம் நிலையான வேலை இல்லாமல் இருப்பது, பொருளாதாரத்தில், தற்சார்பு இல்லாமல் இருப்பது ஆகியவையே.*
💔 *சிறு வயது திருமணம் மணமுறிவுக்கு இட்டுச் செல்வதற்குக் காரணம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் அல்லது வருமானம் குறைவாக இருப்பதும், அதனால் ஏற்படும் மனக்கசப்பு போன்ற காரணங்கள்.*
💔 *பெரிதும் வேறுபட்ட, மாறுபாடான, பண்பாட்டுச் சூழல், மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனரீதியாக வேறுபட்டவர்களிடையேயான மண வாழ்க்கை எளிதில் முறிவுபட வாய்ப்பு உள்ளது.*
💔 *மிக முக்கியமான ஒருவருடைய மரணத்தின் துயரம், ஆறாத வடுவாக தோய்ந்துவிடுவதால் முழுமையாக மண வாழ்க்கையில் ஈடுபட முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.*
💔 *இவை எல்லாம் இல்லாமல், சில வகையான முற்றிய மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கணவராகவோ, மனைவியாகவோ கொண்டிருப்பவருக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.*
💔 *திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன.*😔
💑💔💑💔💑💔💑💔💑💔💑
💑 *உங்களுக்குள் சண்டைகள் வரும்போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க.*
💑 *அவங்க யாருங்க உங்களுக்கு? நீங்க தாலி கட்டிய மனைவி. அவரு யாருங்க உங்களுக்கு? நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்குமா சொல்லுங்க 🤔?*
💔 *நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா ?*
💑 *உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா? உங்க ரெண்டு பேரோட காதல் நீங்க என்ன தான் செய்தாலும், உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு தாங்க இருக்கும்.*
🙅🏻♂ *விவாகரத்து வீணாப் போனது.*🙅🏻
💑 *_அன்பாக இருப்போம்..!! அரவணைத்து வாழ்வோம்..!!_*😍
*நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🥇 *Arul S Michael & Ks*
🥈 *Leave Me Alone*😓
🥉 *SP.Vignesh*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😇 _*கல்யாண வாழ்வில் மருமகள் என்பவலும் தனது மாமியாரை அம்மாவை போல் எண்ணா விட்டாலும்,விரோதிபோல் நினைப்பதை தவிர்க்க வேண்டும்....*_
😇 _*தனது கணவனை பெற்றவள் என்ற எண்ணம் மருமகள் மனதிலும்,தனது பாசத்திற்கு முதலிடம் என்ற ஒரு சொற்ப ஆசையே மாமியாரிடம் இருக்கும்....இதில் போட்டி போடுவதை நிறுத்திவிட்டு... தனக்கு விருப்பமான கணவன்,தனது தாய்க்கு பாசமான மகன் என்ற புரிதலை புரிந்துகொண்டு ஒன்றாக சேர்ந்து மகிழவேண்டும்....இது ஒரு சின்ன விட்டுக்கொடுத்தல் தான் இதை புரிந்து செயல்பட்டாலே குடும்பத்தில் பாதி பிரச்சனைகள் வராமல் இருக்கும்.*_
😇 _*பிரச்சினைகள் இல்லாத குடும்பமே உலகில் கிடையாது....அனைத்து பிரச்சனைய்க்கும் பிரிந்துவிடுவது தீர்வாகாது....ஒருவரை ஒருவர் பிரிய ஆயிரம் காரணம் தேடும் நாம்...ஒருவரை ஒருவர் புரிந்து சேர்ந்துவாழ ஒருவழியும் கிடைக்காதா என்ன???*_💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்*
*நல்லாற்றின் நின்ற துணை*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்வோம்...
*மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்*
மறந்துகொள்வோம்
*மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்*
புரிந்துகொள்வோம்
*இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்!*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👨🏻💻 *காந்தசாமி 9080669640*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment