Sunday, 1 October 2017

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும்* *காடுகள் பாதுகாப்பு...* *பற்றிய ஒரு அலசல்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :29.09.2017.*
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*இயற்கையின் மாபெரும் புதிருக்கு*
*அறிவியலால் விடை காண முடியாது.*

*நாம் விடுவிக்க முயலும் அந்தப் புதிரில்,*
*நாமும் ஒரு பகுதி* *என்பது தான் அதற்குக்*
*காரணம்*

——————————
*மேக்ஸ் கார்ல் எர்னஸ்ட் பிளாங்க்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

*அட்மின் தாட்*
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
*வீடு புகுந்து திருடினால் திருடன்.*

*நாடு புகுந்து திருடினால் தலைவன்.*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ==============

*வனவிலங்கு பாதுகாப்பு மற்றும்*

*காடுகள் பாதுகாப்பு...*
*பற்றிய ஒரு  அலசல்*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

*🏜பண்டைய காலத்தில் மனிதனுடைய வாழ்வியல் முறைகள், 🐘🐂🐴🐺வன விலங்குகள், 🌳காடுகளை சார்ந்தே இருந்துள்ளன. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் ⚙இயந்திர மயமாகிவிட்டதால் 🐒🦁வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரிய வில்லை. 🌲காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாது காக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.*

*🐷🐎வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக 🙆🏻‍♂அழிந்து விடும்.*

*👨🏻மனிதன் தனது சொந்த தேவைகளுக்காக பல 🦄அபூர்வ விலங்குகளையும், 🍄தாவரங்களையும் அவற்றின் சுவடுகள் தெரியாதபடி அழித்து விடுகிறான். பெருமைக்காகவும், விற்பனைக்காகவும் வனவிலங்குகளை வேட்டையாடுகிறான். கடந்த 2000 ஆண்டுகளில் 106 🦁விலங்கினங்களும், 140 🐤🐦பறவையினங்களும் அழிந்துள்ளன.*

*👉தaற்போதைய கணக்கெடுப்பின்படி மேலும் சுமார் 300 இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பென்குவின், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம், யானை, சிங்கம், கரடி, புலி, முதலை, பாம்பு, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில அடியோடு அழிந்துப்போகும் நிலையில் உள்ளன. இறைச்சிக்காக பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. விலங்கினம் பற்றிய கல்வியறிவும், ஆராய்ச்சிகளும், மக்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வும் வனவிலங்குகளை பாதுகாக்க உதவிபுரிகின்றன.*

*🌳காடுகளை அழித்து 🛣சாலை போடுவதும், 🚂இரயில் தண்டவாளம் போடுவதாலும் பல உயிரினங்கள் இறக்கின்றது.*

*💁🏻‍♂இதற்கு காரணம் யார்?*

*👨🏻மனிதனின் தேவைக்காக நம்முடைய ஆடம்பரத்திற்காகவும் 🌳காடுகளை அழிக்கிறோம்.*

*🌳இப்படி காடுகளை அழித்தால் 🐘🐫🦌வனவிலங்குகள் எங்கே போகும்?*

*🛣வேறு இடம் பெயரும் அங்கு 🏢வீடு இருக்கா நகரம் இருக்கா என்று எப்படி 🐘விலங்குகளுக்கு தெரியும்?*

*🐘உடனே ஊருக்குள் 🐗விலங்குகள் வந்துவிட்டது என்று வனத்துறைக்கு புகார் செய்வோம் அவங்களும் அத பிடித்த செயற்கை காட்டில் விட்ராங்க.*

*🦌இன்னும் பலர் வனவிலங்குகளை வேட்டையாடி 🍖🍗மாமிசத்திற்கு கொன்று விடுகிறார்கள்.*

*💉இன்னும் பலர் அதை மயக்க ஊசி போட்டு அல்லது பொறி வைத்து பிடித்து அதன் தோல், 🐘தந்தம், அவைகளை வேலைக்காக அல்லது சர்க்கஸ் போன்ற இடங்களுக்கு விற்று விடுகின்றனர்..*

*🦌🐘வனவிலங்குகள் நம்மளை தேடி வந்து தொந்தரவு செய்வதில்லை.*

*👨🏻நாம் தான் 🐫🐫வனவிலங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் குடியேறி அதை தொந்தரவு செய்கிறோம்.*

*🌳🌳காடுகள் அழிந்து கொண்டு வருவதால் தான் 🐘🦌வனவிலங்குகள் எண்ணிக்கையையும் குறைந்து கொண்டு இருக்கிறது.*

*🙆🏻‍♂🤦🏻‍♂எவ்வளவு வனவிலங்கு இனம் அழிந்து விட்டது*.
*தற்போது ஒரு சில ரகங்கள் 🐺விலங்குகள் தான் இருக்கிறது.*

*🌳🌳இருக்கின்ற காடுகளையெல்லாம் ⚔அழித்து விட்டு பெரிய பெரிய 🏢🏬கம்பெனிகள் அரசாங்க சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டினால் 🌳காடுகள் எங்க இருக்கும்?*

*🌳🌲காடுகள்*

*🤔தற்போது 🌲காடுகள் இருக்கிறதா என்பதே கேள்வி தான்❓.*

*😱நாளுக்கு நாள் 🌳🌲காடுகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் இருக்கிறது*.

*🌳🙅🏻‍♂ஓவ்வொரு மரத்தையும் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள்.*

*🌳மரங்களை வெட்டி 💴💵வருமானம் செய்றாங்க.* *வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்க்கு மரங்களை வெட்டுகின்றனர்.*

*🛌மேஜை, நாற்காலி, போன்ற பொருட்களுக்காகவும்  மரத்தை வெட்டுகின்றனர்.*

*🐘🐺🐫🦌வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 (Wildlife Protection Act, 1972 ) 1972 🏛இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும்.*

*✍இச்சட்டம் வன உயிர்களான 🐘🦌விலங்குகள், 🦅🦆பறவைகள், 🐞🐌பூச்சிகள், ☘🌱தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது.*

*👍1972 ஆம் ஆண்டிற்கு முன்னால் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. மற்ற சீர்திருத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இச்சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைப் பட்டியல்கள் உள்ளன. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது*.

*🦌வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972*
*சான்று Act No. 53 of 1972*
*✍இச்சட்டம் 🌳காட்டு 🦌விலங்குகள், 🦅பறவைகள் மற்றும் 🌱தாவரங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது;*

*✍இவற்றோடு இணைக்கப்பட்ட துணை நடவடிக்கைகள் அல்லது இடைப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகியனவற்றுக்கும் இச்சட்டம் பொருந்தும். சம்மு காசுமீரைத் தவிர இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் ஒரு சட்டமாகும். சம்மு காசுமீரில் அம்மாநிலத்திற்கென தனியாக உள்ளது.*
*🏞ஒரு நாட்டில் 25% காடுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. தற்போது இந்தியாவில் 29% லிருந்து 30% க்குள் உள்ளது. இது குறைந்து கொண்டே வருவது 👨🏻மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்*

*🏞இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க 🐎வனவிலங்குகளை பாதுகாப்பது அவசியம். 🌳மரங்கள், 🌱தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்பவெடபநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டி யது அவசியம். ஒரு நாட்டின் 🏞இயற்கை வளங்கள் அந்நியச் 💵💴செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. 😍😍சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன.*

*🌏இந்தியாவில் 👨🏻👧மனிதனுக்குப் பயன்பட்ட விலங்குகளில் 🐂பசுவுக்கும், 🐎குதிரைக்கும் அடுத்தபடியாக  🐘யானை மிகவும் போற்றி பாதுகாக்கப்பட்டது.*

*🤔முன்னொரு காலத்தில் ஆசியாவில் பல 🐘🐘யானை வகைகள் இருந்ததற்கான சான்றுகள் உண்டு. அதற்கு சில கல்வெட்டுகளே உதாரணமாக உள்ளது.*

*🤔தற்போது ஆப்பிரிக்க 🐘யானை, இந்திய யானைகள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில் காடுகளின் அரசன் என யானைகள் பெருமையாகக் கூறப்பட்டன. தற்போது 🌳🌲காடுகளை 👨🏻மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டதால் காடுகளின் அரசன் காடுகளை விட்டு வெளியேறுகின்றன.*

*🙆🏻‍♂இதனால், ஒருபுறம் 🚛🚆வாகனங்களில் அடிபட்டும், மனிதர்களால் 🔫சுடப்பட்டும் இறக்கின்றன. மற்றொருபுறம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் நோய் தாக்கி இறக்கின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாக 🐘🐎வனவிலங்கு 😌ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.*

*🌳காடுகள் அளிப்பதால் ஏற்படும் 👎தீமைகள்.*

*🌳🌳இயற்கையான காற்று கிடையாது, 🤦🏻‍♂🙆🏻‍♂சுற்று சூழல் மாசுவால் பாதிப்படைகிறது.*

*💧நீரியல் சுழற்சி ஏற்பட 🌳மரங்கள் பெரிதும் உதவுகின்றன. நிலத்தில் இருக்கும் 💧💧நீரை தனது வேர்களால் உரிந்து காற்றில் வெளிவிடுகின்றன. இத்தகைய செய்முறையால் 🌨மழைப்பொழிவு உண்டாகின்றது.*

*மண்ணரிப்பு:*
*🌅சூரிய கதிர்கள் நேரடியாக மண் மீது விழுவதனால் அதனுடைய ஈரப்பதம் குறைந்து, அதன் சத்துக்கள் வெளியேறி*, *நுண்ணுயிர்கள் அழிந்து மண்ணின் மக்கும்  தன்மை குறைந்துவிடுகின்றது.*

*🌨இதனால் மழை பொழியும் பொழுது  மண்ணரிப்பு உண்டாகி  நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.*

*🏞வனத்தையும் 🦌🐘வனவிலங்குகளையும் பாதுகாக்க தான் 👨🏻‍✈வனத்துறை அலுவலரை நிர்ணயிக்கிறார்கள் ஆனால் சிலர் தங்களின் கடமையை சரியாக செய்கிறார்கள்.*

*🌳🌳பலர் இங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு, 🦌வனவிலங்குகளை வேட்டையாட, பிடித்து செல்ல இவங்க தான் உதவுகிறார்கள்...*

*💴💵வாங்குற சம்பளம் விட இப்படி 🌳🌳காட்டை அழிப்பதற்காக தான் பெரிய பணத்தை 💴💵லஞ்சமாக வாங்கிட்டு காட்டையும் அழித்து நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள்..*

*🌳☘🌱இயற்கை வளங்களை அழிப்பது 🤰🏻தன் தாயை அழிப்பதற்கு சமம்.*

*🌳காடுகளை அளிப்பதால் தான் காற்றோட்டம் குறைந்து ⚡வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.*

*🌞⚡⚡நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் 🌴மரங்களையும் 🌳காடுகளையும் அழிப்பது தான்.*

*🏞காடுகள் மரங்கள் தான் இயற்கையின் பெரும்பங்கு கொண்டது.*

*🙆🏻‍♂இவற்றை காக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் 🙅🏻‍♂🙅🏻‍♂அழிக்காமல் இருந்தாலே போதும்.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்*

*⁨🏆🎖நா.ராமகிருஷ்ணன்⁩*

*🏆🎖கற்றது கால்நடை மருத்துவம்⁩*

*🏆🎖ARAVINTHSAMY*

*🏆🎖navaseK⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*கருத்து*

*தற்போது  விலங்கினங்களுக்காக 44 தேசிய பூங்காக்களும், 247 வனவிலங்கு சரணாலயங்களும் நம் நாட்டில் இயங்கி வருகின்றன.*

*இத்தனை இருந்தும் காலநிலை மாற்றங்கள், வேட்டையாடப்படும் முறைகள், வறட்சி, நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல், பெருகிவரும் மக்கள் தொகை போன்றவற்றால் உலக விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் எந்த முயற்சியும் எடுக்கத்தேவையில்லை. மக்களிடையே இது சம்பந்தமாக அவ்வப்போது மக்களுக்கு சிறு விழிப்புணர்ச்சிகளையும், மற்றும் மக்கள் காடுகளின் வனவிலங்குகள் அழிவுக்கு, துணை போகாமலும் இருந்தாலே போதும்.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தீயவை தீய* *பயத்தலால் தீயவை*
*தீயினும் அஞ்சப் படும்.*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
*தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.*

*கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது…*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*

*✍👩🏻‍💻sm👩🏻‍💻✍*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...