🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :08.09.2017.*
🌹 *கிழமை : வெள்ளிக்கிழமை*
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.*
💐 *சாக்ரடிஸ்*💐
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
😇 *பாரம்பரியத்தை என்று பழையதாக நினைத்து மறந்தோமோ,அன்றே அனைத்து பாதிப்புகளுக்கு அடித்தளத்தை உருவாக்கிவிட்டோம்.*
*மீண்டும் மீட்டெடுப்போம் பாரம்பரியதுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கயை...!!!*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பாரம்பரிய உணவில் மோகம் குறைந்து துரித உணவில் மோகம் சென்றதன் காரணம்.*
🍱🌯🌮🥙🍜🍝🍲🍚🍛🥗🍱
🍱 *பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன?*⁉
😇 *பாரம்பரிய உணவுகள் என்பவை பாரம்பரிய விதைகளிலிருந்து விளைந்தவை. அதாவது புதிய ஒட்டு ரக விதைகளிலிருந்து உருவானவையல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக நெல்லிலும், சிறுதானியங்களிலும் ஒட்டுரக விதைகள் அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து மரபு வழியிலான விதைகளிலிருந்து விளைந்தவையே பாரம்பரிய உணவுகளாகத் தகுந்தவையாகும்! இதுமட்டுமின்றி, பயிர்விளைச்சலுக்கு ரசாயண உரங்களையோ, பூச்சிகொல்லி மருந்துகளையோ முற்றிலும் தவிர்த்து உருவாக்கப்பட்டவையே பாரம்பரிய உணவுகளாகும்!*👍
👩🏻🌾 *மானாவரிநிலத்திலும், மலைமுகடுகளிலும் விளையும் புன்செய் பயிர்களான சிறுதானியங்களும், தண்ணீர்வரத்துள்ள நன்செய் பயிர்களான பாரம்பரிய அரிசிகளும் ஊட்டசத்துமிக்க பாரம்பரிய உணவுகளாகும்! திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, பனிவரகு எனப்புடும் பெருஞ்சாமை, சிறுசோளம் போன்றவற்றைத் தான் நாம் சிறுதானியங்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம். இந்த சிறுதானியங்களில் என்னென்ன உணவுவகைகளைச் செய்யலாம்? என்றால்….., செய்யமுடியாதது என்ன? எல்லாமே செய்யலாம்!*🤷🏻♀
👩🏻🌾 *வெரைட்டிரைஸ் மாதிரியான கலவைச்சோறுகளை அருமையாகச் செய்யலாம். திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு, புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி, தயிர்சோறு….. போன்ற சோறு வகைகளை செய்யலாம்!*🤷🏻♀
🍛🥘🌮 *அதேபோல் இட்லி, தோசை, உளுந்துசேர்த்தகளி , வெந்தயம் சேர்த்தகளி, கும்மாயம், இடியாப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, கட்லெட், அடை, உப்புமா, ஆப்பம், புட்டு, சேவை போன்ற பலகார வகைகளும் செய்யலாம். சற்றே கோதுமையைச் சேர்த்து சப்பாத்தி, பூரியும் செய்யலாம். லட்டு, அதிரசம், மைசூர்பா, கேசரி, தொதல், அல்வா, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்தும் அசத்தலாம். ரிப்பன் பக்கோடா, முறுக்கு, தட்டடை, சீடை, காரச்சேவு போன்ற திண்பண்டங்களையும் செய்யலாம்.*🤷🏻♀
👩🏻🌾 *அதே சமயம் ஒவ்வொரு சிறுதானியமும் தனிப்பட்ட தன்மையும், சுவையும் கொண்டது என்பதால் அது அதற்கேற்ற சமயைலைச் செய்வது சிறப்பாக இருக்கும்!*😊
🔰 *கம்பு (Pearl Millet)*
👉 _தெம்பு வேண்டும் என நினைப்பவர்கள் கம்பு உண்டால் பலன் பெறுவர். கம்மங்கூழ், கம்பு தோசை, கம்பு குழிபணியாரம் இன்றும் கிராமங்களில் பிரசித்தமாகும். கம்பு உடம்பிற்கு குளிச்சி தரும் சிறுதானியமாகும். அதே சமயம் கேழ்வரகு உடல் சூட்டை அதிகப்படுத்தும் சிறுதானியமாகும். ஆகவே தான் பெரும்பாலும் கம்பு, கேழ்வரகு இரண்டையும் இணைத்து கூழ் தயாரிப்பது வழக்கில் உள்ளது._
🔰 *தினை (Foxtail Millet)*
👉 _தினையில் இனிப்பு செய்தால் நன்றாக இருக்கும். சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பா, லட்டு போன்றவற்றை தினையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாகத் தினை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். ஆகவே, இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரையோடு, பனைவெல்லம் சேர்ப்பது நலம் பயக்கும். அத்துடன் தேங்காய் துறுவலையோ, தேங்காய்பாலையோ சேர்ப்பது தினையின் சூட்டை சமன்படுத்தும்._
👉 _தினையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு பிரசவமான தாய்க்கு கொடுப்பது தமிழர் மரபு. காரணம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். தினையில் கண்ணுக்கு ஒளிதரும் பீட்டா கரோட்டின் அதிகம்! எனவே தினையை தொடர்ந்து உட்கொள்ளும் போது கண்பார்வை பிரகாசமாகும். தினைமாவுடன் தேன்கலந்து உண்டால் கபம் நீங்கும்.தினை விரைவில் செரிமானமாகும், ஆகவே பசியைத் தூண்டும். மொத்ததில் தினை உட்கொள்வது உடலுக்கு வலுசேர்க்கும்._
🔰 *சாமை (Little Millet)*
👉 _சாமை எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாகும்._
👉 _சாமன்ய மக்களின் விருப்பு உணவாக சாமை திகழ்ந்த காரணத்தால் சாமை எனப் பெயர் பெற்றது._
👉 _சாமையில் கூட்டாஞ்சோறு தொடங்கி அனைத்து சோறு வகைகளும் செய்யலாம். அதேபோல் இட்லி, தோசை, கிச்சடி போன்ற பலகாரங்களுக்கும் ஏற்றது. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்டிருப்பதால் சாமை உட்கொள்வது மலச்சிக்கலுக்கும், நீரிழிவிற்கும் தீர்வாக அமையும்._
👉 _சாமையில் மிகுந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகையுள்ளவர்களை குணப்படுத்தும். சாமையில் மினரல்ஸ் அதிகமிருப்பதால் நம் உடலில் உயரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திவிடும். *மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவின் அடித்தளமாகும்!*_
🔰 *குதிரைவாலி (Barnyard Millet)*
👉 _வாலரிசி எனப்படும் குதிரைவாலி ஒரு சுவை மிகுந்த சிறுதானியமாகும். இதில் செய்யப்படும் வெண்பொங்கல் மிக ருசியாக இருக்கும். குதிரைவாலி சோற்றில் தயிர் சேரும் போது lactobaclius என்ற வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாவைத் தருகிறது. குதிரைவாலி மோர்சோறு அல்சரை குணப்படுத்தும். குதிரைவாலியில் அனைத்து சோறு வகைகளையும், பலகாரவகைகளையும் செய்யலாம். குறிப்பாக இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிக மிருதுவாக இருக்கும்._
👉 _குதிரைவாலி உட்கொள்வதுசர்க்கரைநோயை கட்டுபடுத்த உதவும்! குதிரைவாலியோடு சற்றே உளுந்து சேர்த்து களியோ, கஞ்சியோ செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி, வயிற்று கடுப்பு பிரச்சினைகள்_
♻ *இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக கம்பு, ராகி தானியங்களில் கால்சியம் சத்து அதிகளவிலும், சோளத்தில்புரோட்டின் அதிகளவிலும், சாமை, குதிரைவாலி ஆகிய தானியங்களிலும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.*
*நம் நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணம் மற்றும் சிறுவயதிலேயே நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய்கள் அதிகரித்துள்ளது என்கிறது ஒரு ஆய்வு.இதற்கு காரணம், பாரம்பரிய உணவு முறையில் இருந்து நாம் மாறியதுதான்.* 😞
*நம் நாட்டில், ரசானய உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுகளின் ஆபத்தை புரிந்து கொண்டு, இயற்கை சார்ந்த உணவு முறைக்குத் தற்போது* *அதிகரித்திருப்பது போல, இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களின்* *மூலம் செய்யப்பட்ட உணவுகளை உண்பதும் அதிகரித்து வருகிறது.* 😓
♻ *கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள்.*
*இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.* 👍
*பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.*🤗
♻ *நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.*🤗
♻ *ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.*
♻ *தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான், இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது*
😏 *பாரம்பரிய உணவில் ஏன் மோகம் குறைந்தது?*⁉
🤜 *நம்முடைய பரப்பான சூழ்நிலை ஒரு காரணம்..*🤛
👊 *தற்போது ஆங்கில மோகம் அதிகரித்து விட்டது...*
*பீட்ஸா, பர்கர், வெஜ் ரோல், பிரட் ரோல், kfc இன்னும் பல உணவுகள்.*😏
👊 *பாஸ்ட்புட் உணவு வகைகள் கொஞ்சம் நேரத்தில் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்...*
*நூடுல்ஸ், வெஜ் ரைஸ், சிக்கன் ரைஸ், உப்புமா இன்னும் பல உணவுகள்...*
👉 *முன்பெல்லாம் சமையல் என்பது பசிக்காக இருந்தது...*
🤗 *நம்முடைய உணவு பொருட்கள் இயற்கையாக கிடைத்தது..* *வயல்வெளியில் கீரைகள் மற்றும் தோட்டத்தில் கிடைத்த காய்கறிகள்....*
*மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு என்று தானியங்களை உணவில் சேர்த்து வந்தனர்...*
💖 *நல்ல உணவுகள் சாப்பிட்டு உடல் கழைக்கும் அளவிற்கு வேலை செய்தனர்...*
😓 *தற்போது இருப்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள்..*
😞 *பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனங்களில் செல்கிறார்கள்...*
👉 *சமைப்பதற்கு தண்ணீர் கிணற்றில் அல்லது பக்கத்தில் சென்று எடுத்து வர வேண்டும்..*
👉 *விறகுகள் எடுக்க பல தூரம் சென்று எடுத்து வர வேண்டும்..*
👉 *அரைப்பதற்கு அம்மிக்கல், உரலை பயன்படுத்தினார்கள்...*
🤗 *இதனால் உடல் நிலை ஆரோக்கியமாக இருந்தது...*
👊 *தற்போது எல்லா வசதிகளையும் வீட்டிலே அமைத்துவிட்டதால்..*
*சொகுசாக இருக்கிறார்கள்..*
😓 *சமைக்க கேஸ் மற்றும் இன்டிக்சன் ப்ரஸர் குக்கர், எலக்ட்ரானிக் குக்கர், மைக்ரோ வௌன்...*
😰 *அரைபதற்கு கிரைண்டர், மிக்ஸி...*
😰 *துணி துவைக்க வாஷிங் மிஷன்..*
💝 *நம்முடைய பாரம்பரிய உணவுகள் நமக்கு உணவாகவும் மருந்தாகவும் இருந்தது.*💝
💔 *பல நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ரசாயனம் கலந்த உணவுகளையும் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருப்பதால் தான் நீரழிவு நோய் மற்றும் மலட்டு தன்மை அதிகரித்து கொண்டு போகிறது..*
💔 *நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டு போகிறது...*
💔 *மருந்து, மாத்திரை என்று இன்னும் ரசாயங்களை எடுத்து கொண்டு இருப்பதால் இன்னும் பல பிரச்சனை உடலுக்கு வருகிறது.*
💖 *ஹெல்தியான உணவுகளை வீட்டிலே சமைத்து கொடுங்கள்..*
💖 *குழந்தைகளுக்கு தேவையான திண்பண்டங்கள் சாப்பாடு அனைத்தையும் வீட்டிலே சமைத்து கொடுங்கள்...*
💖 *குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்..*👍
💔 👶🏻👦🏻👧🏻 *கடைகளில் நொறுக்கு தீணி மற்றும் பாஸ் புட் என்று கொடுத்து அவங்களின் உடலில் விஷத்தை கொடுத்து கொண்டு இருக்கிறோம்..*
👊 *இந்த நிலை மாறனும்*. 👍
😇 *வருங்கால இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.*💪👍
💝😋 *சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்*. 👍💪
💖 *கம்பு, ராகி தானியங்களில் கால்சியம் சத்து அதிகளவிலும், சோளத்தில்புரோட்டின் அதிகளவிலும், சாமை, குதிரைவாலி ஆகிய தானியங்களிலும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.*👍
💔 *சிறுவயதிலேயே நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய்கள், கல் அதிகரித்துள்ளது என்கிறது ஒரு ஆய்வு.இதற்கு காரணம், பாரம்பரிய உணவு முறையில் இருந்து நாம் மாறியதுதான்.*
💔 *நம் நாட்டில், ரசானய உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுகளின் ஆபத்தை புரிந்து கொண்டு, இயற்கை சார்ந்த உணவு முறைக்குத் தற்போது அதிகரித்திருப்பது போல, இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களின் மூலம் செய்யப்பட்ட உணவுகளை உண்பதும் அதிகரித்து வருகிறது.*
💖 *கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள்.*👍
💖 *அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.*
💝 *பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து பயன் பெறலாம்*😇👍
💁🏻 *நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?*⁉
🔰 *சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.*
🔰 *இஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும்.*
🔰 *கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.*
🔰 *பனவெல்லம்.*
*இயற்கையான இனிப்பு.*
*பலகாரம் மற்றும் தேநீரில் பயன்படுத்தலாம்*. *சளி, இருமல் வராமல் இருக்கும் இதனால் சக்கரை நோய் கூட வராது...*
🔰 *மிளகு.*
*நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. விஷத்தை முறியடிக்கும் தன்மை கொண்டது*
💝 *இன்னும் எவ்வளவோ தானியங்கள், பயிர் பொருட்கள், மருத்துவ குணங்கள் கொண்டவைகள் உள்ளது...*😊
😏 *இதையெல்லாம் விட்டுவிட்டு கடைசியில் விற்கும் பொடிகளை பயன்படுத்திட்டு இருக்காங்க.*🤦🏻♀
😇 *காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும் தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக இருக்கிறது.*💝
🖤 *மண்பாண்டங்கள், செம்பு, பித்தளை பாத்திரங்களில் சமைப்பது உபயோகிப்பது அசிங்கமாக நினைத்து கலர்கலரான பிளாஸ்டிக் பாத்திரத்தை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்*..
😏 *நம்முடைய பாரம்பரியத்தில் உள்ள நல்லது தெரியாமல்.*
💖 *இனிமேலாவது நம்முடைய பாரம்பரியம் கலாச்சாரம் இதில் உள்ள நல்லதை புரிந்து கொண்டு மாற்றி கொள்வோம்.*
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *we are Nokers & ks*
🥈 *Ashwin*
🥉 *goodlifesiva*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👴🏻👵🏻 *நம்முடைய தாத்தா பாட்டி இவங்கெல்லாம் எண்பது, நூறு வயதை எட்டினார்கள் காரணம் அவர்களுடைய உணவு வகைகள் முக்கியமான காரணம்...*
*தற்போது நாற்பது, ஐம்பது வயதை தொடுவதே பெரிசு காரணம் நம்முடைய உணவு முறைகள்..*
*நம் வருங்கால சந்ததியினர் நிலை??*
*இனிமேலாவது துரித உணவுகளையும் பாஸ்ட்புட் உணவுகளையும் தவிர்த்து. நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், ரசாயனம் அல்லாமல் இயற்கையான உணவுகளை கிடைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் மேற்கொள்ள வேண்டும்..*👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உண்ணாமை வேண்டும் புலாஅல்* *பிறிதொன்றன்*
*புண்ணது உணர்வார்ப் பெறின்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்து கொள்வோம்
*அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.*
அறிந்து கொள்வோம்
*அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.*
புரிந்து கொள்வோம்
*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👩🏻💻✍ *SM*✍👩🏻💻
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *ஜாஹிர் ஷாஹ்*
*7845032987*
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment