Tuesday, 10 October 2017

பொதுநல விசயங்களில் ஈடுபடும், ஆண் மற்றும் பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :10.10.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய் க்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*நான் சாவதற்கு அஞ்சவில்லை.*

*ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.*

💐 *திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்*💐

*💁🏻‍♂அட்மின்ஸ் தாட்💁🏻*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*எவ்ளோதான் பழக்கமா இருந்தாலும் கை தவறி பட்டா பிளேடு கிழிக்கத்தான் செய்யும்.*

*ஏன்னா அதோட வேலையே அதுதான்.*

*பிளேடை குறை சொல்லாமல் நீ கவனமாய் இரு.☹*

💖💖💖💖💖💖💖💖💖💖💖
    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*
*பொதுநல விசயங்களில் ஈடுபடும், ஆண் மற்றும் பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகள்  என்னென்ன?*
🙋🏻‍♂🙇🏻‍♀🙋🏻🙇🏻🙋🏻‍♂🙇🏻‍♀🙋🏻🙇🏻🙋🏻‍♂🙇🏻‍♀🙋🏻

⚔ *சமூக அநீதிகளுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளுக்கு எத்தனையோ தடங்கல்களும் எதிர்ப்புகளும் தலைதூக்கிய போதும் சோர்ந்துவிடாமல் நகர்ந்துகொண்டே பல ஆண்களும், பெண்களும் இன்றளவும் இருக்கின்றார்கள்.*👍

⚔ *அடக்கு முறைகளுக்கும், அதிகாரத்துக்கும் எதிராகப் பலர் பல வகைகளில் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.*👍

⚔ *உரிமைகளைக் கூட அகிம்சையின் மொழியில் கேட்பவர்களுக்கு, பல துன்பங்கள் நேரிடுகிறது.*👍

🙇🏻🙇🏻‍♀ *அவைகள் என்ன என்பதே இம்முடிவுரையின் சிறு தொகுப்பு😔.*

🔥⚔🙇🏻🙇🏻‍♀ _*பொது நலவிஷயங்களில் ஈடுபடுவதால் முதலில் தனது குடும்பமே பாதிப்புக்கு உள்ளாகிறது.எந்த தவறை எங்கு தட்டிக்கேட்டாலுமே அதற்கு பதிலடியாக குடும்பத்தையே தான் குறிவைத்து தாக்குகிறார்கள்.*_😔😰

🔥⚔😔 _*குடும்பத்தில் உள்ளவர்களோ அவர்களின் (தனது குடும்பத்தில் உள்ள பொது நலவாதிகளின் நலன் கருதி) பொது நல செயல்களில் கூட ஈடு படுவதை தடுக்க முயற்ச்சிகிறார்கள்.*_

🔥🙇🏻🙇🏻‍♀ _*பொது நலவாதிகளோ குடும்பமா,சமூகமாக என்று பித்துப்பிடுக்கும் அளவிற்க்கு குழப்ப நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.*_🤕😰😨

🔥🙇🏻🙇🏻‍♀⚔ _*இதில் ஆண், பெண் என்றாலும் பாகுபாடு இல்லை இருவருக்கும் அவர்களின் பலவீனங்களிலேயே அதாவது மதிப்பு மரியாதையை குறைப்பது,அவர்களின் மேல் வீண்பழி சுமத்துவது,இப்படி ஒரு தவறை தட்டி கேட்பதற்கு,ஆயுசு காலம் முழுவதும் அவர்களை வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது,பொதுவாகஅதிக பாதிப்பின் காரணமாக இழப்புகளும்,அவமானங்களும் தான் அதிக அளவு ஏற்படுகிறது.*_

🔥⚔ _*சுயநலம் இல்லாமல் தன்கண்முன்னே நடக்கும் அவலங்களை தட்டி கேட்க வேண்டும்..ஆனால் அதனால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது சுயநலம் இல்லையா???*_😔😠

🔥🙇🏻‍♀🙋🏻 _*குடும்பத்தில் உள்ளவர்களோ பொதுநலவாதிகளின் எதிர்காலம் என்ற எண்ணத்திலே அவர்களை குடும்பத்திற்குள்ளவே கட்டுப்படுத்தி வைக்கின்றனர்.பல முட்டுகட்டைகளையும் போடுகின்றனர்.அதுவும் பெண் என்றால் அதுவும் திருமணம் ஆகாத பெண் என்றால் அவளின் எதிர்கால வாழ்க்கை கணவன் குடும்பத்தை மட்டுமே கவனம் வைத்து,அவளின் தனிப்பட்ட உணர்வுகளையும் அடியோடு பிடிங்கி வீட்டிற்குள்ளவே உட்காரவைக்க எண்ணுகின்றனர்.*_😔😰😭

🔥🙇🏻‍♀🙋🏻 _*பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்வரவேண்டும்,அடியெடுத்து வைக்கவேண்டும் என்று ஆயிரம் பொய் புகழ்ச்சிகள் பேசினாலும்,இன்றளவும் பெண் என்றால் தன் வீட்டோடு,குடும்பத்தோடு மட்டுமே இருந்து கவனித்து கொண்டு வீட்டு நிர்வாகத்தை மட்டும் பார்க்க படைக்கப்பட்டவள் என்ற எண்ணமே அனைவர் மனதிலும் வேரூன்றி உள்ளது.*_😡👊

🔥🛡🙋🏻🙇🏻‍♀ _*மேலும் பல பெண்கள் வீட்டையும் எதிர்த்திக்கொண்டே சமூகதிக்காக வெளியே வந்தாலும்,அவர்களின் துணிச்சலையும்,தன்னம்பிக்கையையும் கண்ணில் பார்க்காதவர்கள்,அவர்களை கீழே தள்ள அவர்களின் மானத்தை பற்றியும்,இல்லை குணங்களை பற்றியும் தவறாகவே சித்தரிக்கப்பட்டு என்னாடா இப்பெண் சமூகத்தில் வெளியே வந்தால் என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு அவளை விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர்.இவையெல்லாத்தையும் தங்கி கொள்வதினால் அவள் குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர் போல் அவளை ஒதுக்கிவைக்கப்படுகிறது இந்த சமூகமே.*_😔👊😡

🔥🛡⚔ _*மேலும் பொது நலம் என்பது அவர் அவர் மனதில் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவித விருப்பம் ஆசை துடிப்புடன் செயல் படுவது....நான் பொதுநலவாதி ஆதலால் நான் என் வீட்டினரை அதேபோல் செயல்படுத்த வேண்டும் என்பது தவறு...அவர்களுக்கு சொல்லி புரியவைக்கலாம்...அவர்களுக்குள்ளும் ஒரு துணிவை,தைரியத்தை ,விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பொது நல சிந்தனையை வளர்க்க முயற்ச்சி செய்யலாம்...👍ஆனால்  நமக்கு பாதிப்பு வரும் ,நம்ம வாழ்க்கை கேள்வி குறி ஆகும் என்ற பயமும், ஏதாவது பாதிப்பு ,இழப்பு ஏற்படுவாதல் வரும்  பயமும் தான் குடும்பத்திரனை கொஞ்சம் பின்வாங்க வைக்கிறது.*_😔😞

🔥🙋🏻🙇🏻‍♀ _*போராடவோ அல்லது பொதுநலம் என்று போனாலோ பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு பற்றியே குடும்பத்தில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர்.*_😔

🔥🙇🏻‍♀ _*பெண்கள் சாதாரணமாக ஒரு விவாதங்களில் பங்கெடுத்தாலே...அடக்கநினைக்கிற,அதிகாரம் பண்ணுகிற ஆணாதிக்கம் இருக்கும் வரை எங்கிருந்து பெண்களுக்கு போராட மனசும்,தைரியமும் வரும்.தைரியத்தை இழக்காத பெண்கள் கூட அவமான படுத்தப்படுகிறார்கள்.இதுவே உண்மை.*_🙇🏻‍♀😡😔

🔥 _*மனசுக்குள் ஒன்றும்,வெளியில் ஒரு பொய்முகத்துடனும் பெண் உரிமை, பெண்களுக்கு போராட அனுமதி,பாதுகாப்பு என்று பலர் பசப்பிபேசும்  போலிவார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கும் வரை பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகவே தான் இருக்கும்????பொதுவாக பெண்கள் பொதுவாழ்வில் ஈடு பட்டால் முக்கியமாக அவர்களுக்கு அலட்சியமும்,அவமானங்களுமே அதிகம் ஏற்படுகிறது.அடக்குமுறையும்,ஆளுமையுமே தான் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது ஆண்களாலேயே...இதை முதலில் குறைத்தாலே போதும்...*_😡
🙇🏻‍♀ _*பெண்கள் பிரச்சினைகள் பாதி குறைந்து சமுக நலனுக்காக போராட முன்வருவார்கள்...முட்டுக்கட்டை இல்லாமல்.*_👍

🔥 _*ஆணுக்கு அடி மற்றும் தண்டனை. பெண்ணுக்கு அவமானம், பழிச்சொல் மற்றும் தனிமைப்படுத்தல்.*_😡

🔥 _*பொதுநலனில் ஈடுபடும் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பு அடி, உதை,சிறைவாசம் அதாவது பொய்வழக்கு போடுவது இந்தமாறி பாதிப்புகள் ஏற்படும்.பெண்களுக்கோ வலி அதாவது மனதாலும்,உடலாலும்,உணர்வாலும் அவளது வேதனையை வெளியில் சொல்லக்கூடமுடியாத அளவிற்கு இருக்கும்.😔யாரெல்லாம் நல்லவர்கள் என்று நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் எதிரியாகவும்,நேரில் முகத்தில் சிரிப்புடனும்,முகுது பின்னே செய்யும் துரோகமும் அதிகம்.*_😡

🔥 _*ஆண்களினாலே  பெண்களுக்கு அதிகப்படியான துன்பங்கள் ஏற்டுகிறது.அவளை வளரவிட கூடாது என்ற எண்ணத்தினால் அவளை கீழே தள்ளவும்,அவளின் ஆணிவேரை அசைக்கவும் சதித்திட்டமே தீட்டப்படுகிறது.😡தன்னம்பிக்கை இல்லாத சில ஆண்கள் பெண்களை போகப்பொருளாகவும்,வீட்டில் வேலை செய்யும் அடிமைகளாவுமே தான் பார்க்கிறார்கள் இந்த சமூகத்தில்😡.இவர்களின் பார்வையை எப்படி மாற்றுவது..🤕இது அவரவர் வீட்டில் இருப்போரிடம் அவர்கள் பெரும் அடியே போதும் என்று நினைக்கின்றேன்.*_👊😏

🙇🏻 *ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்*🙇🏻

🙇🏻😰 *சில சமயங்களில் போலீஸ் ஸ்டேஷன் வரை, போக கூடிய சூழ்நிலை ஏற்படும். அங்க போயிட்டு வந்தாலே என்னமோ கொலை, குற்றம் பண்ணிட்டு வந்தாப்புல ஊருக்குள்ள பேசுவாங்க. அவனுங்க, அவங்களுக்கு தெரியாது. இவன் நமக்கும் சேர்த்துதான்டா போராடுறான் என்று*😰

🙇🏻⚔ *காவல்துறை அதிகாரிகள் சிலர், பொதுநல விசயம் என்று போனாலே பலரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போ கொஞ்சம் அதிகமா பொதுநல விசயத்தில் பொங்குனவங்களை குறி வைத்து, நேரம் பார்த்து அவன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயங்களில் பழிவாங்குவதும் உண்டு.*  😰

🙇🏻⚔ *சில வேலையில்லாத பட்டதாரிகளை பார்த்து, 10 பைசா சம்பாதிக்க துப்பில்லை இவனுங்களுக்கு ஏன் இதெல்லாம்? என்று அசிங்கப் படுத்துவதும் உண்டு.*😰😔

🙇🏻⚔ *வீட்டுல உள்ள வேலையே சரிவர பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மனசு புல்லா எதாவது ஒரு சிந்தனையே மேலோங்கி இருக்கும்.*😰😔

🙇🏻⚔ *சில பெரிய தலைகளை பகைக்க கூடிய நிலை ஏற்படும். இதனால நம்ம குடும்பத்துல உள்ளவங்களை நேரம் பார்த்து அசிங்கப்படுத்தி, அவங்கள நம்மக்கிட்ட சண்டை போடுற மாதிரி, உசுப்பேத்தி விட்ருவானுங்க.*😔😰

🙇🏻⚔ *சில பெற்றோர்கள் நம்மை திசைதிருப்ப பல்வேறு முயற்சிகளை செய்வார்கள். வெளிநாடு அனுப்புவது, திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது.*😔😰

🙇🏻⚔ *பொதுநல விசயத்தில் நல்லா பிரபலமாயிருந்தா, பொண்ணு குடுக்க கூட யோசிப்பானுங்க.🤦🏻‍♂ இவன் ஒழுங்கா குடும்பத்தை பாத்துப்பானா? இல்ல இப்படியே தான் இருப்பானா? இவன நம்பி எப்படி பொண்ணு குடுக்கிறது என்ற சந்தேகப் பார்வை வைப்பாங்க.*😔😰

🙇🏻⚔ *பொதுநல விசயத்துல ஈடுபடுறவன், கண்டிப்பா அதுக்கு தகுந்த மாதிரி பொண்னை தான் தேர்ந்தெடுத்து திருமணம் பண்ணணும். இல்ல கல்யாணமே பண்ணக் கூடாது.*🙅🏻‍♂😰😔

🙇🏻⚔ *நம்ம ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்ற எண்ணத்தில் இருப்போம். ஆனா நம்ம வீட்டுல வறுமையின் காரணமா வாங்கிருவாங்க. இதனால சில இடங்களில் நம்மளையும் சேர்த்து கேவலமா பார்ப்பாங்க.*😰😔

🙇🏻⚔ *சொந்தபந்தத்தில் உள்ளவன் எதாவது ஒவ்வொரு கட்சிய சார்ந்தவனா இருப்பான். வாட்ஸ்அப், பேஸ்புக்ல பதிவு போட்டக் கூட, அய்யய்போ இப்படி போடாத, அப்படி போடாத பெரிய புடலங்காய் சிக்கல் வரும் என்று எதிர்த்து கேள்வி கேட்பவனையும், அடக்கி வச்சிருவாங்க.*😰👊

🙇🏻⚔ *சரி களத்துல போயி போராடுனா, இவ்வளவு படிச்சிட்டு ஏன் ரோட்டுல உக்காந்துருக்கான். கொஞ்சம் கூட பொழைக்க தெரியாத பையனா இருக்கேன்னே. இவன்லாம் எங்க உருப்பட போறான்னு சொல்லுவாங்க.*🤦🏻‍♂😏

🙇🏻⚔ *சுயநலமா இருக்குறவன பார்த்து, அவன பாரு, அவன் உண்டு, தான் வேலை உண்டுனு இருக்கான். உனக்கு ஏன் ஆகாத வேலைலாம் என்று தேவையில்லாம சிந்திக்க வைப்பாங்க.*😏

🙇🏻⚔ *பொது வாழ்வில் ஈடுபடுறவன், சில நேரங்களில் பெற்றோர், காதலி, மனைவிக்கு கூட நேரம் ஒதுக்க முடியாத நிலைமை கூட வருது.*😔😰

🙇🏻⚔ *ஒரு பொண்ணுக்கு பிரச்சனைனு போனாக் கூட, அவளுக்கும் உனக்கும் என்ன தொடர்புனு கூட கேட்பாங்க. சில ..........*🤦🏻‍♂🤦🏻‍♂

🙇🏻⚔ *போராடுபவன எல்லாம், கேவலமா பேசி பேசியே, பாதி பேர ஓரம் கட்ட வச்சிட்டானுங்க.*👊😰

🙇🏻⚔ *இப்படியே போனா நம்ம உரிமைகளை கூட கேட்க முடியாம கடைசியா மன்னராட்சி தான் ஏற்படுத்துற சூழ்நிலை அமைஞ்சிடும்.*👊😏

🙇🏻⚔ *உங்களுக்கு பொழுதுபோகலனா நாங்க தான்  கிடைச்சோமா? யார் என்ன வேணாலும் நினைச்சிட்டு போங்கய்யா, நாங்க சாகுறவரை  இப்படித்தான் வாழப் போறோம்😉. முடிவு பண்ணியாச்சி🙌🏼.*👍👍💪

🙇🏻‍♀ *பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்*🙇🏻‍♀

🙇🏻‍♀⚔ *ஒரு பெண் போராடுனா அவங்களுக்கு சப்போட்டுக்கு, அப்பாவோ, அண்ணாவோ, இல்ல கணவனோ இருந்த தான் அவங்க முழுமையா போராட முடியும்.* 👍👍

🙇🏻‍♀⚔ *அவங்களுக்கு யாரு சப்போட்டும் இல்லாம கடைசிவரை போராடுறது என்பது, கொஞ்சம் கஷ்டமான விசயம் தான்.*😔😞😓

🙇🏻‍♀⚔ *இந்த சமுதாயத்துல, ஒரு பெண் போராடி வெற்றி பெறக் கூட, ஒரு ஆணை சார்ந்திருக்க கூடிய சூழ்நிலை ஏற்படுது.*😓😰

🙇🏻‍♀⚔ *ஏன் தனியாக போராடி வெற்றி பெற முடியாதா?❓ இதுதான் பெண் சுதந்திரமா?😒*❓

🙇🏻‍♀⚔ *எதாவது சில பிரச்சனைகளுக்கு அதிகமாக குரல் குடுத்தாக் கூட, அவளுடைய சொந்த விசயங்களில் தலையீட்டு, பொதுவெளியில் கேவலப்படுத்தும் சூழ்நிலை கூட அமைகிறது.*😰😔🤦🏻‍♀

🙇🏻‍♀⚔ *பொதுப் பிரச்சனைகளில் தலையீட்ட பெண்களை, இவளுக்கு இவ்வளவு திமிரு, அகம்பாவம் கூடாதென்று பேசுவாங்க.*😰🤦🏻‍♀😔

🙇🏻‍♀⚔ *ஒரு பெண்ணாக இருந்துவிட்டு, ஏன் இப்படி பண்ணணும், நம்ம சொந்தக்காரங்க நம்மள மதிக்க மாட்டாங்க. இவ்வாறெல்லாம் பெண் இருக்க கூடாது என்று ஓரம் கட்டி வைக்கின்றனர்.*😰😔😞

🙇🏻‍♀⚔ *எதாவது சிறு, சிறு சுயநலம், பொதுநலம் சார்ந்த எந்த பிரச்சனைகளாக இருந்தாலும், பெண்கள் வீட்டில் எடுக்கப்படும் அதிரடி (ஆடி ஆஃபர்) தீர்வு கல்யாணம்😭.*😰😭

🙇🏻‍♀⚔ *எந்த ஒரு பொது காரியத்துல ஈடுபட்டாலும் future_ல இதெல்லாம் செட் ஆகாது. கணவன் குழந்தை வாழ்க்கை எவ்வளவோ இருக்குனு சொல்லுவாங்க.*😭

🙇🏻‍♀⚔ *பொதுநல விசயங்களில் ஈடுபடும் பொண்ணுங்க, கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாக் கூட, ஒண்ணு தனக்கு சப்போட் பண்ற கணவனை தேர்ந்தெடுக்கணும்.👍 இல்லைனா வீட்ல இப்படி இருந்தா தான் எனக்கு செட் ஆகும். இல்ல மேரேஜ் வேண்டாம்னு 🙅🏻கூட ஓப்பனா சொல்லிடலாம்.*👍

🙇🏻‍♀⚔ *கடமைக்கு கல்யாணம் பண்ணி எதுக்குங்க பொம்மை போல வாழணும்?😏.*😓

🙇🏻‍♀⚔ *பெண்களுக்கு மாப்பிள்ளை பாக்குறவங்க, பொண்ணு கொஞ்சம் சமூக அக்கறைல ஆர்வம் இருந்தா, அவங்க எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை பாருங்க.*😔🙇🏻‍♀

🙇🏻‍♀⚔ *பெண்களுக்கு கற்புனு ஒண்ணு இருக்குறதுனால தான், சமூகத்துல போராட முடியாத சூழ்நிலை ஏற்படுதோ 😒. அதையும் மீறி ஒரு சிலர் சாதிச்சிருக்காங்க.👍 பலர் மறைமுகமாகவே எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.😒.*

🙇🏻‍♀⚔ *பாரதத்தாய் என்றழைக்கப்படும் இந்த நாட்டில் ஒரு பெண் சுதந்திரமாக சமூகத்துக்காக போராட முடியாத நிலை*😓😔😰

🙇🏻‍♀⚔ *பெண்கள் பொது பிரச்சனைகளுக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்தா, வேற மாதிரியும் பாக்குறாங்க. அத சொல்லவே கஷ்டமா இருக்கு😒.*🤦🏻‍♀😰😔

🙇🏻‍♀⚔ *பொது விசயங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை போன, கேவலமானவளா மாறிடுவாளா?*❓🤦🏻‍♀😔

🙇🏻‍♀⚔ *இதுல அலுப்பத்தனமாக போன் நம்பர்ல வேற மிரட்டல்கள் 😴. ஓரமா போயி விளையாடுங்க சார்.* 🤦🏻‍♀🤦🏻‍♀

⚔ *எத்தனை தடைகள் வந்தாலும் முடிந்தவரை உடைத்தெறிவோம்...!!🏹.*👍

⚔ *சமூகத்திற்காக போராடுவதை முடிந்தவரை விடப்போவதில்லை...!!!🏹.*👍

🙏 *நன்றி*💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
🥇 *இசையருவி*🏵

🥈 *@⁨Su⁩ & @⁨ஆழக்கப்பன்⁩*🏵

🥉 *@⁨Karthikeyan c🤗⁩*🏵

*கலந்துரையாடல்~2®©*

🥇 *@⁨பேரறிவு💫⁩*🏵

🥈 *@⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩*🏵

🥉 *@⁨🦄KPKR🦄⁩*🏵

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*👍கருத்து🤔*

☹ *பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று நொடிப் பொழுதில் முடிந்து விடுகிறது வாழ்க்கை.*😏

☹ *தினமும் எவ்வளவோ குழந்தைகள் பிறக்கின்றன. எத்தனையோ பேர் இறக்கிறார்கள். எல்லாம் சிறு சிறு சம்பவங்களாக முடிந்து விடுகின்றன.*😓

💪 *எவர் பிறருடைய நலனுக்காக வாழ்கிறாரோ, மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படுகிறாரோ, ஆபத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களுக்கு எவர் உதவ முன்வருகிறாரோ, அவருடைய மரணம் அர்த்தமுள்ளதாகிறது. சரித்திரமாக பதிவாகிறது. காலம் காலமாக பலரும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள்.* 👍💪

👉 *பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.*

👉 *சுயநலம் என்பது கால்பந்து போன்றது.*

⚔ *இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.*

😍 *ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.*

⚔ *மற்றொன்று உதைக்கப்படுகின்றது.*

💁🏻‍♂ *தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது.* 👍

💁🏻 *ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப்படுகிறது.*👍

👊 *சுயநலம் உள்ள மனிதன் நிச்சயம் ஒருநாள்  புறக்கணிக்கப்படுவான்*👊

💪 *பொதுநலம் உள்ளவன் என்றாவது ஒருநாள் போற்றப்படுவான்.*👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்*
*அஃதறி கல்லா தவர்*
  
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     
ஒரு விளைவுக்கு எதிர் விளைவுஎப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔹 *தெரிந்துகொள்ளவும்*🔹
*உற்றார் தின்றால் புற்றாய் விளையும்,* *ஊரார் தின்றால் பேராய் விளையும்.*

🔻 *சுயநலவாளிகளின் எண்ணம்*🔻

*கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.*

💪 *பொது நலவாதிகளின் எண்ணம்*👍

*சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.*

📣📢📣📢📣📢📣📢📣📢📣
🥁 *முடிவுரை தொகுப்பாளர்*🥁

👨🏻‍💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*✍

👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈

📣📢📣📢📣📢📣📢📣📢📣
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *காளையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...