Monday, 23 October 2017

ஒரு மனிதனின் இறப்பும், அவற்றை சுற்றி நடக்கும் சம்பிரதாயங்களும், நிகழ்வுகளும்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் : திங்கட்கிழமை* 🌹

🌹 *தேதி : 23.10.2017* 🌹
__________________________________

💓 *அறிவோம்*💓
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

*நமது பிறப்பு ஒரு "சம்பவமாக" இருக்கலாம்,*

*ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும்.*

💐 *~டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்.*💐

😎 *அட்மின்தாட்ஸ்*😎
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
*இறப்பு என்பது அனைவருக்கும் நிச்சயம்*

*ஆனால் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் நம் என்ன சாதித்தோம் என்பது தான் புரியாத புதிர்🤷🏼‍♂*

📣 *தலைப்பு*📣
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
*ஒரு மனிதனின் இறப்பும், அவற்றை சுற்றி நடக்கும் சம்பிரதாயங்களும், நிகழ்வுகளும்,*
😭👥👤😔👥👤😔👥👤😔😭

😱😓 *இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம். மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி.*⁉

👤 ⁉ *இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. *🙅🏻‍♂

👉 *"அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை*🙅🏻‍♂🤷🏻‍♂

💁🏻‍♂ *சரி விசயத்துக்கு வருவோம், இந்த தலைப்பு ஏன் வச்சோம்? எதுக்காக வச்சோம்?*🤔

💁🏻‍♂ *நம்ம கலந்துரையாடல் குழுல எந்த ஒரு தலைப்பு வச்சாலும் எதாவது ஒரு காரணம் இருக்கும்ங்க.*👍

👤 *இறக்கும் வீட்டில் நடக்கும் கூத்துகள்*😏

👤 *விபரம் அறியாத (சின்ன) 👦🏻👧🏻பசங்களுக்கு யார் இறந்தாலும், ரொம்ப ஜாலியாக இருக்கும். ஏன்னா மூணு நாள் எப்படியும் ஸ்கூல் லீவு போட்ரலாம்.* 😜

💁🏻‍♂ *வாலிப வயதில் உள்ளவர்களுக்கு தாத்தா, பாட்டி இறந்தால் சின்னதாக கஷ்டம் இருந்தாலும், உள்ளுக்குள்ள கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே இருப்பானுங்க.😛 சொந்த பந்தம், அத்தை பொண்ணு, தூரத்து உறவினர்கள் கூட வருவாங்க. ஜாலியா எண்டர்டெய்ன்மண்ட் பண்ணுவாங்க.*😜

💁🏻‍♂ *தண்ணி அடிக்கிற கோஷ்டிங்க, ஒரு குரூப் இருக்கு. ஊர்ல எங்க சாவு விழுந்தாலும், தண்ணி அடிச்சிட்டு முதல் ஆளா போயி, ஆக வேண்டிய வேலைய பாப்பாங்க.*🤷🏻‍♂

💁🏻‍♂ *நண்பர்கள் கூட்டம்னு ஒரு கூட்டம் இருக்கு, அவனுங்க சாவு வீட்டுக்கு வந்தாலே மனசுக்குள்ள சிரிச்சா முகமா இருப்பானுங்க. பெரிய ஆளுங்க போனா கப்பு சீப்புனு ஆயிடுவாங்க. திரும்பி ஒருத்தன் மூஞ்ச ஒருத்தன் பாத்துப்பானுங்க.*😛🤷🏻‍♂

💁🏻‍♂ *தர லோக்கல் பசங்க, ரோட்டுல மாலைகளை பிச்சி போடுறது, பூவை ரோட்டுல போறவங்க மேல தூக்கி எறியுறது, பேருந்து ஜன்னல் ஓரத்து பயணிகள் மேல பூ வீசுறது, ஆட்டம், பாட்டம்னு குத்தாட்டம் போடுறது இப்படி ஏகப்பட்ட அலும்பு பண்ணுவானுங்க.*😛😜🤷🏻‍♂

👴🏻 *ஊர் பெரிய மனுசன்*👴🏻

👴🏻 *அவரின் சில வசனங்கள்* 👇

🗣 *ஏன்பா எவ்வளவு நேரம் ஆகுது சீக்கிரம் தூக்குங்கப்பா, வேலை கிடக்கு, யாருப்பா அது, அந்த பங்காளி சுங்காளிங்க, அட சீக்கிரம் வாங்கப்பு, ஆக வேண்டியத பாருங்க, குளிப்பாட்டுங்க, (வாரிசுங்க கிட்ட) தம்பி அதெல்லாம் அப்படி பண்ண கூடாதுப்பா, அட இத இப்படி பண்ணக் கூடாதுப்பா. (வாரிசுகளின் மைண்ட் வாய்ஸ் : ங்கொய்யால இந்த ஆளு அலும்பு (அலப்பறை) தாங்க முடிலயேடா)*😉😜

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

👤🖤 *இறப்புகளை இரண்டு விதமா பிரிக்கலாம். ஒண்ணு இயற்கை மரணம், மற்றொன்று செயற்கை மரணம்.*

👤🖤 *இயற்கை மரணம், இறப்பு நம்மை தேடி வருவது, நன்றாக வாழ்ந்து முடித்த பின்னர் இயற்கையாக மரணிப்பது.*

👤🖤 *செயற்கை மரணம், நம்மளே இறப்பை தேடி போவது, மது குடிப்பது,  புகை பிடிப்பது, கவனக் குறைவு விபத்துக்கள், தற்கொலைகள், நோய்வாய்ப்பட்டு தன்னம்பிக்கை இல்லாமல் நம்மை நாமே வருத்திக் கொண்டு இறப்பது இது போன்றவைகளாகும்.*

👤🖤 *நம்ம நாட்டுல இப்ப இயற்கை மரணத்தை விட, செயற்கை மரணங்கள் தான் அதிகமாக நடக்கின்றன. 😔அதற்கு காரணம் நம்முடைய சுற்றுப்புற சூழல்களும், நம் தன்னம்பிக்கை இல்லாததும், நம்முடைய கவனக் குறைகளும் தான்.*😓

👤🖤 *ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது யாரும் கண்டுக்கிறது இல்ல,😏 ஆனா இழுத்துக்கிட்டு கிடக்குறப்ப தான் கரெக்ட்டா பால் ஊத்த வந்துருவானுங்க.*😏

👤🖤 *பெத்தவளுக்கு உயிரோடு இருக்கும் போது சோறு போடதவன்லாம், செத்ததுக்கு அப்புறம் வாய்க்கரிசி போட வந்துருவாங்க.*👊

👤🖤 *ஒருவர் இருக்கும் போது, அதோட அருமை அவ்வளவாக தெரிவதில்லை. 😏அவர் இல்லாத போது தான் அவரின் பிரிவை உணர முடிகிறது.*👍

👤🖤 *எல்லோரும் வழக்கம்போல பிறந்தோம், எல்லாரையும் போல வாழ்ந்தோம், மூணு வேலை சாப்பிட்டோம், தூங்குனோம் இதயே தான் இறக்கும் வரை  வாழ்க்கை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.*😏

👤🖤 *நம் உயிரோடு இருக்கும் போது என்ன சாதித்தோம்?🤙 யாருக்கு என்ன ப்ரோஜனமாக இருந்தோம்?🤙 யாருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காகாவது பயன்பட்டோமா? 🤙 என்பதில் தான் உண்மையான வாழ்க்கை முறை அடங்கியிருக்கிறது.*👍

💕 _*ஒரு சிலர் இறந்த பிறகும் கூட, யாருக்காவது உபயோகமாக கூட இருக்கின்றனர். எப்படி தெரியுமா?*_💝

*🔴 _தன் கண்களை தானம்👁👁 செய்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர்.🔴_*

*🔥சரி சம்பிரதாயத்திற்கு போவோம்.🔥*

😏 *என்ன பெரிய சடங்கு, சம்பிரதாயம் என்று புரியவில்லை, விளங்கவில்லை.*😏

👉 *ஒவ்வொரு சாதிக்கு ஒரு சடங்கு, ஒவ்வொரு மதத்திற்கு ஒரு சம்பிரதாயம்*🎯

👉 *நம்ம மனிதர்களுக்கு பிறந்தோமா? இல்ல சாதி, மதங்களுக்கு நாம் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய பிறந்தோமா?*🤙

👊 *யாருடைய முன்னேற்றத்திற்கோ (🔴உடல் உறுப்புகளை தானம் செய்தல்🔴) பயன்படுத்த வேண்டிய உடலை வைத்து, அலங்காரம் செய்து ஒப்பாரி வைத்து, தனது துக்கங்களை அனுசரிக்கின்றனர்.*🤷🏻‍♂

👉 *இவ்வாறு அனுசரிப்பதால் போன உயிர் திரும்பி வந்துவிடப் போகிறதா? சடங்கு சம்பிரதாயம் செய்வதால், யாருக்கு என்ன இலாபம் வந்துவிடப் போகிறது?* 🤙

🔪 *தயவுசெய்து உங்க சடங்கு சம்பிரதாயங்களை தூக்கிப் போட்டு விட்டு, மண்ணிற்கு போகும் உடலை, பிற உயிர்களுக்கு குடுக்கவும், அடுத்தவர் குடும்பத்தில் விளக்கேற்றி வைக்கவும்..,*🙏

*🔴உடல் உறுப்புகளை தானம் செய்வீர்.🔴*

👤😔 *இறந்தவர்கள் வாயில் துணி கட்டி, மூக்கில் பஞ்சை வைத்து அடைத்து, கை கால்களை இறுக்க கட்டி, அவர்களை  ஊர்வலமாக கொண்டு சென்று ஒரு கேலிப் பொருளாக பயன்படுத்த படுகிறார்களோ, இறந்த பின்னும் அவர்களை துன்புறுத்துகின்றமோ, என்ற எண்ணம் தோன்றுகின்றது. கேட்டால் அனைத்திற்கும் முன்னோர்கள் செய்தால் எதாவது ஒரு காரணம் இருக்கும் என்று சொல்வார்கள். கொஞ்சம் ஆழ்ந்து🤔 யோசிச்சி பார்த்தா, அதற்கு அவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வைப்பது எவ்வளவு மேல் என்று தோன்றும்.*👍

👤👥 *இவர்கள் செய்யும் வேடிக்கைகளை பார்த்தால், தான் சாப்பிட்ட உணவில் மிச்சத்தை, அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லாமல், குப்பைகளில் கொட்டுவதற்கு சமமாக உள்ளது.*🤦🏻‍♂

🔪🤦🏻‍♂ *மாலை மரியாதை செலுத்துவது, ஒரு உடலுக்கு ஒரு மாலை போதுமானது. ஆனா துக்க வீட்டிற்கு வருபவர்கள் பலர் மாலை வாங்கி கொண்டு வருகின்றனர். மாலை வாங்கி செலவு செய்வதை விட, அந்த குடும்பத்திற்கு எதாவது பயன்படும் வகையில் உதவிகள் செய்யலாமல்லவா?*🤷🏻‍♂

👉 *இன்னும் தெளிவா சொல்லணும்னா, இறப்பவர் நெத்தில காசு வைப்பதை விட, அந்த குடும்பத்தில் அழுது கொண்டிருக்கும் பாப்பாவுக்கு இட்லி வாங்கி குடுக்கலாம்னு சொல்றேன்.*🤷🏻‍♂

👉🔪 *சாப்பாடு போட்டா தான், மொய் என்று அப்பவே எழுதி வச்சிட்டாங்க போல,😏 அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, இறந்த பின் கருமாதி வீடாக இருந்தாலும் சரி. ஒருத்தவன் 50,000 அல்லது ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, பிறருக்கு உணவளிக்கும் செலவை, அனைவரும் அவர்களிடமே பிரித்தளிப்பது (ஒப்படைப்பது). அது தான் உங்க ஊர்களில் மொய்யா?.*🔪

👉 *கல்யாண வீட்டுல சாப்பாடு போடுறிங்க, மொய் எழுதுறிங்க அத கூட ஒத்துக்கலாம். ஆனா துக்க வீட்டுல பணம் இருக்குமோ? இருக்காதோ? அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க, 😓அப்ப அங்கயும் போயி சாப்பிட்டு விட்டு மொய் எழுதிட்டு வருவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. இது எல்லாத்துக்கும் ஒரு காரணம் சடங்கு சம்பிரதாயம்னு சொல்லுவீங்க.*🤦🏻‍♂

💁🏻‍♂ *அதற்கு பதிலாக இறந்த வீட்டில் கஷ்டப்படும்😰 நேரத்தில், தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாமல்லவா?*🔪👍

👉 *அந்த நேரத்தில் நீங்கள் செய்கின்ற உதவிகள் தான் அவர்களுக்கு மிகப் பெரியதாக தோன்றும்.*👍

👉🔪 *கருமாதி வீட்டில் சாப்பிட்டு விட்டு மொய் வைப்பது கூட, கொடுத்து, வாங்குவதற்கு சமமாகவே உணரப்படுகிறது.*🤷🏻‍♂

👤 *முதியவர்கள் இறந்தால் திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க. அதுவே இளையவர்கள் இறந்தால் அதுக்கு ஒரு மாதிரி. அனைவருக்கும் உயிர் ஒன்று தானே, கேட்டா ஆண்டு அனுபவிச்சிட்டு இறந்தாங்க என்று சொல்லுவாங்க. அவங்க உங்களிடம் கூறியது உண்டா?*😏

👤 *இறப்பவர்கள் அனைவருக்கும் எதாவது ஒரு ஆசை இருந்து கொண்டு தான் இருக்கும். ஆண்டு அனுபவித்தவர்கள், நிம்மதியாக இறப்பவர்கள் என்று இங்கு யாருமில்லை. எல்லோரும் எதாவது சில ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தான் இறக்கின்றார்கள்.*😰

👤🔪 *சுடுகாட்டுல கூட சாதி, மத சம்பந்தப்பட்ட சுடுகாடுகள் என்று பிரிச்சி கூட வச்சிருக்கானுங்க.*👊

👤🔪 *இறந்தவர்களை இந்த சாதி காரர்கள் இவ்வழியாகவும், அந்த சாதி காரர்கள் அவ்வழியாகவும் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பாகுபாடுகள் கூட இன்னும் பல கிராமங்களில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றது.*🔪

👤🔪😡 *பிணத்தை வைத்து பஞ்சாயத்து பேசும் மருத்துவமனைகளும் இங்கு ஏராளம்.*👊🔪

👤🔪 *ஒரு மனிதன் செத்தாக் கூட, அவர்களை நிம்மதியா சுடுகாடு கொண்டு போயி சேர்ப்பதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும்.* 😰

👤🔪 *ஒரு மனுசனை இங்க நிம்மதியா வாழவும் விட மாட்டனுங்க. நிம்மதியா செத்து போகவும் விட மாட்டனுங்க.*👊

👤👉  *எல்லாருடைய இறப்பும், அவரவர் குடும்பத்தில் மாற்றத்தை வரவழைக்கும்.*🎯

👉😔🎯 *நம்ம சாதரணமா ரோட்டுல போறப்ப, எத்தனையோ பேரு விபத்தினால் துடியா துடிச்சிக்கிட்டு இருப்பாங்க. நம்ம அத கூட சிலர், 108 க்கு கால் பண்ணிட்டு அவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க.*😓

👉 🎯 *ஆனா அந்த ஒரு உயிர் போயிடுச்சினா, அவங்களை நம்பி இருக்குற பேமிலி சூழ்நிலைகளை நினைச்சி பாத்துருப்போமா?*😓😔

👉 🎯 *பலர் கண்டுக் கொள்ளாமல் போனதுனாலயே, பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் இறந்தவர்களுடைய குடும்பத்தில் தான், தங்கை, அக்கா திருமணம் செய்து வைக்க கூடிய சூழ்நிலை, மனைவி குழந்தைகளை காக்க வேண்டிய சூழ்நிலை, பெற்றோர்களை காக்க வேண்டிய பொறுப்பு, இதில் எதாவது ஒன்று அடிப்பட்டுவிடுகிறது.*😔

👉🎯 *ஒவ்வொரு உயிர் பிரியும் போதும், ஏதோ ஒரு இழப்பையோ, சரிவையோ ஒரு குடும்பம் சந்திக்க நேரிடுகிறது.*😓😔

👉🎯 *நம்மால் முடிந்தால் ஒரு சில உயிர்களையாவது, காப்பாற்ற முற்படுவோம்.*👍

👉🎯 *_உயிருக்கு போராடிக்கிட்டு இருப்பவங்களை மீட்பவர்கள், தாயிற்கு (கடவுள்) இணையானவர்கள்._*👍

*🔴இறப்புகளில் (ஒரு பாடல், டக்குனு வந்தது வரிகளில் பிழை இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க) ஆண்ணென்ன? பெண்ணென்ன?  நீயென்ன? நானென்ன? எல்லாம் ஓரினம் தான். சடங்கு சம்பிரதாயங்களை குப்பையில் தூக்கி வீசி விட்டு ஆக வேண்டியதை பார்ப்போம்🔴*

*நன்றி*💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑

*கலந்துரையாடல் ~1*

🥇 *தமிழன் navask*

🥈 *Kumaran.G& Sp.vignesh*

🥉 *இசையருவி &jaiganesh*

*கலந்துரையாடல் ~2*

🥇 *@⁨😆😝Rishi😂🤣⁩ , @⁨Yogeshwaran⁩*

🥈 *@⁨Anandakumar⁩, @⁨sukumar ❤Zhorba⁩*

🥉 *@⁨RAJA SEKAR⁩, @⁨Gloria⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤       

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🌍 *சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். 🔍*

🤦🏻‍♂ *எப்பவும் மொபைல், லேப்டாப் நோண்டுனா இப்படித்தான்.*👊

👁 *கண் தானம் செய்வோம்*👁👍

🔴🔴🔴🔴🔴🔴🔴

💁🏻‍♂ *உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு உதவ, இன்னொருவர் தனது உடல் உறுப்புகளில் ஒன்றை தானம் செய்வதே உறுப்பு தானம். சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடலின் ஒரு பகுதி ஆகியவற்றை தானம் செய்யலாம்.*👍

💁🏻‍♂ *அறுவை சிகிச்சை மூலமாக முழு உறுப்பை எடுக்காமல் கண்ணின் கருவிழி (கார்னியா), தோல், தசைநார், இதய வால்வு போன்ற திசுக்களை மட்டும் தானமாக பெற்று மற்றவருக்கு பொருத்துவது திசு கொடையாகும்.*👍

💁🏻‍♂ *தீக்காயங்களால் பாதிக்கப்படுகிறவர்கள் தோல் தானம் மூலம் பயன் அடைகிறார்கள்.*👍

👉 *உறுப்புகளை எடுப்பதை விட முக்கியமானது எடுத்த உறுப்பை சரியான நேரத்துக்குள் பொருத்துவதுதான். எவ்வளவு விரைவில் பொருத்துகிறோமோ அவ்வளவு  நல்லது.*👍

👉 *இதன்  வெற்றி விகிதம் 92 சதவிகிதமாக உள்ளது மகிழ்ச்சியான விஷயம்!*👍😇

👉 *இப்ப எவ்வளவோ பேருக்கு, சில உறுப்புகள் கிடைக்காத நிலை உள்ளது.*😔

_*🔴எனவே, ஒவ்வொரு இறப்பையும் பயனுள்ளதாக மாற்றுவோம். உடல் உறுப்புகளை தானம் செய்வோம்.🔴*_👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
*மேற்சென்று செய்யாப் படும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

♦ *அறிந்துகொள்க* ♦

*சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?*

♦ *புரிந்துகொள்க*♦

*செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.*

♦ *தெரிந்துகொள்க*♦

*வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*✍

💎💎💎💎💎💎💎💎💎💎💎

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *சங்கிலி பூதத்தான்*
*9150751098*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...