🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.10.2017.*
🌹 *கிழமை : செவ்வாய்க்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்,* *நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.*
💐 *– பியர்ல் எஸ்.பக்*💐
🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀
*🤷🏻♀அட்மின்ஸ் தாட்🤷🏻♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *வரலாறு என்பது உருவாக்கப்படுவதில்லை....*
🏹 *அது தானாகவே, அவரவர் செயலிலும் வளர்க்கப்படுகிறது....!!👍*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கடலினால் காணாமல் போன மர்மங்கள்??????*
🌊😱🌊😳🌊🤔🌊😱🌊😳🌊
🌊 *பாகம் - 1⃣*
🌊 *கடல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் கடலுக்குள் பல்வேறு மீன்கள், தீமிங்கலங்கள் மற்றும் பல வகையான உயிரினங்கள், எரிமலைகள், அரியவகை பாசிகள் கொண்டுள்ளது..*🤗
🌊 🚢🛰 *பல கப்பல்களும் செயற்கைகோள்களும் கடலுக்கடியில் இருப்பதை கண்டிருப்போம் செய்திகளில் கேட்டிருப்போம்.🤔🤷🏻♀ ஆனால் கடலுக்கடியில் மனிதர்கள் வாழ்ந்த நகரங்களும், கண்டங்களும் இருக்கின்றது என்றால் நம்பமுடிகிறாதா.😳 ஏதோ ஜேம்ஸ்கமெரூன் மற்றும் ஷங்கர் படத்தில்🙌 வந்த கதை மாதிரி இருக்கின்றதா.😎 இந்த உலகில் முற்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பல மாபெரும் நகரங்கள் தற்போது கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.🤗 நம்மை போன்று வாழந்த மனிதர்கள் பலர் கடலினால் நகரங்களுடன் காணமல் போயினர்.😱 அதோடு சேர்த்து நம் தமிழ் நாகரிகங்களும் இன்று அமைதியாக கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிக்கிறது😞 அவற்றை பற்றி காண்போம்*👍
🌊🔎 _*லயன் சிட்டி ஆப் குயன்டோ லேக், சீனா*_🌊
🌊🔎 _*கடலுக்கடியில் மூழ்கிய பண்டைய நகரங்களில் மிகவும் அற்புதன்மான நகராக இவ்விடம் கருதப்படுகிறது. பல நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட பகுதியாக இந்நகரம் இருக்கிறது. இங்குள்ள சிலைகள் எல்லாம் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த இடம் சீனாவின் முக்கியமான ஒரு சுற்றுலா இடமாக இருக்கிறது.*_🔍🌊
🌊 _*தி ப்ரமிட்ஸ் ஆப் யோனாகுனி*_🌊
🌊🈲 🔎 _*ஜப்பானை சேர்ந்த யோனாகுனி என்ற கடல் பகுதியில் உயர்த்தர பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 76 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிரமாண்ட பிரமிடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு இந்த கடல் பகுதியில் சில அறிய வகை சுறா மீன்களை பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் பொழுது கடல் பாசிகளால் சூழப்பட்ட இந்த மாபெரும் பிரமிடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்🔍 இதில் ஆச்சர்யப்படும்😱 விடயம் என்னவென்றால் இந்த பிரமிடுகள் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானதாகவும் இந்த நகரம் கடல் சீற்றத்தால் அழிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது*_🌊👍
🌊 _*போர்ட் ராயல்*_🌊
🌊🔎 _*கி.பி 1518 நூற்றாண்டில் ஸ்பானிஷ் காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போர்ட் ராயல் நகரமானது முற்காலத்தில் ஜமைக்காவில் உள்ள கரிபியன் கடல் பகுதியில் மிக திவரமாக செயல்பட்டு வந்தது. கடல் கொள்ளை, சாராயம், விபச்சாரம் என அனைத்து கொடுமைகளுக்கும் பெயர் போன நகரம் இது.*_🔍🌊
🌊🔎 _*1692 ஆம் ஆண்டு வந்த நிலநடுக்கமானது போர்ட் ராயலை முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கடித்தது இதனால் இங்கு வாழ்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்தனர்.*_😔
🌊 _*கிளியோபாட்ரா அரண்மனை.*_🌊
🌊 🔎🏯 _*எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை கடலுக்குள் கண்டுப்பிடிக்கப்பட்டது . நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.*_🔍
🌊🏯🔎 _*பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின் சிலைகளும் காணப்படுகிறது.இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.🔍 🏯அரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள், வைத்தது வைத்தது போன்றே இருப்பது, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.*_😳🔍
🌊🔎 _*துனிசியா நாட்டின் அருகே மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*_🔍👍
🌊🔎 _*கி.பி. 365ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட பேரலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை மூழ்கி கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*_🔍👍
🌊🔎 _*இந்த நிலையில் துனிசியா நாட்டின் அருகே மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*_🔍👍
🌊🔎 _*4ஆம் நூற்றாண்டில் நியாபொலிஸ் என்ற நகரம் கடலில் மூழ்கியதாக தகவல்கள் உள்ளன. இது அந்த நகரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.*_🔍👍
🌊🔎 _*இந்த நகரில் ஏராளமான கட்டடங்கள் தண்ணீருக்குள் முழ்கி இருப்பது தெளிவாக புலப்படுகின்றன. மேலும், அந்த நகரில் அப்போதே பல்வேறு தொழிற்சாலைகள் காணப்பட்டுள்ளதாகவும் அவையும் மூழ்கியிருப்பது தெளிவாக புலப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.*_🔍👍
🌊🔎 _*ஒரு தொழிற்சாலையில் 100 இராட்சத தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலை இரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.*_🔍
🌊☠ _*பேய் நகரம்*_☠🌊
🌊☠🔎 _*தென் அமெரிக்காவின் Buenos Aires எனும் நகரிலிருந்து சுமார் 600 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலோர கிராமம், ஏறத்தாள 30 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கடலில் மூழ்கிவிட்டது.*_👎
🌊☠🔎 _*கடலில் மூழ்கிய இக்கிராமம் தற்போது மீண்டும் வெளியில் தெரிகிறது. இங்கு ஒரு விலங்குகளைக்🦑🦈 கூட காணமுடியாது.😳🙅🏻 முற்றிலும் துருபிடித்த நிலையில் இருப்பதால் காற்று கூட இரும்பு வாசம் வீசுவதால் இதனை பேய் நகரம் என்றும் அழைத்தனர்.*_☠🔍👍
🌊 _*பையா*_🌊
🌊🔎 _*இன்று வரை லாஸ்வேகாஸ்தான் பணக்காரர்களின் உல்லாச நகரமாக உள்ளது.. ரோமோட பழைய காலத்திலும் இதே போன்ற ஒரு நகரம் இருந்தது. அந்த இடத்திற்க்கு பெயர் பையா என்று அழைக்கபட்டது இந்நகரம் மிகசெழிப்பாகவும் பணக்காரர்கள் தங்கி சந்தோஷமாக இருப்பதற்காகவும் மிக அழகாக செயல்பட்டு வந்தது. 1500ம் ஆண்டு கடல்மட்டம் உயர்ந்ததால் இந்நகரமே கடலுக்குள் முழ்கியது👎 .🗾இன்றும் இந்நகரம் கடலுக்கடியில்🗺 சென்று பார்க்கும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.*_🔍🌊🤗
🌊 🗽 _*கடலுக்கடியில் கண்டுபிடிக்கபட்ட பிரம்மாண்டமா சிலைகள்*_🌊
🌊🗽 ✝ _*பிரேசில் நாட்டில் மிக உயரமான 🗽இயேசுநாதர் சிலை இருக்கின்றது. இதே போன்ற பிரம்மாண்டமான சிலை இத்தாலி, க்ரனடா, புளோரிடா போன்ற இடங்களின் 🗽கடலுக்கடியில் இருக்கின்றது 🌊👍இந்த சிலைகளை காண்பதற்காக இந்த இடம் இன்று சுற்றுலா தளமாக விளங்குகிறது. இந்த சிலைகள் எவ்வாறு🤔 கடலுக்கடியில் சென்றது என்பது இன்று வரை மர்மமாக உள்ளது*_😳👍
🌊 _*ஹெரக்லைன் தோனிஸ் நகரம்*_🌊
🌊 _*1200 ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்த்தில் ஹெரக்லைன் தோனிஸ் நகரம் மத்திய கடலுக்கடியில் காணாமல் போனது.😳 2000மாவது ஆண்டில் கடலடி தொல்பெருள் ஆராய்ச்சியாளர்🔍 ""ஃப்ரங்க் ஹோடிடோ"" மற்றும் ஐரோப்பிய நிறுவனம் தான் இந்த நகரம் கடலுகடியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.*_🔍👍
🌊🔎 _*அதன்பிறகு நான்கு ஆண்டுகள் நடத்த பட்ட ஆராய்ச்சியில் பல பண்டைய 😳ஆச்சரியமான பல கண்டுபிடிப்புகள் இந்நகரில் கண்டுபிடிக்கபட்டது.*_🔍👍
🌊🔎 _*இந்நகரம் 7 கி.மீ பரப்பளவில் 150அடி ஆழமுள்ள நீருக்கடியில் இருந்தது.. இந்த ஆராய்ச்சியில் 64 கப்பல்கள் 🛳மற்றும் 11 அடிகொண்ட சிலைகளும்🗿 நூற்றுக்கணக்கான சிறிய சிலைகளும் கடலுக்கடியில் புதைந்துள்ளது கண்டுபிடிக்க பட்டது.*_🔍👍
🌊🔎 *_அவற்றில் 16.2 அடி உயரம் கொண்ட சிவப்பு கிராணைட் கற்களால் செய்யபட்ட சிலை கண்டெடுக்கபட்டது இந்த சிலை தான் """நைல்நதியின் தெய்வமாக""" கருதப்படுகிறது._*🔍👍
🌊🔎 _*வெண்கல மற்றும் தங்க நாணையங்கள் பழங்கால கிரேக்க மற்றும் எகிப்திய எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கபட்டது.*_ 🔍✍
🌊🔎 _*சுண்ணாம்பு கற்களால் செய்யபட்ட சவபெட்டிகள் ⚰அதிக அளவில் கிடைத்துள்ளது. 700க்கும் மேற்பட்ட கப்பல்களின் நங்கூரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.*_🔍👍🌊
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.10.2017.*
🌹 *கிழமை : செவ்வாய்க்கிழமை*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கடலினால் காணாமல் போன மர்மங்கள்??????*
🌊😱🌊😳🌊🤔🌊😱🌊😳🌊
🌊 *பாகம் - 2⃣*
🌊🔎 _*இன்னும் பல நகரங்கள் கடலினால் காணாமல் போகின.🤷🏻♀ அவற்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.*_👍
🌊🔎 🔴 _*இதுவரை நாம் பல நகரங்கள் கடலிலினால் காணாமல் போனதை பற்றி விரிவாக பார்த்தோம். ஆனால் ஒரு கண்டம் கடலினால் காணமால் போனதை கண்டிருப்போமா.?? ஏன் 🌊கடலே காணாமல் போனது என்றால் நம்ப முடிகிறதா..?? 😳ஆம் இவை அனைத்தும் உண்மையே👍 வாருங்கள் அவற்றையும் காண்போம்*_🔴👇
🌊🔎 _*உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா என 7 கண்டங்கள் உள்ளன.*_👍
🌊🔴🔎 _*8 வதாக ஒரு கண்டம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.*_🔍🔴
🌊🔎 _*தென் பசுபிக் கடலுக்கு அடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.*_🔍👍
🌊🔎 _*அதாவது, தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*_🔍🌊👍
🌊🔎🔴 _*இந்த புதிய கண்டத்திற்கு ‘ஷீலாண்டியா’ (Zealandia) என்று பெயரிடப்பட்டுள்ளது.*_🔴🔍👍
🌊🔎 _*மூன்றில் 2 மடங்கு அளவு கொண்டது.*_🔍
🌊🔎 _*50 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது எனவும் நியூசிலாந்தைப் போன்று மூன்று மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.*_🔍👍
🔎🌊😳🌍😱🌊😳🌍😱🌊🔍
🌊 _*ஏரல் கடல்*_🌊
🌊🔎⚔ _*'மூன்றாம் உலகப்போர்' என்று ஒன்று உருவானால், அதற்குக் காரணம் தண்ணீராகவும் இருக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் அச்சுறுத்தி வருகின்றன.😵😰 தண்ணீரை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் தண்ணீரற்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் எந்த ஓர் ஆற்றையும், ஏரியையும் பார்க்க முடியாது.*_🙅🏻😔
🌊🔎 _*ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. தலைகீழாக மாறிவிட்டது. தண்ணீர் இல்லாததன் பயனால், தினம்தினம் பல ஏக்கர் விவசாய நிலங்களையும், பல விவசாயிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம். இலவசமாக நமக்குக் கிடைக்கவேண்டிய குடிநீரை, பாலின் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்றால் நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.😳🙅🏻 இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மொத்த 🌍உலகத்துக்கும்தான்.👍 அது எப்படி உலகம் பாலைவனமாகும் என்று நீங்கள் நினைத்தால். 🔴வெறும் 55 ஆண்டுகளில் ஒரு கடலே காணாமல் போய், அந்த இடம் முழுவதும் இன்று பாலைவனமாக மாறி இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?*_⁉🔴
🌊🔎 _*1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.*_🔍🌊🤗
🌊🔎 _*மத்திய ஆசியாவில் அதிகமான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால், ஏரல் ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்தி பயிர் செய்யப் பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன. விளைவு அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன.😔 மேலும், ஏரியின் நீரும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது.⬆ பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த 🔴ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.🔴 விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர்.*_🌊😔
🌊🔎 _*இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரித் தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.😔 இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. 😔ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.*_😔🔍
🔎🌊😳🌍😱🌊😳🌍😱🌊🔍
🌊 *பெர்மூடா முக்கோணம்*⚠
🌊⚠ 🔎 *அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் பெர்மூடா முக்கோணம் ⚠மட்டும் பல ஆண்டுகள் கடந்தும், கற்பனைக்கு எட்டாத 😳 மர்ம முடிச்சுகளின் பெட்டகமாகவே திகழ்ந்து வருகிறது.*😱
🌊⚠ *புளோரிடா நீரிணை, பெர்மூடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் ⚠போல இணைக்கும் பகுதியில் செல்லும் கப்பல்களும்,🛳 விமானங்களும்✈ காணாமல் 😳போவது, காலம் காலமாக உலக மக்கள் அறிந்த விஷயம்.*👍
🌊⚠ *வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம்⚠ வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு 💀⚠முக்கோணம் எனப்படும் பெர்முடா⚠ முக்கோணம் ஆகும்.*👍
🌊⚠🔎 *உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின்⚠ இயல்பு வியப்பானத்தும்😱 அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.*😳
🌊⚠🔎 *இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன் காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும் இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 🛳கப்பல்களும், 20✈ விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.*😱
🌊⚠🔎 *1872-ஆம் ஆண்டில் ""மேரி செலெஸ்டி"" என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முடா முக்கோணத்தின் பரப்பினைக்* *(இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள்✈ கப்பல்கள் மாயமாய் மறைவதும் பின்னர் அவை பற்றிய* *ஒரு சிறு தடயமும் கிட்டாமல் 👎போவதும் உலகின் மிகப்பெரிய வினாவாக காட்சி அளித்தது.*⁉
☁🔎 *பலஆண்டுகளுக்கு பின்னர் வானியல் ஆராய்ச்சியாளர் கலால்,பல ஆராய்ச்சிக்குப் பின்னர் ஒருவகையான உயர்அழுத்தமே காரணம் என்பதும் தெரியவந்திருக்கிறது.*🔍👍
🔎🌊😳🌍😱🌊😳🌍😱🌊🔍
🌊📜🔎 _*துவாரகை, இந்தியா*_🌍🌊
🌊🌍📜 _*கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த நகர் என்று கூறப்படும் துவாரகை ஓர் இயற்கை சீரழிவால் கடலுக்குள் மூழ்கியது. 👎கடந்த 2000ஆம் ஆண்டில் இது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. 70,000 மாளிகைகள், தங்கம், வைரம் போன்ற நகைகளால் நிறைந்திருந்தது துவாரகை என புராணக் கதைகள் கூறுகின்றன.👍 இப்போது கடலுக்குள் 135அடி கீழே இந்நகரம் மூழ்கியிருக்கிறது.*_🌊😔
🔎🌊😳🌍😱🌊😳🌍😱🌊🔍
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.10.2017.*
🌹 *கிழமை : செவ்வாய்க்கிழமை*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கடலினால் காணாமல் போன மர்மங்கள்??????*
🌊😱🌊😳🌊🤔🌊😱🌊😳🌊
🌊 *இறுதி பாகம்*🌊
😇 _*எந்த தலைப்பு எடுத்து பேசுனாலும், அதில் தமிழர்கள்🔱 எப்பவுமே முக்கியப் பங்கு வகிப்பாங்க. 👍 அதுபோலவே இன்றைய கடல் மர்மம் தலைப்பும் கூட, தோண்ட தோண்ட வரலாறு வந்துக்கிட்டே இருக்கும்.👍 இங்கு எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடிச்சுறேன்.*_🤷🏻♀
🌊 _*நாவலன் தீவு*_🌊
🌍 📜 _*உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.🔍 இங்கு தான் நம் மூதாதையர்கள் வாழ்ந்தனர். 👍இங்கு தான் நம் தாய்மொழி """தமிழ் மொழி""" பிறந்தது. 👍இங்கு தான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழந்துள்ளது. 👍ஆம் இது தான் "நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிகண்டம்".*_📜🔍
🌊📜 _*கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குமரிகண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந த ஒரு தமிழ் கண்ட ஆகும். இன்று தனிதனிநாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை மற்றும் இன்றுள்ள சில, சிறு சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் குமரிகண்டம்.*_🔍👍
🌊📜🔎 👉 _*7⃣ தெலுங்க நாடு,*_
👉7⃣ _*மதுரை நாடு,*_
👉7⃣ _*முன்பலை நாடு,*_
👉 7⃣ _*பின்பலை நாடு,*_
👉7⃣ _*குன்ற நாடு,*_
👉7⃣ _*குனக்கரை நாடு,*_
👉7⃣ _*குரும்பணை நாடு,*_
*_என 4⃣9⃣ நாடுகள் இருந்துள்ளது._* 👍🔍 _*பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது..!!👍🔎 குமரிக்கொடு,⛰ மணிமலை ⛰என இரண்டு மலைகள் இருந்துள்ளது.*_🔍👍
🌊📜🔎 _*சங்ககால பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் தமிழின் முதல் சங்கம் ஆகும்.. இவை தென் மதுரையில் கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் சேர்ந்து இயற்றப்பட்டது. சுமேரியன் நாகரிகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் தான் ஆகின்றன.*_🔍🌊👍
🌊📜🔎 _*முதலில் குமரிகண்டம் புராணங்களிலும், பரிபாடல்களிலும் வரும் கற்பனை கண்டம் தான். 😡இது போன்ற ஒரு மிகப்பெரிய கண்டம் கடலில் முழ்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் இது கட்டுக்கதை என்றும் பலர் முன் மொழிந்தனர்.*_😏👊
🌊📜🔎 _*லெமூரியா கோட்பாடை முதன் முதலாக முன்மொழிந்த இந்திய பெருங்கடல் ஆய்வாளர் ""சார்லஸ் சார்வீன்"" மற்றும் மடகாஸ்கர் முதல் கன்னியாகுமரி வரை கடல்வழி ஆராய்ச்சி செய்த ""ஹெக்கேல்""" போன்ற பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. மடகாஸ்கரில் இருந்து மேற்கு தொடர்ச்சிமலை வரைக்கும் உயிரினங்கள் இடம் மாற்றங்கள் கடல்வழியாக நடைபெற வாய்பே இல்லை என்றும் குரங்குகள் கடல்வழியாக போக வாய்ப்பில்லை. பிறகு எவ்வாறு குரங்குகளில் பிரேதங்கள் தமிழ்நாட்டிலும் மடகாஸ்கரிலும் கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.*_🔍👍
🌊📜🔎 _*பின்னர் ஆராய்ச்சியாளர்களுக்குமரிகண்டம் என்ற ஒன்று இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்.👍 இதற்கு முக்கிய காரணம் மீனவர்கள் தான் இந்த கடல் ஆய்வில் தாமதம் ஏற்பட காரணம். 1950வரை தமிழ்நாடு எல்லை திருநெல்வேலி வரை மட்டுமே இருந்தது. கன்னியாகுமரி மலையாளம் பேசும் மக்கள் ஆளுமையில் இருந்ததே ஆராய்ச்சியில் தொய்வு ஏற்பட காரணம் ஆகும்.*_🔍
🌊📜🔎 _*குமரிகண்டம் என்ற ஒன்று இல்லை இது கட்டு கதை என்று பலரும் பொய்பிரசாரம் செய்தார்கள்.👊 உண்மையை பல காலம் மறைக்கமுடியாது🙅🏻👍 என்பதற்க்கு ஏதுவாக. இலக்கிய சான்றுகள் மட்டும் நம்மிடம் இருந்த நிலையில் சில நல்நோக்கம் கொண்ட ஆராய்ச்சிகளால் சமீபவருடங்களாக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.🔍👍 இன்று வரை உள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக ஆராய்ச்சி செய்ததில். மடகாஸ்கரில் இருந்து கன்னியாகுமரி வரை பல ஆயிரம் தீவுகள் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 6,50,000 ச.கீ.மீ பரப்பளவு மட்டும் 4,65,000 ச.கீ.மீ பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட தீவுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 👍அதும் நடுநிலைக் கோட்டிற்க்கு அருகில் இருந்தது குறிப்பிடதக்கது.*_🔍👍
🌊📜🔎 _*இதன்மூலம் மிகப்பிரமாண்டமான கண்டம் ஒன்று கடலுக்கடியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.👍 அதுமட்டுமல்லாது அந்தமானிலிருந்து ஆஸ்திரேலியா வரை கடலுக்கடியில் மிக நீண்ட மலைத்தொடர் இருந்தது. இதன் மூலமாக குமரிகண்டம் என்ற ஒரு பிரம்மாண்டமான கண்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.👍 கால்கோள்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பி வேறு இடத்திற்கு மக்கள் சென்றுள்ளதாக சிலப்பதிகாரத்தில் தெளிவாக குறிப்பிடபட்டிருந்தது.*_🔍📜👍
🌊📜🔎 _*இந்த கண்டங்களில் வாழ்ந்த மக்களையும், நிலப்பரப்பையும் தேடி போர்த்துகீசியர்கள் தான் இதற்கான கடல்சார் கல்வியை பயின்று மாலுமிகளுடன் வந்தனர். மாலிண்டி என்ற இடத்தில் வழிதெரியாமல் இருக்கும் போது கனக்கன் மாலுமிகள் என்ற இந்திய கடலோடிகளின் மூலமாக வழி கண்டுபிடித்து வந்தனர். அவர்கள் 3600 மீட்டர் ஆழத்தில் சென்று கொண்டிருக்கும் போது. மாலத்தீவு அருகில் பல கப்பல்கள் கரை தட்டியது. அனைத்து மாலுமிகளும் அதை கண்டு மிகுந்த அச்சம் அடைந்தனர் அதனால் தான் அதற்க்கு "லெமூரியா" என்று பெயரிட்டனர். அதற்க்கு மறைந்த ஆவி என்று பெயர்.*_🔍🤗
🌊📜🔎 _*1650லிருந்து கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் ஆரம்பமாகின. 1800க்கு மேல் சார்லஸ் சார்வீன் கடல்சார்ஆராய்ச்சி பயணங்களில் எடுத்த குறிப்புகள் மூலமாகவும் பின்னாளில் "சர்-ஜான்ஸ் மோரி. அவர்களின் பயணங்கள் மூலமாகவும் எடுத்த குறிப்புகளும். பிறகு 1957 இருந்து 1964 வரை The International Indian Ocean Exploration மூலமாக கடல் ஆய்வுகள் நடத்தி கடலுக்குள் மூழ்கி இருக்கும் மலை தொடர்கள் கண்டுபிடித்துள்ளனர். 🔎👍மேலும் பல கடல் சார் ஆய்வாளர்கள் இதை பற்றி பல குறிப்புகள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளனர்.👍 ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த நம் பழந்தமிழ் நாடு இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.*_😔📜🌊🔍👍
🌊🔎 _*பூம்புகார் முழ்கிய நகரங்கள்*_🌊🔍
🌊📜🔎 _*ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்டது தமிழர்கள் தான்👍💪 என்று பறை சாற்றும் வீதமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. 👍 கடலுக்கடியில் காவேரிபூம்பட்டிணம். தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப்பெயரால் அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவேரி பூம்பட்டிணம்", பல ஊர்களின் மக்களை வாழ வைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்துவிடும். காவேரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்ததுதான் இந்த அழகிய நகரம்.*_🌊🔍👍
🌊📜🔎 _*காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை சிலப்பதிகாரத்தில் விவரித்துள்ளனர்.*_📜🔍👍
🌊📜🔎 _*பூம்புகார் போற்றதும் பூம்புகார் போற்றதும்.*_
_*வீங்குநீர் வேலியுலகிற் இவன் குலத்தொரு.*_
_*ஒங்கிப் பரந்தொழுகலான் - சிலப்பதிகாரம்.*_🔍📜
🌊📜 _*மூழ்கிய இந்த நகருடன் சேர்ந்து இந்தியாவின் சில பகுதிகள் இலங்கை, பர்மா, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்.!! இந்த துறைமுகத்தில் 10,000 போர்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது*_📜🔍👍
🌊📜🔎 _*இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மரூவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்கே அமைந்த "பட்டினம்பாக்கம்" இந்த இரண்டு ஊர்களை பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தோட்டங்கள், இந்த தோட்டத்து மரத்தடியில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது.! இது இன்று உள்ள 24மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு முழுவதும் செயல்பட்டுவந்தது. அப்படியென்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகரமாக இருந்திருக்க்ம் என்று சற்று எண்ணிப்பாருங்கள். பகல் அங்காடியின்பெயர் "நாளங்காடி" இரவில் நடப்பது "அல்லங்காடி".!*_📜🔍👍
🌊 _*மரூவுர்பாக்கம்*_🌊
🌊🔎 📜 _*ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஒரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர்.*_🔍👍
🌊 _*பட்டினப்பாக்கம்*_🌊
🌊🔎 _*இங்கு அரச குடும்பம், அரசுத்துறை, உயர் அதிகாரிகள், பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், ஜோதிடர்கள், நடனகலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர்.!! இங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளன. "வெள்ளிமன்றம்" "எலஞ்சி மன்றம்" "ஆதச்சதுக்கம் மன்றம்" "பாவை மன்றம்"*_🔍🌊
🌊🔎 _*இந்த ஊரில் இருந்த தோட்டங்கள் இலவந்திச்சோலை, உய்யனம், சன்பதிவனம், உறவனம் மற்றும் காவிரிவனம் போன்ற தோட்டாக்கள் இந்த ஊரை மேலும் அழகுபடுத்தியது.*_🤗🔍
🌊📜🔎 _*பட்டினப்பாலை என்ற சங்கநூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.*_🔍👍
🌊🔎 _*வான் பொய்ப்பினும் தான் பொய்யா*_
_*மலைத் தலைய கடற்காவிரி*_
_*புனல் பரந்து பொன் கொழிக்கும்.*_📜
🌊🔎 🏢 _*அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்நகரில் ஏணிகள் மற்றும் மரப்படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்..! நகரின் எல்லா இடங்களிலும் பல வடிவங்களில் சோழர் கொடிகள் பறந்த வண்ணம் இருந்துள்ளன. இந்த உலகில் எதுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆழிப்பேரலைகளால் இந்நகரம் உரு தெரியாமல் அழித்துவிட்டது.*_😰😔
🌊📜🔎 _*கடல் கொண்ட பூம்புகார் கண்டுபிடிக்க இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஒன்று நிலப்பரப்பில் அகழ்வாய்வு.👍 இரண்டாவது நீர்பரப்பில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.👍 நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கடியில் சென்று ஆராய்ச்சி செய்துள்ளனர்.இதனை கணொலியாக எடுத்து கண்காட்சியில் காண்பிக்கப்பட்டது.👍 ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஒடும் இந்த காணொலிகளும் காட்சியில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்பட்டன.👍 பூம்புகார் அருகே முழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட காணொலியில் குதிரை வடிவப் பொம்மைகள் காணப்பட்டன. இந்த காணொலிகளை கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். 😱இந்த நகரை பற்றி ஆராய்ந்த "கிரகாம் குக்" இந்த நகரங்கள் கி.மு 7500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரங்கள் என்று அறிவித்துள்ளார்.👍 🔴இந்த நகரங்கள் குஜராத்தின் காம்போவும், ஹரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விட பழைமையாவை ஆகும்.👍🔴 இப்பேர்பட்ட பிரம்மாண்டமான வளர்ச்சி கொண்ட நகரங்கள் இன்று கடலுக்கடியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.*_😔🔍🌊
🌊 _*தனுஷ்கோடி*_🌊
🌊🔎 _*ஆழிப்பேரலைக்குள் முழ்கி இன்றும் அதன் மிச்ச சொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களின் ஒன்றான "தனுஷ்கோடி". ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. 👍வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்று வரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது.*_😔🏛
🌊🔎🌪 _*அதற்க்கு காரணம் 1964ம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான்.🌪 இந்த புயல் டிசம்பர் 22ம்தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி வவுனியாவை தாக்கியது. அதன்பின் வங்கடலில் பாக் ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல் தான். தனுஷ்கோடியை நோக்கி வந்தது.*_😔
🌊🌪 _*இந்த புயல் தான் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி ரயிலும் ஒன்று. அந்நாளில் இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென படகு மெயில் சர்வீஸ் இருந்தது. அந்த கப்பலின் பெயர் இர்வீன் கோஷன் என்றழைக்கப்பட்டது. இதுதவிர தனுஷ்கோடிக்கு வரவிரும்பும் யாத்திரைவாசிகளுக்கு மற்றும் உள்ளுர் பயணிகளுக்கும் வாட்டர் டாங் எனப்படும் பயணிகள் ரயிலும் நாள் தோறும் இயங்கி வந்தது. இந்த ரயில் 23ம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியை நோக்கி வந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு மீட்டர்களே இருந்த அந்த நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதன் பின்னர் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து.*_🌪😔
🌊🌪 _*ரயில்நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை.🙅🏻😔 ஆங்கிலேயர்களால் கட்டபட்ட பிரம்மாண்ட கட்டிடங்களே கடலால் துவம்சம் செய்யபட்ட போது. ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாயிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி மூழ்கடிக்கப்பட்டது.*_🌊😔
🌊🌪 _*ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்ககடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடி துறைமுக பாலம். அந்த அளவிற்கு பாலம் உலோக கலவையால் வார்க்கப்பட்டிருந்தது. அந்த பாலமும் அதிகாரவர்கத்தினரால் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் பாலத்தினை துகள் துகளாக பெயர்தெடுத்துச் சென்றனர். புயலின் தாக்கத்தை உணர்ந்த அரசு தனுஷ்கோடி பகுதியை மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவித்தது.*_😔
😇 _*நம்ம சிட்டிசன் படத்துல அத்திப்பட்டிங்கிற ஒரு கிராமமே காணாம போயி பாத்துருப்போம்.🤷🏻♀ அதுபோலவே தான் இங்க பல கிராமங்கள், நகரங்கள் கடல்களினால் மூழ்கடிக்கபட்டுருக்கு.தற்போது ஒரு ஆய்வு கூறுகிறது🔎. 🌍உலகம் அழிவதற்க்கான காரணங்களில் 🌊கடலுக்கும் முக்கிய பங்கு உள்ளது .*_👍
🌍🏹 🔎 _*முழுமையான ஆராய்ச்சில இறங்குனா தமிழகமும்,தமிழர்களையும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விடுமோ என்ற அச்சம் உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, நம் இந்தியாவே யோசிக்கிறது என்று கூறலாம்.😣 உதாரணம் கீழடி என்ற ஊரில் நடைபெறும் ஆராய்ச்சிகளே அதற்கு சான்று👍🏻..*_😏☹
🔱📜 _*நம் தமிழர்களின் தோற்றமே தற்போது 🌊 கடலுக்கடியில் தான் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.*_
🔱📜 _*நம் தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த சிறப்புமிக்க பராம்பரியத்தின், அடையாளங்களும், கலைகளும், கடலுக்கடியில் இருந்தாலும், என்றுமே இன்றளவும் மூத்த இனம் நம் தமிழினம் என்று மார்த்தட்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.*_📜🔱👍
📜🔱 _*கடலுக்கடியில் காணாமல் போனவைகள் எல்லாமே மர்மமான முறையில் அழிந்தே போனாலும், தமிழர்களின் அடையாளங்கள் மட்டும் எவராலும் அழிக்க முடியாத🙅🏻 எவரெஸ்ட் சிகரம் போல் கடலுக்கடியிலும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.*_👍📜🔱
🔱📜 _*அவங்க போட்ட விதைகளில் தான், நம் அனைவரும் முளைத்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.*_👍👍🏹
🌊📜 🔴 _*கடலுக்கடியில் ஆராய்ச்சியில் ஈடுபட சொன்னால், எங்கே தமிழர்கள் உயர்ந்து விடுவார்களோ.....!!!👍, மற்றவர்கள் தாழ்ந்து விடுவமோ, என்ற அச்சம் மட்டும் அனைவரிடத்திலும் உணர முடிகிறது.*_👍🔱
🏹 _*அனைவருக்கும் காலங்கள் பதில் சொல்லும் காத்திருக்கவும்*_🏹
_*😇🏹கமலிகணேசனின் வரலாற்று வேட்டை தொடரும்🏹💐*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
*கலந்துரையாடல் ~1*
🏆 *தமிழன் navask*🎁
🏆 *Sp.Vignesh*🎁
🏆 *பிரபாகரன் சிதம்பரம்*🎁
🏆 *Jaiganesh*🎁
*கலந்துரையாடல்~2®©*
*🏆@😆😝Rishi😂🤣, @sukumar ❤Zhorba*🎁
*🏆@Deepa Senthil 🎻 🎉 🎊🌹*🎁
*🏆 @Cvm, @....Gopi😁*🎁
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
🔎 *பல நகரங்களும், பல கண்டங்களும், பல கப்பல்களும், பல விமானங்களும், பல விண்ணில் ஏவப்படும் ராக்கெட்களும், கடலுக்கடியில் சென்று பல மர்மங்களை ஏற்படுத்தினாலும், 🔱அதிலும் என்றுமே முத்திரை பதிப்பது மறைந்து போன நம் தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த பராம்பரியமே.*🔱👍
👉 *இன்று கடல் மர்மம் என்று தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம். இயற்கையோடு நம் ஒத்து போகவில்லையென்றால் லெமூரியா கண்டம் போல, நம்முடைய தமிழ்நாட்டை பத்தி வருங்காலத்தில் பேச படலாம்.*👍😔
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்*
*காழி யெனப்படு வார்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💧 *அறிந்துகொள்ளவும்*💧
*நீள நீளத் தெரியும் மெய்யும்... பொய்யும்...*
💧 *தெரிந்துகொள்ளவும்*💧
*காலம் போம் வார்த்தை நிற்கும்.... கப்பல் போம் துறை நிற்கும்*
💧 *புரிந்துகொள்ளவும்*💧
*கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?⁉*
*கடல் திடலாகும்...., திடல் கடலாகும்.....*👍
*கடலுக்குக் கரை போடுவார் உண்டா?❓*
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment