Thursday, 12 October 2017

தித்திக்கும் தீபாவளிக்கு தீக்கரியாகும் காசுகளும், அதனால் ஏற்படுகிற பாதிப்புகளும், அதை குறைப்பதற்க்கான வழிமுறைகள் பற்றிய ஓர் ஆய்வு.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*👁விழிப்புணர்ச்சி*
                   *குழுமத்தின் © 👁*

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :12.10.2017.* 🌹                  🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷   
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_"ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்க்குப் பதிலாக,சரியான செயல்களைச் செய்வதற்க்கு நாம் முயல வேண்டும் ."_*
🌱 *Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  .*💐🌳

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*ஒருவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வம் வேண்டாம்...*

*தெரிந்தால் அவர் மேல் இருக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்...!!*

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖

       *_தித்திக்கும் தீபாவளிக்கு  தீக்கரியாகும் காசுகளும், அதனால் ஏற்படுகிற பாதிப்புகளும், அதை குறைப்பதற்க்கான   வழிமுறைகள்  பற்றிய ஓர் ஆய்வு._*

🎇⚡✨🔥💥✨⚡🔥💥🎆

😇💝🌍 *தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யாரும் இல்லை. தீபாவளியை இந்துக்கள் மட்டுமல்லாது அனைத்து   மதத்தினரும், வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர்.  தீபாவளியை முன்னிட்டு புத்தாடை👔👗👚👕 எடுக்கின்றனர் பட்டாசு🎊🎉💥 வெடிக்கின்றனர்,இனிப்புகளை மற்றவர்க்கு கொடுத்து மகிழ்ச்சியடைகின்றனர்.*🕺🏻💃🏻😁😄

🎇 *தீபாவளி  பெயர்க் காரணம்:*🎇

💥💫 *_தீபம்"என்றால் ஒளி , விளக்கு .’ ஆவளி ‘ என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி , இருள் நீக்கி , ஒளிதரும் பண்டிகையே தீபாவளி_* ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.😇

🎊🎉 *தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குழிக்க காரணம் புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்,மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருபதாக ஐதீகம்.* 😇

🎊🎉💝 *தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்க*🤗
*காரணம் , 🤔அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் ,* *குங்குமத்தில்* *கௌரியும்,சந்தனத்தில்*
*பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்* *வசிப்பதாக*
*கருதப்படுவதேயாகும்.* 😇

😇 அந்த நீராடலைத்தான் *"கங்கா ஸ்நானம் ஆச்சா"* என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் *"கங்கா தேவி ”*வியாபித்து இருப்பதாக ஐதீகம் .😇

💝🎊🎉 *ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.*

🎆 *தீபாவளி கொண்டாட காரணங்கள்:*🎇
🎊🎉 *தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை , புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர்.*🎊🎉

🎆 *இராமாயண இதிகாசத்தில்,* இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் *ஊரெங்கும் விளக்கேற்றிக்* கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.🎊🎉

🎇 *கிருஷ்ணர் நரகாசுரன்* என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ்வரம். 👨🏿‍🎤 *தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.*😇

🎊🎉💫 *தீபாவளி பண்டிகையின் வரலாறு தீபாவளிப் பண்டிகையின் வரலாறு தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.*🤗🎊🎉

💥 *தீபாவளி கொண்டாடுமிடங்கள்:*💥
🌍🎊 *இந்தியாவில் பெரும்பாலன இடங்களில் தீபாவளி கொண்டாடினாலும் தமிழகத்தில் அதிகமானவர்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.*🎉💥💫

🌍 🎊🎉 _*இந்தியா தவிர மற்றநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.*_
👑 *_தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது._* _*அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல்,*_ 🎊🎉 _*தீபாவளி  பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.*_
_*இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது.*_

⚡ *பட்டாசு:* 💣

💥⚡💫 _ஒளி(Light)யுடன் ஒலியை(Sound)🔊🔉 வெளிக்கொணர்து மகிழ்ச்சியை அடையச் செய்யக்கூடிய பட்டசுகள்_
_*சீனாவில் தோன்றியவை* ஆகும்._

🎉🎊 _உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா. உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது.   இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் *தமிழ்நாட்டிலுள்ள சிவகாசி* நகரில் அதிக அளவிலுள்ளது._

🎉 *பட்டாசு தோன்றிய வரலாறு:*🎊🌀

🈲 _சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது._

🎉 _நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்துவந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புரப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமேவந்தது._

🎉🎊 _வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830இல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர்._*ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.*👍

💥 *சிவகாசி பட்டாசுகள்*💥

🎉🎊 _1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன._
_இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு *குட்டி ஜப்பான்* எனப்படும்  சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது_
🤔 *எவ்வளவுதான் பட்டாசு வெடிப்பது நமக்கும் மற்றவர்களுக்கும் தீமையென்று* *சொன்னாலும்*
*தீபாவளியையும்* *பட்டாசையும் பிரித்துப் பார்க்கவே* *முடியாதென்று முதலாளி* *வர்ங்கத்தினரால் பழக்கப்படுத்திவிட்டா மக்களே , சற்று சிந்தியுங்கள்.*🤔

🎉💥🎊 *பட்டாசுகளைக் கையாளும்போதும், வெடிக்கும்போது கவனக் குறைவாகவோ அல்லது அலட்சியம் காரணமாகவோ பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றிலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது, முன்னெச்சரிக்கை யாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யும் சிறிது பார்ப்போமா*.🤔👇

🎉🎊 *பட்டாசினை வெடிப்பதினால் ஏற்ப்படும் பாதிப்புகளின் வகைகள்:*💔🖤

🤦‍♂பட்டாசைக் கண்டு பயந்து விழுந்து ஏற்படும் காயம்.

🤦‍♀பட்டாசைக் கவனக்குறைவாகக் கையாளுவதால் ஏற்படும் தீக்காயம்.

🤦‍♂ அதிகச் சத்தத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பு.

🤦‍♀புகை, ரசாயனக் கலந்த கலவையால் ஏற்படும் பாதிப்பு.

🤦‍♂அதிக ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்பு.

🔥 *தீக்காயம்:*🔥

🎉🔥 *பட்டாசுகள் வெடித்துச் சிதறும் போதும், அலட்சியமாகப் பட்டாசுகளைக் கையாளும்போதும் பலருக்கும் தீக்காயம் ஏற்படுவதுண்டு. உடலில் எங்கேயாவது தீக்காயம் ஏற்பட்டால், காயம் உள்ள இடத்தில் துணி படாத வகையில், அவற்றை அகற்றிவிட வேண்டும். காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். காயம் தீயால் ஏற்பட்டதா அல்லது பட்டாசில் கலந்துள்ள ரசாயனம் காரணமாக ஏற்பட்டுள்ளதா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.*

✴ 👐 *அதனால், சோப்பு போட்டுக் கழுவ வேண்டாம்.🙅🏻‍♂ சிலர் மை, உப்பு ஆகியவற்றைக் காயத்தின் மீது வைத்துத் தேய்ப்பார்கள். இது காயத்தில் தொற்றை ஏற்படுத்திவிடும். எனவே, கவனமாக இருக்கவும். கழுவிய பிறகு ஈரத் துணியால் காயத்தைச் சுற்றிக் கொண்டால் போதுமானது. இந்த முதலுதவியைச் செய்த பிறகு நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்றுவிட வேண்டும்.*

💣 *கண்களில்*👁

😔 *கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகக் கண்ணைக் கழுவ வேண்டும். கண்ணைக் கசக்கக் கூடாது. நீங்களாகவே கடையில் கண் சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, மருத்துவரிடம் காட்டிக் காயத்தின் தன்மையைப் பார்த்து மருந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது.*👍

💣 *புகை அலர்ஜி*💨

🖤 *சிலருக்குப் புகை ஒவ்வாமை இருக்கும். அதிகப் புகை வெளிவரும் பட்டாசுகளை வெடிக்கும்போது புகை ஒவ்வாமை இருப்பவர்களுக்கும், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.*

👃 *மூச்சுத் திணறல், மூச்சிளைப்பு உள்ளவர்கள் அதிகப் புகை வரும் பட்டாசுகளை வெடிக்காமலும், வெடிக்கும் இடத்தில் இருந்து நன்றாகத் தள்ளி நிற்பதும் அவசியம். மாசுக் காற்றை வடிகட்டும் முகமூடியை முகத்தில் அணிந்துகொள்வது, இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும்.*

🤦‍♂ *வலிப்பு, தலைவலி*🤦‍♀

💥⚡💫☄ *அதிக வெளிச்சத்தை உருவாக்கும் பட்டாசுகள் வலிப்பு நோயாளி களுக்கு ஆகாது. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக ஒளி வெள்ளத்தைப் பார்க்கும் வலிப்பு நோயாளிகளுக்கு வலிப்பு ஏற்படலாம். எனவே, வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த வகைப் பட்டாசுகளை வெடிக்காமலும், பார்க்காமலும் இருக்க வேண்டும்.*

🔊 *அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் ஒற்றைத் தலைவலி,🤕😴😰 டென்ஷன் தலைவலி பாதிப்பு உள்ளவர்களுக்குக் கூடுதல் தலைவலியை உண்டாக்கிவிடும். அதிக ஒலியை உள்வாங்காமல் இருப்பதற்காக ஒலி அடைப்பான் மூலம் காதை அடைத்துக் கொள்வது, தலைவலி வராமல் தடுக்கும்.*

💣 *கர்ப்பிணிகளுக்கு…*🤰

🔊 *அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் கருவில் உள்ள சிசுவுக்கு ஆகாது. அதிக ஒலியை உணரும் சிசு, இயக்கத்தை அதிகப்படுத்திவிடும். இது குழந்தைக்கு நல்லதல்ல. எனவே,🤰🏻 கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஒலி எழுப்பும்🔊 பட்டாசுகளில் இருந்து, விலகி இருப்பது நல்லது.*👍

🙆‍♂ *பொதுவான பாதிப்பு*🙆

🤜 *அதிக ஓசை🔊 காரணமாகக் காது கேளாமை,👂 தூக்கமின்மை, உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காதுகளைப் பாதுகாத்துக் கொள்ள 85 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகள் அதிக ஓசையைக் கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகலாம்.*

🤜 *பட்டாசுகளை அதிகம் கையாளும் குழந்தைகளுக்குக் கையில் பட்டாசு மருந்து படும். அந்த நிலையில், கைகளை நன்றாகக் கழுவாமல் உணவு உண்பது போன்ற செயல்களைச் செய்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். அதனால் குழந்தைகள் கை கழுவுவதைப் பெற்றோர்👨‍👩‍👧‍👦 உறுதிப்படுத்த வேண்டும்.*👍

🖤💔 *பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்... அப்பப்பா... சொல்லி மாளாதே..!😔 கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..?❓ இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..?❓ இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..?❓ இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?❓ பட்டாசு வெடிப்பதால் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்கிறோம்...?❓ நம்மை நாமே அழித்துக்கொள்வதுடன், நாம் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்களையும் அல்லவா சேர்த்து அழிக்கிறோம்..?❓ மென்மையான தற்கொலையும் மென்மையான கொலையும் போலல்லவா இஃது உள்ளது..? 😔இது சரியா? இப்பேர்பட்ட பாவத்தை செய்ய வைக்கும் இந்த பட்டாசு நமக்கு அவசியமா..?*❓😔

😔 *கஷ்டப்பட்டு காசு சம்பாதித்து புத்தாடை இனிப்புகளை உண்பதை குறைத்து  பணத்தைக்கொண்டு "காசை கரியாக்கும்" இந்த 'பட்டாசு வெடித்தல்' என்பது எவ்வித நன்மையையும் நமக்கு அளிக்காத வீண்விரயம்தானே..?*

🔴 *முடிந்தளவு பட்டாசு வெடித்தலை தவிருங்கள்🙅🏻‍♂அல்லது குறைந்தபட்சம் 🔇சத்தம் மற்றும் மாசு குறைவான வெடிகளை வெடித்து அந்த பணத்தினை கொண்டு உங்களது அத்தியாவாச செலவிற்க்கோ அல்லது சமூக சேவைக்கோ பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்.*🙏🏼

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*_கலந்துரையாடல் குழு:_*
🥇 *KS & இசையருவி*
🥈 *கற்றது கால்நடை மருத்துவம் & நா.ராமகிருஷ்ணன்.*
🥉 *PM,Navasek & Thilagachelladurai*

*_கலந்துரையாடல் குழு~2:_*

🥇 *@⁨💐உயிர்தமிழ் 🌾சுரேதமிழன் 🌺⁩, @⁨Deepasen. 🎻  🎉 🎊🌹*

🥈 *@⁨பேரறிவு💫⁩, @⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩.*

🥉 *@⁨பிரதீப் விஸ்வா⁩, @⁨Narayana Selvan.⁩*

   🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
  *👴🏻 நரகாசூரன் இறந்ததை கொண்டாடும் விதமாக தீபாவளி  கொண்டாடப்படுகிறஅந்நாளில் மனதின் தீயஎண்ணங்களை அழித்து எள்ளெண்ணெய் தேய்த்து விடியற்காலையில் குளித்து புத்தாடை உடுத்தி இனிப்புகளை உண்டு  குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தால் நலம் தரும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் முன்னோர்களால்  கடைபிடிக்கப்பட்டு வந்தது.*👵🏻

🤦‍♂  *ஆனால் நாமென்ன செய்கிறோம் கண்ட கண்ட இனிப்புகளை வாங்கிதிண்ணுட்டு உடலை கெடுத்துக்கொள்கிறோம்.*🤦‍♀

🐘 *யானை தன் தலை மீது மண்வாரி இறைப்பது போல நாம் கெட்டதை நம்மீது வாரி இறைத்துக்கொள்ளலாது மற்றவர்க்கும் தீமைபயக்ககூடிய பட்டாசு வெடித்தலை பல ஊர்களினை போல விட்டுவிடுவோம்,அல்லது மாசினை குறைக்கும் தமிழக பட்டாசினை மட்டும் வெடிப்போம் சீன பட்டாசினை தவிர்த்து .* 🤦‍♂

🕺🏽 *நமது சந்தோசம் மற்றவர்களை பாதிக்காதவாறு பார்த்து எந்த செயலையும் செய்வோம்.*💃🏻

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில்._*
            
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿                     
*_தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாமென்று புறக்கணிப்பதைப் போன்ற ஒப்பற்ற செல்வம் இப்பூவுலகில் மட்டுமல்லாது வானுலகத்திலும் எதுவுமில்லை._*
                              
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_"🌓வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும்."🌑_*

☘☘☘☘☘☘☘☘☘☘
🤷‍♂ *சிந்தனை :*🤷‍♀

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🤦‍♂ *ஒவ்வொருவரது மனதிலும் ஒரு சில தீயஎண்ணங்களாவது இருட்டான ஆழ்மனதிலிருக்கும்.( தீயயெண்ணம் இல்லையேல் மிக்க மகிழ்ச்சி).*🤦‍♀

🤷‍♂ *அகங்காரம், பொறாமை , தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரேயொரு     தீயகுணத்தையாவது மனதிலிருந்து தூக்கியெரிந்து தீயிலிட்டு எரித்துவிட வேண்டும்.*🤷‍♀

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

🌱 *கனகராஜ்.வே.*🌳
🌱  *9047493815*🌳

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*               
             *9486552988*🌳       
                                                            
😎🌱  *மணி விஜய் -* 
             *8428073724*🌳

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...