🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :7.10.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
📜🏹 _*வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்*_
_*தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்..!!*_👍
_*தொல்காப்பியனார்*_
📜 _*வண்புகழ்*_ _*மூவர்தண்பொழில் வரைப்பின்*_
_*நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்*_
_*யாப்பின் வழியது —*_ _*1336.தொல் — என்றும்*_👍
_*இதையே பாரதியார்*_
📜 👳 _*நீலத் திரை கடல்*_ _*ஓரத்திலே — நின்று*_
_*நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட*_
_*மாலவன் குன்றம்*_ _*இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும்*_ _*தமிழ்நாடு – என்றும் பாடினர்.*_👍👍😇💐
🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழ வைக்க திட்டமிடுகிறதா?*🤔
😍 *அப்படியென்றால் சந்தோசப்படு. நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.*👍👍
💖💖💖💖💖💖💖💖💖💖💖
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*உலகில் முதல் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா??*
*முடியாத சர்ச்சைக்கு முடிவு என்ன?*
🌍📜🤔🌍📜🤔🌍📜🤔🌍📜
🔔 *பாகம்➡ 1⃣*🔔
📜 _*கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன்தோன்றிய மூத்ததமிழ் என்னும் நம்முன்னோர்களின் கூற்று மிகச்சரியானதே!*_👍
📜 🔎 *ஆராய்ந்து கூற இயலாத அளவிற்கு ""தமிழ் மொழி"" தொன்மைவாய்ந்தது. கல்வெட்டும், புதைபொருட்களும் தமிழின் தொன்மையை ஒருவாறு உலகிற்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.*👍
📜🔱 *சைகை மொழியை பயன்படுத்திய மனிதன் அதனை தொடர்ந்து பேச்சு மொழிக்கு மாற்றியிருக்கிறான். அப்படி பேச்சு மொழியாக உருவாகிய காலத்தில் தோன்றிய ⚜ _"""முதன்மை மொழிதான் தமிழ்"""_*⚜👍
📜 *தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கணக்கிட்டால் இன்னும் பல ஆண்டுகள் தொன்மையான மொழியாக இருக்கும்.*🔱👍
📜♥👍 _*தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது ◆●◆குமரிமாந்தனின் """இலமுரியாக்கண்டம்"""தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.◆●◆ அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.*_🔱👍♥
📜 *_ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் ஆகும் இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். _அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் ⚜தமிழன்._*👍😇⚜
📜 *அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.👍 தமிழர்கள் பழந்தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் வளர்த்தனர். _இதற்குச் சான்றாக ~~பினீசியர்களின் நாணயங்களும்~~, ~~கல்வெட்டுக்களும்~~ உதவுகின்றன._*📜🔱👍
📜 *தமிழ் தோற்றத்தையும் வரலாற்றுக்காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம்*🔱
🔔 _*1) பழந்தமிழ்*_
🔔 _*2) இடைகாலத்தமிழ்*_
🔔 _*3) தற்காலத்தமிழ்.*_
📜 *கி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள்.*🔔
📜 *சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.*🔔
📜 *இரண்டாம் வகை வட்டெழுத்துக்கள் கி.மு .2000-1000 நடைமுறையில் இருந்தன.கி.மு 1000ம் முதல் கி.மு.300 வரை உள்ள கால கட்டங்களில் பிற்காலத் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உருவானது.*🔔
📜 *நகரித் தமிழ் எழுத்துக்கள் கி.பி.300 காலங்களில் பயன் பாட்டுக்கு வந்தது.தற்போது நாம் பயன் படுத்தும் தமிழ் எழுத்துக்கள் கி.பி. 900 க்கு மேல் படிப்படியாக மாற்றம் பெற்று வளர்ந்தது.*🔔
📜 _*தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியம் பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தை விட பிந்தியதே தொல்காப்பியம்*_🔔
📜 _*தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட பெருங்கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.*_😰
📜 *தொல்பழங்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பிரிந்து காலத்தாலும் இடமாற்றத்தாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வந்தவைகளே பிறமொழிகள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த மொழிகள் சமஸ்கிருதம் சீனம் ஹிப்ரு கிரேக்கம் ஆகியவை தமிழ் மொழியில் இருந்து வந்தவையே*🔔👍
🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔
✍ _*சமஸ்கிருதம் அல்லது சங்கதம்*_✍
✍ *இம்மொழி தமிழில் ""சுமசுகிருதம்"" என்றழைக்கப்படும் இதை வடமொழி என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடபட்டுள்ளது. வடமொழிகள் பிராகிருத மொழி குடும்பத்தை சார்ந்தது. சமஸ்கிருதத்திற்க்கு என்று எழுத்து முறை கிடையாது. பரம்பரை பரம்பரையாக வாய்மொழி முலமாக புழக்கத்தில் இருந்தது.*🔔
✍ *பின்னர் இதன் எழுத்துமுறை பழைய ""பிராமி""எழுத்து முறையில் ""அசோக சக்கரவர்த்தியின் தூண்கல்வெட்டுகளின் காலம் வரை"" இருந்தது. பின்னர் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தபட்டதுடன் கன்னடம் வங்காளம் மற்றும் தமிழ் இரவல் வாங்கி கட்டமைக்கப்பட்டது. இந்த எழுத்து முறை நடுகிழக்கிலிருந்து வந்த வணிகர்களால் அறிமுகபடுத்தபட்டிருக்கலாம் என்று ""ரைஸ்டேவிட்"" கருதுகிறார்.*🔔👍
📜 _*தமிழின் மீது சமஸ்கிருதம் ஏற்படுத்திய தாக்கத்தை பார்ப்போம்*_👇
🕉 _*இந்துஸ்தானி என்ற ஒரு மொழியிலிருந்துதான் இந்தி, உருது என்ற இரண்டு மொழிகள் கிடைத்தன. பிராஜ், மைத்திலி, அவாதி, பேஜ்பூரி போன்ற மொழிகள் இந்தியான் தாய்மொழியாக இருந்தன.. காலபோக்கில் இந்தி தாய்மொழியாகவும் அதன் தாய்மொழி சேய்மொழியாகவும் மாறியது.*_👍
📜 *இதே நிலமை தான் தமிழுக்கும் ஏற்பட்டது.தமிழ் மீது சமஸ்கிருதத்தின் பாதிப்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்தது*🔱
📜 _*கிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம்தொகு*_📜
📜 *சங்க காலத்திலேயே தமிழுக்கும் வட மொழிகளுக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து வந்த சொற்களைக் குறிக்கிறது. 7 ம் நூற்றாண்டு வரை தமிழில் சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மூலம் கொண்டவை.*🔔👍
📜 *கிமு 250 ஆண்டளவில் தமிழ் மொழி எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் சமசுகிருதம் கிபி 1-3 காலப்பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான ஆதாரங்களே உள்ளன. ஆகையால் தமிழுக்கு சமசுகிருத்தை விட தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது. அன்று வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருத அல்லது பாலி சொற்கள் பண்டைத் தமிழ் மொழியில் சேர்ந்தன எனலாம்.*🔔👍
📜 _*கிபி 7ம் நூற்றாண்டு*_📜
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
📜🔔 *கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமசுகிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்கிறது. இக்காலத்தில் சமசுகிருதம் அரசியல், சமய, கல்வி, தத்துவச் செல்வாக்கைப் பெற்றிருந்தது.*👍
📜 _*கிபி 11-15ம் நூற்றாண்டுகள்*_📜
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
📜🔔 *கிபி 11 நூற்றாண்டில் தமிழ் சமசுகிருத மொழிகள் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள்கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சமசுகிருதம் இறைவனுடைய மொழியாக பேற்றப்பட்ட இக்காலத்தில் இந்நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையை உருவாக்கியது. """இராமனூசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் """என பல தமிழ் சமயப் பெரியோர்கள் இந்நடையிலியே எழுதினர். இந் நடை 15-ம் நூற்றாண்டு வரை அதிக செல்வாக்கோடு வழக்கில் இருந்தது. இதனால் தமிழ் மொழி ஒரு பெரும் இலக்கிய பங்களிப்பை இழந்தது. அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.*👍👍
📜 _*கி.பி13ம் நூற்றாண்டு*_📜
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
📜🔔 *பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது.👍 ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது.*😞
📜 _*கிபி 16 - 18ம் நூற்றாண்டுகள்*_📜
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
📜🔔 *கிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரத் தொடங்கினர். இவ்வாறு போர்த்துகீச நாட்டில் இருந்து வந்த என்றீக் என்றீக்கசு தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை 1554 ம் ஆண்டு முதன் முதலாக அச்சடித்து வெளியிட்டார். கிறித்தவத்தின் வரவு சமசுகிருதம் பெற்றிருந்த இறை மொழி என்ற நிலையை அச்சுறுத்தியது.*😰
📜🔔 *இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சமஸ்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன.*🔱
📜🔔 *இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.*🔔📜👍😇
📜🔔😇 *இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூற்றாண்டு நீடித்தது.*🔔
📜🔔 _*இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது. தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகழாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.*_🔔
📜🔔 _*இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிறோம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.*_🔔📜👍
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :7.10.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*உலகில் முதல் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா??*
*முடியாத சர்ச்சைக்கு முடிவு என்ன?*
🌍📜🤔🌍📜🤔🌍📜🤔🌍📜
🔔 *பாகம் ➡2⃣*🔔
📜🔔 _*உலகம் தோன்றிய காலத்தில் முதன் மொழி தமிழாக இருந்தபோதிலும்.. புராணங்களிலும் வேதநூல்களிலும் சமஸ்கிருதம் எவ்வாறு வந்ததது எதற்காக சமஸ்கிருதத்தில் இயற்றினார்கள் என்பதை காண்போம்*_🔔📜😊
📜🔔 *வேதங்கள் எந்த ஒரு தனிமனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல.🙅🏻 """மந்திரதிருஷ்டா""" என்ற ஞானவிழிப்பு நிலையில் உள்ள ஞானிகளால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டதே ஆகும்.*🔍🔔📜
📜🔔 *வேதங்கள் பற்பல மகரிஷிகளால் இயற்றப்பட்டவை.👍 தங்கள் ஞானக் கண் திருஷ்டியால் அறிந்து அனுபவித்தவற்றை அவர்கள் வேதமாக்கினர்.👍 பழமையும், புனிதமும் கொண்டிருப்பதால் வேதங்களை _""அபௌருஷம்""_ என்பார்கள்.😇 மனிதனால் இயற்றப் பெறாமல் இறைவனால் அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம் என்பது பொருள்*🔍🔔📜
📜🔔 _*ஆனால் வேத காலத்து மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களே தவிர, படைத்தவர்கள் அல்லர் என்பது அனைத்து அறிஞர்களின் ஒருமித்த கருத்து*_🔍🔔📜
📜🔔 *வேதநூல்கள் தோன்றிய காலமும் முதலில் இயற்றபட்ட மொழியும் இன்றுவரை உறுதியாக நிருபிக்கப்படவில்லை வேதநூல்கள் மிக பழமையானதாக கருதப்படும் ரிக் வேத மந்திரங்களில் இயற்றப்பட்ட கவிதைகளும் கேட்கப்பட்ட துதிகள். அதாவது ரிஷி முனிவர்கள் தியானத்தின் போது நாம் ரேடியோ அலைவரிசைக்கேற்ப ஸ்டேஷன்களின் ஒலிபரப்பைக் கேட்பது போல தெய்வீக அலைவரிசியில் கேட்ட கண்டுபிடித்த மந்திரங்களாகும்.*📜🔔
📜🔔 *மந்திரங்கள் முதலில் வாய்மொழி பாடல்கள் முலமாக வழக்கில் இருந்தது. பின்னர் பிராகிருத்தால் செம்மைசெய்யபட்ட சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதற்க்கு பாணனியின் சமஸ்கிருத இலக்கணத்தொகுப்பின் உதவியுடன் சமஸ்கிருதத்தில் இயற்றபட்டது.*🔍🔔📜
📜🔴 _*வேதநூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதற்க்கு காரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழி அதிகம் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் அதிக புலமை பெற்றிருந்தது இருந்தது. அதனால் யாரும் இவற்றை தவறாக பயன்படுத்திவிடகூடாது என்பதற்காக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாக கருத்துக்கள் இருக்கின்றன*_🔴📜
📜🔔 🔴 _*ஏனென்றால் ஒருவரை பாடியோ பேசியோ அழிக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு*_🔴👍📜
📜🔔 *இதன் எழுத்து முறை கிரந்த எழுத்துமுறையாகும். ""கிரந்தம்""என்றால் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று பொருள். சமஸ்கிருத்தால் கட்டியதை எடுக்க தமிழ்மொழி ஒன்றால்தான் முடியும் என்கிறார்கள்.👍 இதற்க்கு சான்றுகாக ஒரு அகத்தியர் குறிப்பு..*🔔📜
📜🔔 _*"திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து*_
_*பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா"*_🔔📜
🔔 _*👉செளமிய சாகரம் பாடல் – 7*_🔔
📜🔔 🗣 *பின்னாளில் பேச்சுமொழியாக இருந்த சமஸ்கிருதம் பண்டித மொழியாக மட்டும் மாறியதோடு, இறைமொழியாகவும் கற்பனை செய்யபட்டது.*🔔📜
📜🔔✍ _*வேதகால இலக்கியம் இடைக்கால இலக்கியம் பிற்கால இலக்கியம் இதிகாச புராணங்கள் வேதங்கள் உபபுராணங்கள் காப்பியம், ""ருக், யசுர், சாமம், அதர்வணம், இராமாயணம், மகாபாரதம், சிரவியம், திருசியம், பிராம்மணம் பத்தியம் கத்தியம் சம்பு, திருத்தம், ரூபகங்கள், ஆரணியகம், உபநிடதம்,*_ _*வேதாகங்கள் கதை, ஆக்யாயிகா, சிட்சை, வியாகரணம், சந்தம்*_
_*நிருத்தம், சோதிடம், மகாகாவியம், கண்டகாவியம், கல்பம், சிருங்காரம் பக்தி நீதி""" போன்ற நூல்கள் இவற்றின் அடிப்படையிலே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகும்.*_🔍🔔✍📜👍
🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔
📜🔔 🔴 _*தமிழ் மொழியை எந்தவிதத்திலும் சமஸ்கிருதத்திற்கு அடுத்ததாக தோன்றிய மொழி என்று நிரூபிக்க முடியாது.🙅🏻 மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளும். தமிழ்நூல்களின் தொன்மையையும் காண்போம்.*_👇🔔📜
📜🔔 _*“கி.மு. முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளிலும்,* *நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாத சமஸ்கிருதம் கி.பி.350க்குப்பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்து வளர்ந்தது.* *இக்காலத்தில்தான் புராணங்கள், இராமாயணம்,* *மகாபாரதம் போன்றவை சமஸ்கிருத மொழியில்* *எழுதப்பட்டன.*_
🔴 🔎 _*(ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி* *163-3* *பாரதவித்யாபவன் வெளியீடு)*_🔍🔴
📜🔔 🔎 *“தமிழ் இலக்கிய மரபுகளே பிராகிருத மொழிமூலம் சமஸ்கிருதமாக்கப் பட்டன’’ என்கிறார் George Hart (ஆதாரம்: Tamil Heroic Poems).*📜🔔🔍
📜🔔🔎 *சமஸ்கிருதம் தமிழ் மூலத்தைக் கொண்டே உருவாக்கப் பட்டது. காரணம் பிராகிருத மொழியே தமிழின் திரிபாகும். (P.C.Sircar, Prakrit Grammar, Culcutta)*🔍🔔📜
📜🔔🔎 🔴 _*“வேதங்கள் சமஸ்கிருத நூல்கள் அல்ல. 🙅🏻பாணினியால் திருத்தம் செய்யப்பட்ட மொழியில் தோன்றிய இலக்கியங்களே சமஸ்கிருதம்’’ என்கிறார் சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள். 🔎(ஆதாரம்: உலகமொழிகளில் தமிழ்ச் சொற்கள் _ ப.சண்முகசுந்தரம் (பக்கம் _16) உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)*_🔴🔍👍
📜🔔 *“இராமாயணம் மகாபாரதம் போன்றவை கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை’’ ✍ என்கிறார்கள் """கே.சி.கன்னா, ஏ.பார்த் என்ற அறிஞர்கள்."""(மேற்படி நூல், பக்கம் 17). H.G.Wells என்ற அறிஞர்,*🔍👍
📜🔔🔎 _*தமிழ் மொழியின் இலக்கணமும், கட்டமைப்பும் சமஸ்கிருதத்தை காட்டிலும் சிறப்பானது என்கிறார் கால்டுவெல்.*_🔍👍
📜🔔🔎 _*கி.பி.4ஆம் நூற்றாண்டில்தான், கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சர்வந்தி என்பவரால் உலோக வியாபகம் என்ற பிராகிருத மொழிநூல், “கதசப்தசாயி’’ என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் பெயர்க்கப்பட்டது.*_🔍✍
📜🔎 *“சூரசேனி என்ற பிராகிருத மொழியைச் செம்மை செய்து, சமஸ்கிருதம் (செம்மை செய்யப்பட்டது என்று பொருள்) என்றாக்கினர்’’ ஸ்டிவென்சன், ஹட்ஜன் என்ற ஆய்வாளர்கள்*🔍✍
🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔🔱🔔
👇 *【அடுத்த பாகம்】*👇
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :7.10.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*உலகில் முதல் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா??*
*முடியாத சர்ச்சைக்கு முடிவு என்ன?*
🌍📜🤔🌍📜🤔🌍📜🤔🌍📜
🔔💝 *பாகம்➡3⃣*💝🔔
📜💝🔔 _*சமஸ்கிருதத்தைவிட, பண்டைய காலத்திலிருந்தே தமிழிலும் வைத்தியம், இசை, நாட்டியம், வானசாத்திரம், சோதிடம், தத்துவம், அறநூல்கள் என பல்வேறு அறிவுத் துறைகளிலும் நூல்கள் வெளிவந்துள்ளன.*_💖
📜💝🔔 _*வேதநூல்கள் கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்*_💖
📜💝🔔 _*ஆனால் கி-மு. 10527*_
_*முதல் தமிழ்ச்சங்கத்தை ""பாண்டிய மன்னன் காய்கினவழுதி"" தோற்றுவித்த காலம். ""4449""புலவர்கள் கூடினர்.முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன*_💖👍
📜💝🔔 *ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ""அகநானூறு, புறநானூறு""போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டது.*💖👍
📜💝 _*தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்கின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அதன் பின்னால் தோன்றிய இசை நூல்களான பெரு நாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், இந்திரகாளியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்து போய்விட்டன.*_😞
📜💝🔔 _*எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறும் மிகத்தொன்மையான இசை நூலாகக் கருதப்படுகின்றது. அதிலும்கூட அழிந்தவை போக எஞ்சியிருக்கும் இருபத்தியொரு பாடல்களே இப்போது கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசை நூல்கள் தமிழிசையின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன*_💖👍
📜💝🔔 _*தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் திருமுறைகள், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான தனிப்பாடல்கள் எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கிறது.*_👑💖👍
📜💝 _*மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம். உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.*_👍
_*12 x 18 x 100 = 21600*_
_*தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது*_🔔💖👍
📜💝🔴 _*நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாக விளங்கும் 12ம் நூற்றாண்டில் ஔவையார் இயற்றிய ""ஆத்திச்சூடி.""அன்று முதல் இன்று வரை கற்பிக்கபடுகிறது.*_👍💖😇👍
😇🔔💝 _*1-1-2017 அன்று 26-வது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது! ஆம்! ஆசிரியர், செந்தமிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.*_💖👍🔴
📜😇💝 _*இதனெதிராக தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு தான் என்பதற்குப் பன்னிரு திருமுறைகளிலிருந்து 135 மேற்கோள்கள் இருக்கின்றன. வைணவ நாலாயிரத் தமிழும் இதை உறுதி செய்கிறது. அத்தனையும் பார்க்க இயலாவிட்டாலும் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் ஒன்று போதும்*_✍👍😇
📜😇 _*சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி*_
_*சழிந்த சென்னிச் சைவ வேடம் தாம்நினைந் தைம்புலனும்*_
_*அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருள் இன்பம் வீடு*_
_*மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.*_✍😇
📜😇 _*அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கே ஆலமர் செல்வன் அன்று மொழிந்த தமிழ்வேதம் என்பதை இப்பாடலில் தெளிவுபடக் காணலாம்.*_🔍👍
📜🔎 _*மொழி ஆய்வாளர்கள் கருத்துப்படி உலக மொழிகளுக்கு ""தமிழே மூலமொழி"",👍.மூல இலக்கியங்களைப் பெற்றது என்பதால் தமிழரே கல்வியிலும் சிறந்து விளங்கினர். கல்வியில் சிறந்து விளங்காமல் மொழி வளமும், இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் ஏற்பட்டிருக்க முடியாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தமிழில் உருவாகியிருக்கிறது என்றால் அதற்குமுன் எத்தனை ஆயிரம் வருடங்களாகத் தமிழர் கல்வியில் சிறந்திருப்பர் என்பதை கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். தொல்காப்பியத்தின் வளம், நுட்பம், இலக்கண வரையறைகளைப் பார்க்கும்போது அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கல்வியில் சிறந்திருந்தமை விளங்குகிறது.*_👍😇💖
📜😇 _*திருக்குறளின் நுட்பங்களை, வளமையை, செறிவைப் பார்க்கும்போதும், கல்வியின் கட்டாயம் அதில் பேசப்படுவதாலும் தமிழரின் கல்வி எந்த அளவிற்கு சிறந்தோங்கியிருந்தது என்பதை மதிப்பிடலாம்.*_💖👍
📜 *_"""அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"""என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ""‘திருக்குறள்’"" என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். 😇உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தார்._*👍
📜😇 _*திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.😇 இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.*_😇👍
📜😇 _*ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.*_👍
📜 ⏳ _*திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும்,👍 இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை*_👍💐
📜😇🙏🔴 _*முத்தமிழுக்கும் இனிமை சேர்ப்பது இசைத்தமிழ். அந்த இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோல் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் இசையினை முறையாகப் பயில வேண்டும். தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சி செய்யவேண்டும் பரம்பரை பரம்பரையாக தமிழ் மொழியை வளர வழி செய்வோம்....!!!*_💖😇👍💪🙏
📜🏹 _*கமலிகணேசனின் தமிழ் வரலாற்று வேட்டை என்றும் தொடரும்...*_🏹📜👍😇💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
🏆 *உதயகுமார் பூமிநாதன்*💐
🏆 *பிரபாகரன்*💐
🏆 *ராமகிருஷ்ணன்*💐
🏆 *Ks*💐
*கலந்துரையாடல்~2®©*
🏆 *@🌱 பசுமை🌱புருஷோத்* 💐
🏆 *@Narayana Selvan, @பேரறிவு💫* 💐
🏆 *@சிவா 💪🏻, @Pradeep Viswaa*💐
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
😇 *ஐம்பூதங்களும் எதிரே வந்து நம்மை எதிர்த்தாலும், நம் தமிழ் மொழி இமயத்தின் சிகரத்தில் நின்று ஆட்சி செய்யுமே தவிர, தமிழ் மொழிய அழிக்க இனிமே எத்தனை பிறவி எடுத்தாலும் முடியாத காரியம்.*
😍 *இனிமே ஆராய்ச்சி பண்ணணும்னா, சூரியன் முதலில் வந்ததா? இல்ல சூரியனுக்கும் முன்னடியே தமிழ் மொழி வந்ததா? என்று தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.*😜
🤗 *இதற்கு மேலயும் ஆதாரம் கேட்பவர்களுக்கு ஒரே ஒரு கதை சொல்லி முடிச்சிக்குறேன்.*
😉 *கதை😉*
😇 *ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு குட்டியா அழகா ஒரு குழந்தை பிறந்துச்சாம். அந்த குட்டி பாப்பாவுக்கு, 5 வயது ஆகும்போது திடிர்னு ஞானோதயம் பிறந்து, ஒரு நாள் சந்தேகம் வந்துருச்சாம். யாரு எங்க அம்மா? (ராணிய பார்த்து) இவங்க தான் எங்கம்மானு சொல்றிங்களே, நான் எப்படி நம்புறது? நீங்க சொன்ன போதுமா? நான் பாக்கவே இல்ல நிரூபியுங்க சொன்னிச்சாம். உடனே ராஜா, அந்த பிரசவம் பார்த்த பெண்மணிகளை கொண்டு வந்து இவங்க தான்பா நீ பிறக்கும் போது உங்க அம்மா (ராணி) கூட இருந்தவங்கனு சொன்னாராம். உடனே அந்த குட்டி பாப்பா நீங்க ஊருக்கே பெரிய ராஜா. இவங்களை விலை கொடுத்து வாங்கி சொல்ல சொல்லிருந்தா நான் எப்படி நம்புறதுனு கேட்டுச்சாம்😱.*
🤔🙄😴 *இதுக்கப்புறம் எப்படி அந்த குட்டி பாப்பாவுக்கு புரிய வைக்கிறது.😆🤗😆*
*🚫கதை முடிஞ்சிது🔚*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து*
*மறைமொழி காட்டி விடும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்ளவும்
_*பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதா?*_
புரிந்துகொள்ளவும்
_*ஒரு குருவி இரை எடுக்க[ """தமிழ் மொழி""" ] , ஒன்பது குருவி வாய் {பிறமொழிகள் } திறக்க.*_
அனைவரும் நன்கு தெரிந்து கொள்ளவும்,
😇 _*கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.*_👍
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment