Sunday, 8 October 2017

தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் மழையும் அதை சேமிக்க தவறிய அரசும் அதை சார்ந்த மக்களும்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳©®
______________________________________________

🌹  *நாள் :ஞாயிற்றுக்கிழமை*🌹

🌹 *தேதி :    08.10.2017* 🌹
_______________________________________________

💢💢 *அறிவோம்*💢💢

*சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால்.....!*
*பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது.....!!*
  💢 *கன்ஃபூசியஸ்*💢
➖➖➖➖➖➖➖➖➖➖➖
👩🏻‍⚖ *அட்மின்தாட்ஸ்*👨🏻‍⚖

💁🏻‍♂ *கட்சி மற்றும் குழுக்களோ* *ஆரம்பித்துதான் அநீதியை தட்டிக்கேட்க்க வேண்டும் என்றில்லை...*🙅🏻‍♂
*தனி ஒருவனாக என்று கேட்கின்றாயோ அதுவரை உன்னை விடப்போவதும் இல்லை!!!விட்டுக்கொடுக்க போவதும் இல்லை!!!*👍
➖➖➖➖➖➖➖➖➖➖➖
📣 *தலைப்பு*📣

*தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் மழையும் அதை சேமிக்க தவறிய அரசும் அதை சார்ந்த மக்களும்........ !!!!*
🌧💧🌊📥👎🌧💧🌊📥👎⛈

🌧 *மழை..!!மழை..!! மழை..!!ஆம்* 🌧 *ஆலங்கட்டிமழை,*
🌧 *அமிலமழை,*
🌧 *பனிமழை,*
🌧 *செயற்கை மழை,*
🌧 *முகிற்பேழ் மழை,*
🌧 *சிவப்பு மழை,*
⛈ *இடியுடன் கூடிய மழை,*
*மழை நீர் சேகரம்,*
🌧 *வடகிழக்கு பருவமழை,*
🌧 *வருணன்,*
*மீன் மழை.*

🌧💧👳‍♀ *இத்தகைய மழை பொழிவை எதிர்பார்த்துதான், நமது முன்னோர்கள், அரசாட்சி முதல் மக்களாட்சி வரை (1967 வரை) 50,000-க்கு மேற்பட்ட ஏரிகள் குளங்களை அமைத்து வைத்திருந்தனர். அதோடு நீர்நிலைகளை சுற்றி விளை நிலங்களும் இருந்தன.*🏡🏞

🌧💧⚠ *தற்பொழுது 39,202 ஏரிகள் மட்டுமே* *உள்ளன.இதில் 13,710* *ஏரிகள் பொதுப்பணித்*
*துறையின் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டிலும்* *மற்றவைகள் உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.*‼

😰😧 *39,000-க்கும் மேற்பட்ட, ஏரிகள், குளங்கள்,* *குட்டைகளில் சரிபாதி இன்று ஆக்கிரமிப்பில்* *உள்ளன.நீர்நிலைகள் அழிக்கப்பட்டதாலேயே* *இன்றைய துயரத்திற்கு*
*மூலகாரணமாக உள்ளது.*👍😔😓

🌧💧 *மூன்று மாதத்தில் பொழிய வேண்டிய மழை ஒரு சில தினங்களில் கொட்டி தீர்த்துவிட்டது.😱 வரலாறு காணாத மழை என்று அறியாத சிலரும் மழையின் தாக்கத்தை வர்ணித்து வருகின்றனர்.*🌧😳

🌧💧 *ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 41 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 29 சதவீதம் சதவீதம் அதிகம். கோவையில் 169 சதவீதம், தேனி மாவட்டத்தில் 131 சதவீதம், தஞ்சாவூரில் 21 சதவீதம், திருவாரூரில் 32 சதவீதம்,  சென்னையில் 2 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலைமைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.*💧👍

🌧💧 *தென்மேற்கு பருவ மழை கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூடுதலாக பெய்துள்ளது எனவும்  தெரிவித்துள்ளார்.*🌧👍

🌧💧 *குறிப்பாக,*
*தென் தமிழகத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளி‌ன் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் வேகமாக உய‌ர்‌ந்து வரு‌கிறது.*⬆

🌧💧 *இதேபோன்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.*💧👍

🌧💧 *அதே போன்று சென்னையில் பெய்துவரும் மழையால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.*💧👍

🌧💧 *கனமழையால் பல்வேறு இடங்களில் ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் உடைந்து பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.*😰

😡💧🌧 *தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தும் நாம் கொட்டும் மழையை கடிந்து கொள்வது சரியாக இருக்காது, அது விவேகமாகவும் இருக்காது.*👎

🌊🌧 *தொடர்மழைக்கு ஏரிகள் நிரம்பிவிட்டதாக பெருமைப்பட்டாலும் அது உண்மையல்ல.👎 பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்படாமல் காணப்படுகின்றன. இதனால் சீக்கிரத்திலேயே ஏரிகள் நிரம்பி விடுகின்றன.*😰

🤕 *ஏரிகளில் உள்ள மதகுகள் பெரும்பாலும் பழுதடைந்தே காணப்படுகின்றன. இதன்காரணமாகவே பல இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்ப்படுகிறது.*😰

⏳⛔ *கடந்த 50 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன.*😓
*சென்னையை சுற்றி, நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன, செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக கருதப்பட்டது.*👍

🤕😰 *நீர்நிலைகளை* *மீட்பதற்குக் குறிப்பிடத்தக்க* *நடவடிக்கைகள்* *எடுக்கவில்லையெனில்*
*மனிதனால் உருவாகும் பேரழிவுகள்* *தொடர்வதைத் தடுக்க முடியாது.“ஏரிகளை மீட்பதில் இருக்கும் பெரிய பிரச்சினை என்னவென்றால் அரசியல்வாதிகள் செய்த ஆக்கிரமிப்புதான் இதன் காரணமாகவே மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர்.*😰😓

😡🤕 *சாலைகளின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேஇருக்கிறது, குப்பைகளைக் கட்டுப்படுத்துவது பற்றியும், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது பற்றியும் எந்தப் பேச்சும் அரசிடம் இருந்து வருவதாக இல்லை.. ஏன் நாம்கூட கண்டுகொண்டதாக தெரியவில்லை.*😏😏

😡👊 *இதன் உச்சக் கட்டமாக, அரசு பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கினை செலுத்தி, பல மாவட்டங்களில், ஏரி, குளம், குட்டைகளில் அரசு அலுவலகங்கள், பேரூந்து நிலையங்களையே அமைத்துவிட்டனர். காரணம் அதை சுற்றி ஆக்கிரமித்த பகுதியில் ரியல் எஸ்டேட் இடங்களுக்கு கிராக்கி கிடைக்கும் என்பதாலேயே அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.*👊😰

😡💺 *அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக, அதிகாரிகளால் அனுமதிகள் வழங்கப்பட்டாலும், நீர்நிலைகளில், மழைக்காலங்களில் மழை நீர் செல்ல உரிய வடிகால்களைக் கூட அமைத்திட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாவர்களை திட்டினால் மட்டும் திருந்திவிட போகிறார்கள்.*😡👊😏

🤕💺 *பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் மாவட்டங்களில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறைகளின் மூலமாக, ஏரி, குளங்களில் சுயநல அரசியல் வாதிகளுக்கு வீட்டு மனைகள் அமைத்திட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.*👊

😡🌊 *23 ஏக்கராக இருந்த தண்டரை ஏரி, 7 ஏக்கர் உள்ளது.*😰😱

😡🌊 *36 ஏக்கராக இருந்த முத்தாபுதுப்பேட்டை ஏரி, இப்போது 10 ஏக்கரில் உள்ளது.*😰😱

😡🌊 *416 ஏக்கராக இருந்த கோவில்பதாகை ஏரி வெறும் 50 ஏக்கராக உருக்குலைந்து.*😰😱

😡🌊 *229 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பருத்திப்பட்டு ஏரி, இப்போது 40 ஏக்கராக உள்ளது.*😰😱

👆👆👆👆👆👆👆👆👆👆👆

😡 *இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஏரிகள் அரசியல்வாதிகளுக்கும், ஆக்கிரமிப்பு ஆசாமிகளுக்காகவும் தங்கள் பரப்பளவை குறைத்துக்கொண்டன.*👊😰

🌧🌊 *நதி எப்போதும் கூடுதலான நீரைத் தன்னுள் கொண்டிருப்பதில்லை, 🙅🏻‍♂அதேபோல அதுவே வீணாகச் சென்று கடலில் கலப்பதுமில்லை.🙅🏻‍♂ நதி செல்லும் வழிகளில் உள்ள நிலங்களை வளமாக வைப்பதற்கு ஒவ்வொரு துளியும் முக்கியம்.👍 சரியாக பயன்படுத்தாமல் போனதற்க்கு யார் காரணம்?*❓🤙👊😡

😡🤙 *இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரியுமா?❓ மனிதர்களாகிய நாம்தான்.👊 தேங்கிய மழை நீர் வெளியில் செல்ல வழியில்லாமல் போனதற்க்கு நாமும் கூட ஒரு காரணம்.*😰

🌧💧 *ஒரு நதி உயிர்ப்புடன் திகழ்வதற்கு, மரம் மட்டுமே போதாது. புல்வெளிகள், புதர்கள், நீர்சார்ந்த தாவரங்கள், வெள்ளப்படுகைகள் போன்றவை வளமாக இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மணல் கொள்ளையால் வெள்ளப்படுகைகள் மறைந்துவிட்டன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் போன்றவற்றால் புல்லும் புதரும் காணாமல் போய்விட்டன.*😰

🌧💧😡 *தற்போதய மழைக்கு ஓடை, ஆறாக உருவெடுத்து ஓடுகிறது ஆனால், அந்த நீரை சேமிக்க திட்டமிடாததாலும், தடுப்பணைகளை பராமரிக்காததாலும் ஒட்டுமொத்த நீரும் விரயமாகியுள்ளது.*😰

🌧💧 *மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், ஆந்திர, உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு, டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் பருவமழை வெளுத்துக்கட்டியது. தொடர் மழையால் இந்த மாநிலங்கள் தத்தளித்து வருகின்றன.வருண பகவானின் அடுத்த இலக்கு தமிழகமாக கூட இருக்கலாம்.*😴

🌧💧 *பருவமழை முடிந்துவிடவில்லை.🙅🏻‍♂ அவ்வப்போது பெய்யும் எனறே கூறப்படுகிறது. அதனால் தடுப்பணைகளை சீரமைத்தால் இன்று மட்டும் அல்ல நாளைகூட அதை பயன்படுத்தலாம்.*👍👍

😣 *இன்றய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு முடிந்தவரை ஆக்கிரமிக்கவும் அல்லது ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மலிவு விலைக்கு வாங்குவதற்கு ஆசை படுகிறோம்.*👊😏

😡 *ஏரியில் வீடு கட்டினால் தண்ணீர் வராமல் தயிரா வரும்”*👊

😣 *கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் அல்லாமல் எதையும் செய்ய வேண்டிய நேரத்தில்,உடனடியாக செய்து விட வேண்டும்.*👊

🌧 💧 _*“நீர் இன்று அமையாது உலகம்” நீர் அதிகமானாலும் அமையாது நம் நல்வாழ்வு" நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.*_💧😓😰

🌍 *நமது பூமி கோளம் தேவையானவற்றை வாரிவாரி கொடுத்து தன் குடிமக்களைக் கவனித்துக் கொள்கிறது.😇 இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக, மனிதனின் பேராசையும் குறுகிய கண்ணோட்டமும், லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை சூழலைச் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியிருக்கின்றன.😔 நல்லெண்ணம் படைத்த ஆட்கள், பூமியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அப்பிரச்சினைகளை முற்றும் முழுமையாகத் துடைத்தழிக்க மனிதனுக்கு உண்மையிலேயே சக்தியில்லை.*😔😰

⛈💧🌧 *பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர்வளத்தைப் பெருக்கலாம்...👍 இயற்கை வளங்களைப் பெருக்கி, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம்....👍 வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம்....👍 அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைத் தடுக்கலாம்....👍 _“இன்றைய சேமிப்பு...!!! நாளையத் தேவை..!!!!”_ என்பதற்கேற்ப, பருவமழையானது பெய்யாது பொய்க்கும் போது ஏற்படுகின்ற தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், தலைவிரித்தாடுகின்ற பஞ்சத்தையும் மழைநீர் சேகரிப்பால் ஈடுகட்ட இயலும்.*👍👍

🌍😇 *நம் பாரத நாடும் பழம் பெரும் நாடு.* *இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை வற்றா வளம் சுரக்கும் பேராறுகள் அன்று தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக அமைவது மழையே...!!! ‘உயிரின் உறைவிடம் உடல்... மழைநீரின் உறைவிடம் நிலம்..!! எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சமாளிக்கலாம் என்பது வெள்ளிடைமலை.* *“விண்ணின் மழைத்துளி...!!!மண்ணின் உயிர்த்துளி..!!!”என்பதை உணர்ந்து,* _*ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பில் ஈடுபட்டால் நாடு நலம் பெறும்...!!! நல்ல வளம் பெறும்....!!!*_👍😇🌧💧

🌧💧 *மழைநீர் அரசியல்வாதிகள் சேமிக்கிறாங்க, சேமிக்கல அது வேற விசயம்*😡👊

😡 *ஆனா அவங்க பேச்சை கேட்க, நம்ம அவங்களுக்கு அடிமை இல்ல, சட்டம் என்ன வேணாலும் சொல்லட்டும்.*😏

🌧💧 *மழைநீரில் நீங்க சமைத்து சாப்பிட்டு பாத்துருக்கீங்களா?🤔 அதோட ருசியோ தனி.*😇😋

🌧💧 *நீங்க சாதாரண தண்ணீரை பயன்படுத்துவதற்கு பதிலாக, மழைநீரை நேரடியாக பிடித்து அதை பயன்படுத்தி பாருங்கள்.👍👍*

🌧🙅🏻‍♂ 💧 *இயற்கைக்கு ஈடான நீர் வேறு எதுவுமில்லை...!!*🙅🏻‍♂

🌧💧👌 *மழைநீரை நேரடியாக எந்த வித தங்கு தடையுமின்றி, நேரடியாக மழைநீரை பிடித்து அதை உபயோகிப்பவருக்கே அதனுடைய அருமை புரியும்.*👍👍

🌧💧 *மழைநீரை, அவரவர் சேமிக்க ஆரம்பிப்போம்...!!!*👍

👍 *முயற்சி செய்து பாருங்கள்...!!*👍

🌧 *மழைநீர்..!!*💧
🌧 *உயிர்நீர்...!!!*💧

*நன்றி💐*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑

🥇 ~👀~  🦅 *Dhava B+*🦅

🥈 *Pachamannu (Pm)*

🤜 *கலந்துரையாடல் ~2*©®🤛

🥇 *@⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩*
    
🥈 *@⁨Narayana Selvan⁩, @⁨Sanga praga⁩*

🥉 *@⁨kutty mani⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤       

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

😇 *இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று மழை நீரை சேமிப்பது, அரசு மழை நீர் சேகரிப்பை கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது ஆன அதை கடைபிடிக்க ஆல்தான் இல்லை.*

🌧 🔴 *மழைநீர் சேகரிப்பு தெட்டி அமைத்தால் தான் வீடு கட்டுவதற்க்கு அனுமதி பெறமுடியும் ஆன பெரும்பாலும் இதை சரிவர யாரும் அமைப்பதில்லை.*⛔

🔘 *பள்ளம் தோண்டி நீர் எடுக்க முனையும் நாம், பள்ளம் தோண்டி நீரை சேமிக்க முனைப்பு காட்டுவதில்லை ஏன்..*❓👊
*மெத்தனபோக்கால் இயற்க்கையை அழித்த நாம் இன்று இயற்க்கை அன்னை தந்த மழையையும் காக்க தவறவிட்டுவிட்டோம்.*🌧😡

⏳ *அன்று நம் முன்னோர்கள் பெண்களை மண்ணை பார்த்து நடக்க சென்னார்கள் ஏன் தெரியுமா...!❓🤙 பூமிதாயை காக்க நம் தாய்மார்களால் தான் முடியும் என்ற நம்பிக்கையில்தான்.👍 ஒரு தாயின் வழி மற்றொரு தாய்க்குதான் புரியும் போல, இன்று அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.*😓

😇🌧 *இயற்க்கை அன்னை தந்த வாழ்க்கையில் நாம் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதை உணர்த்தவே இப்பொழுது நடக்கும் பேரழிவுகள், விழித்துக்கொள்வோம் நாம், மழைநீரை காத்து இயற்க்கையை மீண்டும் உருவாக்குவோம்...!!! வருங்காலத்தை வளமாக்குவோம்...!!!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்* *சார்வாய்மற் றாங்கே*
*எடுப்பதூஉம் எல்லாம் மழை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

🔻 *அறிந்துகொள்க*🔺

*‘‘மழை பெய்தும் கெடுக்கும்*
            *பெய்யாமலும் கெடுக்கும்’’*

🔻 *தெரிந்துகொள்க*🔺

*‘‘வானம் நினைத்தால் மழை*
            *மனிதன் நினைத்தால் வினை’’*

🔻 *புரிந்துகொள்க*🔺

*"நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்"*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
✍✍✍✍✍✍✍✍✍✍✍

🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *இராமலிங்கம் அங்கப்பன்*
*60122646502*✍

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *கமலி*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...