🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :ஞாயிறு*🌹
🌹 *தேதி :19.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
*யாரிடமும் வாக்குவாதம் செய்யாதே..... அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய்..... வென்றால் ஒரு எதிரியை பெறுவாய்....நீ செய்யும் விவாதமே அதை தீர்மானிக்கிறது....!!!!!*
*★★★ஊர் நாட்டாமை★★★*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*விவாதமும், விதண்டாவாதமும் கலந்ததே கலந்துரையாடல் என்று உலகம் நம்புகிறவரை, காரசாரத்துக்கு பஞ்சமிருக்காது, கலந்துரையாடலுக்கு மவுசும் குறையாது....*🏹😍
😎◆●◆ *அட்மின்*◆●◆😎
📣 *தலைப்பு*📣
*விவாதங்களில் வீண் பிடிவாதங்கள் தேவையா???கருத்தை ஏற்க மறுப்பதற்கு காரணம் என்னென்ன???*
😠😰😣😴😠😰😣😴😣😰😣
😠 🤜 *அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *கணினியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம்*🤷🏻♂
😠🤜 *மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாற வேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்*🤷🏻♂
😴😨 *பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதங்கள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கின்றது.🤷🏼♂*
🤔 *நம்மை விட, மூத்தவர்கள் பிடிவாதம் பிடித்தால், அதில் ஏதாவது ஓர் அர்த்தம் நிச்சயம் ஒளிந்திருக்கும்.*🤗
😏 *மூத்தவர்களிடம் பிடிவாதம் கொள்வதை நம் தவிர்த்து கொள்ளல் வேண்டும். அவர்களின் அனுபவத்தால் கூட அடித்து பேசுவார்கள். இல்லையென்றால் நம் தேவையில்லாத, உபயோகமில்லாத பொருளை கேட்டாலோ, சம்பந்தமில்லாமல் பேசினாலோ அவர்கள் பிடிவாதம் பிடிப்பது, வழக்கமான ஒன்றே.*🤗
➡ *அதே போல மூத்தவர்களும், இளையவர்களிடம் பிடிவாதம் செய்வதை தவிர்த்து விட வேண்டும்.🤷🏻♂ முடிந்தவரை விட்டுக் கொடுத்து போவதே சிறப்பு.😇 இல்லையென்றால் அமைதியாக இருப்பது அதை விட சிறப்பு.*🤗
➡ 🙅🏻♂ *மூத்தவர்கள், இளையவர்கள் எல்லோரையும் கட்டுப்படுத்த நினைப்பதும் தவறு.🙅🏻♂ 👉அவரவர் எண்ணங்களின்படியே நல்வழியில் சென்றால் விட்டு விடுவது சிறப்பு. 🤷🏻♂ அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடியவர்கள் பிடிவாதம் பிடித்தால், அவர் போக்குக்கே விட்டுக் கூட பிடிக்கலாம்.*🤷🏻♂
👉💖 *ஒருவர் தன் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடு பட்டாவது நிலை நாட்டத்தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன் வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை.*🤷🏻♂
👉💖 *விவாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் அணுகுங்கள்.🤷🏻♂ முக்கியமாக, நம் கருத்தை அது எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும் மற்றவர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.*🤷🏻♂ *அவரவருக்கு தான் சொல்வதுதான் பெரிது. 🤷🏻♂அவரவர் வழியே சென்றுதான்* *அவர்களை நம் வழிக்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்*🤷🏻♂ *என்னென்றால் நாம் நினப்பது போல் இவ்வுலகம் சுழல்வதில்லை.*👍
💝💯 *இந்த விஷயத்தில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்று உள்ளது. ஒருவர் தன் மனதளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே உருவகப்படுத்திக் கொள்கிறார் அதனால் அந்த விவாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சிவசப்படுகிறார்.*🔍🤷🏻♂
*பதற்றத்தில் பதில் தரவேண்டும் என்று விவாதத்தில்* *ஈடுபடுபவர்கள், வீண் சண்டையை* *வளர்த்துக்கொண்டு*
*மனவருத்தப்பட வேண்டியிருக்கிறது.*😰 *தேவையற்ற வார்த்தைகளை விவாதத்தில் கொஞ்சம் குறைத்துக்கொண்டால் பல விஷயங்களில் நாம் சாதிக்கலாம்.*👍
🗣 *வாதங்கள் சுமுகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால் உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.🤷🏻♂ மற்றொரு சமயம் திரும்பவும் பேச்சுவார்த்தையை தொடங்குவே சிறந்தது.*👍
💖 *கடல் போல் வீடு இருந்தாலும் எதையெதை எங்கு செய்ய வேண்டுமோ, அதனை அங்குதான் செய்கின்றோம்.*👍 👉 *அதைபோல முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் கலந்தாலோசிக்கும் பொழுது வார்த்தையில் முதலில் கவனத்தை வைக்கவேண்டியதாய் இருக்கிறது என்னென்றால் தேவையற்ற வாக்குவாதத்தில் சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களும் ஒருவர் எரிச்சலான மனநிலையில் பேசும் வார்த்தைகளை அவருடன் நாமும் காதுகொடுத்து கேட்கவேண்டியதாகிறது.*🤦🏻♂
🤐😷 *தேவையற்ற விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது.👍வீண் விவாதங்கள் சின்ன விஷயங்களை பெரிதாக்கி திசை திருப்பிவிடும்.😰 விவாததலத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் தலமாக மட்டுமே காணவேண்டும்.*👍
🗣👉 *பொறுப்பில்லாத கேள்வியையும் சிந்தனையையும் விட்டுவிட்டு,🙅🏻♂ நாம் இங்கு எதற்க்காக இணைந்தோம்,❓ சமூதாயத்திற்கு நாம் செய்யும் கடமை என்ன ?❓என்பதை பற்றிய உணர்வே ஓர் எண்ண அழையில் நம்மை இணைந்திருக்கிறது என்பதை உணரவேண்டும்.*🤝👍
🗣➡ *விவாதங்கள் பல உண்மைகளை எடுத்துரைத்தாலும் நல்ல தீர்வை உடனடியாக தருவதில்லை.*🤷🏻♂
🛑 *விவாதம் எல்லை மீறும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.👍 விவாதம் வெற்றிக்கான வழியல்ல🙅🏻♂ விழிப்புணர்ச்சிக்கான வழியாக பார்க்க வேண்டும்.*👍🛑
🛑➡ *உங்களுடைய கருத்து அவமதிக்கப்பட்டால், அந்த மன வருத்தத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசிவிடக்கூடாது.*🙅🏻♂ *மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கருத்து ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.*👍🛑
🛑➡ *ஒருமித்த கருத்து நிலவுவதற்கான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே நிர்வாகிகளின் எண்ணம்.*🛑🤝
🗣➡ *சில நேரங்களில் சில உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.🤷🏻♂ அந்த சமயத்தில் உங்கள் கருத்தை, நியாயத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளாதபோது அமைதி காப்பதே கருத்து சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் பரிசாகும்.*👍🤷🏻♂
🛑🗣 *எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் தேவையற்ற விவாதம் அவர்களை பிரித்துவிடுகிறது.*😔😰
🗣🤝➡ *கலந்துரையாடல் விவாதம் என்பது மாற்றுக் கருத்துடைய நாம் குழுவாக கூடி நம் வாதங்களை எடுத்துரைத்து இறுதியில்வாதங்களின் அடிப்படையில் இந்த கருத்து தான் சரியானது என்று முடிவு செய்யப்படு சுருக்கமாக தொகுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் முடிவுரையாக வழங்கப்படுகிறது.*👍
🗣➡ 💖 *ஒருவர் மனதை மற்றவர் புரிந்துகொள்ளவே இங்கு விவாதம் செய்கிறோம்.🤷🏻♂மாற்று கருத்துக்கு இடம்கொடுத்து விவாதம் செய்வதே சுயநலம் இல்லாதது.🤷🏻♂ இதையே அனைவரும் விரும்புகின்றனர்.*👍
🗣➡ *விவாதம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்த விவாதத்தின்* *சாரம்சத்தை வலைத்தளங்களில் சொல்லி தன் கருத்தை* *வலுப்படுத்திக் கொள்வதற்க்கு* *அனைவருக்கும் வாய்ப்புக்கள் உண்டு.*👍🤷🏻♂
🗣➡ *யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்று சொல்லவில்லை...நல்லது யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளளாமே என்று தான் சொல்கிறோம்....*🤷🏻♂
🙌 *ஒருக்கதை சொல்லட்டுமா சார்.....*🙌
🌳 *அடர்ந்த காட்டின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வந்தான்.👨🏻 பிராணிகளிடம்🐰🐹🐕🐓 அன்பை உள்ளவன்.😇 ஒரு முறை அவன் ஒரு 🦌மான் குட்டியை கண்டெடுத்து அதை அன்புடன் வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த மான் குட்டி காணாமல் போயிற்று. 😔அவன் மனம் பதைத்தது. மான் குட்டியை அபகரித்தவரைச் சும்மா விடக்கூடாது😡 என்று எண்ணினான். அதற்காக இறைவனை மனமுருகப் பிரார்த்தித்தான்.*💓
💝 *இறைவனும் அவன் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டார். 😇இவனோ எனது மான் குட்டியை அபகரித்தவன் என் கண் முன்னால் தோன்ற வேண்டும் 👍அவனை நான் பழி வாங்க வேண்டும் என்றான்.*😡
💝🤷🏻♂ *இறைவன் அவனிடம் நன்றாக யோசித்துச்🤔 சொல் பின்னால் வருந்த நேரலாம் என்று பலவாறாக எச்சரித்தார்.*🤷🏻♂
👨🏻😠 *ஆனால் அவன் தன் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தான்.*👍
🤷🏻♂👍 *வேறு வழியின்றி கடவுள் கையை உயர்த்தியதும் பயங்கரமாக உறுமிக்கொண்டு சிங்கம்🦁 ஒன்று அவன் முன் தோன்றியது. அதைக் கண்ட அவன் ஐயோ தெரியாமல் கேட்டுவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள் என்று அலறிக்கொண்டே ஓடினான்.*🏃🏻🏃🏻🏃🏻🏃🏻
🤷🏻♂ *தேவையில்லாத பிடிவாதங்கள் மென்மேலும் சிக்கல்களை உருவாக்கிவிடும் என்பது அவனுக்கும் புரிந்தது.*👍🤷🏻♂
*😉😇உங்கள் அனைவருக்கும் இது புரிந்ததா?*😉😇
😇👉 *இதுதான் வேணும்னு பிடிவாதம் பிடிக்காம,*🙅🏻♂
😇💝 *இது இல்லனா அது என்று டேக் இட் ஈசியா எடுத்துட்டு🤷🏻♂ போனா நிம்மதியா வாழலாம். அது தான் அதனுடைய உள் அர்த்தம்*👶😇
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர்கள்*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல் 2⃣*👑
👌👏 *பங்கு கொண்டு தன் கருத்தை முன்வைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரிய சிறந்த சிந்தனையாளர்கள்.*👌👏
👌👏 *பங்கு கொண்டு கருத்தை முன்வைக்காவிட்டாலும் கருத்தை உள்வாங்கும் அனைவரும் பாராட்டுக்குரிய சிறந்த பங்கேற்ப்பாளர்கள்.*👌👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
😇👉 *வீண்பேச்சு, வெட்டி பேச்சு, கேலி பேச்சு, திண்ணை பேச்சு, கிண்டல் பேச்சு, கிறுக்கு பேச்சு, பிடிவாதப் பேச்சு, காரசார பேச்சு இதனை தவிர்த்து நாம் வாதம் செய்கிறோம் அதுவும் ஒற்றுமையுடன் கலந்துரையாடுகிறோம் என்பதை உணர்ந்து மற்றவர்களின் கருத்தையும் ஆராயவேண்டும். சிந்தனையை சீர்படுத்தக்கூடிய விவாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக உங்களை உருவாக்குகிறது, உடைக்கிறது, ஒட்டி வைக்கிறது, தள்ளிவிடுகிறது, தட்டிக் கொடுக்கிறது என்பதை புரியவைக்க வேண்டும்*😇
😇👉 *பிடிவாதங்கள் பிடிப்பவர்கள், பல உறவுகளை இழக்க நேரிடும், பல நண்பர்களை இழக்க இயலும். சில நேரங்களில் தனிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை கூட உருவாகும். பலருடைய கருத்துக்களை கேட்டு, அனைவரிடத்திலும் ஒத்து வாழ்வதே சிறப்பு.*😇
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👍 *நோக்கம்*👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😇 *கலந்துரையாடல் குழு நல்ல கருத்துக்களை மட்டும் விழிப்புணர்ச்சி செய்வதற்காக மட்டும் அல்ல, நல்ல சிந்தனைகளை தூண்டும் அறிஞர்களையும் உருவாக்கவும் தான்...*👍
😇 *இங்கு கருத்துக்களை பதிவு செய்பவர், அவரவர் மனதில் பதியும் கருத்துக்கள் மற்றும் வெளியில் நடக்கும் சில விவாதங்களை உள்ளடக்கி மட்டும் தான் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.🤷🏻♂ ஆனால் முடிவுரை போடுபவர்கள் குழுவில் நடக்கும் கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் விதமாகவும்,👍 மேலும் பல உண்மையான கருத்துக்களை ஆராய்ந்தும் தான் தொகுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*👍💐
😇💐 *கலந்துரையாடல் குழுவின் விவாதம் கலகத்தை உருவாக்குவதற்காக அல்ல...*
😇💐 *பயனுள்ள பல்கலை கழகத்தை உருவாக்குவதற்காக மட்டுமே...🤷🏼♂👍🏻*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய*
*வழுக்கியும் வாயாற் சொலல்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
❣ *அறிந்துகொள்க*❣
*“வார்த்தைகள் அசிங்கமானால், ‘வாழ்வும் அசிங்கமாகும்”.*
❣ *தெரிந்துகொள்க*❣
*“ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கு”*
❣ *புரிந்துகொள்க*❣
*“உருப்படியான வேலைக்கே, ‘உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே”.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *ராமலிங்கம் அங்கப்பன்*
*0060122646502*
👨🏻💻
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment