Monday, 20 November 2017

இந்திய தேசிய நதிநீர் இணைப்பு மற்றும் அதி திறன் நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்களும் ,அதனால் ஏற்படும் ஆபத்துகளும்.


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________  
🌹 *தேதி : 18-11-2017..* 🌹                
🌷 *கிழமை : சனி* 🌷   
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
👍 *_உங்களுடைய கடந்த காலத்தை பற்றி தெறிந்து கொண்டால் தான் எதிர் காலத்தை சிறப்பாக செதுக்க முடியும்._*

*_கன்பூசியஸ்_*💐.
💖💖💖💖💖💖💖💖 💖💖💖

🌱 *நிர்வாகிகள் எண்ணம்.*🌱

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
👍 *மனிதர்கள் தங்கள் எல்லைக்குள் செயல்பட வேண்டும்*
*இயற்கை மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல*.👍

👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

💧🇮🇳💦 *இந்திய தேசிய நதிநீர் இணைப்பு மற்றும் அதி திறன் நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்களும் ,அதனால் ஏற்படும் ஆபத்துகளும்....!!...*
💦💦💦💦💦💦💦💦💦💦💦

              *பாகம்*➖1⃣

   👆🏻 *இந்த தலைப்பானது பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்களையும் ,முக்கிய தீர்ப்புகளையும்📰✍ தாண்டி வந்துள்ளது.இந்த தலைப்பின் முடிவுரையை🥁 தெளிவாக கூற இந்த ஒரு முடிவுரை போதாது,ஆகையால் சுருக்கமாக தேவையானவற்றை மட்டும் தொகுத்துள்ளோம்✍.*
      *🇮🇳இந்தியாவில் நதிநீர் இணைப்பு திட்டங்களின் வரலாற்றையும் ,அது நிறைவேற்றப்படாமல் போன😔 காரணங்களையும் முதலில் பார்ப்போம்.👇🏻👇🏻*

        *1, 💦நதி நீர் இணைப்பு🤝 என்ற வார்த்தை தற்போது பயன்படுத்தப்பட்டது அல்ல,🤔 ஆங்கிலேயர்கள்👨🏼‍✈ இந்தியாவை🇮🇳 ஆண்ட போதே இந்த திட்டம் குறித்து 1834-ஆம் ஆண்டு இந்திய 💧நீர் மேலாண்மையின் தந்தை👨🏻‍💼 என்று அரைக்கப்படும் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் 👨🏻‍🔬என்ற ஆங்கிலேய அதிகாரி கங்கையை💦 கவேரியுடன்💧 இணைக்க வேண்டும் அப்படி இணைத்தால் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும்🤝😌 அதனால் மக்களிடத்தில் உள்ள வறுமை ஒழியும்😊 என்று எவ்வளவோ முயற்ச்சி செய்தும் அவரால் நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.😔காரணம் அப்போதைய ஆங்கிலேய அரசு இருப்பு பாதை🚂🚆 அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவே முனைப்பு காட்டியது, இதனால் "நீரை💦 எதிர்த்து இரும்பு🚆" என்று கிண்டலாக கூட பேசினார்களாம்.*😜

       *2, 1971-72இல் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர்👨🏼‍🏫 டாக்டர் கே.எல். ராவ் அவர்கள்👨🏼‍🏫 கங்கை – காவிரி இணைப்புத் திட்டம் ஒன்றை🌊💦🤝 அறிமுகப்படுத்தினார். இவருடன் டாக்டர் சதுர்வேதி,👩🏼 ராஜா ரெட்டி 👨🏻‍🔬ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர். இத்திட்டத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்👩🏻‍💼 நடைமுறைப்படுத்த விரும்பினார். இத்திட்டத்தில் கங்கை 💦– பிரம்மபுத்திராவைக்💧 கால்வாய் மூலம் இணைக்க வேண்டும். குஜராத் – மகாராஷ்டிரா – மேற்கு இராஜஸ்தான் மாநிலங்களில் கால்வாய்களை வெட்டி இந்த இரண்டு கால்வாய்களையும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலப்🇮🇳🗺 பகுதிகளில் இணைக்க வேண்டும். அதன் பின்பு வடபுலத்தில் வெட்டப்பட்ட கால்வாய் மூலம் கங்கை💦 – பிரம்மபுத்திரா 💧நீரைத் தெற்கு முகமாகத் திருப்பி தக்காண பீடபூமியில்🏜 மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைக் கிழக்கேத் திருப்பலாம் என்ற வகையில் கே.எல்.ராவின் 👨🏻‍💼திட்டம் அமைந்து இருந்தது. கே.எல்.ராவ் திட்டத்தில் விந்திய மலைகளைக் 🏞கடந்து நதி நீரைத்🌊 தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய கடினமான பணி😟 உள்ளது. 1800 அடி உயரத்திற்குச் சக்தி வாய்ந்த பம்புகளால்🎡 கங்கை – பிரம்மபுத்திரா மற்றும் ஏனைய நதிகளின் நீரை 💦ஏற்றி தக்காண பீடபூமியில் உள்ள ஆறுகளில் இணைக்க வேண்டும். இதற்கு 7,500 மெகாவாட் மின்சக்தி🔌 தேவைப்படும். அப்போது இந்திய நாட்டின் மொத்த மின் உற்பத்தியே 10,700 மெகா வாட்தான்.🤔 இதனால் 650 டி.எம்.சி. நீர் தென்னக நதிகளுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும்.🙂 இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ.12,500 கோடி செலவாகும். இத்திட்டம் 20 ஆண்டுகளில் முடிக்கலாம் என திட்டமிட்டார்.இந்தத் திட்டத்தைப் பரிசீலித்த ஐ.நா. வளர்ச்சிக் கழகம் கூட பாராட்டியது.👏🏻👏🏻ஆனால் செயல்படுத்த முடியவில்லை , இதற்கே 🇮🇳நாட்டின் பெரும்பான்மையான பொருளாதாரம் தேவை என்பதால் கைவிட்டனர்.*😧

          *3 , கேப்டன் ஜே. தஸ்தூர்👨🏻‍💼 – பூமாலை திட்டம் 🌹– இத்திட்டத்தின் மூலம் வெள்ளம், வறட்சி என்ற நிலையை மாற்றி மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்து உணவு உற்பத்தியைப் பெருக்குதல், மின் உற்பத்தி🔌 என்ற பல நோக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்ட திட்டமாகும்.😌 மொரார்ஜி தேசாய் பிரதமராக🇮🇳👨🏻‍💼 இருந்தபோது இதுகுறித்து ஆராய்ந்தார்.* 🌹 *இந்தப் பூமாலைத் திட்டம்:*🌹
        *அ. சிந்து நதியின் 💧துணை நதியான ரவி நதியிலிருந்து கிழக்கே உள்ள பிரம்மபுத்திரா நதி💦 வரை 1,000 அடி அகலத்திற்கு 2,400 கிலோ மீட்டர் நீளத்திற்கு 50 அடி ஆழத்திற்குக் கால்வாய் அமைத்து,🚣🏻‍♀ அந்தக் கால்வாயை 1,770 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தெற்குமுகமாக அமைப்பது. இமயமலை 🏞கால்வாய் என்று அழைக்கப்பட்ட அந்தக் கால்வாயில் 30 பெரிய நீர்த் தேக்கங்கள்⛵ அமைத்துத் தேக்கிய நீரை 3 கிலோ மீட்டர் இடைவெளியில் தெற்கு நோக்கி வெட்டப்பட்ட கால்வாயின் மூலம் நீர்ப்பாசனத்திற்கு வழங்கலாம்.*😌
          *ஆ. அதன்பின்பு மத்தியப் பிரதேசம், தக்காண பீடபூமி,🏜 தமிழகம் இணைத்து 9,659 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பூமாலை 🌼🌹போன்று கால்வாய் அமைத்து அதில் 20 பெரிய நீர்த் தேக்கங்களை🚣🏻‍♀ அமைத்து இந்தக் கால்வாயை 👆🏻மேலே குறிப்பிடப்பட்ட இமாலயக் கால்வாயுடன் இணைக்கலாம்.👍🏻 இத்திட்டம் சாத்தியம் இல்லாத திட்டம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.😜 இதற்கான அப்போதைய மதிப்பீடு சுமார் 25 ஆயிரம் கோடியாகும்.😧 1973இல் மத்திய நீர் ஆதாரம் மற்றும் மின்சார🔌 உற்பத்தி கமிஷன் இத்திட்டத்தைப் பற்றியும் ஆராய்ந்தது .  இந்த திட்டத்தில் நிறைய தொழில்நுட்ப ரீதியான ப்ரச்சனைகள்📽 இருப்பதாக கூறி கைவிட்டுவிட்டனர்.*✍

         *4, 🇮🇳🇮🇳மத்திய அரசு கங்கை🌊 – காவிரி 💦இணைப்பு திட்டம் இந்திய தேசிய நீர்வள மேம்பாடு திட்டம் 1980இல் அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் சிந்து 💧– கங்கை 💧– பிரம்மபுத்திரா💧 ஆகிய வடபுலத்து நீர்வள மேம்பாடு – இந்நதிகள் யாவும் சீனா, பாகிஸ்தான், நேபாளம்,🗺 வங்கதேசம் போன்ற நாடுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் 😟இது நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்களுக்கு அண்டை நாடுகளின் ஒப்புதலும் பெற வேண்டும்.🤐 அதிகம் நீர் வரத்துள்ள பிரம்மபுத்திரா நதியைக் கங்கையுடன்💦 இணைத்தால் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் சுமார் 5,000 டி.எம்.சி. நீரைக் கொண்டு 550 இலட்சம் ஏக்கர் நிலம் பாசனம்💦💦 பெறலாம்.நர்மதை, தபதி ஆறுகளைத் தக்காண பீடபூமி☀🏜 ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, தாமிரபரணி வரை இணைக்கலாம். மேலும் மேற்கு நோக்கிப் பாயும்🌊 கேரள, கர்நாடக😮 மாநிலங்களில் வீணாகும் நீரைக் கிழக்கு நோக்கித் திருப்பி ஆங்காங்கு உள்ள கங்கை – பிரம்மபுத்திரா பிரதானக் கால்வாய்களில் இணைக்கலாம். இத்திட்டம் தொழில்நுட்ப🚆 அடிப்படையில் எளிதாகச் செயல்படுத்த முடியும். இத்திட்டங்களை ஆராய 🇮🇳மத்திய அரசு, 1982இல் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை 🕍(National Water Development Agency)🕍 உருவாக்கியது.*
  *இந்த ஆராய்ச்சி கழகம் தொடர்ந்து பல ஆண்டுகள் வரை சுரேஷ் பிரபு👨🏻‍💼 தலைமையில்  மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சிகளை📚📚 முன்னெடுத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ,✒மத்திய அரசு அவர்களிடம் முக்கியமாக ஒரு விசயத்தை கேட்டது ,🇮🇳எல்லா மாநிலங்களும் ஒருமித்த கருத்தோடு ஒப்புக்கொண்டால்😅 திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கலாம் ,என்று கூறியதும் NWDA வானது மேலும் அவகாசம் கேட்டது😥, பின்னர் அப்படியே இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.*🤐

      *5, மேற்கண்ட NWDA வின் நதிநீ்ர் 💦 இணைப்பு திட்டத்தில் அரசு அதிகாரியாக👷 பணிபுரிந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ,இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை☹ என்பதை உணர்ந்த,தமிழகத்தை🤗💪🏻 சேர்ந்த திரு. ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு குழு ஆராய்ந்து, முன்மொழிந்த திட்டமே, 🇮🇳தேசிய அதி- திறன் நீர்வழி⛴ திட்டம்(the national smart water ways).*
*சரிவற்ற, நேரான (zero&slope)அமைப்புடன், ஒரு நீர்வழிச்சாலை⛴ முன்மாதிரி திட்டத்தை இந்த குழு, ஏற்கனவே உருவாக்கியுள்ளது,*

*🇮🇳தேசிய அதி- திறன் நீர்வழிச்சாலை⛴ ஆனது கீழ்காணுமாறு திட்ட வரைவுகளை✍ கொண்டது ஆகும்.*
         *கடல்🌊 மட்டத்திலிருந்து, 750 அடி உயரத்தில், ஒரே மட்டத்தில், சரிவற்ற நிலையில் நாடெங்கும், 🇮🇳இந்த வழிச் சாலை கட்டப்படும்.*⛴
         *இந்த நீர்வழிச் சாலை, 🏄🏻‍♀🚣🏻‍♀நாடெங்கும் உள்ள ஆறுகள்,🌊 அணைகள்,🛶 நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றை, ஒற்றைத் தளத்தில், கிடை மட்டத்தில் இணைக்கிறது. இதற்குள் பாயும் நீர், அழுத்த💦 வேறுபாடுகளின் காரணமாகவே பரவுகிறது.*🌊
        *தேசிய அளவிலான இந்த நீர்வழிச் சாலை ஆனது 100 மீட்டர் அகலமும்🗺 ,10 மீட்டர் ஆழமும் கொன்டு 15,000 கிலோ மீட்டர் வரை கால்வாயாக⛴ அமைக்கப்படும். 90 ஆயிரம் கோடி முதல் 1.80 லட்சம் கோடி கன அடி வரையிலான நீரை தேக்கி வைக்கும்படி, உறுதி செய்யப்படும்.*🤓
         *💦நதிகளின் தலைப்பகுதிகளில் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம்,🌊 அணையில் நிரம்பும் வெள்ளம் 🌊ஆகியவை, இந்த தேசிய நீர்த் தேக்க அமைப்புக்கு, நீரைக் கொண்டு வரும்.*💧
       *👨🏻‍🎓மேதகு.அப்துல் கலாம் ஐயா 👨🏻‍🎓அவர்கள் இந்த திட்டத்தினால் மிகவும்  கவரப்பட்டு ,இதை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியாவின் 🇮🇳 15  மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு சென்று அங்கு அவரின் அறிவியல் ஆலோசகர் ஆன திரு.பொன்ராஜ்👨🏻‍🎓 அவர்களுடன் தெளிவான விளக்கம்✍ கொடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்,*👩‍👩‍👧‍👧👏🏻👏🏻👏🏻
   *அடடே நம்ம அப்துல்கலாமே👨🏻‍🎓 சொல்லிட்டாரே அப்டினா இந்த திட்டத்தை நிறைவேத்தியே ஆகனும்னு அவர் பேரை சொல்லி நிறைய பேரு, பொது நலன் கருதியும், சிலர் ஊரை அடிச்சி உலை ல போட்றதுக்கும்( அதான்ங்க இந்த அரசியல் வாதிகள்🤦🏻‍♂ ) கொடி புடிக்க🇮🇳 ஆரம்பிச்சிட்டாங்க,,*
   *உண்மையில் இது மிகச் சறப்பான👌🏻 திட்டம், நிச்சயமாக நாட்டின் பலவேறு ப்ரச்சனைகள் குறையும்,*🙂 *உற்பத்தி பெருகும்,🤗*
*அப்றம் உடனே செய்ய வேண்டியது தான என்று சொல்லாதீங்க இதில் உள்ள ஆபத்துக்களையும் ,😟 முரண்பாடுகளையும்😮 இறுதியாக விளக்குகிறோம்.*

   *இந்திய தேசிய நதிநீர் இணைப்பு ப்ரச்சனை இவ்வளவு விசயங்களை தாண்டி. தற்போது ஒரே ஒரு  மிஸ்ட் கால் கொடுத்தால் போதும் இணைந்துவிடும் என்ற நிலையில் வந்து நிற்கிறது* *(சொல்லவே🙊 கொஞ்சம் கேவலமா தான் இருக்கு).என்னத்த சொல்ல அதுக்கெல்லாம் நாம தான் இடம் குடுக்குறோம்🤦🏻‍♂🤦🏻‍♀*

*சரி விசயத்துக்கு வருவோம்,,*

*🤝👆🏻தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்று வரை உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுல் சிறப்பானது👌🏻 ,இந்த தேசிய நீர்வழிச்சாலை திட்டமே ஆகும்.ஆதலால் தான் அப்துல் கலாம் அவர்கள் 👨🏼‍🚀இதை நிறைவேற்ற பல்வேறு முயற்சி எடுத்தார்,🎤*
[18/11, 9:35 PM] ‪+91 96552 75469‬: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________  
🌹 *தேதி : 18-11-2017..* 🌹                
🌷 *கிழமை : சனி* 🌷   
____________________________________

      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

💧🇮🇳💦 *இந்திய தேசிய நதிநீர் இணைப்பு மற்றும் அதி திறன் நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்களும் ,அதனால் ஏற்படும் ஆபத்துகளும்....!!...*
💦💦💦💦💦💦💦💦💦💦💦

              *பாகம்*➖2⃣

😊 *இந்த திட்டத்தை ஏன் அவ்ளோ நல்ல திட்டம்னு சொல்ட்ரீங்க ?🤔 அப்டீன்னு அப்துல் கலாம் ஐயாட்ட👨🏻‍🎓 மைக்க🎤👨🏻‍🎓 நீட்டுநீங்கனா ,அவர் கூறும் காரணம் நம்மை ப்ரம்மிக்க வைக்கும், 😳ஆம் நம் பேரன் ,பேத்திகளின் நீர் தேவை அவ்வளவு அதிகரிக்குமாம்,*👨‍👧‍👦
    *இதை பத்தி கொஞ்சம் டீட்டெய்ல்டா பார்ப்போமா? 👇🏻👇🏻 இது அப்துல் கலாம் சொன்னது தாங்க.,*👨🏻‍🎓👇🏻
        🇮🇳 *இந்தியாவில் நீர் பிரச்னை, தொடர்ந்து மோசமாகி வருகிறது.☹ 1951ல் இந்தியாவின் தனிநபர் நீர் கிடைப்பு அளவு, 15,531 கன அடியாக இருந்தது.😒 இதுவே, 2000ல், 4,635 கன அடியாக, அதலபாதாளத்துக்கு சரிந்தது. 😲இது, 2025ல், 4,020 கன அடியாகவும், 2050ல், 2,850 கன அடியாகவும் குறையும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.🤥ஆனால், மழைக்🌧⛈ காலத்துக்குப் பிந்தைய நீர்த் தேவைக்காக, நீரை சேமிப்பது தொடர்பாக,☔ இந்தியா 🇮🇳இதுவரை, எதையுமே பெரிதாக செய்து விடவில்லை.*

     *அமெரிக்காவில்🇺🇸 தனிநபர்👩🏻‍💼 ஒருவருக்கென கட்டி வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க வசதியின் அளவு, 15 ஆயிரம் கன அடி. நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, மெக்சிகோ🗾 போன்ற நாடுகளில், 3,000 கன அடி.இப்படிப்பட்ட சூழல்களில், இந்தியாவின் நீர் தேக்க கொள்ளளவு திறனோ, தனி நபருக்கு, வெறும், 600 கன அடியாக உள்ளது.*☹

       👩🏻‍💼 *தனிநபர் தேவைக்கான கொள்ளளவை, 2025ல், 7,500 கன அடியாகவும், 2050ல், 15 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்துவது எப்படி🤔 என்பது, சவாலாக இருக்கிறது.தமிழகத்தில்,💪🏻 17 பெரிய ஆற்று பாசனங்களும், 61 பெரிய மற்றும் சிறிய நீர் பாசன அணைகளும்,🚣🏻‍♀ 41,948 கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்களும் உள்ளன. ஆண்டுதோறும், 13,962 கோடி கன அடி அளவு தண்ணீர் நிரம்பக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அதில் பாதி கூட நிரம்புவதில்லை.*😳

             *பெரும்பாலான மழையினால்🌧☔ கிடைக்கும் தண்ணீர் இருப்பை,💦 முழுவதுமாக நாம் விவசாய தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது.👍 கிட்டத்தட்ட, 24 லட்சம் ஹெக்டேர் பாசன நிலம் பெரிய மற்றும் சிறிய நீர் அணைகளால் பாசன வசதி பெறுகிறது. 90 சதவீதம் நீர் விவசாயத்திற்கென்று உபயோகிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் உபயோகப்படக் கூடிய நீர், 67 ஆயிரம் கோடி கன அடி ஆக இருக்கிறது. அதில், 60 சதவீத நிலத்தடி நீர்,💧 மறு சுழற்சிக்கு சென்று விடுகிறது. 40 சதவீதம் நீர் மட்டும் நமது உபயோகத்திற்கு கிடைக்கிறது.*🌊

        💦 *கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், பாதுகாப்பான நிலத்தடி நீர் இருப்பு என்று சொல்லக்கூடிய பகுதிகளில், 35.6 சதவீதத்தில் இருந்து, 25.2 சதவீதமாக, நீர் குறைந்து விட்டது. அதே போல் பாதியளவு நிலத்தடி நீர் இருப்பு பகுதிகளில், மொத்தத்தில், 35.8 சதவீத நிலங்களில், அளவுக்கு அதிகமாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விட்டது.😧 2 சதவீத நிலம், உப்புத் தன்மையானதாக மாறிவிட்டது.*😕

       💦 *ஏனென்றால் கடல் நீர் உள்ளே புகுந்ததாலும், ஆறு மற்றும் நிலத்தடி நீர் மாசு பட்டதாலும், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும். மழைநீர் தண்ணீர் சேமிப்பு சரிவர செயல் படாததாலும், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டதாலும், இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது.*🤦🏻‍♂

      💦 *விவசாயத் துறை தான்,🌴🍄 தமிழகத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய துறையாகும். உணவு தேவையை🥗🍱 சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் துறையாக விளங்குகிறது.🍏😊 விதைக்கப்படும் மொத்தப் பரப்பளவில், 46 சதவீதத்திற்குத்தான் நீர்பாசனம் உள்ளது. மீதம் உள்ள பரப்பளவு மானாவாரிதான். தண்ணீர் பற்றாக்குறையாலும், விவசாயத்திற்கு ஏற்ற விலையில்லாததாலும், விவசாய பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காததாலும், விவசாயக் கூலி கட்டுபடியாகாததாலும், விவசாய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள், தொடர்ந்து நகரமயமாதலுக்கும்,🏬 வீட்டு மனைகளுக்காகவும்,🏠 தொழிற்சாலைகளுக்காகவும்🏗 பலியாகிவிட்டது.*🤦🏻‍♂

     💦 *உணவுப்பாதுகாப்புக்கு முக்கிய காரணியாக விளங்குவது தண்ணீர் இருப்புதான். தண்ணீர் ஒரு அரிதான பொருளாகிவிட்டது.😦 மற்ற துறைகளான தொழில் துறை, நீர் மின்சார உற்பத்தி, வீட்டு தேவைகள், விலங்குகளுக்கும் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.*💧

        💦  *தமிழ் நாடு அரசின் தண்ணீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பல்வேறு துறைகளுக்கு தேவையான தண்ணீர் இங்கே கூடுதல் தேவையாக👉🏻 (2012ம் ஆண்டைய கணக்கு) - 27 டி.எம்.சி / வருடம். ஆக மொத்தம் 1,921 டி.எம்.சி / வருடம்👈🏻 தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த நிலத்தடி நீர் மற்றும் தரையில் இருக்கும் தண்ணீர் அளவு 1,643 டி.எம்.சி / வருடம். 2012 ம் ஆண்டு தேவையான கிட்டத்தட்ட 1,921 டி.எம்.சி என்பது, 2020ல், 2072 டி.எம்.சி.,யாக உயரும்.😳 அதாவது வருடா வருடம் 53 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டால், 2020ல், 429 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்படும்.*😧

      .  💦 *இந்த நிலையை அடைந்துவிட்ட பிறகு நதிகள் இணைப்பை தவிர வேறெந்த திட்டத்தாலும் சிறப்பான நீர் மேலாண்மை செய்ய இயலாது,*.👍
    *மேலும் இத்திட்டத்தின் பயன்களாக கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் கூறுபவை கீழே,*

       💦 *புவி அமைப்பின் படி இந்தியாவை 5 பகுதிகளாக பிரித்தால் அதிகமாக நீரை சேமிக்க ஏற்ற இடம் தென்னிந்தியா ஆகும்,இதில் தமிழகத்திற்கு 💪🏻தனி பங்கு உண்டு, எந்த வகையில் நோக்கினாலும் நம்முடைய சேமிப்பு திறன் வெறும் 154 டி.எம்.சி தான்.*😕
      💦 *ஆனால் 2025 ல் தமிழ்நாட்டில்  சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவையான நீர் வருடத்திற்கு, 2500 கன மீட்டர் ஆகும்.👍தற்போது உள்ள சூழ்நிலை நீடிக்குமே ஆனால் 2025 ல் நம்மால் வெறும் 1300 கன மீட்டர் மட்டும் தான் சேமித்து வைக்க இயலும். 🤔  இதுவே 2050 ல் ஒரு ஆளுக்கு தேவையான நீர் 5000 கன மீட்டர் ஆகும் ,😳 ஆனால் தற்போதுள்ள நிலை நீடிக்குமே ஆனால் 900 கன மீட்டர் மட்டுமே நம்மாள் சேமிக்க இயலும்.  எவ்வளவு வேறுபாடு வருகிறது என்று புரிகிறதா?*🤔🤔

           💦  *ஒரு சிலர் என்னிடம் கடல் மட்டத்திலுருந்து 250 அடி என்ற இவ்வளவு பெரிய உயரத்தில் இந்த கட்டமைப்பு சாத்தியமாகுமா🤔 என்று கேட்கின்றனர், அவர்களுக்காக ஒரு சிறந்த எடுத்துக்காட்டை கூறுகிறேன்,*👇🏻
   *ஜெர்மனி யில் உலகிலேயே அதிக உயரமாக 930 மீட்டர்  உயரத்தில் மிக நீளமான🚣🏻‍♀ நீர்வழிச்சாலை அமைத்து அதில் அனைத்து வித நீர் போக்குவரத்துகளும்🛥🛳 நடக்கின்றது, நம் நாட்டில் நாம் செயல்படுத்தப்போவது 230 மீட்டர் உயரம் தான். 🙂  ஆக இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளது ,,*👍
        💦 *அதே நேரம் இதனால் அதிக  பயன்கிடைப்பது நிச்சயம். தற்போது ஆறுகளை நம்பி பாசன வசதி பெரும் 19,000 ஹெக்டேர் விவசாய நிலம்🌴🍄🥗 இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் , கிட்டத்தட்ட இரு மடங்காகி 40,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற இயலும், இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும், 😊 போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.இது போன்ற பல நன்மைகள் இத்திட்டத்தால் நிகழ்வது நிச்சயம்.*👍

      💦 *( இன்னும் தெளிவா போனா முடிவுரையை பத்து பாகமா தான் ரிலீஸ் பன்ன வேண்டியிருக்கும்,😊 ஆகையால் ரொம்ப சுருக்கி தான் விவரங்களை கொடுத்துள்ளோம்.)*👇🏻👇🏻

      💦 *மேல உள்ள எல்லாத்தையும் தெளிவா கவனிச்சிருந்தீங்கனா நம்ம நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இதை விட சிறந்த திட்டம் இருக்காது என்று தோன்றலாம்,😕 தோன்றும்...*😳

         💦 *ஆனால் இதில் பல ப்ரச்சனைகள் உள்ளது. அதையும் கொஞ்சம் கவனமா படிங்க இது ரொம்ப முக்கியம்,*👇🏻👇🏻

       💦 *நதிநீர் இணைப்பு குறித்து சுற்றுச் சூழல் ஆர்வளர்களிடம் வேறு மாதிரியான சிந்தனைகள் உள்ளன, அவற்றை சுருக்கமாக பார்ப்போம்,, குறிப்பாக இதில் பூவுலக நண்பர்கள் ,திரு.சுந்தர் ராஜன் 👨🏻‍💼அவர்களின் கருத்துக்கள் நம்மை வியக்கவைக்கும்.*

      💦 *நாமெல்லாம்  கூறும் இந்த நதி நீர் இணைப்பு 🌊,அது ,எவ்வளவு கொடூரமான விசயம் தெறியுமா?*😳😳

        💦 *நதி நீர் கடலில் கலப்பதை பாதியாக குறைக்கப்போவதாக சொல்கிறீர்களே,அதனால் என்னென்ன ப்ரச்சனைகள் வருமென்று தெறியுமா?*🤔

        💧 *1, கடலில் போதிய அளவு நன்னீர் கலந்தால் மட்டுமே கடலின்🌊 உப்பின் அளவு நிலைபடுத்தப்பட்டு சரிவர மழை🌧 பெய்யும்,இல்லனா டாட்டா காட்டிட்டு👋🏻👋🏻👋🏻 போய்டும்.*

      💧 *2, நதி நீர் கடலில் கலக்கும் பகுதி கழிமுகப்பகுதி ஆகும்,, கடலில் உள்ள சிறு மீன்கள்🐟 இனப்பெருக்கம் செய்ய இந்த கழிமுகப்பகுதியே சிறந்தது, அப்டி பார்த்தால் நதிநீர் கடலில் போதிய அளவு கலக்கவில்லை என்றால் கடலில் உயிர்ச்சங்கிலி பெரிதும் பாதிப்படையும்.*😮

       💧 *3, அடுத்து கழிமுகப்பகுதியில் வளரும் அலையாற்றுக் ( மேங்ரூ) காடுகள்,*🎋🌳🌲 *,இவை இல்லையென்றால் கடல் கொந்தளிக்கும்🌊🌊 போது ஒன்னுமே மிஞ்சாது. சென்னைல சுனாமி வரும் போது பிச்சாவரம் பகுதி பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சது இந்த மேங்ரூ காடுகளால் தான்,,😳நதிநீர் கடலுக்கு சரிவர செல்லவில்லை என்றால் அந்த காடுகள் தானாக குறைந்துவிடும்,*😧

      💧 *4, நாம் சுவாசிக்க பயன்படுத்தும் ஆக்ஸிஜனில் பெரும்பாலான பகுதி கடலில் வாழும்🦐🐋 நுன்னுயிரிகளால் கிடைக்கின்றது. உதாரணமாக பைரோ க்ளோரோ கார்பஸ் எனும் கடல்வாழ் நுன்னுயிரிகள் மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் 5 ல் 1 பங்கு ஆக்‌ஸிஜனை உருவாக்குகிறது,*😮
*கடல் பரப்பிலிருந்து🌊 கிட்டத்தட்ட 70% ஆக்ஸிஜன் வளிமண்டல த்திற்கு கிடைக்கிறது, 25% மழை காடுகள் மற்றும் பிற காடுகளால்🌧🌴🥗 கிடைக்கிறது,5% க்கும் குறைவாகவே பிற மரம், செடி ,கொடி🌳🌲 களால் கிடைக்கிறது, இத ஏன் சொல்ட்றேன்னா? 70% ஆக்ஸிஜனை உருவாக்கும் நுன்னுயிரிகள் நல்லா வாழனும்னா நதிநீர் தேவையான அளவு கடலில் கலக்க வேண்டும்.*😳
      💧 *5,அடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த 36 மிகப்பெரிய அணைக்கட்டு கள்🚣🏻‍♀ அமைக்கப்படும், 96 *சுரங்கங்கள் அமைக்கப்படும், கிட்டத்தட்ட 11,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்படும்,*🛥
*அதனால் என்னனு கேக்காதீங்க ,🤔ஒரு முறை சீனாவில் சிச்வான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவு பதிவான நிலநடுக்கம்☄ உண்டாகி 80,000 மக்களின் உயிரை பலி வாங்கியது,*😢 *அதற்கு முக்கிய  காரணமாக இருந்தது சின்ப்பூ அணைக்கட்டு 🚣🏻‍♀ஆகும், உலகத்தில் இதுவரை 100 க்கும் அதிகமான நிலநடுக்கங்களை உருவாக்கியது நீர் சேமிக்கும் பகுதிகள்( அணைக்கட்டுகள், ஏரிகள் போன்றவை) ஆகும்.*😮  *இயற்கை அன்னையும் எவ்வளவு தான் தாங்குவாள்,*🤰
*நிலநடுக்கத்தின் போது ஏற்கனவே நிலத்தில் உள்ள அழுத்தம் மீது நீரின்🌊 அழுத்தம் சேர்ந்து அதிர்வை அதிகப்படுத்துகின்றது.* *இதை உணர்ந்த அமெரிக்கா🇺🇸 முக்கிய பங்கு வகிக்காத 1000 அணைகளை இடித்துள்ளது,😳 இன்னும் undamping method திட்டம் மூலம் 5000 அணைகளை இடிக்க பரிசீலனை செய்து வருகின்றனர்.😳 அவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் புதிதாக கட்டி ,பாதுகாத்தது வெறும் 3 அணைக்கட்டுகள் தான்.*😛
        💧 *6,நீரின் சக்தியை🌊 சாதாரணமாக எடை போட்டு வீடக்கூடாது நண்பர்களே, புதிதாக கட்டப்பட்ட ஒரு🚣🏻‍♀ அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட வெறும் 400 கன அடி நீர் வளைவில் திரும்பும் போது💦 கரையை உடைத்து கிராமங்களை மூழ்கடித்த வரலாறு உண்டு.😧 அப்படி இருக்க இத்தனை பெரிய நீர்வழிச்சாலையின் திருப்பங்களை எவ்வாறு நம்ப இயலும், சிறு அணைக்கட்டு உடைந்தாலே எவ்வளவு நாசம்😮 ஏற்படுகிறது, இத்தனை பெரிய அமைப்பில் ப்ரச்சனை என்றால் மாநிலமே மூழ்கும் அபாயம் உள்ளது.*🏊🏻‍♀🏊🏻‍♀🏊🏻‍♀

         *💧 7 ,இந்தியாவின் ஒரு மலைப்பகுதியில்🏔 கிட்டத்தட்ட 11,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஒரு அணைக்கட்டு வருகிறது ,, அந்த இடம் தான் இந்தியாவிலேயே புலிகள்🐯🐣 இனப்பெருக்கம் செய்ய சிறந்த இடம், அது ஒரு புலிகள் காப்பகமும் கூட ,தேசிய விலங்கு🐯 அழியுறதெல்லாம் கண்ணுக்கு தெறியாதே ( யாராட்டும் பீட்டா வ🐰 பாத்தீங்கனா இத அவங்க காதுல போட்டு வைங்க ),*
         💧 *8,இதை கட்டி முடிக்க 10 வருடம் ஆகுமாம், 15 லட்சம் கோடி தேவையாம்,😳,ஒருவேளை நாட்டின் பொருளாதாரத்தை மீறி இதை நாம் கையில் எடுத்தால் இந்தியாவால் எந்த பேரிடர்களையும்🌊 சமாளிக்க இயலாது ,,அந்நிய நாடுகளுடன் போர்🗺 வந்தால் சோலி முடிஞ்சிது.அரசிடம் போதிய நிதி இருக்காது,*
       💧 *9,இந்தியாவில் ஊழல்🤡 ஒழிக்கப்படாமல் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நம் நாட்டில் நீர் வாழ் உயிரினங்கள்🐳 மட்டுமே வாழ முடியும்.( புரிஞ்சவங்க பிஸ்தா ).😜*

*இறுதியாக சில கேள்விகளாக தொகுத்துள்ளோம்,👇🏻👇🏻 உங்களுக்குள்ளேயே ,இதை கேட்டுப்பாருங்கள்!🤔 பதில் தேட முயலுங்கள்.!...*👍😊

       🤔 *1,மத்திய ஆய்வு குழுவே சொல்லிருக்கு , தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இந்த திட்டத்தால இப்போ இருக்கதுல இருந்து இன்னும் எக்ஸ்ட்ரா 57 டி.எம்.சி அளவு தண்ணீர் தான் கிடைக்கும்னு,😟 ,  இந்த அளவு நீருக்கு நாம் இவ்வளவு பெரிய திட்டத்தில் இறங்க வேண்டுமா?*

        🤔 *2,மலைகளை ஒட்டி செல்லும் இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் 🌴,ஒரு மரத்த வெட்டுனாலே மீம்ஸ் போட்டு சாவடிக்குறோமே? அவ்வளவு மரம் வெட்டுவார்கள் அமைதியாவா இருப்போம் ?*😏

        🤔 *3,இந்த கால்வாய்களை ஒட்டி தொழிற்சாலைகள்🕍 நிறைய அமைத்து பொருளாதாரத்தை உயர்த்தப்போறதா சொல்ட்றாங்க,, ஒரே ஒரு தொழிற்சாலைய விட்டாலே போதும் அந்த நதி ஒழுங்கா இருக்காது, இது ல பல தொழிற்சாலைகள்  வந்தா கழிவு நீரை கலக்க விடாமலா இருப்பான்?*😏

          🤔 *3, ஒரு சாதாரண திட்டத்திற்கே சில சமயம் போடும் பட்ஜெட் கள்💵💰 பத்தாமல் செலவு இருமடங்கான💰💰😳 நிலையில் வந்து நிற்கும், இந்த திட்டம் மட்டும் சொன்ன மாதாரி பட்ஜெட்டுக்குள் அமையும் என்பதில் என்ன நியாயம்?*😏

           🤔 *4, நீங்கள் இத்திட்டத்திற்காக இடம் கையகப்படுத்தும் போது 7 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழக்க நேரிடும்,😳, மேம்பாலம் கட்ட ஏன் கால தாமதம் என கேட்டதற்கு வெறும் 4 குடும்பம் காலி செய்ய மறுக்கின்றனர் என்று தீதிமன்றத்தில்👨‍⚖👩‍⚖ பதில் கூறிய உங்களால் 7 லட்சம் மக்களை அப்புறப்படுத்த இயலுமா ? 😏( இதை படிக்கிற நீங்க யோசிச்சி பாருங்க கவர்ன்மன்ட்ல இருந்து யாரோ ஒருத்தர் வந்து உங்க விட்ட இடிக்க போரோம்,, உங்களுக்கு வேற ஊர்ல வீடு கட்டி தர்றோம்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்.? 7 லட்சம் பேரு சும்மாவா இருப்பான்.?).*😛

        🤔 *5, கங்கை, காவிரியோடு💧 இணையும் என்று சொல்ட்ரீங்க,, இப்போ கங்கை எவ்வளவு அசுத்தமாக உள்ளது! அந்த நீர் மற்ற நதிகளில் கலக்கும் போது மற்ற நதிகளும் அசுத்தமடையும் தானே?*😏

        🤔 *6, தாமிரபரணியில்💪🏻 வாழும் எல்லா நீர் வாழ் உயிரினங்களாலும்🦐 கங்கையில் 💧வாழ முடியாது, காரணம் நீரில் உள்ள கனிம வளங்கள் மாறுபடும்,, அந்தந்த சூழ்நிலையில் வாழும் உயிரனங்கள், அனைத்தையும் ஒன்றாக கலந்த நீரில் வாழ சொன்னால் வாழுமா?*😏

         🤔 *7 , கிட்டத்தட்ட இந்தியாவின் கால் பங்கு இயற்கையை புரட்டிப்போட நினைக்கிறீர்கள், ஏன் நதி மனிதனுக்காக மட்டும் தான் ஓடுகிறாதா,நதி நமக்கு மட்டுந்தான்னு யாரும் எழுதி கொடுத்துருக்காங்களா?*😏

         🤔 *8,இந்த திட்டம் போட்டது சரி, இந்தியா , 3 பெரிய நதிகளை அண்டை நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது,,🗺 நாம் நதிகளை இணைக்க வேண்டுமானால் அந்த நாடுகளின் முழு அனுமதி வேண்டும். வாங்கிவிடுவீர்களா?, இல்ல பாகிஸ்தான் ,சைனா  காரன் தான் தந்துருவானா?,😋,( கர்னாடகா தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணிக்கே பஞ்சாயத்து பன்ன முடியல, நீங்க எப்படி சைனாட்ட பஞ்சாயத்து பன்னுவீங்க).*😅

        🤔 *9.கார்ப்பரேட்க்கு சாதகமாக தொடர்ந்து செயல்படும் மத்திய அரசு இந்த திட்டத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்காது என்பது என்ன நிச்சயம்?*😏 *(யாரு இடத்துல வந்து யாரு சீன போடுறது?...... செஞ்சிருவோம்😎.)*

          🤔 *10,எல்லாமே சரி ப்பா,,முதல்ல உங்களுக்கு அத்தன லட்சம் கோடி💰💰 யாருப்பா தர்றேன்னு சொன்னது?*😏

        🤔 *இப்டியே கேள்வி கேட்டுக்கிட்டே போனா முடிவுரை முடியாது, அதனால முடிச்சுக்கலாம்.*😅

        🤔 *இப்போ முடிவு பன்னிக்கோங்க,👍 தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது நமக்கு தேவையா?😳 தேவையற்றதா?😊*

         😋 *இந்த ஆண்டின் சிறந்த காமடி* *"திட்டம் வேனும்னா ஒரே ஒரு மிஸ்ட் கால் குடுங்க."😋📲 ,,அரசு நிறைவேற்றிவிடும்.*😜

        
         🤜 *கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்,*🤛

           😎 *"எல்லாராலயும் தமிழன் 💪🏻( ராஜ ராஜ சோழன் 🤴🏽) மாதிரி ஆகிட முடியாது"*💪🏻
        🙋🏻‍♂💪🏻 *"தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்".*💪🏻😊🤗🙏.

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*_கலந்துரையாடல் குழு:1⃣_*

🥇 *SureshBabu*🎊

🥈 *Sivaraj*
*&Prakaranchidambaram*🎊

🥉 *SpVignesh* *&Jaiganesh*🎊

*_கலந்துரையாடல் குழு~2⃣:_*

🥇 *@⁨Narayana Selvan⁩*🎊
🥈 *@⁨singarammohanraj⁩*🎊
🥉 *@⁨தமிழடியான் thamizhadian⁩*🎊

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷‍♂ *கருத்து:* 🤷

👨‍⚖ *மனிதன் இயற்கையை தன்னுடையதாக கருதுவது பெரிய தவறு* ,🤦🏻‍♂,
        *மனிதனோட கோட்பாடு படி , இயற்கையை அழிக்காமல் சிறிது மாற்றி அமைக்கும் போது அதனால் ஏற்படும் நன்மைகள் ,தீமைகளை விட அபரிவிதமாக இருக்குமே ஆனால் அந்த திட்டத்தை ,செயல்படுத்தலாம்,* 👍
       💧 *அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டதே குளங்கள்,⛴🏝 அணைகள்*,
       *ஆனால் தேசிய🇮🇳 நதிநீர் இணைப்பு அப்படி இல்லை* ,,
*அதனால நம்ம சந்ததி கள் சந்திக்கப்போவது பேரளிவாக இருக்கும்.*🌊🌪💨
        💦 *நம் எதிர்கால நீர்தேவைக்காக ,சிறிய அளவில் மாநில நதிகளை மட்டும் இணைத்து வளம் பெறுவோம்,*👍
     *இன்னும் நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்களை தூர்வாரி,நதிகளை பராமரித்து, முடியும் பட்சத்தில் சிறு அணைக்கட்டுகளை கட்டி ,மேலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்தி அவற்றை சரிவர பராமரித்து இயற்கையை 🌱மதித்து பாதுகாத்தாலே நம் நீர் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய இயலும்.*🙏
      🗺 *உலக அரசியலின் உள்நோக்கம் புரிந்து செயல்பட்டு நாட்டை வளப்படுத்துவோம்,*🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

       💪🏻🇮🇳 *ஜெய்ஹிந்த்*🇮🇳    

         
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

      *_நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி*
  *தான்நல்கா தாகி விடின்_*
            
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿           
         
*_மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்._*
                              
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_"🌓ஆழமறியாமல் காலை இடாதே"🌑_*

☘☘☘☘☘☘☘☘☘☘
🤷‍♂ *சிந்தனை :*🤷‍♀

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐒 *எந்த ஒரு திட்டமும்,செயல்பாடும் சரி அது நன்மைகளையும்  கொண்டிருக்கும்,தீமைகளையும் கொண்டிருக்கும், மனிதனாகிய,நம்மை பிற விலங்குகளிடமிருந்து பிறித்து காட்டுவது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு, அதை பயன்படுத்தி ஒரு விசயத்தில் உள்ள நன்மைகளை மட்டுமே பார்க்காமல் தீமைகளையும் ஆராய்ந்து கண்டறிவதே சிறந்த சிந்தனை ஆகும்*🤷‍♀

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *புதிய முடிவுரை  தொகுப்பாளர்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

   🌱 *👨🏻‍💻மயிலைமுருகன்*
*9655275469*👨🏻‍💻🌱

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*               
             *9486552988*🌳       
                                                            
😎🌱  *மணி விஜய் -* 
             *8428073724*🌳

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...