🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் : வியாழன்*🌹
🌹 *தேதி : 9.11.2017* 🌹
__________________________________
*அறிவோம்*
■★■★■★■★■★■★■★■★■★
*சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!-*
💐 *கோல்ட்டஸ்.*💐
*அட்மின்ஸ் தாட்ஸ்*
■★■★■★■★■★■★■★■★■★■
*நீர் ஊற்ற ஆள் இருக்கிறானா? என்றெண்ணி...🤔*
*முளைப்பதில்லை எந்த விதையும்...!!*
📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியா? ஒருவருடத்தில் மக்களின் மனநிலை என்ன?*
💴😰🖤💶⁉💴😰🖤⁉💶😰
😇 *கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்...🙏*
🌍 *இந்திய பிரதமர் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்யப்பட்டன.*‼
*1⃣கருப்புப் பணத்தை மீட்பது,*
*2⃣பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவியை தடுப்பது,*
*3⃣போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது.*
*என பல கோஷங்களோடு பண மதிப்பிழக்கம் கொண்டு வரப்பட்டது.*🤷🏻♂
😰 *இதனால், சாதாரண ஏழை எளிய மக்கள் சொல்லண்ணத் துயரத்துக்கு ஆளாகினர்.*
😓 *எல்லாவற்றையும் தாண்டி, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் கிடைக்கப்பெறவில்லை.*🙅🏻♂
👺 *பல கருப்புப் பண முதலைகளுக்கு, வங்கியில் வரிசையில் நின்று பொதுமக்களுக்கு ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கிடைக்கும் முன்னே கட்டுக்கட்டாக பணப்பரிமாற்றம் நடந்து முடிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.*🔪
📉 *இந்த நிலையில், பணமதிப்பிழக்கம் நடந்து ஓராண்டுக்குப் பின் அந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம்.*🤷🏻♂
💶💴 *பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என கேட்கும் சிலருக்கு இந்த பதில். அதற்கு காரணம்...*👇
👺 *பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களிடம் முன்கூட்டியே அறிவித்து விட்டு செய்ய முடியுமா? ஆனால் அதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.*🤷🏻♂
🏷 *தானாக முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் என 2016 செப்டம்பர் மாதம் வரை செயல்படுத்தப்பட்டது.*
📃 *கணக்கில் காட்டாத வருமானத்துக்கு அபராதமும், வரியும் செலுத்தி சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.*
📃 *ஏற்கெனவே வரியில் காட்டாத பணத்தை வெளிப்படையாக்கிக் கொள்ளுங்கள் என வாய்ப்பு வழங்கப்பட்டது.*
🕹 *அதன் பின்னர்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.*
🌍 *நாட்டிற்க்கு இதனால் என்ன ஆயிற்று... நன்மைகள்..!!! தீமைகள்..!!! பற்றி பார்ப்போம்...*👇
✅ *நன்மைகள்:-*✅
*➕டிஜிட்டல் பணப்பரிமாற்றம்*
✅ *டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பது என்ற மிகப்பெரிய கோஷத்தோடுதான் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில், கடந்த ஓராண்டுகளில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது உயர்ந்துள்ளது.⬆ அதாவது, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிமாற்றம் 22.4 மில்லியனில் இருந்து 2017ம் ஆண்டு மே மாத நிலவரப்படி 27.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.*⬆
*➕போலி நிறுவனங்கள்*
✅ *பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம், நாட்டின் பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 2 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இதனால், போலி நிறுவனங்கள் பெயரில் இயங்கும் லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலமாக பல ஆண்டுகளாக கறுப்புப் பணப் பரிமாற்றம் நடந்து வந்தது தடுக்கப்பட்டுள்ளது.*🕹
🕹 *அதாவது, எந்த வணிகமும் மேற்கொள்ளாமல், வெறும் தொழில் நிறுவனம் என்று பெயரை பதிவு செய்து கொண்டு அந்த பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கருப்புப் பணத்தை மாற்றி வந்த நிறுவனங்கள் தான் போலி நிறுவனங்களாகும்.*🕹
*➕வரி விகிதம்*
✅ *முன்கூட்டியே வரி செலுத்தும் நடைமுறையானது நன்கு வளர்ந்துள்ளது.⬆ அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.*⬆
✅ *அதே போல், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது. புதிதாக 56 லட்சம் பேர் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளனர்.*
*➕ஹவாலா பரிமாற்றம்*
✅ *பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஹவாலா பணப்பரிமாற்றம் முற்றிலும் முடங்கியது. அதன்பிறகும், ஹவாலா பணப்பரிமாற்றம் என்பது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக ஹவாலா ஏஜெண்டுகளின் தொலைபேசி உரையாடலை கண்காணித்ததில் மத்திய புலனாய்வுத் துறைக்கு தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியா முழுவதும் பல ஹவாலா மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.*🔍
✅ *அதே போல, ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்திருப்பதாகவும், பயங்கரவாதச் செயல்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.*
*➕உத்வேகத்தில் வங்கிப்பணிகள்*
✅ *பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 15.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.*👍
✅ *புழக்கத்தில் இருந்த பணம் வங்கிக்குக் கொண்டுவரப்படுவது என்பது மிக நல்ல விஷயம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பொது மக்களின் கையில் இருக்கும் பணம், வங்கியில் வரவு வைக்கப்பட்டால் அவை தொழில்களுக்கு முதலீடு, கடனாகக் கொடுக்கப்பட்டு வட்டி பெறுவது என பயனுள்ளதாக மாற்றப்படும்.*👍
✅💶💴 *பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2016 நவம்பர் மாதம் முதல் மார்ச் 2017 வரை வங்கிகளில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டது.*
✅ *பிரதம மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் வங்கிக் கணக்குகளில் மட்டும் ரூ.64,000 கோடி வரவு வைக்கப்பட்டதும், அந்த காலக்கட்டத்தில் மட்டும் 1.8 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.*🕹
❎ *இனிவருவது தீமைகள்:*❎
💶💴 *கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.*
👎 *கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது.*😏
👎 *ஆனால், இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வர்த்தகர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்*😰
👎 *ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி, தொழில் நிறுவனங்கள் - தொழிலாளி, நகர்ப்புறவாசிகள் - கிராம மக்கள் என பாகுபாடின்றி, ஒரு நாள் இரவில் மேற்கொண்ட நடவடிக்கையால் ஆடிப்போனார்கள்.*😰
👎 *மக்கள் மட்டுமின்றி அரசு நிர்வாகம், வங்கித்துறை என அனைத்துத் துறைகளும் செய்வதறியாமல் திகைத்தன.*😰
👎 *100 ரூபாய் பணம் எடுப்பதற்குக் கூட மணிக்கணக்கில் வங்கி வாசல்களில் காத்திருக்க வேண்டிய அவலம்.*😰
👎 *நாள் கணக்கில் மக்கள் பட்ட அவஸ்தை சொல்லி முடியாது. சிறு சிறுத் தேவைக்கு பணம் எடுப்பது முதல், திருமணச் செலவுக்கு பணம் எடுப்பது வரை என அனைத்தும் சிக்கலானது.*😰
👎 *நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்தவர்கள் பலர், உயிரை விட்டவர்கள் சிலர்.*😰
👎 *வங்கிகளில் மயங்கி விழுந்தார்கள்.. அதைவிட கொடுமை வயதான நபர் இறந்துவிட்டார்... மகள் கல்யாணம் நின்ற விரக்தியில் நடுரோட்டில் கதறி அழுதது... கொடுமையின் உச்சம்...*😰
👎 *பல லட்சம் கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குவது சாதாரண காரியமல்ல, வங்கிகள் தவித்துப் போயின.*😰
👎 *மாதக்கணக்கில் நீடித்த இந்த அவலம் நாள்தோறும் செய்திகளாகின, ஆவணங்களாகின.*📰
👎 *சாதாரண மனிதன் பட்ட துயரங்கள் இதுவென்றால், சிறு வணிகர்கள், பெரு நிறுவனங்கள், மாநில அரசுகள் என பல தரப்பும் சந்தித்த பொருளாதாரப் பாதிப்புகள் ஏராளம்.*😰
👎🌍 *நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் பாதிப்புகள் வடுக்களாக பதிந்து விட்டன.*😰
👎 *ஒராண்டு கடந்து விட்டாலும் நாடு சந்தித்த பொருளாதார பாதிப்பு இன்று வரை தொடர்கிறது.*😰
👎 🔴 *பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய முதல் முக்கிய காரணம் கருப்புப் பண ஒழிப்பு.*🔴👎
👎 *ஆனால் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுக்களில் 99 சதவீதம் திரும்ப வந்து விட்டது.*👎
🔴 *பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 15.40 லட்சம் கோடி ரூபாய் வரை பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதில் 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.*🔴
🤒 *அப்படியானால் கருப்புப் பணம் என கருதப்படும் ஊழல் பணம் என்ன ஆனது.*💶💴🤙
😡 *அனைத்தும் வங்கிக்கு திரும்பி வந்து விட்டது என்றால் கருப்புப் பண ஒழிப்பு முயற்சி என்ன ஆனது? ⁉என்ற கேள்வி எழுகிறது.*
🌍 *இந்தியா போன்ற கிராமப்புறங்கள் நிறைந்த, பல தரப்பு மக்கள் வாழும் நாட்டில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதும் கேள்விக்குறியே.*⁉
🤦🏻♂ *பணமதிப்பு நீக்க நடவடிக்கை சாதித்து என்ன என்ற கேள்விக்கு ஏராளமானோருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது கூட சாதனையாக கூறப்படுகிறது.*🤦🏻♂
👎 *ஆனால், 70 முதல் 80 சதவீதம் வரை முறை சாரா துறை சார்ந்த மக்கள் வாழும் நம் நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு சிறு கடைகளில் வணிக பாதிப்பு, வேலையிழந்த தொழிலாளர்கள், பெரிய வர்த்தக வாய்ப்புகள் கைவிட்டுப் போன தொழில் நிறுவனங்கள் என சந்தித்து வரும் பாதிப்புகள் ஏராளம்.*😰
👎 *நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியும் சுருங்கிப் போனதும் இந்த நடவடிக்கையால் தான் என்பது கசப்பான உண்மைகள்.*😰
👎 *பழைய நோட்டுகளை புழக்கத்திலிருந்து விடுவித்து புதிய நோட்டுகளை அறிமுகம் செய்வதென்பது முற்றிலும் இயல்பானதொரு நடவடிக்கையே. ஆனால் இவை பொதுவாக படிப்படியாகவே அமல்படுத்தப்பட வேண்டும்.*😏
🌍 *இந்தியாவின் இந்த அவசர நடவடிக்கை ஊழல் அரசியல்வாதிகளுக்கு தக்க தண்டனை அளிக்கவும், குற்றவாளிகள் மற்றும் வரி ஏய்ப்போருக்கான சரியான அதிரடி நடவடிக்கையாகும், இதனை நாங்கள் கூறும் படிப்படியாக அறிமுகம் செய்யும் திட்டம் மூலம் செய்ய முடியாது.*👎
👎 *இந்தத் திட்டம் நல்ல முன் தயாரிப்புடன் செய்திருக்க வேண்டும் என்றாலும் அப்படிச் செய்தாலும் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கடினப்பாடுகளை தவிர்த்திருக்க முடியாது.*🙅🏻♂
💶💴 *நீண்ட கால அடிப்படையில் ஊழல், குற்றம், வரி ஏய்ப்பு விவகாரம் இந்த நடவடிக்கையினால் சீரடையும். ஆனாலும் இது எப்படி நடைமுறையில் அமல்படுத்தப்ப்டுகிறது என்பதைப் பொறுத்தே தீர்மானமாகும்*📉
📉 *பெரிய மதிப்பு நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை வளரும் நாடுகளை நோக்கி நாங்கள் கூறவில்லை.... காரணம் இந்நாடுகளில் மக்கள் தொகையில் வங்கிக் கணக்கு இல்லாதோர் எண்ணிக்கை மேலதிகமாக உள்ளது.*📊
🌍 *ஆனாலும் வளரும் நாடுகளும் வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன.*🤷🏻♂
🤷🏻♂📉 *ஊழல் மற்றும் கள்ள நோட்டு விவகாரம் இருதரப்பினரையும் பாதிக்கும் விவகாரமே....*😰📈
💶💴 *பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளினால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது, பெரிய மதிப்பு நோட்டுகளை முற்றிலும் செல்லாததாக்கி விட வேண்டும்.*📛
🌍💴💶 *பிரதமரின் யோசனை என்னவாக இருக்குமெனில், குற்றவாளிகள் நிச்சயம் அச்சப்படுவர், அதாவது ஒருமுறை இதனைச் செய்தவர் மீண்டும் செய்யமாட்டார் என்று கூறுவதற்கில்லை என்ற அச்சம் இருக்கும்.*
💴💶 *பணமதிப்பு நீக்கம் என்ற ஒரு பெரிய முடிவையடுத்து சமூக ஒழுங்கு சீர்குலைவு ஏற்படவில்லை. அமைதியின்மை ஏற்படவில்லை. அனைத்து தனிப்பட்ட ஊடக ஆய்வுகளும் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவான சூழ்நிலையையே எடுத்துரைக்கிறது.*🕹
💺 *ஆனால் சில அரசியல் கட்சிகள் ⬛ "கருப்புதினம்" என்று தங்கள் வழக்கமான நாடகங்கள் மூலம் தவறான எண்ணங்களை விமர்சனம் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முயற்சிப்பது ... நம்முடைய அறியாமையையே எடுத்துரைக்கிறது...*😰
🗣🖤 *நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் உண்மை.. பெரிய தவறை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் செயல்பட்டது வருத்தமளிக்கிறது...*😔😞
*மக்களின் மனநிலை🤔*
*😩நீங்க எது வேணாலும் பண்ணித் தொ(ல்)லைங்கய்யா.*🤦🏻♂
*😭எங்க உசுர வாங்காம இருந்தா சரி.*🙏
*🚚கண்டெய்னர் பணம்ங்குறாங்க,💸 ரெய்டுங்குறாங்க, 🚈ரயில்ல ஓட்டை போட்டு பணத்தையே ஆட்டாயப் போடுறாங்க, 🚨எலெக்சன் வரும் போது, கட்டு, கட்டாக பணம் பிடிபட்டதுனு சொல்றாங்க.🤔 அவங்களெல்லாம் நீங்க என்ன பண்ணுனிங்க?😕 எத்தனை நபர்கள் மீது நடவடிக்கை சரியாக எடுக்கப்பட்டுள்ளது. கேட்டா எல்லாமே கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு ⛓விசாரணை போய் கொண்டிருக்கிறது, என்ற பதில் தான் வரும்.*😓
*⛓முதல்ல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனைய சீக்கிரம் வாங்கி குடுங்க. அப்பதான் பணம் பதுக்குற 💰(கொள்ளையடிக்கிற) எல்லாருக்கும் பயம் வரும்.*🤝🏻
*😓சும்மா அஞ்சுக்கும், பத்துக்கும், தினமும் வேலைக்கு போற மக்களை, வேலைக்கு போக விடாம, இருக்கிற 💸பணத்தை மாத்தி சோறு சாப்பிடுற நிலைமைக்கு கொண்டு வர வச்சிங்க, சில நல்ல காரியங்கள் கூட நடத்த முடியாத அளவுக்கு தெருவுல நிக்க விட்டிங்க.*🤦🏻♂
*👆🏻தற்போது இது போன்ற பிரச்சனைகள் சரியானாலும், இனிமேல் எளிய, ஏழை மக்கள் கஷ்டப்படும் அளவிற்கு,☹ கொண்டு வராமல் முன்கூட்டி ஏழை, 🏠எளிய மக்கள் பாதிக்காத வரையில் எதாவது திட்டமிட்டு🤔 திட்டங்களை செயல்படுத்தினால் நலமாக இருக்கும்.*👍
*💸பணமதிப்பிழப்பு பிரச்சனையால் 🏗தொழிற் நிறுவனங்கள்,🏭 தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் இன்னும் பல தொழில் அமைப்புகள் அதிக முதலீடுகள் போட முடியாமல் தவிக்கின்றனர். 🤔காரணம், எல்லாத்துக்கும் அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் தவிக்கின்றனர். இதனால் பல🏭 தொழிற்நிறுவனங்கள் முடங்கி, நம் நாட்டு மக்கள் பலர் சரிவர வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.*😭
*🤔இதையெல்லாம் எப்போது தான் மத்திய அரசு சரி செய்ய போகிறதோ😢*
*🔴(மேலே உள்ள வார்த்தைகளில் எதாவது பிழையோ அல்லது தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.)🔴*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
🥇 *Spvignesh*
🥈 *karthikeyanc29*
🥉 *Er.JAGADEESWARAN &*
*🔥ARAVINTHSAMY🔥*
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
🥇 *Arun*
🥈 *Rishi*
🥉 *singarammohanraj & Narayana Selvan*
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிச்சயமாக சரிதான். ஆனா எடுத்தோம், கவுத்தோமானு டக்கு, டக்குனு எதையும் பண்ணிடக் கூடாது.*
*வடிவேலு சொன்ன டயலாக் தான் ஞாபகம் வருது🤔.*
*பிளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்.*
*ஆனா பிளான் பண்ணி பண்ணிருந்தா, மத்தவங்களும் ஈசியா பிளான் பண்ணி, எல்லா பணத்தையும் பதுக்கிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.*
*சரி பணமதிப்பிழப்பு விசயம், அந்த கட்சில உள்ள முக்கிய பணமுதலைகளுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமா? தெரிஞ்சிருக்கலாம். ஏன்னா, தன் கட்சில கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில், எல்லா கட்சியுமே தெளிவா தான் இருப்பாங்க. அடிமட்ட பணமுதலைகளுக்கு வேணும்னா தகவல் தெரியாம இருந்திருக்கலாம்.*
*இதுபோல திடீர் திடீர் அறிவிப்பு விட்டாதான் எல்லாருக்கும் பயமும் வரும்.*
*அப்பப்ப பணத்தை பேங்க்ல போட்டு வைப்பவர்களுக்கு, எந்த பிரச்சனையும் இருக்காது. காரணம், இனிமே பண மதிப்பிழப்பு பிரச்சனை, எப்ப நடைமுறை வந்தா நமக்கென்ன?, தேவைப்படுறப்ப தானே எடுத்துக்க போறோம்🤗.*
*இது பெரிய பெரிய பணக்காரர்களுக்கு, அரசை ஏமாற்றுவர்களுக்கு, வரி செலுத்தாதவர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்*
*திறந்தெரிந்து தேறப் படும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
🔸 *தெரிந்து கொள்ளவும்*🔸
*சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்*
🔸 *அறிந்துகொள்ளவும்*🔸
*பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?*
🔸 *புரிந்துகொள்ளவும்*🔸
*கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?*
*கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment